Archive for the ‘மதம் மாற்றம்’ Category

திராவிட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், ஸ்டாலினை ஏசுவாக்கிய படலம், உதயநிதியின் நான் கிறிஸ்துவன் பிரகடனம், பெரியாரிஸ அல்லேலூயா கோஷங்கள்! (3)

திசெம்பர் 23, 2022

திராவிட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், ஸ்டாலினை ஏசுவாக்கிய படலம், உதயநிதியின் நான் கிறிஸ்துவன் பிரகடனம், பெரியாரிஸ அல்லேலூயா கோஷங்கள்! (3)

Udhyanidhi declared that he is a Christian, as he is married to a woman who is a Christian..

He was reportedly blessed by a priest when he contested for election inside a Triplicane church, Chennai during 2021

The Tamil press cutting mentioning the details……….a special prayer was also conducted…….

Then, it has become news started appearing in all other media in different languages.

22-12-2022 – உதயநிதிஇன்னும் சொல்ல போனால் நானும் கிறிஸ்தவன் தான். கிறிஸ்தவன் என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்: அப்போது பேசிய அவர், “திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன? சொல்றேன் கேளுங்க.. ஒரு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்அல்லேலுயாஎன சொல்லி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் எப்போதுமே மாலையும் கழுத்துடன் தான் இருப்பார் ஆனால் அவர் கிறிஸ்தவ நிகழ்ச்சிக்கும் செல்வார். இஸ்லாமிய நிகழ்ச்சிகளுக்கும் செல்வார். இதுதான் சமூக நிதி ஆட்சி. இதுதான் பெரியார், கலைஞர் கற்றுக்கொடுத்தது. அந்த ஆட்சியைதான் முதலமைச்சர் மு..ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார். இன்னும் சொல்ல போனால் நானும் கிறிஸ்தவன் தான்[1]. கிறிஸ்தவன் என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்[2]. சேகர்பாபு  அல்லேலுயானு சொல்றாரு. உதயநிதி ஸ்டாலின் போய்ட்டு கிறிஸ்தவனு சொல்றாருனு இன்று எல்லா சங்கிகளுக்கும் எரியும்[3]. நான் எழும்பூரில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில்தான் படித்தேன்[4]. லயோலா கல்லூரியில்தான் படித்தேன்[5]. நான் காதலித்து மனந்தது ஒரு கிறிஸ்தவ பெண்[6]. கடந்த 4 நாட்களாக பத்திரிக்கையாளர்களுக்கு நான் தான் தீனியாகி கொண்டிருக்கிறேன். முதலில் அமைச்சர் பொறுப்பு கொடுக்கும்போது எனக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஆனால் என்னை வழிநடத்த அமைச்சர் சேகர்பாபு போன்ற பல அண்ணன்கள் அமைச்சரவையில் இருப்பதால் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்,” என தெரிவித்தார்.

தீவிரவாதம்-பயங்கரவாதங்களை மறைக்க விழாக்களா?: யார் வேண்டுமானாலும், என்ன மதத்தையாவது பின் பற்றலாம், அதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை, கவலைப் படுவதில்லை என்றே சொல்லலாம். முகலாயர்கள், முஸ்லிம்கள், துலுக்கர் என்று கோவில்களை இடித்து, இதுக்களின் வழிபாடுகளில் இடைஞ்சல் செய்த வரை அவர்களை இந்துக்கள் கண்டுகொள்ளவில்லை எனலாம். அவர்களை கொள்லைக் காரர்கள், கொலைக்காரர்கள், கொடியவர்கள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று தான் நினைத்துக் கொண்டார்கள், பிறகு எச்சரிக்கையாகில் கோவில்களை மாற்றிக் கட்டிக் கொண்டார்கள். கோவாவில் ஆரம்பித்த கிருத்துவர்களின் அதை விட மோசமான குரூரங்கள், காலிகட்டிலும் தொடர்ந்தது. பிறகு ஆங்கிலேயர் காலத்தில் கொஞ்சம் குறைந்து அளவில், ஆட்சி-அதிகாரத்துடன் செயல்பட்டு வந்தது. சுதந்திரத்திற்கு பிறகு, அதே கோஷ்டிகள், பலவித பேனர்களில், கட்சிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. செக்யூலரிஸம் அவர்களுக்கு, ஒரு பாதுகாப்பான கவ்சம் போல அமைந்ஹு விட்டது. இப்பொழுது, இந்துவிரோத திமுக அத்தகைய திட்டத்துடன், சூழ்ச்சிகளுடன் செயல்பட்டு வருகிறது. அது 1967-1970களிலிருந்து நடந்து வந்தாலும், இப்பொழுது அதிகமாகி விட்டது. கோவை கார் குண்டு, மங்களூரு குக்கர்-வெடிகுண்டு எல்லாம் மறந்தாகி விட்டது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தான் பெரிதாகி விட்டது.

உதயநிதிநான் கிறிஸ்துவன் பேச்சுஅலசல்; செக்யூலரிஸ நாட்டின், மாநில அமைச்சர், முதலமைச்சர், எம்பி, எம்.எல்.ஏ எல்லாம் எந்த அளவுக்கு தங்களது பேச்சை பேச முடியும். அவர்களுக்கு வரையறை, கட்டுப்பாடு உண்டா-இல்லையா என்று அலசவேண்டியுள்ளது:

1. உதயநிதி- இன்னும் சொல்ல போனால் நானும் கிறிஸ்தவன் தான் . கிறிஸ்தவன் என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்…..

2. உதயநிதி – நான் காதலித்து மனந்தது ஒரு கிறிஸ்தவ பெண்……உதயநிதி ஸ்டாலின் போய்ட்டு கிறிஸ்தவனு சொல்றாருனு இன்று எல்லா சங்கிகளுக்கும் எரியும்……

3. அதெல்லாம் சரிதான், ஆனால், இந்துவிரோதமாக இருப்பதில் தான் உங்களது திராவிடத்துவ முகமுடி கிழிகிறது. இந்து தூஷணம் மெய்ப்பிக்கிறது…

4. ஒரு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அல்லேலுயா என சொல்லி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தால் அது போலித்தனமே, செக்யூலரிஸம் இல்லை!

5. அவர் எப்போதுமே மாலையும் கழுத்துடன் தான் இருப்பார் ஆனால் அவர் கிறிஸ்தவ நிகழ்ச்சிக்கும் செல்வார். இஸ்லாமிய நிகழ்ச்சிகளுக்கும் செல்வார் என்றா, அதுதான் சமூக நிதி ஆட்சி ஆகும்..

6. உதயநிதி தைரியமாக நான் கிறிஸ்தவன் என்று அறிவித்தது போல, அந்த பிரியாவும் செய்வாரா? பெரியார் வழி பின்பற்றுவாரா?

7. பெட்ரென்ட் ரஸல் – நான் ஏன் கிறிஸ்தவன் இல்லை; உதயநிதி – நான் ஒரு கிறிஸ்தவன்;

இது பகுத்தறிவா, பெரியாரிஸமா, திருவிடத்துவமா, எது?

8. பெரியார் சுயமரியாதை பிரச்சார கழகம் அதே போல குறும் புத்தகம் வெளியிட தைரியம் உண்டா? திராவிட ஆராய்ச்சி மையம் கவனிக்குமா?

9. இங்கு ஒரு இந்து போலி வந்து அரசியல் பேச மாட்டேன் என்று, பேசியிருக்கிறது.

அது போல, கிறிஸ்த்துவ-முகமதிய மாடல்கள் வருவதில்லையே?

10. ஆக, நாத்திக + பெரியாரிஸ + முகமதிய + கிறிஸ்துவ + கம்யூனிஸ + திராவிடத்துவ + மற்ற வகையாறாகள் = இந்துவிரோதம் என்றாகிறது!

11. திராவிட மாடல் ஆட்சி என்று, திராவிட ஸ்டாக் என்றும் சொல்லிக் கொள்ளும் இந்த வகைறாக்கள் செக்யூலரிஸ நாட்டில் மாநில அமைச்சராக இருப்பது விஷேசம் தான்!

