Posts Tagged ‘திராவிட நாத்திகம்’

83-வயதான புகழ் பெற்ற ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் 14-09-2023 அதிகாலையில் கைது செய்யப் பட்டது! (2)

செப்ரெம்பர் 16, 2023

83-வயதான புகழ்பெற்ற ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் 14-09-2023 அதிகாலையில் கைது செய்யப் பட்டது! (2)

13-09-2023 அன்று விசிக கொடுத்த புகாரும், ஆர்பிவிஎஸ் மணியனை கைது செய்ய தீர்மானித்த போலீஸாரும்: இந்த நிலையில் சென்னை சூளையை சேர்ந்த செல்வம் என்பவர் மணியன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் என்று ஊடகங்க்ள் குறிப்பிடுகின்றன. அதன் பேரில் மாம்பலம் போலீசார் அவர் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 153, 153(A), 505(1)(B), 505 (2), பழங்குடியினர்/ஒடுக்கப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி, ஆர்பிவிஎஸ் மணியன் என்பவரை கைது செய்யவும் போலீஸார் தீர்மானித்தனர். விடியற்காலையிலேயே அவர்கள் ஆர்பிவிஎஸ் மணியனின் வீட்டிற்குச் செல்ல தீர்மானித்தனர். அதன்படியே, அவரது வீட்டிற்குச் சென்றனர்.

14-09-2023 விடியற்காலையில் கைது செய்யப் பட்டது: தியாகராயநகர் உதவி கமிஷனர் பாரதிராஜன் தலைமையிலான போலீசார், தியாகராயநகர் ராஜம்மாள் தெருவில் உள்ள மணியன் வீட்டுக்குச் சென்றனர். 14-09-2023 வியாழக்கிழமை அதிகாலையில் சென்னை திநகர் போலீசார் ஆர்பிவிஎஸ் மணியனை அவரது இல்லத்தில் கைது செய்தனர்[1]. கைது செய்யப்பட்டுள்ள ஆர்.பி.வி.எஸ். மணியனை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது[2] என்று தினமலர் கூஊகிறது. இவரை அப்படி “ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்த”,  என்ன பெரிய விசயம் இருக்கிறது என்று தெரியவில்லை. எல்லா விவரங்களும் வெளிப்படையாக உள்ளநிலையில், அதிலும் 3-4 காலையில் கைது செய்யப் பட்டபோது, யாருக்குத் தெரியப் போகிறது, என்ன பிர்ச்சினை வரப் போகிறது என்று தெரியவில்லை. அந்நிலையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது என்பது வேடிக்கையாக இருக்கிறது.

இந்து முன்னணியின் ஆதரவும், எதிர்ப்பும்:  “83 வயது முதியவர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் பேசிய கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று வைத்துக் கொண்டாலும், அவரது கைது நடவடிக்கை தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தின் நிலை என்ன என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது,” என்று இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்[3]. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்[4], “தமிழக அரசின் எண்ணப்படி தொடர்ந்து தமிழக காவல் துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதை நீதிமன்றமோ, ஊடகமோ கண்டுகொள்ளவில்லை. இது ஜனநாயக படுகொலைக்கு சமம். ஆர்.பி.வி.எஸ். மணியன் தேசியவாதி, ஆன்மிகச் சொற்பொழிவாளர். இன்று குமரியில் நாம் காண்கின்ற சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டப பணிக்காக தான் பார்த்துவந்த அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு வந்தவர். விவேகானந்தர் நினைவு மண்டபம் உலகப் புகழ் பெற்றதாக விளங்குவதற்கும், குமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரம் இன்று பிரம்மாண்டமான ஆலமரமாய் விளங்குவதற்கும் அந்தக் காலத்தில் ஏக்நாத் ரானடே உடன் தோளோடு தோள் நின்று அடிப்படை அஸ்திவாரமாக திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. தன் வாழ்நாள் முழுவதும் சனாதன தர்மத்தை காக்க வாழ்ந்தவர்.

ஆர்.பி.வி.எஸ் மணியன் பேசியதை ஒட்டியும், வெட்டியும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு பரப்பி திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்தும் போக்கு: இந்நிலையில், ஆர்.பி.வி.எஸ் மணியன் பேசியதை ஒட்டியும், வெட்டியும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு பரப்பி சிலர் திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்துகின்றனர். தில் பெரும்பாலானவை பார்ப்பனர் எதிர்ப்பாக, கடுமையாக தூஷணங்களுடன் இருக்கின்றன. வீடியோக்களும் போட ஆரம்பித்து விட்டனர். இந்தப் போக்கை கடந்த சில வருடங்களாகவே பார்க்கிறோம். எது உண்மை எது பொய் என்பதைக்கூட யாராலும் தெரிந்து கொள்ள முடியாதவாறு அவை பரப்பப்படுகின்றன. அவர் பேசிய கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று வைத்துக் கொண்டாலும் அவரது கைது நடவடிக்கை தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தின் நிலை என்ன என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்துக்களின் நம்பிக்கைளை கொச்சைபடுத்திய பல யூடியூப் சேனல்கள், சனாதனத்தை இழிவுபடுத்தி பேசிய அமைச்சர்கள், இந்து மதத்தை இழிவு படுத்தியவர்கள், பிரதமர், ஆளுநர் ஆகியோரை‌த் தாக்கிப் பேசியவர்கள் என பலர் மீது பல இடங்களில் புகார் கொடுத்தும் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் தமிழக காவல் துறைக்கும் நீதிமன்றத்துக்கும் குற்றத்தின் தன்மையைவிட குற்றம்சாட்டப்படுபவர் பின்புலம் என்ன என்பதை வைத்துதான் நடவடிக்கை என்பதாக அமைந்துள்ளது. இவர் விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் தலைவர் ஆவார். இவரது கைதுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மணியன்: சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மணியனை 14 நாள் ரிமாண்ட் செய்து நீதிபதி உத்தரவிட்டார். வயது மூப்பு கருதி அவரை மருத்துவமனையில் தங்க அனுமதிக்க வேண்டும் என அவர் சார்பில் வக்கீல்கள் வலியுறுத்தினர். பரிசீலிப்பதாக நீதிபதி கூறியுள்ளார். வன்கொடுமை சட்டத்தின் கீழ் 8 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மணியன் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது போலீசார் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் சுதாகர், மணியன் மீதான குற்றச்சாட்டுகளை எடுத்துக் கூறினார். அதற்கு நீதிபதி (மணியனை பார்த்து), உங்கள் மீதான புகார் குறித்து ஏதேனும் கூற விரும்புகிறீர்களா? என கூறினார்[5]. அதற்கு மணியன், ‘நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது’ என்றார்[6]. மணியன் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆர்.சி.பால்கனகராஜ், ‘மணியனுக்கு சிறுநீர் தொற்று, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல் உபாதைகள் உள்ளது. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும்’ என்றார். இதுகுறித்து பரிசீலிப்பதாக தெரிவித்த நீதிபதி, மணியனை வருகிற 27-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இங்கும் சில முக்கியமான கேள்விகள் எழுகின்றன:

  1. பார்ப்பானை பிரம்ம முஹூர்த்தத்தில் வைத்து கைது செய்தால், யாருக்கு பலன் கிடைக்கும்? நேரத்தைக் குறித்தது கடவுளா, திராவிட அதிகாரியா?
  2. அமாவாசைக்கு முன்னால் பார்ப்பானை கைது செய்தால் அவனது கிரியைகள் கெடுமா, அல்லது பெரியாரிஸ ஆவிகள் துடிக்குமா?
  3. 83 வயதான “கெழப்பய” என்ன ஓடியா போய் விடுவார்? காஷ்மீரில் வீட்டு காவல் வைக்கும் பொழுது, இவரை வைக்க முடியாதா?
  4. இல்லை எங்களுக்கு இணை வைக்காதே, இன்டியா கூட்டணியில் இதை சேர்காதே என்று அவர்கள் மிரட்டினரா, ஆணையிட்டனரா?
  5. அதெப்படி உடனடியாக, எந்த வழக்கறிஞரும் வரவில்லை, பெயில் கோரவில்லை, ஆனால், 14 நாட்கள் சிறைக்கு அனுப்பி வைக்கப் பட்டார்?
  6. அதாவது ஒரு பக்ஷத்திற்கு சிறை, அடுத்த பக்ஷத்தில் பெயிலில் வெளியே விடலாம், இப்பொழுது மருதுத்துவ மனை வசதி கூட நிராகரிக்கப் பட்டுள்ளது.
  7. அண்ணன் அவன் பிறந்த நாள் அமாவாசையில் வந்து விட்டதால் தம்பிகள் நல்ல நாளை முன்னமே குறித்து விட்டனரோ?
  8. சரி யாரப்பா அந்த திராவிட புரோகிதர்? திராவிட மாடலில், திராவிட ஸ்டாக் ஆட்களில் தயாராகி விட்டார்கள் போலும்!
  9. நல்ல ஆடு கிடைத்து விட்டது, பலிகடா ஆடு, பார்ப்பன பலிக்கடா ஆடு, அதிலும் 83-வயது நிறைந்த பார்ப்பன பலிக்கடா ஆடு – கொண்டாட்டம் தான்!
  10. இனி பார்ப்பன துவேஷம் பீரிடும், மீம்ஸ்கள் யூ-டியூப்புகள் அதிகமாகும், ஆனால், எதிர்வினைகளுக்கு எந்த சட்டமும் வேலை செய்யாது.

© வேதபிரகாஷ்

15-09-2023


[1] தினமணி, ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது, By DIN  |   Published On : 14th September 2023 08:44 AM  |   Last Updated : 14th September 2023 08:44 AM

[2] https://www.dinamani.com/tamilnadu/2023/sep/14/spiritual-speaker-rpvs-manian-arrested-4072554.html

[3] தமிழ்.இந்து, ஆர்.பி.வி.எஸ்.மணியன் கைதுதமிழகத்தில் கருத்து சுதந்திர நிலையைக் காட்டுகிறது!இந்து முன்னணி, செய்திப்பிரிவு, Published : 14 Sep 2023 03:08 PM; Last Updated : 14 Sep 2023 03:08 PM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/1123301-rbvs-maniyan-arrest-hindu-munnani-condemns.html

[5] தினத்தந்தி, திருவள்ளுவர், அம்பேத்கர் குறித்து அவதூறு: ஆன்மிக பேச்சாளர் மணியன் கைது, செப்டம்பர் 15, 5:57 am

[6] https://www.dailythanthi.com/News/State/tiruvalluvar-defamation-of-ambedkar-spiritual-speaker-maniyan-arrested-1052962

83-வயதான புகழ்பெற்ற ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ்மணியன் 14-09-2023 அதிகாலையில் கைது செய்யப் பட்டது! (1)

செப்ரெம்பர் 15, 2023

83-வயதான புகழ்பெற்ற ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் 14-09-2023 அதிகாலையில் கைது செய்யப் பட்டது! (1)

சனாத எதிர்ப்பு பேச்ச்களால் மக்களை பாதித்த நிலை: சனாதனத்தைப் பற்றிய பேச்சுகள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. தேவையில்லாமல், அமைச்சர்கள் அளவில், செக்யூலரிஸத்தை மறந்து, அவர்கள் பேசியதும், தொடர்ந்து மற்ற தலைவர்கள், எம்.பிக்கள் முதலியோர் ஆதரித்து விளக்கம் கொடுப்பதும், இந்தியா முழுவதும், இது அறியப் பட்டு பிரச்சினையாகியுள்ளது. அரசியல்வாதிகளுக்கு இது அரசியலாக உள்ளது. ஆனால், இவர்களது பேச்சுகள் இந்துக்களை வெகுவாக பாதித்து வருகின்றன. இவர்கள் அரசியல் போர்வையில், தினம்-தினம் எதையதையோ சம்பந்தம் இல்லாமல் பேசி, பொது மக்களின் மனங்களில் சலனங்களை உண்டாக்கி வருகின்றனர். அரசியல் சார்புள்ள நிலையில் தமிழகத்தில் மடாதிபதிகள் அமைதியாக மௌனம் காக்கின்றனர். இதனால், நம்பிக்கையாளர்கள் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலையில் உள்ளது. தமக்குள் தம்முடைய பிரச்சினைகளை பேசிக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டுள்ளது. பொது நிகழ்ச்சிகளில் பேசுவதும், தனிப்பட்ட முறையில், உள்ளரங்களில் குறிப்பிட்டவர்களுக்காக ஏற்பாடு செய்யப் படும் நிகழ்ச்சிகளில் பேசுவதும் ஒன்றாகுமா என்பதெல்லாம் சட்ட வல்லுனர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

11-09-2023 அன்று பாரதிய வித்யாபவனில்பாரதியும், விவேகானந்தரும்என்ற தலைப்பில் நடந்த சொற்பொழிவு: அந்நிலையில் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் சென்னையில் 14-09-2023 அன்று கைது செய்யப்பட்டார்[1], என்று செய்திகள் வெளிவந்தன. சமீபத்தில் சென்னையில் தியாகராயநகரில் உள்ள பாரதிய வித்யாபவனில் ‘பாரதியும், விவேகானந்தரும்’ என்ற தலைப்பில் கடந்த 11-ந்தேதி சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது[2]. நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் திருவள்ளூவர் மற்றும் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது[3]. சனாதன தர்மத்தை ஆதரித்துப் பேசிய மணியன், சர்ச்சைக்குரிய விதத்தில் திருவள்ளுவர் குறித்துப் பேசினார்[4]. திருவள்ளுவர் என்ற பெயரை யார் வைத்தது எனக் கேள்வி எழுப்பிய அவர், திருவள்ளுவர் தான் திருக்குறளை எழுதினார் என்பதற்கு என்ன ஆதாரம் என்றும் கேட்டார்[5]. திருவள்ளுவர் என்பவர் உண்மையில் இருந்ததே இல்லை என்றும் அவர் பேசினார்[6]. உண்மையில் அவர் பேசிய வீடியோ இணைதளங்களில் சுற்றுக்கு வந்தது. அவர் முழுவதும் என்ன பேசினார், என்ற விவரங்கள் தெரியவில்லை.

