Archive for the ‘வழக்கு’ Category

திமுக எம்பியின் இந்துவிரோத பேச்சு, மன்னிப்புக் கேட்டல், வெள்ள நிவாரண நிதி – எல்லாம் அரசியலா, தேர்தல் கூட்டணியா, மக்களுக்கு உதவுவதற்காகவா? (3)

திசெம்பர் 12, 2023

திமுக எம்பியின் இந்துவிரோத பேச்சு, மன்னிப்புக் கேட்டல், வெள்ள நிவாரண நிதிஎல்லாம் அரசியலா, தேர்தல் கூட்டணியா, மக்களுக்கு உதவுவதற்காகவா? (3)

தி.மு.., தலைவர்கள் ஹிந்து மதத்தை பற்றியும், கடவுள் பற்றியும் தினந்தோறும் இழிவான வார்த்தைகளை பேசி வருகின்றனர்: தி.மு.க., தலைவர்கள் ஹிந்து மதத்தை பற்றியும், கடவுள் பற்றியும் தினந்தோறும் இழிவான வார்த்தைகளை பேசி வருகின்றனர்[1] [இந்த விசயத்தை ஒழுங்காக சொல்லியிருக்கிறார் எனலாம்]. அவர்கள் ஹிந்து மதத்தை துறந்துவிட்டனரா? கிறிஸ்தவ மதத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டால், பிறகு எப்படி ஹிந்து மதத்தை விமர்சிக்கின்றனர்?[2] ஹிந்து மதத்தை பிடிக்காதவர்கள், வேறு மதத்திற்கு சென்றுவிடுவதுடன்[3], விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்[4]. இதற்கு ஒரு முடிவு கட்ட ஒரு கண்டிப்பான சட்டத்தை இயற்ற வேண்டும் அல்லது ஹிந்து மதத்தின் கண்ணியம் அழிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்[5]. சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற நிலைக்கு பேசியுள்ளதை கவனிக்க வேண்டும். உபியைப் பொறுத்த வரையில் இந்துவிரோதம் வைத்து தேர்தலில் நிற்க முடியாது.

செந்தில்குமார் மீது முதல்வர் மு..ஸ்டாலின் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்: இந்த விவகாரத்தில் திமுக எம்.பி. செந்தில்குமார் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார் என மக்களவையில் திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்[6]. “ஏற்கெனவே சனாதனம் குறித்து உதயநிதி பேசியது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த சூழலில், தற்போது செந்தில்குமார் பேசியிருப்பது கூட்டணிக் கட்சித் தலைவர்களைக் கொந்தளிக்கவைத்திருக்கிறது. இது பெரிய அளவில் சர்ச்சையாக உருவெடுக்கும் முன்பே சரிசெய்துவிட வேண்டும் என நினைத்த தி.மு. தலைமை, உடனடியாக செந்தில்குமாரை மன்னிப்புக் கேட்கச் சொல்லி உத்தரவிட்டது. அதனால்தான் அவர் மன்னிப்புக் கேட்டார்,” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்[7]. “செந்தில்குமார் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்,” என்றால், என்ன நடவடிக்கை எடுத்தார் என்று தெரியவில்லை.

வைகோவின் வக்கலத்தும், ஆதரவும்: ம.தி.மு.க., தலைவர் வைகோவிடம் செய்தியாளர்கள் பதில் கேட்டபோது, ​​செந்தில்குமாரின் கருத்துக்கு வைகோ உடன்பட்டது சர்ச்சையை அதிகப்படுத்தியது[8]. கருத்துகள் குறித்த தனது நிலைப்பாட்டை அழுத்தியபோது, ​​“அவருடன் நான் உடன்படுகிறேன்,” என்று எம்பி வைகோ உறுதிப்படுத்தினார்[9]. செந்தில்குமாரின் இழிவான கருத்துக்கு அவர் ஒப்புதல் அளிக்கிறீர்களா என்று குறிப்பாகக் கேட்டபோது, ​​“ஆம், ஆம், அவர் சொல்வது சரிதான்” என்று வைகோ மீண்டும் கூறினார்[10]. ஸ்டாலின் எதிர்த்த போது, இவர் ஆதரிப்பது விசித்திரமாக இருக்கிறது[11]. இதில் வைகோவின்மனப்பாங்கைக் கவனிக்க வேண்டும், வயதான முதிர்ந்த நிலையிலும், இத்தகைய இழிவான கருத்துக்குஒப்புதல் அளிக்கிறேன் என்றது, திகைப்பாக இருக்கிறது. இவர் கிருத்துவர் என்பதால், அத்தகைய வெறுப்பைக் கக்குகிறாரா என்று தெரியவில்லை. உதயநிதி தான் கிருத்துவர் என்று ஒப்புக் கொண்டு, பிறகு சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசியதையும் கவனிக்கலாம்.

தமிழகத்தில் எதிர்ப்பு குரல்கள்: இந்த நிலையில், இந்தியாவை தவறான வழியில் பார்க்கும் ஆழமான உணர்வே திமுக எம்.ப. செந்தில்குமார் பேசிய வார்த்தைகள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்[12]. சென்னை மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அவர், “திமுக எம்.பி. கூறிய வார்த்தைகள், இந்தியாவை தவறான வழியில் பார்க்கும் ஆழமான உணர்விலிருந்து வந்தது. அது அவர்களின் தவறான சித்தாந்தத்தின் ஆழமான உணர்விலிருந்து வந்தது.” என தெரிவித்துள்ளார்[13]. பிஜேபி தவிர மற்ற கட்சிகள், சித்தாந்தவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்களா, வெஊப்புப் பேச்சைக் கண்டித்தார்களா என்று தெரியவில்லை.

வன்னியர் என்று ஜாதிய ரீதியில் ஆதரிக்கும் போக்கு: தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் எம்.பி.க்கு மற்றவர்கள் எவ்வளவு அழுத்தத்தை கொடுத்தாலும் வன்னிய குல சத்திரியர்களாக நாங்கள் துணை நிற்போம் என மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை தெரிவித்துள்ளார்[14]. செந்தில்குமார் வன்னியர் என்பதால் வன்மத்தோடு சிலர் சமூக வலைதளங்களில் அவரை இழிவு படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியுள்ளார்[15]. ஆனால், அதே நேரத்தில் சனாதனம் பற்றி இழிவாக பேசியபோது, இந்த பெண்மணி எதிர்புத் தெரிவித்தாரா, கண்டித்தாரா என்பது தெரியவில்லை. முதலில், இதில் ஜாதியை ஏன் நுழைக்க வேண்டும் என்பது புரியவில்லை. தமிழகத்தைப் பொறுத்த வரையில், திக-திமுக இந்துவிரோதமாக இருந்து வந்து பல அக்கிரமங்களை செய்து வருவது தெரிந்த விசயமே. பிறகு, இத்தகைய குறுகிய, நோக்கில் ஆதாவு தெரிவித்து வியாக்கியானம் கொடுப்பது திகைப்பாக உள்ளது.

வடக்குதெற்கு விவாதம்: 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே வடக்கு vs தெற்கு என்ற விவாதம் தீயாகப் பரவி வருகிறது. பாஜகவின் சித்தாந்தம் வட இந்தியாவில் மட்டும் ஒர்க்அவுட் ஆவதாகவும் தென்னிந்தியா அதை முற்றிலுமாக நிராகரிப்பதாகவும் பாஜகவை விமர்சிப்போர் கூறுகின்றனர். அதேநேரம் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இப்படி ‘வடக்கு vs தெற்கு’ என்ற விவாதத்தைக் கிளப்பி நாட்டை பிளவுபடுத்த முயல்வதாகவும் தேர்தல் தோல்வியை ஏற்க முடியாதவர்களே இப்படிக் கூறி வருவதாகவும் பாஜகவினர் கூறுகின்றனர்[16]. மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “அவர்கள் தங்கள் ஆணவம், பொய்கள், அவநம்பிக்கைகள் மற்றும் அறியாமை ஆகியவற்றுடன் மகிழ்ச்சியாக இருக்கட்டும். ஆனால்… அவர்களின் பிரிவினைத் திட்டத்தில் இருந்து மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 70 ஆண்டுக்கால பழைய பழக்கம் அவ்வளவு எளிதில் போய்விடாது.. மக்களின் தேர்வு இதுதான். இனி பல முடிவுகள் இப்படிதான் இருக்கும் தயாராகுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்[17].

வடக்கு வளர்கிறது, தெர்குத் தேய்கிறது: “வடக்கு வளர்கிறது, தெர்குத் தேய்கிறது,” என்று அண்ணாதுரை சொன்னது எல்லாம் நினைவுக்கு இருக்கலாம். கருணாநிதி “மாநில சுயயாட்சி” என்றெல்லாம் பேசியதும் அதே தொணியில் தான். இன்றும், இந்தி-தமிழ், தமிழ்-தெலுங்கு, குலுடி-வடுகன் என்றெல்லாம் பேசுவதும்-எழுதுவதும் அதே பிரிவினை நோக்கில் தான் தொடர்ந்து வருகிறது. இந்து-எதிர்ப்பு, “சைவம்” போர்வையிலும் நடக்க ஆரம்பித்து விட்டது. “மைனாரிட்டி” என்று ஆரம்பித்து, “நாங்கள் இந்துக்கள் அல்ல,” என்ற கோஷத்தில் வந்து முடிந்துள்ளது.  ஆகவே, பிரிவினைவாதம், இந்து-விரோதம், இந்திய-விரோதம், தேச-விரோதம் எல்லாம் எந்த உருவிலும், பேனரிலும், சொல்லாடல்களிலும், சித்தாந்தங்களிலும் வெளிப் படும்.

© வேதபிரகாஷ்

08-12-2023


[1] https://kamadenu.hindutamil.in/politics/samajwadi-condemns-dmk-to-stop-denigrating-hinduism

[2] நியூஸ்7.தமிழ், மக்களவையில் இந்தி பேசும் மாநிலங்கள் குறித்து சர்ச்சை பேச்சு | வருத்தம் தெரிவித்த திமுக எம்பி செந்தில்குமார்!, by Web EditorDecember 6, 2023.

[3] https://news7tamil.live/controversy-about-hindi-speaking-states-in-lok-sabha-dmk-mp-senthilkumar-expressed-regret.html

[4] ஐபிசி.தமிழ்நாடு, மாட்டுக் கோமிய மாநிலங்களில் பாஜக வெற்றி; முதல்வர் கண்டனம்திமுக எம்.பி. மன்னிப்பு!,  By Sumathi, 06-12-2023

[5] https://ibctamilnadu.com/article/gaumutra-dmk-mp-senthilkumar-contro-speech-1701837946

[6] விகடன், கழுகார் அப்டேட்ஸ்: எம்.பியை மன்னிப்புக்கேட்க வைத்த திமுக|வெள்ளம், அதிகாரியை கப்சிப் ஆக்கிய அமைச்சர், கழுகார், Published: 07-12-2023 at 1 PM; Updated: 07-12-2023 at 5 PM.

[7] https://www.vikatan.com/government-and-politics/kazhugar-updates-on-senthil-kumar-mp-issue-and-other-political-happenings

[8] தினமலர், திமுக எம்.பி.,யின் சர்ச்சை பேச்சு: ஸ்டாலின் எதிர்ப்பு: வைகோ ஆதரவு, பதிவு செய்த நாள்: டிச 06,2023 14:39.

[9] https://m.dinamalar.com/detail.php?id=3497549

[10] கதிர்.நியூஸ், வட மாநிலங்கள் தொடர்பான தி.மு. எம்.பி யின்பசு கோமியம்மாநிலங்கள் சர்ச்சை பேச்சுக்கு உடன்பட்ட வைகோ!, By : Karthiga |  8 Dec 2023 12:15 PM.

[11] https://kathir.news/news/vaiko-agreed-to-the-dmk-mps-cow-komiam-state-dispute-talk-regarding-northern-states-1508302

[12] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், இந்தியாவை தவறான வழியில் பார்க்கும் உணர்வு: செந்தில்குமார் எம்.பி.யை விளாசிய அண்ணாமலை!, Manikanda Prabu, First Published Dec 6, 2023, 4:50 PM IST.

[13] https://tamil.asianetnews.com/tamilnadu/word-uttered-by-the-dmk-mp-came-from-a-deep-sense-of-seeing-india-the-wrong-way-alleges-annamalai-smp-s58stk

[14] தமிழ்.ஒன்.இந்தியா, செந்தில்குமார் எம்.பி. வன்னியர் என்பதால் அவர் மீது வன்மத்தை கக்குவதா? காடுவெட்டி குரு மகள் ஆதங்கம்!, By Arsath Kan, Published: Thursday, December 7, 2023, 13:32 [IST].

[15] https://tamil.oneindia.com/news/chennai/kaduvetti-guru-daughter-virudhambigai-support-dharmapuri-member-of-parliament-senthilkumar-563839.html

[16] தமிழ்.ஒன்.இந்தியா, “வடக்கு vs தெற்கு..” பற்றி எரியும் விவாதம்! வசமாக வந்து சிக்கிய திமுக! கொந்தளித்த மோடி! என்ன நடந்தது By Vigneshkumar Updated: Wednesday, December 6, 2023, 16:57 [IST]

[17] https://tamil.oneindia.com/news/delhi/what-is-north-vs-south-debate-that-is-now-becoming-national-level-debate-563633.html?story=2

வெடி வெடித்தால் போலீஸ் பிடித்துச் சென்று விடும் – இப்படி மிரட்டி தீபாவளி கொண்டாடுவது நன்றாக இருக்கிறதா, இது நாத்திக-திராவிட அல்லது இந்துவிரோத மாடலா? (2)

நவம்பர் 12, 2023

வெடிவெடித்தால் போலீஸ் பிடித்துச் சென்று விடும்இப்படி மிரட்டி தீபாவளி கொண்டாடுவது நன்றாக இருக்கிறதா, இது நாத்திக-திராவிட அல்லது இந்துவிரோத மாடலா? (2)

போலீஸார் மிரட்டுவதற்கா இருக்கிறார்கள்?: எனவே, சென்னையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும், பட்டாசு வெடிப்பவர்களைக் கண்காணிக்க காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் 2 போலீஸார் அடங்கிய கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன[1]. இந்த குழுக்கள், சென்னையின் அனைத்து பகுதிகளிலும் 24 மணி நேரமும் வலம் வந்து கண்காணிக்கும்[2]. பொதுமக்கள் யாராவது குறித்த நேரத்துக்குப் பிறகு பட்டாசுகளை வெடித்து இடையூறு ஏற்படுத்துவதாக காவல் துறைக்கு புகார் வந்தால், அந்த குழு சம்பவ இடத்துக்குச் சென்று நடவடிக்கை எடுக்கும். ஏதோ குற்றம் செய்வது போலவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்பது போலவும் இவ்வாறு அறிக்கை-செய்திகள் வெளியிடுவதே மிரட்டுவது, பயமுருத்துவது போலத் தான் இருக்கிறது. பிறகு, எதற்கு வம்பு-பிரச்சினை என்று அமைதியாகத் தான் இருப்பர். மேலும், தீபாவளி-விரோத அரசு ஆட்சியில் இருக்கிறது என்பதும் இளைஞர்களுக்கு நன்றாகவே தெரியும். “மூன்று நாட்கள் தான் விடுமுறை, அடுத்த நாள் வராவிட்டால்….,” என்று கம்பெனி வேரு மிரட்டுகிறது. பிறகு அவர்கள் என்ன செய்வார்கள். இதெல்லாமே, திகைப்பாக, ஆச்சரியமாக, அதிர்ச்சியாக இருக்கிறது.

