Archive for the ‘துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி’ Category

சங்கர மடங்கள், சங்கராச்சாரியார்கள், இவற்றை இந்துத்துவ வாதிகளே எதிர்ப்பது ஏன்? இந்துவிரோதிகளுக்கு தீனி போடுவது ஏன்? [3]

ஜூலை 27, 2020

சங்கர மடங்கள், சங்கராச்சாரியார்கள், இவற்றை இந்துத்துவ வாதிகளே எதிர்ப்பது ஏன்? இந்துவிரோதிகளுக்கு தீனி போடுவது ஏன்? [3]

Puri Sankarachariyar, Vedic mathematics

Puri Sankarachariyar, Vedic mathematics

பூரி சங்கராச்சாரியாரின்வேத கணிதம்இனிக்கிறது, ஆனால், அந்த ஆச்சாரியார், மடம் முதலியன இந்துத்துவ வாதிகளுக்கு கசக்கின்றனவா?:  பூரி மடத்து 143வது சங்கராச்சாரியார், பாரத் கிருஷ்ண தீர்த்தர், “வேத கணிதம்” என்ற புத்தகத்தை எழுதியது உலகத்திற்கே தெரியும். அவர் வழி வந்த பூரி மடத்து 143வது சங்கராச்சாரியார், நிஸ்சலானந்த சரஸ்வதி ஆவர். ஜூலை 22, 2019 அன்று சந்திராயன் -2 [Chandrayaan-2] ராக்கெட் செல்லுத்திய போது வாழ்த்தினார்[1]. புராணங்களில் உள்ள விமானங்கள் பற்றிக் கூட விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்யலாம் என்றார்[2]. 2016ல் ISRO அஹமதாபாதிற்குச் சென்ற போது, “வேத கணிதம்” பற்றி சொற்பொழிவாற்றினார்[3]. வழக்கம் போல, இக்கருத்திற்கு ஊடகங்கள் விமர்சனம் செய்தன[4]. சில திரித்து வெளியிட்டன[5]. சில அவை பொய் என்றன. ஆனால், 2016ல் ISRO அஹமதாபாதிற்குச் சென்ற போது, “வேத கணிதம்” பற்றி சொற்பொழிவாற்றயதை மறுக்கவில்லை. ஆகவே, ஊடகங்கள் எப்படி வேண்டுமென்றே, அவதூறு செய்ய வேண்டும் என்று திட்டத்துடன் வேலை செய்கிறார்களோ, அதேபோல, இந்துத்துவ வாதிகளும், சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்து வருகிற்ஸ்ர்கள். ஆக, “பூரி சங்கராச்சாரியாரின் “வேத கணிதம்” இனிக்கிறது, ஆனால், அந்த ஆச்சாரியார், மடம் முதலியன இந்துத்துவ வாதிகளுக்கு கசக்கின்றனவா?”, என்ற கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டும். சங்கர மடங்களை விமர்சிக்கும், தூஷிக்கும் இந்துத்துவ வாதிகளே பதில் சொல்வீரா? சங்கர மடங்களை விமர்சிக்கும், தூஷிக்கும் இந்துத்துவ வாதிகளே யோசிப்பீரா?

Puri Sankarcharya imparted Vedic mathematics to ISRO

பூரி சங்கராச்சாரியார், ISRO அஹமதாபாதிற்குச் சென்ற போது, “வேத கணிதம்” பற்றி சொற்பொழிவாற்றினார்.

Acharya Sushil Goswami and Indore Shahar Quazi Mohammad Ishrat Ali with John Dayal

கிருத்துவர்களுடன் சேர்ந்து கொண்டு, சில இந்து சந்நியாசிகள், இந்துமதத்தை விமர்சிப்பது: ஜான் தயாள் என்ற கிருத்துவப் பாதிரியை வைத்து, இந்து மடாதிபதிகளை தாக்கிய வேலைகளில் இந்துத்துவவாதிகள் ஈடுபட்டுள்ளார்கள்! ஒரிஸாவில் ஶ்ரீலக்ஷ்மணானந்தரை மிரட்டிய ஆள் இந்த பாதிரி தான்! பிறகு, அவர்கள், கிருத்துவர்களால் கொலை செய்யப் பட்டார். கந்தமால் கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள் என்று பெரிய நாடகம் போட்டதில், முக்கிய பங்காற்றியவர் ஜான் தயாள். பிறகு கிருத்துவர்களே கற்பழித்தனர் என்று தெரிந்தவுடன் அமைதியாகி விட்டார். 2018ல் சிறுபான்மையினர்- கிருத்துவர்கள் இந்தியாவில் தாக்கப் படுகின்றனர் என்று, சுஷில் கோஸ்வாமி என்ற இந்து சாமியாரை வைத்து, மாநாடு நடத்தி, அறிக்கையும் விட்டார்[6]. போபால் டையோசிஸ் சார்பில், அத்தகைய கூத்து நடந்தது[7]. பிறகு எப்படி அந்த இந்து சாமியார் கலந்து கொண்டார் என்று தெரியவில்லை. ஆனால், அந்த சாமியாரை, இந்துத்துவாதிகள் விமர்சில்லவில்லை.

Acharya sushil with John Dayal

ஜோதிர் மட விவகாரம்: ஜோதிர் மடம், இப்பொழுது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ளது. 57 ஆண்டுகளாக வழக்கில் இருந்ததால், சங்கரச்சாரியார் இல்லை. பிறகு, இரண்டு சந்நியாசிகள் உரிமை கொண்டாடி தாங்க்கள் தான் சங்கராச்சாரியார் என்று அறிவித்துக் கொண்டனர். ஆனால் இருவருமே, காங்கிரஸ்-பிஜேபி ஆதரவு பெற்றவர்கள். பிரச்சினை நீதிமன்றத்திற்குச் சென்றது. இருவருக்கும் அந்த உரிமை இல்லை என்று அறிவித்து, 2017ல் மூன்று மாதங்களில் ஆச்சாரியார் நியமிக்கப் படவேண்டும் என்று தீர்ப்பு கொடுத்தும் இன்று வரை நியமனம் செய்யப் படவில்லை. ஆனால், அவ்வப்போது, பிரச்சினையை வைத்துக் கொண்டு, செய்திகளில் இழுத்து விடுகிறார்கள்.

Sankaracharya arrrest manipulated to tarnis the image of the mutt

காஞ்சி மடம் மற்று ம் ஆச்சாரியார்கள் எவ்வாறு தாக்கப் பட்டனர், இன்றும் தாக்கப் பட்டு வருகிறார்கள் என்று சொல்லத் தேவையில்லை!: காஞ்சிப் பெரியவர் மூக்குக் கண்ணாடி போட்ட போது, அவரை, திராவிட தலைவர்கள் உட்பட கிண்டல் அடிக்க ஆரம்பித்தனர். “மூக்குக் கண்ணாடி” போட்டுக் கொண்டார். “காட்ரேக்ட் ஆபரேஷன்” செய்து கொண்டார் என்றெல்லாம் நக்கல் அடித்தன. அண்ணா கேன்சர் நோயுக்கு, அமெரிக்கா சென்றது, சிகிச்சை பெற்றது, பலன் இல்லாமல் இறந்தது பற்றியெல்லாம் பகுத்தறிவுகள் அறிந்தும், இவரை கிண்டல் செய்தன. பெரியாருக்கும் சுகவினங்கள் பல இருந்தன. எல்லோருக்கும் தெரிந்தும் இருந்தன. ஆனால், “பகுத்தறிவு” இல்லாதவர்கள் அவ்வாறு கிண்டல் செய்யவில்லை[8]. 1987 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ந்தேதி திடீரென மடத்திலிருந்து ஶ்ரீஜெயேந்திர சரஸ்வதி காணாமல் போனபோது, ஊடகங்கள் மறுபடியும் அவதூறுகளை அள்ளி வீசி ஊளையிட்டன. 2004ல் கைது, 2013ல் விடுவிப்பு, 2018ல் சமாதி என்று சென்றது. ஆனால், இன்றும் குளைத்துக் கொண்டிருக்கின்றன. ஆக இதெல்லாம், தனிப்பட்ட மனிதர், சந்நியாசி, மடாதிபட, மடம் இவற்றையும் தாண்டி, வேறெதையோ குறி வைப்பது தெரிகிறது.

