கிறிஸ்தவ பெண்கள் பைபிள்களுடன் மதுரை மீனாக்ஷி கோவிலில் நுழைந்தது, வரக்கூடாதா என்று கேள்வி கேட்டது!
09-01-2024 கிறிஸ்தவ பெண்கள் பைபிள்களுடன் கோவிலில் நுழைந்தது: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் போலீஸ் சோதனையை மீறி அம்மன் சன்னதி வரை ஜெப புத்தகத்துடன் வந்த கிறிஸ்தவர்களால் சர்ச்சை எழுந்துள்ளது[1]. இதுகுறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் என ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன[2]. மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அலைபேசி, மாற்று மதம் தொடர்பான பொருட்களை கொண்டு செல்ல தடை உள்ளது[3]. நேற்று முன்தினம் [09-01-2024] காலை அம்மன் சன்னதி அருகே வரிசையில் நின்றிருந்த பெண்கள் சிலர், கையடக்க புத்தகத்தை வைத்துக்கொண்டு முனங்கிக் கொண்டிருந்தனர்[4]. அங்கிருந்த ஊழியர் சந்தேகப்பட்டு விசாரித்தபோது கிறிஸ்தவர்கள் எனத்தெரிந்தது[5]. அவர்களை கோயில் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்[6]. ‘சர்ச், பள்ளிவாசலுக்கு மாற்று மதத்தினர் வரும்போது, கோயிலுக்கு மாற்று மதத்தினர் வரக்கூடாதா,’ என கிறிஸ்தவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அதிகாரிகள், ‘இது காலம் காலமாக பின்பற்றும் நடைமுறை. அறநிலையத்துறை விதிப்படி அதை பின்பற்றிதான் ஆக வேண்டும்,’ என்றனர். இதைதொடர்ந்து அவர்கள் புறப்பட்டு சென்றனர்.
‘சர்ச், பள்ளிவாசலுக்கு மாற்று மதத்தினர் வரும்போது, கோயிலுக்கு மாற்று மதத்தினர் வரக்கூடாதா: இதிலிருந்து அந்த கிறிஸ்துவ பெண்கள் திட்டமிட்டுத் தான் உள்ளே நுழைந்திருப்பது தெரிகிறது. படிக்கத் தெரிந்தவர்களுக்கு, “இந்துக்கள் அல்லாதவர்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை,” என்ற போர்டையும் நிச்சயம் அறிந்திருப்பார்கள், படித்திருப்பார்கள். மேலும், பெண்களை அனுப்பினால், வாக்குவாதம்-அடிதடி என்றெல்லாம் நடக்காது என்றும் அவ்வாறு திட்டமிட்டு அனுப்பப் பட்டிருக்கலாம். எப்படியிருந்தாலும், கோவில்களில் பிரச்சினை உண்டாக்க வேண்டும் என்று பல கும்பல்கள் உறுதியாக செயல்பட ஆரம்பித்துள்ளது தெரிகிறது. ஶ்ரீரங்கத்தில் கருவறை போராட்டம் என்றெல்லாம் கலாட்டா செய்துள்ளார்கள். அதுபோல, இனி மற்ற பிரபலமான கோவில்களில் புதுபுதுவிதமாக, பிரச்சினைகளை ஆரம்பிப்பார்கள் போலும்.
