83-வயதான புகழ்பெற்ற ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் 14-09-2023 அதிகாலையில் கைது செய்யப் பட்டது! (2)
13-09-2023 அன்றுவிசிககொடுத்தபுகாரும், ஆர்பிவிஎஸ்மணியனைகைதுசெய்யதீர்மானித்தபோலீஸாரும்: இந்த நிலையில் சென்னை சூளையை சேர்ந்த செல்வம் என்பவர் மணியன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் என்று ஊடகங்க்ள் குறிப்பிடுகின்றன. அதன் பேரில் மாம்பலம் போலீசார் அவர் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 153, 153(A), 505(1)(B), 505 (2), பழங்குடியினர்/ஒடுக்கப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி, ஆர்பிவிஎஸ் மணியன் என்பவரை கைது செய்யவும் போலீஸார் தீர்மானித்தனர். விடியற்காலையிலேயே அவர்கள் ஆர்பிவிஎஸ் மணியனின் வீட்டிற்குச் செல்ல தீர்மானித்தனர். அதன்படியே, அவரது வீட்டிற்குச் சென்றனர்.
14-09-2023 விடியற்காலையில்கைதுசெய்யப்பட்டது: தியாகராயநகர் உதவி கமிஷனர் பாரதிராஜன் தலைமையிலான போலீசார், தியாகராயநகர் ராஜம்மாள் தெருவில் உள்ள மணியன் வீட்டுக்குச் சென்றனர். 14-09-2023 வியாழக்கிழமை அதிகாலையில் சென்னை திநகர் போலீசார் ஆர்பிவிஎஸ் மணியனை அவரது இல்லத்தில் கைது செய்தனர்[1]. கைது செய்யப்பட்டுள்ள ஆர்.பி.வி.எஸ். மணியனை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது[2] என்று தினமலர் கூஊகிறது. இவரை அப்படி “ரகசியஇடத்தில்வைத்துவிசாரணைநடத்த”, என்ன பெரிய விசயம் இருக்கிறது என்று தெரியவில்லை. எல்லா விவரங்களும் வெளிப்படையாக உள்ளநிலையில், அதிலும் 3-4 காலையில் கைது செய்யப் பட்டபோது, யாருக்குத் தெரியப் போகிறது, என்ன பிர்ச்சினை வரப் போகிறது என்று தெரியவில்லை. அந்நிலையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது என்பது வேடிக்கையாக இருக்கிறது.
இந்து முன்னணியின் ஆதரவும், எதிர்ப்பும்: “83 வயதுமுதியவர்ஆர்.பி.வி.எஸ்.மணியன்பேசியகருத்துஅனைவராலும்ஏற்றுக்கொள்ளமுடியாதுஎன்றுவைத்துக்கொண்டாலும், அவரதுகைதுநடவடிக்கைதமிழகத்தில்கருத்துசுதந்திரத்தின்நிலைஎன்னஎன்பதைவெளிச்சம்போட்டுகாட்டுகிறது,” என்று இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்[3]. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்[4], “தமிழகஅரசின்எண்ணப்படிதொடர்ந்துதமிழககாவல்துறைஒருதலைப்பட்சமாகசெயல்படுவதைநீதிமன்றமோ, ஊடகமோகண்டுகொள்ளவில்லை. இதுஜனநாயகபடுகொலைக்குசமம். ஆர்.பி.வி.எஸ். மணியன்தேசியவாதி, ஆன்மிகச்சொற்பொழிவாளர். இன்றுகுமரியில்நாம்காண்கின்றசுவாமிவிவேகானந்தர்நினைவுமண்டபபணிக்காகதான்பார்த்துவந்தஅரசுப்பணியைராஜினாமாசெய்துவிட்டுவந்தவர். விவேகானந்தர்நினைவுமண்டபம்உலகப்புகழ்பெற்றதாகவிளங்குவதற்கும், குமரியில்உள்ளவிவேகானந்தாகேந்திரம்இன்றுபிரம்மாண்டமானஆலமரமாய்விளங்குவதற்கும்அந்தக்காலத்தில்ஏக்நாத்ரானடேஉடன்தோளோடுதோள்நின்றுஅடிப்படைஅஸ்திவாரமாகதிகழ்ந்தார்என்றால்அதுமிகையல்ல. தன்வாழ்நாள்முழுவதும்சனாதனதர்மத்தைகாக்கவாழ்ந்தவர்.
ஆர்.பி.வி.எஸ்மணியன்பேசியதைஒட்டியும், வெட்டியும்சமூகஊடகங்களில்பதிவிட்டுபரப்பிதிட்டமிட்டுபதற்றத்தைஏற்படுத்தும்போக்கு: இந்நிலையில், ஆர்.பி.வி.எஸ் மணியன் பேசியதை ஒட்டியும், வெட்டியும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு பரப்பி சிலர் திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்துகின்றனர். தில் பெரும்பாலானவை பார்ப்பனர் எதிர்ப்பாக, கடுமையாக தூஷணங்களுடன் இருக்கின்றன. வீடியோக்களும் போட ஆரம்பித்து விட்டனர். இந்தப் போக்கை கடந்த சில வருடங்களாகவே பார்க்கிறோம். எது உண்மை எது பொய் என்பதைக்கூட யாராலும் தெரிந்து கொள்ள முடியாதவாறு அவை பரப்பப்படுகின்றன. அவர் பேசிய கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று வைத்துக் கொண்டாலும் அவரது கைது நடவடிக்கை தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தின் நிலை என்ன என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்துக்களின் நம்பிக்கைளை கொச்சைபடுத்திய பல யூடியூப் சேனல்கள், சனாதனத்தை இழிவுபடுத்தி பேசிய அமைச்சர்கள், இந்து மதத்தை இழிவு படுத்தியவர்கள், பிரதமர், ஆளுநர் ஆகியோரைத் தாக்கிப் பேசியவர்கள் என பலர் மீது பல இடங்களில் புகார் கொடுத்தும் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் தமிழக காவல் துறைக்கும் நீதிமன்றத்துக்கும் குற்றத்தின் தன்மையைவிட குற்றம்சாட்டப்படுபவர் பின்புலம் என்ன என்பதை வைத்துதான் நடவடிக்கை என்பதாக அமைந்துள்ளது. இவர் விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் தலைவர் ஆவார். இவரது கைதுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கோர்ட்டில்ஆஜர்படுத்தப்பட்டமணியன்: சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மணியனை 14 நாள் ரிமாண்ட் செய்து நீதிபதி உத்தரவிட்டார். வயது மூப்பு கருதி அவரை மருத்துவமனையில் தங்க அனுமதிக்க வேண்டும் என அவர் சார்பில் வக்கீல்கள் வலியுறுத்தினர். பரிசீலிப்பதாக நீதிபதி கூறியுள்ளார். வன்கொடுமை சட்டத்தின் கீழ் 8 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மணியன் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது போலீசார் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் சுதாகர், மணியன் மீதான குற்றச்சாட்டுகளை எடுத்துக் கூறினார். அதற்கு நீதிபதி (மணியனை பார்த்து), உங்கள் மீதான புகார் குறித்து ஏதேனும் கூற விரும்புகிறீர்களா? என கூறினார்[5]. அதற்கு மணியன், ‘நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது’ என்றார்[6]. மணியன் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆர்.சி.பால்கனகராஜ், ‘மணியனுக்கு சிறுநீர் தொற்று, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல் உபாதைகள் உள்ளது. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும்’ என்றார். இதுகுறித்து பரிசீலிப்பதாக தெரிவித்த நீதிபதி, மணியனை வருகிற 27-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இங்கும் சில முக்கியமான கேள்விகள் எழுகின்றன:
பார்ப்பானை பிரம்ம முஹூர்த்தத்தில் வைத்து கைது செய்தால், யாருக்கு பலன் கிடைக்கும்? நேரத்தைக் குறித்தது கடவுளா, திராவிட அதிகாரியா?
அமாவாசைக்கு முன்னால் பார்ப்பானை கைது செய்தால் அவனது கிரியைகள் கெடுமா, அல்லது பெரியாரிஸ ஆவிகள் துடிக்குமா?
83 வயதான “கெழப்பய” என்ன ஓடியா போய் விடுவார்? காஷ்மீரில் வீட்டு காவல் வைக்கும் பொழுது, இவரை வைக்க முடியாதா?
இல்லை எங்களுக்கு இணை வைக்காதே, இன்டியா கூட்டணியில் இதை சேர்காதே என்று அவர்கள் மிரட்டினரா, ஆணையிட்டனரா?
அதெப்படி உடனடியாக, எந்த வழக்கறிஞரும் வரவில்லை, பெயில் கோரவில்லை, ஆனால், 14 நாட்கள் சிறைக்கு அனுப்பி வைக்கப் பட்டார்?
அதாவது ஒரு பக்ஷத்திற்கு சிறை, அடுத்த பக்ஷத்தில் பெயிலில் வெளியே விடலாம், இப்பொழுது மருதுத்துவ மனை வசதி கூட நிராகரிக்கப் பட்டுள்ளது.
அண்ணன் அவன் பிறந்த நாள் அமாவாசையில் வந்து விட்டதால் தம்பிகள் நல்ல நாளை முன்னமே குறித்து விட்டனரோ?
சரி யாரப்பா அந்த திராவிட புரோகிதர்? திராவிட மாடலில், திராவிட ஸ்டாக் ஆட்களில் தயாராகி விட்டார்கள் போலும்!
நல்ல ஆடு கிடைத்து விட்டது, பலிகடா ஆடு, பார்ப்பன பலிக்கடா ஆடு, அதிலும் 83-வயது நிறைந்த பார்ப்பன பலிக்கடா ஆடு – கொண்டாட்டம் தான்!
இனி பார்ப்பன துவேஷம் பீரிடும், மீம்ஸ்கள் யூ-டியூப்புகள் அதிகமாகும், ஆனால், எதிர்வினைகளுக்கு எந்த சட்டமும் வேலை செய்யாது.
[1] தினமணி, ஆன்மிகசொற்பொழிவாளர்ஆர்.பி.வி.எஸ். மணியன்கைது, By DIN | Published On : 14th September 2023 08:44 AM | Last Updated : 14th September 2023 08:44 AM
83-வயதான புகழ்பெற்ற ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் 14-09-2023 அதிகாலையில் கைது செய்யப் பட்டது! (1)
சனாதஎதிர்ப்புபேச்ச்களால்மக்களைபாதித்தநிலை: சனாதனத்தைப் பற்றிய பேச்சுகள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. தேவையில்லாமல், அமைச்சர்கள் அளவில், செக்யூலரிஸத்தை மறந்து, அவர்கள் பேசியதும், தொடர்ந்து மற்ற தலைவர்கள், எம்.பிக்கள் முதலியோர் ஆதரித்து விளக்கம் கொடுப்பதும், இந்தியா முழுவதும், இது அறியப் பட்டு பிரச்சினையாகியுள்ளது. அரசியல்வாதிகளுக்கு இது அரசியலாக உள்ளது. ஆனால், இவர்களது பேச்சுகள் இந்துக்களை வெகுவாக பாதித்து வருகின்றன. இவர்கள் அரசியல் போர்வையில், தினம்-தினம் எதையதையோ சம்பந்தம் இல்லாமல் பேசி, பொது மக்களின் மனங்களில் சலனங்களை உண்டாக்கி வருகின்றனர். அரசியல் சார்புள்ள நிலையில் தமிழகத்தில் மடாதிபதிகள் அமைதியாக மௌனம் காக்கின்றனர். இதனால், நம்பிக்கையாளர்கள் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலையில் உள்ளது. தமக்குள் தம்முடைய பிரச்சினைகளை பேசிக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டுள்ளது. பொது நிகழ்ச்சிகளில் பேசுவதும், தனிப்பட்ட முறையில், உள்ளரங்களில் குறிப்பிட்டவர்களுக்காக ஏற்பாடு செய்யப் படும் நிகழ்ச்சிகளில் பேசுவதும் ஒன்றாகுமா என்பதெல்லாம் சட்ட வல்லுனர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
11-09-2023 அன்றுபாரதியவித்யாபவனில் ‘பாரதியும், விவேகானந்தரும்‘ என்றதலைப்பில்நடந்தசொற்பொழிவு: அந்நிலையில் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் சென்னையில் 14-09-2023 அன்று கைது செய்யப்பட்டார்[1], என்று செய்திகள் வெளிவந்தன. சமீபத்தில் சென்னையில் தியாகராயநகரில் உள்ள பாரதிய வித்யாபவனில் ‘பாரதியும், விவேகானந்தரும்’ என்ற தலைப்பில் கடந்த 11-ந்தேதி சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது[2]. நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் திருவள்ளூவர் மற்றும் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது[3]. சனாதன தர்மத்தை ஆதரித்துப் பேசிய மணியன், சர்ச்சைக்குரிய விதத்தில் திருவள்ளுவர் குறித்துப் பேசினார்[4]. திருவள்ளுவர் என்ற பெயரை யார் வைத்தது எனக் கேள்வி எழுப்பிய அவர், திருவள்ளுவர் தான் திருக்குறளை எழுதினார் என்பதற்கு என்ன ஆதாரம் என்றும் கேட்டார்[5]. திருவள்ளுவர் என்பவர் உண்மையில் இருந்ததே இல்லை என்றும் அவர் பேசினார்[6]. உண்மையில் அவர் பேசிய வீடியோ இணைதளங்களில் சுற்றுக்கு வந்தது. அவர் முழுவதும் என்ன பேசினார், என்ற விவரங்கள் தெரியவில்லை.