Jeyalalita with Kanchi mutt acharyas

காஞ்சி மடத்திற்கு எதிராகத் தொடர்ந்த விமர்சனங்கள்: ஒரு இணைதளம்[9], “பின்னாளில் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கர்  ராமன் கொலை வழக்கில் சேர்க்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட போதும் அகில இந்திய அளவில் மீண்டும் சர்ச்சை நாயகனாக பேசப்பட்டார். ஆனால் ஒரு கொலை வழக்கை, புலனாய்வு அதிகாரிகளை கொண்டு எவ்வளவு பரபரப்பாக்க முடியுமோ அந்த அளவுக்கு, கிரைம், கிளாமர், பாலியல் புகார் என சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் விஷயங்களை நுழைத்து திசை மாற்றப்பட்ட போதே வழக்கு தொடரப்பட்டதின் உண்மையான நோக்கம் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. அரசியல் சதுரங்கத்தில் சிக்கிய அவருக்கு என்ன நேரும் என்று சிக்கவைத்தவர்களுக்கு தெரியும்..மற்றவர்களுக்கும் தெரியும். எதிர்பார்த்தபடியே நீதிமன்றத்தால் நிரபராதி என வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் ஜெயேந்திரர். பரபரப்பு சம்பவங்களின் அடிப்படையில் இப்படி சர்ச்சையின் நாயகனாக பேசப்பட்ட மடாதிபதிதான், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகம், மருத்துவ மனைகள், சேவை மையங்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்கிடைக்கும் வகையில் மடத்தின் பணிகளை விரிவு படுத்தியவர். கிராமப்புற வளர்ச்சி திட்டங்களுக்கென்றே ஜெயேந்திரர் நிறுவிய சந்திரசேகரர் கிராம வளர்ச்சி அறக்கட்டளை யால் பயனடைந்தவர்கள், பயனடைபவர்கள் ஏராளம். காஞ்சியில் உள்ள வேதபாடசாலைகள், பாலாற்றங்கரையில் கலை நயத்தோடு மிளிரும் மகா பெரியவருக்கான மணி மண்டபம், காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தற்போது மிளிரும் விதம் போன்றவையெல்லாம் ஜெயேந்திரரின் பெயரை என்றென்றைக்கும் சொல்லக்கூடியவை,” என்கிறது[10].

Sringeri acharya with Rahul Gandhi

சிருங்கேரி மடத்தின் நிலை: சிருங்கேரி மடம் ஆச்சாரியாரும், காங்கிரசுடன் நெருக்கமாகத்தான் இருந்திருக்கிறது. ராஜிவ் காந்தி முன்னர் சிருங்கேரி மடாதிபதியுடன் இருந்த புகைப்படத்தை, ஆச்சாரியார், ராகுல் காந்திக்குக் கொடுக்கிறார்! ஏன் ஒரு சாமி படத்தைக் கொடுத்திருக்கலாமே? ஆனால், துவாராகா பீட சங்கராச்சாரியை வசை பாடுகின்றனர், இந்துத்துவ வாதிகள் அதனை விமர்சித்தது இல்லை.  காஞ்சியிலிருந்து கும்பகோணம் சென்று, திரும்பி காஞ்சிக்கு வந்ததை விமர்சிக்கின்றனர். அதேபோல, சிருங்கேரியும் இடம்பெயர்ந்து திரும்பி வந்து சேர்ந்துள்ளது. பொதுவாக, சிருங்கேரி மடத்தவர்களுக்கு, காஞ்சி மடம் மீது வெறுபுள்ளது. அது ஏன் என்று தெரியவில்லை. இதனை 1950-60களிலிருந்து வெளிப்படுவது தெரிகிறது. நீதிமன்ற தீர்ப்புகளும் அதனை வெளிப்படுத்துகின்றது[11]. உதாரணத்திற்கு ஒன்று கொடுக்கப் படுகிறது[12]. இங்கு மடாதிபதிகளே, கோர்ட்டூகுச் சென்றார்களா அல்லது வேறு எவராவது தூண்டி விட்டு சென்றார்களா என்று கவனிக்க வேண்டியுள்ளது. ஏனெனில், சங்கராச்சாரியார் அளவில் இருப்பவர்கள், அவ்வாறு, “தென்னிந்தியா முழுவதும் என்னுடைய ஆதிக்கத்தில் வரும்,” என்று கேட்டுப் பெறுவதா ஆன்மீக அதிகாரம் என்று புரியவில்லை. வழக்குத் தொடர்ந்திருக்க மாட்டார்கள். நீதிமன்றம் சிருங்கேரி சார்பில் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டது. ஆனால், அத்தகைய விவரங்கள், விமர்சனங்களைத் தான், இந்துவிரோதிகள் எடுத்து உபயோகப் படுத்திக் கொள்கின்றனர்.

© வேதபிரகாஷ்

27-07-2020

Sringeri politics with Congress

[1] The Pioneer, ‘Puranas can be reference for space scientists’, Friday, 02 August 2019 | PNS | PURI.

[2] https://www.dailypioneer.com/2019/state-editions/—puranas-can-be-reference-for-space-scientists—.html

[3] He [The ISRO membe] further clarified that the Shankaracharya had paid a visit to ISRO Ahmedabad in 2016, when he had delivered a speech about the importance of Vedic Mathematics and how ISRO scientists can benefit by having some knowledge of the same. He had also spoken about how Vedic mathematics can help scientific inventions.

https://www.thequint.com/news/webqoof/media-houses-wrongly-quote-vedic-math-expert-to-claim-isros-reliance-on-him-for-chandrayaan-2

[4] Asian Age, Seer helped with Vedic maths in moon mission, AKSHAYA KUMAR SAHOO, Published : Aug 3, 2019, 1:43 am IST, Updated : Aug 3, 2019, 1:43 am IST

[5] https://www.asianage.com/india/all-india/030819/seer-helped-with-vedic-maths-in-moon-mission.html – :~:text=Puri%20Shankaracharya%20is%20a%20Vedic%20maths%20expert.&text=Sources%20said%20that%20Indian%20Space,launch%20of%20the%20Chandrayaan-2.

[6] AICU, Hindu Savant Acharya Sushil Goswami aharaj, Indore Shahr Qazi join Bishops in Memo to State Governor, CM, Press statement, Bhopal, February 20, 2018.

[7] press statement was issued at a press conference in the Bhopal, Madhya Pradesh, by Mr. Lancy D Cunha, the National President of the All India Catholic Union, and Dr. John Dayal, Official Spokesman and former President. Acharya Sushil Goswami and Indore Shahar Quazi Mohammad Ishrat Ali led a galaxy of religious leaders of Madhya Pradesh who spoke out against communal and extremist forces targeting the Christian and other minority groups.

http://www.bhopalarchdiocese.in/detail.php?str=readnews&nid=109

[8] பெரியார், அண்ணா, கரு, மற்ற திகக்காரர்கள் பேசியதை எழுத முடியாத அளவில் அசிங்கமாக இருந்தததால், அவை மறைக்கப் பட்டன [எழுதாமல் விடப்பட்டன]. ஞாபகம் இருந்தாலும், இன்றும் அவை அவ்வாறுத்தான் உள்ளன. அவர்கள் இல்லை என்றாலும், கேட்டவர்கள் பலர் சாட்சிகளாக இன்றும் இருக்கிறார்கள். நாகரிகம் கருதி தான் அவற்றையெல்லாம் வெளியே சொல்லாமல் இருந்தார்கள், இருக்கிறார்கள். அவர்கள் மறைந்தால், அவர்களுடன் அந்த உண்மைகளும் மறைந்து விடும்.

[9] பத்திரிக்கை.காம், சாமான்யர்களின் சங்கராச்சாரியார்…. சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன், 2 years ago-2018, A.T.S Pandian.