வயதானவர்கள் அதிகாலையில் வெடி வெடித்தது: இன்றைக்கு 12-11-2023 அன்று அதிகாலையில் வெடி வெடித்தவர்கள் எல்லோருமே வயதானவர்களாக – தாத்தா-பாட்டிகளாக (60 வயதிற்கு மேர்பட்டவர்களக) இருந்தனர். விசாரித்த போது, இப்பொழுதெல்லாம் இளைஞர்கள், சிறுவர்கள், குழந்தைகள் எல்லோரும் இரவெல்லாம் சினிமா, கிரிக்கெட் என்று பார்த்து தூங்கிக் கொண்டிருக்கின்றனர். அதனால், காலையிலேயே அவர்கள் எழுந்து கொள்வதில்லை. இன்றைக்கும் அதே நிலைமை தான். அதனால், சம்பிரதாயம், கலாச்சாரம் முதலியவை விட்டுக் கொடுக்கக் கூடாது, மறக்கலாது என்று நாங்களே சாஸ்த்திரத்திற்காக வெடிக்கிறோம் என்றார்கள். அவர்களது மகன், மகள், மறுமகன், மறுமகள், பேரன், பேத்தி என்று யாரும் வெடிக்காதது அவர்களுக்கு வருத்தமாக இருந்தது தெரிகிறது.

கல்கத்தாவில் நடந்தது, மற்ற இடங்களிலும் நடக்குமா?

தீயணைப்புகாயம் முதலியவற்றைப் பற்றிய எச்சரிக்கை: பட்டாசு வெடிக்கும் போது யாருக்காவது தீவிபத்து காயம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை பணியாளர்கள் தயாராக இருக்கவும், பணியில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது[3]. தீபாவளியன்று மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன[4]. பட்டாசுகளை வெடிப்பதற்கு தீக்குச்சிகளையோ அல்லது நெருப்பையோ உபயோகிப்பதை விட நீளமான ஊதுவத்தியை பயன்படுத்த வேண்டும்[5]. பாதுகாப்பற்ற முறையில் பட்டாசுகள் வெடித்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியா்கள் குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்[6].

கல்கத்தாவில் நடந்தது, மற்ற இடங்களிலும் நடக்குமா? தடை செய்யப் பட்ட பட்டாசுகள் எவை?

தீபாவளி எதிர்ப்பு வெளிப்பாடும் நிலைகள்: கடந்த பத்தாண்டுகளில் தீபாவளி எதிர்ப்பு என்பது பலவிதங்களில் வெளிப்பட்டுள்ளது. இன்று 2023 நவம்பரில் கூட டிவி-அரசியல் வாத-விவாதங்களில் தேவையில்லாமல் தீபாவளியை வைத்து பேசுகிறார்கள். ஏதோ ரூ.1000/-த்தைக் கொடுத்தோம் என்று இணைத்துப் பேசுகிறார்கள். உண்மையில், தீபாவளி தூஷிக்கும் பேர்வழிகளால் எவ்வாறு மங்களகரமான காரியங்கள் நடக்கும். வாய் தூஷிக்கும், கை காசு கொடுக்கோம் என்றால் யார் நம்புவார்கள்? மாசுக்கட்டுப்பாடு என்ற பிரச்சாரம் மூலம், பட்டாசுகள் கொளுத்தக் கூடாது, வெடிகள் வெடிக்கக் கூடாது என்று ஆரம்பித்தனர். ரூ.1000 கோடிகளில் உள்ள இந்த தொழிலை மிரட்ட பலயுக்திகள் கையாளப்பட்டு வருகின்றன. இதில் 90% உற்பத்தி சிவகாசியில் தான் நடக்கிறது. ரூ. 100-200 கோடிகள் விற்பனையுள்ள இந்த வியாபாரத்தை யாரும் எதிப்பதில்லை. மேலும் தீபாவளி சார்ந்த ஆடை, இனிப்பு, நகை, சுற்றுலா என்ற வியாபாரங்களோ 5,000 கோடிகளை எட்டுகிறது. பொதுவாக நடந்து வரும் இப்பிரச்சாரத்தில் ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன. ஆனால், அவையே கோடிக்கணக்கில் விளம்பரம், நிகழ்ச்சிகள், ஸ்பான்சர்சிப் என்று கோடிகளை அள்ளுகின்றன.

கல்கத்தாவில் நடந்தது, மற்ற இடங்களிலும் நடக்குமா? பட்டாசுகள் தடை வருமா?

தீபாவளி தூற்றும் நடிகர்களை வைத்து தீபாவளி விளம்பரம் செய்வது?: சினிமா நடிகைகள்-நடிகர்கள் தீபாவளி கொண்டாடினார்கள் என்று அமர்க்களம்மாக செய்திகளை கவர்ச்சிப் படங்களுடன் வெளியிடுபவார்கள். ஆனால், அவர்களை வைத்தே தீபாவளியைத் தூற்றவும் செய்வார்கள். கமல் ஹாஸன், சத்தியராஜ் போன்றோரை இங்கு உதாரணத்திற்கு எடுத்துக் காட்டலாம். பட்டாசு வியாபாரத்தில் திராவிடக் கட்சிகள் நேரிடையகவும், மறைமுகமாகவும் (பட்டாசு கடை வைக்க, உரிமை கோர) கோடிகளை அள்ளுகின்றன. போதாகூறைக்கு, முஸ்லிம்கள் தான் பெருமளவில் இதில் ஈடுப்பட்டுள்ளார்கள். ஒரு வேளை, தீபாவளியைக் கொண்டாடாமல் இருந்தால், இவர்கள் கதிதான் அதோகதியாகி விடும். எனவே, இவர்களது போலித்தனத்தை, இரட்டைவேடங்களை, குறிப்பாக இந்து-விரோதத்தை அறிந்து கொள்ளலாம்.

தீபாவளி பட்டாசு வெடிப்பு, சுற்றுச் சூழல், உச்சநீதி மன்ற தீர்ப்பு முதலியன: தீபாவளி பட்டாசுகள் வெடிப்பதால், புகை கிளம்புகிறது, மாசு உண்டாகிறது, இதனால், மக்களின் மூச்சு-சுவாசம் பாதிக்கப் படுகின்றது, நோய்கள் உண்டாகின்றன என்று சில அறிவிஜீவிகள் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, “இரண்டு மணி நேரம்” தான் பட்டாசு வெடிக்க வேண்டும், மீறினால் போலீஸ் நடவடிக்கை, தண்டம், கைது, சிறை என்றெல்லாம் மிரட்டி வருவது, கடந்து ஆண்டுகளில் நடந்து வருகின்றன. தீபாவளி பண்டிகை காலை முதலே பட்டாசு வெடிக்க ஆரம்பித்துவிடுவதால் அதிக ஒலியும், காற்று அதிக அளவில் மாசுபடுவதற்கும் வாய்ப்பு இருப்பதால் தமிழக அரசு பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை அறிவித்துள்ளது. அதன்படி, நடப்பாண்டிலும் பட்டாசு வெடிப்பதற்கு நேரத்தை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு போலவே தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவில் 7 மணி தொடங்கி இரவு 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தீபாவளி-ஒழுங்குமுறையை மீறியதால் நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன என்றும் செய்திகள் வந்துள்ளன – வருகின்றன. ஆனால், குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள், எடுக்கிறார்கள், எடுப்பார்கள் என்று தெரியவில்லை.

தீபாவளி பட்டாசு உற்பத்தி, விநியோகம் விற்பனைஅரசியல்: சிவகாசி பட்டாசு உற்பத்தியில், இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. அதில் பெரும்பாலோர் நாடார்கள் என்று இருந்தாலும், பிறகு திராவிட ஆட்சி காலங்களில் மற்ற ஜாதியினரும் நுழைந்து விட்டார்கள். விநியோகஸ்தர்கள் நிலையில் ஆதிக்கம் செல்லுத்த ஆரம்பித்தார்கள். பட்டாசு கடை வைக்க லைசென்ஸ் / அனுமதி என்ற ரீதியில் ஆதிக்கத்தைப் பெருக்கிக் கொண்டார்கள். “தீபாவளி” மாமூல் மற்றும் இனாம் முதலியவையும் சேர்ந்து கொண்டன. துணிமணி வியாபாரம், சினிமா போன்றவையும் இணைக்கப் பட்டன. டிவி கலாச்சாரம் சேர்ந்த பிறகு, தீபாவளி-சினிமா-வியாபாரம் முக்கியமானது. இவையெல்லாமே கோடிக் கணக்கில் நடக்கும் வியாபாரங்கள் ஆகும். ஆகவே, எந்த திக-திமுக அரசியல்வாதி, அமைச்சர் சித்தாந்தவாதி எதிர்த்தாலும், பன்றி கடை சொன்னாலும், தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மாட்டேன் என்று ஆர்பரித்தாலும், எந்த பன்றியும் கண்டுகொள்ளப் போவதில்லை. அவர்கள் தான் குளைத்து, ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

12-11-2023.


[1] நக்கீரன், இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி‘ – சென்னை காவல்துறை எச்சரிக்கை, நக்கீரன் செய்திப்பிரிவு,Published on 07/11/2023 (10:28) | Edited on 07/11/2023 (10:40)

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/fireworks-allowed-two-hours-only-chennai-police-warning

[3] தமிழ்.ஏபிபி.லைவ், Diwali 2023: தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டும் தான் பட்டாசு வெடிக்க வேண்டும்தமிழக அரசின் டைம் இதுதான்!, By: அப்ரின் |Published at : 01 Nov 2023 11:14 AM (IST) ; Updated at : 01 Nov 2023 11:14 AM (IST);

[4] https://tamil.abplive.com/news/tamil-nadu/diwali-2023-bursting-of-crackers-guidelines-issued-by-tamilnadu-government-148020

[5] நியூஸ்.17.தமிழ், பட்டாசுகள் வெடிக்க 19 கட்டுப்பாடுகள் விதிப்பு!, by Web EditorNovember 8, 2023.

[6] https://news7tamil.live/19-restrictions-on-bursting-diwali-crackers.html


சனாதன ஒழிப்பு குறித்து பேசிய அமைச்சர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – சென்னை உயர்நீதி மன்றம்! ஆனால் எடுக்கவில்லை, ஏன்? (2)

நவம்பர் 7, 2023

சனாதன ஒழிப்பு குறித்து பேசிய அமைச்சர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்சென்னை உயர்நீதிமன்றம்! ஆனால் எடுக்கவில்லை, ஏன்? (2)

பாஜ தலைவர் கேள்வி எழுப்பியுள்ளது: தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் தமது எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக எழுதி உள்ளதாவது[1]: அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு மீது நடவடிக்கை எடுக்காத தமிழக காவல் துறைக்கு கடும் கண்டனத்தை சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது[2]. என்ன செய்வார் முதல்வர் ஸ்டாலின்?: சென்னை உயர்நீதி மன்றத்தின் இந்த கருத்துக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மதித்து நடந்து கொள்வாரா? தி மு க அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர்பாபு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா? அமைச்சர் பதவி போனாலும் சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று சொன்னதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உயர்நீதி மன்றத்தின் கருத்துகளை மதித்து மன்னிப்பு கேட்பாரா? அல்லது ராஜினாமா செய்வாரா? இனி சனாதன தர்மம் அதாவது ஹிந்து மதம் குறித்து யாரும் விமர்சிக்க கூடாது என்று முதல்வர் உத்தரவிடுவாரா? இப்போதாவது நீதிமன்றத்தின் கருத்துப்படி அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர்பாபு மீது தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? இவ்வாறு பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

06-11-2023 அதே நாளில் உதயநிதி பிடிவாதமாக பேசியிருப்பது: உதயநிதி ஸ்டாலின் சென்னையில் 06-11-2023 அன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்[3]. அப்போது சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்துகள் தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்[4]. அதற்குப் பதிலளித்த அமைச்சர் உதயநிதி, ‘ நான் பேசியது எதுவும் தவறு கிடையாது. எதையும் சட்டப்படி சந்திப்போம். நான் சொன்ன வார்த்தையில் இருந்து மாற்றிக்கொள்ளமாட்டேன். எனது கொள்கையைத் தான் நான் பேசியுள்ளேன்[5]. அம்பேத்கர் பேசியதைவிட நான் ஒன்றும் பெரிதாகப் பேசவில்லை. நான் தந்தை பெரியார் பேசியதை விட நான் பெரிதாக ஒன்றும் பேசவில்லை[6]. எழுச்சித் தமிழர் திருமாவளவன் அண்ணன் பேசியதை விட நான் பெரிதாக ஒன்றும் பேசவில்லை. நான் பேசியது சரி தான். எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திப்போம். அமைச்சர் பதவி இன்று வரும். நாளைக்குப் போகும். இளைஞரணி பதவி இன்று வரும் நாளை போகும். நான் மனிதனாக இருக்கிறேன். எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திப்பேன். முதலில் இந்த நீட் தேர்வை ரத்து செய்வோம். நூறாண்டுகால சனாதனப் பிரச்னையை எதிர்ப்போம்’என்றார்.

