Posts Tagged ‘கிறிஸ்துவ மேடை’

திராவிட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், ஸ்டாலினை ஏசுவாக்கிய படலம், உதயநிதியின் நான் கிறிஸ்துவன் பிரகடனம், பெரியாரிஸ அல்லேலூயா கோஷங்கள்! (3)

திசெம்பர் 23, 2022

திராவிட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், ஸ்டாலினை ஏசுவாக்கிய படலம், உதயநிதியின் நான் கிறிஸ்துவன் பிரகடனம், பெரியாரிஸ அல்லேலூயா கோஷங்கள்! (3)

Udhyanidhi declared that he is a Christian, as he is married to a woman who is a Christian..

He was reportedly blessed by a priest when he contested for election inside a Triplicane church, Chennai during 2021

The Tamil press cutting mentioning the details……….a special prayer was also conducted…….

Then, it has become news started appearing in all other media in different languages.

22-12-2022 – உதயநிதிஇன்னும் சொல்ல போனால் நானும் கிறிஸ்தவன் தான். கிறிஸ்தவன் என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்: அப்போது பேசிய அவர், “திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன? சொல்றேன் கேளுங்க.. ஒரு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்அல்லேலுயாஎன சொல்லி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் எப்போதுமே மாலையும் கழுத்துடன் தான் இருப்பார் ஆனால் அவர் கிறிஸ்தவ நிகழ்ச்சிக்கும் செல்வார். இஸ்லாமிய நிகழ்ச்சிகளுக்கும் செல்வார். இதுதான் சமூக நிதி ஆட்சி. இதுதான் பெரியார், கலைஞர் கற்றுக்கொடுத்தது. அந்த ஆட்சியைதான் முதலமைச்சர் மு..ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார். இன்னும் சொல்ல போனால் நானும் கிறிஸ்தவன் தான்[1]. கிறிஸ்தவன் என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்[2]. சேகர்பாபு  அல்லேலுயானு சொல்றாரு. உதயநிதி ஸ்டாலின் போய்ட்டு கிறிஸ்தவனு சொல்றாருனு இன்று எல்லா சங்கிகளுக்கும் எரியும்[3]. நான் எழும்பூரில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில்தான் படித்தேன்[4]. லயோலா கல்லூரியில்தான் படித்தேன்[5]. நான் காதலித்து மனந்தது ஒரு கிறிஸ்தவ பெண்[6]. கடந்த 4 நாட்களாக பத்திரிக்கையாளர்களுக்கு நான் தான் தீனியாகி கொண்டிருக்கிறேன். முதலில் அமைச்சர் பொறுப்பு கொடுக்கும்போது எனக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஆனால் என்னை வழிநடத்த அமைச்சர் சேகர்பாபு போன்ற பல அண்ணன்கள் அமைச்சரவையில் இருப்பதால் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்,” என தெரிவித்தார்.

தீவிரவாதம்-பயங்கரவாதங்களை மறைக்க விழாக்களா?: யார் வேண்டுமானாலும், என்ன மதத்தையாவது பின் பற்றலாம், அதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை, கவலைப் படுவதில்லை என்றே சொல்லலாம். முகலாயர்கள், முஸ்லிம்கள், துலுக்கர் என்று கோவில்களை இடித்து, இதுக்களின் வழிபாடுகளில் இடைஞ்சல் செய்த வரை அவர்களை இந்துக்கள் கண்டுகொள்ளவில்லை எனலாம். அவர்களை கொள்லைக் காரர்கள், கொலைக்காரர்கள், கொடியவர்கள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று தான் நினைத்துக் கொண்டார்கள், பிறகு எச்சரிக்கையாகில் கோவில்களை மாற்றிக் கட்டிக் கொண்டார்கள். கோவாவில் ஆரம்பித்த கிருத்துவர்களின் அதை விட மோசமான குரூரங்கள், காலிகட்டிலும் தொடர்ந்தது. பிறகு ஆங்கிலேயர் காலத்தில் கொஞ்சம் குறைந்து அளவில், ஆட்சி-அதிகாரத்துடன் செயல்பட்டு வந்தது. சுதந்திரத்திற்கு பிறகு, அதே கோஷ்டிகள், பலவித பேனர்களில், கட்சிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. செக்யூலரிஸம் அவர்களுக்கு, ஒரு பாதுகாப்பான கவ்சம் போல அமைந்ஹு விட்டது. இப்பொழுது, இந்துவிரோத திமுக அத்தகைய திட்டத்துடன், சூழ்ச்சிகளுடன் செயல்பட்டு வருகிறது. அது 1967-1970களிலிருந்து நடந்து வந்தாலும், இப்பொழுது அதிகமாகி விட்டது. கோவை கார் குண்டு, மங்களூரு குக்கர்-வெடிகுண்டு எல்லாம் மறந்தாகி விட்டது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தான் பெரிதாகி விட்டது.

உதயநிதிநான் கிறிஸ்துவன் பேச்சுஅலசல்; செக்யூலரிஸ நாட்டின், மாநில அமைச்சர், முதலமைச்சர், எம்பி, எம்.எல்.ஏ எல்லாம் எந்த அளவுக்கு தங்களது பேச்சை பேச முடியும். அவர்களுக்கு வரையறை, கட்டுப்பாடு உண்டா-இல்லையா என்று அலசவேண்டியுள்ளது:

1. உதயநிதி- இன்னும் சொல்ல போனால் நானும் கிறிஸ்தவன் தான் . கிறிஸ்தவன் என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்…..

2. உதயநிதி – நான் காதலித்து மனந்தது ஒரு கிறிஸ்தவ பெண்……உதயநிதி ஸ்டாலின் போய்ட்டு கிறிஸ்தவனு சொல்றாருனு இன்று எல்லா சங்கிகளுக்கும் எரியும்……

3. அதெல்லாம் சரிதான், ஆனால், இந்துவிரோதமாக இருப்பதில் தான் உங்களது திராவிடத்துவ முகமுடி கிழிகிறது. இந்து தூஷணம் மெய்ப்பிக்கிறது…

4. ஒரு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அல்லேலுயா என சொல்லி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தால் அது போலித்தனமே, செக்யூலரிஸம் இல்லை!

5. அவர் எப்போதுமே மாலையும் கழுத்துடன் தான் இருப்பார் ஆனால் அவர் கிறிஸ்தவ நிகழ்ச்சிக்கும் செல்வார். இஸ்லாமிய நிகழ்ச்சிகளுக்கும் செல்வார் என்றா, அதுதான் சமூக நிதி ஆட்சி ஆகும்..

