Archive for the ‘வீடியோ’ Category

கலாக்ஷேத்ரா விவகாரம் அரசியலாக்கி, மொழி வெறியாக்கி, ஜாதியத்தில் முடிந்த வக்கிர விளக்கவாத செய்திகள்- – கலை காமம் ஆகி கலவியாகிய நிலை (3)

ஏப்ரல் 9, 2023

கலாக்ஷேத்ரா விவகாரம் அரசியலாக்கி, மொழிவெறியாக்கி, ஜாதியத்தில் முடிந்த வக்கிர விளக்கவாத செய்திகள்- – கலை காமம் ஆகி கலவியாகிய நிலை (3)

கலைக்கூடமா, கலவிக் கூடமா?: கலைக்கூடமா, கலவிக் கூடமா? இப்படியெல்லாம் தலைப்பிட்டு செய்திகள். அப்படியென்றால் இவர்களின் இலக்கு யார்? இவர்கள் உண்மையிலேயே கலையில், கலையில் ஈடுபட்டுள்ள பெண்களை மதிப்பதாக இருந்தால், அத்தகைய பெண்களின் புகைப் படங்களை ஒழுங்காக வெளியிடுவார்களா? அவ்வாறு கலவிக் கூடம் எனும் பொழுது, இங்கு படிக்கும் எல்லா மாணவியரையும் அவதூறு பேசுவது ஆகாதா? ஆக, இதில் யாரைத் தாக்குகிறார்கள் என்று தெரிந்தே, யாரையோ தாக்குகிறார்களா? லாஜிக்கே இல்லாமல், இவ்வாறு செய்து, தமது பிராமண துவேசத்தை வெளிப் படுத்திக் கொள்கிறார்களா? ஒருவேளை “திராவிட மாடலில்” இவர்கள் இப்படித்தான் எழுதுவார்கள், செய்தி வெளியிடுவார்கள் போலும்!

மூடி மறைக்கும் பார்ப்பனர்கள்! ஆக, இப்படி பார்ப்பனர்களையும் இழுத்தாகி விட்டது!: ஒரு பக்கம் மலையாளிகளின் ஆதிக்கம், ஆர்.எஸ்.எஸ் ஊடுருவல், என்றெல்லாம் அளந்து, பார்ப்பனர்களையும் சேர்ந்து அடைந்துள்ளது! பிறகு, பார்ப்பனர் அல்லாதவர்களின் கதை என்னவோ?

  • பார்ப்பன லாபி!
  • யார் அந்த பார்ப்பன லாபியில் இருக்கிறார்கள்?
  • பெயர்கள், விவரங்கள் தர முடியுமா?

குற்றவாளிகளுக்கு உடந்தை என்று அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கலாமே? தினம்-தினம் யூ-டியூப்புகள் வந்து கொன்டிருக்கின்றன. வரும் செய்திகளைத் தொகுத்து, தமது பிராமண வெறுப்பைக் கக்கி கொன்டிருக்கின்றன. ஏதோ பார்ப்பனர்கள் தான் எல்லாவற்றிற்கும் காரணம் போன்ற பேச்சுகள், விளக்கங்கள்….ஶ்ரீதேவி என்ற பெண்மணியின் வீடியோக்கள் இந்திய அரசே பார்ப்பனியமயமாகப் பட்டு விட்டது என்று திகவை விட 1000 மடங்கு அதிகமாக கதை விடுகிறார். பொழுது போக்கிற்காக, இதைப் பார்த்து மறந்து விடுவர். இருப்பினும், சித்தாந்த ரீதியில், இப்படி யாரோ தயார் செய்து அரங்கேற்றுகிறார்கள் என்று தெரிகிறது. ஏனெனில், இதெல்லாம் ஒரு தரப்பு பொய்யான-பிரச்சார ரீதியிலான பேச்சுகள். யூ-டியூப் பிரச்சாரம் இப்பொழுது பொழ்து போக்கிற்காக உள்ளது. செல்போனில் பார்ப்பதால், அதிக “வியூவ்ஸ்” கிடைக்கிறது என்று அள்ளி வீசுகின்றனர். இவர்களுக்கு உண்மை, பொறுப்பு, சமூக அமைதி முதலியவற்றைப் பற்றி கவலை இல்லை.

