Archive for the ‘அமெரிக்கப் பெண்’ Category

திருவண்ணாமலையில் சந்நியாசி அமெரிக்கப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி, பெண் பதிலுக்குத் தாக்கியது – அயல்நாட்டவர் கண்காணிக்கப் படவேண்டும்! [2]

ஓகஸ்ட் 25, 2020

திருவண்ணாமலையில் சந்நியாசி அமெரிக்கப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி, பெண் பதிலுக்குத் தாக்கியது – அயல்நாட்டவர் கண்காணிக்கப் படவேண்டும்! [2]

ஆசைப் பட்ட மணிக்கண்டன் வசமாக மாட்டிக் கொண்டது: விசாரணையில், அந்த சாமியார் நாமக்கல் மாவட்டம் திருமலைபட்டி கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ்வரனின் மகன் மணிகண்டன் (41) எனத் தெரிய வந்தது[1]. சாமியார் மணிகண்டன், அமெரிக்க பெண்ணை அடிக்கடி பார்த்துள்ளார்[2]. அதாவது அப்பெண் அனுமதித்துள்ளாள் என்று தெரிகிறது. அவர், அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவரிடம் தவறாக நடக்க முயன்றார்[3]. அந்தப் பெண்ணுக்கு தற்காப்பு கலைகள் தெரிந்துள்ளதால், இருவருக்கும் நடந்த தகராறில் மணிகண்டனுக்கு தலையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம், எனப் போலீசார் தெரிவித்தனர்[4]. இந்தச் சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே திருவண்ணாமலையில் 2018-ம் ஆண்டு ரஷிய நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். அந்தச் சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.இங்கு அந்நிய நாட்டு பெண்கள், இந்தியர்களுடன் ஏன் தொடர்புகள் வைத்துக் கொள்கிறார்கள், நோக்கம் என்ன, பின்னணி என்ன என்பதையும் ஊடகங்கள் வெளியிட வேண்டும். அவர்கள் தனியாகவே வந்து தங்குகிறார்களா அல்லது உடன் மற்றவர்கள் வந்துள்ளார்களா என்று கவனிக்க வேண்டும். இந்தியர்கள் யாரும், அயல்நாடுகளில் உள்ள மற்ற மத புண்ணிய க்ஷேத்திரங்களில் இவ்வாறு தங்கி ஆராய்ச்சி செய்ய முடியுமா என்று தெரியவில்லை!

தமிழக ஊடகங்களின் வக்கிரம், திமிர் பிடித்து தலைப்பிடும் தூஷணம்: வழக்கம் போல, தமிழ் ஊடகங்கள் தங்களது பாணியில், அரைத்த மாவையே அரைத்துள்ளன. பெண் அமெரிக்கரா, ரஷ்யரா என்று கூட சரிபார்த்து செய்தி போடத் தெரியவில்லை. மற்ற செய்திகள் பெண் அமெரிக்கர் என்றால், “சமயம்” ரஷ்யர் என்கிறது[5]. “அத்துமீறிய சாமியார், கராத்தே கலையால் கதறவிட்ட ரஷ்யப் பெண்!” என்று தலைப்பிட்டு, ஜனரஞ்சகமாக செய்தி வெளியிட்டுள்ளது[6]. “தாலியுடன் சென்ற சாமியார்… நைய புடைத்த அமெரிக்க பெண்… திருவண்ணாமலை வீட்டில் நடந்த அதிர்ச்சி,” இப்படி இன்னொரு தளம்[7]. இவ்வாறு விசயம் தெரியாமல் செய்தி போடுகிறார்களா, இல்லை, நாங்கள் போடுவது தான் செய்தி, நீங்கள் படியுங்கள், உங்கள் விதி அதுதான் என்பது போல நடந்து கொள்கிறார்கள். ஆக திருவண்ணாமலை, இவர்களுக்கு கிள்ளுக்கீரையாக, கிண்டலடிக்கும் தளமாக ஆகிவிட்டது[8]. நேராகச் சென்று செய்திகளை சேகரிப்பது என்பதெல்லாம் இல்லை, மாலையில் வந்த செய்திகளைத் திரட்டி காலையில் செய்தியாக வெளியிட்டு காலம் தள்ளும் செய்தியார்கள், நிருபர்கள் உள்ளனர். எப்படி, இணைதளங்ளில் உள்ள விசயங்களை எல்லாம் திரட்டி, காபியடித்து, புத்தகங்களை எழுதுகிறாற்களோ, அதை விட மோசமாக, நாளிதழ் நிருபர்கள் இருக்கிறார்கள். காப்பியடிப்பது, கட்-அன்ட்-பேஸ்ட் செய்வது, விசயங்களைத் திருடுவது, என்பதெல்லாம் அல்வா சாப்பிடுவது போலத்தான் அத்தகைய திருட்டு எழுத்தாளர்களுக்கு இருக்கிறது.