6. உதயநிதி தைரியமாக நான் கிறிஸ்தவன் என்று அறிவித்தது போல, அந்த பிரியாவும் செய்வாரா? பெரியார் வழி பின்பற்றுவாரா?

7. பெட்ரென்ட் ரஸல் – நான் ஏன் கிறிஸ்தவன் இல்லை; உதயநிதி – நான் ஒரு கிறிஸ்தவன்;

இது பகுத்தறிவா, பெரியாரிஸமா, திருவிடத்துவமா, எது?

8. பெரியார் சுயமரியாதை பிரச்சார கழகம் அதே போல குறும் புத்தகம் வெளியிட தைரியம் உண்டா? திராவிட ஆராய்ச்சி மையம் கவனிக்குமா?

9. இங்கு ஒரு இந்து போலி வந்து அரசியல் பேச மாட்டேன் என்று, பேசியிருக்கிறது.

அது போல, கிறிஸ்த்துவ-முகமதிய மாடல்கள் வருவதில்லையே?

10. ஆக, நாத்திக + பெரியாரிஸ + முகமதிய + கிறிஸ்துவ + கம்யூனிஸ + திராவிடத்துவ + மற்ற வகையாறாகள் = இந்துவிரோதம் என்றாகிறது!

11. திராவிட மாடல் ஆட்சி என்று, திராவிட ஸ்டாக் என்றும் சொல்லிக் கொள்ளும் இந்த வகைறாக்கள் செக்யூலரிஸ நாட்டில் மாநில அமைச்சராக இருப்பது விஷேசம் தான்!

கிருத்துவன், துலுக்கன் தனது மதங்களைப் போற்றும் போது, “சைவன்என்று சொல்லிக் கொண்டு, எப்படி இந்து மதத்தை தூஷிப்பான்?: துலுக்கரும், கிருத்துவரும் எத்தனை கோவில்களை இடித்தனர் என்பது தெரிந்த விசயம்! திராவிட நாத்திக இந்து-விரோத ஆட்சியில் எத்தனை கோவில்கள் சிதிலமடைந்தன, சிலைகள்-விக்கிரங்கள் களவாடப் பட்டன என்பதும் தெரியும். பிறகு இந்த பட்டை-கொட்டை-காவிகள் ஏன் அத்தகைய விழாக்களில் கலந்து கொள்கின்றனர்?  இவர்கள் உண்மையில் இந்துக்களா, சைவர்களா, வேடதாரிகளா, யார்? இத்தகைய கேள்விகள் எழத்தான் செய்கின்றன. வேண்டுமென்றே, இத்தகையோரை ஏற்பாடு செய்து, கூட்டி வந்து, பேச வைத்துள்ளனர் என்று தெரிகிறது. கிருத்துவன் கிருத்துவனாக பேசி, தன் மதத்தைப் போற்றினான்/, துலுக்கனும் அவ்வாறே தனது மதத்தை விட்டுக் கொடுக்கவில்லை. ஆனால், “சைவர்” என்று சொல்லிக் கொண்டு, சிலர் இவ்வாறு சரித்திரம், மதம், மற்றும் எந்த ஆதாரங்களும் இல்லாமல் பேசியிருப்பது, திட்டமிட்ட செயல் என்றேயாகிறது. ஒரு உண்மையான “சைவனாக,” இருந்தால் கூட, இவ்வாறு மானம்-ரோசம்-சூடு-சொரணை இல்லாமல் பேசியிருக்க மாட்டான். ஆக, இந்துக்கள் அடிமையாக இருக்கத் தயாராகிறான் என்றே, இதைக் காட்டுகிறது.

கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் கெட்ட எண்ணங்கள் எதனைக் காட்டுகிறது?: “கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம்,” என்ற பெயரை வைத்துக் கொண்டு, அநாகரிகமாக, கீழ்த்தரமாக, முறையற்ற விதங்களில் எப்படி கிருத்துவ-துலுக்க மதத் தலைவர்கள், இந்து விரோத பேச்சுகளை ஊக்குவித்தார்கள்? பொறுப்புள்ள தலைவராக இருந்திருந்தால், ஸ்டாலின், அவ்வாறு பொறுத்திருப்பாரா? பிறகு, செக்யூலரிஸ அளவுகோலை பயன்படுத்தினாலும், தமிழகத்தை ஆளத் தகுதியற்றவராகிறாரே?  சிறுபான்மையினருக்கு, இதெல்லாம் செய்யப் பட்டது, என்று பட்டியல் இடும் ஸ்டாலின், இந்துக்களுக்கு என்ன செய்யப் பட்டது என்று சொல்ல முடியவில்லையே. கடந்த 70 ஆண்டுகளில், கோவில்களைக் கொள்ளையடித்தது, சிலைகள்-விக்கிரங்களைத் திருடி விற்றது, மடங்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தது, பட்டா போட்டு சொந்தமாக்கிக் கொண்டது, விற்றது என்று தான் இன்று வரை நடந்து வருகிறது. அந்நிலையில், திராவிடக் கட்சிகளுக்கு, ஆட்சிக்கு வருவது அல்லது ஆசைப் படுவதே, கேடுகெட்ட செயலாகிறது.

பாரபட்சமிக்க, அரசியல் நிகழ்சியாக இருந்தது: இனிகோ இருதயராஜ் தனது பேஸ்புக்கில் இந்த விழாவைப் பற்றிய விவரங்களைக் கொடுத்துள்ளார். புகைப்படங்களையும் போட்டுள்ளார். மேற்குறிப்பிட்ட முக்கிய பிரமுகர்களை நேரில் சென்று, பொன்னாடைப் போர்த்தி, அழப்பிதழ் கொடுதது, வரவேற்றப் புகைப்படங்களையும் போட்டுள்ளார். இந்த அளவுக்கு, விழா நடத்தவும், நிதி இருப்பதும் தெரிகிறது. கத்தோலிக்க சபையின் முழு ஆதரவுடன் நடைபெறுவதும் தெரிகிறது. ஆகவே, கலந்து கொண்ட பேச்சாளர்களுக்கு, பண முடிப்பு, வந்து போக செலவு முதலியவை கொடுப்பதற்கு, எந்த பிரச்சினயும் இல்லை. உண்மையிலேயே, அவர்கள் “நல்லெண்ணத்துடன்” விழா நடத்தினால், மற்றவர்களையும் அழைத்திருலாம். ஆனால், ஒரே நாளில், அதிமுக மற்றும் திமுக தலைவர்கள் தனித்தனியாக, கிறிஸ்துமஸ் விழாக்களில் கலந்து கொண்டதே, இது அரசியமாக்கப் பட்ட நிலையை வெளிக்காட்டுகிறது.