திருவள்ளுவர், அவரது பெற்றோர் விவரங்கள் தெரியாது: பிபிசி தமிழ் தளத்தில் உள்ளதிலிருந்து காணப்படும் விவ்ரங்கள்: “திருவள்ளுவர் இருந்தார் எனச் சொல்வது கற்பனை. அவர்தான் திருக்குறளை எழுதினார் எனச் சொல்வது அதைவிடக் கற்பனை,” என்று அவர் நிகழ்வில் பேசினார். ‘திருக்குறள் ஒரு வைதிக ஹிந்து சமய நூலே’ என்ற நூலை எழுதியுள்ள மணியன், ராமர் பிறந்த நட்சத்திரம் தெரியும், ஆனால் வள்ளுவர் என்று பிறந்தார், அவரது பெற்றோர்கள் யார் எனத் தெரியுமா என்றார். விவேகானந்தரின் கருத்துகளைப் பரப்புவதில் தீவிர பங்காற்றியுள்ள மணியன், கிறிஸ்தவ பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்பக்கூடாது என விவேகானந்தர் தெரிவித்ததாகப் பேசினார். “கிறிஸ்தவ பள்ளிகளுக்கு அனுப்பாதே எனக் கூறியுள்ளேன். விவேகானந்தரும் சொன்னார். பாரதியாரும் சொன்னார்,” நமது பிள்ளைகளை கிறிஸ்தவ பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது என அவர் பேசினார். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இந்தியாவில் வாழத் தகுதியற்றவர்கள் எனக் கடுமையாக சாடியுள்ளார்.
மேலும் பேசியதாக கொடுக்கப் படும் விவரங்கள்: “ராமனை ஏற்றுக்கொண்டால் ஒழிய ஒரு கிறிஸ்தவன் இந்த நாட்டில் வாழ்வதற்கு அருகதை இல்லாதவன். அந்த முஸ்லிமும் அருகதை இல்லாதவன்,” என்று அவர் அந்த நிகழ்வில் பேசினார். இதே அளவுகோலை வைத்து அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் சாடினார். ராகுல் காந்தி கிறிஸ்தவர் ஐரோப்பியர் என்றும், அவருக்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், இந்திய அரசியல் சாசன சட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் அம்பேத்கரையும் தாக்கிப் பேசினார். அரசியல் சாசன சட்டத்தை எழுதியது அம்பேத்கரே இல்லை என்று பேசினார். “அம்பேத்கர், தன்னுடைய மூளையில் இருந்து எழுதியதாக எழுதவே கிடையாது. எல்லாம் பேசிடுவாங்க.. அது எல்லாத்தையும் ஒரு ஸ்டெனோகிராஃபர் எழுதுவான். தட்டச்சு செய்வார், ஸ்டெனோ கிராஃபர் கரெக்டா அடிச்சிருக்காரா அடிக்கலையா என்று சரிபார்ப்பார். அந்த வேலைதான் அம்பேத்கருக்கு,” என்றார்.
அரசியல்நிர்ணயசட்டம்வரையரைக்குழுவிற்குஅம்பேத்கர்தலைவர், ஆனால், பலர்வேலைசெய்தனர்: அரசியல் சட்டத்தை உருவாக்கியது யார்னு சேர்மன் பேரை போட்டால் ராஜேந்திர பிரசாத் பெயரைத்தான் போடனும்[7]. அங்கு கிளார்க்காக வேலை பார்த்தவன், டைப் அடிச்சவன், டைப்புக்கு ப்ரூப் பார்த்தவன்.. அதான் அம்பேத்கர்[8]. அவர் தன்னுடைய மூளையில் இருந்து அரசியல் சாசனத்தை எழுதியதாக எங்கேயும் எழுதி வைக்கலை. கிராமங்களில் அக்ரஹாரங்களில் பிராமணர்கள் இருக்கிறாங்க என்பான்.. அங்கிட்டு துலுக்கனுக இருக்காங்க என்பான்.. இங்கிட்டு காலனி ஆட்கள்னு சொல்லுவான். அவனுக்கு பேரு கூட கிடையாது.. காலனி ஆட்கள். எந்த காலனியில் எவன் ஒட்டிகிட்டு வந்தான்னு எனக்கும் தெரியாது. அவனுக எல்லாம் ஷெட்யூல்டு கேஸ்ட்னு சொல்றம்ல அவனுக.
அம்பேத்கர், பட்டியல் இன உட்பிரிவு பிரச்சினைகள்: அவரது பேச்சின்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனையும் தாக்கிப் பேசியிருந்தார். திருமாவளவன் பறையர் என்றும் அம்பேத்கர் சக்கிலியர் என்றும் கூறிய மணியன், சக்கிலியரும் பறையரும் திருமணம் செய்துகொள்வார்களா, பறையரும் பள்ளர்களும் திருமணம் செய்துகொள்வார்களா எனக் கேள்வி எழுப்பினார்[9]. மணியன் தன்னுடைய பேச்சு முழுவதிலும், திருவள்ளுவர், டாக்டர் அம்பேத்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோரை ஒருமையில் பேசி கடுமையாகச் சாடினார்[10]. இவரது பேச்சு சமூகவலை தளத்தில் பரவியது. பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அவரது பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது[11]. அவரது பேச்சுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது எதிர்ப்பையும், கண்டனத்தை தெரிவித்திருந்தனர்[12].
[3] அம்பேத்கர், திருவள்ளுவர்பற்றிஅவதூறுபேச்சு: ஆன்மிகசொற்பொழிவாளர்ஆர்.பி.வி.எஸ். மணியன்கைது, By Maalaimalar .14 செப்டம்பர் 2023 11:41 AM (Updated: 14 செப்டம்பர் 2023 4:00 PM).
‘சனாதனஒழிப்புமாநாடு‘ பெயரில்இந்துஒழிப்புமாநாடுநடத்துவதைஎப்படிஅரசுஅனுமதிக்கிறது? உதயநிதி மீது போலீஸில் புகார்! (2)
02-09-2023 இந்துவிரோதபேச்சிற்கு, 03-09-2023 அன்றுபோலீஸில்புகார்: தமிழகத்தில் 1950களிலிருந்து வாழும், திராவிடத்துவ அரசியல்வாதிகளின் பேச்சு, நடவடிக்கை முதலியவற்றைக் கவனித்து வருபவர்களுக்கு, நிச்சயமாக, இப்பொழுது உடனடியாக உதயநிதியின் மீது, போலீசில் புகார் அளித்திருப்பது திகைப்பாகவும், ஆச்சரியமாகவும், ஏன் சந்தோசமாகக் கூட இருக்கலாம். அதாவது இத்தனை ஆண்டுகளாக அடக்கி, ஒடுக்கப் பட்டு, மிரட்டப் பட்டு வரும் இந்துக்கள் அவ்வாறு மகிழ்ச்சியடையலாம். தமிழ்நாட்டில், சென்னையில் ஏன் புகாரைக் கொடுக்கவில்லை என்ற கேள்வியையும் எழுப்பலாம். ஆனால், இங்கு அவ்வாறு யாராவது புகார் கொடுக்க தைரியமாக வருவார்களா? அப்படியே புகார் கொடுத்தாலும், போலீசார் ஏற்றுக் கொள்வார்களா, பதிவு செய்வார்களா போன்ற கேள்விகளும் எழுகின்றன. டில்லியில் ஒரு வழக்கறிஞர் கொடுத்திருக்கிறார், அதனால், ஏற்றுக் கொள்ளப்பட்டது போலும். டில்லியில் ஜி-20 மாநாடு நடக்கும் நேரத்தில், இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தாலும், திமுகவினர் தங்களது, இந்திய் அளவில் விளம்பரம் கிடைத்தது குறித்து மகிழ்ச்சியடையலாம்.
உச்சநீதிமன்றவழக்கறிஞர்வீனீத்ஜிண்டால்டெல்லிபோலிசில்புகார்அளித்துள்ளார்: சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி போலீஸில் 03-09-2023 அன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது[1]. சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு சட்டவிரோதமானது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் டெல்லி போலிசில் புகார் அளித்துள்ளார்[2]. உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு சட்டவிரோதமானது என்றும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வீனீத் ஜிண்டால் டெல்லி போலிசில் புகார் அளித்துள்ளார்[3]. அவர் தனது புகாரில், உதயநிதி ஸ்டாலினின் பேச்சு சனாதன தர்மத்துக்கு எதிராக மக்களை தூண்டக்கூடியதாகவும், இழிவுபடுத்தக்கூடியதாகவும் உள்ளது[4]. இந்து மதத்தை கொசு, டெங்கு, கரோனா, மலேரியா ஆகியவற்றுடன் ஒப்பிட்டு, அவற்றை ஒழிப்பது போல ஒழிக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார். ஒரு இந்து என்ற வகையில் எனது உணர்வுகளை அவர் புண்படுத்தி இருக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் பேச்சு இந்து மதத்தின் மீதான அவரது வெறுப்பையே வெளிப்படுத்தி இருக்கிறது.
ஐந்துபிரிவுகளில்வழக்குபதிவு: சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருக்கும் அவர், தான் எடுத்துக்கொண்ட பிரமாணத்திற்கு விரோதமாக செயல்பட்டிருக்கிறார். சமூகத்தின் இரு பிரிவினரிடையே பகைமையை உருவாக்கும் வகையில் அவரது பேச்சு உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் பேச்சு இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களை அழிக்க வேண்டும் என அழைப்பு விடுப்பதாகவும், அதை தூண்டுவதாகவும் உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இந்திய தண்டனைச் சட்டம் 153A, 153B, 295A, 298, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனைக்கு உரியது[5]. எனவே, அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்[6].