[10] https://www.patrikai.com/common-peoples-wish-sankarachariyar-special-article-by-elumalai-venkatesan/

[11] Madras High Court, K. Rajendran vs Government Of Tamil Nadu And Ors. on 27 June, 1984; Equivalent citations: AIR 1985 Mad 44; Bench: R Pandian.

[12] https://indiankanoon.org/doc/1060441/

Swarupananda issue- Pranab Mukherjee getting blessings

சங்கர மடங்கள், சங்கராச்சாரியார்கள், இவற்றை இந்துத்துவ வாதிகளே எதிர்ப்பது ஏன்? இந்துவிரோதிகளுக்கு தீனி போடுவது ஏன்? [2]

ஜூலை 27, 2020

சங்கர மடங்கள், சங்கராச்சாரியார்கள், இவற்றை இந்துத்துவ வாதிகளே எதிர்ப்பது ஏன்? இந்துவிரோதிகளுக்கு தீனி போடுவது ஏன்? [2]

Puri, Sringeri, Dwaraka and Kanchi mutts-LR

காங்கிரஸ்பிஜேபி மடாதிபதிகள் மீது ஆதிக்கம் செல்லுத்த ஆரம்பித்தது: தேர்தல் நேரங்களில் சந்நியாசிகள், மடாதிபதிகள் முதலியோர் அரசியல் தலைவர்களுக்கு ஆசி கூறுதல், வாழ்த்துப் பெறுதல், ஏன் சிலர் பிரச்சாரம் செய்தல் போன்றவை நடந்து கொண்டு தான் இருக்கின்றன[1]. 1990களில் இவை அதிகமாகின. காங்கிரஸ், பிஜேபி, சமஜ்வாடி என்று எல்லா கட்சிகளும் இந்த யுக்தியைக் கையாண்டன[2]. காங்கிரஸ் தலைவர்கள் சங்கராச்சாரியார்களிடமே சென்று ஆசி பெறுவதும் நடந்தது. காங்கிரஸ் குறிப்பாக வடவிந்தியாவில் உள்ள முக்கியமான கோவில்கள் மற்றும் அவற்றைச் சார்ந்த மஹந்துகள், மடாதிபதிகளை, நேரிடையாகவோ, மறைமுகமாகவோ கட்டுக்குள் வைத்திருந்தது. குறிப்பாக “சார் தாம் யாத்திரை[3],” வைஷ்ணவதேவி, மானசரோவர்-கைலாஷ் போன்ற யாத்திரைகளுக்கு, அரசு, போலீஸ், பாதுகாப்புப் படை, ஏன் ராணுவம் முதலிவற்றின் உதவி தேவை. இங்கும், “சார் தாம் யாத்திரை” என்பது ஆதிசங்கரர் எவ்வாறு பாரதம் முழுவதும் சென்று வந்தாரோ [பூரி, ராமேஸ்வரம், துவாரகை மற்றும் பத்ரிநாத்] அதைப் போன்றது. ஆனால், இப்பொழுது, வடநாட்டிலேயே, உத்தரக்காண்ட் மாநிலத்திலேயெ [யமோனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்] சுருங்கி விட்டது. இவற்றை வைத்தும், அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது. பிஜேபி அரசியல் ஆதிக்கம் பெற்றும், மத்திய மாநிலங்களில் ஆட்சி ஏற்ற நிலையில், அந்த அதிகார-தாக்கம், முதலியவை இருகட்சிகளுக்கும் இடையே பிரச்சினை ஆகியது. இதனால், மஹந்துகள், சந்நியாசிகள், மடாதிபதிகள் முதலியோரிடம் வெறுபாடு தோன்றும் நிலை உருவாகியது.

Sankaracharaya, Mutts, not-clear photo

சங்கராச்சாரியார்கள் விமர்சிக்கப்பட்டது: குறிப்பிட்டவர்கள் காங்கிரஸுக்கு, பிஜேபிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று ஊடகங்கள் ஊதி பெரிதாக்கின. அதற்கேற்றார் போல மஹந்துகள், சந்நியாசிகள், மடாதிபதிகள் சம்பந்தப் பட்ட தீர்ப்புகளில் அத்தகைய தாக்கம் இருந்ததை கவனிக்க முடிந்தது. அந்நிலையில் தான், துவாரகா மடாதிபதி ஶ்ரீ ஸ்வரூபானந்தர் காங்கிரஸுக்கு வேண்டியவர், பூரி சங்கராச்சாரியார் பழமைவாதி, சிருங்கேரி மடாதிபதி காங்கிரஸுக்கு மிக-மிக நெருக்கமானவர், காஞ்சி மடம் பிஜேபிக்கு சார்புடையது, போன்ற பிம்பங்கள், மாயைகள் உருவாக்கப் பட்டன. காங்கிரஸின் ஊடக பீரங்கி, “நேரஷனல் ஹெரால்ட்,” எப்பொழுதும், இந்துக்களுக்கு எதிரான கட்டுரைகளை பிரசுரித்து வருகின்றது. அவ்வப்போது மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறது. இதனால், அது இந்துக்களுக்கு எதிரான கட்சி என்றும் பிரச்சாரம் செய்யப் படுகிறது. 2013ல் பெருவெள்ளம் உண்டானபோது, கேதார்நாத்தில் உள்ள ஆதிசங்கரர் சமாதியும் பாதிப்புக்கு உள்ளானது[4]. அதனால், அதனை, மறுபடியும் புனர்-நிர்மாணம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன[5]. அப்பணிகள் இன்றும் நடந்து வருகின்றன. அப்பொழுதும், ஊடகங்கள் பிரிவினை உண்டாக்கும் முறையில் செய்திகளை (கேதார்நாத் பூஜாரி மற்றும் ஸ்வரூபானந்தர் சாஸ்திர ரீதியிலான கருத்துக்களை) வெளியிட்டன[6]. ஸ்வரூபானந்தர் முறையாக (பூஜாரிக்கு என்ன தகுதிகள் வேண்டும், வேதங்கள் முதலியவை படித்திருக்க வேண்டும் போன்ற விசயங்கள்) விளக்கியதைத் திரித்து வெளியிட்டன[7]. 2017ல் ராகுல் காந்தி, அஹமது படேலுடன், சோமநாத் கோவிலுக்குச் சென்றபோது, அவர்கள், “இந்துக்கள் அல்லாதவர்,” என்று கோவில்-நுழைவு ரிஜிஸ்டரில் குறிப்பிடப் பட்டது[8]. அதாவது கூட வந்தவர் முஸ்லிம் என்பதால், இவரும் கிருத்துவர் என்று நினைத்து அவ்வாறு எழுதப் பட்டிருக்கலாம். ஆட்சி மாற்றங்கள் நடக்கும் போது, இந்துக்கள் தான் கஷ்டப்படவேண்டும், அரசியல்வாதிகள் அல்ல. அதாவது, அத்தகைய அரசியல் மற்றும் மதத்தலைவர்கள் சித்தாந்த மோதல், இந்துக்களைப் பாதிக்கின்றது என்ற விசயம் எடுத்துக் காட்டப் படுகிறது.