சனாதன ஒழிப்பு கோஷம் ஒட்டு மொத்த இந்துக்களை கோபமடையச் செய்துள்ளது: தான் அமைச்சராக இருப்பதினால் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற தைரியத்தில் பேசுகிறாரா அல்லது தனது தந்தையே போலீஸ் துறைக்கு அமைச்சர் என்பதால், அதையும் மீறி, எந்த போலீஸும் ஒன்றும் செய்து விடமுடியாது என்ற நிலையில் அவ்வாறு மமதையுடன் பேசுகிறாரா என்று கவனிக்க வேண்டும். ஏற்கெனவே கவர்னர்-தமிழக அரசு மோதல் சட்டரீதியில் சென்று கொண்டிருக்கிறது. அதையும் சனாதனத்துடன் இணைத்து, திராவிட சித்தாந்திகள் குழப்பி இருக்கிறார்கள். கவர்னரை எதிர்க்கிறோம் என்று மிகவும் ஆபத்தான விலையாட்டிலும் இறங்கி விட்டார்கள். அந்நிலையில், உதயநிதியை வைத்துக் கொண்டு, இந்த நாடகத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்று தெரிகிறது. அரசியலைத் தாண்டி, இந்துக்களை நேரிடையாகத் தாக்கி விட்டதால், இனி இப்பிரச்சினையிலிருந்து திக-திமுக விடுபட முடியாது என்றே தெரிகிறது.

பெரியார், அம்பேத்கர் உயிருடன் இல்லாததால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. எனவே, அதையும் மனதில் வைத்துக் கொண்டு அவ்வாறு பேசியிருக்கலாம். ஈவேராவைப் பொறுத்த வரையில் உச்சநீதி மன்றத்தில் வாங்கிக் கட்டிக் கொண்டு வந்தவர் தான். அம்பேத்கர் சட்ட அமைச்சராகி தப்பித்துக் கொண்டார் எனலாம். திக-திமுகவினரின் இந்து விரோதம் தான் நாளுக்கு நாள் அதிகமாக வெளிப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. மாறி-மாறி என்ன விளக்கம் கொடுத்தாலும் அவர்களது இந்துவிரோதம் வெளிப்படையாகி விட்டது. இப்பொழுது, “சனாதனத்தை ஒழிப்போம்” என்றதால், இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் உள்ள இந்துக்களுக்கு இவர்களைப் பற்றிய உண்மை அறியப்படுத்தப் பட்டு விட்டது. இதுவரை, ஈவேரா-பெரியார், அண்ணாதுரை-கருணாநிதி முதலியோர்களது ஆபாசக்கதைகள், அருவருக்கத் தகுந்த எழுத்துகள், பேச்சுகள் முதலியவறை முழுவதுமாக அறியப் படாமல் இருந்திருக்கலாம். ஆனால், இப்பொழுது வெட்ட வெளிச்சமாகி விட்டது. இனியும் இவர்களது பொய் பிரச்சாரம் முதலியவற்றை யாரும் நம்ப மாட்டார்கள்.

திராவிடத்துவவாதிகளின் போக்கு: திராவிட திராவிடத்துவ சித்தாந்திகள் அரசியல்வாதிகளாகவும் இருக்கலாம் பேச்சாளர்கள் எழுத்தாளர்கள் என்றும் இருக்கலாம் எப்படி இருந்தாலும் அவர்களது கடந்த 70 மற்றும் 100 ஆண்டுகளாக அவர்கள் பேசி நடந்து கொண்டு வரும் நிகழ்வுகள் எல்லாவற்றையும் பொதுமக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் எப்பொழுதும் இந்து விரோத போக்கில் தான் இருக்கிறார்கள் என்பதை பொதுமக்கள் நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் என்னதான் மாற்றி மாற்றி பேசினாலும், விளக்கம் கொடுத்தாலும், நிச்சயமாக அவர்கள் நம்ப போவதில்லை. இருப்பினும் ஆட்சி,  அதிகாரம் பண பலம் முதலியவை அவர்களது கைகளில் இருப்பதினால் ஆரம்பகால நிலையிலிருந்து மிரட்டியும், பயமுறுத்தியும் அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொண்டும் குறிப்பிட்ட சமூகத்தினரை தாக்கியும் தங்களது வன்முறை போக்கையும் கையாண்டு வருகிறார்கள்.

வெறுப்புப் பேச்சு வன்முறைகளையும் கையாளுவது: அதாவது உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் பிராமணர்களை தாக்குதல், பூணூலை அறுத்தல், அவர்களைப் பற்றி கேவலமாக பேசுவது-எழுதுதல் சினிமா-நாடகம் சஞ்சிகைகள்-ஊடகங்கள் இவற்றில் எல்லாவற்றிலுமே நகைச்சுவை-கேலி என்ற ரீதியில் முதலியவை எல்லாம் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கின்றன இதனால் மற்ற சமூகத்தில் இருக்கும் அவர்களுக்கு ஒரு விதமான அச்சுறுத்தல் விடுபட்டு உள்ளது. அதாவது இந்த பிராமணர்களாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை, ஆக எங்களால் என்ன செய்ய முடியும் என்று அமைதியாக இருந்து விடலாம். மேலும் ஓட்டு வங்கி அரசியல், அதிகாரம் என்ற நிலையில் வரும் பொழுது மற்ற சமூகத்தினரும் அதில் பங்கு கொள்ள விரும்புகிறார்கள். நிச்சயமாக பிராமணர்களுக்கு யாரும் அரசு துறையில் நடந்த அதாவது தமிழக அரசு ரீதியில் எந்த பதிவியையும் கொடுக்கப்போவதில்லை இந்த உடன் சேர்ந்து வேலை செய்து கொண்டிருப்பதனால் நாங்களும் தங்களுடைய நிலையை விட்டுக் கொடுக்காமல் சந்தோசமாக பலன்களை அனுபவித்துக் கொண்டு இருக்கலாம் என்ற நுணுக்கத்துடன் இருந்து விடலாம்.

© வேதபிரகாஷ்

07-11-2023.


[1] தமிழ்.ஒன்.இந்தியா, உதயநிதி ராஜினாமா செய்வாரா? மன்னிப்பு கேட்பாரா? போலீஸ் பாயுமா? கொளுத்தி போடும் பாஜகசனாதன சர்ச்சை!, By Mathivanan Maran Updated: Monday, November 6, 2023, 14:16 [IST.

[2] https://tamil.oneindia.com/news/chennai/sanatan-dharma-row-tn-bjp-urges-to-take-action-against-minister-udhayanidhi-stalin-554685.html

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், அம்பேத்கர், பெரியார், திருமா பேசியதை விட நான் பெரிதாக எதுவும் பேசிவிடவில்லை: சனாதன சர்ச்சைக்கு உதயநிதி பதில், Web Desk, Nov 06, 2023 14:57 IST.

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/udhayanidhi-stalin-said-that-i-did-not-speak-much-more-than-periyar-spoke-about-sanatanam-1686671

[5] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Sanatana: சனாதனம் குறித்த கருத்தில் இருந்து ஒருபோதும்  பின்வாங்க மாட்டேன்அமைச்சர் உதயநிதி, Marimuthu M HT Tamil, Nov 06, 2023 02:35 PM IST.

[6] https://tamil.hindustantimes.com/tamilnadu/i-will-never-back-down-from-my-opinion-on-sanathanam-says-minister-udayanidhi-131699259914495.html

83-வயதான புகழ் பெற்ற ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் 14-09-2023 அதிகாலையில் கைது செய்யப் பட்டது! (2)

செப்ரெம்பர் 16, 2023

83-வயதான புகழ்பெற்ற ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் 14-09-2023 அதிகாலையில் கைது செய்யப் பட்டது! (2)

13-09-2023 அன்று விசிக கொடுத்த புகாரும், ஆர்பிவிஎஸ் மணியனை கைது செய்ய தீர்மானித்த போலீஸாரும்: இந்த நிலையில் சென்னை சூளையை சேர்ந்த செல்வம் என்பவர் மணியன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் என்று ஊடகங்க்ள் குறிப்பிடுகின்றன. அதன் பேரில் மாம்பலம் போலீசார் அவர் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 153, 153(A), 505(1)(B), 505 (2), பழங்குடியினர்/ஒடுக்கப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி, ஆர்பிவிஎஸ் மணியன் என்பவரை கைது செய்யவும் போலீஸார் தீர்மானித்தனர். விடியற்காலையிலேயே அவர்கள் ஆர்பிவிஎஸ் மணியனின் வீட்டிற்குச் செல்ல தீர்மானித்தனர். அதன்படியே, அவரது வீட்டிற்குச் சென்றனர்.

14-09-2023 விடியற்காலையில் கைது செய்யப் பட்டது: தியாகராயநகர் உதவி கமிஷனர் பாரதிராஜன் தலைமையிலான போலீசார், தியாகராயநகர் ராஜம்மாள் தெருவில் உள்ள மணியன் வீட்டுக்குச் சென்றனர். 14-09-2023 வியாழக்கிழமை அதிகாலையில் சென்னை திநகர் போலீசார் ஆர்பிவிஎஸ் மணியனை அவரது இல்லத்தில் கைது செய்தனர்[1]. கைது செய்யப்பட்டுள்ள ஆர்.பி.வி.எஸ். மணியனை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது[2] என்று தினமலர் கூஊகிறது. இவரை அப்படி “ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்த”,  என்ன பெரிய விசயம் இருக்கிறது என்று தெரியவில்லை. எல்லா விவரங்களும் வெளிப்படையாக உள்ளநிலையில், அதிலும் 3-4 காலையில் கைது செய்யப் பட்டபோது, யாருக்குத் தெரியப் போகிறது, என்ன பிர்ச்சினை வரப் போகிறது என்று தெரியவில்லை. அந்நிலையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது என்பது வேடிக்கையாக இருக்கிறது.

இந்து முன்னணியின் ஆதரவும், எதிர்ப்பும்:  “83 வயது முதியவர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் பேசிய கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று வைத்துக் கொண்டாலும், அவரது கைது நடவடிக்கை தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தின் நிலை என்ன என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது,” என்று இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்[3]. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்[4], “தமிழக அரசின் எண்ணப்படி தொடர்ந்து தமிழக காவல் துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதை நீதிமன்றமோ, ஊடகமோ கண்டுகொள்ளவில்லை. இது ஜனநாயக படுகொலைக்கு சமம். ஆர்.பி.வி.எஸ். மணியன் தேசியவாதி, ஆன்மிகச் சொற்பொழிவாளர். இன்று குமரியில் நாம் காண்கின்ற சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டப பணிக்காக தான் பார்த்துவந்த அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு வந்தவர். விவேகானந்தர் நினைவு மண்டபம் உலகப் புகழ் பெற்றதாக விளங்குவதற்கும், குமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரம் இன்று பிரம்மாண்டமான ஆலமரமாய் விளங்குவதற்கும் அந்தக் காலத்தில் ஏக்நாத் ரானடே உடன் தோளோடு தோள் நின்று அடிப்படை அஸ்திவாரமாக திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. தன் வாழ்நாள் முழுவதும் சனாதன தர்மத்தை காக்க வாழ்ந்தவர்.

ஆர்.பி.வி.எஸ் மணியன் பேசியதை ஒட்டியும், வெட்டியும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு பரப்பி திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்தும் போக்கு: இந்நிலையில், ஆர்.பி.வி.எஸ் மணியன் பேசியதை ஒட்டியும், வெட்டியும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு பரப்பி சிலர் திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்துகின்றனர். தில் பெரும்பாலானவை பார்ப்பனர் எதிர்ப்பாக, கடுமையாக தூஷணங்களுடன் இருக்கின்றன. வீடியோக்களும் போட ஆரம்பித்து விட்டனர். இந்தப் போக்கை கடந்த சில வருடங்களாகவே பார்க்கிறோம். எது உண்மை எது பொய் என்பதைக்கூட யாராலும் தெரிந்து கொள்ள முடியாதவாறு அவை பரப்பப்படுகின்றன. அவர் பேசிய கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று வைத்துக் கொண்டாலும் அவரது கைது நடவடிக்கை தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தின் நிலை என்ன என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்துக்களின் நம்பிக்கைளை கொச்சைபடுத்திய பல யூடியூப் சேனல்கள், சனாதனத்தை இழிவுபடுத்தி பேசிய அமைச்சர்கள், இந்து மதத்தை இழிவு படுத்தியவர்கள், பிரதமர், ஆளுநர் ஆகியோரை‌த் தாக்கிப் பேசியவர்கள் என பலர் மீது பல இடங்களில் புகார் கொடுத்தும் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் தமிழக காவல் துறைக்கும் நீதிமன்றத்துக்கும் குற்றத்தின் தன்மையைவிட குற்றம்சாட்டப்படுபவர் பின்புலம் என்ன என்பதை வைத்துதான் நடவடிக்கை என்பதாக அமைந்துள்ளது. இவர் விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் தலைவர் ஆவார். இவரது கைதுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மணியன்: சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மணியனை 14 நாள் ரிமாண்ட் செய்து நீதிபதி உத்தரவிட்டார். வயது மூப்பு கருதி அவரை மருத்துவமனையில் தங்க அனுமதிக்க வேண்டும் என அவர் சார்பில் வக்கீல்கள் வலியுறுத்தினர். பரிசீலிப்பதாக நீதிபதி கூறியுள்ளார். வன்கொடுமை சட்டத்தின் கீழ் 8 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மணியன் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது போலீசார் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் சுதாகர், மணியன் மீதான குற்றச்சாட்டுகளை எடுத்துக் கூறினார். அதற்கு நீதிபதி (மணியனை பார்த்து), உங்கள் மீதான புகார் குறித்து ஏதேனும் கூற விரும்புகிறீர்களா? என கூறினார்[5]. அதற்கு மணியன், ‘நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது’ என்றார்[6]. மணியன் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆர்.சி.பால்கனகராஜ், ‘மணியனுக்கு சிறுநீர் தொற்று, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல் உபாதைகள் உள்ளது. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும்’ என்றார். இதுகுறித்து பரிசீலிப்பதாக தெரிவித்த நீதிபதி, மணியனை வருகிற 27-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இங்கும் சில முக்கியமான கேள்விகள் எழுகின்றன:

  1. பார்ப்பானை பிரம்ம முஹூர்த்தத்தில் வைத்து கைது செய்தால், யாருக்கு பலன் கிடைக்கும்? நேரத்தைக் குறித்தது கடவுளா, திராவிட அதிகாரியா?
  2. அமாவாசைக்கு முன்னால் பார்ப்பானை கைது செய்தால் அவனது கிரியைகள் கெடுமா, அல்லது பெரியாரிஸ ஆவிகள் துடிக்குமா?
  3. 83 வயதான “கெழப்பய” என்ன ஓடியா போய் விடுவார்? காஷ்மீரில் வீட்டு காவல் வைக்கும் பொழுது, இவரை வைக்க முடியாதா?
  4. இல்லை எங்களுக்கு இணை வைக்காதே, இன்டியா கூட்டணியில் இதை சேர்காதே என்று அவர்கள் மிரட்டினரா, ஆணையிட்டனரா?
  5. அதெப்படி உடனடியாக, எந்த வழக்கறிஞரும் வரவில்லை, பெயில் கோரவில்லை, ஆனால், 14 நாட்கள் சிறைக்கு அனுப்பி வைக்கப் பட்டார்?
  6. அதாவது ஒரு பக்ஷத்திற்கு சிறை, அடுத்த பக்ஷத்தில் பெயிலில் வெளியே விடலாம், இப்பொழுது மருதுத்துவ மனை வசதி கூட நிராகரிக்கப் பட்டுள்ளது.
  7. அண்ணன் அவன் பிறந்த நாள் அமாவாசையில் வந்து விட்டதால் தம்பிகள் நல்ல நாளை முன்னமே குறித்து விட்டனரோ?
  8. சரி யாரப்பா அந்த திராவிட புரோகிதர்? திராவிட மாடலில், திராவிட ஸ்டாக் ஆட்களில் தயாராகி விட்டார்கள் போலும்!
  9. நல்ல ஆடு கிடைத்து விட்டது, பலிகடா ஆடு, பார்ப்பன பலிக்கடா ஆடு, அதிலும் 83-வயது நிறைந்த பார்ப்பன பலிக்கடா ஆடு – கொண்டாட்டம் தான்!
  10. இனி பார்ப்பன துவேஷம் பீரிடும், மீம்ஸ்கள் யூ-டியூப்புகள் அதிகமாகும், ஆனால், எதிர்வினைகளுக்கு எந்த சட்டமும் வேலை செய்யாது.