மக்கள்மன்றமாகஇருந்தாலும்சரி, எனக்குவரும்சவால்களைஎதிர்கொள்ளநான்தயாராகஇருக்கிறேன் – உதயநிதிசவால்: மேலும், இந்து அமைப்புகள் பலவும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.நீதிமன்றமாக இருந்தாலும் சரி, மக்கள் மன்றமாக இருந்தாலும் சரி, எனக்கு வரும் சவால்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்[7]. பொய்யான செய்திகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்,” எனத் தெரிவித்திருந்தார்[8]. இதற்கிடையே உதயநிதி ஸ்டாலினின் பேச்சு தொடர்பாக பல்வேறு இந்து அமைப்புகளும் கண்டனத்தை வெளிப்படுத்தத் தொடங்கின. இந்து மகாசபையின் தலைவர் சுவாமி சக்ரபாணி, “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினின் கருத்து அவரது குறுகிய மனப்பான்மையையும் இந்தியா (I.N.D.I.A) கூட்டணிக் கட்சிகளின் புனிதமற்ற கூட்டணியையும் காட்டுகிறது,” என்று தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி மற்றும் பாஜகவுடன் இந்தியா கூட்டணி சண்டையிடவில்லை, அவர்கள் சனாதன தர்மத்துடன் போராடுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
பிஜேபி–உதயநிதிடுவிட்டர்சண்டை: இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக ஐ.டி பிரிவு தலைவர் அமித் மால்வியா, “சனாதன தர்மத்தை பின்பற்றும் 80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்ய அமைச்சர் உதயநிதி அழைப்பு விடுத்துள்ளார்” என குற்றம்சாட்டினார்[9]. அதற்குப் பதலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களை இனப்படுகொலைக்கு அழைக்கவில்லை. பல சமூகக் கேடுகளுக்கு சனாதன தர்மம்தான் காரணம் என்று நம்புகிறேன்” என தெரிவித்தார்[10]. மறுபுறம், Legal Rights Observatory- LRO (சட்ட உரிமை கண்காணிப்பகம்) என்ற பெயரிலான ஒரு என்.ஜி.ஓ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பதிவைப் பகிர்ந்து, அதன்பேரில் புகார் ஒன்று அளிக்கப்படுமென கூறியது. இதை ரீ-ட்வீட் செய்த அமைச்சர் உதயநிதி, “கொண்டு வாருங்கள், நான் எந்தச் சட்ட சவாலையும் சந்திக்கத் தயாராக உள்ளேன். இதுபோன்ற சனாதன மிரட்டல்களுக்கு அடிபணிய மாட்டேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையின்கீழ் சமூக நீதியை நிலைநாட்டுவோம். நாங்கள் பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதியைப் பின்தொடர்பவர்கள். இதனை இன்றும், நாளையும் என்றும் சொல்வேன்[11]. திராவிட மண்ணில் சனாதனத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எங்களது தீர்மானத்தில் பின்வாங்க மாட்டோம்” எனப் பதிவிட்டுள்ளார்[12].
அண்ணாமலைமுதல்மற்றமதத்தலைவர்கள்கண்டனம்: உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா, ராமஜென்ம பூசாரி ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் உள்ளிட சிலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்[13]. ஏற்கெனவே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்[14]. இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலை, “மாநிலத்தின்மொத்தஉள்நாட்டுஉற்பத்தியைத்தாண்டிச்செல்வத்தைக்குவிப்பதுதான்கோபாலபுரம்குடும்பத்தின்ஒரேஉறுதி. உதயநிதிஸ்டாலின்அவர்களே.. நீங்கள், உங்கள்தந்தைஆகியோர்கிறிஸ்தவமிஷனரிகளிடம்இருந்துவாங்கியஐடியாவைக்கொண்டிருக்கிறீர்கள். அந்தமிஷனரிகளின்எண்ணம், அவர்களின்தீயசித்தாந்தத்தைவளர்க்கஉங்களைப்போன்றமந்தமானவர்களைவளர்க்கவேண்டும்என்பதுதான். தமிழகம்ஆன்மிகபூமி. இதுபோன்றநிகழ்வில்மைக்கைப்பிடித்துஉங்கள்விரக்தியைவெளிப்படுத்துவதுதான்உங்களால்செய்யமுடிந்தஒரேவிஷயம்,” என பதிவிட்டிருந்தார்.
சனாதனபேச்சு – அமித்ஷாகண்டனம்: தொடர்ந்து புதுக்கோட்டையில் இதுதொடர்பாக பேசிய அண்ணாமலை, “சனாதன தர்மத்தை ஒழிக்க உதயநிதி யார்? சனாதனம் ஒழிக்கப்பட்டுவிட்டால், கோயில்கள் மற்றும் மதச்சடங்குகள் அனைத்தும் அழிந்துவிடும்“ என தெரிவித்தார். காங்கிரஸைச் சாடிய அமித்ஷா! – இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்[15]. இன்று ராஜஸ்தானில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், “காங்கிரஸ்கட்சிக்குசொந்தமானஅரங்கில்தான்இந்துமதத்தைஅவமதித்துஅமைச்சர்உதயநிதிபேசியுள்ளார். உதயநிதியின்வெறுப்புபேச்சுடன்காங்கிரஸ்உடன்படுகிறதாஎன்பதைஅக்கட்சிதெளிவுபடுத்தவேண்டும். மதத்தைவிமர்சித்ததற்காகஅமைச்சர்உதயநிதிமீதுசட்டப்படிநடவடிக்கைஎடுக்கவேண்டும். நாட்டின்கலாசாரம், சனாதனதர்மத்தை INDIA கூட்டணிஅவமதித்துவருகிறது; வாக்குவங்கிஅரசியலுக்காக INDIA கூட்டணிஎந்தஎல்லைக்கும்செல்லலாம்,” எனத் தெரிவித்துள்ளார்[16].
சிவன் – பார்வதிகு.க., செய்தனரா? தி.மு.க., – எம்.பி., சர்ச்சைபேச்சு – உதாரணத்திற்குஇந்துமதம்தான்கிடைத்ததா?
தர்மபுரிதி.மு.க., – எம்.பி., செந்தில்குமாரின்தொடர்ச்சியானஇந்துதூஷணபேச்சுகள்: ‘வடமாநிலத்தில் விநாயகருக்கு பின், சிவன் – பார்வதி கு.க., செய்தார்களா?’ என, தர்மபுரி, தி.மு.க., – எம்.பி., செந்தில்குமார், தனியார் ‘டிவி’க்கு அளித்த போட்டியில் நக்கலாக பேசியது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஆலாபுரம் ஏரி புனரமைப்பு பணி கடந்தாண்டு 2022, ஜூலையில் துவங்கிய போது, ஹிந்து மத முறைப்படி பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு, தர்மபுரி தி.மு.க., – எம்.பி., செந்தில்குமார், கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பூமி பூஜைக்கு வைத்த செங்கல்லையும் காலால் தள்ளினார். இதேபோன்று, நல்லம்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியிலும், தி.மு.க.,வினரை கண்டித்தார். செக்யூலரிஸ ரீதியில் இந்துக்களை எதிர்ப்பது என்பது பெரியாரிஸ ஆத்திகர்களுக்கு, இந்துவிரோதிகளுக்கு கைவந்த கலையாக மாறிவிட்டது. அண்ணாதுரை-கருணாநிதி இந்துதுவேச பாணி ஸ்டாலின் மூலமும் தொடர்கிறது. விவாக மந்திரங்களை கேவலமாக பேசியதை வீடியோ மூலம் அறிந்து கொள்ளலாம். பிறகு, தலைவன் எப்படியோ, தொண்டன் அப்படித்தானே இருப்பான்?
சிவன் – பார்வதிகு.க., செய்தனரா? தி.மு.க., – எம்.பி., சர்ச்சைபேச்சு: இதனால் அவர் ஹிந்து மதத்துக்கு எதிராக செயல்படுவதாக மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டது[1]. இந்நிலையில், அவர் பொது சிவில் சட்டம் குறித்து சமீபத்தில் தனியார் ‘டிவி’க்கு பேட்டியளித்தார்[2]. இதில், ‘வட மாநிலத்தில் சிவன் – பார்வதிக்கு, விநாயகருடன் முடிந்து விட்டது[3]. முருகர் என்பவர் இருப்பது தென்மாநிலத்துக்கு வந்தால் மட்டும் தான் தெரியும். அங்கு, சிவன் – பார்வதிக்கு, கு.க., நடந்ததா என தெரியவில்லை’ என, குறிப்பிட்டது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது[4]. தேர்தல் நேரத்தின் போது மட்டும், தி.மு.க.,வினர் தாங்கள் ஹிந்துகளுக்கு எதிரி இல்லை என, இரட்டை வேடம் போடுவதாக, சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது[5]. செந்தில்குமாரிடம் கேட்டபோது, ”பொது சிவில் சட்டம் குறித்து, தனியார் டிவி.,யில் என்னிடம் கேள்வி கேட்ட போது, பொது சிவில் சட்டத்தில், பா.ஜ., முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்படும்[6]. வட மாநிலத்தில், சிவன் – பார்வதியின் மகன் விநாயகர் என்பதை மட்டும் உறுதி செய்து, தென்மாநிலத்தில் மட்டும் அவர்களின் மகனாக அறியப்பட்ட முருகனையே வழிபட முடியாத நிலையை ஏற்படுத்துவர் என்பதை சுட்டிக் காட்டவே அவ்வாறு கூறினேன்[7]. எந்த கடவுளையும் இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கூறவில்லை,” என்றார்[8].
தர்மபுரி மாவட்ட பா.ஜ., தலைவரான முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் கூறியதாவது[9]: “தர்மபுரிதி.மு.க., – எம்.பி., செந்தில்குமார், தேர்தல்நேரத்தின்போது, தான்ஹிந்துஎன்றும், வன்னியர்என்றும்மக்களிடம்ஓட்டுகேட்டுவெற்றிபெற்றார். அதன்பின், ஹிந்துமதவழிபாட்டுக்குஎதிராகவும், ஹிந்துகடவுளுக்குஎதிராகவும்பேசுவதைவாடிக்கையாககொண்டுள்ளார். பொதுசிவில்சட்டம்குறித்து, தன்அறியாமையால், சிவன் – பார்வதிகுடும்பகட்டுப்பாடுசெய்தார்களாஎன, ஹிந்துமக்கள்மனம்வேதனைப்படும்படிபேசியுள்ளார். இதேபோன்று, முஸ்லிம், கிறிஸ்தவகடவுள்கள், குடும்பகட்டுப்பாடுசெய்தார்களாஎன, அவரால்பேசமுடியுமா? தன்னைதேர்ந்தெடுத்தமாவட்டமக்களுக்குநன்மைசெய்யமுடியாமல், மத்தியபா.ஜ., அரசுசெய்யும்நலத்திட்டங்களுக்கு, தன்பெயரைவிளம்பரப்படுத்தும்அவர், ஹிந்துகடவுள்களைபற்றிபேசுவதைநிறுத்திக்கொள்ளவேண்டும். இல்லையென்றால்அவருக்குமட்டுமின்றி, தி.மு.க., அரசுக்கும், ஹிந்துக்கள்வரும்லோக்சபாதேர்தலில்தக்கபதிலடிதருவர்,” இவ்வாறு, அவர் கூறினார்[10].
தமிழகத்தில் பகுத்தறிவு போர்வையில் இந்து தூஷணம் வளர்த்த விதம்: 1940 களிலிருந்து, ஈவேரா பகுத்தறிவு போர்வையில் இந்துவிரோத கருத்துக்களை ஆபாசமாக பேசி, எழுதி வந்துள்ளது முறையாகக் கண்டிக்கப் படவில்லை. அத்தகைய தூஷணங்களை தமிழ்-தமிழ் என்ற பெயரில், அண்ணாதுரை, கருணாநிதி போன்றோர் மேடைகளில் தொடர்ந்தனர். அவர்கள் ஆட்சியிலும் பெரியாரின் வசைப்பாடல்கள் தொடர்ந்தன. திக-திமுக மேடை பேச்சாளர்கள் இத்தகைய தூஷணங்களைத் தொடர்ந்து செய்தனர். அண்ணாதுரை, கருணாநிதி முதலமைச்சர் ஆனதால், 1970களிலிருந்து அவை இன்னும் மோசமாகி வளர்ந்தன. இப்படி பேசுவதையே திராவிடத்துவவாதிகள் பிழைப்பாகக் கொண்டு வளர்ந்தனர், கஞ்சி குடித்து-கேக் தின்று வளர்க்கப் பட்டனர்.ஊடகங்கள் வளர்ந்து பரவிய நிலையில் 1980களில் அவர்கள் தங்களது பேச்சுகளைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது. ஏனெனில், அத்தகைய ஆபாச, அறுவருப்பான, மோசமான, கேவலமான பேச்சுகளை பொது மக்கள் ஏற்கவில்லை, குறிப்பாக பெண்கள் எதிர்க்கவும் செய்தனர் என்பது தெரியவந்ததால், குறைத்துக் கொண்டனர். எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் ஒரளவுக்குக் கட்டுப் படுத்தப் பட்டாலும், திராவிடக்கழகப் பிரிவுகள் பூணூல் அறுப்புப் போர்வையில், வேறு விதமாக இந்துவிரோத தூஷணங்களை செய்தனர். பாப்பாத்தி-ஜெயலலிதாவை, ஆரிய அம்மையாரை எதிர்க்கிறேன் என்று கருணாநிதியே பலவிதங்களில் இந்து-துவேசத்தைக் கக்கியுள்ளது பதிவாகியுள்ளது.