கிருத்துவன், துலுக்கன் தனது மதங்களைப் போற்றும் போது, “சைவன்என்று சொல்லிக் கொண்டு, எப்படி இந்து மதத்தை தூஷிப்பான்?: துலுக்கரும், கிருத்துவரும் எத்தனை கோவில்களை இடித்தனர் என்பது தெரிந்த விசயம்! திராவிட நாத்திக இந்து-விரோத ஆட்சியில் எத்தனை கோவில்கள் சிதிலமடைந்தன, சிலைகள்-விக்கிரங்கள் களவாடப் பட்டன என்பதும் தெரியும். பிறகு இந்த பட்டை-கொட்டை-காவிகள் ஏன் அத்தகைய விழாக்களில் கலந்து கொள்கின்றனர்?  இவர்கள் உண்மையில் இந்துக்களா, சைவர்களா, வேடதாரிகளா, யார்? இத்தகைய கேள்விகள் எழத்தான் செய்கின்றன. வேண்டுமென்றே, இத்தகையோரை ஏற்பாடு செய்து, கூட்டி வந்து, பேச வைத்துள்ளனர் என்று தெரிகிறது. கிருத்துவன் கிருத்துவனாக பேசி, தன் மதத்தைப் போற்றினான்/, துலுக்கனும் அவ்வாறே தனது மதத்தை விட்டுக் கொடுக்கவில்லை. ஆனால், “சைவர்” என்று சொல்லிக் கொண்டு, சிலர் இவ்வாறு சரித்திரம், மதம், மற்றும் எந்த ஆதாரங்களும் இல்லாமல் பேசியிருப்பது, திட்டமிட்ட செயல் என்றேயாகிறது. ஒரு உண்மையான “சைவனாக,” இருந்தால் கூட, இவ்வாறு மானம்-ரோசம்-சூடு-சொரணை இல்லாமல் பேசியிருக்க மாட்டான். ஆக, இந்துக்கள் அடிமையாக இருக்கத் தயாராகிறான் என்றே, இதைக் காட்டுகிறது.

கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் கெட்ட எண்ணங்கள் எதனைக் காட்டுகிறது?: “கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம்,” என்ற பெயரை வைத்துக் கொண்டு, அநாகரிகமாக, கீழ்த்தரமாக, முறையற்ற விதங்களில் எப்படி கிருத்துவ-துலுக்க மதத் தலைவர்கள், இந்து விரோத பேச்சுகளை ஊக்குவித்தார்கள்? பொறுப்புள்ள தலைவராக இருந்திருந்தால், ஸ்டாலின், அவ்வாறு பொறுத்திருப்பாரா? பிறகு, செக்யூலரிஸ அளவுகோலை பயன்படுத்தினாலும், தமிழகத்தை ஆளத் தகுதியற்றவராகிறாரே?  சிறுபான்மையினருக்கு, இதெல்லாம் செய்யப் பட்டது, என்று பட்டியல் இடும் ஸ்டாலின், இந்துக்களுக்கு என்ன செய்யப் பட்டது என்று சொல்ல முடியவில்லையே. கடந்த 70 ஆண்டுகளில், கோவில்களைக் கொள்ளையடித்தது, சிலைகள்-விக்கிரங்களைத் திருடி விற்றது, மடங்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தது, பட்டா போட்டு சொந்தமாக்கிக் கொண்டது, விற்றது என்று தான் இன்று வரை நடந்து வருகிறது. அந்நிலையில், திராவிடக் கட்சிகளுக்கு, ஆட்சிக்கு வருவது அல்லது ஆசைப் படுவதே, கேடுகெட்ட செயலாகிறது.

பாரபட்சமிக்க, அரசியல் நிகழ்சியாக இருந்தது: இனிகோ இருதயராஜ் தனது பேஸ்புக்கில் இந்த விழாவைப் பற்றிய விவரங்களைக் கொடுத்துள்ளார். புகைப்படங்களையும் போட்டுள்ளார். மேற்குறிப்பிட்ட முக்கிய பிரமுகர்களை நேரில் சென்று, பொன்னாடைப் போர்த்தி, அழப்பிதழ் கொடுதது, வரவேற்றப் புகைப்படங்களையும் போட்டுள்ளார். இந்த அளவுக்கு, விழா நடத்தவும், நிதி இருப்பதும் தெரிகிறது. கத்தோலிக்க சபையின் முழு ஆதரவுடன் நடைபெறுவதும் தெரிகிறது. ஆகவே, கலந்து கொண்ட பேச்சாளர்களுக்கு, பண முடிப்பு, வந்து போக செலவு முதலியவை கொடுப்பதற்கு, எந்த பிரச்சினயும் இல்லை. உண்மையிலேயே, அவர்கள் “நல்லெண்ணத்துடன்” விழா நடத்தினால், மற்றவர்களையும் அழைத்திருலாம். ஆனால், ஒரே நாளில், அதிமுக மற்றும் திமுக தலைவர்கள் தனித்தனியாக, கிறிஸ்துமஸ் விழாக்களில் கலந்து கொண்டதே, இது அரசியமாக்கப் பட்ட நிலையை வெளிக்காட்டுகிறது.

© வேதபிரகாஷ்

22-12-2022


[1] தினத்தந்தி, நானும் கிறிஸ்தவன் தான்” “இத சொன்ன அவங்களுக்கு எரியும்“-உதயநிதி பரபரப்பு பேச்சு, By தந்தி டிவி, 22 டிசம்பர் 2022 9:32 PM.

[2] https://www.thanthitv.com/latest-news/dmk-minister-udhayanidhistalin-speech-157328

[3] தினத்தந்தி, நானும் கிறிஸ்தவன் தான்“.. “இத சொன்னா அவங்களுக்கு எரியும்“.. உதயநிதி பரபரப்பு பேச்சு, தினத்தந்தி டிசம்பர் 22, 11:17 pm (Updated: டிசம்பர் 22, 11:21 pm)

[4] https://www.dailythanthi.com/News/State/i-am-also-a-christian-udhayanidhi-sensational-speech-863391

[5] டாப்.தமிழ்.நியூஸ், நானும் கிறிஸ்தவன் தான்உதயநிதி ஸ்டாலின், By AISHWARYA G Thu, 22 Dec 202210:10:52 PM.

[6] https://www.toptamilnews.com/thamizhagam/Udhayanithistalin-press-meet/cid9527250.htm

விஜயவாடா துர்கை அம்மன் 2021 தசரா விழாவில், கிறிஸ்தவ மத பிரச்சார நிகழ்ச்சி ஒளிபரப்பியது!

ஒக்ரோபர் 10, 2021

விஜயவாடா துர்கை அம்மன் 2021 தசரா விழாவில், கிறிஸ்தவ மத பிரச்சார நிகழ்ச்சி ஒளிபரப்பியது!

ஆந்திர துர்க்கை அம்மன் கோவிலில் தசரா விழா: ஆந்திர மாநில விஜயவாடாவில் 07-10-2021 வியாழக்கிழமை அன்று இரவு ‘இந்திர கீலாத்ரி’ என்றழைக்கப்படும் கனக துர்கையம்மன் கோயிலில் விசாச பூஜை, அலங்காரம், தசரா பண்டிகை தொடக்க நிகழ்ச்சி முதலியவை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டன, கொண்டாடப் பட்டு வருகின்றது. இதில் துர்கையம்மன் தங்க கவச அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தசரா பண்டிகையையொட்டி, விஜயவாடா கனகதுர்கையம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை 08-10-2021 அன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வழக்கத்திற்கு மாறாக அதிக கூட்டம் வர ஆரம்பித்தது. கொரோனா தொற்றால், சுமார் இரண்டு வருடங்களுக்கு கட்டுப் பாடுகள் இருந்ததால், பக்தர்கள் எல்லோரும் கோவில்களுக்கு செல்ல முடியாத நிலையும் இருந்தது. இதனால், வந்த கூட்டத்தைக் கட்டுப் படுத்த, ஐந்து வரிசைகளில் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதனால், பக்தர்கள் தொலைவில் இருந்து பார்க்க வசதி செய்யப் பட்டது.

தொலைவிலிருந்து பார்க்க, மின்னணு திரை வசதி செய்யப் பட்டது: இதனிடையே, கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகள், விஐபிக்கள் வருகை, ஏற்பாடுகளை விவரிக்க தேவஸ்தானம் சார்பில் ஆந்திர அரசு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை (The I&PR department) ஆங்காங்கே கிருஷ்ணா நதிக்கரையில் (near the road on Krishna riverbank) தனியார் சி-செனல் மூலம் ராட்சத தொலைக்காட்சிகள் அமைக்கப்பட்டு[1], மின்னணு சாதண திரைகளை வைத்து (LED screens) நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது[2]. கோயிலுக்கு சென்று வந்த பக்தர்களும், வெளியில் காத்திருப்போரும் தொலைக்காட்சி வழியாக அம்மனை தரிசித்து வந்தனர். வெளியில் திரையில் காட்டப் பட்ட தரிசனத்தையும் கண்டு வந்தனர். அப்போது திடீரென எந்தவித சம்பந்தமும் இல்லாமல், வேற்று மத பிரச்சாரம் ஒளிபரப்பப்பட்டது[3], என்று தமிழ்.இந்து. பெய்ரைக் குறிப்பிடாமல் செய்தியை வெளியிட்டுள்ளது. இதனை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 15 நிமிடங்கள் வரை வேற்று மத பிரச்சாரம் நடத்தப்பட்டது[4]. “டெக்கான் குரோனிகல்” என்ற நாளேடு, “கிறிஸ்தவ நிகழ்ச்சி” என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டது. அதன் பின்னர் மீண்டும் அம்மன் வழிபாட்டை நேரடியாக ஒளிபரப்பினர்.