மவுண்ட் ரோட் மஹாவிஷ்ணுவும், காமக்ஷேத்ரமும்:  “காமக்ஷேத்ரவான கலாக்ஷேத்ரா!” என்று அட்டைப் படம் போட்டு, “”நக்கீரன்” விற்கிறது. “பார்ப்பன” டுவிஸ்ட் செய்யலாம் என்றால் கோபாலனுக்கு சந்டோச தான். பார்ப்பன துவேச ரீதியில் இத்தகைய இணைத்தளப் பதிவுகளும் வெளியாகியுள்ளன[1]. “அறம்” என்ற பெயர் இருந்தாலும், அதிலும் பார்ப்பன காழ்ப்பு இருக்கத்தான் செய்திறது[2]. லீலா சாம்சன் டுவிட்டர் பதிவு ஆரம்பித்து, ஒரு கதையைச் சொல்லி, பார்ப்பன கோணத்தில் திரிபு விளக்கம் கொடுத்து வீடியோவையும் போட்டாகி விட்டது. நக்கீரனுக்கு, கோபாலனுக்கு, “பார்ப்பனரான” இந்து-ராம் ஆதரவு கொடுப்பது தெரிந்த விசயம். “ஜார்னலிஸ்டிக்-எதிக்ஸ்” பேசும் என்.ராமுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன? இருப்பினும் “என்.ராம்” போன்றவர்கள் ஆதரவு தருகின்றனர் என்றால், அனைத்தையும் மீறி, ஏதோ ஒன்று அவர்களை பிணைத்துள்ளது என்று தெரிகிறது. ஆமாம், அவர் வீட்டுப் பெண்ணைத் தான் தயாநிதி மாறன் கல்யாணம் செய்துக் கொண்டிருக்கிறார். “சாவிப்’ பிரச்சினை எல்லாம் இங்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை. மாமனார் “மவுண்ட் ரோட் மஹாவிஷ்ணு” என்று நக்கல் அடித்தாலும், மறுமகள் கண்டுகொண்டதில்லை. அதைத்தான் முதலில் “இந்துத்துவ வாதிகள்” வெளிப்படுத்த வேண்டும்.

இந்துத்துவ வெறுப்பு பார்ப்பன வெறுப்பாகி, பிராமண துவேஷமாவதேன்?: வழக்கம் போல,ஆர்-எஸ்-எஸ்- எதிர்ப்பு, பிஜேபி-எதிர்ப்பு, இந்துத்துவ-எதிர்ப்பு, அவாள்- எதிர்ப்பு, பார்ப்பன- எதிர்ப்பு என்றெல்லாம் பதிவுகள் போட்டு, இந்து-விரோத, இந்து-துவேஷ, இந்து-தூஷணங்களில் முடிந்து விடும். அத்தகையோரையும் கண்டு கொள்ளலாம்! “வினவு” போன்ற இந்துவிரோத தளங்கள் விஷத்தைக் கக்குவது தெரிந்த விசயம் தான்[3]. ஏனெனில், அங்கும் அதே ஃபார்புலா தான் பின்பற்றப் படுகிறது[4]. அதாவது, பார்ப்பனத் திரிபு விலக்கத்தை வைத்து, கதையை உருவாக்கி, செய்தியாக்குவது[5]. பிறகு மற்ற ஜாதியினரின் ஆதிக்கம், செல்வாக்கு, முதலியவை வரும்பொழுது, வியாபாரம் கருதி, அமைதியாவது, சரண்டாராகுவது என்று முடிவதும் சகஜமாகிறது[6]. இருப்பினும், அந்த பார்ப்பன தூவேஷப் பதிவு நிலைத்திருக்கும். வேண்டும் என்றால் பிராமணர்களை முக்கியமான வேலைக்கும் வைத்துக் கொள்வார்கள். ஆனால், வெளியில் அவர்களை வசைப் பாடுவார்கள். இது “சன்’ குழுமத்திலேயே கவனிக்கலாம்.