திருவள்ளுவர், அவரது பெற்றோர் விவரங்கள் தெரியாது: பிபிசி தமிழ் தளத்தில் உள்ளதிலிருந்து காணப்படும் விவ்ரங்கள்: “திருவள்ளுவர் இருந்தார் எனச் சொல்வது கற்பனை. அவர்தான் திருக்குறளை எழுதினார் எனச் சொல்வது அதைவிடக் கற்பனை,” என்று அவர் நிகழ்வில் பேசினார். ‘திருக்குறள் ஒரு வைதிக ஹிந்து சமய நூலே’ என்ற நூலை எழுதியுள்ள மணியன், ராமர் பிறந்த நட்சத்திரம் தெரியும், ஆனால் வள்ளுவர் என்று பிறந்தார், அவரது பெற்றோர்கள் யார் எனத் தெரியுமா என்றார். விவேகானந்தரின் கருத்துகளைப் பரப்புவதில் தீவிர பங்காற்றியுள்ள மணியன், கிறிஸ்தவ பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்பக்கூடாது என விவேகானந்தர் தெரிவித்ததாகப் பேசினார். “கிறிஸ்தவ பள்ளிகளுக்கு அனுப்பாதே எனக் கூறியுள்ளேன். விவேகானந்தரும் சொன்னார். பாரதியாரும் சொன்னார்,” நமது பிள்ளைகளை கிறிஸ்தவ பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது என அவர் பேசினார். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இந்தியாவில் வாழத் தகுதியற்றவர்கள் எனக் கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் பேசியதாக கொடுக்கப் படும் விவரங்கள்: “ராமனை ஏற்றுக்கொண்டால் ஒழிய ஒரு கிறிஸ்தவன் இந்த நாட்டில் வாழ்வதற்கு அருகதை இல்லாதவன். அந்த முஸ்லிமும் அருகதை இல்லாதவன்,” என்று அவர் அந்த நிகழ்வில் பேசினார். இதே அளவுகோலை வைத்து அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் சாடினார். ராகுல் காந்தி கிறிஸ்தவர் ஐரோப்பியர் என்றும், அவருக்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், இந்திய அரசியல் சாசன சட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் அம்பேத்கரையும் தாக்கிப் பேசினார். அரசியல் சாசன சட்டத்தை எழுதியது அம்பேத்கரே இல்லை என்று பேசினார். “அம்பேத்கர், தன்னுடைய மூளையில் இருந்து எழுதியதாக எழுதவே கிடையாது. எல்லாம் பேசிடுவாங்க.. அது எல்லாத்தையும் ஒரு ஸ்டெனோகிராஃபர் எழுதுவான். தட்டச்சு செய்வார், ஸ்டெனோ கிராஃபர் கரெக்டா அடிச்சிருக்காரா அடிக்கலையா என்று சரிபார்ப்பார். அந்த வேலைதான் அம்பேத்கருக்கு,” என்றார்.

அரசியல் நிர்ணய சட்டம் வரையரைக் குழுவிற்கு அம்பேத்கர் தலைவர், ஆனால், பலர் வேலை செய்தனர்: அரசியல் சட்டத்தை உருவாக்கியது யார்னு சேர்மன் பேரை போட்டால் ராஜேந்திர பிரசாத் பெயரைத்தான் போடனும்[7]. அங்கு கிளார்க்காக வேலை பார்த்தவன், டைப் அடிச்சவன், டைப்புக்கு ப்ரூப் பார்த்தவன்.. அதான் அம்பேத்கர்[8]. அவர் தன்னுடைய மூளையில் இருந்து அரசியல் சாசனத்தை எழுதியதாக எங்கேயும் எழுதி வைக்கலை. கிராமங்களில் அக்ரஹாரங்களில் பிராமணர்கள் இருக்கிறாங்க என்பான்.. அங்கிட்டு துலுக்கனுக இருக்காங்க என்பான்.. இங்கிட்டு காலனி ஆட்கள்னு சொல்லுவான். அவனுக்கு பேரு கூட கிடையாது.. காலனி ஆட்கள். எந்த காலனியில் எவன் ஒட்டிகிட்டு வந்தான்னு எனக்கும் தெரியாது. அவனுக எல்லாம் ஷெட்யூல்டு கேஸ்ட்னு சொல்றம்ல அவனுக.

அம்பேத்கர், பட்டியல் இன உட்பிரிவு பிரச்சினைகள்: அவரது பேச்சின்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனையும் தாக்கிப் பேசியிருந்தார். திருமாவளவன் பறையர் என்றும் அம்பேத்கர் சக்கிலியர் என்றும் கூறிய மணியன், சக்கிலியரும் பறையரும் திருமணம் செய்துகொள்வார்களா, பறையரும் பள்ளர்களும் திருமணம் செய்துகொள்வார்களா எனக் கேள்வி எழுப்பினார்[9]. மணியன் தன்னுடைய பேச்சு முழுவதிலும், திருவள்ளுவர், டாக்டர் அம்பேத்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோரை ஒருமையில் பேசி கடுமையாகச் சாடினார்[10]. இவரது பேச்சு சமூகவலை தளத்தில் பரவியது.  பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அவரது பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது[11]. அவரது பேச்சுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது எதிர்ப்பையும், கண்டனத்தை தெரிவித்திருந்தனர்[12]

© வேதபிரகாஷ்

15-09-2023


[1] தினமலர், ஆன்மிக பேச்சாளர் மணியன் கைது; 14 நாள் நீதிமன்ற காவல், மாற்றம் செய்த நாள்: செப் 14,2023 12:28.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3431645

[3] அம்பேத்கர், திருவள்ளுவர் பற்றி அவதூறு பேச்சு: ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது, By Maalaimalar .14 செப்டம்பர் 2023 11:41 AM (Updated: 14 செப்டம்பர் 2023 4:00 PM).

[4] https://www.maalaimalar.com/news/state/chennai-police-arrested-rbvs-manian-arrested-662383

[5] விகடன், ஆர்.பி.வி.எஸ்.மணியன் கைது : அம்பேத்கர், திருவள்ளுவரை அவமதிக்கும் வகையில் பேச்சுவிரிவான தகவல்கள், சி. அர்ச்சுணன், Published: Yesterday 14-09-2023, at 10 AM; Updated: Yesterday at 11 AM

[6] https://www.vikatan.com/government-and-politics/politics/rpvs-maniyan-arrested-over-allegations-against-him-about-his-speech-insults-ambedkar

[7]  தமிழ்.ஒன்.இந்தியா, திருவள்ளுவர், அம்பேத்கர், தலித்துகளை இழிவாக பேசிய பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் கைது– 14 நாள் ஜெயில்!, By Mathivanan Maran, Updated: Thursday, September 14, 2023, 13:34 [IST]

[8] https://tamil.oneindia.com/news/chennai/hindutva-leader-rbvs-manian-arrested-by-chennai-police-538479.html

[9] பிபிசி தமிழ், ஆர்.பி.வி.எஸ் மணியன்: அம்பேத்கர், திருவள்ளுவரை அவதூறாகப் பேசியதாக கைதான இவர் யார்?, முரளிதரன் காசிவிஸ்வநாதன், 14 செப்டெம்பர் 2023

[10] https://www.bbc.com/tamil/articles/cd13pmkyxero

[11] தமிழ்.நியூஸ்.18, அம்பேத்கர் குறித்து அவதூறு பேச்சு: VHP முன்னாள் துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது, LAST UPDATED : SEPTEMBER 14, 2023, 15:14 IST,

[12] https://tamil.news18.com/chennai/chn-rbvs-manian-arrest-for-ambedkar-controversial-speech-1154345.html – gsc.tab=0

‘சனாதன ஒழிப்பு மாநாடு’ பெயரில் இந்து ஒழிப்பு மாநாடு நடத்துவதை எப்படி அரசு அனுமதிக்கிறது? உதயநிதி மீது போலீஸில் புகார்! (2)

செப்ரெம்பர் 3, 2023

சனாதன ஒழிப்பு மாநாடுபெயரில் இந்து ஒழிப்பு மாநாடு நடத்துவதை எப்படி அரசு அனுமதிக்கிறது? உதயநிதி மீது போலீஸில் புகார்! (2)

02-09-2023 இந்துவிரோத பேச்சிற்கு, 03-09-2023 அன்று போலீஸில் புகார்: தமிழகத்தில் 1950களிலிருந்து வாழும், திராவிடத்துவ அரசியல்வாதிகளின் பேச்சு, நடவடிக்கை முதலியவற்றைக் கவனித்து வருபவர்களுக்கு, நிச்சயமாக, இப்பொழுது உடனடியாக உதயநிதியின் மீது, போலீசில் புகார் அளித்திருப்பது திகைப்பாகவும், ஆச்சரியமாகவும், ஏன் சந்தோசமாகக் கூட இருக்கலாம். அதாவது இத்தனை ஆண்டுகளாக அடக்கி, ஒடுக்கப் பட்டு, மிரட்டப் பட்டு வரும் இந்துக்கள் அவ்வாறு மகிழ்ச்சியடையலாம். தமிழ்நாட்டில், சென்னையில் ஏன் புகாரைக் கொடுக்கவில்லை என்ற கேள்வியையும் எழுப்பலாம். ஆனால், இங்கு அவ்வாறு யாராவது புகார் கொடுக்க தைரியமாக வருவார்களா? அப்படியே புகார் கொடுத்தாலும், போலீசார் ஏற்றுக் கொள்வார்களா, பதிவு செய்வார்களா போன்ற கேள்விகளும் எழுகின்றன. டில்லியில் ஒரு வழக்கறிஞர் கொடுத்திருக்கிறார், அதனால், ஏற்றுக் கொள்ளப்பட்டது போலும். டில்லியில் ஜி-20 மாநாடு நடக்கும் நேரத்தில், இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தாலும், திமுகவினர் தங்களது, இந்திய் அளவில் விளம்பரம் கிடைத்தது குறித்து மகிழ்ச்சியடையலாம்.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வீனீத் ஜிண்டால் டெல்லி போலிசில் புகார் அளித்துள்ளார்: சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி போலீஸில் 03-09-2023 அன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது[1]. சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு சட்டவிரோதமானது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் டெல்லி போலிசில் புகார் அளித்துள்ளார்[2]. உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு சட்டவிரோதமானது என்றும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வீனீத் ஜிண்டால் டெல்லி போலிசில் புகார் அளித்துள்ளார்[3]. அவர் தனது புகாரில், உதயநிதி ஸ்டாலினின் பேச்சு சனாதன தர்மத்துக்கு எதிராக மக்களை தூண்டக்கூடியதாகவும், இழிவுபடுத்தக்கூடியதாகவும் உள்ளது[4]. இந்து மதத்தை கொசு, டெங்கு, கரோனா, மலேரியா ஆகியவற்றுடன் ஒப்பிட்டு, அவற்றை ஒழிப்பது போல ஒழிக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார். ஒரு இந்து என்ற வகையில் எனது உணர்வுகளை அவர் புண்படுத்தி இருக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் பேச்சு இந்து மதத்தின் மீதான அவரது வெறுப்பையே வெளிப்படுத்தி இருக்கிறது.

ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு: சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருக்கும் அவர், தான் எடுத்துக்கொண்ட பிரமாணத்திற்கு விரோதமாக செயல்பட்டிருக்கிறார். சமூகத்தின் இரு பிரிவினரிடையே பகைமையை உருவாக்கும் வகையில் அவரது பேச்சு உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் பேச்சு இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களை அழிக்க வேண்டும் என அழைப்பு விடுப்பதாகவும், அதை தூண்டுவதாகவும் உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இந்திய தண்டனைச் சட்டம் 153A, 153B, 295A, 298, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனைக்கு உரியது[5]. எனவே, அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்[6].

மக்கள் மன்றமாக இருந்தாலும் சரி, எனக்கு வரும் சவால்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்உதயநிதி சவால்: மேலும், இந்து அமைப்புகள் பலவும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.நீதிமன்றமாக இருந்தாலும் சரி, மக்கள் மன்றமாக இருந்தாலும் சரி, எனக்கு வரும் சவால்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்[7]. பொய்யான செய்திகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்,” எனத் தெரிவித்திருந்தார்[8]. இதற்கிடையே உதயநிதி ஸ்டாலினின் பேச்சு தொடர்பாக பல்வேறு இந்து அமைப்புகளும் கண்டனத்தை வெளிப்படுத்தத் தொடங்கின. இந்து மகாசபையின் தலைவர் சுவாமி சக்ரபாணி, “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினின் கருத்து அவரது குறுகிய மனப்பான்மையையும் இந்தியா (I.N.D.I.A) கூட்டணிக் கட்சிகளின் புனிதமற்ற கூட்டணியையும் காட்டுகிறது,” என்று தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி மற்றும் பாஜகவுடன் இந்தியா கூட்டணி சண்டையிடவில்லை, அவர்கள் சனாதன தர்மத்துடன் போராடுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

பிஜேபிஉதயநிதி டுவிட்டர் சண்டை: இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக ஐ.டி பிரிவு தலைவர் அமித் மால்வியா, “சனாதன தர்மத்தை பின்பற்றும் 80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்ய அமைச்சர் உதயநிதி அழைப்பு விடுத்துள்ளார்” என குற்றம்சாட்டினார்[9]. அதற்குப் பதலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களை இனப்படுகொலைக்கு அழைக்கவில்லை. பல சமூகக் கேடுகளுக்கு சனாதன தர்மம்தான் காரணம் என்று நம்புகிறேன்” என தெரிவித்தார்[10]. மறுபுறம், Legal Rights Observatory- LRO (சட்ட உரிமை கண்காணிப்பகம்) என்ற பெயரிலான ஒரு என்.ஜி.ஓ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பதிவைப் பகிர்ந்து, அதன்பேரில் புகார் ஒன்று அளிக்கப்படுமென கூறியது. இதை ரீ-ட்வீட் செய்த அமைச்சர் உதயநிதி, “கொண்டு வாருங்கள், நான் எந்தச் சட்ட சவாலையும் சந்திக்கத் தயாராக உள்ளேன். இதுபோன்ற சனாதன மிரட்டல்களுக்கு அடிபணிய மாட்டேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையின்கீழ் சமூக நீதியை நிலைநாட்டுவோம். நாங்கள் பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதியைப் பின்தொடர்பவர்கள். இதனை இன்றும், நாளையும் என்றும் சொல்வேன்[11]. திராவிட மண்ணில் சனாதனத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எங்களது தீர்மானத்தில் பின்வாங்க மாட்டோம்” எனப் பதிவிட்டுள்ளார்[12].

அண்ணாமலை முதல் மற்ற மதத்தலைவர்கள் கண்டனம்: உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா, ராமஜென்ம பூசாரி ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் உள்ளிட சிலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்[13]. ஏற்கெனவே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்[14]. இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலை, “மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைத் தாண்டிச் செல்வத்தைக் குவிப்பதுதான் கோபாலபுரம் குடும்பத்தின் ஒரே உறுதி. உதயநிதி ஸ்டாலின் அவர்களே.. நீங்கள், உங்கள் தந்தை ஆகியோர் கிறிஸ்தவ மிஷனரிகளிடம் இருந்து வாங்கிய ஐடியாவைக் கொண்டிருக்கிறீர்கள். அந்த மிஷனரிகளின் எண்ணம், அவர்களின் தீய சித்தாந்தத்தை வளர்க்க உங்களைப் போன்ற மந்தமானவர்களை வளர்க்க வேண்டும் என்பதுதான். தமிழகம் ஆன்மிக பூமி. இதுபோன்ற நிகழ்வில் மைக்கைப் பிடித்து உங்கள் விரக்தியை வெளிப்படுத்துவதுதான் உங்களால் செய்ய முடிந்த ஒரேவிஷயம்,” என பதிவிட்டிருந்தார்.