Four Sankara mutts

ஆதிசங்கரர் (507-477 BCE) ஏற்படுத்திய மடங்கள்: ஆதிசங்கரரின் தேதியைக் குறிப்பிடுவதிலேயே அரசியல் ஆரம்பிக்கிறது எனலாம். ஆங்கிலேயர் ஆரம்பித்து வைத்த அந்த பிரச்சினை இன்றும் முடியவில்லை. ஆதிசங்கரரின் காலம் 507-477 BCE என்று சிருங்கேரி மடம் தவிர மற்ற மடங்கள் ஏற்றுக் கொள்கின்றன. சிருங்கேரி 788-820 CE என்று கொள்கிறது. ஆதிசங்கரர் ஏற்படுத்திய மடங்கள், விவரங்கள், கீழ் வருமாறு:

  மடத்தின் பெயர் திசை பெயர் தற்போதைய மடாதிபதி
1 உத்தராண்ய மட் வடக்கு ஜோதிர் மடம்,

உத்தரகாண்ட்

நியமிக்கப் படவில்லை
2 தக்ஷிணாயன் மட் தெற்கு துவாரகா மடம்,

குஜராத்

ஶ்ரீஸ்வரூபானந்த சரச்வதி
3 பூர்வம்ன்ய மட் கிழக்கு பூரி, ஒரிஸா நிஸ்சலாநந்த சரஸ்வதி
4 பஸ்சிம்ன்ய மட் மேற்கு சிருங்கேரி, கர்நாடகா பாரதி தீர்த்த மஹாஸ்வாமி
5 காஞ்சி காமகோடி தெற்கு காஞ்சி, தமிழ் நாடு. விஜயேந்திர சரஸ்வதி

இந்தியாவில் உள்ள இந்துக்கள், நிச்சயமாக இவர்களை பக்தியுடன், மரியாதையுடன், சிறப்புடன் பின்பற்றி வருகிறார்கள். அந்நிலையில், அரசியலை காரணமாக வைத்துக் கொண்டு, ஊடகக்காரர்கள், நிருபர்கள், பேட்டி கண்பவர்கள், எழுத்தாளர்கள் என்றெல்லாம் இருப்பவர்கள், இவர்களைப் பற்றி தாறுமாறாக செய்திகளை வெளியிடுவது, விமர்சிப்பது என்று செய்து வருகிறார்கள். Hon’ble, Mr, His Holiness, Rev., மௌலி, முல்லா, சாஹிப், ஹாஜி என்றெல்லாம் மற்ற மதத்தலைவர்களை குறுப்பிடும் போது, இவர்களை அப்படியே குறிப்பிடுவது முதலியன நடந்து வருகிறது. மேலும் துவாரகா, பூரி மற்றும் காஞ்சி மடங்கள், மடாதிபதிகள் என்று வரும் போது, கிண்டலாக, கேலியாக, நக்கலாக தலைப்பிட்டு செய்திகள் போடுவது என்பன தொடர்ந்து நடந்து வருகிறது.

Christians take advantage of the disunity among Hindus -Puri Sankaracharya

பூரி சங்கரச்சாரியாரை விமர்சிப்பது ஏன்?: பூரி சங்கராச்சாரியார், பல பாரம்பரிய விசயங்களை சாஸ்திரங்களின் படி விட்டுக் கொடுக்காமல் பேசி வருகிறார். இக்காலத்திற்கு ஏற்ப விளக்கங்களையும் கொடுக்கிறார். ஆனால், ஊடகங்கள், இந்தியிலிருந்து மொழிபெயர்க்கும் போது, வேண்டுமென்று முழுப்பேச்சையும் குறிப்பிடாமல், ஒரே வரியில் அவர் வர்ணாஷ்ரமத்தை ஆதரிக்கிறார் என்று செய்திகள்ளை போடுகின்றனர்.

  1. முசல்மான்கள், கிருத்துவர் எப்படி தங்களது மதங்களை வேகமாக வளர்த்துக் கொள்கிறார்கள்? இந்துக்களால் ஏன் முடியவில்லை?
  2. இந்துக்களின் சோம்பேறித்தனம், கிருத்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் வரமாகிறது!
  3. முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்களின் மதம் மாற்றும் முறைகளை
    எப்படிக் கட்டுப்படுத்துவது?
  4. இந்து ஒற்றுமையின்மையை கிருத்துவம் தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறது!

போன்ற வீடியோ சொற்பொழிவுகளில், பிரச்சினையை நேரிடையாக விளக்குகிறார். இதுவரை மற்றவர்களின் கருத்துகள் இவ்வாறு வெளிப்படையாக, வெளியிடப் படவில்லை. மேலும், இந்திய அரசியல் சாசனத்தின் 25வது பிரிவைப் பற்றி கொடுக்கும் விளக்கம் சட்டப்படி அருமையாக இருக்கிறது. இவரைப் போலத்தான், ஶ்ரீ ஸ்வரூபானந்தரும், “கோவில் என்ற அமைப்பில் எல்லோருடைய பங்கும் இருக்கிறது. பிராமணர்களுக்கு மட்டும் உரிமை இல்லை[9]. செருப்பு தைப்பவன், துணி துவைப்பவன், பொற்கொல்லன், நாவிதன் என்று எல்லொருக்குமே கோவிலை பராமரிக்க உரிமைகள் இருந்தன. ஆனால், இவர்கள் எல்லோரும் கோவிலை விட்டு, வேறு வேலை செய்யச் சென்று விட்டனர். இத்தகையோ ஒருவர் இல்லாவிட்டாலும், முன்பெல்லாம், கோவில் இயங்க முடியாது. அதனால், இப்பொழுது ஏதோ பிராமணர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள் என்பது போலிருக்கிறது. அதனால், அனைத்து ஜாதியினரும் மறுப்டியும் கோவில்களுக்கு வரவேண்டும். அரசாங்கள் அவரவர்களுக்கு உரிய நிதியுதவி செய்ய வேண்டும். 21,000 ஏக்கர் கோவில் நிலங்களைக் கோவில்களுக்குத் திரும்ப அளிக்க வேண்டும்,” என்றெல்லாம் பேசினார்[10]. ஆனால், ஊடகங்கள் இதை செய்தியாக போடவில்லை. விவாதிக்கவில்லை. ஆக, ஒரு இது மடாதிபதி, இந்துக்களின் உரிமைகளைப் பற்றி கவனம் கொள்வது, பேசுவது, விளக்குவது எப்படி கேலிக்கு, விமர்சனத்திற்கு உள்ளாக்க முடியும் என்று தெரியவில்லை. இப்பொழுது சமூக ஊடகங்களில், stooge, agent, criminal அதாவது கைக்கூலி, கையாள், கிரிமினல் போன்ற வார்த்தைகள் பிரயோகிக்கப் பட்டுள்ளன.

© வேதபிரகாஷ்

27-07-2020

How lethargy of Hindus help musalmans and christians -Puri Sankaracharya

[1] Hinduism Today, Swamis Campaign In India Elections, Sinha, B.N., Magazine Web Edition, July 1991,

[2] https://www.hinduismtoday.com/modules/smartsection/item.php?itemid=837

[3]  முதலில் ஆதிசங்கரர் சென்று வந்த பூரி, ராமேஸ்வரம், துவாரகை மற்றும் பத்ரிநாத் என்று இருந்தது. இப்பொழுது, யமோனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் புண்ணியஸ்தலங்களுக்கு செல்லும் யாத்திரை என்றாகியது.

[4] Times of India, Shankaracharya samadhi swept away, TNN | Updated: Jun 22, 2013, 06:31 IST.

[5] https://timesofindia.indiatimes.com/india/Shankaracharya-samadhi-swept-away/articleshow/20709897.cms

[6] The Hindu, On a mission to rebuild the Shankara Samadhi Sthal, C. S. Narayanan Kutty, KANHANGAD, FEBRUARY 20, 2014 10:07 IST, UPDATED: MAY 18, 2016 09:39 IST.

[7] https://www.thehindu.com/news/national/kerala/on-a-mission-to-rebuild-the-shankara-samadhi-sthal/article5708821.ece

[8] Times of India, Somnath temple visit: Rahul Gandhi listed as ‘non-Hindu’, Devika Bhattacharya | TIMESOFINDIA.COM | Updated: Nov 29, 2017, 21:54

https://timesofindia.indiatimes.com/india/somnath-temple-visit-rahul-gandhi-listed-as-non-hindu/articleshow/61849303.cms

[9] The Hindu, Temples never belonged to Brahmins alone: Sharada Peetham seer, SPECIAL CORRESPONDENT WARANGAL:, OCTOBER 30, 2014 00:01 IST;

UPDATED: MAY 23, 2016 16:37 IST.