பக்தர்களின் வசதிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட மின்னணு திரை வண்டிகளில் கிறிஸ்தவ நிகழ்ச்சி ஓலிபரப்பியது[5]: திடீஎன்று கிருத்துவ நிகழ்ச்சி ஒலிபரப்பாகி, 15 நிமிடங்கள் ஓடியதால், ஒன்றும் புரியாத பக்தர்கள் திகைத்தனர்[6]. அது முழுக்க கிருத்துவப் பிரச்சார ஒலீபரப்பாக இருந்தது. நிச்சயமாக அது வேண்டுமென்றே செய்தசெயலாக இருந்தது. பிறகு சுதாரித்துக் கொண்டு, பக்தர்கள் கேட்க ஆரம்பித்தனர். வண்டியில் மற்றும் அருகில் இருந்த ஒளிபரப்பு நிலைய ஊழியர்கள் சரியாக பதில் சொல்லவில்லை. எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றும் சாதித்தனர். ஆனால், ஆயிரக் கணக்கான மக்கள் அதனைப் பார்த்துள்ளனர். செல்போன் மூலம், படமும் எடுத்துள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் சிலர் புகார் கொடுத்தனர். முதலில் எதிர்த்த போதும், நிறுத்தாதலால், சிலர், திரைகளை தாக்கினர்[7]. இது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவில் நிர்வாக அதிகாரி, டி.பிரமரம்ப பொலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். Section 295 (A) of IPC கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது[8].

விஜயவாடாவில் கிறிஸ்தவர்களின் அட்டகாசம்: விஜயவாடாவில் கிருத்துவ இயக்கங்களின் எண்ணிக்கை, தாக்கம், அதிகாரம், பணபலம் முதலியவை அதிகமாகி விட்டன. ஆந்திராவின் தலைநகர் என்ற முறையில் நகரமயமாக்கம் மற்றும் கட்டுமானங்கள் அதிகமாக நடந்து வருகின்றன. அவற்றில் கிருத்துவர்கள் அதிகமாக பங்கேற்று வியாபார ரீதியில் லாபம் சம்பாதித்து வருகிறார்கள். அரசு மற்றும் அரசுத் துறைகளில் இருக்கும் கிருத்துவ அதிகாரிகளும் இதற்கு அதிகமாகவே ஒத்துழைப்பு செய்து வருகிறனர். எல்லோருக்கும் பரஸ்பர முறைகளில் பலன்கள் கிடைத்து வருகின்றன. ஜகன்மோகன் ரெட்டி பதவிக்கு வந்த பிறகு, கிருத்துவர்களின் ஆதிக்கம் மற்றும் அட்டகாசம் அதிகமாகி விட்டது. சென்ற வருடங்களில் இந்து கோவில்கள் தாக்கப் பட்டன, எரியூட்டப் பட்டன. அக்குற்றங்களில் கிருத்துவ பாதிரியும் சிக்கினான். ஆனால், அத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இப்பொழுது, இவையெல்லாம், வெளிப்படையாகவே பேசப் படுகின்றன. கனகதுர்க்கை அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள முக்கியமான சர்ச்சுகள் என்று பட்டியலிட்டு, இணைதளத்தில் விளம்பரம், விவரங்கள் கொடுக்கப் பட்டுள்ளன[9].

ஆந்திரா கிறிஸ்தவர்களின் தாக்குதலில் உள்ளது: டிடிடி-திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஊழியர்களில் கிருத்துவர்கள் ஏன் முஸ்லிம்கள் கூட வேலை செய்து வருகிறார்கள்.

  1. திருப்பதியில் புதியதாக சர்ச்சுகள் பல கட்டப் பட்டு, பிரச்சாரம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
  2. திருமலைக்கு வரும்பக்தர்களிடம் நோட்டீஸுகள் / மத பிரச்சார துண்டு பிரசுரங்கள்கொடுப்பது, விநியோகம் செய்வது என்பதை பஸ்-ஸ்டேன்ட், அலிபிரி வரிசை, போன்ற இடங்களில் செய்துள்ளனர்.
  3. திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் திருப்பதி தேவஸ்தான பேருந்து பயணச் சீட்டின் பின்புறம் கிறிஸ்தவ மதமாற்ற வாசகங்களை அச்சடித்து ஏழுமலையான் பக்தர்கள் கையில் திணித்தனர். 
  4. சப்தகிரி போன்ற இதழ்கள் தபால் மூலம் விநியோகம்செய்யும் போது, கிருத்துவ பிரச்சார நோட்டிஸுகள், குறும்புத்தகங்களையும் சேர்த்து அனுப்பப் பட்டுள்ளன.
  5. சமீபத்தில் திருப்பதி கோயிலுக்கு 17 பேர் அடங்கிய அறங்காவலர் குழுவை ஆந்திர பிரதேச அரசு நியமித்தது. அதில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ அனிதாவும் இடம் பெற்றிருந்தார்.
  6. திருப்பதி கோயிலின் ஊழியர்களில் 43 பேர் வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியது. பெயரை மட்டும் மாற்றாமல் ஹிந்து பெயர்களிலேயே இருந்து வருகிறார்கள்.
  7. தேவஸ்தானம் நடத்தும் ஒரு பெண்கள் கல்லூரியின் முதல்வராக ஒரு கிறிஸ்தவ பெண்மணி நியமிக்கப்பட்டார். அவர் வகுப்பறைகளில் இருந்த வெங்கடாசலபதி படங்களை அகற்றிவிட்டு ஏசுநாதர் படங்களை மாட்டினார். ஹிந்துக்களின் எதிர்ப்பு காரணமாக அவர் மாற்றப்பட்டார்.
  8. திருப்பதி தேவஸ்தான அதிகாரப்பூர்வ இணையதளத்தில், “இயேசு உங்களிடம் அன்பு செலுத்துகிறார்”, “இயேசு உங்களை வழி நடத்துகிறார்”, “இயேசு உங்களுக்காகவே மன்றாடுகிறார்” என்ற கிறிஸ்தவ மத மாற்ற பிரச்சாரத்தை வெளிப்படையாக அரங்கேற்றி உள்ளனர்.
  9. இதே முறைதான் இப்பொழுது விஜயவாடாவிலும் கையாளாப் பட்டு வருகின்றது.

ஜனவரி 2021 முதல் விஜயவாடாவில், பல கோவில்கள் தாக்கப் பட்டு 175 சிலைகள் சேதப் படுத்தப் பட்டுள்ளன: வரை ஆந்திராவில் தற்போது, ஹிந்து கோவில்களை மையமாக வைத்து, அரசியல் சூறாவளி சுழன்றடிக்க துவங்கி உள்ளது. கோவில்களில், சுவாமி சிலைகள் சேதப்படுத்தும் சம்பவம், தொடர் கதையாகி வருகிறது. கோவில்களை பாதுகாக்க, ஆளும் கட்சி தவறி விட்டதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தான் செய்து வரும் வளர்ச்சிப் பணிகள் மீது, மக்களின் கவனம் செல்வதை தடுக்க, எதிர்க்கட்சிகள் பின்னும் வலை தான், இந்த சிலைகள் உடைப்பு என, ஆளும் கட்சியினர் கூறுகின்றனர். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, முதல்வராக பொறுப்பேற்ற பின், ஹிந்து கோவில்களின் கருவறையில் உள்ள சிலைகள், கோபுரத்தில் உள்ள சிலைகள், சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்படுவது, தொடர் கதையாகி வருகிறது. இதுவரை, 175 சிலைகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.ஜெகன்மோகன் ரெட்டி அரசு பதவியேற்ற பின், ஆந்திராவில் மதமாற்றங்களும், கோவில்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வருவதாக, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இதில் தொடர்புடைய பாதிரியார் உட்பட, 25 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

09-10-2021


[1] Hans News Service,   Vijayawada: Propaganda of other religion at Durga temple sparks row, 9 Oct 2021 1:42 AM IST.

[2] https://www.thehansindia.com/news/cities/vijayawada/vijayawada-propaganda-of-other-religion-at-durga-temple-sparks-row-710117

[3] தமிழ்.இந்து, தசரா ஒளிபரப்பில் வேற்றுமத பிரச்சாரம்: விஜயவாடா கோயிலில் பக்தர்கள் அதிர்ச்சி, செய்திப்பிரிவு, Published : 09 Oct 2021 03:10 AM, Last Updated : 09 Oct 2021 07:08 AM.