© வேதபிரகாஷ்

22-12-2022


[1] தினத்தந்தி, நானும் கிறிஸ்தவன் தான்” “இத சொன்ன அவங்களுக்கு எரியும்“-உதயநிதி பரபரப்பு பேச்சு, By தந்தி டிவி, 22 டிசம்பர் 2022 9:32 PM.

[2] https://www.thanthitv.com/latest-news/dmk-minister-udhayanidhistalin-speech-157328

[3] தினத்தந்தி, நானும் கிறிஸ்தவன் தான்“.. “இத சொன்னா அவங்களுக்கு எரியும்“.. உதயநிதி பரபரப்பு பேச்சு, தினத்தந்தி டிசம்பர் 22, 11:17 pm (Updated: டிசம்பர் 22, 11:21 pm)

[4] https://www.dailythanthi.com/News/State/i-am-also-a-christian-udhayanidhi-sensational-speech-863391

[5] டாப்.தமிழ்.நியூஸ், நானும் கிறிஸ்தவன் தான்உதயநிதி ஸ்டாலின், By AISHWARYA G Thu, 22 Dec 202210:10:52 PM.

[6] https://www.toptamilnews.com/thamizhagam/Udhayanithistalin-press-meet/cid9527250.htm

திராவிட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், ஸ்டாலினை ஏசுவாக்கிய படலம், நான் கிறிஸ்துவன் பிரகடனம், பெரியாரிஸ அல்லேலூயா கோஷங்கள்! (2)

திசெம்பர் 23, 2022

திராவிட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், ஸ்டாலினை ஏசுவாக்கிய படலம், நான் கிறிஸ்துவன் பிரகடனம், பெரியாரிஸ அல்லேலூயா கோஷங்கள்! (2)

சூரியனார் கோயில் ஆதினம் ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் பேசியது: தொடர்ந்து, சூரியனார் கோயில் ஆதினம் ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் பேசிய போது, முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அனைவரிடமும் சிரிப்பை ஆழ்த்தியது. அவர் பேசியதாவது: “1967ல் காந்தி தந்த அறிஞர் அண்ணா வழியில், திருவாரூர் தந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வழியிலும், கோபாலபுரம் தந்த எங்கள் குமாரர் மக்கள் தளபதி மு..ஸ்டாலின் வழியிலும் தான் என்றென்றும் தமிழகம் செல்லும். இந்த சபையில் நீங்கள் எல்லாருமே பயப்படுகிறீர்கள். சிறுபான்மை என்று கூறினீர்கள். நாம் அனைவருமே பெரும்பான்மை தான். நம் எல்லாருமே இனத்தில் தமிழர்கள், மொழியில் தமிழ் பேசுகிறோம், அப்படியானால் நாம் எல்லாரும் ஒன்றுதானே. அப்போது ஏன் நாம் பயப்பட வேண்டும்……”, இப்படி சிரித்து நக்கலாக பேசியதும், மேடையில் உள்ளவர் ஸ்டாலின் உட்பட கைதட்டி சிரித்ததும், அரங்கத்தில் உட்கார்ந்திருந்த பாதிரிகள் கைதட்டி சிரித்து கரகோஷம் இட்டதும் கவனிக்கலாம்.

அரசியல் பேசக் கூடது என்று அரசியல் பேசியசைவ சாமியார்:  எந்த பாசிச சக்தியும் நம்மை வீழ்த்த முடியாது. நான் அரசியல் பேசக்கூடாது, இருந்தாலும் வட இந்தியாவில் ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா எனும் கொள்கை இருந்தது. ஆனால் நம் கேரளத்தில் கம்யூனிஸ்டும், தமிழகத்தில் திராவிட கழகமும் இருந்ததால் அவர்களால் ஒருபோதும் உள்ளே நுழைய அனுமதி கிடைக்கவில்லை. ஓட்டுரிமை உங்கள் கையில் இருக்கும் போது ஏன் பயப்பட வேண்டும். நமக்கு தெரிந்தது இரண்டு சின்னம் தான். ஒருவர் இங்கிருக்கிறார். இன்னொன்று நான் சொல்லக்கூடாது. இவர்களோடு முதுகில் ஏறிதான் அவர்கள் பயணம் பண்ண முடியும். யாராக இருந்தாலும் எதிரி இருந்தால் தான் நாம் வளர முடியும், இல்லையெனில் நாம் வளர முடியாது. மதமாற்றத்துக்கு நீங்கள் எங்கும் செல்ல வேண்டாம். உங்கள் வழிபாடுகளை சிறப்பாக செய்யுங்கள், அவர்கள் தானாகவே வருவார்கள்,” எனக் கூறினார்[1]. ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் பேசிய வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது[2]. அவரது இந்தப் பேச்சுக்கு திமுகவினர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மதமாற்றத்தை ஊக்குவிப்பது போன்ற அவரது பேச்சு இருப்பதாக பல்வேறு இந்து அமைப்பினர் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

கம்யூனிஸமும், பெரியாரிஸமும் இந்துவிரோதம் தான்: “ஆனால் நம் கேரளத்தில் கம்யூனிஸ்டும், தமிழகத்தில் திராவிட கழகமும் இருந்ததால் அவர்களால் ஒருபோதும் உள்ளே நுழைய அனுமதி கிடைக்கவில்லை,” என்றதையும் கவனிக்க வேண்டும். கம்யூனிஸமும், நாத்திகமும் “ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா” வைணவத்தை எனும் கொள்கை தமிழகத்தில் நுழைய “அனுமதி கிடைக்கவில்லை,” என்றால், அவர்களா அனுமதி கொடுக்கிறார்கள் என்று கேள்வி எழுகின்றது. பிறகு, பலவித தீவிரவாத-பயங்கடவாத-தேசவிரோத கோஷ்டிகள் இவர்கள் அனுஅதித்து தான் உள்ளே வந்தார்கள் போலும். “ராஜிவ் காந்தி கொலை,’ இங்குதான் நடந்துள்ளது என்பதனை அவர்கள் மறைக்க முடியாது.

இந்துபோல ஒருவரை கூட்டி வந்து பேச வைத்தல்: வருடா வருடம் ஏதோ ஒரு “சைவ” சாமியாரை, பிரதிநிதித்துவப் படுத்தும் நிலையில், ஒப்புக்குக் கூட்டி வருகின்றனர். அப்படி சென்றவர், “இந்துவாக” இல்லாமல், தெரிந்தே, இந்துவிரோத கூட்டத்தில் பங்கேற்றி, இந்துதூஷண மேடையில் பேசியிருப்பது, அவர்களின் துரோகத்தை வெளிக்காட்டுகிறது.