Temples were not the sole property of Brahmins alone but of 21 other castes involved in their set-up and maintenance, observed Sharada Peetham pontiff Swami Swaroopananda. The pontiff, who was here to deliver a discourse, told reporters that the temple system was sabotaged by vested interests who drove away the people and left it with only Brahmins. “The cobbler, washerman, goldsmith, barber all are involved in the maintenance of the temple. Every caste is important and without a single person, the temple will not function,” he pointed out. Swami Swaroopananda said he would soon meet Chief Minister K. Chandrasekhar Rao and urge him to restore 21,000 acres of endowment lands which were occupied by individuals. The priests should be paid a pension like other government employees. He said he would visit all the abandoned temples in Andhra Pradesh from December 11 to January 11, spend a night at each temple and organise a meeting with local people to revive them. In February, he would visit similar temples in Telangana. “Telangana has very old and popular temples that are in dire straits due to dwindling patronage and indifference of authorities. On behalf of Sharada Peetham, we will make efforts to mobilise people of all castes and motivate them to restore those temples,” he said. Captain V. Laxmikantha Rao, MLA V. Satish, Archaka Samakhya leader Gangu Upendra Sharma, Brahmana Samakhya leader I. Satyamohan and others were present.

[10] https://www.thehindu.com/news/national/telangana/temples-never-belonged-to-brahmins-alone-sharada-peetham-seer/article6544987.ece

Indira Gandhi, Kanchi Acharya, Jeyendra Saraswati

சங்கர மடங்கள், சங்கராச்சாரியார்கள், இவற்றை இந்துத்துவ வாதிகளே எதிர்ப்பது ஏன்? இந்துவிரோதிகளுக்கு தீனி போடுவது ஏன்? (1)

ஜூலை 25, 2020

சங்கர மடங்கள், சங்கராச்சாரியார்கள், இவற்றை இந்துத்துவ வாதிகளே எதிர்ப்பது ஏன்? இந்துவிரோதிகளுக்கு தீனி போடுவது ஏன்? (1)

Four Sankaracharyas-Black and white-cropped

ஆகஸ்ட் 5, 2020 அயோத்தியாவில் கோவில் அடிக்கல் நாட்டு பூமி பூஜை விழா: ஆகஸ்ட் 5, 2020 அயோத்தியாவில், ஶ்ரீராமர் கோவில் கட்டுவதற்கு, பூமி பூஜை செய்வதற்கான “முஹூர்த்தம்” நல்ல நேரம் குறிக்கப் பட்டது[1]. ஆனால், அது இந்து நாட்காட்டியின் படி, “உத்தம காலம்” இல்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.  இதனால், பிஜேபி-ஆர்எஸ்எஸ்-காரர்கள் அவரை தூஷிக்க ஆரம்பித்துள்ளனர்[2]. ஆகஸ்ட் 5, தக்ஷிணாயன, பாத்ரபத மாதம், கிருஷ்ண பக்ஷத்தில் வருகிறது. பாத்ரமாத மாதத்தில், வீடு / கோவிலைக் கட்டும் வேலையை ஆரம்பிப்பது இல்லை என்றார். தவிர சென்ற வருடம் 2019 பிப்ரவரி 21ம் தேதியே, கோவிலுக்கு அடிக்கல் நடும் பூஜையை, இவர் வாரணாசியில், தன்னுடைய ஆசிரமத்தில் செய்தார்[3]. ஒரு யாத்திரைக்குக் கூட ஏற்பாடு செய்தார், ஆனால், இவரது, உடல் அசௌகிரயத்தினால் கைவிடப் பட்டது[4]. மற்றவர்களும் கண்டுகொள்ளவில்லை. தேவையில்லாமல், ஒரு பழைய புகைப்படத்தைப் போட்டு, ,பிஜேபி-ஆர்எஸ்எஸ்-காரர்கள் அவரை சமூக ஊடகங்களில் தாக்க ஆரம்பித்துள்ளனர். ஆகவே, இதன் பின்னணியை எடுத்துக் காட்ட வேண்டியதுள்ளது.

Sankaracharaya, Mutts, graphics, TOI

காங்கிரஸ்பிஜேபிகாரர்கள் அரசியல் செய்து வந்தது: காங்கிரஸ் மற்றும் பிஜேபி சங்காரச்சாரியார்களை, ராமஜென்மபூமி விசயத்தில், வைத்து, அரசியல் செய்து வருகின்றன. ராஜிவ் காந்தி, வி,பி.சிங் காலம் தொடர்ந்து, ராமஜென்பமபூமி கோவில் விவகாரத்திற்கு இடைஞ்சலாக, ஷாபானு, மண்டல் கமிஷன் போன்ற பிரச்சினைகளைக் கொண்டு வந்து காலங்கடத்தினர். 1992க்குப் பிறகும், “கோவில் கட்டுவோம்” என்று சொல்லிக் கொண்டு காங்கிரஸ்-பிஜேபிகாரர்கள் அரசியல் செய்து வந்தனர். இப்படியாக தேர்தல் நேரத்தில் “ராமர் கோவில்” என்றும் மற்ற நேரங்களில், கோர்ட் சொன்னதை கேட்போம் என்றும் கூறிக் கொண்டு காலத்தைக் கழித்தனர். இந்தியாவில், செக்யூலரிஸம் என்ற கொள்கை வந்த பிறகு, இந்து மடாதிபதிகளின் முக்கியத்துவம் குறைந்து விட்டது போன்ற தோற்றத்தை உண்டாக்கின. ஏனெனில், தேவையில்லாமல், கோவில் வழிபாடு, மடங்கள், மடங்களின் நிர்வாகம், சொத்து, முதலியவைப் பற்றிய விவகாரங்களில் அரசியல் கட்சிகள் நுழைந்து, மடாதிபதிகள் நீதிமன்றங்களிக்கு செல்லுமாறு செய்து, மறைமுகமாக, அதிக அளவிற்கு அவற்றை அரசியல் கட்டுப் பாட்டில் வைக்க முயன்றன.

K.A.Paul with Swaroopananda Sankaracharya-2

சாதுக்கள், சந்நியாசிகள், மஹந்துகள், மடாதிபதிகள் ஒற்றுமையை சீர்குலைக்க செய்த வேலைகள்: ஆனால், ராமஜென்ம பூமி விசயத்தில், ஆரம்பத்தில் அரசியல் கலப்பில்லாமல், அவ்வியக்கம் சென்று கொண்டிருந்தது. ஆனால், காங்கிரஸ் அழுத்தம் கொடுத்து வந்தது. அகில இந்திய மடாதிபதிகளின் சபை கூட்டம், சாது-சந்நியாசிகள் கூட்டம் போன்றவற்றை நடத்தி, விஎச்பி சாதுக்கள், சந்நியாசிகள், மஹந்துகள், மடாதிபதிகள் என்று வரவழைத்து, அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்தது. பெரிய கூட்டங்கள், ஊர்வலங்கள் முதலியன நடத்தப் பட்டன. பக்தர்கள், பின்பற்றுபவர்கள் முதலியோரும் கலந்து கொண்டனர். முதன் முதலாக, இவ்வாறு சாது-சந்நியாசிகள் கூட்டம் ஒரே இடத்தில் வருவது, பெரிய விசயமாகியது. உலக அளவில், ஊடகங்களில் பெரிய தாக்கம் ஏற்பட்டது. மேலை நாடுகள், இந்தியாவில். இத்தனை, சாது-சந்நியாசிகள், மஹந்துகள், மடாதிபதிகள் இருக்கிறார்களா என்று ஆச்சரியப் பட்டனர். அரசியல் கட்சிகள் கதி கலங்கன. தமக்குப் போட்டியாக வந்து விடுவார்களோ என்று கூட அஞ்சினர். முலாயம் சிங் யாதவ், முதலியோர் திகைத்தனர்.  அந்நிலையில் தான் அவர்களது ஒற்றுமையை சீர்குலைக்க, அரசியல் கட்சிகள் திட்டமிட்டன. மாநில அளவில், மடாதிபதிகளுக்கு பிரச்சினைகளை உண்டாக்கினர். மடாதிபதிகளே, ஒருவர் மீது, ஒருவர் வழக்குகள் போட்டார்கள். இதில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்காரர்கள், எதிர்கட்சிகள் ஒருபக்கம், பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், விஎச்பி, பஜ்ரங்தள் போன்றவை இன்னொரு பக்கம் என்று நின்று மோத ஆரம்பித்தன.  1992 நிகழ்வுக்குப் பின்னர், அரசியல் கட்சி மோதல்கள் அதிகமாகின.