[4] https://www.hindutamil.in/news/india/724664-furore-after-non-hindu-video-played-at-durga-temple.html

[5] ANI | Andhra Police files case on Christian preaching telecasted on video wall meant for screening Dussehra celebrations in Vijayawada,  Updated: Oct 08, 2021 23:48 IST

[6] https://www.aninews.in/news/national/andhra-police-files-case-on-christian-preaching-telecasted-on-video-wall-meant-for-screening-dussehra-celebrations-in-vijayawada20211008234831/

[7] DECCAN CHRONICLE, Telecast of Christian programme near Durga temple raises a storm, DC CORRESPONDENT, PublishedOct 9, 2021, 1:27 am ISTUpdatedOct 9, 2021, 7:06 am IST

[8] https://www.deccanchronicle.com/nation/in-other-news/091021/telecast-of-christian-programme-near-durga-temple-raises-a-storm.html?utm_source=latestPromotion&utm_medium=end&utm_campaign=latest

[9] https://heychurches.in/Vijayawada/Vijaywada_Kanaka_Durga_Temple/

கிறிஸ்துமஸ் விழாவில், இந்து தூஷணம் அரங்கேறியது எப்படி? கிருத்துவ-துலுக்க-நாத்திகக் கூட்டணி ஏன் இந்து-விரோதமாகச் செயல்படுகிறது? (1)

திசெம்பர் 24, 2020

கிறிஸ்துமஸ் விழாவில், இந்து தூஷணம் அரங்கேறியது எப்படி? கிருத்துவதுலுக்கநாத்திகக் கூட்டணி ஏன் இந்துவிரோதமாகச் செயல்படுகிறது? (1)

கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா (20-12-020): சென்னை மயிலாப்பூரில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட அனைத்து மதத் தலைவர்களும் கலந்துகொண்ட ‘ஒன்றிணைக்கும் கிறிஸ்துமஸ்’ நிகழ்ச்சி 20.12.2020 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30p.m மணிக்கு சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில், நடைப்பெற்றது,[1]என்று செய்திகள் வெளிவந்தன. இதைப்பற்றி, முன்னமே ஊடகங்கள் “விளம்பரம்” போன்று செய்திகளை வெளியிட்டது[2]. இனிக்கோ இருதயராஜ் இந்த அமைப்பை நடத்தி வருகிறார்[3]. ஒவ்வொரு வருடமும், இவ்விழாவை நடத்தி வருகிறார்[4], என்ற விவரங்களையும் வெளியிட்டன. கீழ்கண்டவர்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து, வரவேற்றிருக்கிறார், என்பது, அவரது பேஸ்புக் பதிவுகளிலிருந்து தெரிகிறது[5].

  1. கத்தோலிக்க சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி
  2. தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம் முன்னாள் பேராயர் தேவசகாயம்
  3. சென்னை மயிலை உயர்மறைமாட்ட முன்னாள் பேராயர் A.M. சின்னப்பா
  4. பேந்தகோஸ்தே திருச்சபை மாமன்ற பிரதம பேராயர் சார்லஸ் பின்னி ஜோசப்
  5. மு.க. ஸ்டாலின், திமுக தலைவர்
  6. சற்குரு பாலயோகி சுவாமிகள் திருமடம், தவத்திரு.குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள்
  7. தமிழ்நாடு அரசு தலைமை காஜி மௌலவி “அப்லளுள் உலமா” முப்தி  ஸலாஹுத்தீன் முஹம்மத் ஐயூப்.
  8. தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லவி.அல்ஹாஜ் P.A. காஜா முயீன்னுத்தீன் பாகவி
  9. கே.என்.நேரு.

இவ்வாறு , லட்சக் கணக்கில் செலவழித்து, ஒரு விழா நடத்தப் பட்டிருக்கிறது. ஆனால், விளைவுகள் எப்படியிருக்கும் என்று பார்க்க வேண்டும்.

இனிக்கோ இருதயராஜ் கத்தோலிக்கப் பாதிரியின் மகன்: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்துள்ள இடைக்காட்டூர் என்ற கிராமத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர் இனிகோ இருதயராஜ்[6]. சிறுவயதிலேயே திருச்சி ஜோசப் கல்லூரியில் உள்ள பேராலயத்திற்கு அவருடைய தந்தை உபதேசியார் பணியமர்த்தப் பட்டதால் சொந்த ஊரைவிட்டு திருச்சி மேலசிந்தாமணி பகுதிக்கு குடிபெயர்ந்தார்கள்.  பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்த இனிகோ இருதயராஜ், கார்மெண்ட்ஸ் தொழிலில் நுழைந்து இன்றுவரை கார்மெண்ட்ஸ் தொழிலில் ஏற்றுமதி – இறக்குமதி செய்து வருகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு சென்னை மயிலை உயர் மறை மாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா என்பவரின் ஆலோசனைக்கு இணங்க கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார்[7]. அதன் தலைவராக இருக்கக்கூடிய இனிகோ இருதயராஜ், தற்போது தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தினுடைய கிளைகளை துவங்கி செயல்படுத்தி வருகிறார். ஒவ்வொரு வருடமும் கிறிஸ்து பிறப்பு விழாவை மிகப் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்து, அதில் முதல் 8 ஆண்டுகள் தி.மு.க. தலைவர் கலைஞரை சிறப்பு அழைப்பாளராக அழைத்து அவரை கௌரவப்படுத்தி கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினார்கள். அடுத்த மூன்று வருடங்கள் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை அழைத்து இந்த கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடி வருகின்றார்கள். 

இனிகோ வீடு, கம்பெனிகளில் ஒழிப்புத் துறையினர்ரெய்டு‘ (2011)[8]: நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் இனிகோ இருதயராஜ், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவராக இருக்கிறார். தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான இவர், 2011களில், முன்னாள் அமைச்சர் அன்பரசனுடன் நிகழ்ச்சிகளில் அடிக்கடி காணப்பட்டார். ஸ்டாலினுடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, கடந்த டிசம்பர் மாதம் 2019 கிறிஸ்துமசை ஒட்டி, அப்போதைய முதல்வர் கருணாநிதியை வைத்து பெரிய விழா ஒன்றையும் நடத்தினார். அன்பரசன் வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர். அப்போது, இனிகோ இருதயராஜ் தொடர்பான சில ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, திடீரென நீலாங்கரையில் உள்ள இனிகோ இருதயராஜ் வீட்டில், லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., திருநாவுக்கரசு தலைமையில் போலீசார், அதிரடியாக சோதனை நடத்தினர். சோதனையின் போது, தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட கிறிஸ்துமஸ் விழாவிற்கான நிதி எங்கிருந்து வந்தது, யாரிடம் இருந்து பெறப்பட்டது, தி.மு.க.,வில் யாராவது இதற்கு பணம் கொடுத்தார்களா? என்ற கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கான ஆவணங்கள் பெற்றதாக கூறப்படுகிறது[9]. அங்கு சோதனை நடத்தி, ஆவணங்களை கைப்பற்றிய பின், தொடர்ந்து நந்தம்பாக்கம், டிபென்ஸ் காலனியில் உள்ள இருதயராஜின், ஏற்றுமதி நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நுழைந்தனர். அங்கு, சோதனை நீடித்தது. சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சோதனையின் காரணமாக, தி.மு.க., முக்கிய பிரமுகர்களுக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இப்பொழுது 2020ல் இது மறக்கப் பட்டது போலும்.

இனிகோ 20-12-2020 அன்று வரவேற்று பேசியது: நீ என்று ஒருமையில் இனிகோ பேசியது திகைப்பாக இருந்தது. “நீ என்னவேண்டுமானாலும் பேசு (இந்துவிரோதி என்றெல்லாம்), ஆனால், நாங்கள் எல்லோரும் ஒன்றாகத் தான் வருவோம். ……..மூன்று மதத்தினரும் ஒன்றாக திரள்வோம்…….உங்கள் விழாவுக்கு எங்களை அழையுங்கள், நாங்கள் வருவோம். எங்கள் விழாவுக்கு நீங்கள் வாருங்கள்…வரும் தேர்தலில் நமக்கான தலைவரைத் தேர்ந்தெடுப்பொம்….தளபதியைத் தேர்ந்தெடுக்கும் தருணம். எத்தனை நடிகர்கள் வேண்டுமானாலும் வரலாம், எப்படிப் பட்ட நடிகர்கள் வேண்டுமானாலும் வரலாம், மிகப் பெரிய நடிகராகக் கூட இருக்கலாம்.பல கட்சி வகை என்று சொல்லி வரலாம். ஆன்மீக அரசியல் எங்கேயிருக்கிறது? ….. ,,,,,,.”. இப்படி காரசாரமாகப் பேசியது, அரசியல் மேடை போன்ற நிலையை ஏற்படுத்தியது.

பேந்தகோஸ்தே திருச்சபை மாமன்ற பிரதம பேராயர் சார்லஸ் பின்னி ஜோசப்: “கர்த்தர் இந்த தேசத்தை ஆசிர்வாதிப்பார்….விரைவில் இங்கு வருவார்…..,” என்ற ரீதியில் ஒரு கிருத்துவப் பிரங்கத்தையே செய்தார். இவரது பேச்சில் வேறெந்த விசேசமும் தெரியவில்லை, ஒருவேளை, கத்தோலிக்கக் கூட்டத்தில், அவ்வாறு, அளவோடு, வாசித்தார் போலும்.