பார்ப்பனிய வாதமும், குஷ்பு பதிலும்: இந்நிலையில் ட்விட்டரில் ரத்தினவேலு வசந்தா என்ற பெயரில் செயல்படும் ஒருவர், நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவை டேக் செய்து, ‛‛இன்று வீட்டு கடனுக்கான வட்டி அதிகமாகியுள்ளது. கலாசேத்ராவில் பார்ப்பன ஆசிரியர்களின் பாலியல் தொந்தரவை எதிர்த்து மாணவிகள் போராடுகின்றனர். மகளிர் ஆணைய உறுப்பினர் ஆன நீங்கள் என்ன செய்கிறீர்கள்,” என கேள்வி எழுப்பியதோடு மேலும் சில வார்த்தைகளை காட்டமாக தெரிவித்து இருந்தார்[7]. இதற்கு உடனடியாக குஷ்பு பதிலடி கொடுத்தார். அதாவது, ‛‛நீங்கள் எவ்வளவு விரக்தியில் இருக்கிறீர்கள். முதல்வர் உங்களுக்கு ஏதாவது வேலை ஒதுக்கீடு செய்ய வண்டும். நீங்கள் கேள்விகள் கேட்பதற்கு முன்பு சட்டம் அல்லது தேசிய மகளிர் ஆணையம் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் வயதுக்கு மரியாதை உண்டு. அதுவும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வரும். dravidan Stockகளிடம் இருந்து சில சிறந்த உணர்வுகளை எதிர்பார்ப்பது என்பது என் மீதான தவறு தான். உங்களிடம் இருந்து சிலவற்றை கற்று கொள்ள வேண்டியுள்ளது. உங்களை போல் நானும் சொன்னால் அது அவமரியாதையாக இருக்கும். எனவே கடவுள் ஆசீர்வாதம் கிடைக்கட்டும் என கூறுகிறேன்,” என விமர்சனம் செய்திருந்தார்[8].

லாஜிக்கே இல்லாத வாத-விவாதங்கள் தொடர்கின்றன, அரங்கேறுகின்றன: லாஜிக்கே இல்லாத அதாவது தர்க்கத்தில் காரணம், நியதி, முறை, உண்மை, ஏற்புடைத் தன்மை என்று எதையும் பின்பற்றாமல், வாதங்கள் முன்வைக்கப் படுகின்றன:

  • பிராமணரை எதிர்க்கவில்லை, பிராமணத்துவத்தை எதிர்க்கிறோம்
  • இந்தியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பை எதிர்க்கிறோம்
  • இந்துக்களை எதிர்க்கவில்லை, எங்கள் கட்சியிலும் இந்துக்கள் இருக்கிறார்கள்.
  • சனாதனத்தை வேரறுப்போம், இந்துத்துவத்தை கருவறுப்போம் என்றால் குற்றமில்லையா?
  • மத்திய அரசை வெறுக்கிறோம், ஒன்றியத்தை ஆதரிக்கிறோம்.
  • திராவிட இனம், இனத்துவம், முதலியவற்றை நம்புவோம் என்றால், திராவிட இனவெறி, இனவெறித்துவ செயல்பாடுகள் முதலியவற்றை ஆதரிப்பது எப்படி?

இதில் ஏதோ பெரிய லாஜிக் இருப்பது போல பேசுகிறார்கள், ஆனால், இவையெல்லாம் ஒன்றுமே இல்லாத, அர்த்தமற்ற, அபத்தமான வெற்றுப் பேச்சுகள் தாம்.

  1. எக்ஸை ஆதரிக்கிறோம், ஆனால் அதன் தீவிரவாதத்தை எதிர்க்கிறோம்
  2. எக்ஸை போற்றுகிறோம், ஆனால், அதன் அடிப்படைவாதத்தை வெறுக்கிறோம், அதனால் கருவறுப்போம்.
  3. எக்ஸை ஆதரிக்கிறோம், ஆனால் அதன் பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம்

என்று சொல்ல மாட்டார்கள், ஏனெனில், அவர்களுக்கு உண்மை எது, பொய்மை எது என்பது. பிறகு அவ்வாறு பேச வேண்டிய அவசியம் என்ன? மக்களை ஏமாற்ருவதர்குத் தான்.