K.A.Paul with Swaroopananda Sankaracharya-1

தொடர்ந்து சங்கர மடங்கள் தாக்கப் படுவது (1987 முதல் இன்று வரை): சங்கரமடங்களைத் தாக்குவது என்று தொடர்ந்து நடந்து வருகிறது. ஊடகக் காரர்கள், சங்கராச்சாரியார்களிடம், அரைகுறையாக எதையாவது கேட்டுக் கொண்டு, அவற்றை ஊடகங்களில் செய்திகளாகப் போட்டு, பிரச்சினைகளை உண்டாக்கியுள்ளனர். 1987ல் காஞ்சி சங்கராச்சாரியார், மடத்தை விட்டுச் சென்ற போது, அத்தகைய வேலையை செய்தனர். 1990களில் பூரி சங்கராச்சாரியார்களின் கருத்துகளைத் திரித்து, சதி, பசு-கொல்லாமை, பெண்கள்வேதங்கள் படிப்பது போன்றவற்றைப் பிரச்சினை ஆக்கினர். 2004லிருந்து, மறுபடொயும், காஞ்சி சங்கராச்சாரியாரை பிரச்சினைக்குட்படுத்தப் பட்டது. இந்த தடவை கொலைக்குற்றம். 2013ல் விடுவிக்கப் பட்டாலும், 2004லிருந்து, காஞ்சி மடம் மட்டுமல்லாது, மற்ற மடங்களின் மீதும், அவதூறாக, அசிங்கமாக பேசுவது, எழுதுவது புத்தகங்கள் போடுவது என்று தொடர்ந்தன.  2018ல் ஜெயேந்திரர் காலமாகி, சமாதியானார். ஆனால், துவாரகா சங்கராச்சாரியாரின் மீதான தக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

K.A.Paul - Sampurnananda refutal letter

மடத்தின் தரப்பில் கொடுக்கப் பட்ட விளக்கம்…

K.A.Paul with Modi, Amit Sha

K.A.Paul with Modi, Amit Sha

கொலைக் குற்றம் சாட்டப் பட்ட பாதிரியுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் போட்டுத் தாக்குவது: கே.ஏ.பால் என்ற பாதிரியுடன் இருப்பது போன்ற புகைப்படம் போட்டு, இப்பொழுது தூஷணத்தை மறுபடியும் ஆரம்பித்துள்ளனர். 2005லேயே, மடம் தரப்பில், மறுப்பு தெரிவிக்கப் பட்டு, கண்டனம் தெரிவிக்கப் பட்டது. ஒரு சாதாரண பக்தனோ அல்லது ரொம்ப வேண்டப் பட்ட பக்தனோ, எந்த சங்கராச்சாரியாரையும் தொட முடியாது. இங்கோ, இந்த பாதிரி, தோளின் மீது கை போட்டது மாதிரியும், தலைமீது கை வைப்பது போலவும் புகைப்படங்களில் தெரிகிறது. ஆகவே, இது நிச்சயமாக நம்புகிறபடி இல்லை. மேலும், மேனாட்டுப் பத்திரிக்கைகளே, இப்பாதிரியைப் பற்றி தமாஷாக எழுதியுள்ளன. அந்நிலையில், அவனது சகோதரனையே கொன்றுவிட்டார் என்ற செய்திகள் வருகின்றன[5]. இவனை கைது செய்து, சிறையில் அடைக்கப் படுகிறான்[6]. ஆனால், பிறகு, போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுவிக்கப் படுகிறான்[7]. அப்பொழுது, ராஜசேகர ரெட்டியின் பேரில் தான், கைது செய்யப் பட்டதாக, பேட்டி எல்லாம் கொடுத்து இருக்கிறான்[8]. போதா குறைக்கு, பிறகு, ஒரு கட்சி ஆரம்பித்து, ரெட்டியை எதிர்க்கிறேன் என்று ஓட்டைப் பிரித்து, அவரையே ஆட்சிக்கு வரும்படி ஆகி விட்டது. இதெல்லாம், கிருத்துவர்கள் சேர்ந்து நடத்திய நாடகமா என்றெல்லாம், நாயுடு தான் ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும். ஏனெனில் தோல்வியடைதது சந்திரபாபு நாயுடு தான். ஆனால், அந்த பாலை வைத்து, சங்கரச்சாரியாரைத் தாக்குவதில் தான், விசமம் வெளிப்படுகிறது.

P.A.Paul arrested for murdering his brother, India Today-1

K.A.Paul involved in financial irregularites, phedophile issues- Washington post 10-10-2006

K.A.Paul murder case on him dropped

இந்துக்கள் மாற்று மதத்தினர் போல, சங்கராச்சாரியர்களை வசைப்பாடி தூஷிப்பது ஏன்?: ஒரு போட்டோவில் தோளின் மீது கை வைப்பது போலவும், இன்னொரு புகைப்படத்தில், தலையின் மீது கைவைப்பது போல உள்ளது. இவ்வாறு ஒரு போப்பின் மீது, ஒரு பூஜாரி இவ்வாறு கை வைக்க முடியுமா? முதலில், இவ்வாறு அருகில் விடுவார்களா? ஆகவே, இந்த ஆள் எதற்காக, அவ்வாறு செய்தான் என்று ஆராய வேண்டியுள்ளது. கிருத்துவர்கள் தான் இவ்வாறு சங்கரமடத்தை, சங்கராச்சாரியாரைத் தாக்குகிறர்கள் என்றால், அதே படங்களை வைத்துக் கொண்டு இந்துத்துவ வாதிகள் தாக்குவது திகைப்பாக இருக்கிறது. இதை ஆரம்பித்து வைத்து, வாத-விவாதங்களில் ஈடுபட்டுள்ளவர்களின் விவரங்களை கூர்ந்து கவனித்தால், ஒட்டு மொத்தமாக, சங்கர மடங்களை ஒழித்டு விட வேண்டும் என்ற போக்கில் உள்ளது போலிருக்கிறது.இந்துக்களே, சங்கராச்சாரிகளை வசைப்பாடிக் கொண்டிருக்கிறார்கள். நாளைக்கு, இவர்களே, அவர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதமும் பெறுவார்கள். ஏதாவது பலனைக் கேட்டும் அனுபவிப்பார்கள். இந்த அசிங்கத்தை எல்லாம் தொகுத்து வைத்துக் கொண்ட இந்துஎதிரிகள் நாளைக்கு புத்தகங்களில் குறிப்பிடுவர், இல்லை, சங்கரமடத்து ரகசியங்கள் என்று புத்தகங்களே எழுதுவர்.

Swarupananda attacked by FB-1

 

Swarupananda attacked by FB-3

முடிவுரையாக சில குறிப்புகள்: மேலேயுள்ள விவரங்களைத் தவிர, பல உள்ளன, ஆனால், அவற்றையெல்லாம், இங்கு விவாதிக்க முடியாது. இந்துத்துவ வாதிகளே, பலவற்றை தமது மனங்களில் வைத்துக் கொண்டு, சமூக ஊடகங்களில் கொட்டி வருகின்றன. அவையெல்லாம் நல்லதற்கு அல்ல.