ஒன்றிணைக்கும் கிருஷ்துமஸ் விழாவில் ஸ்டாலின் பங்குபெற்று பேசியது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது..: தமிழகத்தில், தொடர்ந்து, இந்துவிரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன:

  • தமிழ் கடவுள் முருகப்பெருமானை கறுப்பர் கூட்டம் இழிவுப்படுத்தியது,
  • ஹிந்து பெண்களை விபச்சாரிகள் என்று திருமாவளவன் பேசியது,
  • தி.மு.க தலைவர் ஸ்டாலின் முத்துராமலிங்க தேவரை அவமதித்தது,
  • உதயநிதி ஸ்டாலின் பூர்ணகும்ப மரியாதையை ஏற்க மறுத்தது –

போன்ற சம்பவங்கள் ஹிந்துக்களை புண்படுத்தும் வகையில் இருந்தது. தீபாவளிக்கு தி.மு.க வாழ்த்து கூட கூறவில்லை என்ற விமர்சனம் இருக்கும் நிலையில் ஒன்றிணைக்கும் கிறிஸ்துமஸ் என்ற நிகழ்ச்சி சென்னை சாந்தோமில் நடைபெற்றது. ஒன்றிணைக்கும் கிருஷ்துமஸ் என்கிற இந்த விழாவில் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் பங்குபெற்று பேசியது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.. “தமிழ்.ஏசியாநெட்.நியூஸ்,” என்ற ஒரே ஊடகம் தான், இவ்வாறு எடுத்துக் காட்டியுள்ளது.

இனிகோ இந்துவிரோத பேச்சுகளைக் கண்டிக்காதது, ஊக்குவித்தது: இந்த நிகழ்ச்சியில் தி.மு.க ஆதரவாளரான கலையரசி திருநீறு அணிந்து ஸ்டாலின் முன்னிலையில் கிறிஸ்துமஸ் விழா மேடையில் பேசியுள்ளார். அவர் பேசுகையில், “ஹிந்து என்ற மதமே கிடையாது. அனைவரும் சைவர்கள் தான். சைவர்கள் தான் தமிழர்கள். இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் தமிழர்களின் தொப்புள்கொடி உறவுகள். ஹிந்து என்ற வார்த்தையை உபயோகப்படுத்துவதே நமக்கெல்லாம் பலவீனம். ஹிந்து என்ற வார்த்தையை கேட்டாலே உடம்பெல்லாம் எரியுது“, என்று ஹிந்து மதத்தின் மீது வன்மத்தை கக்கியுள்ளார்[10]. அப்போது மேடையில் இருந்த கிறிஸ்தவ தலைவர்கள் சிரித்துக் கொண்டே கை தட்டினர். இது அவர்களின் குரூர மனங்களை வெளிப்படுத்துகிறது. மு.க. ஸ்டாலினும் அவரின் பேச்சை ரசித்தபடி கேட்டுக்கொண்டிருந்தார். மத நல்லிணக்கத்தை வளர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு அனைத்து மதத்தினரையும் அழைத்து கிறிஸ்துவர்கள் ஏற்பாடு செய்த கிறிஸ்துமஸ் விழாவில் ஹிந்து மதத்தின் மீது வெறுப்பை விதைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் மீண்டும் மேடைகளில் மற்றவர்கள் இந்துக்களைப்பற்றி திமுக ஆதரவாளர்கள் பேசி வருவது அக்கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது[11], தமிழ்.ஏசியாநெட்.நியூஸ் கூறுகிறது. உண்மையில் திமுககாரர்கள் சளைத்தவர்களா என்ன?

© வேதபிரகாஷ்

24-12-2020


[1] மாலைமுரசு, சென்னையில் 20-ந்தேதி மு..ஸ்டாலின் தலைமையில் ஒன்றிணைக்கும் கிறிஸ்துமஸ் விழா, பதிவு: டிசம்பர் 13, 2020 13:10 IST

[2] https://www.maalaimalar.com/news/district/2020/12/13131056/2158544/Tamil-News-Christmas-festival-celebration-on-20th.vpf

[3] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழ்ச் சமுதாயத்தின் அமைதியைக் குலைக்க முயற்சிக்கும் சக்திகளை முறியடிப்போம்: மு.. ஸ்டாலின், By Mathivanan Maran, Published: Sunday, December 20, 2020, 23:02 [IST].

[4] https://tamil.oneindia.com/we-will-defeat-divisive-force-in-tamilnadu-says-mk-stalin-cs-406419.html

[5] https://www.facebook.com/cnimedia2018/

[6] நக்கீரன், அமைச்சரை வீழ்த்த தயாராகும் இனிகோ இருதயராஜ்!, மகேஷ்

, Published on 22/12/2020 (12:37) | Edited on 22/12/2020 (15:36).

[7] https://www.nakkheeran.in/24-by-7-news/politics/who-inigo-iruthayaraj-dmks-trichy-constituency-candidate

[8] தினமலர், ஸ்டாலின் நண்பர் வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர்ரெய்டு, Added : அக் 12, 2011 22:44

[9] https://www.dinamalar.com/news_detail.asp?id=330219

[10] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கிறிஸ்துமஸ் விழாவில் இந்து மதத்தை பற்றி இழிவுப்பேச்சுமீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் மு..ஸ்டாலின்!, Thiraviaraj RM, , First Published 21, Dec 2020, 5:25 PM.

[11] https://tamil.asianetnews.com/politics/blasphemy-about-hinduism-at-christmas-mk-stalin-in-controversy-again-and-again-qlougi

இருக்கின்ற கோவில்-போன்ற சர்ச்சை வைத்துக் கொண்டு பொய் பிரச்சாரம் செய்தது ஏன்? இந்துத்துவவாதிகள் தங்களது அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ளவேண்டும்.

ஜூலை 2, 2020

இருக்கின்ற கோவில்போன்ற சர்ச்சை வைத்துக் கொண்டு பொய் பிரச்சாரம் செய்தது ஏன்? இந்துத்துவவாதிகள் தங்களது அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ளவேண்டும்.

Hindutwa reaction on Tirupatur temple

கோவில்போன்ற சர்ச்சை வைத்துக் கொண்டு பொய் பிரச்சாரம் செய்தது ஏன்? கடந்த வாரத்தில் (ஜூன் மாதம் 2020), இக்கோவில் ராமநாதபுரத்தில் உள்ளது, ஒரு இந்து கோவிலை ஆக்கிரமித்துக் கொண்டு, சர்ச்சாக மாற்றி விட்டார்கள் என்று இந்துத்துவ வாதிகள் மாறி-மாறி இப்படத்தைப் போட்டார்கள், பதிவு ஆனால், எங்கே இருக்கிறது என்று கேட்டால் பதில் சொல்லவில்லை. நண்பர்களியம் விசாரித்தேன்…..ஷேர் செய்யும் பேட்டனை கவனித்தேன்….. எல்லாமே “உள்ளுக்குள்” நடக்கிறது. முன்னர் குறிப்பிட்ட ஒரு நபரிடத்தில், ஏனிப்படி தவறான, ஆதரமில்லாத பதிவுகளை போடுகிறீர் என்று கேட்டதற்கு, “எதிரிகள் போடுகிறார்கள், அதனால், நாங்கள் அப்படித்தான் போடுவோம்,” என்றார். இந்த விசயத்திலும், உடனே, குறிப்பிட்ட நபர்கள், புகார் செய்யுங்கள் என ஆரம்பித்து நின்றுள்ளது…..பொய்யுக்கு-பொய் என்ற லாஜிக், வாதம், தத்துவம் சரியில்லை.

Christukula Ashramam -Tirupattur

ஹிந்து அமைப்புகள் முழுமையான விசாரணை செய்து அறிக்கையை வெளிப்படுத்த வேண்டும்: திருநாவுக்கரசு, தலைவர், தேசிய சிந்தனை பேரவை, தனது பதிவில், “கிறிஸ்தவ குருகுலம் என்னும் பெயரில் …….!!! சர்ச்சைக்குரிய வகையில் ஹிந்து திருக்கோவிலை போல கட்டப்பட்டுள்ள இந்த கிறிஸ்தவ வழிபாட்டு கூடம் குற்றாலத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.. 1923 ஆம் ஆண்டு கிறிஸ்தவ குருகுலம் என்னும் பெயரில் இந்த வழிபாட்டு கூடம் அமைக்கப்பட்டுள்ளதாக கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்…..இயேசு கிறிஸ்து தம்முடைய கனவில் வந்து இந்து கோவிலை போன்று தனக்கு ஒரு வழிபாட்டு கூடம் கட்டும்படி கோரியதால் இதை கட்டியதாக டாக்டர் ஏசுதாசன் என்பவர் குறிப்பிட்டுள்ளார்மேற்கண்ட தகவல்கள் இதுவரை கிடைத்துள்ளது.. மேற்கண்ட செய்திகள் உண்மையாகவே இருக்கும் பட்சத்தில், இந்துக்களின் பாரம்பரிய திருக்கோவிலை போன்று வேற்றுமதத்தவர் தங்கள் வழிபாட்டு கூட்டத்தை கட்டுவதற்கு உரிமை கிடையாது..இது அப்பாவி இந்துக்களை மதமாற்றம் நோக்கத்தில் கட்டப்பட்டு உள்ளதாகவே தெரிகிறது..ஆகவே இது தொடர்பாக நீதிமன்றத்தை நாட வேண்டியது அவசியமாகிறதுஇந்த வழிபாட்டு கூடம் கட்டப்பட்டதாகக் கூறப்படும் 1923 என்பது கிறிஸ்தவர்களின் ஆட்சிக் காலம் என்பதால் அந்தப் பகுதியில் இருக்கும் ஹிந்து அமைப்புகள் முழுமையான விசாரணை செய்து அறிக்கையை வெளிப்படுத்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்…”. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை, பொய் என்றாதால், அப்படியே அமுங்கி விட்டது!