வெளிநாட்டவரின் நடவடிக்கைகளைக் கட்டுப் படுத்துவது எப்படி? நடக்கும் நிகழ்வுகளைக் கண்காணிப்பது எப்படி?:

  1. சுமார் 10,000 வெளிநாட்டவர் சுற்றூலா என்று வருகிறார்கள். 2018ல் 9,502 வெளிநாட்டவர் வந்துள்ளனர். இவர்கள் எல்லோருமே “ஆன்மீகத்திற்கு” வந்தார்கள் என்பது தவறாகும். டெரிக்கிங் (Trekking) போர்வையில் சுற்றி வந்த 12 அயல்நாட்டவரை போலீஸார் பிடித்துள்ளனர்.
  2. திருவண்ணாமலை ஆன்மீகம் அல்லது அந்த போர்வையில் ஆராய்ச்சி செய்யும் இடமலல்ல. ஆன்மீகம் என்பது, “மந்திர-தந்திர-யந்திர” முறையில் திசைத் திரும்புகிறது.
  3. வெளிநாட்டுக் காரர்கள் அத்தகைய நோக்கங்களுடன் வந்தால், அவர்களை அனுமதிக்கக் கூடாது, அல்லது ஒரு வாரம், பத்து நாட்களில் அனுப்பி வைக்க வேண்டும்.
  4. முதலில் விசா அளிப்பவர்கள், “சுற்றுலா” என்று வந்தவர்கள், மற்ற காரியங்களில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும். இப்பொழுது தான் தப்லீக் பெயரில், நூற்றுக்கணக்கான அயல்நாட்டவர் வந்து பெரிய பிரச்சினையாகி, கொஞ்சம் அடங்கியுள்ளது. ஆகவே, இவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்டவேண்டும்.
  5. தங்களது நிலை, பணம் போன்றவற்றை வைத்துக் கொண்டு, உள்ளூர் ஆட்களை தங்களது இச்சைக்கேற்றப் படி உட்படுத்தி, பரிசோதனைகள் செய்வதை அனுமதிக்கக் கூடாது.
  6. சில இடங்களில் சர்ச்சுகள் கட்டுவது, மதம் மாற்றம் போன்ற பிரச்சினைகள், விவகாரங்கள் வெளிப்பட்டுள்ளன, படுகின்றன.
  7. இவர்களால், உண்மையில் ஆன்மீகத்தைத் தேடி வந்து, ஶ்ரீரமணர், ஶ்ரீராம்சூரத் குமார் போன்றவர்களின் சீடர்களாக, பக்தர்களாக இருந்து வருபவர்களையும் பாதிக்கும்.
  8. சிலர் திருவண்ணாமலை கிரிவலம் பகுதிகளில் இடத்தை வாங்கி, தங்குவதற்கு வீடுகளையும் கட்டிக் கொண்டுள்ளார்கள். அவர்கள் வருடத்திற்கு ஒருமுறை வருகிறார்கள், வராமல் இருக்கிறார்கள். அதனால், உள்ளூர்வாசிக்கு, “பார்த்துக் கொள்,” என்று சொல்லி சென்று விடுகின்றனர். அவர்கள் வராத நிலையில், வரமாட்டார்கள் என்று அறிந்த நிலையில், உள்ளூர் ஆட்கள் அந்த சொத்தை அபகரித்துக் கொள்கிறார்கள்.
  9. ஆனால், அயல்நாட்டினரும் விசயம் தெரிந்தவர்கள் தான், எனவே, சட்டப் படி, நடவடிக்கை எடுக்கும்போது பிரச்சினைகள் வருகின்றன.
  10. அயல்நாட்டு பயணிகள், இப்படி திருவண்ணாமலை பகுதியில், கூட்டம் கூடி, பிரச்சினைகளை உண்டாக்கினால், அமைதி குலையும், திருவண்ணாமலையின் புனிதமும் கெடும் என்பது திண்ணம்.