  1. சங்கர மடங்கள், 2500ற்கும் மேலான ஆண்டுகளாக, பாரதத்தில், ஆன்மீக, சமய, இறையியல் ரீதிகளில் இந்தியர்களை வழிநடத்தி வருகின்றன!
  2. அவற்றின் பீடாதிபதிகளான சங்கராச்சாரியார்களும், அவ்வாறே மதிக்கப் பட்டு, பாரதம் முழுவதும் சென்று வந்து மக்களுக்கு ஆசிவழங்கியுள்ளனர்.
  3. ஆங்கிலேயர் காலங்களில், சங்காராச்சாரியார்கள், மடங்கள், மடங்களின் இறையியல் நூல்கள் இவற்றைக் கண்டு அதிசயித்தனர்.
  4. அத்தகைய தத்துவார்த்த, கிரியை, சம்பிரதாயங்கள், சடங்குகள் முதலியவற்றிற்கு வழிகாட்டியாக இருந்தவர்களை வேறெங்கும் காணமுடியவில்லை.
  5. இந்தியாவில் மதரீதியில் ஒருத்துவ அதிகாரம் கொண்ட மதத்தலைவர், தத்துவ குரு, இறையியல் பீடம் இல்லை என்றே அவர்கள் கருதினர்.
  6. நாட்டுக்கு நாடு, மொழிக்கு மொழி, மக்கள் குழுமம், இனம், வர்க்கம் போன்ற காரணிகளில் மற்ற மதங்கள் பிரிந்து கிடந்தன, மோதின.
  7. ஆனால், பாரதத்தில் அத்தகைய காரணிகள் இருந்தாலும், ஒன்றாக இருந்தனர்; நான்கு திசைகளில் உள்ள புண்ணியக்ஷேத்திரங்களுக்கு தீர்த்தயாத்திரை சென்றுவந்தனர்.
  8. அந்நிலையில் தான், மடங்களுக்குள் வேறுபாடுகளை உண்டாக்க விரும்பினர், புதிய மடங்கள், மடாதிபதிகள் உருவாக ஊக்குவித்தனர்.
  9. ஆதிசங்கரருடைய நூல்கள் திரிபு விளக்கங்களுக்கு உட்படுத்தப் பட்டு, ஜாதிய, மாநில, திசை போன்ற திரிபுகளுக்குத் திருப்பினர்.
  10. ஆதிசங்கரரின் தேதியைக் குறைக்க, சங்கர மடங்கள் ஐந்தல்ல, நான்கு தான், அத்வைதம் துலுக்கர்களின் ஒருத்துவத்திலிருந்து பெறப்பட்டது போன்ற கருதுகோள்களை உண்டக்கினர்.
  11. சங்கர-சிருங்கேரி நீதிமன்ற வழக்குகளை ஊக்குவித்தனர், அவை இன்றும் தொடர்கின்றன, இந்துவிரோதிகளுக்குத் தீனி போடுகின்றன.
  12. எனவே, அந்நிலையில், சங்கரமடங்களை, சங்கராச்சாரியார்களை வைத்து, அரசியல் செய்ய வேண்டாம், இந்து-ஒற்றுமையைக் குலைக்க வேண்டாம்.

© வேதபிரகாஷ்

24-07-2020

[1] Daijiworld, Shankaracharya objects to ‘Bhoomi Pujan Mahurat’, Thu, Jul 23 2020 01:22:59 PM

[2] http://www.daijiworld.com/news/newsDisplay.aspx?newsID=733362

[3] Times of India, Varanasi: Swami Swaroopanand Saraswati symbolically lays down foundation stone of Ayodhya’s Ram Mandir, Feb 22, 2019, 07:00AM ISTSource: TNN

[4] https://timesofindia.indiatimes.com/videos/city/lucknow/varanasi-swami-swaroopanand-saraswati-symbolically-lays-down-foundation-stone-of-ayodhyas-ram-mandir/videoshow/68098454.cms

[5] Times of India, Evangelist K A Paul arrested in murder conspiracy case, PTI | Updated: May 21, 2012, 16:43 IST.

[6] https://timesofindia.indiatimes.com/city/hyderabad/Evangelist-K-A-Paul-arrested-in-murder-conspiracy-case/articleshow/13355388.cms

[7] Economic Times, Evangelist KA Paul arrested for murder conspiracy by Andhra Pradesh police, By CR Sukumar, Last Updated: May 22, 2012, 02:36 AM IST

[8] https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/evangelist-ka-paul-arrested-for-murder-conspiracy-by-andhra-pradesh-police/articleshow/13367273.cms

 

K.A.Paul with Modi, Mukherjee, Gowda

துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி, அபிஷேக் சர்மா என்ற செய்தியாளரின் கன்னத்தில் அறைந்தாரா – மதசொற்பொழிவின் போது அரசியல் கேள்வி கேட்கப்பட்டதா?

ஜனவரி 24, 2014

துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி, அபிஷேக் சர்மா என்ற செய்தியாளரின் கன்னத்தில் அறைந்தாரா – மதசொற்பொழிவின் போது அரசியல் கேள்வி கேட்கப்பட்டதா?

நரேந்திர மோடி குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு அடி சாமியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி

நரேந்திர மோடி குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு அடி சாமியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி

ஒரு சாமியார் / சந்நியாசி இவ்வாறு கோபப்படலாமா, அடிக்கலாமா: நரேந்திர மோடி குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு சாமியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி கன்னத்தில் பளார் என்று அடித்துவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது[1] என்று ஊடகங்கள் செய்தியப் பரப்பியுள்ளது. ஒரு சாமியார் / சந்நியாசி இவ்வாறு கோபப்படலாமா, அடிக்கலாமா என்ற விவாதத்தை வேறு கிளப்பியுள்ளார்கள். நாட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு அளவு கடந்த சுதந்திரம் உள்ளது என்ற நிலையில் உண்மையை அல்லது நடந்ததை நடந்தது போல சொல்லாமல், மாற்றி ஜனரஞ்சக அல்லது தூண்டிவிடும் உற்சாக செய்திகளாக வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ள நிலையில், இவ்விசயத்தை அலச வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

Puri, Sringeri, Dwaraka and Kanchi mutts

அரசியல்  குறித்து  பேசகூடாது  என்று வலியுறுத்தப்பட்ட பிறகும் அரசியல் பற்றிய கேள்வி கேட்டது: நாட்டின், நான்கு முக்கிய பீடங்களில் ஒன்றான, வட மாநிலங்களில் செல்வாக்கு மிக்க, துவாரகா பீடத்தின் தலைமை குருவாக இருப்பவர், சுவாமி சொரூபானந்த சரஸ்வதி. காங்கிரஸ் மற்றும் அக்கட்சித் தலைவர்கள், பலருடன் நெருக்கமாக உள்ளவர் அந்த சாமியார்[2]. மத்திய பிரதேச மாநிலம் ஜாபல்பூரில் நடந்த விழாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மத்தியபிரதேசத்தின் தலைநகரான போபாலிலிருந்து 375 கிமீ தொலைவில் ஜபல்பூரில் உள்ள ஒரு கோவிலின் நிகழ்சியில் கலந்து கொண்டு, பேட்டி கொடுக்கும் போது இது நடந்தது[3]. முன்னதாகவே அரசியல் குறித்து பேச கூடாது என்று அபிஷேக் சர்மா என்ற அந்த ஊடகக்காரருக்கு வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது[4]. இருப்பினும், அந்த செய்தியாளர் துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதியிடம் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது அமைதியை இழந்த சாமியார் எதிர்பாராத விதமாக செய்தியாளரின் கன்னத்தில் அடித்துவிட்டார்[5], என்று செய்திகள் வந்துள்ளன. ஆகவே, அபிஷேக் சர்மா ஏன் வேண்டுமென்றே அவரிடம் அந்த கேள்வியைக் கேட்டார் என்று தெரியவில்லை. “சோனியா பிரதம மந்திரியாக ஏன் வரக்கூடாது” என்றுஇ கேட்டிருக்கலாமே?

துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி

துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி

நரேந்திரமோடி  பிரதமர்  ஆகுவதற்கு  நான்  எந்த  ஒரு  எதிர்ப்பும்  தெரிவிக்கபோவது  இல்லை,  ஆனால்  அவர்  என்ன  செய்ய வேண்டும்  என்று  நினைக்கிறாறோ  அதனை  மக்களுக்கு  தெளிவுபடுத்த  வேண்டும்”: ஜாபல்பூரில் பேசிய சாமியார் பிரதமரை எம்.பி.க்களை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார், என்று தமிழ் நாளிதழ் கூறியுள்ளது. மோடி குறித்து சாமியார் பேசுகையில், “நரேந்திர மோடி பிரதமர் ஆகுவதற்கு நான் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கபோவது இல்லை, ஆனால் அவர்  என்ன வேண்டும் என்று நினைக்கிறாறோ அதனை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்”, என்று கூறியுள்ளார்[6]. பிறகு ஊடகக்காரர்களிடம், அதிகமாகவே அரசியல் பேசியுள்ளார், என்று ஊடகங்கள் நீட்டியுள்ளன. “மோடி, ராகுல், அரவிந்த் கேசரிவால் முதலியோர் இந்த நாட்டை ஆளுவதற்கு தகுதியில்லாதவர்கள், ஏனெனில் அவர்களது பேச்சுகளில் தேச வளர்ச்சி மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு பற்றிய விவரங்கள் தெளிவு இல்லை”, என்றும் கூறியுள்ளார்[7].