© வேதபிரகாஷ்

15-09-2023


[1] தினமணி, ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது, By DIN  |   Published On : 14th September 2023 08:44 AM  |   Last Updated : 14th September 2023 08:44 AM

[2] https://www.dinamani.com/tamilnadu/2023/sep/14/spiritual-speaker-rpvs-manian-arrested-4072554.html

[3] தமிழ்.இந்து, ஆர்.பி.வி.எஸ்.மணியன் கைதுதமிழகத்தில் கருத்து சுதந்திர நிலையைக் காட்டுகிறது!இந்து முன்னணி, செய்திப்பிரிவு, Published : 14 Sep 2023 03:08 PM; Last Updated : 14 Sep 2023 03:08 PM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/1123301-rbvs-maniyan-arrest-hindu-munnani-condemns.html

[5] தினத்தந்தி, திருவள்ளுவர், அம்பேத்கர் குறித்து அவதூறு: ஆன்மிக பேச்சாளர் மணியன் கைது, செப்டம்பர் 15, 5:57 am

[6] https://www.dailythanthi.com/News/State/tiruvalluvar-defamation-of-ambedkar-spiritual-speaker-maniyan-arrested-1052962

குரு, குருபூர்ணிமா, வியாஸ பூர்ணிமா: இந்துக்களின் ஆசிரியர் நாள் – கொண்டாட வேண்டி யதினம்!

ஜூலை 4, 2023

குரு, குரு பூர்ணிமா, வியாஸ பூர்ணிமா: இந்துக்களின் ஆசிரியர் நாள் கொண்டாட வேண்டிய தினம்!

குரு பூர்ணிமா, வியாஸ பூர்ணிமா: குரு பூர்ணிமா, ஆடி மாதத்தில் (ஜூன்-சூலை) வரும் ழுழுநிலவு (பௌர்ணமி) நாள் அன்று, சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை துறவிகள், வியாசபூசை என்றும் வியாச பூர்ணிமா என்றும் அழைப்பர். பொதுவாக எல்லா புராணங்களையும் வியாசர் எழுதினார், தொகுத்தார் என்றதால், அவரை குருவாக பாவிக்கப் படுகிறது. இது இந்தியா, நேபாளம், பூடான், இலங்கை, பர்மா, தாய்லாந்து, இந்தோனேசியா என்ற நாடுகளில் கொண்டாடப் படுகிறது. அதாவது, பழங்கால இந்தியா – பாரதம் என்ற போகூள பரப்பில் இந்து மதம் / சனாதனம் பரவியிருந்த நிலையில் இருந்த பாரம்பரியத்தைக் காட்டுகிறது. இவ்வழிபாட்டை வேத வேதாந்தக் கல்வி பயின்றவர்கள் தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆடி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி அன்று சிறப்பாக குரு பூஜை செய்வது மரபு. மடங்களிலும் தத்தமது முதல் மடாதிபதியை முதல் குருவாகக் கொண்டு, அந்நாளில் போற்றி ஆராதனை செய்வர்.

ஜைனபௌத்தர்களுடனும் தொடர்ந்த குரு பூர்ணிமா: குரு மாறலாம், குருவை மாற்றலாம், ஆனால், அந்த அந்தஸ்து-போற்றுதல் மாறாது. சித்தாந்த மரபிலும் ஜைனர், பௌத்தர், மற்ற பிரிவுகள் தத்தம் மதத்தலைவர்களை குருவாக பாவித்து கொண்டாடி வருகின்றனர். வேதங்களை மறுத்து, ஆனால் சித்தாந்தங்களை ஏற்றுக் கொண்டு வளர்ந்தவர்களும் இந்த பாரம்பரியத்தைப் போற்றி வளர்த்தனர். ஏனெனில், அது மக்களுடன் இருந்தது, தொடர்ந்தது. சைவ சித்தாந்த பிரிவுகளிலும்,, தோற்றுவித்த குரு, மடாதிபதி இவர்களை நினைவு கொண்டு, குரு பூர்ணிமா அன்று போற்றுவர். மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவினை வழிபடுவதுடன், தட்சிணாமூர்த்தி, பகவத் கீதை அருளிய கிருஷ்ணர், வேதங்களை தொகுத்த வியாசர், உபநிடதங்களுக்கு விளக்கம் எழுதிய ஆதி சங்கரர், மத்வர் மற்றும் இராமானுசர் போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவர்.

வடவிந்தியாதென்னிந்தியா சைவம் சித்தாந்தம், காலநிலை வேறுபாடு: சைவசித்தாந்தம் வடவிந்தியாவிலிருந்து, தன்னிந்தியாவிற்குப் பரவியதால் இடைக்காலத்திளல்  மற்றும் பிறகு, குருபரம்பரை வித்தியாசப் பட்டது. காஷ்மீர சைவம் கர்நாடகா வழியாக தமிழகத்தில் நுழைந்ததாகத் தெரிகிறது. வீரசைவம் பசவேசஸ்வரரின் தோற்றம், ஜைனர்களுக்கு எதிராக அவர் செய்ய வேண்டியநிலையில் ஏற்படுத்திய சமுதாய சீர்திருத்தம் முதலியன கருத்திற்கொள்ளவேண்டும்.  மடங்கள் பெருகியபோது,  மடத்திற்கு மடம் சித்தாந்தம், சம்பிரதாயங்கள்  சிறிது மாறியது. தனித்தன்மை காட்டிக் கொள்ளவும் அவ்வாறான வேற்றுமைகளை சிறப்பாக்க / சிறப்பாக எடுத்துக் காட்டப் பட்டன.

மடங்கள், குருக்கள் சம்பிரதாயங்கள் மாற்றம்-வளர்ச்சி: மடங்கள் பெருகிடபோது, மடங்களின் குரு, குரு பரம்பரை, சம்பிரதாயங்கள் முதலியனவு மாறின. பாகேஷர், புஜங்கேசர், அர்த்தநாரீஸ்வரர், அனந்தேசர், திரிமூர்திசர், ஸ்வேதர், மஹாகாலீஸ்வரர், லோஹிதீஸ்வரர், ஆஜேசர், சோமேஸ்வர், சம்வர்த்தகேச்வரர், மஹாசேனர், குரோதேசர், சுக்ஷ்மேஸ்வரர், பாரபூதேஸ்வரர், ஸ்டானேஸ்வரர், பௌதிகீஸ்வரர், சத்யோஜடேஸ்வரர், அனுகிரஹேஸ்வரர், சகலண்டேஷ்வரர் என பல குருமார்கள், மடாதிபதிகள் பெயர்கள் விளங்குகின்றன. இவர்களின் சீடர்கள் என்று இருந்து, மடங்களில் அவர்களை குருவாக பாவித்து, குரு பூர்ணிமா கொண்டாடுகின்றனர். அவரவர் குரு போதனைகளுக்கு ஏற்ப, அவர்களது சீடர்கள், பின்பற்றுபவர்கள், நம்பிக்கையாளர்கள் அவ்வாறே பின்பற்றினர்.

சைவத்தில், சைவ சித்தாந்தத்தில் வளர்ந்த மடங்கள், குருக்கள் சம்பிரதாயங்கள் மாற்றம்வளர்ச்சி: பொதுவாக, சைவசித்தாந்த மரபு இவ்வாறு பல மூலங்களிலிருந்து, பலவிதமான குருபரம்பரைகள் சொல்லப் பட்டு வளர்ந்தன.

சிவன் >நந்தி

சிவன்>ஸ்கந்தன்>கோரக்ஷநாதன்>நீலகண்ட நாயனார்

சிவன்>ஃப்ரேணுகா சிவாச்சாரியார்>காலாமுக ருத்ரமுனி ஆச்சாரியார்>

சிவனனபிநவ குப்தன்>சங்கீதார்ய டுபர்

சிவன்>பசவேஸ்வரர்>வேதாந்த சைவ சித்தாருடு

>>>>>>>>>>>>>>இவ்வாறு பல பாரம்பரியங்களுடன் பல மடங்கள் இயங்கிக் கொண்டு வருகின்றனர்.

19ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட குழப்பங்கள், புதிய நூல்கள் உருவாக்கம்: ஆங்கிலேயர் மாநிலங்களில் அங்கங்குள்ள பண்டிதர்களை, எழுத்தளர்களை, துபாஷிகளை வைத்து கைஃபீயத்து, வரலாறு, சரித்திரம் என எழுத ஆரம்பித்தனர். அவ்வாறு பல நூல்கள் / புத்தகங்கள் உருவாக்கப் பட்டன. ஓலைச் சுவடிகள் உருவத்திலும் எழுதப் பட்டன. அவ்வாறு மத நூல்களும் உண்டாக்கப் பட்டன:

  • 19ம் நூற்றாண்டில் பல சைவ மடாதிபதிகள், தாங்கள் மற்றவர்களை விட வேறு பட்டவர்கள் என்று காட்டிக் கொள்ள பரம்பரையை பலவாறு மாற்றிக் கொண்டனர்.
  • 20ம் நூற்றாண்டில் தனிதமிழ் இயக்கம், திராவிட சித்தாந்தம், பிராமணர் அல்லாத மற்றும் எதிர்ப்பு கொள்கை போன்றவற்றால், மேலும் திரிபுவாதங்களுடன் புத்தகங்கள் எழுத பட்டன.
  • 21ம் நூற்றாண்டில், சைவர் சிறுபான்மையினர் என்று ஆரம்பித்து, இந்துக்கள் அல்லர் என்ற கூப்பாடு வரை நிலைமை மோசமாகி அடைந்து நின்றுள்ளது.

நால்வர் என்ற சம்பிரதாயம் வளர்ந்தது: மெய்கண்டார், அருள்நந்தி சிவன், மறைஞான சம்பந்தர் மற்றும் உமாபதி சிவம் ஆகிய நால்வர், “சனாதன நால்வர்” என்றழைக்கப் படுகிறார்கள். ஆனால், இப்பொழுது, இதைப் பற்றி பேசாமல் இருக்கிறார்கள். இதனால், குருவை மறக்க, மறுக்க, மறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டு, வியாசரை நிந்திக்க ஆரம்பித்துள்ளனர். அதிலும் அதே 19ம்-20ம் நூற்றாண்டு திரிபுவாத புத்தகங்களை ஆதாரமாகக் கொண்டு பிரச்சாரம் செய்கிறார்கள்.

மெய்கண்டார், அருள்நந்தி சிவன், மறைஞான சம்பந்தர் மற்றும் உமாபதி சிவம் ஆகிய நால்வர், “சனாதன நால்வர்” என்றால்,  திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மற்றும்  மாணிக்கவாசகர் சந்தான நால்வர் ஆகின்றனர். திருநந்திதேவர், சனத்குமாரர், சத்தியஞானதரிசினிகள், பரஞ்சோதிமுனிகள் சமய குரவர் ஆகிறார்கள். திருக்கைலாய பரம்பரையிலிருந்து தொடங்கும் திருநந்திதேவர், சனற்குமாரர், சத்தியஞான தரிசினிகள், பரஞ்சோதியார் ஆகிய நால்வரும் அகச்சந்தான குரவர்கள். திருகைலாய பரம்பரை என்பது நந்திதேவரே குருவாக கொண்டு ஆரம்பித்தது.

 சனாதன நால்வர்சந்தான நால்வர்அகச்சந்தான நால்வர்
1மெய்கண்டார்,திருஞான சம்பந்தர்,திருநந்திதேவர்,
2அருள்நந்தி சிவன்,திருநாவுக்கரசர்,சனற்குமாரர்,
3மறைஞான சம்பந்தர்சுந்தரர்சத்தியஞான தரிசினிகள்,
4உமாபதி சிவம்மாணிக்கவாசகர்பரஞ்சோதியார்

இவர்கள் எல்லோருமே குருக்கள் ஆக, ஆசிரியர்களாகக் கருதப் படுகின்றனர். பிறகு இம்முறை எப்படி வந்தது?

இப்பொழுது இந்து ஒற்றுமை தான் முக்கியமானது: ஆக 2023ல் குரு, குரு பூர்ணிமா, வியாஸர் என்று வைத்துக் கொண்டு, பிரிவினை உண்டாக்க வேண்டாம்:

  1. சங்க இலக்கியத்தில் சிவ / சிவன் இல்லாதலால், தேடி அலைந்து “தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்றனரோ?
  2. பிறகு சிவகுரு தேடும் படலத்தில் சிவனை / சிவத்தையும் தேடி, குருவையும் தேடி, தக்ஷிணாமூர்த்தி, சிவன்-குரு, சிவகுரு ஆனாரோ?
  3. 3000-2000 BCE வேத சிவ (அடைச்சொல்) சங்ககாலம் பிறகு சிவனாக, அத்தனை ஆண்டு கால தேவையா, ருத்ரன் சிவன் ஆக வேண்டுமா?
  4. சிவன்-குரு, சிவகுரு முதல் குரு என்றால், காளியின் கீழ் வீழ்வானேன்? அது மந்திரமா, தந்திரமா, எந்திரமா? ஓம் குருவே நமஹ!
  5. गुरू ब्रह्मा गुरू विष्णु, गुरु देवो महेश्वरा

गुरु साक्षात परब्रह्म, तस्मै श्री गुरुवे नम:

  • குரு ப்ரஹ்ம குரு விஷ்ணு, குரு தேவோ மஹேஸ்வர குரு ஸாக்ஷாத் பரப்ரஹ்ம, தஸ்மை ஸ்ரீ குருவே நம:
  • அதாவது குருவே பிரம்மா, குருவே விஷ்ணு, குருவே சிவன். குருவே உண்மையான பரபிரம்மம். அத்தகைய ஆசிரியருக்கு நான் தலைவணங்குகிறேன்.
  • 19-20 நூற்றாண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதும் குருவை  வீயாசரை வைத்து சண்டைத் தேவையா? இது சிவத்திற்கு உகந்ததா?
  • வியாசர் இல்லையென்றால் புராணங்கள் இல்லை, புராணங்கள் இல்லையென்றால், சிவமும் / சிவனும் இல்லை…..
  • குருவைப் போற்றுவோம், இந்துக்களைத் தாக்க நிறைய கூட்டங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது, அந்நிலைகளில் இந்த தர்க்கம் வேண்டாம்!