சுருக்கமாக, விவரங்களை முடிவுரையாகக் கொடுக்கப் படுகிறது. இந்தியாவைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அயல்நாட்டவர் வருவது என்பது, “ஒந்வே-டிராபிக்” போன்ற நிலையாக உள்ளது. இந்தியரும், பதிலுக்கு, இதே போல, அயல்நாட்டவரின் சமூகம், மதம், நம்பிக்கைகள் முதலியன ஆராயப் படவேண்டும்.

  1. திருவண்ணாமலை அக்னி க்ஷேத்திரத்தில் அயல்நாட்டுப் பெண்கள் எப்படி வந்து தங்குகிறார்கள், ஆன்மீகத்தில் ஆராய்ச்சி செய்கிறார்கள்?
  2. இதே மாதிரி இந்திய பெண்கள் அவர்களது நாட்டு புண்ணிய க்ஷேத்திரங்களில் ஆன்மீக ஆராய்ச்சி மேற்கொள்ள முடியுமா? அனுமதிக்கப் படுவார்களா?
  3. திருவண்ணா மலையில் காவி கட்டியவன் எல்லாம் சந்நியாசி, சாது, சாமியார், சித்தர் ஆகி விட முடியுமா? இப்பொழுது கருப்பு, பச்சை, நீலம் .போன்ற நிறங்களும் சேர்ந்துள்ளன.
  4. முன்பு ஶ்ரீரமணர், ஶ்ரீராம்சூரத் குமார் போன்றவர்களை தரிசிக்க வந்தவர்களின் நிலை வேறு, இப்பொழுது “ஆன்மீக சுற்றுலா” என்று வருகிறவர்களின் நிலை வேறு.
  5. பௌர்ணமி கிரிவல கூட்டம் அதிகமாக-அதிகமாக, வியாபார மயமாக்கமும் அதிகரித்துள்ளது. அறை, உணவு விலை அதிகரித்து வருகின்றது!
  6. அயல் நாட்டவருக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏன் இந்தியர்களுக்கு வருகிறது! ஆன்மீகதத்தில் உயர்ந்தவன் என்ற உணர்வு வேண்டாமோ?
  7. சினிமா பாணியில் வெள்ளைக்காரியைக் கட்டிக் கொண்டால், வாழ்க்கை உயர்ந்து விடுமா? டைவர்ஸ் செய்தால் என்னாகும்?
  8. ஆக மணிகண்டனின் கத்தி-தாலி பார்முலா, கராத்தே அமெரிக்கப் பெண்ணிடம் பலிக்க வில்லை. மான், மயில் தப்பித்து, புலி மாட்டிக் கொண்டது!
  9. திருவண்ணா மலையில், மொரீசியஸ் ஸ்டைலில் ஐந்து நட்சத்திர ஓட்டல், ரிசார்ட், ஸ்பா வசதி, குடி…..முதலியவை ஏன் அதிகரித்துள்ளன?
  10. தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று கத்தினால், பெண்களுக்குப் புரியுமா? இறைவா ரக்ஷிப்பாயாக!?

இக்கேள்விகளுக்கு எல்லோரும் பதில் சொல்லியாக வேண்டும். இந்தியரும் பதிலுக்கு ஆராய வேண்டும். ஏனெனில், இன்றைக்கு, உரையாடல், மதங்களுக்கு இடையே உரையாடல், உள்-கலாச்சாரமயமாக்கல், என்றெல்லாம் பேசி வருகிறார்கள். அந்நிலையில், நாம் இவ்விசயங்களை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

24-08-2020

இதெல்லாம் திருவண்ணாமலை ரிசார்ட் தான், மொரீசியஸ், மாலத்தீவுகள் இல்லை!


[1] விகடன், திருவண்ணாமலை: `அமெரிக்கப் பெண்ணிடம் அத்துமீறல்!’ – சாமியாரை புரட்டி எடுத்த பொதுமக்கள், ஜெ.முருகன், Published:Yesterday at 3 PM; Updated:Yesterday at 3 PM.