சனாதன பேச்சுஅமித் ஷா கண்டனம்: தொடர்ந்து புதுக்கோட்டையில் இதுதொடர்பாக பேசிய அண்ணாமலை, “சனாதன தர்மத்தை ஒழிக்க உதயநிதி யார்? சனாதனம் ஒழிக்கப்பட்டுவிட்டால், கோயில்கள் மற்றும் மதச்சடங்குகள் அனைத்தும் அழிந்துவிடும்“ என தெரிவித்தார். காங்கிரஸைச் சாடிய அமித்ஷா! – இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்[15]. இன்று ராஜஸ்தானில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான அரங்கில்தான் இந்து மதத்தை அவமதித்து அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார். உதயநிதியின் வெறுப்பு பேச்சுடன் காங்கிரஸ் உடன்படுகிறதா என்பதை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும். மதத்தை விமர்சித்ததற்காக அமைச்சர் உதயநிதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் கலாசாரம், சனாதன தர்மத்தை INDIA கூட்டணி அவமதித்து வருகிறது; வாக்குவங்கி அரசியலுக்காக INDIA கூட்டணி எந்த எல்லைக்கும் செல்லலாம்,” எனத் தெரிவித்துள்ளார்[16].

© வேதபிரகாஷ்

03-09-2023


[1] தமிழ்.ஒன்.இந்தியா, ‘சனாதன தர்மம் ஒழிப்புஉதயநிதி பேச்சால் மத உணர்வுகள் புண்பட்டுவிட்டதாம். டெல்லி போலிசில் புகார்!, By Mathivanan Maran Published: Sunday, September 3, 2023, 11:48 [IST].

[2] https://tamil.oneindia.com/news/delhi/a-lawyer-files-complaint-in-delhi-police-againt-minister-udhayanidhi-stalin-535409.html

[3] தமிழ்.முரசு, சனாதனம் குறித்த பேச்சு, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புகார், 3 Sep 2023 18:56.

[4] https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20230903-136279

[5] தமிழ்.இந்து,  சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்புடெல்லி காவல்நிலையத்தில் வழக்கறிஞர் புகார், செய்திப்பிரிவு, Published : 03 Sep 2023 12:29 PM; Last Updated : 03 Sep 2023 12:29 PM

[6] https://www.hindutamil.in/news/india/1117228-objection-to-udayanidhi-stalin-s-speech-on-sanatana-dharma-a-lawyer-s-complaint-to-delhi-police.html

[7] பிபிசி.தமிழ், சனாதன தர்மம் குறித்த உதயநிதியின் பேச்சு எதிர்க்கட்சி கூட்டணியை வலுவிழக்கச் செய்யுமா?, 03-09-2023

[8] https://www.bbc.com/tamil/articles/c90j1k5eqy2o

[9] புதியதலைமுறை, சனாதனம் பற்றிய விமர்சனம்: அமைச்சர் உதயநிதிக்கு எதிராக வலுக்கும் புகார்கள்!, Published on: 03 Sep 2023, 5:03 pm

[10] https://www.puthiyathalaimurai.com/tamilnadu/political-leaders-reaction-on-udhayanidhi-stalin-sanatanam-speech

[11] விகடன்,  சனாதனம் குறித்த பேச்சு; டெல்லி போலீஸில் புகார்; `காவிகளின் மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டோம்‘- உதயநிதி, Published: 03-09-2023  at 4 PM; Updated: 03-09-2023 at 4 PM.

[12] https://www.vikatan.com/government-and-politics/politics/sanatana-dharma-is-against-the-idea-of-social-justice-and-must-be-eradicated-says-udhayanidhi-stalin

[13] தினமலர், சனாதனத்தை ஒழிக்க வேண்டுமாம்; அமைச்சர் உதயநிதி திடீர் ஆவேசம், மாற்றம் செய்த நாள்: செப் 03,2023 16:37; https://m.dinamalar.com/detail.php?id=3421837

[14] https://m.dinamalar.com/detail.php?id=3421837

[15] நியூஸ்.7.தமிழ், சனாதனம் குறித்த பேச்சுஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி காவல்நிலையத்தில் புகார், by Web Editor, September 3, 2023

[16] https://news7tamil.live/talk-on-sanathanam-complaint-against-minister-udayanidhi-stalin-in-delhi-police-station.html

சிவன் – பார்வதி கு.க., செய்தனரா? தி.மு.க., – எம்.பி., சர்ச்சை பேச்சு – உதாரணத்திற்கு இந்து மதம் தான் கிடைத்ததா?

ஜூலை 12, 2023

சிவன்பார்வதி கு.., செய்தனரா? தி.மு.., – எம்.பி., சர்ச்சை பேச்சுஉதாரணத்திற்கு இந்துமதம் தான் கிடைத்ததா?

தர்மபுரி தி.மு.., – எம்.பி., செந்தில்குமாரின் தொடர்ச்சியான இந்து தூஷண பேச்சுகள்: ‘வடமாநிலத்தில் விநாயகருக்கு பின், சிவன் – பார்வதி கு.க., செய்தார்களா?’ என, தர்மபுரி, தி.மு.க., – எம்.பி., செந்தில்குமார், தனியார் ‘டிவி’க்கு அளித்த போட்டியில் நக்கலாக பேசியது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஆலாபுரம் ஏரி புனரமைப்பு பணி கடந்தாண்டு 2022, ஜூலையில் துவங்கிய போது, ஹிந்து மத முறைப்படி பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு, தர்மபுரி தி.மு.க., – எம்.பி., செந்தில்குமார், கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பூமி பூஜைக்கு வைத்த செங்கல்லையும் காலால் தள்ளினார். இதேபோன்று, நல்லம்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியிலும், தி.மு.க.,வினரை கண்டித்தார். செக்யூலரிஸ ரீதியில் இந்துக்களை எதிர்ப்பது என்பது பெரியாரிஸ ஆத்திகர்களுக்கு, இந்துவிரோதிகளுக்கு கைவந்த கலையாக மாறிவிட்டது. அண்ணாதுரை-கருணாநிதி இந்துதுவேச பாணி ஸ்டாலின் மூலமும் தொடர்கிறது. விவாக மந்திரங்களை கேவலமாக பேசியதை வீடியோ மூலம் அறிந்து கொள்ளலாம். பிறகு, தலைவன் எப்படியோ, தொண்டன் அப்படித்தானே இருப்பான்?

சிவன்பார்வதி கு.., செய்தனரா? தி.மு.., – எம்.பி., சர்ச்சை பேச்சு: இதனால் அவர் ஹிந்து மதத்துக்கு எதிராக செயல்படுவதாக மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டது[1]. இந்நிலையில், அவர் பொது சிவில் சட்டம் குறித்து சமீபத்தில் தனியார் ‘டிவி’க்கு பேட்டியளித்தார்[2]. இதில், ‘வட மாநிலத்தில் சிவன் – பார்வதிக்கு, விநாயகருடன் முடிந்து விட்டது[3]. முருகர் என்பவர் இருப்பது தென்மாநிலத்துக்கு வந்தால் மட்டும் தான் தெரியும். அங்கு, சிவன் – பார்வதிக்கு, கு.க., நடந்ததா என தெரியவில்லை’ என, குறிப்பிட்டது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது[4]. தேர்தல் நேரத்தின் போது மட்டும், தி.மு.க.,வினர் தாங்கள் ஹிந்துகளுக்கு எதிரி இல்லை என, இரட்டை வேடம் போடுவதாக, சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது[5]. செந்தில்குமாரிடம் கேட்டபோது, ”பொது சிவில் சட்டம் குறித்து, தனியார் டிவி.,யில் என்னிடம் கேள்வி கேட்ட போது, பொது சிவில் சட்டத்தில், பா.ஜ., முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்படும்[6]. வட மாநிலத்தில், சிவன் – பார்வதியின் மகன் விநாயகர் என்பதை மட்டும் உறுதி செய்து, தென்மாநிலத்தில் மட்டும் அவர்களின் மகனாக அறியப்பட்ட முருகனையே வழிபட முடியாத நிலையை ஏற்படுத்துவர் என்பதை சுட்டிக் காட்டவே அவ்வாறு கூறினேன்[7]. எந்த கடவுளையும் இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கூறவில்லை,” என்றார்[8].

தர்மபுரி மாவட்ட பா.ஜ., தலைவரான முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் கூறியதாவது[9]: “தர்மபுரி தி.மு.., – எம்.பி., செந்தில்குமார், தேர்தல் நேரத்தின் போது, தான் ஹிந்து என்றும், வன்னியர் என்றும் மக்களிடம் ஓட்டு கேட்டு வெற்றி பெற்றார். அதன் பின், ஹிந்து மத வழிபாட்டுக்கு எதிராகவும், ஹிந்து கடவுளுக்கு எதிராகவும் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். பொது சிவில் சட்டம் குறித்து, தன் அறியாமையால், சிவன்பார்வதி குடும்ப கட்டுப்பாடு செய்தார்களா என, ஹிந்து மக்கள் மனம் வேதனைப்படும் படி பேசியுள்ளார். இதேபோன்று, முஸ்லிம், கிறிஸ்தவ கடவுள்கள், குடும்ப கட்டுப்பாடு செய்தார்களா என, அவரால் பேச முடியுமா? தன்னை தேர்ந்தெடுத்த மாவட்ட மக்களுக்கு நன்மை செய்ய முடியாமல், மத்திய பா.., அரசு செய்யும் நலத்திட்டங்களுக்கு, தன் பெயரை விளம்பரப்படுத்தும் அவர், ஹிந்து கடவுள்களை பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவருக்கு மட்டுமின்றி, தி.மு.., அரசுக்கும், ஹிந்துக்கள் வரும் லோக்சபா தேர்தலில் தக்க பதிலடி தருவர்,” இவ்வாறு, அவர் கூறினார்[10].

தமிழகத்தில் பகுத்தறிவு போர்வையில் இந்து தூஷணம் வளர்த்த விதம்: 1940 களிலிருந்து, ஈவேரா பகுத்தறிவு போர்வையில் இந்துவிரோத கருத்துக்களை ஆபாசமாக பேசி, எழுதி வந்துள்ளது முறையாகக் கண்டிக்கப் படவில்லை. அத்தகைய தூஷணங்களை தமிழ்-தமிழ் என்ற பெயரில், அண்ணாதுரை, கருணாநிதி போன்றோர் மேடைகளில் தொடர்ந்தனர். அவர்கள் ஆட்சியிலும் பெரியாரின் வசைப்பாடல்கள் தொடர்ந்தன. திக-திமுக மேடை பேச்சாளர்கள் இத்தகைய தூஷணங்களைத் தொடர்ந்து செய்தனர். அண்ணாதுரை, கருணாநிதி முதலமைச்சர் ஆனதால், 1970களிலிருந்து அவை இன்னும் மோசமாகி வளர்ந்தன. இப்படி பேசுவதையே திராவிடத்துவவாதிகள் பிழைப்பாகக் கொண்டு வளர்ந்தனர், கஞ்சி குடித்து-கேக் தின்று வளர்க்கப் பட்டனர்.ஊடகங்கள் வளர்ந்து பரவிய நிலையில் 1980களில் அவர்கள் தங்களது பேச்சுகளைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது. ஏனெனில், அத்தகைய ஆபாச, அறுவருப்பான, மோசமான, கேவலமான பேச்சுகளை பொது மக்கள் ஏற்கவில்லை, குறிப்பாக பெண்கள் எதிர்க்கவும் செய்தனர் என்பது தெரியவந்ததால், குறைத்துக் கொண்டனர். எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் ஒரளவுக்குக் கட்டுப் படுத்தப் பட்டாலும், திராவிடக்கழகப் பிரிவுகள் பூணூல் அறுப்புப் போர்வையில், வேறு விதமாக இந்துவிரோத தூஷணங்களை செய்தனர். பாப்பாத்தி-ஜெயலலிதாவை, ஆரிய அம்மையாரை எதிர்க்கிறேன் என்று கருணாநிதியே பலவிதங்களில் இந்து-துவேசத்தைக் கக்கியுள்ளது பதிவாகியுள்ளது.

2021ல் திமுக பதவிக்கு வந்த பிறகு: இப்பொழுது ஸ்டாலின் முதலமைச்சராகியப் பிறகு, மறுபடியும் எல்லா இந்துவிரோத கும்பல்களும், இந்துதுவேச கூட்டங்களும், இந்துவசைப்பாடும் துரோகிகளும் பலவித உருவங்களில், சித்தாந்தங்களுடன் செயல்பட்டு வருகிறார்கள். 1990களிலிருந்து ஊடகங்களில் அதிகமாகவே ஊடுருவியுள்ளார்கள். பிறகு, சினிமாக்களிலும் அவை – பாடல்கள், வசனங்கள், சித்தரிப்பு முதலியவை மூலம் – வெளிப்பட ஆரம்பித்தன. இந்நிலையில் செந்தில்குமார் அங்கு வடக்கில், சிவன் – பார்வதிக்கு, கு.க., நடந்ததா என தெரியவில்லை’ என்றதில் என்ன வியப்பு? ஏ இந்துவே, இதை நீ இந்துவாக, ஹிந்துவாக, சைவனாக, அசைவனாக, வைஷ்ணவனாக, காலமுகனாக, எப்படி எதிர்ப்பாய்?

இந்தியாவில் கருத்து சுதந்திரம் இந்துக்களுக்கு மட்டும் வித்தியாசமாக கட்டுப்படுத்துவது ஏன்?: இப்பொழுது, யாராவது இந்துதூஷணமாக பேசிவிட்டால், முதலில் பொதுவாகக் கண்டுக் கொள்வதில்லை. பிறகு, எந்த இந்துவாவது, இதே போல மற்ற கடவுளரை வைத்து பேசுவாயா, விமர்சனம் செய்வாயா என்று சாதாரணமாகக் கேட்டப் போதும் கவலைப் படவில்லை. ஆனால், இந்துக் கடவுளுக்கு பதிலாக, மற்ற கடவுளின் பெயரைக் குறிப்பிட்டுக் கேட்ட பொழுது, அந்த மற்ற மதத்தினர் விழித்துக் கொண்டனர். இதனால் பயந்த இந்துவிரோதி பேச்சாளர்கள் மறுபடியும் தம்மை கட்டுப் ப்டுத்திக் கொள்ள ஆரம்பித்தனர். இன்றைக்கு ஊடகங்கள் வாயிலாக, உலக நடப்புகள், நிகழ்வுகள் எல்லாம் ஒரளவுக்கு தெரிய வருகிறது. அப்பொழுது, மற்ற நாடுகளை விட இந்தியா பல்மடங்கு சிறந்து விளங்குகிறது என்ற உண்மையும் விளங்குகிறது. பாலஸ்தீனம், சிரியா, லெபனான், ஆப்கானிஸ்தான், மற்ற மத்தியத் தரைக் கடல் நாடுகளுக்குச் சென்று வாழ்ந்தால், நிலைமை என்னாகும் என்பது புரிந்து விட்டது.