© வேதபிரகாஷ்

03-07-2023

தீபாவளி ஆதரவு-எதிர்ப்பு விடுதலைக்கு முன்பும், பின்பும் – திக முதல் திமுக வரை, 1940 முதல் 2022 வரை! (3)

ஒக்ரோபர் 16, 2022

தீபாவளி ஆதரவுஎதிர்ப்பு விடுதலைக்கு முன்பும், பின்பும்திக முதல் திமுக வரை, 1940 முதல் 2022 வரை! (3)

தீபாவளி வியாபாரமும் வேண்டும்தடைகட்டுப்பாடும் வேண்டும் என்ற முரண்பட்ட நிலைப்பாடு: இந்திய வம்சாவளியினர் உலக நாடுகளில் முக்கியமான பதவிகளில் வர ஆரம்பித்து விட்டனர். இதனால், அவர்களது பங்கு கனிசமாக உயர்ந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கின.  அடந்த ஆண்டுகளில் அமெரிக்க தலைவர்களும் தீபாவளி நிகழ்வுகள் தொடர்பான தகவல்களைப் பகிரத் தொடங்கியுள்ளனர். இந்த முறை 2020-2021 வருடங்களில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வரை தீபாவளிக்கான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தனர். 2022லும் நிச்சயம் தொடரும். இங்கிலாந்து பிரதம மந்திரி பதவிக்கும் ஒரு இந்திய வம்சாவளி நபர் வரவிருந்தது எல்லோருக்கும் தெரிந்த விசயம். அதனால், எல்லாவற்றையும் மறந்து, திக-திமுகவினர் இந்துவிரோதத்துடன் வெறுப்பைக் கக்கிக் கொண்டிருக்கலாம், அது அவர்களின் மோசமான மனப்பாக்கு, துவேச நிலைகளைத் தான் தொடர்ந்து வெளிக்காட்டி வருகின்றன. மற்றவர்களும் கவனித்துக் கொண்டு தான் வருகின்றனர். அது நிச்சயமாக அவர்களுக்கு பலனைக் கொடுக்காது.

தீபாவளி எதிர்ப்பு வெளிப்பாடும் நிலைகள் (2011-2022): கடந்த பத்தாண்டுகளில் தீபாவளி எதிர்ப்பு என்பது பலவிதங்களில் வெளிப்பட்டுள்ளது[1]. மாசுக்கட்டுப்பாடு என்ற பிரச்சாரம் மூலம், பட்டாசுகள் கொளுத்தக் கூடாது, வெடிகள் வெடிக்கக் கூடாது என்று ஆரம்பித்தனர். ரூ.1000 கோடிகளில் உள்ள இந்த தொழிலை மிரட்ட பலயுக்திகள் கையாளப்பட்டு வருகின்றன[2]. இதில் 90% உற்பத்தி சிவகாசியில் தான் நடக்கிறது. ரூ. 100-200 கோடிகள் விற்பனையுள்ள இந்த வியாபாரத்தை யாரும் எதிப்பதில்லை[3]. மேலும் தீபாவளி சார்ந்த ஆடை, இனிப்பு, நகை, சுற்றுலா என்ற வியாபாரங்களோ 5,000 கோடிகளை எட்டுகிறது. பொதுவாக நடந்து வரும் இப்பிரச்சாரத்தில் ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன. ஆனால், அவையே கோடிக்கணக்கில் விளம்பரம், நிகழ்ச்சிகள், ஸ்பான்சர்சிப் என்று கோடிகளை அள்ளுகின்றன. சினிமா நடிகைகள்-நடிகர்கள் தீபாவளி கொண்டாடினார்கள் என்று அமர்க்களம்மாக செய்திகளை கவர்ச்சிப் படங்களுடன் வெளியிடுபவார்கள். ஆனால், அவர்களை வைத்தே தீபாவளியைத் தூற்றவும் செய்வார்கள். கமல் ஹாஸன், சத்தியராஜ் போன்றோரை இங்கு உதாரணத்திற்கு எடுத்துக் காட்டலாம். பட்டாசு வியாபாரத்தில் திராவிடக் கட்சிகள் நேரிடையகவும், மறைமுகமாகவும் (பட்டாசு கடை வைக்க, உரிமை கோர) கோடிகளை அள்ளுகின்றன. போதாகூறைக்கு, முஸ்லிம்கள் தான் பெருமளவில் இதில் ஈடுப்பட்டுள்ளார்கள். ஒரு வேளை, தீபாவளியைக் கொண்டாடாமல் இருந்தால், இவர்கள் கதிதான் அதோகதியாகி விடும். எனவே, இவர்களது போலித்தனத்தை, இரட்டைவேடங்களை, குறிப்பாக இந்து-விரோதத்தை அறிந்து கொள்ளலாம்.

தீபாவளி எதிர்ப்பு வெளிப்பாடும் நிலைகள்: இதைப்பற்றி முன்னர் எடுத்துக் காட்டப்பட்டது. இனி தமிழகத்து கோணத்தில் பார்ப்போம். தமிழகத்தைப் பொருத்த வரையிலும், திராவிட சித்தாந்தம் பேசிக்கொண்டு, இந்து பண்டிகைகள் என்று வரும் போதெல்லாம் இரட்டை வேடம் போட்டுக் கொண்டு, கடந்த 60-100 ஆண்டுகளாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். முகமதிய, கிருத்துவ பண்டிகைகள் வரும் போது, போட்டிப் போட்டுக் கொண்டு வாழ்த்துத் தெரிவிப்பதும், இப்தர் பார்ட்டிகளில் முக்காடு-தொப்பிப் போட்டுக் கொண்டு கஞ்சிக் குடிப்பதும், போட்டோ எடுத்துக் கொள்வதும், ஊடகங்களில் வெளியிட வைத்து, தாங்கள் சிறுபான்மையினருக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம் என்று பறைச்சாற்றிக் கொள்வார்கள். ஆனால், இந்து பண்டிகைகள் வரும் போது, கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். அதிலும், கருணாநிதி போன்ற இந்து-விரோதிகள், அங்கு கஞ்சி குடிக்கச் செல்லும் போது, இங்கும் விரதங்களைக் கொண்டாடுகிறார்கள், ஆனால், நன்றாக சாப்பிடுகிறார்கள்; ஏகாதசி போன்ற நாட்களில் உபவாசம் என்று சொல்லிக் கொண்டாலும், வகை-வகையாக சிற்றுண்டிகள் செய்து சாப்பிடுவார்கள் என்றெல்லாம் நக்கல்-கிண்டல் அடித்துள்ளார்கள். தீபாவளி வந்துவிட்டால், அவர்களுக்கு, “தீபவலி”யே வந்துவிடும். வீரமணிலிருந்து கமல்ஹஸன் வரை கிளம்பிவிடுவார்கள். வீரமணி கோஷ்டிகள் விளாசித் தள்ளி விடுவார்கள். இம்முறை, அது “விடுதலையில்” ஆதித்தமிழர் பேரவை உருவத்தில் ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் இந்துக்கள் யோசிக்க வேண்டியது: இந்துக்கள் திக-திமுகவினரின் இந்துவிரோதத்தை அமைதியாக, சத்தியாகிரகம் போன்ற முறைகளில் தான் வெல்ல முடியும்:

  1. தீபாவளிக்கு சாதகமாக ஊடகங்களில் செய்திகள் இல்லை, பட்டாசுகள், கொண்டாட்டம் பற்றிய அறிக்கைகளும் அவ்வாறே இருக்கின்றன.
  • இப்பொழுதைய ஆட்சி, அதிகாரம், சித்தாந்தம், பண்டிகை பற்றிய அணுகுமுறை முதலிய நிலைகளில் இதைவிட எதையும் எதிர்பார்க்க முடியாது.
  • ஆவின் இனிப்புகளின் வியாபாரத்தைப் பெருக்குவேன், போனால் போகட்டும் என்று அதில் தீபாவளி வாழ்த்து போடுவேன் என்ற நிலை தான் உள்ளது.
  • ஆடி சேல்ஸ், அக்ஷய திருதியை என்றால் அமோகமான விளம்பரம், வியாபாரம், ஆனால், தீபாவளிக்கு குறைந்துள்ளதை கவனிக்கவும்.
  • ஆக, இந்த தீபாவளிக்கு வெடிகள், பட்டாசுகள் வாங்காமல், தீபம் ஏற்றி, தீபாவளி கொண்டாடினால், பாதிக்கப் படுவது யார் என்று தெரிந்து விடும்.
  • போலீஸ், சட்டம்-ஒழுங்குமுறை என்று யாருக்கும் ஒன்றும் இருக்காது, தெருக்கள் வெறிச்சென்று இருக்கும். அமையாக இருக்கும்.
  • இந்துக்கள் இம்முறை இவ்வாறு அமைதியாக தீபாவளி கொண்டாடலாம். கடைகளில் இனிப்பை வாங்காமல், வீடுகளிலேயே தயாரித்துக் கொள்ள்லாம்.
  • சிறுவர்களுக்கு துணிமணிகள் வாங்கிக் கொடுத்து, தீபாவளி மேன்மை குறித்துப் பேசி, ஒரு நாளைக் கழித்து விடலாம், சினிமாவுக்குக் கூட போகலாம்!
  • எல்லாமே மக்களிடம் தான் இருக்கிறது. சத்தியாகிரகம், ஒத்துழையாமை, அஹிம்சை எல்லாம் இதில் இருக்கின்றன.
  1. அனைத்தும் ஸ்தம்பித்து விட்டால், இந்துக்களின் பலம் என்ன என்பதனைப் புரிந்து கொள்வார்கள், அப்பொழுது, நேரம் குறிக்க மாட்டார்கள்

© வேதபிரகாஷ்

16-10-2022


[1]  The Scroll.com,Would banning Diwali crackers really infringe religious rights?, Aarefa Johari, Oct 28, 2015 · 08:00 pm.

 http://scroll.in/article/764796/would-banning-diwali-crackers-really-infringe-religious-rights-as-the-supreme-court-has-ruled

[2] http://articles.economictimes.indiatimes.com/2011-10-23/news/30310755_1_firecracker-sivakasi-child-labour

[3] Live Chennai, Online cracker business crosses Rs 100 Crores, Posted on : 22/Oct/2015 2:41:00 PM.

http://www.livechennai.com/detailnews.asp?catid=&newsid=22160

தீபாவளி ஆதரவு-எதிர்ப்பு விடுதலைக்கு முன்பும், பின்பும் – திக முதல் திமுக வரை, 1940 முதல் 2022 வரை! (1)

ஒக்ரோபர் 16, 2022

தீபாவளி ஆதரவுஎதிர்ப்பு விடுதலைக்கு முன்பும், பின்பும்திக முதல் திமுக வரை, 1940 முதல் 2022 வரை! (1)

தீபாவளியின் தொன்மை: இந்தியா முழுவதுமுள்ள இந்துக்களால் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளி, இந்துக்கள் வசிக்கும் பிற நாடுகளிலும்கூட உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை தமிழ் மாத கணக்கீட்டின்படி பெரும்பாலான வருடங்களில் ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகிறது. சில வருடங்களில் மட்டும் அமாவாசைக்கு முந்தைய தினம் கொண்டாடப்படுகிறது[1]. அதாவது, சந்திர மாத கணக்கில் அத்தகைய கணக்கீடு வரும்[2]. ஆங்கில நாட்காட்டியின்படி, அக்டோபர் 17 முதல் நவம்பர் 15க்குட்பட்ட நாட்களில் தீபாவளிப் பண்டிகை அமைகிறது. இந்தியா மட்டுமல்லாது, வேறு சில நாடுகளிலும் இந்தப் பண்டிகை தினத்தன்று அரச விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியத் தொன்மை காலத்தின் படி, திராதா யுகத்தில் ராமரோடு தொடர்பு படுத்தப் படுகிறது. அதாவது ராமன் தனது 14 வருட வனவாசத்தை முடித்துக் கொண்டு, லட்சுமணன், சீதாவுடன் அயோத்திக்கு திரும்பிய தினத்தை அந்நாட்டு மக்கள் விளக்கேற்றிக் கொண்டாடினர். அதுவே தீபாவளி தினம் ஆனது. துவாபர யுகத்தில், பெரும் அட்டகாசம் செய்துவந்த நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்தபோது, தான் இறந்த தினத்தை மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டுமென அந்த அசுரன் கேட்டுக்கொண்டதால், அதன்படியே தீபாவளி கொண்டாடப்பட்டபடுகிறது.

இந்துக்களைக் காப்பியடித்து, மற்ற மதத்தினர் தீபாவளி கொண்டாட ஆரம்பித்தது:  பிறகு கலியுகத்தில் 3102 BCEக்குப் பிறகு தோன்றிய மதங்களும் அதைப் பின்பற்றி தங்களது  அதததலைவர்களுடன் இணைத்துக் கொண்டன. பௌத்த மதத்தினருக்கு புத்த பூர்ணிமாபோல, ஜைனர்களுக்கு அவர்களது கடைசித் தீர்த்தங்கரரான மகாவீரர், நிர்வாணம் அல்லது முக்தி அடைந்த நாள்தான் தீபாவளி! அதேபோல, சீக்கியர்களுக்கும் தீபாவளி ஒரு பண்டிகை நாள்தான். முகலாய மன்னர்களால் குவாலியர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு ஹர்கோவிந்த், தன்னுடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 52 இந்து அரசர்களுடன் சிறையிலிருந்து தப்பி வந்த தினமாக சீக்கியர்கள் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். சிறையிலிருந்து தப்பி வந்த குரு ஹர்கோவிந்த் அமிர்தசரஸிலுள்ள தங்கக் கோவிலில் விளக்கை ஏற்றி மகிழ்ந்ததைக் குறிக்கும் விதத்தில் எல்லா சீக்கிய குருத்வாராக்களும் தீபாவளி அன்று ஒளிவெள்ளத்தில் மிதக்கின்றன. வாண வேடிக்கைகளும், விருந்துகளும் சீக்கியர்களுக்கும் உண்டு. இதனால், இந்தப் பண்டிகை எப்படித் தோன்றியது என்பது குறித்து நாட்டின் மற்ற பகுதிகளில் புதிய கதை உருவாக்கப் பட்டு சொல்லப்படுகிறது. இந்துக்கள் மட்டுமல்லாது, சமணர்கள், சீக்கியர்கள் போன்றவர்களும்கூட இந்தப் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அவ்வாறே, வட இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை குறித்து பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன[3]. இப்பொழுது, கிருத்துவர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினங்களில் பட்டாசு வெடிக்க ஆரம்பித்து விட்டனர். ஆகவே, நாளைக்கு, கிறிஸ்துவ “பண்டிதர்கள்” இதைப் பார்த்து தான், இந்துக்கள் தீபாவளி கொன்டாட ஆரம்பித்தனர் என்று கதை விடுவார்கள். அதை “பகுத்தறிவு’ இந்துவிரோதிகள் எடுத்த்க் கொண்டு கதை விட ஆரம்பிக்கலாம்.