© வேதபிரகாஷ்

09-04-2023


[1] அறம், கலாஷேத்திராவா? காமஷேத்திராவா?, -சாவித்திரி கண்ணன், April 2, 2023

[2] https://aramonline.in/12972/kalakshetra-student-protest/

[3] வினவு, கலாஷேத்ரா: ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கிரிமினல் கூடாரங்களே! | மக்கள் அதிகாரம் கண்டனம், By மக்கள் அதிகாரம் -April 1, 2023

[4] https://www.vinavu.com/2023/04/01/arrest-kalakshetra-management-peoples-power-condemnation/

[5] தமிழ்.ஒன்.இந்தியா, கலாஷேத்ரா..தவறான தகவல் பரப்பாதீர்கள்..கூடுதல் ஆணையர் வேண்டுகோள்..மாநில மகளிர் ஆணைய தலைவர் விசாரணை, By Jeyalakshmi C, Published: Friday, March 31, 2023, 11:46 [IST]

[6] https://tamil.oneindia.com/news/chennai/don-t-spread-wrong-information-about-kalakshetra-says-chennai-additional-commissioner-of-police-505302.html

[7] தமிழ்.ஒன்.இந்தியா, வயதுக்கு தான் மரியாதை.. ட்விட்டரில் திடீரென டென்ஷனான நடிகை குஷ்பு.. கடும் விமர்சனம்.. என்னாச்சு? By Nantha Kumar R Updated: Friday, March 31, 2023, 20:34 [IST]

[8] https://tamil.oneindia.com/news/chennai/actress-and-ncw-member-khushbu-attacks-who-trolled-her-on-the-row-of-kalakshetra-harassment-issue-505385.html

கே.டி.ராகவன் வீடியோ – ஸ்டிங் ஆபரேஷன், பிஜேபி-ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பில் ஆரம்பித்து, பார்ப்பன துவேசத்தில் பயணித்து, இந்துவிரோதத்தில் முடிந்துள்ள நிலை!

ஓகஸ்ட் 31, 2021

கே.டி.ராகவன் வீடியோஸ்டிங் ஆபரேஷன், பிஜேபி-ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பில் ஆரம்பித்து, பார்ப்பன துவேசத்தில் பயணித்து, இந்துவிரோதத்தில் முடிந்துள்ள நிலை!

ஒரு பிஜேபி உறுப்பினர், தலைவரை இவ்வாறு விளிக்க வந்த தைரியம், எந்த அடிப்படையில் உண்டானது? அதிகாரமா, பண்மா, ஆள்பலமா பின்னணி என்ன?

ஸ்டிங் ஆபரேஷன்வேலையில் உருவானகே.டி.ராகவன் வீடியோ:  மதன் ரவிசந்திரன் என்ற ஊடகக்காரரால் வெளியிடப் பட்ட “கே.டி.ராகவன் வீடியோ” பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இப்பிரச்சினை, பிஜேபிக்கு உண்டானது, அது உள்-கட்சி பூசலா, ஒருவர் இன்னொருவருக்குக் குழி பறிக்கிறர்களா, என்பதெல்லாம், மதன் ரவிசந்திரன் மற்றும் வெண்பா கீதாயன் பிஜேபி உறுப்பினர்களாக இருந்து, அவ்வாறு “ஸ்டிங் ஆபரேஷன்” செய்தது ஆச்சரியமாக இருக்கிறது. பல கேள்விகளும் எழுகின்றன:

  • ஒரு பிஜேபி உறுப்பினர், இன்னொரு பிஜேபி உறுப்பினருக்கு இத்தகைய சோதனைகளை செய்வது, விசித்திரமாக இருக்கிறது.
  • அப்படியென்றால், இது அறிவிக்கப் பட்டு அல்லது அறிவிக்கப் படாமல் செய்யப் பட்ட “ஸ்டிங் ஆபரேஷன்” வேலையா?
  • கட்சிக்குள் “ஸ்டிங் ஆபரேஷன்” எப்படி செய்ய முடியும்?
  • அறிவிக்கப் பட்டு செய்தது என்றால், யாருக்கு அறிவிக்கப் பட்டது?
  • ஏற்கெனவே, ஒன்று, இரண்டு மற்று மூவருக்கும் மேலானவர்கள் இதில் சம்பந்தப் பட்டுள்ளது தெரிகிறது.
  • அல்லது அறிவிக்கப் படாமல் செய்தது என்பதிலும் உண்மை உள்ளதா என்பது ஆராய வேண்டியுள்ளது.

