லிஞ்சிங் பற்றிய ஊடக வாத-விவாதங்கள் – மற்ற மதகுருமார்களின் குற்றங்களை மறைக்கவா அல்லது 2019 தேர்தல் பிரச்சார ஒத்திகையா? (3)
சட்டங்களை மதிக்காமல் குற்றங்கள் செய்வது யார்?: இந்நாட்டு சட்டதிட்டங்களுக்குப் புறம்பாக, விசாரணை இன்றி குற்றங்கள் நடப்பது போன்று, இப்பொழுது ஏன் சித்தரிக்கப் பட வேண்டும். சமீப காலத்தில்,தொடர்ச்சியாக, இந்தியாவில், கிருத்துவ மததலைவர்கள், கார்டினல், பிஷப் முதல் சாதாரண பாஸ்டர் வரை, பற்பல குற்றங்களில் ஈடுபட்டு, விவரங்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன, போதாகுறைக்கு, பாதிக்கப் பட்ட கிருத்துவர்களை போலீஸாருக்கு செல்ல விடாமல், நீதிமன்றங்களை அணுகாமல் தடுத்து, சர்ச்சுகளில் கட்டப் பஞ்சாயத்து போல நடத்தி, எல்லாவற்றையும் மறைத்து, அமுக்கி விடுகிறார்கள். அத்தகைய, இந்நாட்டின் சட்டதிட்டங்களை மீறிய குற்றங்கள் அதிகமாகி வருகின்ற வேலையில், சிலர் போலீஸாரிடமும் புகார் கொடுத்ததன் மூலம், பாலியல் குற்றவாளிகள் பற்ரிய விவரங்கள் அதிகமாகவே வந்துள்ளன. இதனால், அதிர்ந்து போன சர்ச்சுகள், தங்களுக்குள்ள அதிகாரம், பணம் முதலியவற்றை பயன்படுத்தி, ஊடகங்களில் அவற்றைப் பற்றிய விவரங்கள் வராமல் தடுக்க முயற்ச்சித்து வருகின்றன. இவை, கன்னியாஸ்திரிக்கள் மற்றும் கிருத்துவ பெண்கள் கற்பழிப்பு விவகாரங்கள் மூலம் வெளிவந்து விட்டன. வாடிகன், சிபிசிஐ போன்றவை உண்மைகளை மறைக்க ஈடுபடுவதும் தெரிய வந்துள்ளன. ஆகவே, லிஞ்சிங் விசயத்தை வைத்துக் கொண்டு, அனைத்துல ரீதியில் இந்தியாவைப் பற்றி அவதூறை ஏற்படுத்த முயன்று வருவது கவனிக்கத் தக்கது.
அமெரிக்க ஊடகத்தின் ஒப்பாரி – ஜூலை 2018[1]: அன்னி கோவன் என்ற அமெரிக்கப் பெண்மணி, இவ்வாறு விவரித்துள்ளார், “இவ்வருடத்தில், ஒரு தீவிரவாத இந்து சாமியார் தனது கருத்தை வெளிப்படுத்தியதிலிருந்து, இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்றி வாழும் முஸ்லிம்கள் கனவில் கூட காணாத வாழ்வினை வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். முதலில், விழிப்புடன் இருக்கும் இந்துக்கள், எருமைகளை ஏற்றிச் செல்லும் வண்டிகளை சூழ்ந்து கொள்ள ஆரம்பித்தார்கள். சட்டத்திற்குப் புறம்பாக, பசுக்களைக் கடத்துகிறார்களா என்று தேட ஆரம்பித்தார்கள். ஏனெனில், அவர்களுக்கு பசு புனிதமானது, கடத்திச் செல்பவர்களிடமிருந்து காக்கப்பட வேண்டியது. சில முஸ்லிம்கள் இவ்விசயத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பிறகு டஜன் கணக்கில் கசாப்புக் கடைகள் மற்றும் 50,000 மாமிசக் கடைகள் மூடப்பட்டன; இதனால் சிகப்பு மாமிசத்தையே உணவாகக் கொண்டு வாழும் முஸ்லிம்களுக்கு உணவு அரிதானது. இந்த மாமிச வியாபரத்தையே தொழிலாகக் கொண்ட குரேஷி என்கின்ற முஸ்லிம்கள், தங்களது வேலையை இழக்க வேண்டியதாயிற்று…….”