[2] https://www.vikatan.com/news/crime/sexual-assault-on-an-american-woman-public-attacked-the-preacher

[3] தினமலர், அமெரிக்க பெண்ணிடம் பலாத்கார முயற்சி: தி.மலையில் சாமியாருக்கு தர்ம அடி, பதிவு செய்த நாள்: ஆக 24,2020 08:25;

[4] https://m.dinamalar.com/detail.php?id=2600782

[5] சமயம், அத்துமீறிய சாமியார், கராத்தே கலையால் கதறவிட்ட ரஷ்யப் பெண்!, Akash G | Samayam Tamil, Updated: 23 Aug 2020, 03:21:00 PM.

[6] https://tamil.samayam.com/latest-news/crime/tiruvannamalai-russian-woman-attacked-a-saint-using-karate-technic-who-tried-to-rape-her/articleshow/77702641.cms

[7] டாப்.தமிழ்.நியூஸ், தாலியுடன் சென்ற சாமியார்நைய புடைத்த அமெரிக்க பெண்திருவண்ணாமலை வீட்டில் நடந்த அதிர்ச்சி, By Mathew, 24/08/2020 10:56:19 AM.

[8] https://www.toptamilnews.com/preacher-arrested-for-trying-to-sexually-assault-american-woman/

திருவண்ணாமலையில் சந்நியாசி அமெரிக்கப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி, பெண் பதிலுக்குத் தாக்கியது [1]

ஓகஸ்ட் 24, 2020

திருவண்ணாமலையில் சந்நியாசி அமெரிக்கப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி, பெண் பதிலுக்குத் தாக்கியது [1]

திருவண்ணாமலையில் ஆன்மீகம் வியாபாரம் ஆனது: திருவண்ணாமலை, ஆன்மிக நகரமாகும, ஆனால், பௌர்ணமி கிரிவலம் அதிகமாக-அதிகமாக, அங்கு மற்ற ஆன்மீகமற்ற காரியங்கள் ஆரம்பித்து விட்டன குறிப்பாக, தங்குவதற்கு இடம் என்பதற்காக, புது-புது லாட்ஜுகள், ஓட்டல்கள், ரிசார்டுகள், ஏன் ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் என்ற ரீதியில் வியாபாரம் மாற ஆரம்பித்தது. இதனால், உண்மையான, எளிமையான, சாதாரண பக்தர்களின் நிலை பாதிக்கப் பட ஆரம்பித்தது. அறைகள் ரூ.50, 100 என்ற நிலை மாறி, 500, 1000 என்று உயர்ந்து கொண்டே போனது, போய் கொண்டிருக்கிறது. டிபன், உணவு முதலியவையும் தரமும் அவ்வாறே இருக்கின்றன[1]. கற்பூரம், ஊதுவத்தி முதலியவை பெரிய வியாபாரம்[2]. பல்வேறு சித்தர்கள் வாழ்ந்த பூமியாக திருவண்ணாமலை திகழ்கிறது என்ற நிலைத் தாண்டி இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. இங்குள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யவும், சுற்றிப்பார்க்கவும் பிற மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பலர் வருகிறார்கள். கோவிலுக்கு ஏராளமான வெளிநாட்டு பக்தர்களும் வருகின்றனர். ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட பலரும், சாமியார்களும் திருவண்ணாமலைக்கு வந்து தங்கி உள்ளனர். “ஆன்மீக சுற்றுலா,” “கலாச்சார சுற்றுலா,” என்று பெயர் மாறி செயல்படும், பிக்னிக்குகள், ஆன்மீகம், பக்தி முதலியவற்றையும் தாண்டி செயல்படுகின்றன.