Christukula Ashramam constructed in Dravidian style
கிருத்துவகுல ஆசிரமம், திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம்: தேடிப் பார்த்ததில், சரியான விவரங்கள் கிடைக்கவில்லை. அப்பொழுது, ஒரு முகநூல் நண்பர், இந்திய தேசிய மிஷனரி சங்கம் – கிறிஸ்துவகுல ஆஸ்ரமம் (National Missionary Society of India CK Ashram) என்றுள்ளது, என்று எடுத்துக் காட்டினார். அவர்கள் இம்மாதிரியான கோவில்-சர்ச் கட்டியுள்ளனர்…..இந்த கோயில் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து தொண்டி செல்லும் ஈசிஆர் சாலையில் மணக்குடி கிராமம் உள்ளது கிராமத்திலிருந்து திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் செல்லும் வழியில் வலது பக்கம் உள்ள ஒரு கிராமத்தில் இக்கோயில் உள்ளது… இது முற்றிலும் உண்மை., என்றெல்லாம் நண்பர்கள் எடுத்துக் காட்டினர். பிறகு எல்லாவற்றையும் தேடி, சரிபார்த்ததில்,  மருத்துவர்கள் இ. போரெஸ்டர் பேடன் (Dr.E.Foresstor Paton) மற்றும் எஸ். ஜேசுதாசன் (Dr.S.Jesudasan) மார்ச்.7, 1921ல் இந்த ஆஸ்ரமத்தை ஆரம்பித்ததாகத் தெரிகிறது[1]. டாக்டர் யேசுதாசன் இலங்கை அரசாங்கத்தில் 10 ஆண்டுகள் சேவை செய்த பிறகு, இங்கிலாந்தில் மருத்துவ பட்டம் பெறுவதற்காக சென்றிருந்த போது கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் டாக்டர் ஈ. எவ். பேடனை  சந்தித்தார். 1921 ல், இருவரும் தென்னிந்தியாவுக்கு திரும்பிவந்து வடஆற்காடு மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் எனும் கிராமத்தில் இந்த கிறிஸ்துகுல ஆசிரமத்தை ஆரம்பித்தனர். காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்தின் சேவைகளில் ஈர்க்கப் பட்டு, அதைப் போலவே, கிருத்துவர்களும் செய்ய வேண்டும் என்று, இந்த கிருத்துவக்குல ஆஸ்ரமங்களை ஆரம்பித்ததாகத் தெரிகிறது. இ. போரெஸ்டர் பேடன், ஒத்துழையாமை இயக்கத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ளார்[2]. இங்கு கிருத்துவர்கள் எளிமையான வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிக்கின்றனர்[3]. இந்துமுறைகளைப் பின்பற்றி வந்தனர்[4]. இதெல்லாம் சுதந்திரம் கிடைத்த வரையிலும் நடந்தது.

Christukula Ashramam 1928-1933-Hindi

1947க்குப் பிறகு கிறிஸ்துவ ஆஸ்ரமம் மாறியது: வாடிகன் கவுன்சில் – II க்குப் பிறகு, அவையெல்லாம் மாறிவிட்டன. அதாவது, போப்பின் ஆணையின் படி, நற்செய்தியை அறிவித்து, பாவிகளை மனம் திரும்ப செய்யும் வித்தைகளில் ஈடுபட்டு, இந்துக்களைப் போன்று பஜனை செய்ய ஆரம்பித்து விட்டனர். பூஜைகள், ஆரத்திகள், தூப-தீபங்கள் சகிதம், கோவில்களில் நடக்கும் கிரியைகளை செய்தனர். “உள்-கலாச்சாரமயமாக்கல் முழு வீச்சில் நடந்தது. உரையாடல் இல்லாமலே, உரையாடல்கள் இருந்ததாக எழுதி வைத்தனர். பிரசாதமும் கொடுத்தால், கூட்டம் சேராமலா இருக்கும். “பெரியண்ணன்” மற்றும் “சின்னண்ணான்” பார்த்துக் ஒண்டே இருந்தார்கள். ஆனால், இந்துத்துவ வாதிகள், இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல், பலமுறை எடுத்துக் காட்டினாலும், கண்டு கொள்ளாமல், இத்தகைய அரைகுறை பதிவுகளை சமூக தளங்களில் பரப்பி, தமது, நம்பிக்கையின்மையினை நிரூபித்து வருகிறார்கள்.

Christukula Ashramam 1928-1933

கிறிஸ்தவ ஜெப ஆலயம், திருப்பத்தூர்: இந்த ஆஸ்ரமத்தைப் பற்றிய ஒரு வீடியோவில், பால் பிரபாகர் என்பவர் அனைத்தையும் விளக்குகிறார்[5]. ஆஸ்ரமம் அஸ்திவாரம் 17-02-1928 அன்று நடந்தது, கட்டுமானம் 09-06-1933 அன்று முடிந்தது என்று ஹிந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடது பக்கம் கல்வெட்டு வைக்கப் பட்டுள்ளது. “திராவிட கட்டிடக்கலையில் கட்டப் பட்ட கிறிஸ்தவ ஜெப ஆலயம்மென்று சொல்லிக் கொள்கிறார்கள். உள்ளே கர்ப்பகிருகத்தில், பீடத்தில் சிலுவை வைக்கப் பட்டுள்ளது. அவர்கள், தங்களது திட்டத்தை தெளிவாக உணர்து, தேர்ந்தெடுத்து, உழைத்து வருகின்றனர். சில முகநூல்-இத்துவவாதிகள் போல, பொய்களை பரப்புவதில்லை. “திருப்பத்தூரில் கிறிஸ்து குல ஆசிரமத்தை நிறுவிய டாக்டர் சவரிராயன் ஏசுதாசன் என்பவர் தம் ஆசிரம வழிபாட்டு நூலில் திரு.வி.கலியான சுந்தரனார், இராமலிங்க அடிகளார், தாயுமானவர், பட்டினத்தார் ஆகியோர் பாடல்களையும் சேர்த்துள்ளார்,” என்று குறிப்பும் காணப்படுகிறது. அதாவது, “உள்-கலாச்சாரமயமாக்கல்” திட்டத்தைப் பின்பற்றுகிறார்கள். இவ்வாறு, இருத்துவர்கள் விவரமாக வேலை செய்யும் போது, இந்துக்கள், இந்துத்துவவாதிகள், ஆர்.எஸ்.எஸ்-பிஜேபிகாரர்கள், முதலியோர், எந்த திட்டமும் இல்லாமல், பிஜேபி ஆட்சியில் இருந்தால், செயல்படுவது, இல்லையென்றால் காணாமல் போவது என்ற ரீதியில் தான், கடந்த 40 ஆண்டுகளாக, தமிழகத்தில் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.:.

National Missionary Society of India, ashram

கிருத்துவ மற்றும் இந்துத்துவவாதி சித்தாந்திகளுக்குள்ள வேறுபாடுகள்: கிருத்துவ மதத்தில், ஒருவர் இருந்தாலும், இல்லாவிட்டாலும், நிறுவன ரீதியில் செயல்படும் அமைப்புகள் தொயர்ந்து செயல் பட்டு வருகின்றன. ஒவ்வொரு செயல்திட்டத்திற்கும், ஒரு அமைப்பு, நிறுவனம் என்றெல்லாம் இருக்கின்றன. அவர்கள் அரசியல்வாதிகள், ஊடகங்கள், மற்ற கருத்துருவாக்கம் உண்டாக்கும் மற்றும் தீர்மானங்கள் எடுக்கும் அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் முதலியோருடன், நட்பு, நெருக்கம் மற்றும் தொடர்புகள் வைத்திருக்கிறார்கள். அவர்கள் கிருத்துவர்களாக இருந்து விட்டால், கேட்கவே வேண்டாம், அவரது வேலைகள் சுலபமாக நடந்து விடுகின்றன. ஆனால், இதற்கு எதிர்மாறாக, இந்துக்களிடம் அத்தகைய அமைப்புகள், நிருவனங்கள் மற்றும் ஸ்தாபனங்கள் இல்லை. அறிந்து செயல்பட ஆட்களும் இல்லை. இந்துபாதிரிகள் கல்லூரி என்று ஆரம்பிக்கப் பட்டது, தெரியாமல் போய்விட்டது எனலாம்.