  1. மேலமங்களம் பாலயோகி மடத்தின் தலைவராக இருக்கும் இந்த பாலயோகி தம்பிரான்
  2. கலையரசி நடராஜன்
  3. சூரியனார் கோயில் ஆதினம் ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள்

இவர்கள் தான் சமீபத்தில் பேசி வந்துள்ளனர். இவர்களை நிச்சயமாக எல்லா இந்துக்களும் அறியமாட்டார்கள், இவர்கள் பேசியதையும் அறியமாட்டார்கள். கிருத்துவர்கள், முகமதியர்கள் என்றும் கலந்து கொன்டு பேசியுள்லார்கள். ஆனால், அவர்கள் தங்களது மதத்தை விட்டுக் கொடுக்காமல் தான் பேசியுள்ளனர். எல்லா பிரிவினர்களும், இவ்விசயத்தில் ஒன்றாக இருக்கும் பொழுது, “இந்து” என்று சொல்லிக் கொள்பவர் தாம், இப்படி விலை போகின்றனர் அல்லது ஏதோ ஒரு ஆதாயத்திற்காக, சென்று பேசி விட்டு வருகிறனர். இல்லை, அவ்வாறு பேச வைக்கப் பட்டுள்ளனர் எனலாம்.

ஸ்டாலின் செக்யூலரிஸ்ட் அல்ல: ஸ்டாலின் தமிழக முதலமைச்சர், செக்யூலரிஸம் பின்பற்றுவதாக இருந்தால், ஒன்று மதசம்பந்தப்பட்ட விவகாரங்களிலிருந்து முழுமையாக விலகி இருக்க வேண்டும் அல்லது எல்லா மதநம்பிக்கையாளர்களையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும், நடத்தப் பட வேண்டும். ஆனால், ஸ்டாலின் அவ்வாறில்லை, அதாவது முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின், பொறுப்பற்ற முறையில், இந்துவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து, முஸ்லிம்-கிருத்துவ பண்டிகை-விழாக்களில் கலந்து கொள்வது, அதே நேரத்தில் இந்து பண்டிகைகளை விமர்சிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருவதை மக்கள் கவனித்து வருகிறார்கள். சட்டப் படியும்,, சமமாக நடப்பதில்லை, ம்மேடையிலும் அந்த “பட்டை-கொட்டை-வீபூதி’ பூசிய நபர் பேசியதை ரசித்து, கைதட்டி, ஆராவாரம் செய்து ரசித்த விதம் நாடகம் போன்றே இருந்தது. ஆக, கதை, வசனம், எல்லாம் தயாரித்து அரங்கேற்றப் பட்ட விதம் தான் தெரிந்தது. அந்நிலையில் தான், உதயநிதியின், “நானும் கிறிஸ்துவன் தான்,” என்ற பேச்சும் வருகிறது.

22-12-2022 – உதயநிதிஇன்னும் சொல்ல போனால் நானும் கிறிஸ்தவன் தான்[3]. கிறிஸ்தவன் என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்: 20-12-2022 அன்று அந்நிகழ்ச்சி நடந்து முடிந்த நிலையில், 22-12-2022 அன்று இன்னொரு “கிறிஸ்துமஸ் கொண்டாட விழா” நடக்கிறது. அதை திமுக ஏரற்பாடு செய்ததாகத் தெரிகிறது. திமுக சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில், மண்ணடியில் உள்ள டான் பாஸ்கோ தொடக்க பள்ளி மைதானத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது[4]. சென்னை துறைமுகம் தொகுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டனர்[5]. 2,000 குடும்பங்களுக்கு புத்தாடைகள், மளிகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கினார்[6]. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர் பாபு, மற்றும் மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்[7]. சேகர் பாபு[8], “எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்…, எல்லோருக்கும் எல்லாம் என்ற ஆட்சியில் யாரும் ஓரங்கட்டப் பட்டவர்கள் இல்லை… ஸ்டாலினை நோக்கி ஓரடி முன் வைத்தால், நூறடி பாய்ந்து வந்து நலன் திட்டங்கள் செய்வார்……..எல்லோரும் சொல்லுங்கள் அல்லேலூயா, உரக்க சொல்லுங்கள் அல்லேலூயா …..அல்லேலூயா….” என்று கத்திப் பேசியது தமாஷாக இருந்தது[9]. அது கிறிஸ்துவ போதகர்களையும் மிஞ்சுவதாக இருந்தது.

© வேதபிரகாஷ்

22-12-2022


[1] அப்டேட்.நியூஸ்.360.காம், மதமாற்றம் செய்ய நீங்க எங்கும் செல்ல வேண்டாம்’… கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் சாமியார் சர்ச்சை பேச்சு.. சிரித்தபடி கவனித்த CM ஸ்டாலின்!, Author: Babu Lakshmanan, 22 December 2022, 12:49 pm

[2] https://www.updatenews360.com/trending/priest-sri-mahalinga-thesiga-paramachariya-swamy-controversy-speech-front-of-cm-stalin-2212222/

[3] தினத்தந்தி, நானும் கிறிஸ்தவன் தான்” “இத சொன்ன அவங்களுக்கு எரியும்“-உதயநிதி பரபரப்பு பேச்சு, By தந்தி டிவி, 22 டிசம்பர் 2022 9:32 PM.

[4] நியூஸ்.7.தமிழ், நானும் கிறிஸ்துவன் என சொல்லி கொள்வதில் பெருமை கொள்கிறேன்’- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், by G SaravanaKumar, December 22, 2022

[5] https://news7tamil.live/i-am-also-proud-to-say-that-i-am-a-christian-minister-udayanidhi-stalin.html

[6] தமிழ்.ஒன்.இந்தியா, நானும் ஒரு கிறிஸ்துவன் தான்..” கிறிஸ்துமஸ் விழாவில் பட்டுனு சொன்ன அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், By Vigneshkumar, Published: Thursday, December 22, 2022, 23:51 [IST]

[7] https://tamil.oneindia.com/news/chennai/even-i-m-also-a-christian-says-dmk-minister-udhayanidhi-stalin-in-christmas-function-490878.html

[8] அல்லேலூயா சொன்ன அமைச்சர் Sekar Babu | Mayor Priya Rajan | Christmas Celebration | Udhayanidhi Stalin; https://www.youtube.com/watch?v=7T7fvfRgJ5A