2021ல் திமுக பதவிக்கு வந்த பிறகு: இப்பொழுது ஸ்டாலின் முதலமைச்சராகியப் பிறகு, மறுபடியும் எல்லா இந்துவிரோத கும்பல்களும், இந்துதுவேச கூட்டங்களும், இந்துவசைப்பாடும் துரோகிகளும் பலவித உருவங்களில், சித்தாந்தங்களுடன் செயல்பட்டு வருகிறார்கள். 1990களிலிருந்து ஊடகங்களில் அதிகமாகவே ஊடுருவியுள்ளார்கள். பிறகு, சினிமாக்களிலும் அவை – பாடல்கள், வசனங்கள், சித்தரிப்பு முதலியவை மூலம் – வெளிப்பட ஆரம்பித்தன. இந்நிலையில் செந்தில்குமார் அங்கு வடக்கில், சிவன் – பார்வதிக்கு, கு.க., நடந்ததா என தெரியவில்லை’ என்றதில் என்ன வியப்பு? ஏ இந்துவே, இதை நீ இந்துவாக, ஹிந்துவாக, சைவனாக, அசைவனாக, வைஷ்ணவனாக, காலமுகனாக, எப்படி எதிர்ப்பாய்?
இந்தியாவில் கருத்து சுதந்திரம் இந்துக்களுக்கு மட்டும் வித்தியாசமாக கட்டுப்படுத்துவது ஏன்?: இப்பொழுது, யாராவது இந்துதூஷணமாக பேசிவிட்டால், முதலில் பொதுவாகக் கண்டுக் கொள்வதில்லை. பிறகு, எந்த இந்துவாவது, இதே போல மற்ற கடவுளரை வைத்து பேசுவாயா, விமர்சனம் செய்வாயா என்று சாதாரணமாகக் கேட்டப் போதும் கவலைப் படவில்லை. ஆனால், இந்துக் கடவுளுக்கு பதிலாக, மற்ற கடவுளின் பெயரைக் குறிப்பிட்டுக் கேட்ட பொழுது, அந்த மற்ற மதத்தினர் விழித்துக் கொண்டனர். இதனால் பயந்த இந்துவிரோதி பேச்சாளர்கள் மறுபடியும் தம்மை கட்டுப் ப்டுத்திக் கொள்ள ஆரம்பித்தனர். இன்றைக்கு ஊடகங்கள் வாயிலாக, உலக நடப்புகள், நிகழ்வுகள் எல்லாம் ஒரளவுக்கு தெரிய வருகிறது. அப்பொழுது, மற்ற நாடுகளை விட இந்தியா பல்மடங்கு சிறந்து விளங்குகிறது என்ற உண்மையும் விளங்குகிறது. பாலஸ்தீனம், சிரியா, லெபனான், ஆப்கானிஸ்தான், மற்ற மத்தியத் தரைக் கடல் நாடுகளுக்குச் சென்று வாழ்ந்தால், நிலைமை என்னாகும் என்பது புரிந்து விட்டது.
ஸ்டாலின் – சாதி, மதம்தொடர்பாகசமூகவலைதளங்களில்விமர்சனம்செய்பவர்கள்மீதுகண்காணித்துநடவடிக்கைஎடுக்கவேண்டும்[11]: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11-07-2023 அன்றுதான், சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பான உயர்அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்தில், சாதி, மதம் தொடர்பாக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்பவர்கள்மீது கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்[12]. இந்த நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.பி. இந்து கடவுகள் குறித்து தவறான விமர்சனம் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் பேசி 24 மணிநேரம் கூட ஆகாத நிலையில், தர்மபுரி தொகுதி திமுக எம்.பி. இந்துமதம் குறித்து விமர்சனம் செய்துள்ளார். இது சர்ச்சையான நிலையில், அவர் கைது செய்யப்படுவாரா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் தர்மபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில்குமார். இவர் இந்து மதங்களையும், இந்து மத சடங்குகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆனால், இவர்மீது காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், மற்ற மதங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டாலே, உடனே சைபர் கிரைம் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
செந்தில்குமாரும், கனல் கண்ணனும்: சமீபத்தில் நடிகர் கனல்கண்ணன், சமூக வலைதளங்களில் வெளியான ஒரு மதம் தொடர்பான வீடியோவை பகிர்ந்து கருத்து பதிவிட்டதால், கைது செய்யப்பட்டார். இது சர்ச்சையானது. முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் கைது செய்யப்படுவாரா ? மதம் குறித்து அவதூறு கருத்தை கூறிய செந்தில் குமார் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிடுவார் என உறுதியாக நம்புகிறேன் என பாஜக தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். பொதுமக்களும், தமிழக முதல்வர் கூறுவது உண்மை என்றால், உடனே செந்தில்குமார் எம்.பி. கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், வடமாநிலத்தில்சிவன், பார்வதிகுடும்பகட்டுப்பாடுபண்ணாங்களா? திமுகஎம்.பி. சர்ச்சைபேச்சு!, Manikanda Prabu, First Published Jul 12, 2023, 10:14 AM IST; Last Updated Jul 12, 2023, 10:17 AM IST.
தமிழகத்தில்கோவில்கொள்ளை, திருட்டு, கடத்தல்என்பதெல்லாம்சகஜமப்பாவா?: தமிழகத்தில் கோவில் கொள்ளை, திருட்டு, கடத்தல் என்பதெல்லாம் அலுத்துப் போன செய்திகளாகத் தான் வெளியிடப் படுகின்றன. திரும்ப-திரும்ப நடக்கின்றனவே என்று எந்த நிருபரும், ஊடகக் காரரும், புலன் விசாரணை வீர-சூரப் பத்திரிக்கையாளனும் எதையும் கண்டுபிடிக்க உற்சாகம் பெறவில்லை. இந்து அறநுலைய அமைச்சரை நிற்கவைத்து கேள்விகளைக் கேட்கவில்லை. பி.டி.ஐ பாணியில்,ஒரு வரி கூட மாறாமல் அப்படியே வெளியிட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது[1]. ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் மிகவும் தொன்மை வாய்ந்த கோவிலாகும். கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மையான ஆலயமாகவும், முதலை விழுங்கிய பாலகனை காப்பற்றுவதற்காக சுந்தரர் பதிகம் பாடி அதன் பின் அந்த சிறுவனை மீட்டதாகவும் வரலாறு கொண்ட தலமாக இது விளங்குகிறது, என்று புராண விசயங்களைக் குரிப்பிட்டாலும், குற்றவியல் ரீதியில் ஒன்றையும் கவனிக்கவில்லை.
22-05-2023 அன்றுகோவிலுக்குள்நுழைந்தகொள்ளையன்செய்தகாரியகள்: வழக்கம்போல் 23-05-2023 அன்று அதிகாலை கோயில் அர்ச்சகர்கள் நடை திறந்தபோது,
உள்ளே பொருட்கள் சிதறி கிடந்ததையும்,
கோயிலுக்குள் இரண்டு உண்டியல்களை உடைக்க முயற்சி நடந்திருப்பதையும்,
தெற்கு உள்பிரகார வளாகத்தில் 63 நாயன்மார்கள் சிலைகள் உள்ள பகுதியில் கோபுரங்களின் கலசம் உடைக்கப்பட்டிருந்ததையும்,
சிலைகள் மீது அணிவித்திருந்த ஆடைகள், அவிநாசிலிங்கேஸ்வரர் மீது இருந்த பொருட்கள் உள்ளிட்டவை களைந்து கிடந்ததையும்
கண்டு அதிர்ச்சியடைந்தனர்[2]. இதையெல்லாம் சாதாரணமாக செய்ய முடியாது. மேலும், விவரம் அறிந்தவன் தான் திட்டமிட்டு செய்திருக்க வேண்டும். அதாவது, 22-05-2023 அன்று யாரோ அத்தகைய வேலைகளை செய்திருக்க வேண்டும். அதிர்ச்சி அடைந்த அர்சகர்கள் உடனே கோவில் நிர்வாகம் மற்றும் அவிநாசி காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்[3].
போலீஸார்வருவது, விசாரிப்பது, கைதுசெய்துகொண்டுசெல்வது: இதுதொடர்பாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளர் பவுல்ராஜ் தலைமையிலான போலீஸார் சென்று விசாரித்தனர்[4]. இதில் முருகன் சன்னதியில் வெண்கலத்தால் செய்த வேல், சேவல் கொடியுள்ள 2 வேல்கள் மற்றும் உபகாரப் பொருட்கள் காணவில்லை என்பது தெரியவந்தது[5]. அப்படியென்றால் திருடப் பட்டது என்றாகிறது. கோயில் பெரிய கோபுரம் நிலை பகுதியில் சத்தம் கேட்டதால் சென்று பார்த்துள்ளனர்[6]. அப்போது, அங்கு பதுங்கி இருந்தவரை பிடித்து போலீஸார் விசாரித்தனர்[7](இப்படி மிக்க மரியாதையுடன் ஊடகத்தால் வெளியிட்டுள்ளனர்). இதில், பிடிபட்ட நபர் அவிநாசியை அடுத்த சாவக்கட்டுபாளையம் அருகே உள்ள வெள்ளமடையை சேர்ந்த சரவணபாரதி (32) என்பது தெரியவந்தது[8]. மேலும், இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததும், 22-05-2023 அன்று அதிகாலை 4 மணிக்கு அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலுக்குள் கொள்ளை முயற்சியில் ஈடுபட புகுந்ததும் தெரியவந்தது[9]. அவரிடமிருந்து வெண்கலத்தாலான வேல், சேவல் கொடி மற்றும்உபகாரப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன[10]. பின்னர் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி பற்றியெல்லாம் ஒன்றும் குறிப்பிடப் படவில்லை.
வாக்குமூலத்தில்தான்பைத்தியம்என்பதுபோலசொல்வது: இதற்கிடையே, சரவணபாரதி அளித்த வாக்குமூலத்தில், “தன்னைசிலர்தாக்கிவிட்டதாகவும், தான்முன்பேஇறந்துவிட்டேன். தற்போதுஆவியாகஉள்ளேவந்தேன்,” என்றார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், “அவர் ஏற்கெனவே மனநல பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றவர் என்பதால், தற்போது அவர் மீண்டும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளாரா அல்லது பிடிபட்டவுடன் நாடகமாடுகிறாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம்” என்றனர். “அவிநாசிலிங்கேஸ்வரர்கோயிலுக்குள்கொள்ளைமுயற்சியில்ஈடுபடபுகுந்ததும்தெரியவந்தது. அவரிடமிருந்துவெண்கலத்தாலானவேல், சேவல்கொடிமற்றும்உபகாரப்பொருட்கள்பறிமுதல்செய்யப்பட்டன. பின்னர்அவரைகைதுசெய்துகாவல்நிலையம்அழைத்துச்சென்றுவிசாரணைமேற்கொண்டுவருகின்றனர்,” என்று சொல்லி விட்டு, அந்த ஆள் பைத்தியம் என்பது போல குறிப்பிடுவதும், ஊடகங்கள், அப்படியே செய்திகள் வெளியிடுவதும் தமாஷாக இருக்கிறது.