வீடியோஆடியோ ஆதாரங்கள் நீதிமன்றங்களில் ஏற்றுக் கொள்ளப் படுகிற நிலை: பொதுவாக வீடியோ-ஆடியோ ஆதாரங்கள் நீதிமன்றங்களில் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. அவை, முதலில் உண்மைத் தன்மை குறித்து சோதிக்கப் படுகிறது. அப்பொழுது, சம்பந்தப் பட்டவர்களின் குரல் மாதிரிகள் பெறப் பட்டு, அவற்றின் ஒலிஅதிர்வு அமைப்பு, படிவுசெய்யப் பட்ட குரல்-ஒலிஅதிர்வு-அமைப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கப் படுகிறது. வீடியோவும், டிஜிடல் நுட்பங்களுடன் தொடர் படிவாக உள்ளனவா, இடையிடையே நிறுத்தப் பட்டு, இணைக்கப் பட்டுள்ளதா, எடிடிங் செய்யப் பட்டு சேர்க்கப் பட்டுள்ளதா என்றெல்லாம் சோதிக்கப் படும். இக்காலத்தில், வீடியோ-எடிடிங்கிலேயே, பல மாறுதல்கள் செய்ய தொழிற்நுட்பங்கள் உள்ளன. அண்ணாநகர் பிரகாஷ் ஆபாசப் புகைப்படங்கள், வீடியோக்கள் அவ்வாறு நுண்ணியமாக சோதிக்கப் பட்டன. வீடியோ சோதனை, ஆடியோ சோதனையை விட நுட்பமானது, நீதிமன்ற ஆதாரமாக சமர்ப்பிக்கப் பட்டு, ஏற்றுக் கொள்ளப் படுகின்ற நிலையில், பற்பல கேள்விகளுக்குட் படுகிறது. பெரும்பாலான வழக்குகளில் வீடியோ-ஆடியோ ஆதாரங்கள் வலுசேர்ப்பதில்லை, நிராகரிக்கப் படுகின்றன.

கட்சிக்கு நரம்பு தளர்ச்சி ஏற்பட்டுள்ளதால் அதை சீரமைக்க வேண்டும்: தமிழக பாஜவில் பாலியல் களியாட்டம் மிகப்பெரிய அளவில் நடப்பதாகவும், 15 தலைவர்கள் ஆபாச வீடியோக்கள் சிக்கி உள்ளதாகவும், கட்சிக்கு நரம்பு தளர்ச்சி ஏற்பட்டுள்ளதால் அதை சீரமைக்க வேண்டும் என்று சொல்வதும் கவனிக்கத் தக்கது!

“இன்றைக்கு ஆளுநராக உள்ள ஒரு நபர் அந்த கால கட்டத்தில் இருந்தே இந்த வேலைகளில் ஈடுபடுவதாக கட்சியை சார்ந்தவர்களே என்னிடம் கூறி இருக்கிறார்கள். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது,” அப்படியென்றால், மிரட்டலா?.

சேர்ந்து சில நாட்களிலேயே அவ்வாறு வீடியோ எடுத்து விட்டாகியது என்றால், அந்த 15 தலைவர்கள், மதனுக்கு எப்படி இடம் அளித்தார்கள், அதாவது, தங்களது அந்தரங்கம் மற்றும் பலவீனம் தெரியும் அளவுக்கு நெருக்கமாகியது எப்படி?

புதிய அங்கத்தினர்களுக்கு வேவு பார்த்து தாக்க அத்தகைய இடம், சலுகை, வந்து-செல்ல அனுமதிகள், ……முதலியவை கொடுப்பார்களா?

ஸ்டிங் ஆபரேஷன்,” (Sting operation) “நார்கோடிக் டெஸ்ட்” (Narcotic test) முதலியன: “ஸ்டிங் ஆபரேஷன்” என்பது, மனோதத்துவ ரீதியில் ஆபத்தானது.

ஆனால், சிக்கியவர்கள் பாதிப்பு அடைவர். “நார்கோடிக் டெஸ்ட்” போல, இதுவும், ஒரு அசாதாரணமான குத்தும், கொத்தும், ஊசியை நுழைக்கும் சோதனை தான்.