Swarupananda issue- Bangalore Mirror

“மோடி, ராகுல், அரவிந்த் கேசரிவால் முதலியோர் இந்த நாட்டை ஆளுவதற்கு தகுதியில்லாதவர்கள், ஏனெனில் அவர்களது பேச்சுகளில் தேச வளர்ச்சி மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு பற்றிய விவரங்கள் தெளிவு இல்லை”: இப்படி அவர் சொன்னதை பெரிது படுத்திக் காட்டவில்லை. ராகுலை குறைக்கூறிவிட்டார் என்று ஓலமிடவில்லை. காங்கிரஸுக்கு வேண்டியவர் என்று மட்டும் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. பிறகு ராகுலை ஏன் விமர்சிக்க வேண்டும், அப்படியென்றால், வேறு யார் காங்கிரஸ் தரப்பில் பிரதம மந்திரி பதவிக்கு தகுதியானவர், என்று அவரிடம் கேட்டிருக்கலாமே. அதைவிடுத்து ஏன் மோடியை மட்டும் பிடித்துக் கொண்டு பிரசினையைக் கிளப்பவேண்டும்? கடந்த பத்தாண்டுகளில் யுபிஏ அல்லது காங்கிரஸ் தலைமையில் நடந்துள்ள ஆட்சியில் தேச வளர்ச்சி, ஊழல் முதலியவை ஏவ்வாறிருந்தன, என்பது இவருக்குத் தெரிந்திருக்க வேண்டுமே, மேலும் இவரது பீடமே துவாரகாவில், குஜராத்தில் உள்ளது. அப்படியென்றால், குஜராத்தில் அவை எப்படியிருந்தன என்றும் தெரிந்திருக்குமே?

Swarupananda issue- Hindutan times

“அவர் கை மைக்கின் மீதுதான் பட்டது”: அபிஷேக் சர்மா, சங்கராச்சாரியார் மீது புகார் கொடுக்கவில்லையா என்று மற்றவர்கள் கேட்டப்போது, “அவர் மரியாதைக்குரிய சந்நியாசி, துரதிருஷ்டவசமாக, கோபத்தில் உணர்ச்சி வசப்பட்டு அவ்வாறு செய்துள்ளார். இதையெல்லாம் வேலை செய்யும் போது ஏற்படும் விபத்தாக எடுத்துக் கொள்ளவேண்டியது தான்”, என்றும் பதில் கூறியுள்ளார்[8]. “அவர் கையை நீட்டிய போது, நான் குனிந்து விட்டேன், அவர் கை மைக்கின் மீதுதான் பட்டது”, என்றும் விளக்கினார்[9]. வீடியோவைப் பார்க்கும் போது, இதுதான் உண்மை என்று தெரிகிறது. இருப்பினும், ஊடகங்கள் ஏற்கெனவே கன்னத்தில் அறைந்து விட்டார், அடித்து விட்டார்[10] என்று செய்திகளைப் பரப்பி விட்டன.

Swarupananda issue- Pranab Mukherjee getting blessings

காங்கிரஸ்-பிஜேபி விவாதம்: மாநில காங்கிரஸ் தலைவர் மயங்க் அகர்வால், “முதலில் அத்தகைய கேள்விகளை அவரிடத்தில் கேட்டிருக்கக் கூடாது. மேலும், அவர் செய்தியாளரின் கன்னத்தில் செல்லமாகத்தான் தட்டியிருக்கிறார். அதனை பெரிது படுத்த வேண்டிய அவசியம் இல்லை. மேலும் அவர் பிரசங்கம் செய்யும் வேளையில் அத்தகைய கேள்வி கேட்டிருப்பது சரியில்லை”, [Rajniti ki baat nahi karna (Don’t talk politics)] என்றும் குறிப்பிட்டிருக்கிறார்[11]. பிஜேபி இதை எதிர்த்தாலும் பெரிது படுத்த விரும்பவில்லை என்று தெரிகிறது. தேர்தல் சமயமாயிற்றே!

Swarupananda with Srungeri mutt

வழக்கம் போல விடியோ மிஸ்ஸிங், சவுண்ட் ரிகார்டிங்: “இந்தியா டுடே”, வெளியிட்டுள்ள வீடியோவிலும் அவர் சதாரணமாக கையினால் விலக்குவது போலவே உள்ளது[12]. ஆனால், வீடியோவை வெட்டி, ஒட்டி அவர் ஏதோ “பட், பட்” என்று திரும்ப-திரும்ப அடிப்பதைப் போன்று காட்டியுள்ளார்கள். இது விசமத்தனமாதாகும். “நரேந்திர மோடி பிரதம மந்திரி ஆவதைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று  அபிஷேக் சர்மா கேட்டபோது, “தூரப் போ, அதைப் பற்றியெல்லாம் கேட்காதே”, [‘चल हट जा यहां से। मुझे राजनीति पर बात नहीं करनी।’] என்று சாதாரணமாகச் சொல்லி[13], விலக்கி விடுவதைப் போன்று உள்ளது.

K.A.Paul with Swaroopananda Sankaracharya-1

முஸ்லிம்மதத்  தலைவர் அறிவுரை கூறுகிறாராம்: இருப்பினும் சில ஊடகங்கள் இதனை பெரிது படுத்திக் காட்டியுள்ளன. “சங்கராச்சாரியார் செய்தியாளரை அறைந்து விட்டார்[14], கன்னத்தில் பளார்……” என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டுள்ளன. ஒரு டிவிசெனலில், ஒரு முஸ்லிம் மதத்தலைவர், “மதகுருமார்கள், சந்நியாசிகள் எல்லோரும் இவ்வாறு கோபப்படக்கூடாது, அடிக்கக் கூடாது”, என்று அறிவுரை சொல்வதைப் போலக் காட்டியுள்ளது. முஸ்லிம் இமாம்கள், காஜிக்கள் முதலியோர்கள், இந்தியாவில் எப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள், கொள்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விசயமே. கிறிஸ்தவ பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரியார்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அப்பொழுது, இந்து சாமியாரைக் கூப்பிட்டு, டிவிசெனல்கள் அவர்களது கருத்தைக் கேட்கவில்லையே? இதுவும் செக்யூலரிஸத்தில் வந்து விடும் போலும்!

வேதபிரகாஷ்

© 24-01-2014

K.A.Paul with Swaroopananda Sankaracharya-2


[1] தினத்தந்தி, நரேந்திரமோடிகுறித்துகேள்விஎழுப்பியசெய்தியாளருக்குஅடிசாமியார்ஸ்வரூபானந்தசரஸ்வதி, ஜனவரி 24, 2014.

[8] Sharma, however, is not willing to lodge a formal complaint with the police. “He is a revered saint. Unfortunately, he lost his temper. The incident was nothing but a professional hazard,” Sharma told HT.

http://www.hindustantimes.com/india-news/mp-shankaracharya-swaroopanand-slaps-journalist-for-question-on-modi/article1-1175900.aspx

[9] The reporter later said he was not hit as “I ducked and Jagadguru’s hand only hit my mike”. He said would not lodge a police complaint as Swaroopanand is held in high esteem by the people.

http://news.outlookindia.com/items.aspx?artid=825957

[10] தினமலர், மோடிபற்றிகேட்டநிருபரைஅடித்தசாமியார், ஜனவரி 24.2014.

http://www.dinamalar.com/news_detail.asp?id=902129