கலாக்ஷேத்ரா விவகாரம் அரசியலாக்கி, மொழி வெறியாக்கி, ஜாதியத்தில் முடிந்த வக்கிர விளக்கவாத செய்திகள்- – கலை காமம் ஆகி கலவியாகிய நிலை (3)

கலாக்ஷேத்ரா விவகாரம் அரசியலாக்கி, மொழிவெறியாக்கி, ஜாதியத்தில் முடிந்த வக்கிர விளக்கவாத செய்திகள்- – கலை காமம் ஆகி கலவியாகிய நிலை (3)

கலைக்கூடமா, கலவிக் கூடமா?: கலைக்கூடமா, கலவிக் கூடமா? இப்படியெல்லாம் தலைப்பிட்டு செய்திகள். அப்படியென்றால் இவர்களின் இலக்கு யார்? இவர்கள் உண்மையிலேயே கலையில், கலையில் ஈடுபட்டுள்ள பெண்களை மதிப்பதாக இருந்தால், அத்தகைய பெண்களின் புகைப் படங்களை ஒழுங்காக வெளியிடுவார்களா? அவ்வாறு கலவிக் கூடம் எனும் பொழுது, இங்கு படிக்கும் எல்லா மாணவியரையும் அவதூறு பேசுவது ஆகாதா? ஆக, இதில் யாரைத் தாக்குகிறார்கள் என்று தெரிந்தே, யாரையோ தாக்குகிறார்களா? லாஜிக்கே இல்லாமல், இவ்வாறு செய்து, தமது பிராமண துவேசத்தை வெளிப் படுத்திக் கொள்கிறார்களா? ஒருவேளை “திராவிட மாடலில்” இவர்கள் இப்படித்தான் எழுதுவார்கள், செய்தி வெளியிடுவார்கள் போலும்!

மூடி மறைக்கும் பார்ப்பனர்கள்! ஆக, இப்படி பார்ப்பனர்களையும் இழுத்தாகி விட்டது!: ஒரு பக்கம் மலையாளிகளின் ஆதிக்கம், ஆர்.எஸ்.எஸ் ஊடுருவல், என்றெல்லாம் அளந்து, பார்ப்பனர்களையும் சேர்ந்து அடைந்துள்ளது! பிறகு, பார்ப்பனர் அல்லாதவர்களின் கதை என்னவோ?

  • பார்ப்பன லாபி!
  • யார் அந்த பார்ப்பன லாபியில் இருக்கிறார்கள்?
  • பெயர்கள், விவரங்கள் தர முடியுமா?

குற்றவாளிகளுக்கு உடந்தை என்று அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கலாமே? தினம்-தினம் யூ-டியூப்புகள் வந்து கொன்டிருக்கின்றன. வரும் செய்திகளைத் தொகுத்து, தமது பிராமண வெறுப்பைக் கக்கி கொன்டிருக்கின்றன. ஏதோ பார்ப்பனர்கள் தான் எல்லாவற்றிற்கும் காரணம் போன்ற பேச்சுகள், விளக்கங்கள்….ஶ்ரீதேவி என்ற பெண்மணியின் வீடியோக்கள் இந்திய அரசே பார்ப்பனியமயமாகப் பட்டு விட்டது என்று திகவை விட 1000 மடங்கு அதிகமாக கதை விடுகிறார். பொழுது போக்கிற்காக, இதைப் பார்த்து மறந்து விடுவர். இருப்பினும், சித்தாந்த ரீதியில், இப்படி யாரோ தயார் செய்து அரங்கேற்றுகிறார்கள் என்று தெரிகிறது. ஏனெனில், இதெல்லாம் ஒரு தரப்பு பொய்யான-பிரச்சார ரீதியிலான பேச்சுகள். யூ-டியூப் பிரச்சாரம் இப்பொழுது பொழ்து போக்கிற்காக உள்ளது. செல்போனில் பார்ப்பதால், அதிக “வியூவ்ஸ்” கிடைக்கிறது என்று அள்ளி வீசுகின்றனர். இவர்களுக்கு உண்மை, பொறுப்பு, சமூக அமைதி முதலியவற்றைப் பற்றி கவலை இல்லை.