இந்தியா, முழுவதும் கொண்டாடப் படும் பண்டிகை: மராட்டியம், குஜராத் பகுதிகளில் இது “தன திரயோதசி”, “தண்டெராஸ்” என்றெல்லாம் சொல்லப்படுகின்றது. அட்சய திருதியை போலவே தன திரயோதசி அன்றும் தங்கம், ஏனைய பொருட்கள் வாங்குவது சிறப்பு என்று நம்பப்படுவதுடன், வணிகர்களாலும் வியாபார நிலையங்களாலும் விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றது. ஆனால், நேபாளத்தில் “காக் திஹார்” என்றழைக்கப்படும் இந்நாளில் காகங்களே உணவளித்துப் போற்றப்படுகின்றன. வடநாட்டில், பொதுவாக “நரக சதுர்த்தசி” என்று அறியப்படும் இந்நாளே தமிழர்களால் தீபாவளியாகக் கொண்டாடப்படுகின்றது. அடுத்தநாள் அமாவாசையையே தீபாவளியாகக் கொண்டாடும் வடநாட்டவர், இந்நாளை “சோட்டி தீபாவளி” என்று அழைப்பதுடன், எண்ணெய்க்குளியல்  செய்து, புத்தாடை புனைந்து இந்நாளில் மகிழ்வர். நேபாளிகளோ “குகுர் திஹார்” என்ற பெயரில் இந்நாளில் நாய்களுக்கு உணவிட்டு அவற்றை வழிபட்டு மகிழ்வர்.

பெண்-தெய்வ வழிபாடாவும் கொண்டாடப் படுகிறது: “இலக்குமி பூசை” என்று பொதுவாகச் சொல்லப்படும் இந்நாளில் புத்தாடை புனைவதும், திருமகளைப் போற்றுவதும் பட்டாசு வெடித்து வாணவேடிக்கைகள் நிகழ்த்துவதும் முக்கியமான மரபுகள். தீபங்கள் ஏற்றுவது அன்று விசேடம். வடநாட்டின் சில  பகுதிகளில், கணவன்-மனனவியின் அன்னியோன்னியத்தை அதிகரிப்பதற்காக “பலி பிரதிபதா” எனும் நிகழ்வு கொண்டாடப்படுகின்றது.  இருவரும் மாறிமாறித் திலகமிடுவதும், பரிசளிப்பதும் அன்றைய மரபுகள். உத்தரப்பிரதேசத்தில், இந்நாளில் “கோவர்த்தன பூசை” நிகழ்த்தப்பட்டு கண்ணன் வழிபடப்படுகின்றான். “அன்னகூடம்” என்ற பெயரில் பலவகைக் கறிகளுடன் சோறு சமைத்து மலைபோலக் குவிக்கப்பட்டு, கோவர்த்தன மலையைக் கண்ணன் தூக்கிய தொன்மம் நினைவு  கூறப்படுகின்றது. ஒடியா, பீகார், அசாம் மற்றும் மேற்கு வங்கப் பகுதிகளில் மட்டும் தீபாவளி, காளி பூசையாகக் கொண்டாடப்படுகின்றது. தேய்பிறை பதினான்காம் நாளை அவர்கள் “காளி சௌடஸ்” (காளி சதுர்த்தசி) என்று கொண்டாடுவதுடன், அமாவாசையன்று “சியாமா பூசை” என்ற பெயரில் காளிக்கு விழாவெடுக்கின்றார்கள்.

தென்கிழக்காசிய நாட்டுகளிலும் கொண்டாடப் படும் பண்டிகை: நேபாளத்தில் இலக்குமி பூசையுடன், கோமாதா பூசை கொண்டாடுவார்கள். நேபாளப் புத்தாண்டும், குஜராத், மராட்டியப் புத்தாண்டும் இந்நாளாக அமைகின்றது. தீபாவளித் திருநாள் இந்தியாவில் மட்டுமல்ல, நேபாளம், இலங்கை, மியான்மர் (பர்மா), மொரீஷியஸ், கயானா, சுரிநாம், மலேசியா, சிங்கப்பூர், ஃபிஜி, போன்ற இந்திய வம்சாவளியினர் அதிகமாக வாழும் நாடுகளில் எல்லாம் அரசு விடுமுறை நாளாக இருப்பதிலிருந்தே இந்தப் பண்டிகையின் முக்கியத்துவம் எத்தகையது என அறியலாம். ப்பானில் மூன்று நாள் கொண்டாட்டமாக தீபாவளி அமர்க்களப்படுகிறது. லேசியாவில் கொண்டாடப்படும் தீபாவளியின் பெயர்- ஹரி தீபாவளி. சிங்கப்பூரில் தீபாவளி அன்று மாரியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா நடத்துவார்கள். தீபாவளியைச் சிறப்பித்து தபால்தலை வெளியிட்ட நாடும் சிங்கப்பூர்தான்! தாய்லாந்து, கம்போடியா, மலேசியா, ஜப்பான், போன்ற நாடுகளிலும் கொண்டாடப் படுகிறது.

கம்யூனிஸ விமர்சனம், ஆங்கிலேயர் தண்டனை, இந்துவிரோதமாக மாறியது: இனி, திகவின் சமாசாரத்தை கவனித்தால், ஈவேராவுக்கு ராமநாதன் பெருமளவில் “விசய தானத்தில்” உதவி வந்தார். இவருக்கு ஆங்கிலம், உலக ஞானம் எல்லாம் தெரியும். அவருடன் தான் வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று வந்தார். ரஷ்யாவுக்குச் சென்று வந்த பிறகு, கம்யூனிஸ புத்தகங்களின் மொழிபெயர்ப்பு சுருக்கமாக “குடி அரசில்” வெளி வந்தன. ஆனால், ஆங்கில அரசு நடவடிக்கை எடுத்து, கைது செய்த போது, மன்னிப்பு கேட்டுக் கொண்டு, தண்டத்தைக் கட்டி அத்தகைய விமர்சனத்தை நிறுத்திக் கொண்டார். சில உதவியாளர்கள் இதிகாச-புராணங்களைப் படித்து அரைகுறையாக விசயங்களை சொல்லி வந்தார்கள். அதை வைத்து, அவரது எழுத்தாளர் குழுவை வைத்து, “குடி அரசில்”, எல்லாம் தெரிந்தது போல கட்டுரைகள் வெளியிட்டு கலாட்டா செய்து வந்தார்கள்.  இது இந்துவிரோதமாகி  “பகுத்தறிவு”, “நாத்திகம்” போர்வைகளில் வெளி வந்தன.1944ல் ஈவேரா, “சித்திர குப்தன்” பெயரில் வந்ததாக, ஒரு கதையை ஒவ்வொரு தீபாவளிக்கும் பிரசுரிப்பர்.

© வேதபிரகாஷ்

16-10-2022.


[1]  சில தமிழ்-சார்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, திரிபுவாதிகள், கார்த்திகை தீபவிழாவை வைத்தும் குழப்புவர். அப்படி பார்த்தால், “க்ஷிரா துவாதசி” என்று ஹீபாவளிக்குப் பிறகு, கர்நாடகாவிலும் அவ்வாறான பண்டிகை கொண்டாடுவர்.

[2]  சந்திர மாதம், சூரிய மாதம், சந்திர-சூரிய வருடம் என்ற கணக்கீடுகள் இருப்பது தெரிந்தவையே. அவை தெரியாதவர்கள் ஏதோ வித்தியாசம் இருப்பதாக, கற்பனையில் உளறும் வாதங்கள் தான் அத்தகைய திரிபுகள்.

[3] சீனி. வேங்கடசாமி, அயோத்திதாஸர்,  பரமசிவன், வேல்சாமி போன்றோர் சில புத்தகங்களைப் படித்து விட்டு, தலைகீழாக்கி, கல்லக்கிரமம் மறந்து, கருதுகோள்களின் படி, புனைந்துள்ள வாதங்கள் சரித்திர ரீதியில் இல்லாதவை, ஏர்புடைதல்ல, அவ்வகையில் திக-திமுகவினர் கதைகள் காழ்ப்பில், வெறுப்பில், தூஷணங்களில் உருவனவை, அவற்றில் வக்கிரத்தைத் தான் காண முடியும்.

பல்லக்கில் செல்வது, பல்லாக்குத் தூக்குவது, சாமி பல்லக்குத் தூக்குவது, பட்டின பிரவேசம் செய்வது – முதலியவற்றில் உள்ள திரிபுவாதங்களும், இந்துவிரோத போக்கும் – 2022 தொடரும் அவலம்!

மே 3, 2022

பல்லக்கில் செல்வது, பல்லாக்குத் தூக்குவது, சாமி பல்லக்குத் தூக்குவது, பட்டின பிரவேசம் செய்வது முதலியவற்றில் உள்ள திரிபுவாதங்களும், இந்துவிரோத போக்கும் 2022 தொடரும் அவலம்!

பல்லாண்டுகளாக நடந்து வரும் பாரம்பரியத்தை எதிர்ப்பது: மயிலாடுதுறை மாவட்டத்தில் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்திருக்கிறது[1]. இங்கு ஆண்டுதோறும் ஆதீன குரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று `பட்டினப் பிரவேசம்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம்[2]. 500 ஆண்டுகளாக நடந்து வருவதாக ஆதீனங்கள் சொல்கிறார்கள். இதெல்லாம் காலம்-காலமாக நடந்து வரும் நிலையில் கடவுள் நம்பிக்கை இல்லாத, இந்துவிரோதிகளாக இருக்கும் திராவிடக் கழக வகையறாக்கள் எதிர்த்து வருவது தமாஷாக இருக்கிறது. மனிதனை மனிதன் சுமக்கும் இந்த பட்டினப் பிரவேசம் பல்லக்குத் தூக்கும் நிகழ்வுக்குத் திராவிடர் கழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது[3], என்று செய்திகள் வெளியிடப் படுகின்றன. அதாவது, ஏதோ அடிமைகள் எஜமானனை, ஜமீந்தாரை, தலைவரைத் தூக்கிச் செல்வது போல குறிப்பிடுகிறார்கள் போலும். திராவிட அரசியலில் யார், யாரைத் தூக்கி இருக்கிறார்கள் என்பதெல்லாம் அறிந்த விசயம் தான்.

மனிதனை மனிதன் தூக்குகிறான்: மனிதனை மனிதன் தூக்குகிறான் என்பதே விசித்திரமான எதிப்பு தான், ஏனெனில், இது ஒரு சாதாரணமான நிகழ்வு. எல்லா இடங்களிலும் நடைபெற்று வரும் விசயம். “டோலி” உபயோகம் மலைக் கோவில்களில் உள்ளது. வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள், பெண்கள், சிறுவர்கள் போன்றோர் அதை உபயோகித்துச் செல்கின்றனர். இதில் என்ன தவறு அல்லது புதிர் இருக்கிறது என்று தெரியவில்லை. தேர்தலில், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றால், வெற்றி பெற்றவனை, தலைவனை, கேப்டனைத் தூக்கிச் செல்வது பாராட்டுவது என்பதெலாம் சகஜமான சமாச்சாரங்கள். திரைப்படங்களில் காதலியை காதலன் தூக்குகிறான். மலைப்பிரதேசங்களில் குறிப்பாக படிகட்டுகள் மூலம் ஏற முடியாதவர்கள் நாற்காலிகளை பல்லக்குப் போன்று அமைத்துத் தூக்கிச் செல்கிறார்கள். அதற்கு பணமும் வசூலிக்கப் படுகிறது. அந்நிலையில், பல்லக்கில் மடாதிபதியை வைத்து, பக்தர்கள் தூக்குவது எப்படி வித்தியாசமாக பார்க்கப் படுகிறது என்று தெரியவில்லை.

2021ல் பட்டின பிரவேசம் நடந்தது: கடந்த ஆண்டு 2021 திருவாவடுதுறை ஆதீனத்தில் நடைபெற்ற பட்டினப் பிரவேசம் நிகழ்வில் திராவிடர் கழகத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி திருவாவடுதுறை ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி வீதியுலா செல்லும் நிகழ்வு நடைபெற்றது[4]. ஆனால், எந்த பிரச்சினையும் நடகவில்லை, நடந்ததாக செய்தி இல்லை. அதாவது, வெறும் மிரட்டலில் ஈடுபட்டு, விளம்பரம் தேடியுள்ளனர் என்றாகிறது. தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேச நிகழ்வானது இந்த மாத இறுதியில் 22-05-2022 அன்று நடைபெறவுள்ளது[5]. இந்த நிலையில், திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பையடுத்து, தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடைவிதித்து[6] மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டிருக்கிறார்[7]. “ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் தூக்கினால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதால், மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ் இந்த நிகழ்ச்சியைத் தடை செய்திடக் கோரி அனுப்பிய அறிக்கையின் படியும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23-ன் படி சட்ட ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதாலும், பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்ல தடை விதிக்கப்படுகிறது,” எனக் கோட்டாட்சியர் பாலாஜி தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்[8].