[9] மீடியான், அல்லேலூயா அல்லேலூயாசிப ரிப ரீட்டாசேகர்பாபு ஜெபம்!, Kathiravan Mediyaan News , 23-12-2022. https://mediyaan.com/sekar-babu/

திராவிட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், நான் கிறிஸ்துவன் பிரகடனம், பெரியாரிஸ அல்லேலூயா கோஷங்கள்! (1)

திசெம்பர் 23, 2022

திராவிட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், நான் கிறிஸ்துவன் பிரகடனம், பெரியாரிஸ அல்லேலூயா கோஷங்கள்! (1)

இனிகோ இருதயராஜ் லயோலா கல்லூரியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் அடத்திய கிறிஸ்துமஸ் விழா: சென்னை லயோலா கல்லூரியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது[1]. இனிகோ இருதயராஜ் 13 ஆண்டு காலமாக ஆண்டுதோறும் அவர் நடத்திக் கொண்டிருக்கிறார்[2].  இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்[3]. நிகழ்ச்சியில் பேசிய அவர், இயேசு பிரானின் போதனைகளை பின்பற்றி நடந்தால் உலகம் அமைதியாக திகழும் என்றார்[4]. விழாவில் கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டி மேடையில் இருந்த கிறிஸ்தவ பேராயர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுக்கு ஊட்டி மகிழ்ந்தார்[5]. மக்களிடையே வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் ஒருதாய் மக்களாக கருதும் அன்பு உள்ளம் கொண்டதாக அரசுகள் இயங்க வேண்டும். திராவிட முன்னேற்றகழக அரசு அப்படித்தான் இயங்கி வருகிறது, இவ்வாறு அவர் பேசினார்[6]. சென்ற முறை கலையரசி நடராஜன் போன்றோரை வரவழைத்துப் பேச விட்டது போல, இம்முறை, சூரியனார் கோயில் ஆதினம் ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் என்று ஒரு சாமியாரை வரவழைத்து பேச வைத்துள்ளார்கள். அவரு தமது வேலையைக் கச்சிதமாக செய்து முடித்துள்ளார். ஆக, ஒவ்வொரு முறையும், இந்த கிருத்துவ மேடை, விழா மற்றும் அமைப்பு, இந்து விரோதம், இந்து எதிர்ப்ப்ய், காழ்ப்பு-தூஷணம் போன்றவற்றில் தான் ஈடுபட்டு வருகிறார்கள்.

20-12-2022- முதலமைச்சர் ஸ்டாலினின் உரை: அவரது போதனைகளின்படி அனைவரிடமும் அன்பு செலுத்தும் அரசு திமுக அரசு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்[7]. அனைவரையும் ஒருதாய் மக்களாக கருதி அன்பு செலுத்த வேண்டும் என்பதே திராவிட மாடல் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்[8]. சிறுபான்மையினர் நலனிற்காக திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுபான்மையினர் நல ஆணையத்தை அமைத்தவர் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி என சுட்டிக்காட்டினார். சிறுபான்மையினர் மீது எப்போது அக்கறை கொண்ட அரசு திமுக அரசு என்பதை அனைவரும் அறிவார்கள் எனவும் முதலமைச்சர் கூறினார்[9]. தமது தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமைந்த பிறகு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இவ்வளவு பணிகளை, சாதனைகளை தமது அரசு நிறைவேற்றியுள்ளதா என தனக்கே ஆச்சர்யமாக உள்ளதாக கூறினார்[10]. சிறுபான்மையினர் மீது எப்போது அக்கறை கொண்ட அரசு திமுக அரசு எனும்போது, பெரும்பான்மையினரை தூஷித்து வருவது எப்படி என்றுதான் திராவிட மாடலில் சொல்லவில்லை.

இவ்வளவு பணிகளை, சாதனைகளை தமது அரசு நிறைவேற்றியுள்ளதா என தனக்கே ஆச்சர்யமாக உள்ளது: “நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இவ்வளவு பணிகளை, சாதனைகளை தமது அரசு நிறைவேற்றியுள்ளதா என தனக்கே ஆச்சர்யமாக உள்ளதாக கூறினார்,” என்றது, ஏதோ அதிசயத்தை நிகழ்த்தியது காட்டியுள்ளது போல இருக்கிறது. அதாவது, பரத நாட்டியம் ஆடும் பொழுது, இவரையே “ஏசு கிறிஸ்து” ரேஞ்சில் தூக்கிப் பிடித்து, போற்ரிப் பாடியதை வைத்துப் பார்க்கும் பொழுது, ஸ்டாலினை அந்த வகையில் போற்றி புகழ்ந்துள்ளது தெரிகிறது. ஏசு அதிசயம் செய்தார் போன்ற கதையை, இனி ஸ்டாலினுக்கும் புனைய ஆரம்பித்து விடுவார்கள் போலும். மகளிருக்கு இலவச பேருந்து பயணம், கொரோனா காலத்தில் கல்வியை விட்டுச்சென்ற 2 லட்சம் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு அழைத்து வந்தது, மாற்று திறனாளிகளுக்கு சென்னை மெரினா கடற்கரையில் சிறப்பு நடை பாதை அமைத்தது போன்ற சாதனைகள்தான் திமுக அரசின் அடையாளம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால், அந்த “சிறப்பு நடை பாதை” என்னவாயிற்று என்பதை மறந்து விட்டது தெரிகிறது.

பிற மதத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்று சமத்துவ விழாவாக கிறிஸ்துமஸ் விழா: சிறுபான்மையினர் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை ஒன்றிய அரசால் நிறுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டிய முதலமைச்சர்,  அந்த உதவித் தொகை கிடைப்பதற்கு தமிழக அரசு துணை நிற்கும் என்று உறுதியளித்தார். கிறிஸ்தவ மதத்தினர் மட்டுமல்லாது பிற மதத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்று சமத்துவ விழாவாக கிறிஸ்துமஸ் விழா நடத்தப்பட்டதற்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்[11].  “இங்கே நீங்கள் பார்க்கிறீர்கள். சூரியநயினார் கோவில் சிவகர யோகிகள் மடத்தின் – மகாலிங்க தேசிக பரமாச்சார்யார் சுவாமிகள் அவர்களும், ஆத்தூர் இசுலாமிய கல்விக்கூடத்தைச் சேர்ந்த முகமது இம்ரானுல்லாஹ் பாகவி அவர்களும் கலந்து கொண்டுள்ளனர். எனவே இது அன்பின் பெருவிழாவாக நடந்து கொண்டு இருக்கிறது. இதுவே சாட்சி”. இதுபோன்ற விழாக்களில் பங்கேற்பது தமது கடமை என்றும் அவர் கூறினார்[12].  விழாவில் கிறிஸ்துமஸ் குடிலை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நலத் திட்ட உதவிகளையும் வழங்கினார். கிறிஸ்துமஸ் விழாவில் பரதநாட்டியம் முதல்வர் ஸ்டாலின் முன் ஆடிய மாணவிகள் அசத்தினர்[13] என்கிறது, ஆனால், இந்த கூத்தை இந்துக்கள் யாரும் நம்புவதாக இல்லை. நிச்சயமாக, தங்களுக்கு எதிராக, இவ்வாறு கூட்டத்தைக் கூட்டியிருக்கின்றனர் என்பது தான் புலப்ப் படுகிறது.