இந்துக்களில் சிலரும் பசு மாமிசம் சாப்பிடும் போது, முஸ்லிம்களைப் பற்றி கவலைப்படுவதேம்?: இதில்[மேற்குறிப்பிடப் பட்ட வாஷிங்டன் போஸ்ட் செய்தியில்] –
- ஒரு தீவிரவாத இந்து சாமியார்,
- சட்டத்திற்குப் புறம்பாக, பசுக்களைக் கடத்துகிறார்களா,
- பசு புனிதமானது,
- சிகப்பு மாமிசத்தையே உணவாகக் கொண்டு வாழும் முஸ்லிம்களுக்கு உணவு அரிதானது,
- முஸ்லிம்கள், தங்களது வேலையை இழக்க வேண்டியதாயிற்று.
போன்ற சோற்றொடர்கள், விசமத் தனமானது என்பதை கவனிக்கலாம். உண்மையில் நடப்பதை விவரிப்பதை விட, சில விவரங்களை வைத்துக் கொண்டு, இந்துமுஸ்லிம் பிரச்சினையாக இதனை மாற்றும் முயற்சியை சுலபமாக கண்டறியலாம்[2]. மேலும் எவ்வாறு பல துறை அதிகாரிகள், ஏனென்டுகள் முதலியோர் வழியில் லஞ்சம் பெற்றுக் கொண்டு, வண்டிகளை அனுப்பி வைக்கிறார்கள் என்பதையும் விவரிக்கிறார். அதாவது, இது சட்டத்தை மீறிய வியாபாரம், அதில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என்று இரு கூட்டத்தினரும் சம்பந்தப் பட்டுள்ளனர். ஆகவே, வியாபார ஒற்றுமையை மறைத்து, மேலாக நடக்கும், பசு விவகாரத்தை பெரிது படுத்த வேண்டிய நோக்கம் ஏன் என்ற கேள்வி தான் எழுகின்றது. ஏனெனில், இந்துக்களில் சிலரும் பசுமாமிசம் சாப்பிடுகிறார்கள் என்பது தெரிந்த விசயமே. ஆனால், அதை ஊடகக் காரர்கள் பெரிது படுத்துவதில்லை. அவர்களுக்கு பசு மாமிசம் கிடைக்காமல் போகிறது என்று அழவில்லை. ஆக, இதெல்லாம், ஊடகக் காரர்களின் மிக்க பாரபட்சத்தினை, மதரீதியிலான சிந்தனையை மற்ரும் அவர்களது கலவரமூட்டும் போக்கினை எடுத்துக் காட்டுகிறது. உண்மையில், இதுதான், அபாயகரமானது எனலாம்.
1984 சீக்கியகளுக்கு எதிராக நடந்த கலவரம், கூட்டுக் கொலைகள்: 1984ல் இந்திரா காந்தி கொலை செய்யப் பட்டபோது, சீக்கியர்கள் தாக்கப் பட்டனர். அதில் 2,800 சீக்கியர்கள் [தில்லியில் மட்டும் 2,100] கொல்லப்பட்டனர் என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டாலும், 8,800 [தில்லியில் மட்டும் 3,000] கொல்லப்பட்டனர் என்று தெரிகிறது. இதெல்லாம் கூட்டுக் கொலையில் தான் வரும், அது மட்டுமல்லாது, சீக்கியர்களை குறிவைத்து நடத்தப் பட்ட கலவரக் கொலைகள் ஆகும். அதற்கு, ராஜிவ் காந்தியும், “ஒரு பெரிய மரம், வேர்களுடன் விழுந்தால், சுற்றியிருக்கும் பூமி பாதிக்கப் படத்தான் செய்யும்,” என்ற்ற விதத்தில் பேசியது நினைவில் இருக்கலாம். அக்டோபர் 31 முதல் நவம்பர் 3ம் தேதி வரை, தொடர்ந்து கலவரம், கொலை, கொள்ளை, சூரையாடல் நடந்ததன. இப்படி பல்லாயிரக் கணக்கான நடந்த கூட்டுக் கொலையினை மறந்து, ஏதோ 2014லிருந்து தான் நடக்கின்றன என்று ஊடகத்தினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதுதான்ன் திகைப்பாக இருக்கிறது. எந்த கொலையும் நியாயப்படுத்தப் படவில்லை, ஆனால், அதேபோல, நடக்கும் குற்றங்களும் ஒரே மாதிரியாக அலசப்பட வேண்டும். அதற்கு ஊடகக் காரர்களின் தார்மீகம் பதில் சொல்லியாக வேண்டும்.