சட்டம் ஒழுங்குப் பிரச்னையை உண்டாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்:  “சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதால்,” எனும்போழுது, யாரால் ஏற்படும் என்பதனை அறிந்து கொள்ளலாம். 500 ஆண்டுகளில் நடக்காதது, அண்ணா-கருணாநிதி-எம்ஜிஆர்-ஜெயலலிதா-ஓபிஎஸ்-இபிஎஸ் ஆட்சிகளில் நடக்காதது, இப்பொழுது ஸ்டாலின் ஆட்சியில் நடக்கும் என்றால், பிரச்சினை பக்தர்களிடம் இல்லை. அதை எதிர்க்கும் திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், முதலிய வகையறாக்களில் தான் உள்ளது. அத்தகைய தைரியம், போக்கு எங்கிருந்து வந்தது என்பதனை கவனிக்க வேண்டும். கவர்னருக்கு கருப்புக் கொடி காட்டி, கொம்புகளை எரிந்தது போல, இங்கும் தாக்குதல் நடத்தினால், அதனை இந்த நாத்திகர்கள் தான் செய்வார்க்கள். அப்படியென்றால், முதலில் அவர்களை கைது செய்து, “சட்டம் ஒழுங்குப் பிரச்னை..,” யை சரிசெய்து, நிலை நிறுத்த வேண்டும். அதை விடுத்து, சம்பந்தமே இல்லாமல், ரிவர்ஸ் கியரில் சென்று பக்தர்களை இம்சிக்கக் கூடாது. பாரம்ப்ரிய சம்பிரதாயங்களைத் தடுக்கக் கூடாது. அதுவே சட்டமீறல் ஆகும்.

திராவிட பாரம்பரையத்தின் பல்லக்குத் தூக்கல்: பல்லாக்கு, பல்லாக்குத் தூக்கி, பல்லாக்கு புராணங்கள் திராவிடத்தில் அதிகமாகவே உள்ளன…….மேடைப் பேச்சுகள், திரைப்பட வசனங்களில் அவை அதிகமாகவே இருந்தன. இப்பொழுதும், ஆதரவு கொடுப்பது போன்ற ரீதியில், “பல்லக்குத் தூக்குதல்” சொல்லாடல் உள்ளது. அண்ணாதுரை பல்லக்கில் சென்றது எல்லாம் இருக்கிறது. இப்பொழுது புகைப்படங்கள், விவரங்கள் மறைக்கப் படுகின்றன. பிறகு, சாரட்டு வண்டிகளில் தொண்டர்கள் சூழ கருணாநிதி, வீரமணி போன்றோர் உலா, ராஜ பவனி வந்துள்ளனர். அதுவும் அரசியல் என்று வந்து விட்டால் கேட்க வேண்டாம்…..இன்றைக்கு அமைச்சராக இருக்கும் பொய்யாமொழி, கூட 2020ல் சாமி பல்லக்குத் தூக்கி இருக்கிறார்! அப்பொழுது பகுத்தறிவுகள் யாரும் விமர்சிக்கவில்லை………பெரியார் பிஞ்சுகள், பெரியாரிஸ குஞ்சுகள் துடிக்கவில்லை…….சாமி பல்லாக்குத் தூக்குவது ஒரு பாக்கியமாகக் கருதப் பட்டு வருகிற்து. அப்படி பல அரசியல்வாதிகள் செய்திருக்கிறார்கள். ஆக, இப்பொழுது, இப்பிரச்சினையைக் கிளப்புவது, அரசியல் ரீதீல் தான், மற்றும் தடை விதிப்பது போன்றதும்,  உள்நோக்கம் கொண்டது தான்.

திராவிட அரசியலில், பல்லக்கு வார்த்தை பிரயோகம் சாதாரணமானது!

ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் (1894-1994)  பல்லக்கில் சென்றது முதலியன: பழைய காஞ்சி சங்கராச்சாரியாரை நடக்க வைத்தோம் என்று திராவிடக் கட்சிகள், ஆதரவாளர்கள், சித்தாந்திகள் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். அது மிகவும் தவறு. அவருக்கு 1914, 1924, 1934, 1954, 1964, ஆண்டுகளில் முறையே 20, 30, 40, 50, 60 வயதுகளில் இருந்த போது, துடிப்பாக, வேக-வேகமாக நடப்பார். இன்னும் சொல்லப் போனால், கூட வருபவர்கள் ஓடி வரவேண்டும் அந்த அளவுக்கு வேகமாக நடப்பார். வயதாகியபோது, பல்லக்கு நான்கு சக்கர சைக்கிள் வண்டியாகியது. பிறகு தான் கார் ஆகியது. அப்பொழுது அவர் நடந்து சென்றதை எல்லாம் அறிந்தவர்கள் உண்டு. காரில் சென்றால் சரி, பல்லக்கில் சென்றால் தவறு என்பது காலம் மாறி வரும் நிலையைக் காட்டுகிறது. 1964ல் 70 மற்றும் 1974ல் 80 வயதில் இருந்தார். ஆகவே உண்மை அறியாமல், ஏதோ ஒருவர் ஆதாரம் இல்லாமல் எழுதுவது, அதனை இன்னொருவர் எழுதுவது என்று பரப்புவது பொய்யாகும். ஏனெனில், இந்த தேதிகளே எடுத்து காட்டுகின்றன. இப்பொழுது, கார் / வேன் இருப்பதால் அதன் மூலம் மடாதிபதிகள் சென்று வருகின்றனர். எனவே சங்கராச்சாரியாரே செய்யாததை, இந்த சைவ மடாதிபதிகள் செய்கிறார்களே போன்ற பேச்சுகள் தேவையில்லை. வேண்டுமென்றால், திராவிடத் தலைவர்களை நடந்து போக சொல்லலாம்.

© வேதபிரகாஷ்

03-05-2022


[1] புதியதலைமுறை, தருமபுரம் ஆதீனம்: பல்லக்கு தூக்கி செல்ல அனுமதி மறுத்து கோட்டாட்சியர் உத்தரவு, தமிழ்நாடு,    Veeramani Published :02,May 2022 03:12 PM

[2] https://www.puthiyathalaimurai.com/newsview/136508/RDO-order-denying-permission-to-lift-the-pallakku-festival-in-Dharmapuram-Aadeenam

[3] தமிழ்.இந்து, தருமபுரம் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில் ஆதீனத்தை பக்தர்கள் பல்லக்கில் சுமக்க தடை: மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவு, செய்திப்பிரிவு, Published : 03 May 2022 07:08 AM; Last Updated : 03 May 2022 07:08 AM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/795014-devotees-are-not-allowed-to-carry-pallakku-1.html

[5] தந்தி.டிவி, தருமபுரம் ஆதினத்தை பல்லக்கில் தூக்கி செல்ல தடை, பதிவு : மே 02, 2022, 02:09 PM.

[6] https://www.thanthitv.com/News/TamilNadu/2022/05/02140958/3319374/Dharmapuram-Adinath-Brkg.vpf

[7] விகடன், மனிதனை மனிதன் சுமப்பதால்..! – தருமபுர ஆதீன நிகழ்ச்சியில் பல்லக்கு தூக்க கோட்டாட்சியர் தடை, மு.இராகவன், Published:Yesterday at 4 PMUpdated:Yesterday at 4 PM.

[8] https://www.vikatan.com/government-and-politics/politics/govt-banned-palanquin-in-dharumapuram-aadheenam-function

அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் போல, தடா ரஹீமுக்கும் சங்கர மடத்திற்கும், பூணூலுக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை!

பிப்ரவரி 26, 2022

அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் போல, தடா ரஹீமுக்கும் சங்கர மடத்திற்கும், பூணூலுக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை!

தமிழகத்தில் முஸ்லீக் பிரிவுகள் ஏன்?: இந்தியாவைத் துண்டாடிய முஸ்லிம் லீக், இப்பொழுது பல பேனர்களில் செயல் பட்டு வருகிறது. திராவிட கட்சிகளுடன் உறவுகள் வைத்துக் கொண்டு, ஆசு, அதிகாரம் என்ரு பயன் படுத்திக் கொண்டு, தங்களது வியாபாரம் மற்ற விவகாரங்களை சாதித்துக் கொள்ள அவ்வாறான பிரிவுகளை வைத்துக் கொண்டு சாதித்து வருகின்றது. முஸ்லீம் லீக் என்று ஒன்று இருந்தால், ஒன்று முதல் மூன்று வரை தான் சீட்டுகள் கிடைக்கும். ஆனால், இவ்வாறு பல பிரிவுகளை வைத்துக் கொள்வதன் மூலம் பத்து வரை சீட்டுகள் கிடைக்கின்றன. தங்களது தாக்கத்தைப் பெருக்கிக் கொள்கிறது. இதனை சமீபத்தை தேர்தல்களும் மெய்ப்பித்துக் கட்டியுள்ளன. மொத்தத்தில் முஸ்லிம் மந்திரி, எம்.எல்,ஏ எம்.எல்.சி அதிகமாகியுள்ளன. சென்னையில் மண்ணடியில் ஒரு குட்டி பாகிஸ்தானை உருவாக்கியுள்ளனர். போலீஸாரே அங்கு சென்று வழக்கு பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. முன்னர் கஸ்டம்ஸ் / சுங்க அதிகாரிகள் சென்று விசாரணை செய்ய முடியாத அளவுக்கும் நிலைலையை உருவாக்கினர். அந்நிலையில், சம்பந்தம் இல்லாமல் மற்ற விவகாரங்களில் தலையிட்டுப் பிரச்சினைகளை உருவாக்கவும் திட்டமிட்டது போலிருக்கிறது.

அப்துல் ரஹீமின் அடாவடித் தனமும், பிராமணரை தாக்கும் போக்கும்: இந்திய தேசிய லீக் தலைவர் தடா அப்துல்ரகீம், சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசித்து வருபவர்[1]. இவர் மத கலவரத்தை தூண்டும் வகையில் முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டதாக தென் பாரத இந்து மகாசபை தலைவர் வீர்.வசந்தகுமார் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்து இருந்தார்[2]. பிராமண சங்கமும் புகார் கொடுத்திருந்தது[3], முதல்வருக்கு பாதுகாப்பு கேட்டு கடிதமும் எழுதியது. முதலில் ஏனோ-தானோ என்று இருந்த சட்டம்-ஒழுங்கு நிலைநாட்டும் அதிகாரிகள் திடீரென்று உஷராகி வேலை செய்ய ஆரம்பித்து விட்டது போலிருக்கிறது. முன்னர், காஞ்சி புரத்தில், சங்க்ர மடத்திற்கு 24 7 போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வீராசாமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்[4]. தமிழகத்தில் பூணூல் அறுக்கும் போராட்டம் அறிவித்த இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீமை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்[5]. கர்நாடக கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.  கர்நாடகாவில் நடக்கும் பிரச்சினைக்கும் தமிநாட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

சங்கர மடத்தை துலுக்கர் தேவையில்லாமல் இழுத்தது: இந்நிலையில், ஹிஜாப்புக்கு தடை விதிப்பதை கண்டித்து ‘ஹிஜாப் பிரச்னையுடன் தொடர்புபடுத்தி, காஞ்சி சங்கர மடத்தில் இருந்து, பூணூல் அறுப்பு போராட்டத்தை தொடர்வோம்’ என இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா அப்துல் ரஹீம் அறிவிப்பு வெளியிட்டார்[6]. இதற்கு இஸ்லாம் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். ஒருவேளை பிரச்சினை பெரிதானால், தேசிய அளவில் கவனம் ஈர்க்கப் படும் என்பது அவர்கள் புரிந்து கொண்டிருப்பர். இந்நிலையில், கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், இரு பிரிவினர் இடையே வெறுப்பு உணர்ச்சியை ஏற்படுத்தி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல் உட்பட 4 பிரிவுகளின் கீழ்  தடா ரஹீம் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.  அவர் மீது ஐபிசி பிரிவு 153 (கலவரத்தைத் தூண்டுதல்) மற்றும் 505 (1) (சி) (வகுப்புச் சமரசத்தை ஏற்படுத்துதல்?) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன[7]. மேலும், அவரை மார்ச் 10-ம் தேதி வரை 15 நாள் விசாரணைக்காக காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது[8].

இந்து முன்னணி முதலியவற்றின் புகார்கள்: இந்நிலையில், இந்து முன்னணி சென்னை மாநகர பொதுச் செயலாளர் பி.மேகநாதன் கடந்த 21-ம் தேதிமாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘இஸ்லாமிய சமூக மக்களின் மனதில் வன்மத்தை விதைத்து மத ரீதியிலான கலவரத்தை உருவாக்கும் வகையிலும், நாட்டின் இறையாண்மைக்கு தீங்கிழைக்கும் வகையிலும் உள்நோக்கத்துடன் தடா ரஹீம் செயல்படுகிறார். எனவே, அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, அவரது இந்திய தேசிய லீக் கட்சியை தடை செய்ய வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். இந்த புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்[9]. இந்த வழக்கில் அவர் 25-02-2022 அன்று கைது செய்யப்பட்டு, சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைத்தனர்[10].. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. ஆனால், எதை விசாரித்தனர், பிராமணரை குறி வைக்கும் அவர்களது திட்டம் என்ன என்பது புரியவில்லை.

இஸ்லாமிய அடிப்படைவாதம் தீவிரவாதத்தை வளர்க்கிறதா, திராவிடத்துவம் ஆதரிக்கிறதா?: பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் இவரது பதிவுகள் கொச்சையாக, ஆபாசமாக, இரட்டை அர்த்தம் தொணிக்க உள்ளன. மாற்று மத பெண்கள் பற்றிய இவரது விமர்சனங்கள் அசிங்கமாகவே இருக்கின்றன. பெண்கள், பெண்மையினை இஸ்லாம் மதிக்கிறது என்றெக்லாம் பீழ்த்திக் கொள்வார்கள். ஆனால், இவரது பதிவுகளைப் படித்தால், எந்த அளவுக்கு அவையெல்லாம் பாராட்ட/போற்றப் படுகின்றன என்பதனை அறிந்து கொள்ளலாம். அரசியல், அதிகாரம் போன்று சமூகப் பிரச்சினைகளிலும், இவ்வாறான வன்மங்களை வித்திட்டு தீவிரவாதத்திற்கு வழிவகுப்பது போலிருக்கிறது. இவர்களது மிரட்டல், உருட்டல், திட்டுவது, அடிப்பது, போன்ற வன்முறை செயல்கள் தீவிரவதத்தை வளர்க்கிறது எனலாம். ஏற்கெனவே, சிறையில் இருக்கும் தீவிரவாதிகள், குண்டு வைத்தவர்கள் முதலியவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் செயல்பட்டு, அதற்கு திராவிடத்துவவாதிகள் ஆதரவாக இருப்பதையும் நோக்கத் தக்கது.