பரத நாட்டியம் ஆடிபாடி போற்றியதுசாமியார் பேசியது: தினத்தந்தி, “தீந்தமிழே, முதல்வரே, தமிழகத்தின் முதல்வரே, தமிழகத்தின் தங்கத் தளபதியே, தமிழக மண்ணில், நிலத்தில் அற்புதம் தினைத்து அடித்தளம் அமைத்து விடியல் நாயரே, வாழ்த்துகிறோம், உம்மை வணங்குகிறோம், வரவேற்கிறோம் முதலமைச்சரே”,.என்று பாடி ஆடியது வியப்பாக இருந்தது[14]. முன்பு, கபாலீஸ்வரர் கோவிலில், கருணாநிதிக்கு, “போற்றி,” சொன்னது போல, இங்கு, ஸ்டாலினுக்கு பாடி-ஆடியுள்ளனர். பரத நாட்டியத்தை ஏர்கெனவே கிருத்துவர்கள் தங்களது மதமாற்றும் திட்டங்களுக்கு உபயோகப் படுத்தி வருகிறார்கள். இப்பொழுது, இந்த நாத்திக-பெரியாரிஸ்ட் கொள்கை போர்வையில் இவ்வாறு செய்திருப்பதை கவனிக்கலாம். நடத்தும் கிறிஸ்துமஸ் விழாவில் சூரியனார் கோவில் ஆதீனம்.  “திருக்கயிலாய கந்த பரம்பரை வாமதேவ சந்தானம், 28 ஆவது குருமஹா சந்நிதானம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்” என்று பெரிய பெயராக இருந்தாலும், நிச்சயமாக, பலருக்கு இவர் யார் என்று தெரியவில்லை, ஏதோ, ஒரு உதாரணத்திற்கு, இவரைக் கூட்டி வந்தது போலத் தெரிகிறது.

© வேதபிரகாஷ்

22-12-2022


[1] தமிழ்.ஒன்.இந்தியா, இது தான் திமுக அரசு அரசின் அடையாளங்கள்..” கிறிஸ்துமஸ் விழாவில் பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின், By Vigneshkumar, Published: Tuesday, December 20, 2022, 23:04 [IST].

[2] https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-cm-stalin-list-of-schemes-implemented-for-minorities-by-dmk-490538.html

[3] தினகரன், சிறுபான்மை மக்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டது தமிழ்நாடு அரசு: கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு..ஸ்டாலின் உரை, 2022-12-20@ 20:35:29

[4] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=824129

[5] மாலை மலர், அனைவரையும் ஒரு தாய் மக்களாக கருதி தி.மு.. அரசு இயங்கி வருகிறதுமுதலமைச்சர் மு..ஸ்டாலின் பெருமிதம், By Maalaimalar, 21 டிசம்பர் 2022 10:58 AM (Updated: 21 டிசம்பர் 2022 12:15 PM).

[6] https://www.maalaimalar.com/news/state/tamil-news-dmk-considers-all-people-as-one-mother-without-distinguishing-between-people-551239

[7] நியூஸ்.7.தமிழ், நலத்திட்டங்களின் சாதனைகள்தான் திமுக அரசின் அடையாளம்முதலமைச்சர் மு..ஸ்டாலின், by LakshmananDecember 20, 2022

[8] https://news7tamil.live/cm-mk-stalin-speech-in-christmas-function.html

[9] மாலை மலர், தி.மு.. ஆட்சியில் இத்தனை சாதனைகளா? – கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம், By மாலை மலர், 21 டிசம்பர் 2022 1:59 AM

[10] https://www.maalaimalar.com/news/state/cm-mk-stalin-says-tn-govt-always-concerned-about-the-welfare-of-minority-people-551161

[11] கலைஞர்.செய்திகள், தி.மு. அரசின் அடையாளங்கள் இதுதான்.. கிறிஸ்துமஸ் விழாவில் பட்டியலிட்ட முதலமைச்சர் மு..ஸ்டாலின்!, Lenin

Updated on : 20 December 2022, 09:35 PM

[12] https://www.kalaignarseithigal.com/m-k-stalin/2022/12/20/christmas-function-cm-mk-stalin-speech

[13] தினத்தந்தி, கிறிஸ்துமஸ் விழாவில் பரதநாட்டியம்முதல்வர் ஸ்டாலின் முன் ஆடிய மாணவிகள் | mk stalin By தந்தி டிவி 21 டிசம்பர் 2022 8:27 AM

[14] https://www.thanthitv.com/latest-news/bharatanatyam-at-the-christmas-function-girls-danced-in-front-of-chief-minister-stalin-156931

இந்துக்களை சாதியாக பிரித்தவர் தான் கிருஷ்ண பகவான்: கிறிஸ்துமஸ் விழாவில் திருமாவளவன் பேச்சு, பா.ஜ., ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம்!

திசெம்பர் 28, 2020

இந்துக்களை சாதியாக பிரித்தவர் தான் கிருஷ்ண பகவான்: கிறிஸ்துமஸ் விழாவில் திருமாவளவன்  பேச்சு, பா.., ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம்!