சோதனைக்குப் பிறகு வெளியே அனுப்பப் பட்டது: போலீஸ் சோதனையை மீறி அவர்கள் எப்படி ஜெப புத்தகத்துடன் கோயிலுக்கு வந்தனர் என ஹிந்து அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன. சரியான்ன கேளி தான். ஹிந்து முன்னணி மதுரை மாவட்ட தலைவர் அழகர்சாமி கூறுகையில், ”பக்தர்கள் கொண்டு வரும் திரி உள்ளிட்ட பொருட்களைக்கூட உள்ளே கொண்டு செல்லக்கூடாது என கெடுபிடி காட்டும் போலீசார் மெத்தனமாக இருந்ததே இதற்கு காரணம். அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும். கோயில் நிர்வாகமும் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் போராட்டம் நடத்துவோம் என கோயில் நிர்வாகத்திடம் எச்சரித்துள்ளோம்,” என்றார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஏன் இத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்து நடக்கிறது?: ஜூன் 2018ல், திருப்பரங்குன்றன் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு, சர்ச் கட்டியதாக வழக்குத் தொடரப் பட்டது. ஆனால், அச்செய்தி அப்படியே அமைதியானது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மீது திராவிட கட்சிகளின் தாக்குதல்கள் 1950-60களிலேயே அதிகமாக தான் இருந்து வந்துள்ளது. நாத்திகம் என்ற போர்வையில் “மதுரை மீனாட்சி மூக்குத்தி கழட்டடி” என்று போன்ற வக்கிரமான வார்த்தைகள் எல்லாம் பயோகப் படுத்தி, பக்தர்களை பாதிக்கத்தான் செய்துள்ளனர். சமீபத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் “அல்லேலூயா அல்லேலூயா” என்று கத்தியதை காண முடிந்தது. ஒரு பாதிரியார் மோடியை பற்றி மிக கேவலமாக பேசி, வழக்கு தொடர்ந்து, கைதாக பிறகு மன்னிப்பு கேட்டு ஜாமீனில் வெளியே உள்ளார் அவர் மதுரை சேர்ந்தவர் தான். தொடர்ந்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி தேவையில்லாமல் அதிகமாக சர்ச்சுகள் புதிது புதிதாக கட்டப்பட்டு வந்து, பெருகுவதும் கண்கூடாக பொது மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கலையைக் காக்க வேண்டியவர்கள் ஏன் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்கள்: ஆகவே இத்தகைய திட்டங்கள் எல்லாம் தொடர்ந்து நடத்தப்பட்ட வருகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஒரு முக்கியமான கோவில் என்பதால், வருடம் முழுவதும் லட்சக்கணக்கான, என் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து சொல்கிறார்கள் இதனால் கோவிலுக்கு கணிசமான வருமானம் கிடைக்கிறது, வியாபாரம் நடக்கிறது. கோவிலில் மண்டபத்தில் வைத்திருந்த கடைகள் மூலமாக, மின்கசிவு ஏற்பட்டு, தீ விபத்து ஏற்பட்ட பொழுது, கோவில் தூண்களும், சிற்பங்களும் பாதிக்கப் பட்டன. அப்பொழுது, எந்த சரித்திராசிரியர், ஆழாய்வு நிபுணர் என்று எவரும் கவலைப்படவில்லை, கண்டிக்கவில்லை. ஆனால், அவ்வப்பொழுது, கலைகளைக் காப்போம் என்று மாந் ஆடுகள் நடத்துவார்கள், புத்தகம் போடுவார்கள்.
மதுரை மீனாக்ஷி கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது: சுற்றியுள்ள இடங்கள் எல்லாம் மதுரை ஆனது ஆதீனத்திற்கு சொந்தமாக இருக்கிறது அந்த மதுரை ஆதீனம் அதனால் தான் திராவிட கட்சிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருப்பதனால், சுமூகமாக இருந்து கொண்டு கோவில் நிலங்கள் சொத்துக்கள் முதலீட்டு எல்லாம் மற்றவர்கள் அனுபவிக்கும் அளவுக்கு கடந்த ஏழு ஆண்டு காலமாக குத்தகை வாடகை என்றெல்லாம் விடப்பட்டுள்ளது. குறிப்பாக முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தான் அதிகமாக அபகரித்துக் கொண்டு அனுபவித்து வருகிறார்கள். ஆண்டுகளாகிய பிறகு தமக்கு சொந்தமாகி கொள்ள வேண்டும் என்ற திட்டத்திலும் குத்தகை மற்றும் வாடகை பணம் கொடுக்காமல் வழக்குகள் போட்டு அவற்றை கிடப்பில் வைத்திருக்கிறார்கள் இதற்கு அரசுஅதிகாரிகள், அரசு அலுவலகங்கள், திராவிடக் கட்சியினர் என்று எல்லோருமே உடந்தையாக இருக்கின்றனர்.