ஊடகங்கள் பொறுப்புடன், உண்மை தகவல்களை கொண்டு, இந்த விசங்களை அணுக வேண்டும்: மேலே குறிப்பிட்ட விவரங்கள் மூலம், கீழே சில விவரங்கள் சுருக்கமாகக் கொடுக்கப்படுகின்றன.
- லிஞ்சிங் என்று வர்ணிக்கப்படுகின்ற கூட்டுக்கொலை, பல இடங்களில் தன்னிச்சையாக, பொது மக்கள் வெகுண்டெழுந்ததால் நடைபெறுகிறது, இது யூத-கிருத்துவ-முகமதிய மததண்டனை போல, ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடப்பதில்லை.
- எந்த மதகுருவும் விசாரித்து, தண்டனை அறிவித்து, நிறைவேற்றப்படும் தண்டனையும் அன்று.
- கசாப்புக் கடைகளில் மாடுகளைக் கொன்பது, விற்பது, வாங்குவது, மாட்டுக்கறி சமைத்து தின்பது, ஆயிரக்கணக்கான வருடங்களாக நடந்து வருகின்றன. கடந்த காலத்தில், ஏற்றுமதி செய்வதும் நடந்து வருகின்றது. அப்பொழுதெல்லாம், இப்பிரச்சினையை எழுப்பப்படவில்லை.
- கோஷாலைகள் வைத்து, பசுக்கள்-மாடுகள் கொல்லப்படக் கூடாது போன்ற இயக்கங்களும் ஆயிரக்கணக்கான வருடங்களாக நடந்து வருகின்றன. இன்றும், அரசியல் நிர்ணய சட்டத்தில் “பசுவதை கூடாது” என்றுள்ளது.
- பசுவதை விசயங்களில், பிரச்சினைகள், கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. அப்பொழுதும் மதசாயம் பூசப்பட்டாலும், இத்தகைய அதிரடி பிரச்சாரங்கள், ஊடகங்கள் மூலம் நடத்தப்படவில்லை.
- 2014-18 ஆண்டுகளில் தான் எல்லாமே நடந்தன, நடக்கின்றன, திட்டமிட்டு நடத்தப் படுகின்றன. அதற்கு இந்துமத தலைவர், ஆர்.எஸ்.எஸ், பிஜேபி மற்றைந்துத்துவக் காரர்கள் ஆதரவு அளிக்கின்றனர் என்று முடிச்சுப் போடுவதும் நடக்கிறது.
- மேலும்,அவர்களின் மொத்த உரையாடலை வெளியிடாமல், ஒரே வார்த்தை, வரி அல்லது வரியின் பகுதியை, இந்தியிலிருந்து ஆங்கிலத்தில் சரியாக மொழிபெயர்க்காமலும், அத்தகைய பிரச்சாரம் நடத்தப்படுகிறது.
- ஜைன மதகுருமார்கள், ஜீவகாருண்ய கூட்டத்தினர், புலால் உண்ணாதே என்பதால் எல்லோருமே உண்ணாமல் நிறுத்தி விடவில்லை.
- கசாப்புக் கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. போதாகுறைக்கு, அந்நிய கடைகளும், நவநாகரிக தோற்றத்துடன் போட்டிப் போடுகின்றன. அக்கடைகளை மூடு என்று யாரும் போராட்டம் நடத்தவில்லை. அவர்களும் எதிர்ப்பவர்களுக்கு லஞ்சம் கொடுக்கிறார்களா என்று தெரியவில்லை.
- ஆகவே, ஊடகங்கள் பொறுப்புடன், உண்மை தகவல்களை கொண்டு, இந்த விசங்களை அணுக வேண்டும். ஏதோ 2019-தேர்தல் பிரச்சாரத்தை செய்யும் பாணியில் ஈடுபடக் கூடாது.
© வேதபிரகாஷ்
27-07-2018
[1] Washington Post, Cows are sacred to India’s Hindu majority. For Muslims who trade cattle, that means growing trouble. By Annie Gowen July 16, 2018.
[2] India — In the year since an extremist Hindu monk was tapped to lead one of India’s biggest states, the country’s Muslim cattle traders have seen their lives change in ways they could not have imagined. First, mobs of Hindu vigilantes emboldened by the monk’s victory began swarming buffalo trucks on the road, intent on finding smugglers illegally transporting cows, which are sacred to the Hindu faith and protected from slaughter in many places in India. Some Muslim men have been killed by lynch mobs. Then dozens of slaughterhouses and 50,000 meat shops were closed, severely limiting access to red meat, a staple of the Muslim community’s diet. Hundreds from the Qureshi clan, Muslims in the meat trade for centuries, lost their jobs.