National Missionary Society of India, ashram-garba gruha.cross

ஒற்றுமை இல்லாத இந்துக்கள் மற்றும் அமைப்புகள்: “இந்து” என்ற பெயரில், போர்வையில், விளம்பரங்களில் இப்பொழுது, அமைப்புகள், நிருவனங்கள் மற்றும் ஸ்தாபனங்கள் ஏற்படுத்தப் பட்டிருந்தாலும், அவை ஒற்றுமை இல்லாமல் தனித்தனியாக வேலை செய்து கொண்டிருக்கின்றன. அவற்றில் வேலை செய்யும் இந்துக்கள், இந்துத்துவவாதிகள், ஆர்.எஸ்.எஸ்-பிஜேபிகாரர்கள், முதலியோர், அல்லது அவ்வாறு சொல்லிக் கொள்கிறவர்கள், ஒருவரையொருவர் எதிர்ப்பதில், ஓரங்கட்ட மற்றும் அமுக்கிவிட வேலை செய்கிறார்களே தவிர, பொதுவாக எதிரியை, எதிர்ப்புகளை, தாக்குதல்களை அறிந்து கொண்டு ஒன்றாகவோ, தனியாகவோ முறையாக வேலை செய்வதில்லை. அதனால் தான், 1947க்குப் பிறகும், எந்தவித குறிப்பான, வலுவான, திறம்பட செயல்பட சித்தாந்த வீரர்கள், போராளிகள் இல்லாமல், இவ்வமைப்புகள் சுயநலங்களுடன், சில தனிமனிதர்களின் சுயநலங்களால் செயல்பட்டு சீரழிகின்றன. இந்நிலை எப்பொழுது மாறும் என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

02-07-2020

National Missionary Society of India, ashram-mantap

[1] S. Jesudason, The Ashram Movement and Indigenisation of Worship, Sri Ramachandra Press, Vellore, 1930, p.23.

Such ashrams inspired NMSI to begin a Christian ashram in Tirupathur in the North Arcot district of Tamil Nadu, called Christukula Ashram. The ashram began functioning from in 1921 March 7.

[2] Venkatraman, V. “British vs English: The Pro-Gandhian Attitude of European Elites in the Civil Disobedience Movement in Tamil Nadu 1930–1932.” Available at SSRN 3152441 (2018).

[3] Dr. E.F. Paton and Dr. S. Jesudan were the founders of Christukula Ashram at Tiruppatur and the Ashramites followed a simple life. NMSI was instrumental in Starting Christian Ashrams in different parts of India. Modelled after Gandhi‘s Sabarmathi Ashram, the first Christian Ashram in India, namely Christukula Ashram was started in Tirupattur, in Tamil Nadu. Christukula means the family of Christ.

  1. Joacquim, கிறிஸ்தவ குருகுலம், Tirupattur.NMSI News, Vol. V, No.7, Jul.2008, p.11. See also NMSI News, Vol. II, No.3, Mar.2005, p.5

[4] Savarirayan Jesudason, Ashrams, Ancient and Modern: Their Aims and Ideals, Sri. Ramachandra Press, Vellore, 1937, p.13

[5] Paul Prabhakar, 98803 12231, https://www.youtube.com/watch?v=MC5Tl0zg6PE

National Missionary Society of India, ashram-mantap.another

மதம் மாறமுடியாது என்று மறுத்தாலும், எதிர்த்தாலும் ஆண்கள் இல்லாத நேரத்தில் வந்து சிறார் மற்றும் பெண்களை மதம் மாற்ற முயலும் கிறிஸ்தவ மிஷனரிகள் – நரிக்குறவர்களும், உண்மையான மிஷி-நரிகளும்!

ஜனவரி 20, 2014

மதம் மாறமுடியாது என்று மறுத்தாலும், எதிர்த்தாலும் ஆண்கள் இல்லாத நேரத்தில் வந்து சிறார் மற்றும் பெண்களை மதம் மாற்ற முயலும் கிறிஸ்தவ மிஷனரிகள் – நரிக்குறவர்களும், உண்மையான மிஷி-நரிகளும்!

Narikuravar protest against christian conversion

Narikuravar protest against christian conversion – நன்றி நக்கீரன்

நரிக்குரவர்களிடம் நரித்தனம் காட்டும் மிஷிநரிகள்: புதுக்கோட்டை அருகே ரெங்கம்மாள் சத்திரத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட நறிக்குறவர்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் காளி உள்ளிட்ட கடவுளை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக (டிசம்பர் 2013 முதல்) அந்த பகுதியை சேர்ந்த மல்லி மற்றும் வேதையன் ஆகியோர் வேறு மதத்திற்கு மாறிவிட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து மல்லி மற்றும் வேதையன் ஆகியோர் புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு சிலருடன் சேர்ந்து கொண்டு நறிக்குறவர் காலனியில் வசித்து வரும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மதமாற்றம் செய்ய முயற்சி செய்வதாக கூறப் பட்டது. சிறுவர்களை வழிபாட்டிற்கு பெரியவர்களுக்கு தெரியாமல் அழைத்து கொண்டு சென்று விடுவதாகவும் பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்[1].  இதுவே சட்டப்படிக் குற்றமாகும். நீயாய-தர்மங்களைப் பற்றி அவர்கள் என்றுமே கவலைபடாததால், அவற்றைப் பற்றி சொல்வதில் ஒன்றும் அர்த்தமில்லை.

Narikuravar protest against christian conversion - நன்றி நக்கீரன்

Narikuravar protest against christian conversion – நன்றி நக்கீரன்

புகார் கொடுத்த பிறகும் மோசடியில் ஈடுபடும் கிறிஸ்தக்கூட்டங்கள்: தாங்கள் மதம் மாறமாட்டோம் என்று கூறினாலும் அவர்கள் மதமாற கட்டாயப்படுத்துவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புதுக்கோட்டை திருக்கோகர்ணம் போலீசாரிடம் நறிக்குறவர்கள் புகார் அளித்துள்ள நிலையில்[2] 19-01-2014 அன்றும் ஒரு சிலர் குறவர் காலனிக்கு வந்து ஒரு குறிப்பிட்ட மதத்தை / கிருத்துவத்தைச் சேர்ந்த நெறிகள் அடங்கிய 10 கட்டளைகள் என்ற பெயரில் ஒரு விளம்பர பலகையை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று விட்டு முன்பு வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இப்படித்தான் விற்க்கவேண்டும் என்றால், அவர்களது கடவுளது தகுதி முதலியவற்றை அறிந்து கொள்ளலாம்! இதனை அவர்கள் விரும்பவில்லை, எதிர்க்கவும் செய்தனர். இதனையடுத்து நறிக்குறவர் காலனி சங்க தலைவர் வேலன் தலைமையில் மதமாற்றம் செய்ய முயற்சிப்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி இன்று காலணியில் 100க்கும் மேற்பட்டோர் காலனியில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து மறியலை குறவர்கள் கைவிட்டனர்[3].

Narikuravar protest against christian conversion - நன்றி நக்கீரன்

Narikuravar protest against christian conversion – நன்றி நக்கீரன்

இந்து அமைப்புகளின் கண்டனம்: இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற  பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் புதுக்கோட்டையில் கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சி  நடைபெற்று வருவது குறித்து கண்டனம் தெரிவித்தனர். மேலும், தமிழக அரசு இப்பிரச்சினையை தொடக்க நிலையிலேயே தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்[4]. இன்றைய நிலையில் ஓரளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், இந்து அமைப்புகள் தட்டிக் கேட்பது வரவேற்க்கத் தக்கதே. ஆனால், “இந்துக்கள்” என்று சொல்லிக் கொண்டு, இவர்களே பல குழுக்களில் பிரிந்து, மற்றவர்களைக் குழப்பி வருகிறார்கள் என்பதும் கண்டிக்கத் தக்கதே.

Narikuravar protest against christian conversion - நன்றி நக்கீரன்

Narikuravar protest against christian conversion – நன்றி நக்கீரன்

ஜூலை 2012ம் இதே மாதிரி பொள்ளாச்சியில் புகார் கொடுத்துள்ளனர்: கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி கட்டாயப்படுத்துவதாக, இந்து நரிக்குறவர் சமூகத்தினர், குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில், சப்-கலெக்டரிடம் புகார் கொடுத்தனர்[5]. பொள்ளாச்சி அருகேயுள்ள ஐந்து கிராமங்களில், இந்து நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அதிகளவில் உள்ளனர். இச்சமூகத்தை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள், ஆர். பொன்னாபுரத்தில் வசிக்கின்றன. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும், கிறிஸ்துவ மதத்தினர், இந்து குறவர் இனத்தை சேர்ந்தவர்களை, மத மாற்றம் செய்ய கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது. இச்சூழலில், ஐந்து நரிக்குறவர் குடும்பத்தை சேர்ந்தவர்கள், கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றம் செய்யப்பட்டனராம். இச்சமூகத்தை சேர்ந்த ஆண்கள், பகல் நேரத்தில் வேலைக்கு சென்றவுடன், ஊருக்குள் கிறிஸ்தவ மத போதகர்கள் நுழைந்து, பெண்களுக்கு தேவையான பொருட்களை கொடுத்தும், குழந்தைகளுக்கு விளையாட்டு பொம்மைகள், பிஸ்கட் தந்தும், மத மாற்றம் செய்ய முயற்சிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது[6]. இதுதொடர்பாக, நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த தேசிங்கு, ராஜேந்திரன், இந்து முன்னணி அமைப்பு மாவட்ட செயலர் உள்ளிட்டோர், நேற்று நடந்த குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில், சப்-கலெக்டரிடம் புகார் கொடுத்தனர்.