இந்துஅமைப்புகள்போராட்டம்: முன்னதாக, தகவல் அறிந்து வந்த இந்து அமைப்பினர், கோயில் முன்பு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால், கோயிலில் நேற்று கால பூஜைகள் ஏதும் நடைபெறவில்லை[11]. பக்தர்களும் அனுமதிக்கப்படாததால் வேதனையடைந்தனர்[12]. மேலும், கோயிலில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனக் கூறி, அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தை கண்டித்து, கோவை – அவிநாசி நெடுஞ்சாலையில் இந்து அமைப்பினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்[13]. அப்போது, அங்கிருந்த கடைகளை மூடக் கூறியும், சாலையோரம் இருந்தவர்களை மறியலில் ஈடுபட வலியுறுத்தியும் பேசினர்[14]. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது[15]. போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலை கைவிடாததால், 10-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்[16]. இங்கு மட்டும் போலீஸார் சரியாக வேலை செய்து விடுவர்.
பரிகாரபூஜைகள்நடந்தபிறகுகோவில்திறக்கப்பட்டது: இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், திருப்பூர் தெற்கு எம்எல்ஏ க.செல்வராஜ், மருதாசல அடிகளார், குமரகுருபர சுவாமிகள், வரதாசல அடிகளார், காமாட்சி தாச சுவாமிகள், அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் கோயிலுக்கு சென்று பார்வையிட்டனர். அவிநாசி எம்எல்ஏ ப.தனபால் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு கோவில் கருவறை மற்றும் சன்னதிகளில், அந்நபர் புகுந்தால், பிராயச்சித்த ஹோமம் செய்யப்பட்டு, அவிநாசிலிங்கேஸ்வரர், கருணாம்பிகை அம்மன் செந்திலாண்டவர் சன்னதிகளில் அபிஷேகம் செய்விக்கப்பட்டு, பரிகார பூஜைகள் நடந்தன[17]. அதன்பின், 12 மணியளவில், பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டடனர்[18]. ஆனால், இவ்வளவு நடந்தும், இந்து அறநிலையத் துறை அமைச்சரோ அல்லது பொறுப்பான மற்ற எந்த அதிகாரியோ எதையும் சொல்லவில்லை, பேசவில்லை, கண்டுகொள்லாமல் இருந்துள்ளனர்.
[1] தமிழ்.இந்து, அவிநாசிலிங்கேஸ்வரர்கோயிலில்கொள்ளைமுயற்சி; சிலைகள்சேதம்: கோயிலுக்குள்பதுங்கியிருந்தவர்பிடிபட்டார், செய்திப்பிரிவு, Published : 24 May 2023 06:19 AM, Last Updated : 24 May 2023 06:19 AM
[9] தமிழ்.18.நியூஸ், அவிநாசிலிங்கேஸ்வரர்கோயில்சிலைகள்சேதம்.. கோபுரத்தில்பதுங்கிஇருந்தநபர்கைது, Reported By :BALAJI BHASKAR, Published By :Raj Kumar, LAST UPDATED : MAY 23, 2023, 17:57 IST, First published: May 23, 2023, 17:40 IST
கலாக்ஷேத்ராவிவகாரம்அரசியலாக்கி, மொழிவெறியாக்கி, ஜாதியத்தில்முடிந்தவக்கிரவிளக்கவாதசெய்திகள்- – கலை காமம் ஆகி கலவியாகிய நிலை (3)
கலைக்கூடமா, கலவிக்கூடமா?: கலைக்கூடமா, கலவிக் கூடமா? இப்படியெல்லாம் தலைப்பிட்டு செய்திகள். அப்படியென்றால் இவர்களின் இலக்கு யார்? இவர்கள் உண்மையிலேயே கலையில், கலையில் ஈடுபட்டுள்ள பெண்களை மதிப்பதாக இருந்தால், அத்தகைய பெண்களின் புகைப் படங்களை ஒழுங்காக வெளியிடுவார்களா? அவ்வாறு கலவிக் கூடம் எனும் பொழுது, இங்கு படிக்கும் எல்லா மாணவியரையும் அவதூறு பேசுவது ஆகாதா? ஆக, இதில் யாரைத் தாக்குகிறார்கள் என்று தெரிந்தே, யாரையோ தாக்குகிறார்களா? லாஜிக்கே இல்லாமல், இவ்வாறு செய்து, தமது பிராமண துவேசத்தை வெளிப் படுத்திக் கொள்கிறார்களா? ஒருவேளை “திராவிட மாடலில்” இவர்கள் இப்படித்தான் எழுதுவார்கள், செய்தி வெளியிடுவார்கள் போலும்!
மூடிமறைக்கும்பார்ப்பனர்கள்! ஆக, இப்படிபார்ப்பனர்களையும்இழுத்தாகிவிட்டது!: ஒரு பக்கம் மலையாளிகளின் ஆதிக்கம், ஆர்.எஸ்.எஸ் ஊடுருவல், என்றெல்லாம் அளந்து, பார்ப்பனர்களையும் சேர்ந்து அடைந்துள்ளது! பிறகு, பார்ப்பனர் அல்லாதவர்களின் கதை என்னவோ?
பார்ப்பன லாபி!
யார் அந்த பார்ப்பன லாபியில் இருக்கிறார்கள்?
பெயர்கள், விவரங்கள் தர முடியுமா?
குற்றவாளிகளுக்கு உடந்தை என்று அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கலாமே? தினம்-தினம் யூ-டியூப்புகள் வந்து கொன்டிருக்கின்றன. வரும் செய்திகளைத் தொகுத்து, தமது பிராமண வெறுப்பைக் கக்கி கொன்டிருக்கின்றன. ஏதோ பார்ப்பனர்கள் தான் எல்லாவற்றிற்கும் காரணம் போன்ற பேச்சுகள், விளக்கங்கள்….ஶ்ரீதேவி என்ற பெண்மணியின் வீடியோக்கள் இந்திய அரசே பார்ப்பனியமயமாகப் பட்டு விட்டது என்று திகவை விட 1000 மடங்கு அதிகமாக கதை விடுகிறார். பொழுது போக்கிற்காக, இதைப் பார்த்து மறந்து விடுவர். இருப்பினும், சித்தாந்த ரீதியில், இப்படி யாரோ தயார் செய்து அரங்கேற்றுகிறார்கள் என்று தெரிகிறது. ஏனெனில், இதெல்லாம் ஒரு தரப்பு பொய்யான-பிரச்சார ரீதியிலான பேச்சுகள். யூ-டியூப் பிரச்சாரம் இப்பொழுது பொழ்து போக்கிற்காக உள்ளது. செல்போனில் பார்ப்பதால், அதிக “வியூவ்ஸ்” கிடைக்கிறது என்று அள்ளி வீசுகின்றனர். இவர்களுக்கு உண்மை, பொறுப்பு, சமூக அமைதி முதலியவற்றைப் பற்றி கவலை இல்லை.
“மவுண்ட்ரோட்மஹாவிஷ்ணு”வும், காமக்ஷேத்ரமும்: “காமக்ஷேத்ரவான கலாக்ஷேத்ரா!” என்று அட்டைப் படம் போட்டு, “”நக்கீரன்” விற்கிறது. “பார்ப்பன” டுவிஸ்ட் செய்யலாம் என்றால் கோபாலனுக்கு சந்டோச தான். பார்ப்பன துவேச ரீதியில் இத்தகைய இணைத்தளப் பதிவுகளும் வெளியாகியுள்ளன[1]. “அறம்” என்ற பெயர் இருந்தாலும், அதிலும் பார்ப்பன காழ்ப்பு இருக்கத்தான் செய்திறது[2]. லீலா சாம்சன் டுவிட்டர் பதிவு ஆரம்பித்து, ஒரு கதையைச் சொல்லி, பார்ப்பன கோணத்தில் திரிபு விளக்கம் கொடுத்து வீடியோவையும் போட்டாகி விட்டது. நக்கீரனுக்கு, கோபாலனுக்கு, “பார்ப்பனரான” இந்து-ராம் ஆதரவு கொடுப்பது தெரிந்த விசயம். “ஜார்னலிஸ்டிக்-எதிக்ஸ்” பேசும் என்.ராமுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன? இருப்பினும் “என்.ராம்” போன்றவர்கள் ஆதரவு தருகின்றனர் என்றால், அனைத்தையும் மீறி, ஏதோ ஒன்று அவர்களை பிணைத்துள்ளது என்று தெரிகிறது. ஆமாம், அவர் வீட்டுப் பெண்ணைத் தான் தயாநிதி மாறன் கல்யாணம் செய்துக் கொண்டிருக்கிறார். “சாவிப்’ பிரச்சினை எல்லாம் இங்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை. மாமனார் “மவுண்ட் ரோட் மஹாவிஷ்ணு” என்று நக்கல் அடித்தாலும், மறுமகள் கண்டுகொண்டதில்லை. அதைத்தான் முதலில் “இந்துத்துவ வாதிகள்” வெளிப்படுத்த வேண்டும்.
இந்துத்துவவெறுப்புபார்ப்பனவெறுப்பாகி, பிராமணதுவேஷமாவதேன்?: வழக்கம் போல,ஆர்-எஸ்-எஸ்- எதிர்ப்பு, பிஜேபி-எதிர்ப்பு, இந்துத்துவ-எதிர்ப்பு, அவாள்- எதிர்ப்பு, பார்ப்பன- எதிர்ப்பு என்றெல்லாம் பதிவுகள் போட்டு, இந்து-விரோத, இந்து-துவேஷ, இந்து-தூஷணங்களில் முடிந்து விடும். அத்தகையோரையும் கண்டு கொள்ளலாம்! “வினவு” போன்ற இந்துவிரோத தளங்கள் விஷத்தைக் கக்குவது தெரிந்த விசயம் தான்[3]. ஏனெனில், அங்கும் அதே ஃபார்புலா தான் பின்பற்றப் படுகிறது[4]. அதாவது, பார்ப்பனத் திரிபு விலக்கத்தை வைத்து, கதையை உருவாக்கி, செய்தியாக்குவது[5]. பிறகு மற்ற ஜாதியினரின் ஆதிக்கம், செல்வாக்கு, முதலியவை வரும்பொழுது, வியாபாரம் கருதி, அமைதியாவது, சரண்டாராகுவது என்று முடிவதும் சகஜமாகிறது[6]. இருப்பினும், அந்த பார்ப்பன தூவேஷப் பதிவு நிலைத்திருக்கும். வேண்டும் என்றால் பிராமணர்களை முக்கியமான வேலைக்கும் வைத்துக் கொள்வார்கள். ஆனால், வெளியில் அவர்களை வசைப் பாடுவார்கள். இது “சன்’ குழுமத்திலேயே கவனிக்கலாம்.
பார்ப்பனியவாதமும், குஷ்புபதிலும்: இந்நிலையில் ட்விட்டரில் ரத்தினவேலு வசந்தா என்ற பெயரில் செயல்படும் ஒருவர், நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவை டேக் செய்து, ‛‛இன்றுவீட்டுகடனுக்கானவட்டிஅதிகமாகியுள்ளது. கலாசேத்ராவில்பார்ப்பனஆசிரியர்களின்பாலியல்தொந்தரவைஎதிர்த்துமாணவிகள்போராடுகின்றனர். மகளிர்ஆணையஉறுப்பினர்ஆனநீங்கள்என்னசெய்கிறீர்கள்,” என கேள்வி எழுப்பியதோடு மேலும் சில வார்த்தைகளை காட்டமாக தெரிவித்து இருந்தார்[7]. இதற்கு உடனடியாக குஷ்பு பதிலடி கொடுத்தார். அதாவது, ‛‛நீங்கள்எவ்வளவுவிரக்தியில்இருக்கிறீர்கள். முதல்வர்உங்களுக்குஏதாவதுவேலைஒதுக்கீடுசெய்யவண்டும். நீங்கள்கேள்விகள்கேட்பதற்குமுன்புசட்டம்அல்லதுதேசியமகளிர்ஆணையம்எவ்வாறுசெயல்படுகிறதுஎன்பதுபற்றிஅறிந்துகொள்ளவேண்டும். உங்கள்வயதுக்குமரியாதைஉண்டு. அதுவும்ஒருகட்டத்தில்முடிவுக்குவரும். dravidan Stockகளிடம்இருந்துசிலசிறந்தஉணர்வுகளைஎதிர்பார்ப்பதுஎன்பதுஎன்மீதானதவறுதான். உங்களிடம்இருந்துசிலவற்றைகற்றுகொள்ளவேண்டியுள்ளது. உங்களைபோல்நானும்சொன்னால்அதுஅவமரியாதையாகஇருக்கும். எனவேகடவுள்ஆசீர்வாதம்கிடைக்கட்டும்எனகூறுகிறேன்,” என விமர்சனம் செய்திருந்தார்[8].