இதில் ஈடுபட்டுள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் அவர்களின் பிரகடனங்கள், அறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைக் கூடிய அறிக்கைகள், அரசியல், இந்த சோதனை, அரசியல், அரசியலுடன் கூடிய பிரச்சினைகள் எல்லாவற்றையும் நோக்க வேண்டியுள்ளது.

ஒழுக்க பேணுபவர்களிடமிருந்து தான், ஒழுக்கம் எதிர்பார்க்கப் படுகிறது, எளிதில் விமர்சனத்திற்கு உள்ளாகிறது!: இங்கு இலக்கில் இருப்பவர் ஒரு பார்ப்பனர், பிராமணர், அந்தணர் – அதனால், திராவிடத்துவவாதிகள், திக-திமுக வகையறாக்கள், ஈவேரா-பெரியாரிஸ்ட்டுகள், கம்யூனிஸ்ட் கும்பல்கல், துலுக்க-கிருத்துவக் கூட்டங்கள் என்று எல்லாம் சேர்ந்து, ஊடகங்களில் பாலியல் குற்றத்தை எதிர்க்கிறேன், குற்றஞ்சாட்டப் பட்டவரைத் தாக்குகிறேன், விமர்சனம் செய்கிறேன் என்ற ரீதிகளில், வழக்கம் போல படிப்படியாக நகர்ந்து பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் என்று நகர்ந்து பார்ப்பன எதிர்ப்பிற்கு முன்னேறி, இந்துவிரோதத்தில் வந்து முடிந்துள்ளது. அதனால், அனைவற்றையும் மீறி கவனிக்கப் பட வேண்டியது,

  • ஒரு சீல-நன்னெறியுடன் இருக்க வேண்டிய அமைப்பு,
  • கட்டுப்பாடு-ஒழுக்கமாக இருக்க வேண்டிய நிறுவனம், மற்றும்
  • நன்னடத்தையுடன் இருக்கப் படவேண்டிய தனி-மனிதன்

இத்தகைய குரூரமான-ஆபாசமான சோதனைக்கு உட்பட்டிருப்பதால், இதன் பின்னணி, இறுதி வரை பாதிக்கப் படும் நபர்கள்-சமூகம் மற்றும்  குறிவைக்கப் பட்டுள்ளது எது என்று ஆராய வேண்டியுள்ளது. பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், பார்ப்பனர், பிராமணர், இந்துக்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதில் எந்த விசயமும் இல்லை. அரசியல் சாக்கடையில் வீழ்ந்ததால், தமிழகத்தில் திராவிடத்துவ பாணியில் செல்ல ஆரம்பித்து விட்டன என்றால், மற்ற பெரும்பான்மை இந்துக்களுக்கு விவகாரமும் இல்லை. ஆனால், இந்த போர்வையில், முகமூடிகளில் இந்துவிரோதம் இருப்பது தான் எடுத்துக் காட்டப் படுகிறது, எதிர்க்கப் படுகிறது.

இந்துமதம், சின்னங்கள் முதலியவைத் தாக்கப் படுவது ஏன்?: தமிழக அரசியலில், குறிப்பிட்ட மதம், சமூகத்தினர் தாக்கப் படுவது என்பது தெரிந்த விசயமே. அதாவது பிராமணர்களைத் தாக்குவது என்பது 1970களிலிருந்தே சாதாரணமான விசயமாக இருக்கிறது.

  • பூணூல் அறுப்பது என்பது, ஏதோ வீர-தீர செயல் போல சித்தரிக்கப் பட்டு வருகிறது.
  • அரசோ, போலீஸோ, சட்டமுறை நடவடிக்கையோ, “பூணூல் அறுப்பு” குற்றத்தில் எடுத்ததகத் தெரியவில்லை.
  • தெருக்களில், எல்லோரும் பார்க்கின்ற முறையில், ஒரு துலுக்கனுடைய தலையில் இருக்கும் குல்லாவைக் கழட்டி வீசுவது, ஒரு கிருத்துவன் அணிந்துள்ள சிலுவையினை அறுத்து வீசியது போன்ற நிகழ்ச்சிகள் நட்ந்துள்ளத என்று தெரியவில்லை.
  • திமுக, இந்துத்துவத்தை ஒரு கருவியாக எடுத்ததிலிருந்து, இந்துமதம் எப்படியெல்லாம் தாக்கப் படும் என்பதை கவனிக்கலாம்!
  • நாளும், கிழமை பார்த்து தான் நிகழ்ச்சிகள் அரங்கேறும், அரங்கேறி வருகின்றன..
    • 20-0­8-2021 – மஹாலக்ஷ்மி விரதம்
    • 22-08-2021 – சிராவண பௌர்ணமி, ஶ்ரீ ஹயக்ரீவ ஜெயந்தி
    • 23-08-2021 – காயத்ரி ஜெபம்.
  • சமூக வளைதளங்களில் வழக்கம் போல, பிராமண துவேசம், பார்ப்பன அவதூறு, இந்துத்துவ எதிர்ப்பு என்று வெளிப்பட்டு, இந்துமதத்தைத் தாக்குவதில் முடிந்துள்ளது.