Narikuravar protest against christian conversion - நன்றி நக்கீரன்

Narikuravar protest against christian conversion – நன்றி நக்கீரன்

புதுவழியை அதாவது மோசடியை பின்பற்றும் மிஷனரிகள்: ஆண்கள் இல்லாத நேரங்களில், சிறுவர்கள் மற்றும் பெண்களிடம் தங்களது கைவரிசையைக் காட்டுகின்றனர் என்று பார்க்கும் போது, எவ்வளவு கேவலமாக நடந்து கொள்கின்றனர் என்று தெரிகிறது. ஆங்கிலேயர்கள் தாங்கள் ஏதோ உத்தமர்கள் போன்று இவர்களை குற்றம் புரியும் இனங்களுடன் சேர்த்து பட்டிலியலிட்டுக் கொடுமைப் படுத்தினர். ஆனால், இன்றும் கிருத்துவ மிஷனரிகள், இவ்வாறு நாகரிகம் வளர்ந்தும், மிகக்கொடுமையான எண்ணங்களுடன், குரூரக் குற்ற எண்ணங்களுடன் இப்படி மோசடி செய்து வருகின்றனர். ஆகவே, இவர்களை எந்த சட்டத்தில், எந்த வகையான பிரிவில் சேர்ப்பது என்று தெரியவில்லை.

கிருத்துவர்களின் முயற்சிகள் தோற்றது ஏன்?: இது – குறவர்கள் மதம் மாற்றத்தை எதிர்த்த நிலைப்பாடு, மறியல், எதிப்பு, புகார் முதலியன – நிச்சயமாக மிகமுக்கியமான செய்தியாகும். கிருத்துவ மிஷனரிகளின் பொய்ப்பிரச்சாரம், சரித்திர புரட்டல், இறையியல் மோசடிகள் அனைத்தையும் வெளிப்படுத்துவதாகும். “நரிக்குறவர்” என்பவரை நரிபிடிப்பவர்கள், பறவைப்பிடிப்பவர்கள் என்றுதான் குறிப்பிடுகின்றனர்[7]. “ஜிப்சி” போன்ற மக்களுடனும் ஒப்பிட்டு எழுதி வருகின்றனர்[8]. டி. எஸ். பிரகாஷ் போன்றோர் இவர்களை மதம் மாற்ற முயன்றிருக்கிறார்[9], ஆனால் வெற்றியடைவில்லை[10]. வலிய வந்து நிதியுதவியும் அளித்து வருகின்றனர்[11]. மனிதனை பலியிட்டுப் புசித்தல் என்ற இறையியலை மீது ஆதாரமாக ஆரம்பித்துப் பிறகு, இடைக்காலத்தில் மாற்றியமைக்கப் பட்டு “யுகாரிஸ்ட்” பெயரில் வளர்ந்த மதம் தான் கிருத்துவம். இதனால், அவர்கள் தாங்கள் எந்நாட்டிற்குச் சென்றாலும், அங்கிருப்பவர்கள் எல்லோரும் தங்களைப் போன்றே நாகரிகமற்று இருக்கும் மக்கள் என்றே நினைப்பது அவர்களுக்கு அவர்களுக்கு வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், இந்தியாவிற்கு வந்தபோது, அவர்களுக்கு பெருத்த அதிர்ச்சி ஏற்பட்டது. ஒரு நிலையில், தமது மதத்தின் மூலமே இந்தியாவிலிருந்து தான் ஆரம்பித்தது என்ற எண்ணமும் தோன்றியது. உலகம் ஊழியில் மூழ்கி மறைந்து, பிறகு மனித இனம் தோன்றி வளர்ந்து பெருகிய கதைகளுக்கு ஆரம்பத்தைத் தேடிய போது, இந்தியாதான் என்று தெரிந்து கொண்டுனர். அவ்வகையில் தான், நரிக்குறவர்களை தம் முன்னோடிகள் என்று நினைத்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். ஆனால், அவர்களது எண்ணங்களின் ஆழங்களில் இந்திய இதிகாச-புராணங்கள் இருப்பது கொண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த உண்மையினை மறைக்கத்தான், அவர்கள் அமுக்கி வாசிக்க ஆரம்பித்தனர்.

சோமன்னாவை நினைவுப் படுத்திய பெரியவர்: இப்பொழுதும், ஒரு பெரியவர் கிருத்துவர்களை எதிர்த்ததோடல்லாமல், தங்களது நம்பிக்கையின் படி, ஒரு மணி, கற்ப்பூரம் இடும் பலகை மற்றும் இசைக்கருவி சகிதம் வந்து, தெருவில் உட்கார்ந்து, அந்த இசைக்கருவியை இசைக்க ஆரம்பித்தது, எனக்கு “சோமன்னத்துடி” என்ற படத்தின் நாயகன் “சோமன்னா”வின் ஞாபகம் தான் வருகிறது. பஞ்சத்தினால், ஒரு கிராமத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. வயல்கள் காய்கின்றன; கால்நடைகள் ஒன்றொன்றாக இறக்கின்றன; ஏன் மனிதர்கள் கூட இறக்கிறர்கள்; கிராம மக்கள் அக்கிராமத்தை விட்டு வெளியேற ஆரம்பிக்கின்றனர்; ஆனால், சோமன் தனது துடியை வாசித்துக் கொண்டு மழை வரும் என்று நம்பிக்கையோடு அங்கேயே இருக்கிறான்; அந்நிலையில் கிருத்துவ மிஷனரிகள் வந்து அவர்களுக்கு உதவுவது போல உதவி மதம் மாற்றுகின்றனர்; சோமன்னனின் தம்பியை மதம் மாற்றுகின்றனர்; அவனை வைத்து சோமன்னாவை மதம் மாற்றத் தூண்டுகின்றனர்; சொமன்னா மறுக்கிறான்; வருத்தத்தோடு தனது துடி/பறையை அடித்து முழக்குகிறான்; மழை வருகிறது; அத்தோடு கதையும் முடிகிறது! எனவே, இத்தகைய பெரியவர்கள் இருந்தாலே போதும், யாரும் ஒன்றும் செய்து விடமுடியாது. இப்பொழுது ஆர்.எஸ்.எஸ், பிஜேபி மற்ற இந்து அமைப்புகள் இந்த பெரியாரை மதிக்க வேண்டும், பாராட்ட வேண்டும்.

ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளில் சிக்கிய நரிக்குறவர்கள்: ஆங்கிலேயர்கள் அவர்களை அடக்குமுறையில் ஒழிக்கவும் திட்டமிட்டனர். அதன்படியே அவர்களை குற்றபுரியும் மக்களிங்கள் சட்டம் [Criminal Tribes Act 1871] கீழ் கொண்டு வந்தனர். சுதந்திரம் பெற்றப் பிறகுதான், அவர்களது நிலை உயர ஆரம்பித்தது. ஆனால், கிருத்துவர்கள் இந்த உண்மைகளையெல்லாம் மறைந்து, அவர்களை ஏதோ உயர்த்துவோம் என்பது போல நடித்து சமூகத்தில் பிரிவினை ஏற்படுத்த முயன்று வருகின்றனர். இதுதான் இவ்விசயத்திலும் வெளிப்பட்டுள்ளது. மோசடி மூலம் எப்படி அவர்கள் மதம் மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது அப்பட்டமாக வெளிப்பட்டுவிட்டதால், அரசு உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாது, சமூக ஆராய்ச்சியாளர்கள், மற்ற பேராளர்களின் அவர்களது கீழ்த்தரமான காரியங்களைக் கண்டிக்க வேண்டும்.

வேதபிரகாஷ்

© 20-01-2014


[1] தினமணி, புதுகைஅருகேநரிக்குறவர்காலனியில்மதமாற்றம்: பொதுமக்கள்புகார், By மோகன்ராம், புதுக்கோட்டை, First Published : 19 January 2014 05:35 PM IST

[3] இரா.பகத்சிங், மதம்மாறகட்டாயப்படுத்துகிறார்கள்: நறிக்குறவர்கள்மறியல், நக்கீரன், ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2014.

[6] தினமலர், நரிக்குறவர்சமூகத்தினர்மதமாற்றம்? சப்கலெக்டரிடம்பொதுமக்கள்புகார், ஜூலை 23, 2012.

[7] G. Srinivasa Varma, Vaagri Boli. J.P. Vijayathilakan, Studies… Madras: Madras Christian College. They catch small birds, such as the parrot, but never eat the canary, which is sacred to the Goddess.

[8] William J. Jackson, Rituals of a “Gypsy” Tribe: The Vagri or Narikuravar ,  Religious Studies, Indiana Univ.-Purdue Univ., Indianapolis

Regional American Academy of Religion Conference, Bloomington, IN, 4/8/1989