எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிராண்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக உள்ளிட்ட கட்சிகள், எதிர்ப்பது, “நம்ம ஊர் பொங்கலா,” பிஜேபியா, முருகனையா? கலவரம் மூட்டும் திட்டத்தில் துலுக்கர் (2)
இப்பொழுது 2021ல் பாஜக புறநகர் மாவட்ட அலுவலகம் சூறையாடப்பட்டது (10-01-2021): இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மதுரை மேலமடை போலீஸ் சிக்னல் அருகே உள்ள பாஜக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் 6 பேர் கொண்ட கும்பல் 10-01-2021, ஞாயிறு அன்று மாலை உள்ளே புகுந்து அங்குள்ள சேர், டேபிள்கள் மற்றும் பிரதமர் மோடி, மாநிலத் தலைவர் எல்.முருகன்ஆகியோரது புகைப் படங்களை அடித்து சேதப்படுத்தினர். மதுரை அண்ணா நகர் காவல்உதவி ஆணையர் லில்லி கிரேஸ், ஆய்வாளர் பூமிநாதன் நேரில் சென்று தாக்குதலின்போது அங்கிருந்த பாஜக புறநகர் மாவட்டத் தலைவர் மகா.சுசீந்திரனிடம் விசாரித்தனர். கட்சி அலுவலகம் மற்றும் சிவகங்கை சாலையில் உள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளை சேகரித்து போலீஸார் விசாரிக்கின்றனர். இச்சம்பத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரி அக்கட்சியினர் கட்சி அலுவலகம் அருகே சாலை மறியல் செய்தனர். செய்தியாளர்களின் பலவேறு கேள்விகளுக்கு பதிலளித்த எல்.முருகன், ‘மதுரையில் பாஜக அலுவலகம் தாக்கப்பட்டதன் பின் சில விஷமிகள் உள்ளனர், பயங்கரவாதிகள் தேச விரோதிகள் கலவரத்தை தூண்ட முயற்சிக்கின்றனர்[1], இப்போதே அதனை தடுக்கும் வகையில் தமிழக அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்[2].
முருகனை, ஆதிதிராவிட ஆணையின் துணைத் தலைவராக இருந்தாலும், பிஜேபி தலைவராக இருப்பினும், துலுக்கர் எதிர்ப்பது ஏன்?: இப்பொழுதைய அரசியல் சூழ்நிலையில், இக்கேள்வி முக்கியமாகிறது. முருகன் ஒரு எஸ்.சி என்று யாரும் நினைப்பதாகத் தெரியவில்லை. திருமா வளவன் போன்ற பிம்பத்தை உருவாக்க முடியவில்லை. இந்துத்துவவாதியாக மாறிவிட்டதால், அந்த ஜாதிய அடையாளம் போய்விட்டது போன்ற நிலை ஏற்பட்டுள்லது. அதனால் தான், மற்ற கட்சிகள் முருகனை தைரியமாக எதிர்க்கின்றன கூட்டணி என்ற வலைமற்றும் வளையத்திலிருந்து, அதிமுக லாவகமாக தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது எனலாம். சசிகலா வைத்து, அரசியல் செய்யலாம், ஆனால், ஊழல் என்பதை மறந்து செய்ய வேண்டும். அரசியலில், இதெல்லாம் சகஜமப்பா என்றால், அதிமுக ஒன்றாகலாம், பிஜேபியுடன் கூட்டு வைக்கலாம். அப்பொழுது, ஒழுக்கம் சுத்தம், தர்மம், நியாயம் என்றெல்லாம் பிஜேபி பேச முடியாது. பிஜேபி தனித்து நின்றாலும் யாருக்கும் லாபமில்லை. பிஜேபியுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் இரண்டு மத்திய மந்திரி பதவி கிடைக்கும். ஆக, பிஜேபியுடன் கூட்டு வைக்கும் திராவிட கட்சி அத்தகைய பேரத்தில் தான் ஈடுபடும். அந்நிலையில், திராவிட கட்சிகள் தங்கள் பலம் பெருகுவதாக நினைத்துக் கொண்டால், தகவல் கிடைத்தால், தனித்து நிற்க திட்டம் போடலாம். ஆனால், 2024 வரை பிரச்சினை வரக்கூடாது. நவீன் பட்நாயக், மம்தா போன்ற வலுவுள்ள தலைவராக மாறினால் (தேர்தலில் அதிக இடங்களில் ஜெயித்தால்), அவ்வாறு இருக்கலாம்.
பிஜேபியின் கண்டுகொள்ளா மனோபாவம்– அரசியல் சமரசம்: பிஜேபி “வேல் யாத்திரை,” என்று ஆர்பாட்டம் செய்ததோடு சரி, பிறகு, அமைதியாகி விட்டார்கள். கிறிஸ்தவ பாதிரிகள், பிஜேபியில் சேர்ந்தார்கள் என்று ஆர்பாட்டம் செய்தார்கள். ஆனால், அடுத்த நாள், ஆளுக்கு ஆள், மறுப்புத் தெரிவித்து, விலகி விட்டார்கள். அதிமுகவுடன், கூட்டணி கலாட்டா நடந்து கொண்டிருக்கிறது. மத்திய ஆட்சி-அதிகாரத்தை வைத்து, அப்படியே அமுக்கி விடலாம், என்ற மமதை தான் வெளிப்படுகிறது. முறையாக, தமிழகத்தில் நிலையாக, இந்த்துத்துவ சித்தாந்தத்துடன் நிலைக்க வேண்டும், மக்களை கவர்ந்து, அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற போக்கே காணப்படுவதில்லை. அமீத் ஷா வருவார், எல்லாமே மாறிவிடும், இல்லை, சசிகலா வெளியே வந்தால், எல்லாம் சரியாகி விடும் போன்ற யேஷ்யங்களில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தான், இத்தகைய, கிறிஸ்தவ-துலுக்க திட்டங்கள் பற்றிக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் போலும்.. இவர்களால் அத்தகைய மேடைகள் போட்டு, இந்து ஆதரவையும் அல்லது நாத்திக-கிறிஸ்தவ-துலுக்க எதிர்ப்பையும் காட்ட முடியவில்லை, அரசியல், கூட்டணி, பதவி ஆசை போன்றவற்றால் அடங்கி, சுருங்கிக் கிடக்கின்றனர். இந்துத்துவம், இந்துத்த்வவாதங்கள், இந்துத்துவவாதிகள் வாய்சொற்களில், சமூக ஊடகங்களில் வீராப்பு காட்டுவதோடு சரி. உருப்படியாக எதையும் செய்வதில்லைமரசியல் சமரசம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.
அரசியல் சூழலில் இத்தகைய நிகழ்வுகள் காட்டுவது என்ன?: பிஜேபி, தமிழகத்தில் நிலையான அரசியல் கட்சியாக மாற வேண்டும் என்றால், எல்லா விசயங்களையும் அலசிப் பார்க்க வேண்டும். இப்பிரச்சினையைப் பொறுத்த வரையில், “நம்ம ஊர் பொங்கல்” விசயத்திலும், ஏன் பிஜேபிக்கு எதிராக இருக்கின்றன என்பதை கவனிக்க வேண்டும்.
- ஆக, எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிராண்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் கோஷங்கள் எழுப்பினர்[3] என்பதில், அரசியலையும் மீறிய செயல்திட்டம் இருப்பதை அறியலாம்.
- முஸ்லிம்கள் / துலுக்கர் எதிர்ப்பது வேறு, இவ்வாறு மற்ற கட்சிகளும் சேர்ந்து எதிர்ப்பது வேறு.
- மசூதி இருப்பதால், அத்தெரு வழியாகச் செல்லக் கூடாது என்பதும், துலுக்கரின் திட்டம் என்றே ஆகிறது. கலவரம் உண்டாக்க போட்ட திட்டம் தான்.
- பொதுத் தெருக்களில் யாரும் நடக்கக் கூடாது, செல்லக் கூடாது என்பதே இருக்கும் பல சட்டப் பிரிவுகளை மீறும் குற்றமாகிறது. ஆனால், போலீஸார் அதனை கண்டுகொள்ளவில்லை. இங்கு போலீஸார் ஏற்கெனவே அனுமதி கொடுத்துள்ளனர்.[4]
- பரஸ்பரக் குற்றச்சாட்டுகள், பள்ளிப் பிள்ளைகள், ஒருவர் மீது ஒருவர் கோள் சொல்லும் வகையில் உள்ளது. ஏனெனில், துலுக்கரின் கலவர போக்கு தெரிந்த விசயமாகும்.
- பிஜேபியும் புதிய-புதிய விதங்களில் தேர்தல் நேரங்களில் செய்து வருகின்றது. குறிப்பிட்ட சித்தாந்தம் இல்லாமல், எல்லா முறைகளையும் பின்பற்றி வருகிறது. சில நேரங்களில் செக்யூலரிஸம், பல நேரங்களில் சமத்துவம், மறுபடியும் கம்யூனலிஸம், இந்துத்துவம், மற்ற மதத்தினருடம் சமரசம் என்ற குழப்பவாத போக்குடன் இருக்கிறது. இதனால், தேவையில்லாத விமர்சனங்களுக்கு உள்ளாகிறது.
- மற்ற திராவிட கட்சிகள், இதை விட மோசமான, குழப்பங்களை செய்தாலும், கண்டுகொள்வதில்லை, ஏனெனில், பார்ப்பனியம்-சமஸ்கிருதம்-இந்தி என்று எதர்க்கும் போது, எல்லா கட்சிகளும் ஒன்றாகி விடுகின்றன.
- இப்பொழுது, அதிமுகவே வேறு விதமாக பேசி வருகிறது. அமித் ஷா முன்பு பேசியது மறந்து விட்டது போலாகி விட்டது.
- இவையெல்லாம், பிஜேபிக்கு சாதகமாக இல்லை. இதனால் தான், சிறிய கட்சிகள், திருமா வளவன் போன்ற தலைவர்கள் பிஜேபியை தாக்க, மற்ற முறைகளை கையாளுகிறார்கள். அவர்கள் விரிக்கும் வலையில் பிஜேபிகாரர்கள் விழுகிறார்கள்.
- தனித்துவத்தை நிலைநாட்டி, தனது பலத்தை மெய்ப்பித்தால் ஒழிய, மக்களின் நம்பிக்கையை எந்த கட்சியும் பெற முடியாது.
© வேதபிரகாஷ்
11-01-2021
[1] NEWS18 TAMIL, நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் ஜெ.பி. நட்டா– எல்.முருகன், LAST UPDATED: JANUARY 11, 2021, 2:23 PM IST.
[2] https://tamil.news18.com/news/tamil-nadu/jp-nadda-attends-namma-ooru-pongal-sur-392479.html
[3] Times of India, Muslims object to BJP’s Namma Ooru Pongal campaign at Thirupalai in Madurai, Devanathan Veerappan | TNN | Updated: Jan 10, 2021, 17:59 IST.
Tension prevailed in Thirupalai in Madurai city as a few Muslims from the area objected to the procession carried out by BJP as part of the party’s Namma Ooru Pongal campaign on Sunday. A police officer said that the party organised the procession at Thirupalai Mandhai after obtaining permission from the city police. BJP state president L Murugan too participated. He was received by his partymen and was taken to the celebration venue in the morning. While crossing a mosque in Thirupalai, a few muslims gathered and objected to the loud music that was played during the procession. Tension escalated when someone threw footwear at the crowd. A car belonging to a BJP member was damaged. A team of policemen, who were posted for security reasons intervened and brought the situation under control.
[4] A police officer said that the party organised the procession at Thirupalai Mandhai after obtaining permission from the city police. BJP state president L Murugan too participated.