ஸ்டாலின் – சாதி, மதம் தொடர்பாக சமூக வலைதளங்களில்  விமர்சனம் செய்பவர்கள்மீது கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்[11]: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11-07-2023 அன்றுதான், சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பான உயர்அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்தில், சாதி, மதம் தொடர்பாக சமூக வலைதளங்களில்  விமர்சனம் செய்பவர்கள்மீது கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்[12]. இந்த நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.பி. இந்து கடவுகள் குறித்து தவறான விமர்சனம் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் பேசி 24 மணிநேரம் கூட ஆகாத நிலையில், தர்மபுரி தொகுதி திமுக எம்.பி.  இந்துமதம் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.  இது சர்ச்சையான நிலையில், அவர் கைது செய்யப்படுவாரா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் தர்மபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில்குமார். இவர் இந்து மதங்களையும், இந்து மத சடங்குகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆனால், இவர்மீது காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், மற்ற மதங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டாலே, உடனே சைபர் கிரைம் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

செந்தில்குமாரும், கனல் கண்ணனும்: சமீபத்தில் நடிகர் கனல்கண்ணன், சமூக வலைதளங்களில் வெளியான ஒரு மதம் தொடர்பான வீடியோவை பகிர்ந்து கருத்து பதிவிட்டதால், கைது செய்யப்பட்டார். இது சர்ச்சையானது. முதலமைச்சரின் உத்தரவுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் கைது செய்யப்படுவாரா ? மதம் குறித்து அவதூறு கருத்தை கூறிய செந்தில் குமார் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிடுவார் என உறுதியாக நம்புகிறேன் என பாஜக தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். பொதுமக்களும், தமிழக முதல்வர் கூறுவது உண்மை என்றால், உடனே செந்தில்குமார் எம்.பி. கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

© வேதபிரகாஷ்

12-07-2023


[1] தினமலர், சிவன்பார்வதி கு.., செய்தனரா? தி.மு.., – எம்.பி., சர்ச்சை பேச்சு, Added : ஜூலை 11, 2023  23:47; https://www.dinamalar.com/news_detail.asp?id=3373130

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3373130

[3] மீடியான், வடமாநிலத்தில் சிவன், பார்வதி குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கிட்டாங்களா? தி.மு.க. எம்.பி. திமிர் பேச்சு!, Karthikeyan Mediyaan News, ஜூலை 12, 2023.

[4] https://mediyaan.com/dharmapuri-dmk-mp-senthilkumar-insult-hindu-gods-shiva-parvathi/

[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், வடமாநிலத்தில் சிவன், பார்வதி குடும்ப கட்டுப்பாடு பண்ணாங்களா? திமுக எம்.பி. சர்ச்சை பேச்சு!, Manikanda Prabu, First Published Jul 12, 2023, 10:14 AM IST;  Last Updated Jul 12, 2023, 10:17 AM IST.

[6] https://tamil.asianetnews.com/tamilnadu/dmk-mp-senthilkumar-controversy-speech-on-lord-shiva-and-parvathy-rxo2ih

[7] தமிழ்.வெப்துனியா, சிவன்பார்வதி பற்றி தர்மபுரி எம்பியின் சர்ச்சை கருத்து..!, Written By Mahendran, Last Updated : புதன், 12 ஜூலை 2023 (11:41 IST).

[8] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/senthil-kumar-mp-says-about-sivan-and-parvathi-123071200034_1.html

[9] தினமலர், சிவன்பார்வதி கு.., செய்தார்களா? தி.மு.., – எம்.பி., பேச்சால் புது சர்ச்சை, மாற்றம் செய்த நாள்: ஜூலை 12,2023 07:13;

https://m.dinamalar.com/detail.php?id=3373766

[10] https://m.dinamalar.com/detail.php?id=3373766

[11] பத்திரிக்கை.காம், இந்து தெய்வங்கள் குறித்து திமுக எம்பியின் சர்ச்சை கருத்து..! நடவடிக்கை எடுக்குமா தமிழ்நாடு அரசு, JUL 12, 2023

[12] .https://patrikai.com/dmk-mps-controversial-comment-on-hindu-deities-will-the-tamilnadu-government-take-action/

ஆவியாக வந்து திராவிட மாடலில் அவிநாசி கோவிலில் கொள்ளையடித்த மனித உருவில் வந்தவன் யார்?

மே 26, 2023

ஆவியாக வந்து திராவிட மாடலில் அவிநாசி கோவிலில் கொள்ளையடித்த மனித உருவில் வந்தவன் யார்?

தமிழகத்தில் கோவில் கொள்ளை, திருட்டு, கடத்தல் என்பதெல்லாம் சகஜமப்பாவா?: தமிழகத்தில் கோவில் கொள்ளை, திருட்டு, கடத்தல் என்பதெல்லாம் அலுத்துப் போன செய்திகளாகத் தான் வெளியிடப் படுகின்றன. திரும்ப-திரும்ப நடக்கின்றனவே என்று எந்த நிருபரும், ஊடகக் காரரும், புலன் விசாரணை வீர-சூரப் பத்திரிக்கையாளனும் எதையும் கண்டுபிடிக்க உற்சாகம் பெறவில்லை. இந்து அறநுலைய அமைச்சரை நிற்கவைத்து கேள்விகளைக் கேட்கவில்லை. பி.டி.ஐ பாணியில்,ஒரு வரி கூட மாறாமல் அப்படியே வெளியிட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது[1].  ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் மிகவும் தொன்மை வாய்ந்த கோவிலாகும். கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மையான ஆலயமாகவும், முதலை விழுங்கிய பாலகனை காப்பற்றுவதற்காக சுந்தரர் பதிகம் பாடி அதன் பின் அந்த சிறுவனை மீட்டதாகவும் வரலாறு கொண்ட தலமாக இது விளங்குகிறது, என்று புராண விசயங்களைக் குரிப்பிட்டாலும், குற்றவியல் ரீதியில் ஒன்றையும் கவனிக்கவில்லை.

22-05-2023 அன்று கோவிலுக்குள் நுழைந்த கொள்ளையன் செய்த காரியகள்: வழக்கம்போல் 23-05-2023 அன்று அதிகாலை கோயில் அர்ச்சகர்கள் நடை திறந்தபோது,

  • உள்ளே பொருட்கள் சிதறி கிடந்ததையும்,
  • கோயிலுக்குள் இரண்டு உண்டியல்களை உடைக்க முயற்சி நடந்திருப்பதையும்,
  • தெற்கு உள்பிரகார வளாகத்தில் 63 நாயன்மார்கள் சிலைகள் உள்ள பகுதியில் கோபுரங்களின் கலசம் உடைக்கப்பட்டிருந்ததையும்,
  • சிலைகள் மீது அணிவித்திருந்த ஆடைகள், அவிநாசிலிங்கேஸ்வரர் மீது இருந்த பொருட்கள் உள்ளிட்டவை களைந்து கிடந்ததையும்

கண்டு அதிர்ச்சியடைந்தனர்[2]. இதையெல்லாம் சாதாரணமாக செய்ய முடியாது. மேலும், விவரம் அறிந்தவன் தான் திட்டமிட்டு செய்திருக்க வேண்டும். அதாவது, 22-05-2023 அன்று யாரோ அத்தகைய வேலைகளை செய்திருக்க வேண்டும். அதிர்ச்சி அடைந்த அர்சகர்கள் உடனே கோவில் நிர்வாகம் மற்றும் அவிநாசி காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்[3]

போலீஸார் வருவது, விசாரிப்பது, கைது செய்து கொண்டு செல்வது: இதுதொடர்பாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளர் பவுல்ராஜ் தலைமையிலான போலீஸார் சென்று விசாரித்தனர்[4]. இதில் முருகன் சன்னதியில் வெண்கலத்தால் செய்த வேல், சேவல் கொடியுள்ள 2 வேல்கள் மற்றும் உபகாரப் பொருட்கள் காணவில்லை என்பது தெரியவந்தது[5]. அப்படியென்றால் திருடப் பட்டது என்றாகிறது. கோயில் பெரிய கோபுரம் நிலை பகுதியில் சத்தம் கேட்டதால் சென்று பார்த்துள்ளனர்[6]. அப்போது, அங்கு பதுங்கி இருந்தவரை பிடித்து போலீஸார் விசாரித்தனர்[7](இப்படி மிக்க மரியாதையுடன் ஊடகத்தால் வெளியிட்டுள்ளனர்). இதில், பிடிபட்ட நபர் அவிநாசியை அடுத்த சாவக்கட்டுபாளையம் அருகே உள்ள வெள்ளமடையை சேர்ந்த சரவணபாரதி (32) என்பது தெரியவந்தது[8]. மேலும், இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததும், 22-05-2023 அன்று அதிகாலை 4 மணிக்கு அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலுக்குள் கொள்ளை முயற்சியில் ஈடுபட புகுந்ததும் தெரியவந்தது[9]. அவரிடமிருந்து வெண்கலத்தாலான வேல், சேவல் கொடி மற்றும்உபகாரப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன[10]. பின்னர் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  சிசிடிவி பற்றியெல்லாம் ஒன்றும் குறிப்பிடப் படவில்லை.

வாக்குமூலத்தில் தான் பைத்தியம் என்பது போல சொல்வது: இதற்கிடையே, சரவணபாரதி அளித்த வாக்குமூலத்தில், “தன்னை சிலர் தாக்கிவிட்டதாகவும், தான் முன்பே இறந்துவிட்டேன். தற்போது ஆவியாக உள்ளே வந்தேன்,” என்றார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், “அவர் ஏற்கெனவே மனநல பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றவர் என்பதால், தற்போது அவர் மீண்டும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளாரா அல்லது பிடிபட்டவுடன் நாடகமாடுகிறாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம்” என்றனர்.  “அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலுக்குள் கொள்ளை முயற்சியில் ஈடுபட புகுந்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்து வெண்கலத்தாலான வேல், சேவல் கொடி மற்றும்உபகாரப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,” என்று சொல்லி விட்டு, அந்த ஆள் பைத்தியம் என்பது போல குறிப்பிடுவதும், ஊடகங்கள், அப்படியே செய்திகள் வெளியிடுவதும் தமாஷாக இருக்கிறது.

இந்து அமைப்புகள் போராட்டம்: முன்னதாக, தகவல் அறிந்து வந்த இந்து அமைப்பினர், கோயில் முன்பு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால், கோயிலில் நேற்று கால பூஜைகள் ஏதும் நடைபெறவில்லை[11]. பக்தர்களும் அனுமதிக்கப்படாததால் வேதனையடைந்தனர்[12]. மேலும், கோயிலில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனக் கூறி, அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தை கண்டித்து, கோவை – அவிநாசி நெடுஞ்சாலையில் இந்து அமைப்பினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்[13]. அப்போது, அங்கிருந்த கடைகளை மூடக் கூறியும், சாலையோரம் இருந்தவர்களை மறியலில் ஈடுபட வலியுறுத்தியும் பேசினர்[14]. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது[15]. போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலை கைவிடாததால், 10-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்[16]. இங்கு மட்டும் போலீஸார் சரியாக வேலை செய்து விடுவர்.

பரிகார பூஜைகள் நடந்த பிறகு கோவில் திறக்கப் பட்டது: இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், திருப்பூர் தெற்கு எம்எல்ஏ க.செல்வராஜ், மருதாசல அடிகளார், குமரகுருபர சுவாமிகள், வரதாசல அடிகளார், காமாட்சி தாச சுவாமிகள், அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் கோயிலுக்கு சென்று பார்வையிட்டனர். அவிநாசி எம்எல்ஏ ப.தனபால் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு கோவில் கருவறை மற்றும் சன்னதிகளில், அந்நபர் புகுந்தால், பிராயச்சித்த ஹோமம் செய்யப்பட்டு, அவிநாசிலிங்கேஸ்வரர், கருணாம்பிகை அம்மன் செந்திலாண்டவர் சன்னதிகளில் அபிஷேகம் செய்விக்கப்பட்டு, பரிகார பூஜைகள் நடந்தன[17]. அதன்பின், 12 மணியளவில், பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டடனர்[18]. ஆனால், இவ்வளவு நடந்தும், இந்து அறநிலையத் துறை அமைச்சரோ அல்லது பொறுப்பான மற்ற எந்த அதிகாரியோ எதையும் சொல்லவில்லை, பேசவில்லை, கண்டுகொள்லாமல் இருந்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

26-05-2023


[1] தமிழ்.இந்து, அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் கொள்ளை முயற்சி; சிலைகள் சேதம்: கோயிலுக்குள் பதுங்கியிருந்தவர் பிடிபட்டார், செய்திப்பிரிவு, Published : 24 May 2023 06:19 AM, Last Updated : 24 May 2023 06:19 AM

[2] https://www.hindutamil.in/news/crime/995254-avinashilingeswarar-temple-robbery-attempt-damage-to-idols.html

[3] தினமணி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் கொள்ளை முயற்சி, By DIN |  Published On : 23rd May 2023 09:30 AM  |   Last Updated : 23rd May 2023 11:07 AM

[4] https://www.dinamani.com/tamilnadu/2023/may/23/robbery-attempt-at-avinasi-lingeswarar-temple-4010345.html

[5] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Avinashi Lingam Temple: அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் திருட்டு முயற்சி; ஒருவர் கைது, Pandeeswari Gurusamy, 23 May 2023, 13:35 IST

[6] https://tamil.hindustantimes.com/astrology/avinashilingeswarar-temple-robbery-attempt-one-arrested-131684828784555.html

[7] சமயம்.காம், பிரபல அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் திருட்டு முயற்சி; கோவிலுக்குள் மறைந்திருந்த நபர் கைது!, Ramya Subburaj | Samayam Tamil | Updated: 23 May 2023, 11:14 am.

[8] https://tamil.samayam.com/latest-news/tiruppur/burglary-attempt-at-avinashi-lingeswarar-temple/articleshow/100437682.cms

[9] தமிழ்.18.நியூஸ், அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் சிலைகள் சேதம்.. கோபுரத்தில் பதுங்கி இருந்த நபர் கைது, Reported By :BALAJI BHASKAR, Published By :Raj Kumar, LAST UPDATED : MAY 23, 2023, 17:57 IST, First published: May 23, 2023, 17:40 IST

[10] https://tamil.news18.com/tiruppur/thief-caught-while-trying-to-steal-in-avinasi-lingeswarar-temple-988834.html

[11] இ.டிவி.பாரத், பிரசித்திபெற்ற அவினாசி லிங்கேஸ்வரர் கோயிலில் திருட முயற்சிகுற்றவாளி கைது!, Published: May 23, 2023, 1:33 PM.