லாஜிக்கே இல்லாத வாத-விவாதங்கள் தொடர்கின்றன, அரங்கேறுகின்றன: லாஜிக்கே இல்லாத அதாவது தர்க்கத்தில் காரணம், நியதி, முறை, உண்மை, ஏற்புடைத் தன்மை என்று எதையும் பின்பற்றாமல், வாதங்கள் முன்வைக்கப் படுகின்றன:
ஹோமங்கள்நடந்தன, தானங்கள்கொடுக்கப்பட்டன: மகா சண்டிஹோம் உட்பட பல்வேறு ஹோமங்கள் நிறைவுற்று பூர்ணாகுதி நடைபெற்றது. பின்னர், மேள தாளம் முழங்க, சிவாச்சாரியார்கள், புனிதநீர் கலசங்களை தலைகளில் தாங்கி, கோயிலை வலம் வந்து “கோயில் கருவூலத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு அபிசேக ஆராதனை செய்தனர்[1]. இந்த ஹோமத்தில் கலந்துகொண்ட உள்ளூர் பெண்களுக்கு, திருமதி துர்கா ஸ்டாலின் அவர்கள் உணவு பரிமாறி, புடவை, மாங்கல்ய பொருட்களை வழங்கினார்[2]. அதாவது முறைப்படி சுமங்கலிகளுக்கு தானம் கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில், மயிலாடுதுறை திமுக மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர். வழங்கறிஞர் பன்னீர்செல்வம், சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்பு கணவன் எந்த மந்திரங்களை பழித்துரைத்தானோ, அதே மந்திரங்கள் ஓதப் பட்டு சடங்குகள் நடந்தது-நடத்தப் பட்டது தான் ஸ்டாலின் விதியா, கடவுள் நிர்ணயித்ததா, காக்கா உட்கார பனம் பழம் விழுந்ததா என்பதையெல்லாம் கே. வீரமணி தான் ஆராய்ச்சி செய்ய வேண்டும். அவர் ஆரம்பித்திருக்கும் திராவிட ஆராய்ச்சி மையமும் ஆராய்ச்சி செய்யலாம், மாநாடு-கருத்தரங்கம் நடத்தலாம்.
பீமரதசாந்திஎன்றால்என்ன?: பீமரத சாந்தி, ஒருவருக்கு அதிபௌதீகம் (இயற்கை), அதிதைவீகம் (தெய்வங்கள்), அத்யாத்மீகம் (தன் செயல்கள்) ஆகியவைகளால் தனக்கு ஏற்படும் தீயபலன்களிலிருந்து காத்துக் கொள்ளவும், 70 ஆம் ஆண்டு துவங்கும் போது பீமன் எனும் ருத்தரனை அமைதிப் படுத்தும் நோக்கில் பீமரத சாந்தி எனும் சடங்கு செய்யப்படுகிறது. “ஜனனாத்பரம் ப்ரதிவர்ஷே ஜன்ம மாஸே ஜன்மநக்ஷத்ரே ஆயுஷ்ய ஹுவனம் குர்யாத்” என்கிற வாக்கிற்கிணங்க, ஜன்ம நட்சத்திரம் வரும் ஒவ்வொரு வருஷமும் ஆயுள் விருத்திக்காகவும், மற்ற நற்பலன்களைப் பெறவும் ஆயுஷ்ஹோமம் செய்ய விதிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இவைகளை ஒவ்வொரு ஆண்டும் செய்ய இயலாவிடினும் மனிதன் தனக்கு “ஆதிபௌதீகம், ஆதிதைவீகம் ஆதிஆத்மீகம்” என்னும் இயற்கை, தெய்வ குற்றம், தன் செயலால் ஏற்பட்ட பாவ கார்ய பலன் ஆகியவை வந்து தீயபலன்களைக் கொடுக்காமல் இருக்கவும் அதிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளவும் கண்டிப்பாக அவனது 59, 60, 61 மற்றும் 70 வது வயது துவக்கம், 78 ஆம் ஆண்டு துவக்கம், 80 ஆம் ஆண்டு நிறைவு, 100 வது ஆண்டு நிறைவு ஆகிய கால கட்டங்களில் அதற்குரிய சாந்தி சடங்குகளைச் செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால், 59 ஆம் ஆண்டு கால புருஷனில் உக்ர ரதனின் ஆளுமைக்கு 60, 61 ஆம் ஆண்டு வரை ஆட்படுகிறான். அப்பொழுது ஈசனின் அம்சமான உக்ரனை அமைதிப்படுத்தும் நோக்குடன் செய்யப்படும் சாந்தி உக்ர ரத சாந்தி என்கிற சஷ்டியப்த பூர்த்தி மணிவிழா எனப்படும்.
70 ஆம்ஆண்டுதுவங்கும்போதுபீமன்என்னும்ருத்தரனின்சாந்திக்காகஅவரைஅமைதிப்படுத்தும்பொருட்டு ” பீமரதசாந்தி ” எனும்சடங்குசெய்தல்வேண்டும்: 70 ஆம் ஆண்டு துவங்கும் போது பீமன் என்னும் ருத்தரனின் சாந்திக்காக அவரை அமைதிப் படுத்தும் பொருட்டு ” பீமரத சாந்தி ” எனும் சடங்கு செய்தல் வேண்டும்.78 ஆம் ஆண்டின் துவக்கத்தின் போது விஜயன் எனும் ருத்ரனின் சாந்திக்காக அவரை அமைதிப்படுத்தும் பொருட்டு “விஜயரத சாந்தி” எனும் சடங்கு செய்ய வேண்டும். இதைச் செய்தாலே பூரண ஆயுள் விருத்தி ஏற்படும் என்பது சாத்திர கருத்து. அதன்பிறகு 80 ஆம் ஆண்டு முடிந்து எட்டாவது மாதம் ஜன்ம நட்சத்திரத்தன்று “சகஸ்ர சந்திர தர்சன” சாந்தி செய்தல். அன்றே சிலர் சதாபிஷேகம் எனும் 108 ருத்ர காலபிஷேகம் செய்து கொள்வது நடைமுறையில் உள்ளது. எனினும் 100 வது ஆண்டு முடிந்து 101 ஆரம்பமாகும் அன்று செய்யப்படும் சாந்தியே “சதாபிஷேக கனகாபிஷேகம்” என்று பெயர் பெற்ற சடங்காகும். இது “அஷ்டோத்ர சதருத்ர கலாபிஷேகம்” எனப்படும்.
01-03-2023- ஸ்டாலின்அரசியல்ரீதியில்பிறந்தநாள்விழாகொண்டாடியது: முன்னதாக அண்மையில் தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் கண்டார்[3]. இதனையொட்டி, தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் உள்ளிட்டோர் ஆங்காங்கு கேக் வெட்டி ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வெகு விமரிசையாகக் கொண்டாடினர்[4]. குறிப்பாக, இந்த பிறந்த நாள் விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பிகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய நிலையில், மு.க.ஸ்டாலினின் மனைவியான துர்கா ஸ்டாலின் தனது கணவருக்கு 70 வயது பூர்த்தியடைந்த நிலையில், அவருக்காக யாகம் செய்து வழிபாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
[1] தமிழ்.ஏபிபி.லைவ், Durga Stalin Pooja: நீண்டஆயுள்வேண்டும் – முதல்வரின்மனைவிதுர்காஸ்டாலின்கணவருக்காகபீமரதசாந்தியாகம்,By: எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை | Published at : 07 Mar 2023 03:42 PM (IST); Updated at : 07 Mar 2023 03:42 PM (IST);
17ம் நூற்றாண்டு அம்மணி அம்மன் மடம் மற்றும் பிஜேபி பிரமுகர் ஆக்கிரமித்த கட்டிடம் இடிப்பு – தொல்லியல் துறையினர் கண்டு கொள்ளவில்லை!
அம்மணி அம்மன் மடம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 4 கோபுர நுழைவு வாயில்கள் உள்ளன. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் வடக்குக் கோபுரம்(அம்மணி அம்மன்) பாதி மட்டுமே கட்டப்பட்ட நிலையைக் கண்டு, பக்தர்கள், செல்வந்தர்களின் உதவியை நாடி அந்த கோபுரத்தினைக் கட்டி முடித்தவர் பெண் சித்தரான அம்மணி அம்மாள். 17ம் நூற்றாண்டு இறுதியில் அவர் ஜீவ சமாதி அடைந்தார். இவருடைய ஜீவ சமாதி திருவண்ணாமலை ஈசான்ய லிங்க கோயிலின் எதிரே அமைந்துள்ளது. அம்மணி அம்மாள் கட்டியதால் அம்மணி அம்மன் கோபுரம் என அழைக்கப்பட்டு வரும் வடக்கு கோபுரம் எதிரில் அவர் வாழ்ந்த மடம் உள்ளது. இதில் அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயில் எதிரில் இக்கோவிலுக்கு சொந்தமான அம்மணி அம்மன் மடம் உள்ளது. 17ம் நூற்றாண்டிற்குப் பிறகு, அவ்விடத்தை பலர் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது தெரிகிறது. திருவண்ணாமலை கோவிலைச் சுற்றியுள்ள இடங்கள் பல இவ்வாறுதான் ஆக்கிரமிப்புகளில் உள்ளன, இந்த இடம் ஆக்கிரமிப்பில் சென்றதால், 1978ல் முதன்முதலாக விஸ்வ ஹிந்து பரிஷத் கோர்ட்டுல் வழக்கு தொடர்ந்தது. 2015ல் கே. ஆர். குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த 37 வருடங்களில் என்னவாயிற்று என்று தெரியவில்லை. பொதுவாக, இங்கு முன்பு பிச்சாண்டி, இப்பொழுது ஏ.வ. வேலு அவர்களின் ஆதிக்கம் தான் உள்ளது. சுற்றியுள்ள படங்கள் ஒவ்வொன்றாக கடை வளாகம், லாட்ஜ் என்று மாறிக் கொண்டிருக்கின்றன.
பிஜேபி பிரமுகர் ஆக்கிரமித்துக் கொண்டது: இந்த அம்மணி அம்மன் மடத்தை திருவண்ணாமலையை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் / ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவர் சங்கர் ஆக்கிரமித்து மடத்தின் இடத்தில் மாடி வீடு கட்டியும், மடத்தின் முன்பு கார் நிறுத்தும் ஷெட்டும் அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது[1]. அப்படியென்றால், பிஜேபி கட்சிக்குள் முரண்பாடு உள்ளது தெரிகிறது. அதிகாரம், அந்தஸ்து, பணம் என்று வந்துவிட்டால், அரசியல்வாதி இப்படித்தான் இருப்பான் போலிருக்கிறது. இதன் மதிப்பு சுமார். ரூ.50 கோடி இருக்கும் என்று தெரிகிறது. ரூ.30 கோடி என்று தினகரன் குறிப்பிடுகிறது. கோவிலுக்கு சொந்தமான அந்த மடத்தை அவரிடம் இருந்து மீட்க அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் திருவண்ணாமலை சார்பு நீதிமன்றத்தில் 2015ல் வழக்கு தொடரப்பட்டது[2]. வழக்கினை விசாரித்த திருவண்ணாமலை சார்பு நீதிமன்றம் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான அம்மணி அம்மன் மடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடத்தை இடித்து அகற்ற உத்தரவு பிறப்பித்தது. இப்பொழுது திமுக அரசு இருப்பதனால், அவர்களுக்கு லட்டு தின்கின்ற கதை தான். அதனால், உடனடியாக இடிக்க கிளம்பிவிட்டதில் எந்த வியப்பும் இல்லை.