அமெரிக்க பெண் ஆன்மீகத்தில் ஆராய்ச்சி செய்ய வந்தது: ஶ்ரீரமணர், ஶ்ரீராம்சூரத் குமார் போன்ற மகான்களை தரிசிக்க, சந்திக்க வரும் பக்தர்களின் நிலையும், இப்பொழுது வருகின்ற பக்தர்களின் நிலையும் மாறியுள்ளன. வெளிநாட்டவர்களில் பலர் ஆன்மீகம் என்பதை விட, யோகா, தத்துவம், மந்திர-தந்திர-யந்திர முறைகள் என்று மற்றவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும், ஆராய்ச்சி செய்ய வேண்டும், ஜாலியாக பொழுது போக்க வேண்டும் என்ற முறையில், நிறைய பேர் வந்து தங்கி விடுகின்றனர். இவர்களுக்கு காசு பற்றி கவலை கிடையாது. ஆனால், அதே நேரத்தில், இந்தியர்களை சதாய்க்க, முழுமையாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த அந்நியர்கள் செயல் பட்டு வருகின்றனர். ஆதாவது காசுக்காக ஆசைப் பட்டு, இந்தியர் தமக்கு வேண்டியவற்றைக் கொண்டு வந்து கொடுப்பர், விசயங்களை சுலபமாக அறிந்து கொள்ளலாம் என்ற போக்குடன் வருகிறார்கள். இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த 31 வயது பெண் ஆசிலியா, / ரஷ்யாவைச் சேர்ந்தவர் ஆஷாத் சார்லட் (என்கிறது சமயம்), 5 மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்தார். அவர், கிரிவலப்பாதையில் அருணாச்சலாநகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார்[3]. கடந்த 8 மாதங்களாக அத்தியந்தல் அருணாச்சலவேஸ்வர் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கி இருந்தார்[4].

அப்பெண்ணை கல்யாணம் செய்து கொண்டால் பெரிய ஆள் ஆகிவிடலாம் என்று கனவு கண்ட மணிகண்டன்: அந்தப் பகுதியில் சாமியார்கள் பலரும் தங்கி உள்ளனர். அமெரிக்க பெண்ணை, நாமக்கல் மாவட்டம் திருமலைபட்டி கிராமத்தை சேர்ந்த 34 வயதான மணிகண்டன் என்ற சாமியார் ஒருவர் அடிக்கடி நேரில் சந்தித்து வந்துள்ளார். அப்போது அவர், அப்பெண்ணின் நடவடிக்கையை நோட்டமிட்டு வந்தார். தீராத ஆசையில் இருந்த அவர் அமெரிக்க பெண்ணை திருமணம் செய்து கொண்டு, அவருடன் கணவன், மனைவியாக குடும்பம் நடத்தலாம் என்றும், அவருடன் அமெரிக்கா சென்று விடலாம் என்றும் கனவில் மிதந்து வந்துள்ளார்[5]. இதனை தொடர்ந்து அமெரிக்க பெண்ணை திருமணம் செய்து கொள்ளவும், அதே நேரத்தில் அவரை அரிவாளை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கத்தில் இருந்த சாமியார், தங்கத் தாலி மற்றும் ஒரு அரிவாள் ஆகியவற்றுடன் நேற்று காலை தனியாக இருந்த அமெரிக்க பெண் வீட்டுக்கு சென்றுள்ளார்[6]. அங்கு சென்ற சாமியார் அமெரிக்க பெண்ணிடம் ஏதோ பேசி உள்ளார். அப்போது அவர், திடீரென அமெரிக்க பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது[7]. அதிர்ச்சி அடைந்த அமெரிக்க பெண், அந்தச் சாமியாரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்[8].


கராத்தே தெரிந்த அமெரிக்க பெண், அரிவாளைப் பிடுங்கி மணிகண்டனை வெட்டியது: சாமியார் வைத்திருந்த அரிவாளை பிடுங்கிய அவர், சாமியாரின் தலையில் அரிவாளால் வெட்டியதாகத் தெரிகிறது[9]. அதில் அவருக்கு தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது[10]. இருவருக்கும் இடையேயான போராட்டத்தில் அமெரிக்க பெண்ணும் காயம் அடைந்தார். கூச்சல் சத்தத்தைக் கேட்டதும், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, சாமியாரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்[11]. அவர் தப்பியோடி விடாமல் இருக்க சாமியாரின் கைகளை பின்பக்கமாகக் கட்டிப்போட்டனர்[12]. இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாமியாரை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவரின் தலையில் வெட்டுக் காயம் இருந்ததால் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தினர். இங்கும் பரஸ்பர புகார்கள் எழலா, கொடுக்கலாம், சட்டப் படி நடவடிக்கைத் தொடரலாம். ஆனால், உண்மையாக திருவண்ணாமலையில் என்ன நடக்கிறது, திடீரென்று அயல்நாட்டவர் எண்ணிக்கை ஏன் அதிகரிக்கிறது, என்பதெல்லாம் மக்களுக்குத் தெரியப் படுத்த வேண்டும்.