[12] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/videos/other-videos/a-robbery-attempt-is-underway-at-the-famous-avinashi-lingeswarar-temple-in-coimbatore-district/tamil-nadu20230523133242190190881

[13] மாலை மலர், அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிலைகள்கலசங்கள் உடைப்பு, ஆபரணங்கள் திருட்டுமர்மநபர்கள் கைவரிசை, By மாலை மலர், 23 மே 2023 3:16 PM; https://www.maalaimalar.com/news/district/will-security-be-strengthened-612957

[14] https://www.maalaimalar.com/news/district/will-security-be-strengthened-612957

[15] தினகரன், அவிநாசி கோயிலுக்குள் புகுந்து சிலைகள், கலசங்கள் உடைப்பு: வாலிபர் கைது, MAY 24, 2023; https://m.dinakaran.com/article//1133402/amp

[16] https://m.dinakaran.com/article//1133402/amp

[17] தினமலர், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கோபுர சிலைகள் திருட முயற்சி, மாற்றம் செய்த நாள்: மே 23,2023 19:12

[18] https://m.dinamalar.com/detail.php?id=3328403

கலாக்ஷேத்ரா விவகாரம் அரசியலாக்கி, மொழி வெறியாக்கி, ஜாதியத்தில் முடிந்த வக்கிர விளக்கவாத செய்திகள்- – கலை காமம் ஆகி கலவியாகிய நிலை (3)

ஏப்ரல் 9, 2023

கலாக்ஷேத்ரா விவகாரம் அரசியலாக்கி, மொழிவெறியாக்கி, ஜாதியத்தில் முடிந்த வக்கிர விளக்கவாத செய்திகள்- – கலை காமம் ஆகி கலவியாகிய நிலை (3)

கலைக்கூடமா, கலவிக் கூடமா?: கலைக்கூடமா, கலவிக் கூடமா? இப்படியெல்லாம் தலைப்பிட்டு செய்திகள். அப்படியென்றால் இவர்களின் இலக்கு யார்? இவர்கள் உண்மையிலேயே கலையில், கலையில் ஈடுபட்டுள்ள பெண்களை மதிப்பதாக இருந்தால், அத்தகைய பெண்களின் புகைப் படங்களை ஒழுங்காக வெளியிடுவார்களா? அவ்வாறு கலவிக் கூடம் எனும் பொழுது, இங்கு படிக்கும் எல்லா மாணவியரையும் அவதூறு பேசுவது ஆகாதா? ஆக, இதில் யாரைத் தாக்குகிறார்கள் என்று தெரிந்தே, யாரையோ தாக்குகிறார்களா? லாஜிக்கே இல்லாமல், இவ்வாறு செய்து, தமது பிராமண துவேசத்தை வெளிப் படுத்திக் கொள்கிறார்களா? ஒருவேளை “திராவிட மாடலில்” இவர்கள் இப்படித்தான் எழுதுவார்கள், செய்தி வெளியிடுவார்கள் போலும்!

மூடி மறைக்கும் பார்ப்பனர்கள்! ஆக, இப்படி பார்ப்பனர்களையும் இழுத்தாகி விட்டது!: ஒரு பக்கம் மலையாளிகளின் ஆதிக்கம், ஆர்.எஸ்.எஸ் ஊடுருவல், என்றெல்லாம் அளந்து, பார்ப்பனர்களையும் சேர்ந்து அடைந்துள்ளது! பிறகு, பார்ப்பனர் அல்லாதவர்களின் கதை என்னவோ?

  • பார்ப்பன லாபி!
  • யார் அந்த பார்ப்பன லாபியில் இருக்கிறார்கள்?
  • பெயர்கள், விவரங்கள் தர முடியுமா?

குற்றவாளிகளுக்கு உடந்தை என்று அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கலாமே? தினம்-தினம் யூ-டியூப்புகள் வந்து கொன்டிருக்கின்றன. வரும் செய்திகளைத் தொகுத்து, தமது பிராமண வெறுப்பைக் கக்கி கொன்டிருக்கின்றன. ஏதோ பார்ப்பனர்கள் தான் எல்லாவற்றிற்கும் காரணம் போன்ற பேச்சுகள், விளக்கங்கள்….ஶ்ரீதேவி என்ற பெண்மணியின் வீடியோக்கள் இந்திய அரசே பார்ப்பனியமயமாகப் பட்டு விட்டது என்று திகவை விட 1000 மடங்கு அதிகமாக கதை விடுகிறார். பொழுது போக்கிற்காக, இதைப் பார்த்து மறந்து விடுவர். இருப்பினும், சித்தாந்த ரீதியில், இப்படி யாரோ தயார் செய்து அரங்கேற்றுகிறார்கள் என்று தெரிகிறது. ஏனெனில், இதெல்லாம் ஒரு தரப்பு பொய்யான-பிரச்சார ரீதியிலான பேச்சுகள். யூ-டியூப் பிரச்சாரம் இப்பொழுது பொழ்து போக்கிற்காக உள்ளது. செல்போனில் பார்ப்பதால், அதிக “வியூவ்ஸ்” கிடைக்கிறது என்று அள்ளி வீசுகின்றனர். இவர்களுக்கு உண்மை, பொறுப்பு, சமூக அமைதி முதலியவற்றைப் பற்றி கவலை இல்லை.

மவுண்ட் ரோட் மஹாவிஷ்ணுவும், காமக்ஷேத்ரமும்:  “காமக்ஷேத்ரவான கலாக்ஷேத்ரா!” என்று அட்டைப் படம் போட்டு, “”நக்கீரன்” விற்கிறது. “பார்ப்பன” டுவிஸ்ட் செய்யலாம் என்றால் கோபாலனுக்கு சந்டோச தான். பார்ப்பன துவேச ரீதியில் இத்தகைய இணைத்தளப் பதிவுகளும் வெளியாகியுள்ளன[1]. “அறம்” என்ற பெயர் இருந்தாலும், அதிலும் பார்ப்பன காழ்ப்பு இருக்கத்தான் செய்திறது[2]. லீலா சாம்சன் டுவிட்டர் பதிவு ஆரம்பித்து, ஒரு கதையைச் சொல்லி, பார்ப்பன கோணத்தில் திரிபு விளக்கம் கொடுத்து வீடியோவையும் போட்டாகி விட்டது. நக்கீரனுக்கு, கோபாலனுக்கு, “பார்ப்பனரான” இந்து-ராம் ஆதரவு கொடுப்பது தெரிந்த விசயம். “ஜார்னலிஸ்டிக்-எதிக்ஸ்” பேசும் என்.ராமுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன? இருப்பினும் “என்.ராம்” போன்றவர்கள் ஆதரவு தருகின்றனர் என்றால், அனைத்தையும் மீறி, ஏதோ ஒன்று அவர்களை பிணைத்துள்ளது என்று தெரிகிறது. ஆமாம், அவர் வீட்டுப் பெண்ணைத் தான் தயாநிதி மாறன் கல்யாணம் செய்துக் கொண்டிருக்கிறார். “சாவிப்’ பிரச்சினை எல்லாம் இங்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை. மாமனார் “மவுண்ட் ரோட் மஹாவிஷ்ணு” என்று நக்கல் அடித்தாலும், மறுமகள் கண்டுகொண்டதில்லை. அதைத்தான் முதலில் “இந்துத்துவ வாதிகள்” வெளிப்படுத்த வேண்டும்.

இந்துத்துவ வெறுப்பு பார்ப்பன வெறுப்பாகி, பிராமண துவேஷமாவதேன்?: வழக்கம் போல,ஆர்-எஸ்-எஸ்- எதிர்ப்பு, பிஜேபி-எதிர்ப்பு, இந்துத்துவ-எதிர்ப்பு, அவாள்- எதிர்ப்பு, பார்ப்பன- எதிர்ப்பு என்றெல்லாம் பதிவுகள் போட்டு, இந்து-விரோத, இந்து-துவேஷ, இந்து-தூஷணங்களில் முடிந்து விடும். அத்தகையோரையும் கண்டு கொள்ளலாம்! “வினவு” போன்ற இந்துவிரோத தளங்கள் விஷத்தைக் கக்குவது தெரிந்த விசயம் தான்[3]. ஏனெனில், அங்கும் அதே ஃபார்புலா தான் பின்பற்றப் படுகிறது[4]. அதாவது, பார்ப்பனத் திரிபு விலக்கத்தை வைத்து, கதையை உருவாக்கி, செய்தியாக்குவது[5]. பிறகு மற்ற ஜாதியினரின் ஆதிக்கம், செல்வாக்கு, முதலியவை வரும்பொழுது, வியாபாரம் கருதி, அமைதியாவது, சரண்டாராகுவது என்று முடிவதும் சகஜமாகிறது[6]. இருப்பினும், அந்த பார்ப்பன தூவேஷப் பதிவு நிலைத்திருக்கும். வேண்டும் என்றால் பிராமணர்களை முக்கியமான வேலைக்கும் வைத்துக் கொள்வார்கள். ஆனால், வெளியில் அவர்களை வசைப் பாடுவார்கள். இது “சன்’ குழுமத்திலேயே கவனிக்கலாம்.

பார்ப்பனிய வாதமும், குஷ்பு பதிலும்: இந்நிலையில் ட்விட்டரில் ரத்தினவேலு வசந்தா என்ற பெயரில் செயல்படும் ஒருவர், நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவை டேக் செய்து, ‛‛இன்று வீட்டு கடனுக்கான வட்டி அதிகமாகியுள்ளது. கலாசேத்ராவில் பார்ப்பன ஆசிரியர்களின் பாலியல் தொந்தரவை எதிர்த்து மாணவிகள் போராடுகின்றனர். மகளிர் ஆணைய உறுப்பினர் ஆன நீங்கள் என்ன செய்கிறீர்கள்,” என கேள்வி எழுப்பியதோடு மேலும் சில வார்த்தைகளை காட்டமாக தெரிவித்து இருந்தார்[7]. இதற்கு உடனடியாக குஷ்பு பதிலடி கொடுத்தார். அதாவது, ‛‛நீங்கள் எவ்வளவு விரக்தியில் இருக்கிறீர்கள். முதல்வர் உங்களுக்கு ஏதாவது வேலை ஒதுக்கீடு செய்ய வண்டும். நீங்கள் கேள்விகள் கேட்பதற்கு முன்பு சட்டம் அல்லது தேசிய மகளிர் ஆணையம் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் வயதுக்கு மரியாதை உண்டு. அதுவும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வரும். dravidan Stockகளிடம் இருந்து சில சிறந்த உணர்வுகளை எதிர்பார்ப்பது என்பது என் மீதான தவறு தான். உங்களிடம் இருந்து சிலவற்றை கற்று கொள்ள வேண்டியுள்ளது. உங்களை போல் நானும் சொன்னால் அது அவமரியாதையாக இருக்கும். எனவே கடவுள் ஆசீர்வாதம் கிடைக்கட்டும் என கூறுகிறேன்,” என விமர்சனம் செய்திருந்தார்[8].

லாஜிக்கே இல்லாத வாத-விவாதங்கள் தொடர்கின்றன, அரங்கேறுகின்றன: லாஜிக்கே இல்லாத அதாவது தர்க்கத்தில் காரணம், நியதி, முறை, உண்மை, ஏற்புடைத் தன்மை என்று எதையும் பின்பற்றாமல், வாதங்கள் முன்வைக்கப் படுகின்றன:

  • பிராமணரை எதிர்க்கவில்லை, பிராமணத்துவத்தை எதிர்க்கிறோம்
  • இந்தியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பை எதிர்க்கிறோம்
  • இந்துக்களை எதிர்க்கவில்லை, எங்கள் கட்சியிலும் இந்துக்கள் இருக்கிறார்கள்.
  • சனாதனத்தை வேரறுப்போம், இந்துத்துவத்தை கருவறுப்போம் என்றால் குற்றமில்லையா?
  • மத்திய அரசை வெறுக்கிறோம், ஒன்றியத்தை ஆதரிக்கிறோம்.
  • திராவிட இனம், இனத்துவம், முதலியவற்றை நம்புவோம் என்றால், திராவிட இனவெறி, இனவெறித்துவ செயல்பாடுகள் முதலியவற்றை ஆதரிப்பது எப்படி?

இதில் ஏதோ பெரிய லாஜிக் இருப்பது போல பேசுகிறார்கள், ஆனால், இவையெல்லாம் ஒன்றுமே இல்லாத, அர்த்தமற்ற, அபத்தமான வெற்றுப் பேச்சுகள் தாம்.

  1. எக்ஸை ஆதரிக்கிறோம், ஆனால் அதன் தீவிரவாதத்தை எதிர்க்கிறோம்
  2. எக்ஸை போற்றுகிறோம், ஆனால், அதன் அடிப்படைவாதத்தை வெறுக்கிறோம், அதனால் கருவறுப்போம்.
  3. எக்ஸை ஆதரிக்கிறோம், ஆனால் அதன் பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம்

என்று சொல்ல மாட்டார்கள், ஏனெனில், அவர்களுக்கு உண்மை எது, பொய்மை எது என்பது. பிறகு அவ்வாறு பேச வேண்டிய அவசியம் என்ன? மக்களை ஏமாற்ருவதர்குத் தான்.