அத்தகைய இந்துஎதிர்ப்பில் கிருத்துவ-துலுக்க ஆதரவுகளும் வெளிப்படுவது திகைப்பாக இருக்கிறது.

  • இந்து துவேசம், இந்து எதிர்ப்பு, இந்து காழ்ப்பு, இந்து வெறுப்பு, போன்றவை எப்படியெல்லாம் வேலை செய்கிறது என்பது தான் எனது அக்கரை, கவலை..
  • அது இந்து, இந்து உருவம், இந்து ஆதரவு பிம்பம், இந்துத்துவ போர்வை, என்றும், எதிர்மறையாகவும் வெளிப்படலாம், வேலை செய்யலாம்!
  • கே.டி.ராகவன், சிவ சங்கர் பாபா அல்லது துர்கா ஸ்டாலின், ஸ்டாலின், வீரமணி, மற்ற இந்துவிரோத சித்தாந்திகள் என்று எப்படி, எவ்வாறு வெளிப்பட்டாலும் எல்லாமே ஒன்று தான்!
  • இந்து என்று சொல்லிக் கொண்டு, இந்துமதத்திற்கு எதிராக வேலை செய்பவர்கள், அவ்வாறு செய்யும் சிந்தனை பாவம், மனோ தத்துவம் இவற்றைத் தான் ஆராயப்பட வேண்டும்.
  • வெண்பா கீதாயன், மதன் ரவிசந்திரன் போன்றோரும் இந்துவிரோதிகளாக செயல்படும், செயல்பட்ட நிலையில், அவர்களும் இந்து விரோதிகளே!
  • கே.டி.ராகவனும், துர்கா ஸ்டாலுனும் கோவிலுக்குச் செல்கிறார்கள்; வெண்பா கீதாயன், மதன் ரவிசந்திரன் பிஜேபி உறுப்பினர்கள் என்பதனால் என்ன, யாருக்கு, எப்படி, எவ்வாறு பயன்?
  • கருணாநிதி மீனாக்ஷி கோவிலில் பாடலைக் கேட்டு உருகினார் என்று இல.கணேசன் வாக்குதத்தம் கொடுத்ததால், மூக்குத்தி கழட்டடி நிலை மாறிவிட்டதா?
  • இந்துக்களே இந்துமதத்தை தூஷிப்பது திராவிடத்துவ நாத்திகம், வெறுப்பது பகுத்தறிவு, பெண்டாட்டியை வைத்து சாமி கும்பிட வைப்பது ஈவேராயிஸ வெங்காயம்!
  • இந்துத்துவ அரசியல்வாதிகள், அவ்வப்பொழுது திராவிடத்துவத் தலைவர்களை போற்றுவது, தமிழில் அர்ச்சனை போன்றதே! சமஸ்கிருத பாடையைத் தூக்க வேண்டியது தான்!
  • பலதடவை எடுத்துக் காட்டியது போல, அந்தஸ்து, அதிகாரம், புகழ், பரஸ்பர ஸ்துதி, சலுகைகள் முதலியவை ஒழுக்கத்தைக் கெடுத்து விடும்!

© வேதபிரகாஷ்

26-08-2021

குமுதம் ரிப்போர்ட்டர் போன்ற பத்திரிக்கைகளும், “நக்கீரன்” பாணியில் செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால், நோயின் மூலத்தைப் பற்றி கவலைப் படுவதாகத் தெரியவில்லை.