காவிக் கலரில் உடை அணிபவர்கள் எல்லோரும் சந்நியாசி ஆகி விட முடியுமா?: முதலில் திருவண்ணாமலையில் சந்நியாசி, சாமியார், சாது, சித்தர், பிச்சைக்காரன், வேவு பார்க்கிறவன் என்று எல்லா வகையறாக்களும் காவிக் கட்டிக் கொண்டு தான் அலைந்து வருகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.. இல்லை, பச்சை, ஊதா, கருப்பு, ஆரஞ்சு என்ற நிறங்களில் விற்கும் வேட்டிகள், அதற்கேற்றப் படி நிறங்களில் விற்கும் சட்டைகள், துண்டுகள் சகிதம் உலாவரும் அனைவரும் சந்நியாசிகள் அல்லர் என்பதயும் அறிந்து கொள்ளவேண்டும்.  இது திருவண்ணாமலை மட்டுமல்லாது, மற்ற புண்ணிய க்ஷேத்திரங்கள், கோவில்கள் முதலியவற்றிற்கும் பொருந்தும். இப்பொழுது, ஒரு பிச்சைக்காரர், அடிக்கடி வசூல் செய்து, நிதியுதவி செய்வதாக செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன.  ஆகவே, காவி அல்லது அதைப் போன்ற நிறங்களில் ஆடைகள் போடுபவர்கள் எல்லோரும் சந்நியாசி ஆகிவிட முடியாது. இன்றைய காலகட்டத்தில் கிருத்துவ-துலுக்க பாஸ்டர்கள், மௌலிகள் எல்லாம் கூட காவியுடை அணிந்து கொள்கின்றனர். மற்ற நிறங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

© வேதபிரகாஷ்

24-08-2020


[1]  ஓட்டல் அஷோக், அபிராமி போன்றவை கைமாறி, வேறு சொந்தக்காரர்களிடம் சென்று விட்டன. இதனால், சுற்றுலாவிற்காக வந்தவர்கள் சாப்பிட்டுச் சென்று விடுவர், அதனால், கண்டுகொள்ள வேண்டாம் என்ற ரீதியில் உணவு தயாரிப்பு இருக்கிறது. தரம் குறைந்து விட்டது. விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.

[2]  இதில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்துக்கள் அல்லர் என்பது, உக்கியமான விசயம். இதே போன்று, லாட்ஜிங் எனும்போது, முன்னர் உள்ளூர் பணக்காரர்கள், சொந்தக்காரர்களாக இருந்தனர், ஆனால், இப்பொழுது, இந்துக்கள் அல்லாதவர்களின் தாக்கம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

[3] தினச்சுவடு, அமெரிக்க பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த சாமியார்.! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்.!, By manikandan | Published: Aug 23, 2020 05:38 PM.

[4] https://dinasuvadu.com/thiruvannamalai-samiyar-attempt-rape-to-usa-women

[5] தினத்தந்தி, திருவண்ணாமலையில், அமெரிக்க பெண்ணை வீடுபுகுந்து பலாத்காரம் செய்ய முயன்ற சாமியார்பொதுமக்கள் திரண்டு கை, கால்களை கட்டி வைத்து தாக்கியதால் பரபரப்பு, பதிவு: ஆகஸ்ட் 24, 2020 04:21 AM

[6] https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/08/24042135/In-Thiruvannamalai-the-American-woman-The-pastor-who.vpf

[7] தமிழ்.ஒன்.இந்தியா, அமெரிக்க பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சிதர்ம அடிவாங்கிய திருவண்ணாமலை சாமியார் கைது, By Mathivanan Maran | Published: Sunday, August 23, 2020, 21:09 [IST]

[8] https://tamil.oneindia.com/news/thiruvannamalai/thiruvannamalai-sadhu-arrested-for-rape-attempt-395434.html

[9] தமிழ்.நியூஸ்.18, வெளிநாட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிதிருவண்ணாமலை ஆசாமிக்கு தர்ம அடி, LAST UPDATED: AUGUST 23, 2020, 5:39 PM IST.

[10] https://tamil.news18.com/news/tamil-nadu/sadhu-attempts-to-rape-american-woman-in-thiruvannamalai-riz-336341.html

[11] மாலைமலர், அமெரிக்க பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சாமியார்பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு, பதிவு: ஆகஸ்ட் 24, 2020 08:23 IST

[12] https://www.maalaimalar.com/news/district/2020/08/24082306/1812249/priest-tried-to-harassment-american-woman-public-attacked.vpf