பார்ப்பன எதிர்ப்பு, பார்பனர் மீதான வன்முறை முதலியன: முன்பு ஈவேரா முதல் கருணாநிதி வரை பிராமணரைக் கொல்வோம், என்றெல்லாம் பேசித் தப்பித்துக் கொண்டது போல, இக்காலத்திலும், தமது வன்மத்தை, பேச்சுத் தீவிரவாதத்தைக் காட்டி, வன்முறையைக் கட்டவிழ்த்து விடலாம், அதற்கு திக-திமுகவினர் மற்றும் கருப்புப் பரிவார், சிவப்பு பரிவார், பச்சைப் பரிவார் வகையறாக்கள் துணையாக இருப்பார்கள் என்றும் திட்டம் போட்டு, ஆரம்பிக்கப் பட்டிருக்கலாம். காஷ்மீரத்தில் துலுக்கத் தீவிரவாதம், இப்படி ஆரம்பித்து, உச்சத்திற்குச் சென்றுதான், இந்துக்கள் பெரும்பாலோனோர் விரட்டியடிக்கப் பட்டனர், கொல்லப்பட்டனர், பெண்கள் கற்பழிக்கப் பட்டனர்……சொந்த நாட்டிலேயே அகதிகள் ஆனார்கள். அதே போல, திமுகவின் யதேச்சதிகாரம், திராவிடத்துவ வன்முறை, இந்த கோஷ்டிகளுக்கு துணை போனால், தமிழக இந்துக்களுக்கும் அதே நிலை ஏற்படும். ஏற்கெனவே, தமிழகம் இன்னொரு காஷ்மீர் ஆகும் என்றெல்லாம் பலமுறை பேசியிருக்கிறார்கள்..ஆகவே எளிய இலக்கு-தாக்குதல்களில் சிக்கக் கூடிய பிராமணர்கள் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

26-02-2022


[1] தினத்தந்தி, சமூக வலைத்தளத்தில் சர்ச்சை கருத்து பரப்பிய இந்திய தேசிய லீக் கட்சி பிரமுகர் கைது, பதிவு: பிப்ரவரி 26,  2022 16:02 PM.

[2] https://www.dailythanthi.com/News/Districts/2022/02/26160220/Tada-Abdul-Rahim-booked-under-2-Sections-for-the-protest.vpf

[3] மாலைமலர், இந்திய தேசிய லீக் தலைவர் தடா அப்துல் ரகீம் கைது, பதிவு: பிப்ரவரி 25, 2022 14:05 IST.

[4] https://www.maalaimalar.com/news/district/2022/02/25140559/3515539/Tamil-News-INL-leader-Tada-Abdul-Rahim-arrested.vpf

[5] தமிழ்.இந்து, பூணூல் அறுப்பு போராட்டம் அறிவித்த இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் கைது, செய்திப்பிரிவு, Published : 26 Feb 2022 08:26 AM; Last Updated : 26 Feb 2022 08:26 AM

[6] https://www.hindutamil.in/news/tamilnadu/771713-poonol-slaughter-struggle.html

[7] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், ஹிஜாப் பிரச்னை: பூணூல் அறுப்பு போராட்டம் அறிவித்த தடா ரஹீம் கைது, Written by WebDesk, Updated: February 25, 2022 10:46:07 am

[8] https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-tamil-news-tada-abdul-rahim-booked-under-2-sections-for-the-protest-of-snatching-the-sacred-thread-416789/

[9] தினமலர், பூணூல் அறுப்பு போராட்டம் அறிவித்த தடா ரஹீம் கைது, தமிழ்நாடு, Added : பிப் 26, 2022  06:18

[10] https://www.dinamalar.com/news_detail.asp?id=2970502

செப்டம்பர்-அக்டோபர் பண்டிகைகாலத்தைக் குறிவைத்து திராவிடத்துவ இந்துவிரோதிகள் தூஷணத்தில், தாக்குதல்களில் இறங்கியுள்ளனரா? (2)

ஒக்ரோபர் 28, 2021

செப்டம்பர்அக்டோபர் பண்டிகைகாலத்தைக் குறிவைத்து திராவிடத்துவ இந்துவிரோதிகள் தூஷணத்தில், தாக்குதல்களில் இறங்கியுள்ளனரா? (2)

பெரியார் பிறந்த தினம் இனி சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும்: பெரியார் பிறந்த தினம் இனி சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்[1]. தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (செப். 06) சட்டப்பேரவையில் விதி எண்: 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுப் பேசியதாவது[2]: “சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி தமிழகத்தில் சமூக நீதிக்கு வித்திட்டவர் பெரியார். அவர் எழுதிய எழுத்துகள், யாரும் எழுதத் தயங்கியவை. அவர் பேசிய பேச்சுகள் யாரும் பேச பயந்தவை. அவர் நடந்த நடை, நடத்திய சுற்றுப்பயணம், மாநாடுகள் குறித்துப் பேசுவதென்றால், தமிழக சட்டப்பேரவையை 10 நாட்கள் ஒத்திவைத்துவிட்டுத்தான் பேச வேண்டும்.

பல்வேறு சமூக நீதிப் போராட்டங்களை முன்னெடுத்தவர் பெரியார். இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ பெரியார் அளித்த அடித்தளமே காரணம். பெரியாரின் குருகுலப் பயிற்சிதான் திமுகவை உருவாக்கியது.

பெரியார் குறித்து இந்த வரலாற்றுச் சிறப்புக்குரிய அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். அதன்படி, பெரியாரின் பிறந்த நாளான செப்.17-ம் தேதி தமிழகத்தில் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் என, சட்டப்பேரவை விதி எண்: 110-ன் கீழ் அறிவிக்கிறேன்.

தமிழகத்திலுள்ள தலைமைச் செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூக நீதி நாளான செப்.17-ம் தேதி அன்று உறுதிமொழி எடுக்கப்படும்,” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

அயோத்திதாச பண்டிதருக்கு வடசென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும்: அயோத்திதாச பண்டிதருக்கு வடசென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்[3]. தமிழக சட்டப்பேரவையில் இன்று (செப். 03) முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவை விதி எண்:110-ன்கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுப் பேசியதாவது[4]: “தமிழன், திராவிடன் எனும் இவ்விரு சொற்களையும் அரசியல் களத்தில் அடையாளச் சொற்களாக மாற்றி அறிவாயுதம் ஏந்தியவர்தான் அயோத்திதாச பண்டிதர். 1891-ம் ஆண்டே மக்கள்தொகை கணக்கெடுப்பில் பூர்வ தமிழர் என்று பதியச் சொன்னவர் பண்டிதர். 1891-ம் ஆண்டு அவர் தொடங்கிய அமைப்பின் பெயர் திராவிட மகாஜன சபை ஆகும். 1907-ம் ஆண்டு ‘ஒரு பைசா தமிழன்’ என்ற இதழைத் தொடங்கி அதையே ‘தமிழன்’ என்ற இதழாக நடத்தி வந்தவர் அவர்.

பூர்வீக சாதி, பேதமற்றவர்கள் திராவிடர்கள் என அழைத்தவர் அவர். அதனால்தான், தமிழன், திராவிடம் என இரு சொற்களையும் அறிவாயுதமாக ஏந்தினார் எனக் குறிப்பிட்டேன். அவர் போட்டுக் கொடுத்த பாதையில்தான் தமிழக அரசியல் செயல்பட்டு வருகிறது.

எழுத்தாளர், ஆய்வாளர், வரலாற்று ஆசிரியர், மானுடவியல் சிந்தனையாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், மருத்துவர், பேச்சாளர், மொழியியல் வல்லுநர், பன்மொழிப் புலவர், புதிய கோட்பாட்டாளர், சிறந்த செயல்பாட்டாளர், சளைக்காத போராளி என பன்முக ஆற்றலைக் கொண்டவர்தான் அயோத்திதாச பண்டிதர்.

அவரது தாத்தா கந்தப்பன், தன்னிடமிருந்த திருக்குறள் ஓலைச்சுவடிகளை எல்லீஸிடம் கொடுத்து திருக்குறளை அச்சுப் பதிப்பாகக் கொண்டுவந்ததை நினைக்கும்போது, குறளுக்கு அவர் குடும்பம் ஆற்றிய தொண்டுக்காக நாம் அனைவரும் தலைவணங்க வேண்டும்.

பெரியாரே, என் பகுத்தறிவு பிரச்சாரத்துக்கும் சீர்திருத்த கருத்துகளுக்கும் முன்னோடி அயோத்திதாச பண்டிதர்தான் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதனால், அவர் சொன்னதைத் தாண்டி நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. இந்திய நாட்டின் முன்னேற்றத்துக்கு சாதி, மதமே தடை எனச் சொன்னவர் அவர். மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கும் எவரோ அவர்தான் மனிதர் என்று முழங்கினார்.

1845 முதல் 1914 வரை வாழ்ந்த அயோத்திதாசரின் 175-ம் ஆண்டின் நினைவாக, அவரது அறிவை வணங்கும் விதமாக வடசென்னை பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடுவதில் இந்த அரசு பெருமைப்படுகிறது. புத்தரை ‘இரவு பகலற்ற ஒளி’ என்று சொன்ன அயோதித்தாசரின் சிந்தனையும் இரவு பகலற்ற ஒளியாக இந்தச் சமுதாயத்துக்குப் பயன்பட வேண்டும்,” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தங்கம், பட்டாசு, சாராயம் வியாபாரங்களை செய்வது யார்?: செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் தான் தங்கம் அதிகமாக விற்கும் என்பதனால், துலுக்கர் தங்கக் கடத்தலில் அதிகம் ஈடுபடுவர், தங்கம் அதிகம் இந்தியாவில் உள்ளே நுழையும், வியாபாரம் நடக்கும்.  திருமணங்களும் நடக்கும். இதிலும் துலுக்கரின் பங்கு அதிகமாகவே உள்ளது. கடந்த ஆண்டுகளில் தீபாவளியை வைத்து அரசியல் செய்து, அதே நேரத்தில், “கார்டலைஷேசன்” மூலம், பட்டாசு வியாபாரத்தைப் பெருக்கி, கோடிகளை அள்ளி வருகின்றனர். இதிலும் பெரும்பாலோர் துலுக்கர் என்பதை கண்டு கொள்ளலாம். “ஹோல்-சேல் / கொள்முதல் / டிஸ்ட்ரிபூஸன்” வணிகத்தை அவர்கள் தான் ஆதிக்கத்தில் வைத்துள்ளனர். பிறகு துணி-ஸ்வீட் வியாபாரங்கள் பற்றி சொல்ல வேண்டாம். இப்பொழுது, திராவிடத்துவவாதிகள் ஆவின் ஸ்வீட்டை வைத்து தமாஷா செய்கின்றனர். விற்றாலும் பணம் அவர்களுக்குத் தான் சேரும். டாஸ்மார்க் சாராயம்-சரக்கு வியாபாரம் 300-400 கோடிகள் என்று விற்கப்படும். இப்படி எல்லா விதங்களிலும் பொருட்களை வாங்குவது இந்துக்களே, ஆனால், கொள்ளை லாபம் அடிப்பது, இந்துவிரோத சக்திகளே – ஆன்–லைன் -அயல்நாட்டு கிருத்துவ வியாபாரிகள், உள்ளூர் துலுக்க வணிகர்கள், சாராய – சரக்கு உற்பத்தியாளர்கள்-வியாபாரிகள்…..  தயாராக இருக்கின்றனர்.

எச்சரிக்கைநாத்திகத்தை, இந்து தூஷணத்தை, இந்துவிரோதத்துவத்தை இப்படியெல்லாம் கூட செய்து வியாபாரப் பொருளாக்கலாம்!:

  1. தீபாவளி பட்டாசுகளுக்கு வக்காலத்து வாங்கி, இந்திகாரர்களுக்கு கடிதம் எழுதத் தெரிந்த ஸ்டாலினுக்கு, இந்து தூஷணத்தைத் தடுக்கத் தெரியாதா?
  2. ஊழலில் நாறும் ஆவின் திராவிடத்துவத்தின் செயல்பாடு தானே, அது தீபாவளிக்கு ஒவ்வாததே ஆகும்! திராவிடத்தின் தீயவலியை எதிர்ப்போம்!
  3. காஜு கத்லி, போத்தி பாக், காஜு பிஸ்தா எல்லாம் இந்தி இல்லாமல், தமிழா? இந்துவே ஏமாறாதே, அத்தகைய தீயதை வாங்காதே!
  4. ரூ 6 கோடிகளுக்கு தீபாவளிக்கு வியாபாரம் செய்து கொழிக்கும் திராவிடத்துவ முதலாளிகளே, பிறகு இந்துவிரோத வாந்தி எடுப்பது ஏன்?
  5. அதே போல, பட்டாசு கொள்முதல் வியாபாரத்தையும் திராவிடத்துவ இந்துவிரோதிகள், துலுக்கர்கள் தான் செய்கிறனர், அதை வாங்கலாமா?
  6. திராவிடரைக் கொன்றதற்கு விழா எடுக்கலாமா என்றால், நீ எப்படி ஆவின் ஸ்வீட்டுகளை விற்கிறாய், அதை தடை செய் பார்ப்போம்!
  7. அசுரன் என்றால் குடியை வெறுக்கும் திராவிடன் என்கிறாயே, பிறகு டாஸ்மார்க் கடைகளை மூடி விடுவாயா, உற்பத்தியை நிறுத்துவாயா?
  8. பூமிக்கும் பன்றிக்கும் பிள்ளை பிறக்குமா, தீபாவளிக் கதை அறிவுக்குப் பொருந்துமா என்று கேட்கிறாய், பிறகு என்ன வெங்காயம், பட்டாசு விற்பனை?
  9. இப்படியெல்லாம் கேள்விகள் எழுப்பியிருப்பதால், திராவிடத்துவ இந்து விரோதம் வெளிப்படுகிறது!
  10. இதனால், இத்தகைய தூஷணக்காரர்களிடமிருந்து எதையும் வாங்க வேண்டாம், ஏனெனில், அதிலும் ஊழல் இருக்கிறது! அவர்களுக்கும் தீபாவளி இனாம் கொடுக்க வேண்டாம்
  11. இந்துக்கள் விசயத்தில் இரட்டை வேடம் போடும் திராவிடத்துவ பூசாரிகள், பண்டாரங்கள், பரதேசிகள் நிச்சயமாக ஆபத்தானவர்கள் தான்!

© வேதபிரகாஷ்

28-10-2021


[1] தமிழ்.இந்து, பெரியார் பிறந்த தினம் இனி சமூக நீதி நாள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு, செய்திப்பிரிவு, Published : 06 Sep 2021 11:07 AM; Last Updated : 06 Sep 2021 11:07 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/713351-cm-mk-stalin-on-periyar-birthday.html

[3] தமிழ்.இந்து, அயோத்திதாச பண்டிதருக்கு வடசென்னையில் மணிமண்டபம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு, செய்திப்பிரிவு, Published : 03 Sep 2021 12:18 PM; Last Updated : 03 Sep 2021 12:18 PM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/712071-manimandapam-for-iyothee-thass.html