மவுண்ட் ரோட் மஹாவிஷ்ணுவும், காமக்ஷேத்ரமும்:  “காமக்ஷேத்ரவான கலாக்ஷேத்ரா!” என்று அட்டைப் படம் போட்டு, “”நக்கீரன்” விற்கிறது. “பார்ப்பன” டுவிஸ்ட் செய்யலாம் என்றால் கோபாலனுக்கு சந்டோச தான். பார்ப்பன துவேச ரீதியில் இத்தகைய இணைத்தளப் பதிவுகளும் வெளியாகியுள்ளன[1]. “அறம்” என்ற பெயர் இருந்தாலும், அதிலும் பார்ப்பன காழ்ப்பு இருக்கத்தான் செய்திறது[2]. லீலா சாம்சன் டுவிட்டர் பதிவு ஆரம்பித்து, ஒரு கதையைச் சொல்லி, பார்ப்பன கோணத்தில் திரிபு விளக்கம் கொடுத்து வீடியோவையும் போட்டாகி விட்டது. நக்கீரனுக்கு, கோபாலனுக்கு, “பார்ப்பனரான” இந்து-ராம் ஆதரவு கொடுப்பது தெரிந்த விசயம். “ஜார்னலிஸ்டிக்-எதிக்ஸ்” பேசும் என்.ராமுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன? இருப்பினும் “என்.ராம்” போன்றவர்கள் ஆதரவு தருகின்றனர் என்றால், அனைத்தையும் மீறி, ஏதோ ஒன்று அவர்களை பிணைத்துள்ளது என்று தெரிகிறது. ஆமாம், அவர் வீட்டுப் பெண்ணைத் தான் தயாநிதி மாறன் கல்யாணம் செய்துக் கொண்டிருக்கிறார். “சாவிப்’ பிரச்சினை எல்லாம் இங்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை. மாமனார் “மவுண்ட் ரோட் மஹாவிஷ்ணு” என்று நக்கல் அடித்தாலும், மறுமகள் கண்டுகொண்டதில்லை. அதைத்தான் முதலில் “இந்துத்துவ வாதிகள்” வெளிப்படுத்த வேண்டும்.

இந்துத்துவ வெறுப்பு பார்ப்பன வெறுப்பாகி, பிராமண துவேஷமாவதேன்?: வழக்கம் போல,ஆர்-எஸ்-எஸ்- எதிர்ப்பு, பிஜேபி-எதிர்ப்பு, இந்துத்துவ-எதிர்ப்பு, அவாள்- எதிர்ப்பு, பார்ப்பன- எதிர்ப்பு என்றெல்லாம் பதிவுகள் போட்டு, இந்து-விரோத, இந்து-துவேஷ, இந்து-தூஷணங்களில் முடிந்து விடும். அத்தகையோரையும் கண்டு கொள்ளலாம்! “வினவு” போன்ற இந்துவிரோத தளங்கள் விஷத்தைக் கக்குவது தெரிந்த விசயம் தான்[3]. ஏனெனில், அங்கும் அதே ஃபார்புலா தான் பின்பற்றப் படுகிறது[4]. அதாவது, பார்ப்பனத் திரிபு விலக்கத்தை வைத்து, கதையை உருவாக்கி, செய்தியாக்குவது[5]. பிறகு மற்ற ஜாதியினரின் ஆதிக்கம், செல்வாக்கு, முதலியவை வரும்பொழுது, வியாபாரம் கருதி, அமைதியாவது, சரண்டாராகுவது என்று முடிவதும் சகஜமாகிறது[6]. இருப்பினும், அந்த பார்ப்பன தூவேஷப் பதிவு நிலைத்திருக்கும். வேண்டும் என்றால் பிராமணர்களை முக்கியமான வேலைக்கும் வைத்துக் கொள்வார்கள். ஆனால், வெளியில் அவர்களை வசைப் பாடுவார்கள். இது “சன்’ குழுமத்திலேயே கவனிக்கலாம்.

பார்ப்பனிய வாதமும், குஷ்பு பதிலும்: இந்நிலையில் ட்விட்டரில் ரத்தினவேலு வசந்தா என்ற பெயரில் செயல்படும் ஒருவர், நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவை டேக் செய்து, ‛‛இன்று வீட்டு கடனுக்கான வட்டி அதிகமாகியுள்ளது. கலாசேத்ராவில் பார்ப்பன ஆசிரியர்களின் பாலியல் தொந்தரவை எதிர்த்து மாணவிகள் போராடுகின்றனர். மகளிர் ஆணைய உறுப்பினர் ஆன நீங்கள் என்ன செய்கிறீர்கள்,” என கேள்வி எழுப்பியதோடு மேலும் சில வார்த்தைகளை காட்டமாக தெரிவித்து இருந்தார்[7]. இதற்கு உடனடியாக குஷ்பு பதிலடி கொடுத்தார். அதாவது, ‛‛நீங்கள் எவ்வளவு விரக்தியில் இருக்கிறீர்கள். முதல்வர் உங்களுக்கு ஏதாவது வேலை ஒதுக்கீடு செய்ய வண்டும். நீங்கள் கேள்விகள் கேட்பதற்கு முன்பு சட்டம் அல்லது தேசிய மகளிர் ஆணையம் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் வயதுக்கு மரியாதை உண்டு. அதுவும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வரும். dravidan Stockகளிடம் இருந்து சில சிறந்த உணர்வுகளை எதிர்பார்ப்பது என்பது என் மீதான தவறு தான். உங்களிடம் இருந்து சிலவற்றை கற்று கொள்ள வேண்டியுள்ளது. உங்களை போல் நானும் சொன்னால் அது அவமரியாதையாக இருக்கும். எனவே கடவுள் ஆசீர்வாதம் கிடைக்கட்டும் என கூறுகிறேன்,” என விமர்சனம் செய்திருந்தார்[8].