© வேதபிரகாஷ்

09-04-2023


[1] அறம், கலாஷேத்திராவா? காமஷேத்திராவா?, -சாவித்திரி கண்ணன், April 2, 2023

[2] https://aramonline.in/12972/kalakshetra-student-protest/

[3] வினவு, கலாஷேத்ரா: ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கிரிமினல் கூடாரங்களே! | மக்கள் அதிகாரம் கண்டனம், By மக்கள் அதிகாரம் -April 1, 2023

[4] https://www.vinavu.com/2023/04/01/arrest-kalakshetra-management-peoples-power-condemnation/

[5] தமிழ்.ஒன்.இந்தியா, கலாஷேத்ரா..தவறான தகவல் பரப்பாதீர்கள்..கூடுதல் ஆணையர் வேண்டுகோள்..மாநில மகளிர் ஆணைய தலைவர் விசாரணை, By Jeyalakshmi C, Published: Friday, March 31, 2023, 11:46 [IST]

[6] https://tamil.oneindia.com/news/chennai/don-t-spread-wrong-information-about-kalakshetra-says-chennai-additional-commissioner-of-police-505302.html

[7] தமிழ்.ஒன்.இந்தியா, வயதுக்கு தான் மரியாதை.. ட்விட்டரில் திடீரென டென்ஷனான நடிகை குஷ்பு.. கடும் விமர்சனம்.. என்னாச்சு? By Nantha Kumar R Updated: Friday, March 31, 2023, 20:34 [IST]

[8] https://tamil.oneindia.com/news/chennai/actress-and-ncw-member-khushbu-attacks-who-trolled-her-on-the-row-of-kalakshetra-harassment-issue-505385.html

ஸ்டாலினுக்கு பீமரத சாந்தி யாகம் நடத்தப் பட்டது – PTI-பாணியில் செய்தி வெளியீடு – விமர்சனம், கருத்து, உரையாடல் எதுவும் இல்லை–சென்சார் செய்யப் பட்டது போலும்! (2)

மார்ச் 19, 2023

ஸ்டாலினுக்கு பீமரத சாந்தி யாகம் நடத்தப் பட்டது PTI-பாணியில் செய்தி வெளியீடு விமர்சனம், கருத்து, உரையாடல் எதுவும் இல்லை சென்சார் செய்யப்பட்டது போலும்! (2)

ஹோமங்கள் நடந்தன, தானங்கள் கொடுக்கப் பட்டன: மகா சண்டிஹோம் உட்பட பல்வேறு ஹோமங்கள் நிறைவுற்று பூர்ணாகுதி நடைபெற்றது. பின்னர், மேள தாளம் முழங்க, சிவாச்சாரியார்கள், புனிதநீர் கலசங்களை தலைகளில் தாங்கி, கோயிலை வலம் வந்து “கோயில் கருவூலத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு அபிசேக ஆராதனை செய்தனர்[1]. இந்த ஹோமத்தில் கலந்துகொண்ட உள்ளூர் பெண்களுக்கு, திருமதி துர்கா ஸ்டாலின் அவர்கள் உணவு பரிமாறி, புடவை, மாங்கல்ய பொருட்களை வழங்கினார்[2]. அதாவது முறைப்படி சுமங்கலிகளுக்கு தானம் கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில், மயிலாடுதுறை திமுக மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர். வழங்கறிஞர் பன்னீர்செல்வம், சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்பு கணவன் எந்த மந்திரங்களை பழித்துரைத்தானோ, அதே மந்திரங்கள் ஓதப் பட்டு சடங்குகள் நடந்தது-நடத்தப் பட்டது தான் ஸ்டாலின் விதியா, கடவுள் நிர்ணயித்ததா, காக்கா உட்கார பனம் பழம் விழுந்ததா என்பதையெல்லாம் கே. வீரமணி தான் ஆராய்ச்சி செய்ய வேண்டும். அவர் ஆரம்பித்திருக்கும் திராவிட ஆராய்ச்சி மையமும் ஆராய்ச்சி செய்யலாம், மாநாடு-கருத்தரங்கம் நடத்தலாம்.

பீமரத சாந்தி என்றால் என்ன?: பீமரத சாந்தி, ஒருவருக்கு அதிபௌதீகம் (இயற்கை), அதிதைவீகம் (தெய்வங்கள்), அத்யாத்மீகம் (தன் செயல்கள்) ஆகியவைகளால் தனக்கு ஏற்படும் தீயபலன்களிலிருந்து காத்துக் கொள்ளவும், 70 ஆம் ஆண்டு துவங்கும் போது பீமன் எனும் ருத்தரனை அமைதிப் படுத்தும் நோக்கில் பீமரத சாந்தி எனும் சடங்கு செய்யப்படுகிறது. “ஜனனாத்பரம் ப்ரதிவர்ஷே ஜன்ம மாஸே ஜன்மநக்ஷத்ரே ஆயுஷ்ய ஹுவனம் குர்யாத்” என்கிற வாக்கிற்கிணங்க, ஜன்ம நட்சத்திரம் வரும் ஒவ்வொரு வருஷமும் ஆயுள் விருத்திக்காகவும், மற்ற நற்பலன்களைப் பெறவும் ஆயுஷ்ஹோமம் செய்ய விதிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இவைகளை ஒவ்வொரு ஆண்டும் செய்ய இயலாவிடினும் மனிதன் தனக்கு “ஆதிபௌதீகம், ஆதிதைவீகம் ஆதிஆத்மீகம்” என்னும் இயற்கை, தெய்வ குற்றம், தன் செயலால் ஏற்பட்ட பாவ கார்ய பலன் ஆகியவை வந்து தீயபலன்களைக் கொடுக்காமல் இருக்கவும் அதிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளவும் கண்டிப்பாக அவனது 59, 60, 61 மற்றும் 70 வது வயது துவக்கம், 78 ஆம் ஆண்டு துவக்கம், 80 ஆம் ஆண்டு நிறைவு, 100 வது ஆண்டு நிறைவு ஆகிய கால கட்டங்களில் அதற்குரிய சாந்தி சடங்குகளைச் செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால், 59 ஆம் ஆண்டு கால புருஷனில் உக்ர ரதனின் ஆளுமைக்கு 60, 61 ஆம் ஆண்டு வரை ஆட்படுகிறான். அப்பொழுது ஈசனின் அம்சமான உக்ரனை அமைதிப்படுத்தும் நோக்குடன் செய்யப்படும் சாந்தி உக்ர ரத சாந்தி என்கிற சஷ்டியப்த பூர்த்தி மணிவிழா எனப்படும்.

70 ஆம் ஆண்டு துவங்கும் போது பீமன் என்னும் ருத்தரனின் சாந்திக்காக அவரை அமைதிப் படுத்தும் பொருட்டுபீமரத சாந்திஎனும் சடங்கு செய்தல் வேண்டும்: 70 ஆம் ஆண்டு துவங்கும் போது பீமன் என்னும் ருத்தரனின் சாந்திக்காக அவரை அமைதிப் படுத்தும் பொருட்டு ” பீமரத சாந்தி ” எனும் சடங்கு செய்தல் வேண்டும்.78 ஆம் ஆண்டின் துவக்கத்தின் போது விஜயன் எனும் ருத்ரனின் சாந்திக்காக அவரை அமைதிப்படுத்தும் பொருட்டு “விஜயரத சாந்தி” எனும் சடங்கு செய்ய வேண்டும். இதைச் செய்தாலே பூரண ஆயுள் விருத்தி ஏற்படும் என்பது சாத்திர கருத்து. அதன்பிறகு 80 ஆம் ஆண்டு முடிந்து எட்டாவது மாதம் ஜன்ம நட்சத்திரத்தன்று “சகஸ்ர சந்திர தர்சன” சாந்தி செய்தல். அன்றே சிலர் சதாபிஷேகம் எனும் 108 ருத்ர காலபிஷேகம் செய்து கொள்வது நடைமுறையில் உள்ளது. எனினும் 100 வது ஆண்டு முடிந்து 101 ஆரம்பமாகும் அன்று செய்யப்படும் சாந்தியே “சதாபிஷேக கனகாபிஷேகம்” என்று பெயர் பெற்ற சடங்காகும். இது “அஷ்டோத்ர சதருத்ர கலாபிஷேகம்” எனப்படும்.

01-03-2023- ஸ்டாலின் அரசியல் ரீதியில் பிறந்த நாள் விழா கொண்டாடியது: முன்னதாக அண்மையில் தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் கண்டார்[3]. இதனையொட்டி, தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் உள்ளிட்டோர் ஆங்காங்கு கேக் வெட்டி ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வெகு விமரிசையாகக் கொண்டாடினர்[4]. குறிப்பாக, இந்த பிறந்த நாள் விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பிகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய நிலையில், மு.க.ஸ்டாலினின் மனைவியான துர்கா ஸ்டாலின் தனது கணவருக்கு 70 வயது பூர்த்தியடைந்த நிலையில், அவருக்காக யாகம் செய்து வழிபாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய நாத்திகஆத்திக நிகழ்வுகள், சடங்குகள் மற்றும் சடங்குகள் ஏன்?:

  1. பீமரத சாந்தி என்றால் என்ன, அதன் அர்த்தம் என்ன, அது பெரியாரிஸ, அண்ணாயிஸ, திராவிட, திராவிடத்துவ மாடல்களில் வருமா?
  • 08-03-2023 அன்று திருக்கடையூரில் ஸ்டாலினுக்கு பீமரத சந்தி நடக்க, 06-03-2023 அன்று நாகர்கோவிலில் சனாதனத்தை எதிர்த்து ஸ்டாலினே பேசுகிறார்!
  • ஆதிபௌதீகம், ஆதிதைவீகம் ஆதிஆத்மீகம் எனும் பாவ கார்ய தீயபலன்களிலிருந்து காத்துக் கொள்ள நடத்தப் படும் யாகம் பலன் தருமா?
  • 70 ஆம் ஆண்டு துவங்கும் போது பீமன் என்ற ருத்தரனின் சாந்திக்காக அவரை அமைதிப் படுத்த, பீமரத சாந்தி  சடங்கு நடத்தப் படுகிறது!
  • சிவபெருமான் எமனிடமிருந்து மார்க்கண்டேயனை மீட்டு, அவனை சிரஞ்சீவியாக மாற்றினார் என்று புராணம் கூறுகிறது!
  • முன்னர் விவாக மந்திரங்களை தூஷித்துப் பேசியுள்ளார். செத்த பாடையை என்றும் மதித்ததில்லை. பிறகு அது பலன் கொடுக்குமோ?
  • விசுவாசத்துடன் பெண் / பதிவிரதை மாமனாருக்கு காசியில் பிண்டப் பிரதானம், பதிக்கு பீமரத சாந்தி என்றெல்லாம் செய்கிறார்!
  • வீட்டில் பூஜை அறையில் விக்கிரங்களை வைத்துக் கொண்டு, அதே செத்த பாடையில் சுலோகங்கள் சொல்லி பூஜைகளும் நடக்கின்றன!
  • இத்தகைய இந்துவிரோத-இந்து ஆதரவு, இந்துதுவேஷ-ஆஷா, பதி-சதி அல்லது சதி-பதி முரண்பாடுகளும் திராவிட மாடலா, ஸ்டாக்கில் வந்ததா?
  1. திக-திமுகவா, திமுக-அதிமுக இரட்டைக்குழலா, மனைவி-துணைவி சம்பிரதாயமா, பதி-சதி அல்லது சதி-பதி முரண்பாடா, போராட்டமா?
  1. இந்த திரைச்சீலை விலகட்டும், முகமூடி கிழியட்டும், போலித் தனங்கள் மறையட்டும், நாடக வேடங்கள் களையட்டும்!

© வேதபிரகாஷ்

09-03-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், Durga Stalin Pooja: நீண்ட ஆயுள் வேண்டும்முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் கணவருக்காக பீமரத சாந்தி யாகம்,By: எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை | Published at : 07 Mar 2023 03:42 PM (IST); Updated at : 07 Mar 2023 03:42 PM (IST);

[2] https://tamil.abplive.com/news/tamil-nadu/durga-stalin-special-pooja-for-cm-mk-stalin-thirukadaiyur-amirthakadeswarar-temple-tnn-105329

[3] இடிவிபாரத், பீமரத சாந்தி யாகம்செய்த துர்கா ஸ்டாலின்!.. எதற்கு தெரியுமா?, Published on: Mar 7, 2023, 3:19 PM IST.

[4] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/nagapattinam/worship-of-durga-stal-by-bhimaratha-shanti-yaga-at-thirukadaiyur-abirami-amman-temple-for-mk-stalin/tamil-nadu20230307151911597597558

17ம் நூற்றாண்டு அம்மணி அம்மன் மடம் மற்றும் பிஜேபி பிரமுகர் ஆக்கிரமித்த கட்டிடம் இடிப்பு – தொல்லியல் துறையினர் கண்டு கொள்ளவில்லை!

மார்ச் 19, 2023

17ம் நூற்றாண்டு அம்மணி அம்மன் மடம் மற்றும் பிஜேபி பிரமுகர் ஆக்கிரமித்த கட்டிடம் இடிப்பு – தொல்லியல் துறையினர் கண்டு கொள்ளவில்லை!

அம்மணி அம்மன் மடம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 4 கோபுர நுழைவு வாயில்கள் உள்ளன. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் வடக்குக் கோபுரம்(அம்மணி அம்மன்) பாதி மட்டுமே கட்டப்பட்ட நிலையைக் கண்டு, பக்தர்கள், செல்வந்தர்களின் உதவியை நாடி அந்த கோபுரத்தினைக் கட்டி முடித்தவர் பெண் சித்தரான அம்மணி அம்மாள். 17ம் நூற்றாண்டு இறுதியில் அவர் ஜீவ சமாதி அடைந்தார். இவருடைய ஜீவ சமாதி திருவண்ணாமலை ஈசான்ய லிங்க கோயிலின் எதிரே அமைந்துள்ளது. அம்மணி அம்மாள் கட்டியதால் அம்மணி அம்மன் கோபுரம் என அழைக்கப்பட்டு வரும் வடக்கு கோபுரம் எதிரில் அவர் வாழ்ந்த மடம் உள்ளது. இதில் அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயில் எதிரில் இக்கோவிலுக்கு சொந்தமான அம்மணி அம்மன் மடம் உள்ளது. 17ம் நூற்றாண்டிற்குப் பிறகு, அவ்விடத்தை பலர் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது தெரிகிறது. திருவண்ணாமலை கோவிலைச் சுற்றியுள்ள இடங்கள் பல இவ்வாறுதான் ஆக்கிரமிப்புகளில் உள்ளன, இந்த இடம் ஆக்கிரமிப்பில் சென்றதால், 1978ல் முதன்முதலாக விஸ்வ ஹிந்து பரிஷத் கோர்ட்டுல் வழக்கு தொடர்ந்தது. 2015ல் கே. ஆர். குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த 37 வருடங்களில் என்னவாயிற்று என்று தெரியவில்லை. பொதுவாக, இங்கு முன்பு பிச்சாண்டி, இப்பொழுது ஏ.வ. வேலு அவர்களின் ஆதிக்கம் தான் உள்ளது. சுற்றியுள்ள படங்கள் ஒவ்வொன்றாக கடை வளாகம், லாட்ஜ் என்று மாறிக் கொண்டிருக்கின்றன.