ஆக்கிரமிப்புகள்அகற்றம்: இதையடுத்து நேற்று 18-03-2023 காலை வருவாய்த் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கு சென்றனர். அவர்கள் அங்சு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடத்தை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கட்டிடம் பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடிக்கப்பட்டது. அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றதால் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக நேற்று 18-03-2023 காலை முதல் மதியம் வரை கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அம்மணி அம்மன் கோபுரத் தெருவிற்குள் யாரும் செல்லாதவாறு போலீசார் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. காலையில் கோவில் பணியாளர்கள் அம்மணி அம்மன் மடத்தில் இருந்த அறைகளை காலி செய்து மூடி ‘சீல்’ வைத்தனர்[3]. ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் கோயிலுக்கு அருகில் உள்ள மடத்துக்குள் 25க்கும் மேற்பட்ட சமையல் காஸ் சிலிண்டர்கள் இருந்ததால், அவற்றை போலீசார் பாதுகாப்பாக வேறு இடத்துக்கு மாற்றினர்[4]. இவற்றையெல்லாம் யார் வைத்திருந்தனர் என்று தெரிவிக்கப் பட்வில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன், கோயில் இணை ஆணையர் குமரேசன், ஆர்டிஓ மந்தாகினி மற்றும் நகராட்சி அலுவலர்கள் மேற்பார்வையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
அம்மணிஅம்மன்மடம்இடிப்பு: தொடர்ந்து மாலை 4 மணியளவில் திடீரென கோவில் நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அம்மணி அம்மன் மடமும் இடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது[5]. இது ஆணையில் இல்லை என்றாலும், அவ்வாறு செய்யப் பட்டது[6], ஏதோ உள்நோக்கத்தைக் காட்டுகிறது. இதையடுத்து அந்த முகப்பு பகுதியில் இருந்து பொக்லைன் எந்திரத்தின் மூலம் இடிக்கும் பணி தொடங்கியது[7]. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆன்மிகவாதிகள் இந்து அமைப்பினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்[8]. அதனை தொடர்ந்து இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் அங்கு வந்தனர். அப்போது மடம் பாதி இடிக்கப்பட்டு காணப்பட்டு உள்ளது[9]. இதையடுத்து அவர்கள் இடிக்கப்பட்ட மடத்தின் அருகில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோவில் நிர்வாக அலுவலர்களிடம் இது குறித்து கேட்ட போது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது[10]. சேகர்பாபுவைப் பொறுத்த வரையில், இதை பெரிய பிரச்சினையாகக் காட்டி, 30 கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை மீட்டேன் என்று பிரகடனப் படுத்திக் கொள்வார்.
பொக்லைன் எந்திரங்கள் அகற்றம்: தொடர்ந்து அந்த இடத்திற்கு ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் இரவு 7.30 மணி வரை நடைபெற்றது. அதை தொடர்ந்து அங்கிருந்து பொக்லைன் எந்திரங்கள் அகற்றப்பட்டது. இது குறித்து இந்து அமைப்பினர் கூறுகையில், ”கோவிலுக்கு சொந்தமான இடத்தின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால் பழமையான மடத்தை அதிகாரிகள் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் இடித்து உள்ளனர். இதனை இடிப்பதற்கான என்ன. காரணம் என்பது குறித்து அதிகாரிகள் எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை. இதனை கண்டித்து அம்மணி அம்மன் கோபுரம் அருகில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் போராட்டம் நடைபெறும் என்றனர். இன்று என்ன நடந்தது என்பதை இனி மேல் தான் கவனிக்க வேண்டும். பழங்கால கட்டிடங்கள் பாதுகாக்கப் படவேண்டும் என்று இந்திய தொல்துறை சட்டங்களே கூறுகின்றன, ஆனால், அத்துறை இதில் கண்டுகொள்ளாமல் இருந்ததும் வியப்பாகத் தான் இருக்கிறது. தொல்லியல் படித்த, படிக்கும், இவ்விவரங்கள் அறிந்த அம்ர்நாத் ராமகிருஷ்ணன், வெங்கடேசன், மற்ற வல்லுனர்களும் இதனைக் கண்டிக்கவில்லை. இதையும் திராவிட மாடல் எனலாம் போலும்!
இனிகோஇருதயராஜ்லயோலாகல்லூரியில்கிறிஸ்தவநல்லெண்ணஇயக்கம்சார்பில்அடத்தியகிறிஸ்துமஸ்விழா: சென்னை லயோலா கல்லூரியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது[1]. இனிகோ இருதயராஜ் 13 ஆண்டு காலமாக ஆண்டுதோறும் அவர் நடத்திக் கொண்டிருக்கிறார்[2]. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்[3]. நிகழ்ச்சியில் பேசிய அவர், இயேசு பிரானின் போதனைகளை பின்பற்றி நடந்தால் உலகம் அமைதியாக திகழும் என்றார்[4]. விழாவில் கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டி மேடையில் இருந்த கிறிஸ்தவ பேராயர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுக்கு ஊட்டி மகிழ்ந்தார்[5]. மக்களிடையே வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் ஒருதாய் மக்களாக கருதும் அன்பு உள்ளம் கொண்டதாக அரசுகள் இயங்க வேண்டும். திராவிட முன்னேற்றகழக அரசு அப்படித்தான் இயங்கி வருகிறது, இவ்வாறு அவர் பேசினார்[6]. சென்ற முறை கலையரசி நடராஜன் போன்றோரை வரவழைத்துப் பேச விட்டது போல, இம்முறை, சூரியனார் கோயில் ஆதினம் ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் என்று ஒரு சாமியாரை வரவழைத்து பேச வைத்துள்ளார்கள். அவரு தமது வேலையைக் கச்சிதமாக செய்து முடித்துள்ளார். ஆக, ஒவ்வொரு முறையும், இந்த கிருத்துவ மேடை, விழா மற்றும் அமைப்பு, இந்து விரோதம், இந்து எதிர்ப்ப்ய், காழ்ப்பு-தூஷணம் போன்றவற்றில் தான் ஈடுபட்டு வருகிறார்கள்.
20-12-2022- முதலமைச்சர்ஸ்டாலினின்உரை: அவரது போதனைகளின்படி அனைவரிடமும் அன்பு செலுத்தும் அரசு திமுக அரசு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்[7]. அனைவரையும் ஒருதாய் மக்களாக கருதி அன்பு செலுத்த வேண்டும் என்பதே திராவிட மாடல் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்[8]. சிறுபான்மையினர் நலனிற்காக திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுபான்மையினர் நல ஆணையத்தை அமைத்தவர் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி என சுட்டிக்காட்டினார். சிறுபான்மையினர் மீது எப்போது அக்கறை கொண்ட அரசு திமுக அரசு என்பதை அனைவரும் அறிவார்கள் எனவும் முதலமைச்சர் கூறினார்[9]. தமது தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமைந்த பிறகு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இவ்வளவு பணிகளை, சாதனைகளை தமது அரசு நிறைவேற்றியுள்ளதா என தனக்கே ஆச்சர்யமாக உள்ளதாக கூறினார்[10]. சிறுபான்மையினர் மீது எப்போது அக்கறை கொண்ட அரசு திமுக அரசு எனும்போது, பெரும்பான்மையினரை தூஷித்து வருவது எப்படி என்றுதான் திராவிட மாடலில் சொல்லவில்லை.
இவ்வளவுபணிகளை, சாதனைகளைதமதுஅரசுநிறைவேற்றியுள்ளதாஎனதனக்கேஆச்சர்யமாகஉள்ளது: “நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இவ்வளவு பணிகளை, சாதனைகளை தமது அரசு நிறைவேற்றியுள்ளதா என தனக்கே ஆச்சர்யமாக உள்ளதாக கூறினார்,” என்றது, ஏதோ அதிசயத்தை நிகழ்த்தியது காட்டியுள்ளது போல இருக்கிறது. அதாவது, பரத நாட்டியம் ஆடும் பொழுது, இவரையே “ஏசு கிறிஸ்து” ரேஞ்சில் தூக்கிப் பிடித்து, போற்ரிப் பாடியதை வைத்துப் பார்க்கும் பொழுது, ஸ்டாலினை அந்த வகையில் போற்றி புகழ்ந்துள்ளது தெரிகிறது. ஏசு அதிசயம் செய்தார் போன்ற கதையை, இனி ஸ்டாலினுக்கும் புனைய ஆரம்பித்து விடுவார்கள் போலும். மகளிருக்கு இலவச பேருந்து பயணம், கொரோனா காலத்தில் கல்வியை விட்டுச்சென்ற 2 லட்சம் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு அழைத்து வந்தது, மாற்று திறனாளிகளுக்கு சென்னை மெரினா கடற்கரையில் சிறப்பு நடை பாதை அமைத்தது போன்ற சாதனைகள்தான் திமுக அரசின் அடையாளம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால், அந்த “சிறப்பு நடை பாதை” என்னவாயிற்று என்பதை மறந்து விட்டது தெரிகிறது.
பிற மதத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்று சமத்துவ விழாவாக கிறிஸ்துமஸ் விழா: சிறுபான்மையினர் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை ஒன்றிய அரசால் நிறுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய முதலமைச்சர், அந்த உதவித் தொகை கிடைப்பதற்கு தமிழக அரசு துணை நிற்கும் என்று உறுதியளித்தார். கிறிஸ்தவ மதத்தினர் மட்டுமல்லாது பிற மதத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்று சமத்துவ விழாவாக கிறிஸ்துமஸ் விழா நடத்தப்பட்டதற்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்[11]. “இங்கே நீங்கள் பார்க்கிறீர்கள். சூரியநயினார் கோவில் சிவகர யோகிகள் மடத்தின் – மகாலிங்க தேசிக பரமாச்சார்யார் சுவாமிகள் அவர்களும், ஆத்தூர் இசுலாமிய கல்விக்கூடத்தைச் சேர்ந்த முகமது இம்ரானுல்லாஹ் பாகவி அவர்களும் கலந்து கொண்டுள்ளனர். எனவே இது அன்பின் பெருவிழாவாக நடந்து கொண்டு இருக்கிறது. இதுவே சாட்சி”. இதுபோன்ற விழாக்களில் பங்கேற்பது தமது கடமை என்றும் அவர் கூறினார்[12]. விழாவில் கிறிஸ்துமஸ் குடிலை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நலத் திட்ட உதவிகளையும் வழங்கினார். கிறிஸ்துமஸ் விழாவில் பரதநாட்டியம் முதல்வர் ஸ்டாலின் முன் ஆடிய மாணவிகள் அசத்தினர்[13] என்கிறது, ஆனால், இந்த கூத்தை இந்துக்கள் யாரும் நம்புவதாக இல்லை. நிச்சயமாக, தங்களுக்கு எதிராக, இவ்வாறு கூட்டத்தைக் கூட்டியிருக்கின்றனர் என்பது தான் புலப்ப் படுகிறது.