அதிமுக–மதுரையில் SDPI நடத்தியது இந்துக்களை மிரட்டவா, முஸ்லிம் ஓட்டு வாங்கவா?: சமீபத்தில் நடந்து வரும் நிகழ்ச்சிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு அதிமுக SDPIவுடன் சேர்ந்து மாநாடு நடத்தியுள்ளது. அது முஸ்லிம்களின் ஓட்டு வாங்க வேண்டும் என்ற ரீதியில் தான் உள்ளது. திராவிட கட்சிகள் பெரியாரிஸம், நாத்திகம் என்றெல்லாம் பேசினாலும் அது இந்து விரோதமாக தான் இருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிந்து விட்ட நிலையில் உள்ளது. சாதாரணமாக மதுரைக்கு வந்து செல்கின்ற பக்தர்கள் அவர்கள் இந்துக்கள் தான். ஆனால், அவர்கள் கோவிலுக்கு வந்து செல்லும் நேரங்களில் தான் இத்தகைய மாநாடுகள் நடக்கின்றன எனும் பொழுது அவர்களுக்கு என்ன சமிஞை, சந்தேசம் செய்தி, அல்லது மற்ற விஷயங்கள் அவருக்கு அனுப்பப்படுகின்றன, தெரியப்படுகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்.
ஆக இந்து ஓட்டு வங்கி உருவாக வேண்டும் என்ற நிலைக்குத் தள்லப் படுகிறார்கள் போலும்: சரி நாங்கள் முஸ்லிம்களுக்காக இருக்கிறோம் என்று இந்த இத்தகைய விழா காலங்களில் மாநாடு போட்டு அதே விதமாக சமிஞை அனுப்புகிறார்கள் என்றால் இந்துக்களின் ஓட்டு அவர்களுக்கு கிடைத்து விடுமா என்றும் தெரியவில்லை. கடந்து 70 ஆண்டுகளில் ராமர் படத்திற்கு செருப்பு மாலை போடுவது, பிள்ளையார் சிலை உடைப்பது ஐயப்பனை பற்றி கேவலமாக பேசுவது அதன்படியே குறும்பு புத்தகங்கள் எல்லாம் போடுவது இதையெல்லாம் அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். நிச்சயமாக இந்துக்களுக்கும் அவர்களுடைய பக்திக்கும் அல்லது அவர்களுடைய அரசியல் விருப்பங்களுக்கும் தொடர்பு இல்லை என்று தான் தெரிகிறது. ஏனெனில், அத்தகைய இந்துவிரோதிகளுக்கு அவர்கள் ஓட்டுப் போட்டுக் கொன்டுதான் இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அவ்வாறு இருக்கிறது அதனால் அவர்கள் ஓட்டு போடுகிறார்கள் இவன் அவர் அவர்களுடைய எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவர்களது ஓட்டு வைத்துக்கொண்டு ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற நிலயுள்ளது விசித்திரமானது. அது ஜனநாயகமும் அல்ல.
© வேதபிரகாஷ்
11-10-2024
[1] தினமலர், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஜெப புத்தகத்துடன் கிறிஸ்தவர்கள் போலீஸ் மீது குற்றச்சாட்டு, பதிவு செய்த நாள்: ஜன 11,2024 04:48.
[2] https://m.dinamalar.com/detail.php?id=3524742
[3] தினமலர், மீனாட்சி அம்மன் கோவிலில் கிறிஸ்துவர்களிடம் விசாரணை, Added : ஜன 10, 2024 23:38.
[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=3524247
[5] செய்திசோலை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில்…. பைபிளுடன் வந்த கிறிஸ்தவர்கள்…. வெளியேற்றிய அதிகாரிகள்….!!,மதுரை , மாவட்ட செய்திகள் January 11, 2024.
[6] https://www.seithisolai.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B-7/