பிஜேபி பிரமுகர் ஆக்கிரமித்துக் கொண்டது: இந்த அம்மணி அம்மன் மடத்தை திருவண்ணாமலையை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் / ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவர் சங்கர் ஆக்கிரமித்து மடத்தின் இடத்தில் மாடி வீடு கட்டியும், மடத்தின் முன்பு கார் நிறுத்தும் ஷெட்டும் அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது[1]. அப்படியென்றால், பிஜேபி கட்சிக்குள் முரண்பாடு உள்ளது தெரிகிறது. அதிகாரம், அந்தஸ்து, பணம் என்று வந்துவிட்டால், அரசியல்வாதி இப்படித்தான் இருப்பான் போலிருக்கிறது. இதன் மதிப்பு சுமார். ரூ.50 கோடி இருக்கும் என்று தெரிகிறது. ரூ.30 கோடி என்று தினகரன் குறிப்பிடுகிறது. கோவிலுக்கு சொந்தமான அந்த மடத்தை அவரிடம் இருந்து மீட்க அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் திருவண்ணாமலை சார்பு நீதிமன்றத்தில் 2015ல் வழக்கு தொடரப்பட்டது[2]. வழக்கினை விசாரித்த திருவண்ணாமலை சார்பு நீதிமன்றம் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான அம்மணி அம்மன் மடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடத்தை இடித்து அகற்ற உத்தரவு பிறப்பித்தது. இப்பொழுது திமுக அரசு இருப்பதனால், அவர்களுக்கு லட்டு தின்கின்ற கதை தான். அதனால், உடனடியாக இடிக்க கிளம்பிவிட்டதில் எந்த வியப்பும் இல்லை.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்: இதையடுத்து நேற்று 18-03-2023 காலை வருவாய்த் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கு சென்றனர். அவர்கள் அங்சு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடத்தை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கட்டிடம் பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடிக்கப்பட்டது. அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றதால் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக நேற்று 18-03-2023 காலை முதல் மதியம் வரை கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அம்மணி அம்மன் கோபுரத் தெருவிற்குள் யாரும் செல்லாதவாறு போலீசார் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. காலையில் கோவில் பணியாளர்கள் அம்மணி அம்மன் மடத்தில் இருந்த அறைகளை காலி செய்து மூடி ‘சீல்’ வைத்தனர்[3]. ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் கோயிலுக்கு அருகில் உள்ள  மடத்துக்குள் 25க்கும் மேற்பட்ட சமையல் காஸ் சிலிண்டர்கள் இருந்ததால், அவற்றை போலீசார் பாதுகாப்பாக வேறு இடத்துக்கு மாற்றினர்[4]. இவற்றையெல்லாம் யார் வைத்திருந்தனர் என்று தெரிவிக்கப் பட்வில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன், கோயில் இணை ஆணையர் குமரேசன், ஆர்டிஓ மந்தாகினி மற்றும் நகராட்சி அலுவலர்கள் மேற்பார்வையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

அம்மணி அம்மன் மடம் இடிப்பு: தொடர்ந்து மாலை 4 மணியளவில் திடீரென கோவில் நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அம்மணி அம்மன் மடமும் இடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது[5]. இது ஆணையில் இல்லை என்றாலும், அவ்வாறு செய்யப் பட்டது[6], ஏதோ உள்நோக்கத்தைக் காட்டுகிறது. இதையடுத்து அந்த முகப்பு பகுதியில் இருந்து பொக்லைன் எந்திரத்தின் மூலம் இடிக்கும் பணி தொடங்கியது[7]. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆன்மிகவாதிகள் இந்து அமைப்பினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்[8]. அதனை தொடர்ந்து இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் அங்கு வந்தனர். அப்போது மடம் பாதி இடிக்கப்பட்டு காணப்பட்டு உள்ளது[9]. இதையடுத்து அவர்கள் இடிக்கப்பட்ட மடத்தின் அருகில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோவில் நிர்வாக அலுவலர்களிடம் இது குறித்து கேட்ட போது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது[10]. சேகர்பாபுவைப் பொறுத்த வரையில், இதை பெரிய பிரச்சினையாகக் காட்டி, 30 கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை மீட்டேன் என்று பிரகடனப் படுத்திக் கொள்வார்.

பொக்லைன் எந்திரங்கள் அகற்றம்: தொடர்ந்து அந்த இடத்திற்கு ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் இரவு 7.30 மணி வரை நடைபெற்றது. அதை தொடர்ந்து அங்கிருந்து பொக்லைன் எந்திரங்கள் அகற்றப்பட்டது. இது குறித்து இந்து அமைப்பினர் கூறுகையில், ”கோவிலுக்கு சொந்தமான இடத்தின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால் பழமையான மடத்தை அதிகாரிகள் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் இடித்து உள்ளனர். இதனை இடிப்பதற்கான என்ன. காரணம் என்பது குறித்து அதிகாரிகள் எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை. இதனை கண்டித்து அம்மணி அம்மன் கோபுரம் அருகில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் போராட்டம் நடைபெறும் என்றனர். இன்று என்ன நடந்தது என்பதை இனி மேல் தான் கவனிக்க வேண்டும். பழங்கால கட்டிடங்கள் பாதுகாக்கப் படவேண்டும் என்று இந்திய தொல்துறை சட்டங்களே கூறுகின்றன, ஆனால், அத்துறை இதில் கண்டுகொள்ளாமல் இருந்ததும் வியப்பாகத் தான் இருக்கிறது. தொல்லியல் படித்த, படிக்கும், இவ்விவரங்கள் அறிந்த அம்ர்நாத் ராமகிருஷ்ணன், வெங்கடேசன், மற்ற வல்லுனர்களும் இதனைக் கண்டிக்கவில்லை. இதையும் திராவிட மாடல் எனலாம் போலும்!

© வேதபிரகாஷ்

19-03-2023


[1] தினத்தந்தி, அம்மணி அம்மன் மடத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடம் இடித்து அகற்றம் மடமும் இடிக்கப்பட்டதால் இந்து அமைப்பினர் போராட்டம், PreviousNext, தினத்தந்தி, மார்ச் 18, 4:55 pm (Updated: மார்ச் 18, 10:24 pm).

[2] https://www.dailythanthi.com/News/State/ammani-amman-mutt-removal-of-encroaching-buildings-caused-by-police-presence-922383

[3] தினகரன், அண்ணாமலையார் கோயில் இடத்தில் பாஜ மாநில நிர்வாகி ஆக்கிரமித்து கட்டிய அடுக்குமாடி கட்டிடம் இடிப்பு: ரூ.30 கோடி மதிப்பு நிலம் மீட்பு, 2023-03-19@ 00:26:09; https://www.dinakaran.com/news_detail.asp?Nid=848946

[4] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=848946

[5] சமயம்.காம், கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்த பாஜக பிரமுகர்திருவண்ணாமலையில் சுமார் 23800 சதுர அடி நிலம் மீட்பு, Curated by Mohammed Ghowse | Samayam Tamil | Updated: 18 Mar 2023, 12:25 pm

[6] https://tamil.samayam.com/latest-news/vellore/thiruvannamalai-annamalaiyar-occupied-temple-land-retrieval-from-bjp-member/articleshow/98750432.cms

[7] இ.டிவி.பாரத், அண்ணாமலையார் நிலத்தை சுருட்டிய பாஜக பிரமுகர்.. 23,800 சதுர அடி ஆக்கிரமிப்பு அகற்றம்., Published on: 18-03-2023, 13 hours ago / 8.00 pm

[8] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/videos/other-videos/encroachment-removal-in-thiruvannamalai-ammani-amman-madam/tamil-nadu20230318192915328328069

[9] அக்னி முரசு, அம்மணி அம்மாள் வாழ்ந்த மடம் இடிப்பு, March 18, 2023.

[10] https://www.agnimurasu.com/2023/03/demolition-of-the-monastery-where-ammani-ammal-lived.html?amp=1

திராவிட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், நான் கிறிஸ்துவன் பிரகடனம், பெரியாரிஸ அல்லேலூயா கோஷங்கள்! (1)

திசெம்பர் 23, 2022

திராவிட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், நான் கிறிஸ்துவன் பிரகடனம், பெரியாரிஸ அல்லேலூயா கோஷங்கள்! (1)

இனிகோ இருதயராஜ் லயோலா கல்லூரியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் அடத்திய கிறிஸ்துமஸ் விழா: சென்னை லயோலா கல்லூரியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது[1]. இனிகோ இருதயராஜ் 13 ஆண்டு காலமாக ஆண்டுதோறும் அவர் நடத்திக் கொண்டிருக்கிறார்[2].  இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்[3]. நிகழ்ச்சியில் பேசிய அவர், இயேசு பிரானின் போதனைகளை பின்பற்றி நடந்தால் உலகம் அமைதியாக திகழும் என்றார்[4]. விழாவில் கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டி மேடையில் இருந்த கிறிஸ்தவ பேராயர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுக்கு ஊட்டி மகிழ்ந்தார்[5]. மக்களிடையே வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் ஒருதாய் மக்களாக கருதும் அன்பு உள்ளம் கொண்டதாக அரசுகள் இயங்க வேண்டும். திராவிட முன்னேற்றகழக அரசு அப்படித்தான் இயங்கி வருகிறது, இவ்வாறு அவர் பேசினார்[6]. சென்ற முறை கலையரசி நடராஜன் போன்றோரை வரவழைத்துப் பேச விட்டது போல, இம்முறை, சூரியனார் கோயில் ஆதினம் ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் என்று ஒரு சாமியாரை வரவழைத்து பேச வைத்துள்ளார்கள். அவரு தமது வேலையைக் கச்சிதமாக செய்து முடித்துள்ளார். ஆக, ஒவ்வொரு முறையும், இந்த கிருத்துவ மேடை, விழா மற்றும் அமைப்பு, இந்து விரோதம், இந்து எதிர்ப்ப்ய், காழ்ப்பு-தூஷணம் போன்றவற்றில் தான் ஈடுபட்டு வருகிறார்கள்.

20-12-2022- முதலமைச்சர் ஸ்டாலினின் உரை: அவரது போதனைகளின்படி அனைவரிடமும் அன்பு செலுத்தும் அரசு திமுக அரசு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்[7]. அனைவரையும் ஒருதாய் மக்களாக கருதி அன்பு செலுத்த வேண்டும் என்பதே திராவிட மாடல் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்[8]. சிறுபான்மையினர் நலனிற்காக திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுபான்மையினர் நல ஆணையத்தை அமைத்தவர் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி என சுட்டிக்காட்டினார். சிறுபான்மையினர் மீது எப்போது அக்கறை கொண்ட அரசு திமுக அரசு என்பதை அனைவரும் அறிவார்கள் எனவும் முதலமைச்சர் கூறினார்[9]. தமது தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமைந்த பிறகு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இவ்வளவு பணிகளை, சாதனைகளை தமது அரசு நிறைவேற்றியுள்ளதா என தனக்கே ஆச்சர்யமாக உள்ளதாக கூறினார்[10]. சிறுபான்மையினர் மீது எப்போது அக்கறை கொண்ட அரசு திமுக அரசு எனும்போது, பெரும்பான்மையினரை தூஷித்து வருவது எப்படி என்றுதான் திராவிட மாடலில் சொல்லவில்லை.

இவ்வளவு பணிகளை, சாதனைகளை தமது அரசு நிறைவேற்றியுள்ளதா என தனக்கே ஆச்சர்யமாக உள்ளது: “நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இவ்வளவு பணிகளை, சாதனைகளை தமது அரசு நிறைவேற்றியுள்ளதா என தனக்கே ஆச்சர்யமாக உள்ளதாக கூறினார்,” என்றது, ஏதோ அதிசயத்தை நிகழ்த்தியது காட்டியுள்ளது போல இருக்கிறது. அதாவது, பரத நாட்டியம் ஆடும் பொழுது, இவரையே “ஏசு கிறிஸ்து” ரேஞ்சில் தூக்கிப் பிடித்து, போற்ரிப் பாடியதை வைத்துப் பார்க்கும் பொழுது, ஸ்டாலினை அந்த வகையில் போற்றி புகழ்ந்துள்ளது தெரிகிறது. ஏசு அதிசயம் செய்தார் போன்ற கதையை, இனி ஸ்டாலினுக்கும் புனைய ஆரம்பித்து விடுவார்கள் போலும். மகளிருக்கு இலவச பேருந்து பயணம், கொரோனா காலத்தில் கல்வியை விட்டுச்சென்ற 2 லட்சம் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு அழைத்து வந்தது, மாற்று திறனாளிகளுக்கு சென்னை மெரினா கடற்கரையில் சிறப்பு நடை பாதை அமைத்தது போன்ற சாதனைகள்தான் திமுக அரசின் அடையாளம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால், அந்த “சிறப்பு நடை பாதை” என்னவாயிற்று என்பதை மறந்து விட்டது தெரிகிறது.

பிற மதத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்று சமத்துவ விழாவாக கிறிஸ்துமஸ் விழா: சிறுபான்மையினர் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை ஒன்றிய அரசால் நிறுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய முதலமைச்சர்,  அந்த உதவித் தொகை கிடைப்பதற்கு தமிழக அரசு துணை நிற்கும் என்று உறுதியளித்தார். கிறிஸ்தவ மதத்தினர் மட்டுமல்லாது பிற மதத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்று சமத்துவ விழாவாக கிறிஸ்துமஸ் விழா நடத்தப்பட்டதற்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்[11].  “இங்கே நீங்கள் பார்க்கிறீர்கள். சூரியநயினார் கோவில் சிவகர யோகிகள் மடத்தின் – மகாலிங்க தேசிக பரமாச்சார்யார் சுவாமிகள் அவர்களும், ஆத்தூர் இசுலாமிய கல்விக்கூடத்தைச் சேர்ந்த முகமது இம்ரானுல்லாஹ் பாகவி அவர்களும் கலந்து கொண்டுள்ளனர். எனவே இது அன்பின் பெருவிழாவாக நடந்து கொண்டு இருக்கிறது. இதுவே சாட்சி”. இதுபோன்ற விழாக்களில் பங்கேற்பது தமது கடமை என்றும் அவர் கூறினார்[12].  விழாவில் கிறிஸ்துமஸ் குடிலை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நலத் திட்ட உதவிகளையும் வழங்கினார். கிறிஸ்துமஸ் விழாவில் பரதநாட்டியம் முதல்வர் ஸ்டாலின் முன் ஆடிய மாணவிகள் அசத்தினர்[13] என்கிறது, ஆனால், இந்த கூத்தை இந்துக்கள் யாரும் நம்புவதாக இல்லை. நிச்சயமாக, தங்களுக்கு எதிராக, இவ்வாறு கூட்டத்தைக் கூட்டியிருக்கின்றனர் என்பது தான் புலப்ப் படுகிறது.

பரத நாட்டியம் ஆடிபாடி போற்றியதுசாமியார் பேசியது: தினத்தந்தி, “தீந்தமிழே, முதல்வரே, தமிழகத்தின் முதல்வரே, தமிழகத்தின் தங்கத் தளபதியே, தமிழக மண்ணில், நிலத்தில் அற்புதம் தினைத்து அடித்தளம் அமைத்து விடியல் நாயரே, வாழ்த்துகிறோம், உம்மை வணங்குகிறோம், வரவேற்கிறோம் முதலமைச்சரே”,.என்று பாடி ஆடியது வியப்பாக இருந்தது[14]. முன்பு, கபாலீஸ்வரர் கோவிலில், கருணாநிதிக்கு, “போற்றி,” சொன்னது போல, இங்கு, ஸ்டாலினுக்கு பாடி-ஆடியுள்ளனர். பரத நாட்டியத்தை ஏர்கெனவே கிருத்துவர்கள் தங்களது மதமாற்றும் திட்டங்களுக்கு உபயோகப் படுத்தி வருகிறார்கள். இப்பொழுது, இந்த நாத்திக-பெரியாரிஸ்ட் கொள்கை போர்வையில் இவ்வாறு செய்திருப்பதை கவனிக்கலாம். நடத்தும் கிறிஸ்துமஸ் விழாவில் சூரியனார் கோவில் ஆதீனம்.  “திருக்கயிலாய கந்த பரம்பரை வாமதேவ சந்தானம், 28 ஆவது குருமஹா சந்நிதானம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்” என்று பெரிய பெயராக இருந்தாலும், நிச்சயமாக, பலருக்கு இவர் யார் என்று தெரியவில்லை, ஏதோ, ஒரு உதாரணத்திற்கு, இவரைக் கூட்டி வந்தது போலத் தெரிகிறது.