பரதநாட்டியம்ஆடி–பாடிபோற்றியது– சாமியார்பேசியது: தினத்தந்தி, “தீந்தமிழே, முதல்வரே, தமிழகத்தின்முதல்வரே, தமிழகத்தின்தங்கத்தளபதியே, தமிழகமண்ணில், நிலத்தில்அற்புதம்தினைத்துஅடித்தளம்அமைத்துவிடியல்நாயரே, வாழ்த்துகிறோம், உம்மைவணங்குகிறோம், வரவேற்கிறோம்முதலமைச்சரே”,.என்று பாடி ஆடியது வியப்பாக இருந்தது[14]. முன்பு, கபாலீஸ்வரர் கோவிலில், கருணாநிதிக்கு, “போற்றி,” சொன்னது போல, இங்கு, ஸ்டாலினுக்கு பாடி-ஆடியுள்ளனர். பரத நாட்டியத்தை ஏர்கெனவே கிருத்துவர்கள் தங்களது மதமாற்றும் திட்டங்களுக்கு உபயோகப் படுத்தி வருகிறார்கள். இப்பொழுது, இந்த நாத்திக-பெரியாரிஸ்ட் கொள்கை போர்வையில் இவ்வாறு செய்திருப்பதை கவனிக்கலாம். நடத்தும் கிறிஸ்துமஸ் விழாவில் சூரியனார் கோவில் ஆதீனம். “திருக்கயிலாய கந்த பரம்பரை வாமதேவ சந்தானம், 28 ஆவது குருமஹா சந்நிதானம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்” என்று பெரிய பெயராக இருந்தாலும், நிச்சயமாக, பலருக்கு இவர் யார் என்று தெரியவில்லை, ஏதோ, ஒரு உதாரணத்திற்கு, இவரைக் கூட்டி வந்தது போலத் தெரிகிறது.
[5] மாலை மலர், அனைவரையும்ஒருதாய்மக்களாககருதிதி.மு.க. அரசுஇயங்கிவருகிறது– முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்பெருமிதம், By Maalaimalar, 21 டிசம்பர் 2022 10:58 AM (Updated: 21 டிசம்பர் 2022 12:15 PM).
ஐயப்பன் அவதூறு வழக்கில் கம்யூனிஸவாதி சுந்தவல்லிக்கு ரூ 3500 அபராதம்! மேல் முறையீடு செய்வோம் என்று தோழர்கள் தோரணை! (1)
தமிழக திராவிடத்துவ சித்தாந்தங்களின் கலவை ஏன் இந்துவிரோதமாக இருக்கிறது?: கம்யூனிஸம், பெரியாரிஸம், பகுத்தறிவு, நாத்திகம் போர்வையில், பெரும்பாலோர் முடிவில் இந்துவிரோத பேச்சுகளில் எழுத்துகளில் தான் சென்று முடிகிறார்கள், சிறக்கிறார்கள்.
“செக்யூலரிஸம்” என்று கூட கொள்கை இல்லை, எல்லா மதங்களையும் ஒரே மாதிரி நடத்த வெண்டும், அதாவது விமர்சிக்க வேண்டும் என்ற நெறிமுறையும் இல்லை.
2. யாரும் தட்டிக் கேட்பதில்லை, கேட்டாலும் அது ஒன்றும் பெரிய அழுத்தம் கொடுத்துவிடவில்லை, கொடுத்தாலும், யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள்;
3. கண்டுகொண்டாலும், புகார் கொடுக்க மாட்டார்கள்; புகார் கொடுத்தாலும், கிடப்பில் போட்டு விடுவார்கள், எந்த நடவக்கையும் எடுக்கப் பட மாட்டாது;
4. எடுத்தாலும் சட்டப் படி ஒன்றும் நடக்காது, காலையில் கைது-மாலையில் விடுதலை, அல்லது பெயிலில் வெளிவந்து விடுதல்;
5. ஆளும் கட்சிகள் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுவதால், கடந்த 70 ஆண்டுகளில் அத்தகைய சித்தாந்திகள் ஆட்சி, அதிகாரம், அந்தஸ்த்து மற்றும் நடவடிக்கை எடுக்கும் இடங்களில் இருப்பதால், மிருதுவாக இருப்பார்கள், தாக்கத்தை உண்டாக்கலாம், ஆழுத்தம் மூலம் தப்பித்துக் கொள்ளலாம் என்ற மனோபாவம், மனப்பாங்கு இருக்கத்தான் செய்கிறது.
6. திராவிட ஸ்டாக், திராவிட மாடல், டிவி வாத-விவாதங்களும் அவ்வாறே சென்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், ஒரு குறிப்பிட்ட ரீதியாகத்தான் விவகாரங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
சபரிமலை ஐயப்பன் குறித்து அவதுாறாக பேசிய மா.கம்யூ., பேச்சாளருக்கு எழும்பூர் நீதிமன்றம் 3500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப் புகழ்பெற்றது. ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்[1]. கேரளா மட்டுமல்லாது தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் மாலை அணிந்து வந்து சாமி தரிசனம் செய்வர்[2]. கோயிலுக்கு இளம் பெண்கள் செல்ல அனுமதி இல்லை. அந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் குறித்து முகநூலில் கருத்து பதிவிட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. சபரிமலை ஐயப்பன் குறித்து அவதுாறாக பேசிய மா.கம்யூ., பேச்சாளருக்கு எழும்பூர் நீதி இதற்கு எதிராக பேராசிரியர் சுந்தரவல்லி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மன்றம் 3500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது[3] என்று தினமலரில் மட்டும் தான் செய்தி வெளிவந்துள்ளது. புதிய தொலைக்காட்சியில் ஒருவரி செய்தியாக இணைதளத்தில் காணப் படுகிறது. மா.கம்யூ., பேச்சாளர் சுந்தரவள்ளி, 48. இவர் 2018ல் நடந்த கூட்டம் ஒன்றில் சபரிமலை ஐயப்பன் குறித்து அவதுாறாக பேசினார்[4]. இதற்கான ‘வீடியோ’ பரவியது. இவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹிந்து அமைப்பினர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்[5]. மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்[6]. இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தகுந்த சாட்சியங்களுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சுந்தரவள்ளிக்கு, 3500 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி கிரிஜாராணி 25-11-2022 அன்று உத்தரவிட்டார். இப்பொழுது இவ்வளவு தான் விவரங்கள், சாதாரண வாசகருக்குக் கிடைக்கிறது. வழக்கம் போல, இணைதள ஊடகங்கள், பி.டி.ஐ பாணியில், தலைப்பை மாற்றி, அப்படியே வெளியிட்டுள்ளன. என்ன விசயம், விவகாரம், தீர்ப்பு என்ன சொல்கிறது போன்றவற்றைப் பற்றி கூட கவலைப் படுவதில்லை[7]. “ஈ அடிச்சான் காப்பி” தான், இன்றைய “கட் அன்ட் பேஸ்ட்” தான், எந்த விவஸ்தையும், அவஸ்தையும் இல்லை[8].
பொய் வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் – சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கம்: “உண்மையை கண்டு காவி கும்பல் அஞ்சுகின்றது. தோழர் சுந்தரவள்ளிக்கு எதிராக சங்பரிவார் பாசிஸ்ட்கள் கொடுத்த பொய் வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும்,” என்று சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. இது என்ன கூட்டமைப்பு, என்று பார்த்தால், “ஞாயிற்றுக்கிழமை 05.06.22 காலை 10 மணி முதல் மாலை 7 மணிவரை சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கம் முன்னெடுக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி உண்ணாவிரத அறப்போராட்டம்,” என்றெல்லாம் நடத்தியதாகத் தெரிகிறது. அதிலும், இந்த அம்மணி கலந்து கொண்டதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது[9]. டுவிட்டரில் இப்போராட்டத்தில் கலந்து கொள்வதாக, 18 பேருடைய புகைப் படங்கள் வெளியிடப் பட்டுள்ளன. பிறகு, அவர்கள் இத்தகைய பேச்சை ஆதரிக்கிறார்களா என்று தெரியவில்லை. வெவ்வேறான சித்தாந்தங்கள், அரசியல் சார்பு, என்றிருக்கும் இவர்கள் எவ்வாறு ஒன்றாக வர முடிகிறது என்பதும் கவனிக்கத் தக்கது.
முற்போக்கு என்ற போர்வையில் இந்துத்துவ வாதிகள் முடங்கி விட்டார்களா?: சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்[10], தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், இப்படியெல்லாம் இருக்கும் சங்கங்களில் இந்துத்துவ எழுத்தாளர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்களா இல்லையா என்று தெரியவில்லை. இருந்தால், இத்தகைய விவரங்களை அவர்கள் ஏன் வெளியிடாமல் இருக்கின்றனர் என்றும் புரியவில்லை. பிஜேபி தயவில், பற்பல வாரியங்கள், போர்டுகள் என்று அரசு நிறுவனங்களில் “போஸ்டிங்” வாங்கிக் கொண்டு அனுபவித்து வருகிறார்கள். ஆனால், “இந்துத்துவ” கொள்கையை துறந்து விடுவதைப் போலத் தான் உள்ளது. அதற்குப் பிறகு, அடங்கி விடுகிறார்கள். செக்யூலரிஸத்தைப் பின்பற்றி. “முற்போக்கு” நண்பவர்களுடன், உறவுகளை வைத்துக் கொண்டு சிறக்கிறார்கள் போலும்… என்ன சொன்னாலும், அவர்களிடம் இருக்கும் ஒற்றுமை “இந்துத்துவ வாதிகளிடம்” இல்லை. அதைத் தெரிந்து வைத்துக் கொண்டுதான், அவர்களும் ஆட்டிப் படைக்கிறார்கள். சாதாரண, அப்பாவி இந்துக்கள் ஏமாற்றப் படுகிறார்கள், பலிகடா ஆக்கப் படுகிறார்கள் தொடர்ந்து தூற்றப் படுகிறார்கள், தாக்கப் படுகிறார்கள்,……………………………
யோசிக்க வேண்டிய அம்சங்கள்:
காலையில் நல்ல செய்தி! ஐயப்பனைப் பற்றி அவதூறு பேச்சு – கம்யூனிஸ்ட் பேச்சாளருக்கு அபராதம்! இதே நெறிமுறை தொடரவேண்டும்!
2. சுந்தரவள்ளி, 2018ல் நடந்த கூட்டம் ஒன்றில் சபரிமலை ஐயப்பன் குறித்து அவதுாறாக பேசிதற்கு, நீதிமன்றம் 3500 ரூபாய் அபராதம் விதித்தது..
3. “உண்மையை கண்டு காவி கும்பல் அஞ்சுகின்றது….அது பொய் வழக்கு ….என்று சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கம் வெளியிட்டுள்ளது.
4. தோழர் சுந்தரவள்ளிக்கு எதிராக சங்பரிவார் பாசிஸ்ட்கள் கொடுத்த பொய் வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும்,
5. சம்பந்தரையும் தேவாரத்தையும் அவதூறாக பேசியதற்கு திருக்கோவில் ஓதுவாமூர்த்திகள் மற்றும் சிவனடியார்கள் புகாரும் நிலுவையில் உள்ளது.
6. சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கம் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தியாகத் தெரிகிறது.
7. அதில் இந்த அம்மணி மற்றும் 17 பேர் கலந்து கொண்டதாக புகைப் படம் போடப் பட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் அடையாளம் காணவேண்டும்.
8. ஆனால், இந்துத்துவ வாதிகளை தமது எதிரிகளை கண்டுகொள்வதில்லை, மாறாக, அட்பும், உறவும் வைத்துக் கொள்கிறார்கள்!
9. இப்பொழுது கூட வழக்குப் போட்டவர்கள் பேட்டி கொடுத்து, விவரங்களை தெரிவிக்கவில்லை, தாமும் முறையீடு செய்வோம் என்றும் என்று சொல்லவில்லை.
10. ஆக இந்துக்கள், சாதாரணமான இந்துக்கள், அப்பாவி இந்துக்கள், மெதுவான இலக்கு- இந்துக்கள்,அப்படியே தான் இருக்க வேண்டும்………………………
[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிர்ஸ், சபரிமலைகோயில்பற்றிவிமர்சனம்: பேராசிரியைசுந்தரவள்ளிக்குநீதிமன்றத்தில்அபராதம், Written by WebDesk, November 26, 2022 9:10:35 am