லாஜிக்கே இல்லாத வாத-விவாதங்கள் தொடர்கின்றன, அரங்கேறுகின்றன: லாஜிக்கே இல்லாத அதாவது தர்க்கத்தில் காரணம், நியதி, முறை, உண்மை, ஏற்புடைத் தன்மை என்று எதையும் பின்பற்றாமல், வாதங்கள் முன்வைக்கப் படுகின்றன:

  • பிராமணரை எதிர்க்கவில்லை, பிராமணத்துவத்தை எதிர்க்கிறோம்
  • இந்தியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பை எதிர்க்கிறோம்
  • இந்துக்களை எதிர்க்கவில்லை, எங்கள் கட்சியிலும் இந்துக்கள் இருக்கிறார்கள்.
  • சனாதனத்தை வேரறுப்போம், இந்துத்துவத்தை கருவறுப்போம் என்றால் குற்றமில்லையா?
  • மத்திய அரசை வெறுக்கிறோம், ஒன்றியத்தை ஆதரிக்கிறோம்.
  • திராவிட இனம், இனத்துவம், முதலியவற்றை நம்புவோம் என்றால், திராவிட இனவெறி, இனவெறித்துவ செயல்பாடுகள் முதலியவற்றை ஆதரிப்பது எப்படி?

இதில் ஏதோ பெரிய லாஜிக் இருப்பது போல பேசுகிறார்கள், ஆனால், இவையெல்லாம் ஒன்றுமே இல்லாத, அர்த்தமற்ற, அபத்தமான வெற்றுப் பேச்சுகள் தாம்.

  1. எக்ஸை ஆதரிக்கிறோம், ஆனால் அதன் தீவிரவாதத்தை எதிர்க்கிறோம்
  2. எக்ஸை போற்றுகிறோம், ஆனால், அதன் அடிப்படைவாதத்தை வெறுக்கிறோம், அதனால் கருவறுப்போம்.
  3. எக்ஸை ஆதரிக்கிறோம், ஆனால் அதன் பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம்

என்று சொல்ல மாட்டார்கள், ஏனெனில், அவர்களுக்கு உண்மை எது, பொய்மை எது என்பது. பிறகு அவ்வாறு பேச வேண்டிய அவசியம் என்ன? மக்களை ஏமாற்ருவதர்குத் தான்.

© வேதபிரகாஷ்

09-04-2023


[1] அறம், கலாஷேத்திராவா? காமஷேத்திராவா?, -சாவித்திரி கண்ணன், April 2, 2023

[2] https://aramonline.in/12972/kalakshetra-student-protest/

[3] வினவு, கலாஷேத்ரா: ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கிரிமினல் கூடாரங்களே! | மக்கள் அதிகாரம் கண்டனம், By மக்கள் அதிகாரம் -April 1, 2023

[4] https://www.vinavu.com/2023/04/01/arrest-kalakshetra-management-peoples-power-condemnation/

[5] தமிழ்.ஒன்.இந்தியா, கலாஷேத்ரா..தவறான தகவல் பரப்பாதீர்கள்..கூடுதல் ஆணையர் வேண்டுகோள்..மாநில மகளிர் ஆணைய தலைவர் விசாரணை, By Jeyalakshmi C, Published: Friday, March 31, 2023, 11:46 [IST]

[6] https://tamil.oneindia.com/news/chennai/don-t-spread-wrong-information-about-kalakshetra-says-chennai-additional-commissioner-of-police-505302.html

[7] தமிழ்.ஒன்.இந்தியா, வயதுக்கு தான் மரியாதை.. ட்விட்டரில் திடீரென டென்ஷனான நடிகை குஷ்பு.. கடும் விமர்சனம்.. என்னாச்சு? By Nantha Kumar R Updated: Friday, March 31, 2023, 20:34 [IST]

[8] https://tamil.oneindia.com/news/chennai/actress-and-ncw-member-khushbu-attacks-who-trolled-her-on-the-row-of-kalakshetra-harassment-issue-505385.html

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக