முதலியாருக்குகோபம்வந்துள்ளது, அமையாகஎச்சரிக்கையும்சேர்ந்துள்ளது: சக்திவேல் முருகனார் இங்கு முதலியார் என்ற ரீதியில் கொதித்துப் போனதை ஒப்புக் கொண்டுள்ளதை கவனிக்கலாம். ஆனால், அது ஏனோதானோ என்றுதான் உள்ளது. “‘இனிமேலாவதுவாரியாரைஇழுத்து, தேவையில்லாதஅரசியல்பேசுவதைநிறுத்திகொள்ளவேண்டும்,” என்று பணிவோடு வேண்டிக் கொண்டது தெரிகிறது. வடுகர் என்று மற்றவர்களை தூஷிக்கும் போக்கு இல்லை, தெலுங்கன் என்ற சொற்பிரயோகம் இல்லை வந்தேறி என்ற வசைபாடலும் இல்லை. இப்பொழுது தான் நாயுடு கருணாநிதி சிலையைத் திறந்து வைத்துச் சென்றுள்ளார். ஜனாதிபதிக்கு நின்றால் திமுக ஆதரவு என்ற நிலையும் வெளிப்பட்டுள்ளது. ஆக சக்திவேல் முருகனார் சமஸ்கிருதத்தைப் பழிப்பார், பிராமணர்களை தூஷிப்பார். ஆனால், வடுகர்களை சீண்ட மாட்டார். அது இவாளுக்கு உள்ள அன்டெர்ஸ்டேன்டிங் எனலாம். இந்துத்துவவாதிகள் இந்துக்களைப் பிரிக்கும் திட்டங்களுக்கு ஒத்துப் போகும் போக்கைக் காணலாம். முக்கியமான பிரச்சினை / பிரச்சினைகளை இவ்வாறு, எதையாவது வைத்துக் கொண்டு திசைத் திருப்புவர். மறக்க வைப்பர். தொடரும் பிரச்சினை / பிரச்சினைகளை கையாள வேண்டும் என்ற எண்ணம், செயல்முறை, முற்போக்கு திட்டம் இல்லை.
மயிலாடுதுறைவிவகாரங்கள்: தமிழகத்தின் தருமபுரம் மடத்தில் ‘பட்டின பிரவேசம்’ சடங்குக்கு 27-04-2022 அன்று தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதே நாளில் சில ஆதினங்களுடன் ‘தெய்வீகப் பேரவை’ ஆரபிக்க கூட்டம் நடத்தினார். ‘பட்டின பிரவேசம்’ தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், மதுரை ஆதீனம், தடை உத்தரவை எதிர்த்துப் பேசியதற்காக தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், இது பற்றி பிரதமரைச் சந்தித்துச் பேசப் போவதாகவும் குற்றம் சாட்டினார். 19-04-2022 அன்று ஆளுனர் மயிலாடுதுரை வந்தது, திக வகையறாக்கள் தாக்க முயன்றது முதலியனவும் இதில் அடங்கும். இதே காலகட்டத்தில் இப்பகுதிகளில் என்.ஐ.ஏ.வும் சோதனை நடத்தி, சிலரை கைது செய்தது. இவ்வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை 08-06-2022 அன்று மேற்கொண்டது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நீடூர், கிளியனூர், உத்திரங்குடி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்தநிலையில் சென்னையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கொண்ட குழுவினர் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஜித் தலைமையில் நேற்று காலை மயிலாடுதுறை சென்றனர். இவர்கள் 5 குழுக்களாக பிரிந்து நீடூர், எலந்தங்குடி, அரிவேளூர், கிளியனூர், உத்திரங்குடி ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை 11 மணி வரை தொடர்ச்சியாக 5 மணி நேரம் நடந்தது. பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்களது சோதனையை முடித்துவிட்டு மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்னை திரும்பினர். ஆனால், ஊடகங்கள் அமுக்கியே வாசித்தன.
மதுரைஆதீனம்மிரட்டுகிறார்கள்என்று புகார்: 04-05-2022 புதன்கிழமை தஞ்சாவூர் அருகே களிமேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம் ஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள், ஆதீனத்துக்குச் சொந்தமான கோயில் சொத்துக்களை ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் அனுபவித்து வருகின்றனர் என்று கூறினார். மேலும், “நான் அவர்களிடம் அதிக கேள்விகளை கேட்பதால், எனக்கு அச்சுறுத்தல் வருகிறது. கோவிலுக்குச் சொந்தமான பகுதியில் வீடுகள் கட்டியுள்ள அவர்கள், வாடகை கொடுக்க மறுக்கின்றனர். கோவில் நிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அவர்கள், ஊருக்குள் நுழைந்து கடவுளுக்கு திருப்பணி செய்ய முடியாது என என்னை மிரட்டுகிறார்கள்,” என்றும் ஆதீனம் கூறினார். பின்னர், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து தனது உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து தெரிவிக்க உள்ளதாகவும் ஆதீனம் கூறினார். மதுரை ஆதீனத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் ஆதீனத்துக்கும், ஆதீன மடத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி, மாநகரக் காவல் ஆணையரிடம் 05-05-2022 வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து ஆதீன மடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திமுகவினர்தினம்–தினம்பிரச்சினைகளைக்கிளப்புவது: பட்டின பிரவேசம் தடை பற்றி பெருமளவில் எதிர்ப்பு கிளம்பியதால், அரசு ஆணையைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. 22-05-2022 பட்டின பிரவேசம் நிகழ்ச்சி அமோகமாக நடந்தது. அப்பொழுது, மதுரை ஆதீனம், உலகம் முழுவதும், எல்லோருக்கும் அறியச் செய்ததால், திகவினருக்கு நன்றியும் தெரிவித்தார். 26-05-2022 மோடியை சந்தித்தார். இதனால், திமுகவினர் கலங்கித் தான் போயினர். மேலும் அன்று மோடிக்கு முன்பே திராவிடியன் மாடல் என்றெல்லாம் ஸ்டாலின் பேசியதும் கேள்விக்குறியானது. திமுகவினர் மெச்சிக் கொண்டாலும், அது எதிர்வினையாகுமா என்று யோசிக்க ஆரம்பித்தனர். மத விசயங்களில் தலையிட மாட்டோம் என்று சொல்லிக் கொண்டு, தினம்-தினம் கோவிலுக்குச் செல்வது, பிரச்சினையைக் கிளப்புவது, செய்தியாக்குவது, அறிக்கை விடுவது என்பது வழக்கமாகி விட்டது. ஆகையால், திராவிடத்துவ-பெரியாரிஸ-நாத்திக-இந்துவிரோத ஆட்சி இவ்வாறான பிரச்சினைகளை தினம்-தினம் எழுப்ப, திட்டமிட்டே செயல்படுவதாகத் தெரிகிறது.
ஜூன் 2022ல்வெளிப்படும்மோதல்போக்கு: ஜூன் 2022லும் ஆரம்பம் முதலே திமுகவினர் தீவிரமாகவே செயல்பட ஆரம்பித்தனர். கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாட்டம் 03-06-2022 வைத்துக் கொண்டு, ஊடகங்களில், வெற்ப்புப் பேச்சை ஆரம்பித்தனர். ராஜிவ் காந்தி என்ற திமுக ஊடக தொடர்பாளர், பிராமணர்களைக் கொல்வதை, பெரியார் பேச்சு வைத்து நியாயப் படுத்தினார். இ.கே.எஸ். இளங்கோவன், இந்தி எதிர்ப்பு சாக்கில், சூத்திரர் என்றெல்லாம் பேசினார். ஸ்டாலின் காயதே மில்லத் சமாதிக்குச் சென்று மரியாதை செல்லுத்துகிறார். கவர்னர் எதிப்பு பிரச்சாரமும் தீவிரமாக தொடர்கிறது. ஆனால், ஆதினங்கள் பற்றி எதிர்மறை செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், ஆங்கில டிவிக்களில் இதைப் பற்றிய விவாதங்கள் நடந்தன. இதனால், திமுகவின் போக்கு நாடெங்கும் அறியப் படுகிறது. அந்நிலையில் தான், எல்லாவற்றையும் மறைக்க, திசைத் திருப்ப, ஆதீனத்தை மிரட்ட ஆரம்பித்துள்ளனர் போலும்…..
முருகன், விசாகம், தமிழ்என்றுஇருந்தஇந்துக்கள்: 12-06-2022 சுபகிருது, வைகாசி , விசாகம் பிறகு அனுஷம், சுக்ல பக்ஷ திரயோதசி பிறகு சுக்ல பக்ஷ சதுர்தசி அன்று முருக பக்தியில் ஆழ்ந்து, உலகை மறந்து, நிம்மதியாக இருந்தவர்கள் பக்தர்கள். அதே நேரத்தில், இதையெல்லாம் சொல்லிக் கொண்டு, தமிழ் என்ற நிலையிலும் இருந்த நிலையில், மதுரை ஆதீனத்தை மிரட்டி வசை பாடியுள்ளது, முரசொலி! ஒரு ஆதீனத்தை, மடாதிபதியை அவர்கள் அந்த வஞ்சனையைப் புரிந்து கொண்டார்களா என்று தெரியவில்லை. பிரிக்கும் சூழ்ச்சியாளர்களுக்கு இதெல்லாம் சுலபமானது……ஏனெனில், திமுகவை எதிர்க்கும் இந்துக்கள் அப்படித்தான் இருக்கின்றனர்…….100, 200 ஜால்றா அடித்துக் கொண்டு குறுகிய கால பலன்களை அனுபவித்து சென்று விடுவர்……..ஆனால், தொடரும் பழி, வினைகள், முதலியவை அப்பாவி இந்துக்களைத் தான் பாதிக்கும், தொடரும்…….. மேலும், இவ்வாறு ஊடகங்களில் விமர்சிக்க, பழிக்க, மிரட்ட எப்படி அவர்களுக்கு உரிமை வருகிறது? இதே போன்ற விமர்சனத்தை மற்ற மத-மடாதிபடிகளின் மீது வைப்பார்களா?
திமுக–இந்துக்கள், இந்துத்துவஇந்துக்கள்: திமுகவில் 80% இந்துக்கள் இருக்கிறார்கள், ஆமாம், ஒட்டு மொத்தமாக திமுகவிற்கு ஓட்டுப் போடுகிறார்கள், ஒற்றுமையாக இருக்கிறார்கள்… ஆனால், இந்துத்துவப் போர்வையில் 99% இந்துக்கள் இருந்தாலும் அவர்கள் ‘இந்துக்கள்’ ஆக இல்லை…..இதைத் தான், இந்துவிரோதிகள் அறிந்து கொண்டு வேலை செய்து கொண்டிருக்கின்றனர்………. மதுரை ஆதீனத்தை ஒருவன் வசைப் பாடுகிறான், மிரட்டுகிறான் என்றால், ஒவ்வொரு இந்துவும் எதிர்க்க வேண்டும்….. முதலியார், பிள்ளை, செட்டி, தேவர், ரெட்டி, நாயக்கர், வேளாளர், நாயுடு, என்றுதான் இருக்கின்றனர்……………ஆட்சி, அதிகாரம், அந்தஸ்து, பணம், சுகம்……………எல்லாம் அனுபவித்து வருகின்றனர்……………வேலை செய்கிறவன் வேலை செய்து கொண்டு தான் இருக்கிறான்……………வேலைகாரன் எஜமானன் ஆனால், அவனுக்கு ஒரு வேலைகாரன் வருகிறான்…………………எந்த கட்சி இதனை மாற்றியது? ஆனால், ஆதீனங்களை, மடங்களை, மிரட்ட ஒன்றாக வந்து விடுகின்றனர்……………..முரசொலியின் எச்சரிக்கையை, கலைஞர்.செய்திகள் விசுவாசத்துடன் வெளியிடுகிறது.
12-06-2022 – முரசொலிஎச்சரிக்கையைவெளியிட்டகலைஞர்.செய்திகள்: தமிழக முதல்வர் குறித்து பி.ஜே.பி.யின் எச்.ராஜா கூறியதையும் மதுரை ஆதினத்துக்கு சுட்டிக்காட்டிட விரும்புகிறோம்[1]. “Stalin is more Dangerous than Karunanithi” எச்.ராஜாவின் இந்தப் பதிவில் பல பொருள்கள் பொதிந்துள்ளன[2]. இதனையும் அரிஹர தேசிகர் உணரவேண்டும் என முரசொலி நாளிதழ் ‘சிலந்தி’ கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது[3]. அது என்ன சாபக்கேடோ தெரியவில்லை, சமீப காலங்களாக பெருமை மிகு மதுரை ஆதினத்துக்கு கர்த்தர்களாக வருபவர்கள் வரம்பு மீறி, வாய்துடுக்காய் பேசி அந்த ஆதினத்தின் சிறப்பை சீரழித்து வருகின்றனர். மதுரை பாஷையில் சொல்வதென்றால், தாங்கள் ஆதினம் என்பதை மறந்து ஏதாவது ‘குண்டக்க, மண்டக்க’ என பேச்சிலும் செயலிலும் ஈடுபடுகின்றனர்! தேவையற்ற விவாதங்களில் ஈடுபட்டு, ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்ற நிலைக்குள்ளாக்கியுள்ளனர்![உபயொகப் படுத்தப் பட்டுள்ள வார்த்தைகளை கவனிக்கவும்]
நித்தியானந்தாபெயர்சொல்லிதோஷிப்பது: முன்பு ஆதினமாக இருந்து மறைந்த அருணகிரி ஆதினம் காலத்தில், அவரது செயல்களால் பல சர்ச்சைகள் ஏற்பட்டதை நாடறியும்! அவரது பல செயல்பாடுகள் விமர்சனத்துக்கு ஆளாகி, ஆதினத்தையே தலைகுனிய வைத்தது! அவர் ஆன்மிகத்தில் அரசியலை நுழைத்து – ஆன்மிகவாதியாகவோ – அரசியல் வாதியாகவோ இல்லாமல் இரண்டும் கெட்டானாக நடத்திய ‘கோமாளி’ கூத்துக்களால் திருநாவுக்கரசர் தோற்றுவித்த சீர்மிகு அந்த ஆதினம் பல தலைக்குனிவுகளை சந்தித்தது! நித்யானந்தா எனப் பெயர் சூட்டிக்கொண்டு, நித்தம் ஆனந்தம் அனுபவித்துவிட்டு, அதனால் பல வழக்குகளில் சிக்கிக் கொண்டு நாட்டை விட்டு ஓடி, இன்று தேடப்படும் குற்றவாளியாக உள்ள ஒரு கிரிமினலை அன்று மதுரை ஆதினத்தின் பீடாதிபதியாக நியமித்து மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானார் அன்றைய பீடாதிபதி அருணகிரி! [ஆட்சி-அதிகாரத்தில் உட்கார்ந்திருக்கும் மனிதர்களின் சரித்திரத்தையும் மற்றவர்கள் அறிய சொவார்களா? அல்லது அதை மற்றவர்கள் வெளியிட்டால் சும்மா இருப்பார்களா?]
நித்யானந்தாவைநியமிக்கபலகோடிகைமாறியதாககுற்றமும்சாட்டப்பட்டதுஎன்றுகுறிப்பிட்டது: நித்யானந்தாவை வாரிசாகவும் அடுத்த பீடாதிபதியாகவும் நியமித்த அன்றைய மதுரை ஆதினத்தின் செயல் கடும் கண்டனத்துக்கு உள்ளானது மட்டுமல்ல; அந்த நியமிப்பின் மூலம் பல கோடி கைமாறியதாக குற்றமும் சாட்டப்பட்டது. அருணகிரி பணம் பெற்றுக்கொண்டு பீடாதிபதி பதவியை நித்யானந்தாவுக்கு வழங்கியதாக விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். காஞ்சி மடமும், திருவாவடுதுறை ஆதின மடம் உள்ளிட்ட சைவமதங்கள் பலவும் மடாதிபதி அருணகிரியின் செயலுக்கு கண்டனக்குரல் எழுப்பின! அப்போது நெல்லை கண்ணன் தலைமையில் ஆதின மீட்புக்குழுவே அமைக்கப்பட்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. எல்லா சைவ மடங்களும் மதுரை மடத்தின் செயலுக்கு எதிர்ப்புத்தெரிவித்தன. [அந்த நெல்லை கண்ணன் நிலை எப்படி என்று அறிந்ததே. கொள்கையற்றவர்கள், பணம், விருது, அந்தஸ்து என்று எதிர்பார்த்து வேலை செய்பவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.]
ஜெயலலிதாபிரதமர்ஆவார்என்றஆரூடம்பொய்த்தது: ஆதினம் அருணகிரி, அதைவிட அத்துமீறி அ.தி.மு.க.வை ஆதரித்து நேரடியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு நடத்தியது கேலிக்கூத்துக்களாகும்! நாகர்கோவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அருணகிரி பேசியது இன்றும் வலைதளங்களில் உள்ளது. நாகர்கோவில், வடிவீஸ்வரம் தேரடி வீதியில் அ.தி.மு.க.வை ஆதரித்துப் பேசிய நகைச்சுவைகளை கீழே தருகிறோம்; நீங்களும் ரசியுங்கள். “தமிழகத்தில்பள்ளி, கல்லூரி, கோயில்களில்இதுவரைஎழுந்தருளியவன்அம்மாபிரதமராகிடஇன்றுகுமரிமக்களிடம்வாக்குசேகரிக்கஉங்கள்முன்எழுந்தருளியுள்ளேன். இந்தவரத்தைகொடுத்ததுஇறைவன். அம்மாஇந்தியாவின்பிரதமராகிநம்மைஎல்லாம்காப்பாத்தப்போறாங்க, அதுவும்இறைவன்கொடுத்தவரம். அதைநிறைவேற்றஇந்தசன்னிதானத்தைஇறைவன்அனுப்பியுள்ளார். அம்மாபிரதமர்ஆவார்எனஅவர்ஜாதகம்சொல்லுகிறது,” ஜெயலலிதா பிரதமராவார் என்பது ஆண்டவன் கட்டளை – ஜாதகம் சொல்லுகிறது என்றெல்லாம் பேசி ஜாதகத்தைப் பொய்யாக்கி, ஆண்டவனுக்கும் அவப்பெயர் உருவாக்கிவிட்டு திருமிகு மதுரை ஆதினத்தின் திருவை சீரழித்துச் சென்றார்! [பிரதமர் ஆக வேண்டும் என்ற பேராசை எல்லோருக்கும் உள்ளது, ஆகவே, எச்சரிக்கையாக இருப்பது நல்லது. யாராவது, ஆரூடம், ஜோசியம் என்று யாதாவது சொல்லிவிடப் போகிறார்கள்…..]
அறநிலையத்துறைஅமைச்சரைஎதிர்த்துப்பேசியஆதினம்: இப்போது மதுரை ஆதினமாகியுள்ள அரிகர தேசிகர் ஞான சம்பந்தமோ முன்னாள் பீடாதிபதி ‘அருணாகிரியை’ விட தான் குறைந்தவறில்லை என்பது போல அபத்தங்களைப் பேசி வருகிறார். கழக அமைச்சரவையில் அடக்கத்துக்கும் பொறுமைக்கும் பக்திக்கும் பணிவுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவையே கோபம் கொள்ளச் செய்யும் அளவு ஆதினம் அரிகரதேசிகரின் பேச்சும் செயல்பாடுகளும் அமைந்துள்ளன. மத நம்பிக்கைகள் அது எந்த மதத்தினருடையதாக இருந்தாலும் அதில் தலையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டோடு செயல்படுகிறது, கழக ஆட்சி! [அடேங்கப்பா, ‘‘கோபம் கொள்ளச் செய்யும் அளவு” என்று இனி சட்டத்தில் விவரிக்கப் பட வேண்டும், பிரிவையும் சேர்க்க வேண்டும், பிறகு அத்தகைய சட்டப் பிரிவை மீறுபவர்களை கைது செய்து விடலாம்.]
சட்டஒழுங்குப்பிரச்சினையும்ஏற்பட்டுவிடக்கூடாது: இந்தியாவிலேயே மத நல்லிணக்கம் தமிழகத்திலேதான் சீராக, சிறப்பாக இருக்கிறது. சமீபத்தில் தருமபுர ஆதின குரு பூஜையை ஒட்டி நடைபெற இருந்த பட்டினபிரவேச நிகழ்ச்சியில் ஆதினகர்த்தரை பல்லக்கில் சுமந்து மனிதர்கள் வருவதற்கு சில கட்சிகளும் இயக்கங்களும் எதிர்ப்புத் தெரிவித்ததை ஒட்டி, அதனால் எந்த சட்ட ஒழுங்குப் பிரச்சினையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற போக்கில் அந்த நிகழ்வுக்கு, மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்த நிலையில் – அதனை ஒட்டி விவாதம் உருவானபோது, இதனால் தமிழகம் கட்டிக்காக்கும் மத நல்லிணக்கத்துக்கும் ஊறு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்திலும், இதனை வைத்து குளிர் காய நினைத்த சில மதவெறிக் கூட்டத்தின் செயலுக்கு இடம்தராத வகையிலும், தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உடனடியாக தலையிட்டு ஆதினகர்த்தர்களுடன் அவரும் பேசி, அவர்களை முதலமைச்சரையும் சந்திக்க வைத்து – ஒரு சுமூக நிலையை உருவாக்கினார்! [ஆக, ‘‘சட்ட ஒழுங்குப் பிரச்சினையும் ஏற்பட்டுவிடக்கூடாது,” இதையும் சேர்த்துக் கொள்ளலாம். எப்படியாவது உள்ளே தள்ளவேண்டும் என்றால், இப்படியெல்லாம் யோசித்து எழுதுவார்கள் போலும்.]
05-06-2022 அன்றுநாத்திககாயிதேமில்லத்சமாதியில்மலர்போர்வைஅணிவித்துமலர்தூவிமரியாதைசெலுத்தினார்: மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காயிதே மில்லத் 127-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்[1]. மேலும், இது குறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்” இந்தித் திணிப்பு எதிர்ப்பு – தமிழ் இந்தியாவின் ஆட்சி மொழி – மத நல்லிணக்கம் – சிறுபான்மை மக்களின் கல்வி வளர்ச்சி எனத் தமிழ்ச் சமூகத்துக்கும் இந்தியச் சிறுபான்மையினருக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழும் ‘கண்ணியத் தென்றல்’ காயிதே மில்லத் பிறந்தநாளில் அவர்தம் தொண்டை நினைவுகூர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்[2].
பேரூர்அதீனம்பேட்டி: பேரூர் ஆதினத்தின் பேட்டி எதிர்மறையானது[3], ‘கபாலீஸ்வரர்கோவிலைஇடித்துத்தான்சாந்தோம்தேவாலயம்கட்டப்பட்டதாககருத்துஒன்றுசமூகவலைதளங்களில்பரவிவருகிறது. அதுபற்றிதமிழகஅரசுவிசாரணைநடத்தவேண்டும். திருக்குறள், திருஞானசம்பந்தர், ஆண்டாள்போன்றவர்களின்கருத்துக்கள்இயேசுபேசியகருத்துக்களாகபரப்பப்பட்டுவருகின்றன.தமிழ்நாட்டில்சமயக்கல்விக்குமுன்னுரிமைகொடுத்துஅறநிலையத்துறைகோவில்களிலும்அதனைநடைமுறைசெய்யவேண்டும். நதியாத்திரைநடத்திநீர்நிலைகளைப்பாதுகாக்கநடவடிக்கைஎடுக்கவேண்டும். பசுக்களின்எண்ணிக்கைகுறைந்துவருகிறதுஅதனைதத்தெடுத்துகோவில்களில்உள்ளகோமடங்களில்பாதுகாக்கவேண்டும்.கோவில்ஆக்கிரமிப்புநிலங்களைமீட்டுதனியார்தொண்டுநிறுவனங்களின்உதவியுடன்மரக்கன்றுகளைநட்டுபராமரிப்புசெய்யநடவடிக்கைகள்எடுக்கவேண்டும்,’ என்றார்[4]. இவரது பேட்டி, கிருத்துவர்களுக்கு சாதகமாக இருப்பது தெரிகிறது. அகில இந்திய துறவிகள் மாநாடு வரும் (ஜூன்) 11,12இல் நடைபெற உள்ளது.
முன்னர்விஷ்வஇந்துபரிஷத்அமைப்பின்பொதுசெயலர்மிலிந்த்பரண்டேஏட்டிஅளித்தது; விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் பொது செயலர்குரோம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்[5]. அப்போது அவர் கூறியதாவது[6]: ‘விஷ்வஇந்துபரிஷத்தின்வரலாற்றுசிறப்புமிக்கமாநாடு, ஜூன் 24முதல்ஜூன் 26 வரை, காஞ்சிபுரத்தில்நடைபெறுகிறது. ஜூன் 4, 5தேதிகளில், மதுரையில்அகிலபாரதஇந்துதுறவிகள், இந்துயோகிகள்மாநாடும்நடைபெறுகிறது. தமிழகத்தில்இந்துசமுதாயத்துக்குபலசவால்கள்உள்ளன. இதுகுறித்துவிவாதிக்கநாடுமுழுவதிலும்இருந்துபலர்தமிழகத்துக்குவரவேண்டும். எத்தனையோகோயில்கள்தமிழகத்தில்இடிக்கப்பட்டாலும், தேவாலயங்கள், மசூதிகள்இடிக்கப்படுவதில்லை. தமிழகத்தில்அரசின்கட்டுப்பாட்டில்உள்ளகோயில்கள்பராமரிப்பைஇந்துஅமைப்புகளிடம்அரசுவழங்கவேண்டும். நம்நாட்டில்ஆறுமாநிலங்களில்மதமாற்றதடைசட்டம்அமல்படுத்தப்பட்டுள்ளது. இங்கும்சரியானசட்டக்கட்டமைப்புஉருவாக்கப்பட்டுமதமாற்றதடைச்சட்டத்தைக்கொண்டுவரவேண்டும். மதம்மாறியஎந்தபழங்குடிசமூகமும்இடஒதுக்கீட்டின்பலனைப்பெறக்கூடாதுஎனவிஷ்வஇந்துபரிஷத்அமைப்புநீண்டநாட்களாககோரிக்கைவிடுத்துவருகிறது. ஆனால், பழங்குடியினர்பலர்மதமாற்றம்செய்தபின்பும்இடஒதுக்கீட்டுபலனைப்பெற்றுவருகின்றனர். வெளிநாட்டுவிரோதசக்திகளின்ஆதரவுடன்நடைபெறும்மதமாற்றதொழில்இந்துக்கள்மற்றும்நம்நாட்டுக்குஎதிரானது. பலஇஸ்லாமியதீவிரவாதஅமைப்புகள்மதமாற்றமுயற்சிகளுக்காகதீவிரவாதத்தைகட்டவிழ்த்துவிடுகின்றனர். இத்தகையமதமாற்றங்களைத்தடுக்கமதமாற்றதடைச்சட்டத்தால்மட்டுமேமுடியும். அதுவேநம்தேசத்தின்கலாச்சாரத்தையும், நம்பாரம்பரியம்மற்றும்மக்களையும்பாதுகாக்கஉதவும். கோயில்களுக்குதானமாகஅளிக்கப்படும்தங்கங்களுக்குகடவுள்தான்உரிமையாளர். அரசுஉரிமையாளர்கிடையாது”.
ஆன்மீகம், நாத்திகஆன்மீகம், திமுகஆன்மீகம்முதலியவகைப்படுத்திஅறியவேண்டியுள்ளது: இந்து துறவியர், காவி துறவியர், ஆன்மீக துறவியர், கருப்பு ஆன்மீகம், காவி ஆன்மீக்கம், பெரியார் ஆன்மீகம், ஆன்மீக அரசியல், திராவிட ஆன்மீக அரசியல், பெரியாரிஸ ஆன்மிகம் என்றெல்லாம் பேசி வரும் நிலையில், பல விசயங்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியுள்ளது. முடிவாக கவனித்தல் அரசினால் எந்த பிரயோஜனும் இல்லை என்று அறிந்து கொள்ளளாம். இந்துக்களின் நலன் எவ்வாறு காக்கப் படும், காக்கப் படவேண்டும் என்பது தான் பிரச்சினை, விசயம் மற்றும் முக்கியத்துவமே தவிர அரசியல், ஆட்சி முதலியன எந்த பிரயோஜனமும் இல்லை. தினம்-தினம் ஒவ்வொரு இந்துவும் தெரிந்தோ-தெரியாமலோ தனது கடமைகளை செய்து வருகிறான். புண்ணிய ஸ்தலங்களில் இருக்கும் நல்லவர்கள் மூலம் தான் அவை தொடர்ந்து இயங்குகின்றன. அதுவரை, இந்நிலை தொடர்ந்து நிலைக்கும். நாத்திகர், இந்துவிரோதிகள், கோவில் இடிப்போர், கொள்ளையடிப்போர், வருவர்-செல்வர், ஆனால், பக்தியுடன் கோவில்கள் நிலைத்து நிற்கும், நிற்கின்றன.
04-06-2022, சனிக்கிழமை அன்று மதுரையில் இந்து துறவிகள் மாநாடு ஆரம்பித்தது, மடாதிபதிகள் கலந்து கொண்டனர்!
04-06-2022, சனிக்கிழமை அன்று திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில் இந்து அறநிலையைத் துறை அமைச்சர்! பூரண கும்ப மரியாதை!
05-06-2022 அன்று ஞாயிற்றுக்கிழமை, அன்று மதுரையில் இந்து துறவிகள் மாநாடு தொடர்ந்தது, முடிந்தது, தீர்மானங்கள் போடப் பட்டன!
05-06-2022 அன்று நாத்திக பகுத்தறிவு முதலமைச்சர் காயிதே மில்லத் சமாதியில் மலர் போர்வை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்!
மேலும், ட்விட்டரில்,– ‘மத நல்லிணக்கம், சிறுபான்மை மக்களின் கல்வி வளர்ச்சி என கலங்கரை விளக்கமாகத் திகழும் ..தொண்டை நினைவுகூர்கிறேன்’ என பதிவு..
ஆனால், இந்து துறவிகள் மாநாட்டிற்கு வாழ்த்துத் தெரிவித்தார்களா, பகுத்தறிவு-ஆன்மீகம், செக்யூலரிஸ நாத்திகத்தைப் பின்பற்றினார்களா?
இங்கு குங்குமம்-விபூதி அழித்தது, கீழே கொட்டியது போல எதையாவது புரட்சிகரமாக செய்தார்களா? ஷிர்க் மறக்கப் பட்டதா? ஷிர்க்-ஷிர்க்குடன் கலந்து மறைந்ததா?
அட, ஆர்.எஸ். எஸ், பிஜேபி தலைவர்களே, ‘பெரியார் கருத்துகளும் எங்களுக்கு உடன்பாடே’ என்று சொல்லி விட்டார்களே- என்பார்களா?
அட, செக்யூலரிஸத்தில், ஆன்மீக அரசியலில், திராவிடத்துவ கூட்டணியில், வெங்காயத்தில் இதெல்லாம் சகஜமப்பா என்றும் சொல்வார்களோ?
ஒரே குட்டையில் ஊறிய மட்டையோ, கட்டுமரமோ, வெங்காயமோ, வெள்ளைப் பூண்டோ வாங்கப்பா திராவிட மாயை-மயக்கத்துடன் உறிக்கலாம் என்பார்கள் போலும்!
இந்துதுறவியர்மாநாடுஜூன் 4 மற்றும் 5, 2022 தேதிகளில்மதுரையில்நடந்தது – மடாதிபதிகள்பேசியது (2)
பிரதமருடன்சந்திப்பு – மடாதிபதிமுன்னர்மிரட்டப்பட்டது: மதுரை ஆதினம் ஹரிகர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமி தலைமை வகித்து பேசியதாவது ‘வெள்ளைக்காரர்கள்ஆட்சியில்கோயில்களுக்குசொந்தமானசொத்துக்களுக்குகுத்தகை, வாடகையைசம்பந்தப்பட்டோர்முறையாகசெலுத்தினர். பின்காங்.,-தி.மு.க., – அ.தி.மு.க., ஆட்சிகளில்குத்தகை, வாடகையைமுறையாகசெலுத்தத்தவறிவிட்டனர்[1]. இதனால்கோயில்களில்திருப்பணியைமேற்கொள்ளமுடியாதநிலை. திருத்துறைப்பூண்டியில்ஒருகோயிலுக்குசொந்தமானசொத்தைஅனுபவிக்கும்ஆளுங்கட்சியைசேர்ந்தவர்ரூ. 21 லட்சம்வாடகைபாக்கிவைத்துள்ளார். அக்கோயிலுக்குசொந்தமானஇடத்தில்வீடுகட்டப்போவதாகமிரட்டினார். இதைப்பற்றிபேசினால்தடாலடியாகஎதிர்ப்பதாககூறுகின்றனர். எதிர்ப்பைசமாளிக்கும்நிலையில்உள்ளோம். இதற்காகபிரதமர்நரேந்திரமோடியைசந்தித்துபேசும்நிலைக்குதள்ளப்பட்டேன்’. சமீபத்தில் வந்தபோது, அவர் சந்திக்கவும் செய்தார். ஆனால், என்ன பேசினார் என்ற விவரங்கள் எல்லாம் தெரியாது.
மடங்கள்செயல்படவேண்டும் – அரசியல்வாதிகளால்மிரட்டப்படக்கூடாது – ஜால்ராஅடிக்கமுடியாது[2]: மதுரை ஆதினம் ஹரிகர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமி தலைமை வகித்து பேசியதாவது, ‘இதை கேள்வி கேட்காமல் பதுங்கி கிடக்க வேண்டுமா, என்னால் ஜால்ரா அடிக்க முடியாது[3]. ஹிந்துக்களிடம் ஒற்றுமை, நம்பிக்கை, துணிவு இல்லை. இவற்றை ஏற்படுத்த வேண்டும். இதற்காகவும், கோயில்களை பாதுகாக்கவும் கிராமங்கள் தோறும் செல்ல வேண்டும்,; என்றார். இன்று (ஜூன் 5) மாலை 5:00 மணிக்கு மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே நிறைவு விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. வி.எச்.பி., அகில உலக பொதுச் செயலாளர் மிலிந்த் ப்ராண்டே பங்கேற்கிறார். தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். விசுவ இந்து பரிஷத் அமைப்பின் அறவழிகாட்டும் ஆன்றோர் பேரவையின் சார்பில் மாநிலம் தழுவிய துறவியர் மாநாடு மதுரையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று மதுரை பழங்காநத்தம் பகுதியில் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடந்தது. துறவியர் மாநாட்டில் இந்து சமயத்தை வளர்ப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது. அது தொடர்பாக பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மதுரையில் 2 நாட்கள் நடைபெற்ற துறவியர் மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து துறவிகள், ஆதீனங்கள், மடாதிபதிகள், ஜீயர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் இந்து சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கோவில்கள்அரசியல்வாதிகளின்தலையீடுஇல்லாமல்செயல்படவேண்டும்: தமிழகத்தில் பிற மதத்தவரின் வழிபாட்டு தலங்கள் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால் இந்து கோவில்கள் மட்டும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன[4]. எனவே இந்து கோவில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து ஆதீனங்கள், ஜீயர்கள், மடாதிபதிகள் அடங்கிய தனி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்[5]. மதமாற்றத்தடை சட்டம் நாடு விடுதலையடைந்தபோது இந்தியாவில் 93 சதவீதம் இந்துக்கள் இருந்தனர். ஆனால் தற்போது இந்துக்களின் எண்ணிக்கை 80 சதவீதமாக குறைந்துள்ளது[6]. இதற்கு மதமாற்றம்தான் காரணம். எனவே இந்தியாவில் 7 மாநிலங்களில் மதமாற்ற தடை சட்டம் அமலில் உள்ளது போல தமிழகத்திலும் மதமாற்றத்தடை சட்டம் கொண்டு வர வேண்டும்[7]. நதி யாத்திரை தமிழகத்தில் சமயக்கல்விக்கு முன்னுரிமை கொடுத்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்து கோவில்களிலும் சமயக்கல்வி வகுப்புகள் நடத்த வேண்டும். தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள நதிகள் நீர்நிலைகளை மீட்டு நதி யாத்திரை நடத்த வேண்டும். இந்து மயானங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பசுக்களை இறைச்சிக்காக வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதை தடுக்க வேண்டும். நிதி ஆதாரமுள்ள கோவில்களில் கோசாலைகள் அமைத்து பசுக்களை பாதுகாக்க வேண்டும். கோவில் இடங்களை மீட்டு தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
05-06-2022 பொதுகூட்டம்நடந்தது: பேட்டியின்போது விசுவ இந்து பரிஷத் அகில உலக பொதுச் செயலாளர் ஸ்ரீமிலிந்த் ப்ராண்டே, அகில உலக இணைப்பொதுச் செயலாளர் ஸ்ரீகோ.ஸ்தாணு மாலயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பொதுக்கூட்டம் இதனைத் தொடர்ந்து மாலையில் பழங்காநத்தம் பகுதியில் பொதுக் கூட்டம் நடந்தது[8]. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமை தாங்கி தீர்மானங்களை வாசித்தார்[9]. விசுவ இந்து பரிஷத் அகில உலக பொதுச் செயலாளர் ஸ்ரீமிலிந்த் ப்ராண்டே பேசுகையில், இந்துக்கள் அனைவரும் இந்து மதத்தை காக்க ஒன்றுசேர வேண்டும் அதுமட்டுமின்றி இந்துக்களை காப்போம் என சபதம் ஏற்க வேண்டும் என்றார். அகில உலக இணை பொதுச் செயலாளர் ஸ்ரீகோ. ஸ்தாணு மாலயன் பேசுகையில், மக்கள் விழித்தெழ வேண்டும். இந்துக்களை தவறாக பேசுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றார். இதனைத்தொடர்ந்து மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞான சம்பந்த பரமாச்சார்ய சுவாமி பேசுகையில், ஆதீனங்கள் அரசியல் பேசக்கூடாது என்கிறார்கள்[10]. அப்படி என்றால் அரசியல்வாதிகளுக்கு கோவிலுக்குள் என்ன வேலை? அவர்களுக்கு கோவில்களில் எந்த சம்பந்தமும் இல்லை.[11] இந்து கோவில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும்[12]. அரசியல்வாதிக்கள் வெளியேற வேண்டும்[13]. அறநிலையத்துறையை நீக்கிவிட்டு நீதிபதி தலைமையில் குழு அமைத்து கோவில்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.
[1] திராவிடக் கட்சியினர் வேண்டுமென்றே அவ்வாறு செய்தனர். நிலகங்களை அபகரித்தனர். அரசு பத்திரப் பதிவு மற்றத் துறையினர் கூட்டுடன், வெவ்வேறு பெயர்களில் மாற்றி விற்கவும் செய்தனர். நீதிமன்ற தீர்ப்புகளே அவற்றை எடுத்துக் காட்டுகின்றன..
[2] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், பதுங்கமுடியாது, ஜால்ராஅடிக்கமுடியாது.. அதனாலதான்பிரதமரைபார்தேன்.. திமிறிஎழும்மதுரைஆதீனம்., Ezhilarasan Babu, Chennai, First Published Jun 4, 2022, 3:33 PM IST; Last Updated Jun 4, 2022, 3:33 PM IST
[4] தினமணி, அறநிலையத்துறைகட்டுப்பாட்டிலிருந்துஇந்துஆலயங்களைவிடுவிக்கவேண்டும்: பேரூா்ஆதீனம், By DIN | Published On : 05th June 2022 10:59 PM | Last Updated : 06th June 2022 02:49 AM.
[10] தினமணி, ஆதீனங்கள்அரசியல்பேசாமல்வேறுயார்பேசுவது? மதுரைஆதீனம், By DIN | Published On : 05th June 2022 10:57 PM | Last Updated : 05th June 2022 10:57 PM.
இந்துதுறவியர்மாநாடுஜூன் 4 மற்றும் 5, 2022 தேதிகளில்மதுரையில்நடந்தது (1)
தமிழகமடாதிபதிகள்இந்துஎன்றநிலையில்செயல்படவேண்டும்: துறவியர் மாநாட்டில், ‘சைவர் இந்துக்கள் அல்லர்” என்று பிரகடனப் படுத்திக் கொண்டவர்களும் கலந்து கொண்டிருப்பது வியப்பாக இருக்கிறது[1]. விசுவ ஹிந்து பரிஷத் என்ற பேனரின் அமைப்பின் / கீழ் அவர்கள் குழுமியுள்ளனர், மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். நாட்டின் அரசியல் நிர்ணய சானம் மற்றும் இருக்கின்ற சட்டங்களின் படியுள்ள வரையறைகள், நெறிமுறைகள் மீறி அறிக்கைகள் வெளியிடுதல், செயல்படுதல் மறுபடியும் அத்தகைய நிலையை மாற்றிக் கொள்ளுதல் முதலியன அவர்களின் முரண்பாட்டை காட்டுகிறது என்பதில்லாமல், உள்நோக்கம் என்ன, திட்டம் என்ன போன்றவற்றைக் கவனிக்க வேண்டியுள்ளது. ஆட்சி மாறியதும், அத்தகைய போக்கு காண்பிக்கப் படுகிறதா அல்லது இப்பொழுதைய அரசின் ஒற்றர்களாக வேலை செய்யும் நிலையில் உள்ளார்களா என்றும் நோக்க வேண்டியுள்ளது[2]. துறவியர் என்று சொல்லிக் கொள்வதனால், மடாதிபதிகளாக இருப்பதனால், காவி அணிந்து கொள்வதனால், அவர்கள் துறவியர் என்பதை விட நடந்து கொள்வதில் தான் அவர்களது துறவறம் மற்றும் துறவியர் குணாதிசயங்கள் தீர்மானிக்கப் படும்.
திராவிடத்துவ அரசியல் மாறாது (1970-2022): இந்து அறநிலையைத் துறை அமைச்சரும் தினம்-தினம் அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். ஒருவருடத்தில் என்ன நடந்தது, அவர்களின் போக்கு என்ன என்பதனை அறிந்தாகி விட்டது. இவேரா-அண்ணா-கருணாநிதி அழி வந்தவர்கள், அவர்கள் வழியில் தான் ஆட்சி செய்வோன் என்ற பின், அவர்களிடம் , இந்துக்களுக்கு சாதகமாக எதையும் எதிர்பார்க்க முடியாது. மு.க. ஸ்டாலினுக்கு பதிலாக சேகர்பாபு, குங்குமம்-விபூதி வைத்துக் கொண்டு கோவில்-கோவிலாக சுற்றி வருவார். துர்கா ஸ்டாலினும் தனது பாணியில் செய்து வருவார். யூ-டியூப்புகள், செய்திகள், புகைப் படங்கள் வந்து கொண்டே இருக்கும். கோவில் கொள்ளை, கோவில் நிலம் அபகரிப்பு, கிருத்துவர்-முஸ்லிம் ஆக்கிரமிப்பு-அபகரிப்பு எல்லாம் தொடர்ந்து கொண்டே இருக்கும். நீதிமன்றங்களுக்கு சென்று முடக்கப் படும். முக்கால்வாசி விவகாரங்கள் கோவிலுள் உள்ளவர்களுக்கேத் தெரியாமல் இருக்கும், அதனால், பொது மக்கள் பற்றி கவலைப் பட வேண்டாம்.
04-06-2022 அன்றுதிருக்கடையூர்அபிராமிஅம்மன்ஆலயத்தில்அமைச்சர்: மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்திற்கு 04-06-2022 அன்று சென்றிருந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சென்ற அமைச்சர், ஆதீனத்தின் 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து பேசினார். தொடர்ந்து ஆதீன மடத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீகுருஞானசம்பந்தர் அருள் நிலையம் என்ற விருந்தினர் மாளிகையை அமைச்சர் மற்றும் ஆதீன குருமகா சந்நிதானம் திறந்து வைத்தனர். பின்னர் தருமையாதீனம் சிவனருள் இயக்கத்தின் சார்பில் 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியில் ஒரு பகுதியாக ஆதீன வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்த அமைச்சர், அங்குள்ள தேவார திருமுறை பாடசாலையை பார்வையிட்டு மாணவர்களுடன் உரையாடினார். அங்கு ஆதீனம் சார்பில் அமைச்சருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஆக, இத்தகைய மரியாதைகள் தொடரும், தொடர்ந்து கொண்டிருக்கும்….. கணக்கில் அமைச்சருக்கு மரியாதை கொடுத்த செலவு என்று எழுதுவார்களா, தணிக்கையாளர்களும் அதைப் பற்றி கேட்பார்களா?
ஆதீனத்தின்கோயில்கள்உள்ளிட்டஅனைத்துகோயில்களிலும்கணக்குவழக்குபார்ப்பதுவழக்கமானஒருநடைமுறைதான்: தொடர்ந்து செய்தியாளர்களை ஆதீன மடாதிபதி மற்றும் அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் சந்தித்தனர்[3]. அப்போது அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறும்போது[4], “சைவத்துடன், தமிழைவளர்க்கும்பணியில்தொன்மையானஆதீனங்கள்ஈடுபட்டுள்ளன. ஆதீனங்களுக்குஉண்டானசிறப்பைதமிழகஅரசுவழங்கும். அவற்றின்பாரம்பரியங்களில்தமிழகஅரசும்இந்துஅறநிலையத்துறையும், தலையிடாது. மேலும்உயர்நீதிமன்றஉத்தரவுப்படியேசிதம்பரம்நடராஜர்கோயிலில், கனகசபையில்பக்தர்கள்தரிசனம்செய்வதுகுறித்துதமிழகஅரசுநடவடிக்கைஎடுத்துள்ளது. மற்றபடிசிதம்பரம்நடராஜர்ஆலயத்தைஇந்துஅறநிலைத்துறைதனதுகட்டுப்பாட்டில்எடுத்துக்கொள்ளும்திட்டம்எதுவும்இல்லை..”.
இந்துஅறநிலையைத்துறைஅமைச்சர்தொடர்ந்துபேசியது: தருமபுரம்ஆதீனத்துக்குச்சொந்தமானதிருக்கடையூர்கோயில்மிகச்சிறந்தமுறையில்பராமரிக்கப்படுகிறது. இதுபோன்றகோயில்களில்இந்துசமயஅறநிலையத்தறைதலையிடவேதலையிடாது. பொதுகோயில்களில்ஏதேனும்பிரச்னைகள், முறைகேடுகள்ஏற்பட்டால்அதில்தலையிடும்உரிமைஅறநிலையத்துறைக்குஉண்டு. இதுதீட்சிதர்கள், நடராஜர்கோயில்நிர்வாகத்துக்குஎதிரானநடவடிக்கைஅல்ல. சிதம்பரம்ஆலயத்தில்பக்தர்கள்தெரிவித்தபுகாரின்படிவிருப்புவெறுப்புஇன்றிவிசாரணைமேற்கொள்ளப்பட்டுவருகிறது. நியாயத்தின்படியேஅறநிலையத்துறைசெயல்படும். ஆதீனத்தின்கோயில்கள்உள்ளிட்டஅனைத்துகோயில்களிலும்கணக்குவழக்குபார்ப்பதுவழக்கமானஒருநடைமுறைதான்,” என்று தெரிவித்தார். அதாவது, அத்தகைய போர்வைகளின் நுழைவுகள், தொந்தரவுகள், இடையூறுகள், இருந்து கொண்டே இருக்கும். இந்து அறநிலையச் சட்டம் இருக்கும் வரையில், அது தொடரத்தான் செய்யும். விபூதி-குங்குமம் கொடுக்கலாம்-பூசலாம், அவர்கள் கீழே கொட்டி விடுவார்கள் அல்லது அழித்து விடுவார்கள்.
04-06-2022ல்மதுரையில்துறவியர்மாநாடுதுவங்கியது: விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.,), அறவழிகாட்டும் ஆன்றோர் பேரவை சார்பில் 2 நாட்கள் துறவியர் மாநாடு மதுரை பரவை ஆகாஷ் பேமிலி கிளப்பில் நேற்று துவங்கியது. விசேஷ ேஹாமங்கள், பூர்ணாஹூதி, கோபூஜை, கொடியேற்றம், துறவிகளுக்கு பாத பூஜை நடந்தது.சிறப்பு விருந்தினர்களை மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் சுதாகர் அறிமுகம் செய்தார். வரவேற்புக்குழு செயலாளர் நாகேந்திரன் வரவேற்றார். ”வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பல சிலைகளை பிரதமராக நரேந்திர மோடி வந்த பின் மீட்டுஉள்ளார். அவரிடம் தேவாரம் பாடிக் காண்பித்தேன். இதைக் கேட்ட பிரதமர் கண்ணீர் விட்டார். நாட்டிற்கு நல்ல பிரதமர் கிடைத்துள்ளார்,” என மதுரையில் நடந்த துறவியர் மாநாட்டில் மதுரை ஆதினம் பேசினார். வி.எச்.பி., அகில உலக இணை பொதுச் செயலாளர் ஸ்தாணுமாலயன் பேசியதாவது: “பாரததேசத்தில்புராணகாலத்திலிருந்துதவத்தால்சமூகத்தைநல்வழிப்படுத்துபவர்கள்ரிஷிகள். தெய்வீகதமிழகமாகஇருந்ததுஇன்றுதிசைமாறுகிறது. தமிழகத்தில்வரும்ஆண்டுகளில்மிகப்பெரியமாற்றத்தைஉருவாக்கஉள்ளோம். அதற்கானவேலையைச்செய்யவேண்டும். அப்பணியைசிவபெருமான்பாதம்பட்டமண், பிட்டுக்குமண்சுமந்தஇடம், திருஞானசம்பந்தர்மதமாற்றத்தில்ஈடுபட்டமதுரையிலிருந்துதுவக்குகிறோம்,” என்றார்.
விபூதிஅழிப்பு – பற்றிஎடுத்துக்காட்டியது: மதுரை ஆதினம் ஹரிகர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமி தலைமை வகித்து பேசியதாவது[5]: மதச்சார்பற்ற நாடு என்கிறோம். மசூதிகள் இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. தமிழகத்தில் கோயில்கள் அறநிலையத்துறையின் கீழ் உள்ளன. இவற்றை தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கக்கோரி பல கட்ட போராட்டங்கள் நடத்தினோம். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் விபூதியை பூச மாட்டோம் என்கின்றனர். கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஒரு அமைச்சருக்கு விபூதி பூசப்பட்டது. அதை அவர் பின் அழித்துவிட்டார். இதைக் கேட்டால் என்னை சங்கி, மங்கி என்கின்றனர். நான் சங்கியும் இல்லை; மங்கியும் இல்லை. சமயத்திற்காக பாடுபடுகிறேன்[6]. வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பல சிலைகளை பிரதமராக நரேந்திர மோடி வந்த பின் மீட்டுள்ளார். அவரிடம் தேவாரம் பாடிக் காண்பித்தேன்[7]. இதைக் கேட்ட பிரதமர் கண்ணீர் விட்டார்[8]. நாட்டிற்கு நல்ல பிரதமர் கிடைத்துள்ளார்.ஹிந்து கடவுள்களை சிலர் விமர்சிக்கின்றனர். மாற்று சமயம் பற்றி சினிமாவில் ஒரு காட்சி வந்தால் அதற்கு எதிராக உடனே எதிர்வினையாற்றுகின்றனர்.
[7] தமிழ்.ஒன்.இந்தியா, மதுரைஆதீனம்பாடியதேவாரம்.. மெய்மறந்துகேட்டபிரதமர்மோடி.. கண்ணீர்விட்டநெகிழ்ச்சிசம்பவம், By Vishnupriya R Published: Sunday, June 5, 2022, 10:48 [IST]