© வேதபிரகாஷ்

22-12-2022


[1] தமிழ்.ஒன்.இந்தியா, இது தான் திமுக அரசு அரசின் அடையாளங்கள்..” கிறிஸ்துமஸ் விழாவில் பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின், By Vigneshkumar, Published: Tuesday, December 20, 2022, 23:04 [IST].

[2] https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-cm-stalin-list-of-schemes-implemented-for-minorities-by-dmk-490538.html

[3] தினகரன், சிறுபான்மை மக்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டது தமிழ்நாடு அரசு: கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் உரை, 2022-12-20@ 20:35:29

[4] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=824129

[5] மாலை மலர், அனைவரையும் ஒரு தாய் மக்களாக கருதி தி.மு.. அரசு இயங்கி வருகிறதுமுதலமைச்சர் மு..ஸ்டாலின் பெருமிதம், By Maalaimalar, 21 டிசம்பர் 2022 10:58 AM (Updated: 21 டிசம்பர் 2022 12:15 PM).

[6] https://www.maalaimalar.com/news/state/tamil-news-dmk-considers-all-people-as-one-mother-without-distinguishing-between-people-551239

[7] நியூஸ்.7.தமிழ், நலத்திட்டங்களின் சாதனைகள்தான் திமுக அரசின் அடையாளம்முதலமைச்சர் மு..ஸ்டாலின், by LakshmananDecember 20, 2022

[8] https://news7tamil.live/cm-mk-stalin-speech-in-christmas-function.html

[9] மாலை மலர், தி.மு.. ஆட்சியில் இத்தனை சாதனைகளா? – கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம், By மாலை மலர், 21 டிசம்பர் 2022 1:59 AM

[10] https://www.maalaimalar.com/news/state/cm-mk-stalin-says-tn-govt-always-concerned-about-the-welfare-of-minority-people-551161

[11] கலைஞர்.செய்திகள், தி.மு. அரசின் அடையாளங்கள் இதுதான்.. கிறிஸ்துமஸ் விழாவில் பட்டியலிட்ட முதலமைச்சர் மு..ஸ்டாலின்!, Lenin

Updated on : 20 December 2022, 09:35 PM

[12] https://www.kalaignarseithigal.com/m-k-stalin/2022/12/20/christmas-function-cm-mk-stalin-speech

[13] தினத்தந்தி, கிறிஸ்துமஸ் விழாவில் பரதநாட்டியம்முதல்வர் ஸ்டாலின் முன் ஆடிய மாணவிகள் | mk stalin By தந்தி டிவி 21 டிசம்பர் 2022 8:27 AM

[14] https://www.thanthitv.com/latest-news/bharatanatyam-at-the-christmas-function-girls-danced-in-front-of-chief-minister-stalin-156931

ஐயப்பன் அவதூறு வழக்கில் கம்யூனிஸவாதி சுந்தவல்லிக்கு ரூ 3500 அபராதம்! மேல்முறையீடு செய்வோம் என்று தோழர்கள் தோரணை! (1)

நவம்பர் 26, 2022

ஐயப்பன் அவதூறு வழக்கில் கம்யூனிஸவாதி சுந்தவல்லிக்கு ரூ 3500 அபராதம்! மேல் முறையீடு செய்வோம் என்று தோழர்கள் தோரணை! (1)

தமிழக திராவிடத்துவ சித்தாந்தங்களின் கலவை ஏன் இந்துவிரோதமாக இருக்கிறது?: கம்யூனிஸம், பெரியாரிஸம், பகுத்தறிவு, நாத்திகம் போர்வையில், பெரும்பாலோர் முடிவில் இந்துவிரோத பேச்சுகளில் எழுத்துகளில் தான் சென்று முடிகிறார்கள், சிறக்கிறார்கள்.

  1. “செக்யூலரிஸம்” என்று கூட கொள்கை இல்லை, எல்லா மதங்களையும் ஒரே மாதிரி நடத்த வெண்டும், அதாவது விமர்சிக்க வேண்டும் என்ற நெறிமுறையும் இல்லை.

2. யாரும் தட்டிக் கேட்பதில்லை, கேட்டாலும் அது ஒன்றும் பெரிய அழுத்தம் கொடுத்துவிடவில்லை, கொடுத்தாலும், யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள்;

3. கண்டுகொண்டாலும், புகார் கொடுக்க மாட்டார்கள்; புகார் கொடுத்தாலும், கிடப்பில் போட்டு விடுவார்கள், எந்த நடவக்கையும் எடுக்கப் பட மாட்டாது;

4. எடுத்தாலும் சட்டப் படி ஒன்றும் நடக்காது, காலையில் கைது-மாலையில் விடுதலை, அல்லது பெயிலில் வெளிவந்து விடுதல்;

5. ஆளும் கட்சிகள் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுவதால், கடந்த 70 ஆண்டுகளில் அத்தகைய சித்தாந்திகள் ஆட்சி, அதிகாரம், அந்தஸ்த்து மற்றும் நடவடிக்கை எடுக்கும் இடங்களில் இருப்பதால், மிருதுவாக இருப்பார்கள், தாக்கத்தை உண்டாக்கலாம், ஆழுத்தம் மூலம் தப்பித்துக் கொள்ளலாம் என்ற மனோபாவம், மனப்பாங்கு இருக்கத்தான் செய்கிறது.

6. திராவிட ஸ்டாக், திராவிட மாடல், டிவி வாத-விவாதங்களும் அவ்வாறே சென்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், ஒரு குறிப்பிட்ட ரீதியாகத்தான் விவகாரங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

சபரிமலை ஐயப்பன் குறித்து அவதுாறாக பேசிய மா.கம்யூ., பேச்சாளருக்கு எழும்பூர் நீதிமன்றம் 3500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப் புகழ்பெற்றது. ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்[1]. கேரளா மட்டுமல்லாது தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் மாலை அணிந்து வந்து சாமி தரிசனம் செய்வர்[2]. கோயிலுக்கு இளம் பெண்கள் செல்ல அனுமதி இல்லை. அந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் குறித்து முகநூலில் கருத்து பதிவிட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. சபரிமலை ஐயப்பன் குறித்து அவதுாறாக பேசிய மா.கம்யூ., பேச்சாளருக்கு எழும்பூர் நீதி  இதற்கு எதிராக பேராசிரியர் சுந்தரவல்லி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மன்றம் 3500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது[3] என்று தினமலரில் மட்டும் தான் செய்தி வெளிவந்துள்ளது. புதிய தொலைக்காட்சியில் ஒருவரி செய்தியாக இணைதளத்தில் காணப் படுகிறது. மா.கம்யூ., பேச்சாளர் சுந்தரவள்ளி, 48. இவர் 2018ல் நடந்த கூட்டம் ஒன்றில் சபரிமலை ஐயப்பன் குறித்து அவதுாறாக பேசினார்[4]. இதற்கான ‘வீடியோ’ பரவியது. இவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹிந்து அமைப்பினர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்[5]. மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்[6]. இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தகுந்த சாட்சியங்களுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சுந்தரவள்ளிக்கு, 3500 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி கிரிஜாராணி 25-11-2022 அன்று உத்தரவிட்டார். இப்பொழுது இவ்வளவு தான் விவரங்கள், சாதாரண வாசகருக்குக் கிடைக்கிறது. வழக்கம் போல, இணைதள ஊடகங்கள், பி.டி.ஐ பாணியில், தலைப்பை மாற்றி, அப்படியே வெளியிட்டுள்ளன. என்ன விசயம், விவகாரம், தீர்ப்பு என்ன சொல்கிறது போன்றவற்றைப் பற்றி கூட கவலைப் படுவதில்லை[7]. “ஈ அடிச்சான் காப்பி” தான், இன்றைய “கட் அன்ட் பேஸ்ட்” தான், எந்த விவஸ்தையும், அவஸ்தையும் இல்லை[8].

பொய் வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் – சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கம்: “உண்மையை கண்டு காவி கும்பல் அஞ்சுகின்றது. தோழர் சுந்தரவள்ளிக்கு எதிராக சங்பரிவார் பாசிஸ்ட்கள் கொடுத்த பொய் வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும்,” என்று சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. இது என்ன கூட்டமைப்பு, என்று பார்த்தால், “ஞாயிற்றுக்கிழமை 05.06.22 காலை 10 மணி முதல் மாலை 7 மணிவரை சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கம் முன்னெடுக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி உண்ணாவிரத அறப்போராட்டம்,” என்றெல்லாம் நடத்தியதாகத் தெரிகிறது. அதிலும், இந்த அம்மணி கலந்து கொண்டதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது[9]. டுவிட்டரில் இப்போராட்டத்தில் கலந்து கொள்வதாக, 18 பேருடைய புகைப் படங்கள் வெளியிடப் பட்டுள்ளன. பிறகு, அவர்கள் இத்தகைய பேச்சை ஆதரிக்கிறார்களா என்று தெரியவில்லை. வெவ்வேறான சித்தாந்தங்கள், அரசியல் சார்பு, என்றிருக்கும் இவர்கள் எவ்வாறு ஒன்றாக வர முடிகிறது என்பதும் கவனிக்கத் தக்கது.

முற்போக்கு என்ற போர்வையில் இந்துத்துவ வாதிகள் முடங்கி விட்டார்களா?: சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்[10], தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், இப்படியெல்லாம் இருக்கும் சங்கங்களில் இந்துத்துவ எழுத்தாளர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்களா இல்லையா என்று தெரியவில்லை. இருந்தால், இத்தகைய விவரங்களை அவர்கள் ஏன் வெளியிடாமல் இருக்கின்றனர் என்றும் புரியவில்லை. பிஜேபி தயவில், பற்பல வாரியங்கள், போர்டுகள் என்று அரசு நிறுவனங்களில் “போஸ்டிங்” வாங்கிக் கொண்டு அனுபவித்து வருகிறார்கள். ஆனால், “இந்துத்துவ” கொள்கையை துறந்து விடுவதைப் போலத் தான் உள்ளது. அதற்குப் பிறகு, அடங்கி விடுகிறார்கள். செக்யூலரிஸத்தைப் பின்பற்றி. “முற்போக்கு” நண்பவர்களுடன், உறவுகளை வைத்துக் கொண்டு சிறக்கிறார்கள் போலும்… என்ன சொன்னாலும், அவர்களிடம் இருக்கும் ஒற்றுமை “இந்துத்துவ வாதிகளிடம்” இல்லை. அதைத் தெரிந்து வைத்துக் கொண்டுதான், அவர்களும் ஆட்டிப் படைக்கிறார்கள். சாதாரண, அப்பாவி இந்துக்கள் ஏமாற்றப் படுகிறார்கள், பலிகடா ஆக்கப் படுகிறார்கள் தொடர்ந்து தூற்றப் படுகிறார்கள், தாக்கப் படுகிறார்கள்,……………………………

யோசிக்க வேண்டிய அம்சங்கள்:

  1. காலையில் நல்ல செய்தி! ஐயப்பனைப் பற்றி அவதூறு பேச்சு – கம்யூனிஸ்ட் பேச்சாளருக்கு அபராதம்! இதே நெறிமுறை தொடரவேண்டும்!

2. சுந்தரவள்ளி, 2018ல் நடந்த கூட்டம் ஒன்றில் சபரிமலை ஐயப்பன் குறித்து அவதுாறாக பேசிதற்கு, நீதிமன்றம் 3500 ரூபாய் அபராதம் விதித்தது..

3. “உண்மையை கண்டு காவி கும்பல் அஞ்சுகின்றது….அது பொய் வழக்கு ….என்று சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கம் வெளியிட்டுள்ளது.

4. தோழர் சுந்தரவள்ளிக்கு எதிராக சங்பரிவார் பாசிஸ்ட்கள் கொடுத்த பொய் வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும்,

5. சம்பந்தரையும் தேவாரத்தையும் அவதூறாக பேசியதற்கு திருக்கோவில் ஓதுவாமூர்த்திகள் மற்றும் சிவனடியார்கள் புகாரும் நிலுவையில் உள்ளது.

6. சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கம் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தியாகத் தெரிகிறது.

7. அதில் இந்த அம்மணி மற்றும் 17 பேர் கலந்து கொண்டதாக புகைப் படம் போடப் பட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் அடையாளம் காணவேண்டும்.

8. ஆனால், இந்துத்துவ வாதிகளை தமது எதிரிகளை கண்டுகொள்வதில்லை, மாறாக, அட்பும், உறவும் வைத்துக் கொள்கிறார்கள்!

9. இப்பொழுது கூட வழக்குப் போட்டவர்கள் பேட்டி கொடுத்து, விவரங்களை தெரிவிக்கவில்லை, தாமும் முறையீடு செய்வோம் என்றும் என்று சொல்லவில்லை.

10. ஆக இந்துக்கள், சாதாரணமான இந்துக்கள், அப்பாவி இந்துக்கள், மெதுவான இலக்கு- இந்துக்கள்,அப்படியே தான் இருக்க வேண்டும்………………………

  © வேதபிரகாஷ்

26-11-2022


[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிர்ஸ், சபரிமலை கோயில் பற்றி விமர்சனம்: பேராசிரியை சுந்தரவள்ளிக்கு நீதிமன்றத்தில் அபராதம், Written by WebDesk, November 26, 2022 9:10:35 am

[2] https://tamil.indianexpress.com/tamilnadu/egmore-court-impose-fine-to-professor-sundaravalli-548246/

[3] தினமலர், சபரிமலை ஐயப்பன் பற்றி அவதூறு: கம்யூ., பேச்சாளருக்கு அபராதம், Added : நவ 26, 2022  06:43.

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=3179966

[5] நியூஸ்.டி.எம், அய்யப்பன் குறித்து அவதூறு.. சுந்தரவள்ளிக்கு அபராதம்..! , ByNewstm Desk|26 Nov 2022 11:40 AM; https://newstm.in/tamilnadu/–516410?infinitescroll=1

[6] https://newstm.in/tamilnadu/–516410?infinitescroll=1

[7] தமிழ்.வெப்.இந்தியா, பேராசிரியர் சுந்தரவல்லிக்கு 3500 ரூபாய் அபராதம்: எதற்கு தெரியுமா?, சனி, 26 நவம்பர் 2022 (12:11 IST)

[8] https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/ayyappan-temple-controversy-status-rs-3500-penalty-to-sundharavalli-122112600027_1.html

[9] https://mobile.twitter.com/ghouse2017/status/1532192971805716481/photo/1

[10] https://www.tnpwaa.com/