கிறிஸ்துமஸ் மேடைகள் ஏன் இந்து துவேஷத்திற்கு, தூஷணங்களுக்கு உபயோகப் படுத்தப் படுகின்றன?: 2020 வருடத்தில், கிறிஸ்தமஸை சாக்காக வைத்துக் கொண்டு, கிறிஸ்தவ அமைப்புகள், கிறிஸ்தவ மதத்தலைவர்கள், அரசியல்வாதிகளுடன், இந்து மதம், இந்துக்கள் மற்றும் இந்து நம்பிக்கைகளை விமர்சிப்பது, துவேசிப்பது மற்றும் தூஷிப்பத்து அதிகமாகவே நடந்திருக்கின்றன. இதில், “கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம்” முக்கிய பங்கு வகிக்கிறது. அதில், திருமாவளவன் அதிகமாகவே செய்துள்ளார். தொடர்ந்து விழாக்களை நடத்தில், அவ்வாறு செய்துள்ளார் என்பது, அவரது படிவுகளிலிருந்தே தெரிய வருகிறது. கிறிஸ்தவ மேடைகள், விழாக்கள் எப்படி, எவ்வாறு, ஏன் இவ்வாறு இந்துவிரோதமாக செயல்பட்டு வருகின்றன மற்றும் அதில் கலந்து கொள்ளும் பொறுப்புள்ள பிஷப்புகள், காஜிக்கள், எம்.பிக்கள் முதலியோர் எவ்வாறு ஊக்குவிக்கின்றனர், ஆதரிக்கின்றன்ர் மற்றும் போற்றுகின்றனர் என்பது செக்யூலரிஸ புதிர், சமதர்ம மர்மம் மற்றும் பகுத்தறிவு விடுகதையாக இருக்கின்றன. மதம், இறையியல், சித்தாந்தம், அரசியல், அதிகாரம், பணம் முதலியவை எவ்வாறு, இவ்வாறு உபயோகப் படுத்தப் படுகின்றன என்பதும் ஆச்சரியமான விசயம் தான்.

நான் ஒரு இந்து என்பதாலேயே இந்து மதத்தை தொடர்ந்து இப்படி விமர்சிக்கிறேன்..: இந்துக்களை கிருஷ்ண பகவான் சாதியாக பிரித்தார் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்[1].. “நான் ஒரு இந்து என்பதாலேயே இந்து மதத்தை தொடர்ந்து இப்படி விமர்சிக்கிறேன்“.. என்றும் கிறிஸ்துமஸ் விழா ஒன்றில் திருமாவளவன் பேசி உள்ளார்[2]. விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று பேசினார்.. அதன் சுருக்கம் இதுதான். “உலகில் இந்தியாவில் மட்டுமே இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள்.. வெளிநாடுகளில் வசிக்கின்ற இந்துக்கள் இங்கிருந்து அங்கு இடம் பெயர்ந்தவர்கள்.. இந்தியாவில் உள்ள பிற மதத்தவர்கள் வெளிநாட்டுக்காரர்கள் கிடையாது…..இயேசு, புத்தர், அல்லா ஆகியோரைவிட பகவான் கிருஷ்ணன் 5 ஆயிரம் வருஷத்துக்கு முன்பு மனிதராக பிறந்து வாழ்ந்தவர் என்று இந்து மத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது[3].. ஆனால், கிறிஸ்துவம், இஸ்லாம், புத்தம் ஆகிய மதங்கள் மனிதர் அனைவரையும் சமமாக பாவிப்பதாகவும், கிருஷ்ண பகவானின் போதனைகள் என்று கூறப்படும் பகவத் கீதையில்தான், மனிதர்களிடையே ஏற்ற தாழ்வுகளை உண்டாக்கும் வகையில் நான்கு வித வர்ணங்கள் உள்ளன[4]……..நான் ஒரு இந்து என்பதாலேயே இந்து மதத்தை தொடர்ந்து இப்படி விமர்சிக்கிறேன்[5].. பெண்களை ஒடுக்குகளை போக்கு இருக்கிறது.. தீண்டாமை இருக்கிறது[6].. இதற்கெல்லாம் எது காரணமாக இருக்கும் என்று சமுதாய வல்லுநர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள்.. அந்த வகையில் இரண்டு பேர் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் பெரியாரும், அம்பேத்கரும்தான்”.

கிறிஸ்தவம் சமத்துவத்தை கூறுகிறது.. இஸ்லாம் சமத்துவத்தை கூறுகிறது: திருமாவளவன் தொடர்ந்து பேசியது, “எந்த மதத்துக்கு எதிராகவும் நாம் பேசவில்லை……எந்த மதத்தை காயப்படுத்தும் நோக்கமும் நமக்கு இல்லை.. ஆனால் மதங்களின் கோட்பாடுகளை ஒப்பீடு செய்யும்போது, ஏன் கிறிஸ்தவத்தை விமர்சிக்கவில்லை என்று சிலர் கேட்கிறார்கள்[7].. இஸ்லாத்தை ஏன் விமர்சிக்கவில்லை என்று கேட்கிறார்கள்[8].. கிறிஸ்தவம் சமத்துவத்தை கூறுகிறது.. இஸ்லாம் சமத்துவத்தை கூறுகிறது[9].. அதனால் அந்த மதங்களை விமர்சிக்க வேண்டிய தேவையில்லை[10]. …..இன்னொரு காரணம் நான் அந்த மதங்களை சார்ந்தவன் இல்லை.. இந்து அடையாளத்தோடு இருக்கிறேன், அந்த கொடுமைகளை அன்றாட வாழ்வில் சந்திக்கிறேன்.. எந்த ஒரு கோட்பாடாக இருந்தாலும், அந்த கோட்பாடு மனித குலத்தை மதிக்கக்கூடியதாகவும், மேம்படுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதைதான் எதிர்பார்க்கிறோம்.. இந்த கிறிஸ்தவ திருவிழாவானது.. சமத்துவ திருவிழா என்பதாலும், சகோதரத்துவத்தை உறுதிப்படுத்தும் திருவிழா என்பதால்தான் இதை ஏற்கிறோம்,” என்றார்.

திருமாவளவன் பொய்களை அள்ளி வீசியது: மேடை பேச்சு என்பதால், என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற போக்கு உள்ளது. திருமாவளவன் அவ்வாறு பேசிய சில விசயங்கள் அலசபப்படுகின்றன:

திருமாவளவன் பேசியதுஉண்மை நிலை
கிறிஸ்தவம் சமத்துவத்தை கூறுகிறது.. இஸ்லாம் சமத்துவத்தை கூறுகிறது……. அதனால் அந்த மதங்களை விமர்சிக்க வேண்டிய தேவையில்லை…..கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் நிச்சயம் நம்பிக்கையாளர்களைப் பிரிக்கிறது. அவ்வுண்மையினை மறைத்து, பேசுவது, போலித் தனத்தைக் காட்டுகிறது.
நான் ஒரு இந்து என்பதாலேயே இந்து மதத்தை தொடர்ந்து இப்படி விமர்சிக்கிறேன்”..இது தப்பித்துக் கொள்வதற்கு சொல்லப் பட்ட, சப்பைக்கட்டு. எம்.பியாக இருக்கும் நிலையைக் காத்துக் கொள்ளக் கூறியது.
இன்னொரு காரணம் நான் அந்த மதங்களை சார்ந்தவன் இல்லை.. இந்து அடையாளத்தோடு இருக்கிறேன்,அதாவது எஸ்.சியாக இருந்து, கிறிஸ்துவன் என்றெல்லாம் சொல்லிக் கொள்வது, இதில் அடங்கும்.
அந்த கொடுமைகளை அன்றாட வாழ்வில் சந்திக்கிறேன்….. எந்த ஒரு கோட்பாடாக இருந்தாலும், அந்த கோட்பாடு மனித குலத்தை மதிக்கக்கூடியதாகவும், மேம்படுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதைதான் எதிர்பார்க்கிறோம்..இவர் எம்பியாக உயந்ர்துள்ளது எஸ்சி என்ற இந்து அடையாளம் தான். கிறிஸ்தவன் அல்லது துலுக்கன் என்ற முறையில் தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்து பதவிக்கு வந்து விடவில்லை. மேம்பட்டதால் தான், நல்ல வசதியுடன் இருந்து, அனுபவித்து கொண்டிருக்கிறார்.
இந்த கிறிஸ்தவ திருவிழாவானது.. சமத்துவ திருவிழா என்பதாலும், சகோதரத்துவத்தை உறுதிப்படுத்தும் திருவிழா என்பதால்தான் இதை ஏற்கிறோம்….இதுவும் அப்பட்டமான பொய்யாகும். லெபனான் மற்ற மத்தியத் தரைக் கடல் நாடுகளில் இன்றும் கிறிஸ்தவர்களும், துலுக்கரும் அடித்துக் கொண்டு சாகிறார்கள். சமத்துவம்-சகோதரத்துவம் இருந்தால், அவ்வாறு நடக்காது.

கிறிஸ்துவதுலுக்க மதங்களில் ஜாதி மற்றும் தீண்டாமை இருப்பது[11]: தெற்காப்ரிக்காவில், “அபாரிதைட்” என்ற நிறவெறித்துவத்தினால், கருப்பர்களைப் பிரித்து வைத்து வாழும் சித்தாந்தத்தை ஆய்ந்த ஐக்கிய நாடுகள் சபை குழு, பைபிளில் வரும் வசனங்கள் தான் காரணம் என்று எடுத்துக் காட்டியது. அது போலவே, கிறிஸ்தவர்களிடம் இனம், மொழி, சமூகக் கட்டமைப்பு, இறையியல் என்ற பற்பல காரணங்களால் 3000 பிரிவுகள், உலகநாடுகளில் இருப்பதும் தெரித விசயமாகிறது. இவர்களின் உறுப்பினர்கள், ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்வது, பெண்கொடுப்பது-எடுப்பது, வேலைக்கு சமமான ஊதியம் கொடுப்பது, சர்ச்சுகளில் சமமாக நடத்துவது, இறந்த பின் தனித்தனி கல்லறைகளில் புதைப்பது போன்றவை, இந்தியாவிலேயே, ஏன் தமிழகத்திலேயே கடைபிடிக்கப் பட்டு வருகின்றன. அதையெல்லாம் மறைத்து தான், “கிறிஸ்தவம் சமத்துவத்தை கூறுகிறது..”, கூசாமல் போய் பேசுகிறார். இதே நிலை தான் இச்லாத்திலும். அங்கும் அஸ்ரப்-லெப்பை போன்ற சமூக அடுக்குகள் இருக்கின்றன. மண்டல் தீர்ப்பிலேயே, இஸ்லாத்தில் எத்தனை ஜாதிகள் இருக்கின்றன என்று பட்டியல் போட்டுக் காட்டியது. ஆகவே, “இஸ்லாம் சமத்துவத்தை கூறுகிறது…….,” என்பதும் மிகப் பெரியப் பொய்யே.

பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ இயக்கங்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருப்பது[12]: பிஜேபிகாரர்கள் “கடும் கண்டனம்”, இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்லாம், வெற்றுப் பேச்சுகளுடன் நின்று விடுகிறர்கள்[13]. ஏற்கெனவே, சீமான், கனிமொழி, கமல் ஹஸன் என்று பலரின் மீது “இந்துவிரோத” பேச்சுகளுக்கு புகார்கள் கொடுக்கப் பட்டுள்ளன, வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, புகார் கொடுத்தோம் என்று பெருமைப் பட்டுக் கொள்ளலாம், ஆனால், ஒன்றும் நடக்காது என்பது தான் நிதர்சனம். மறுபடியும், அவர்கள் அத்தகைய பேச்சுகளைத் திரும்பத்திரும்ப பேசுவார்கள், பிறகு வாடிக்கையாகி விடும். கருணாநிதியின் மீது தொடுத்த வழக்குகளும் அவ்வாறே ஆகின. தேர்தலுக்கு நிற்கும் போது, தமது விண்ணப்பங்களில் எத்தனை கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதையும் காட்டத்தான் செய்கிறார்கள், எந்த அரசியல்வாதியும் வெட்கப் படுவதில்லை. இந்த்துத்துவ இயக்கங்களுக்கு ஆட்சி, அதிகாரம், பணம் எல்லாம் இருக்கின்றன, ஆனால், பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், இந்த்துத்துவ இயக்கங்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருப்பது தெரிகிறது.

© வேதபிரகாஷ்

28-12-2020


[1] தமிழ்.ஒன்.இந்தியா, இந்துக்களை சாதியாக பிரித்தவர் கிருஷ்ண பகவான்“.. கிறிஸ்துமஸ் விழாவில் திருமா. சர்ச்சை பேச்சு, By Hemavandhana | Updated: Friday, December 25, 2020, 0:00 [IST].

[2] https://tamil.oneindia.com/news/chennai/thirumavalavan-christmas-day-speech-406839.html

[3] பாலிமர்.நியூஸ், இந்துக்களை கிருஷ்ண பகவான் சாதியாக பிரித்தார்….!  திருமாவளவன் சொல்கிறார், December 24, 2020, 02:19 AM [IST].

[4] https://www.polimernews.com/dnews/132066

[5] அதிபன் டிவி, இந்துக்களை சாதியாக பிரித்தவர் கிருஷ்ண பகவான்“.. கிறிஸ்துமஸ் விழாவில் இந்து மத துரோகி திருமா இழிவு பேச்சு.., Thursday, 24 December 2020, 7:58:00 pm.

[6] https://www.athibantv.com/2020/12/hindu-traitor-thiruma-insulting-speech.html

[7] செய்தி சுருள், இந்துக்களை சாதியாக பிரித்தவர்தான் கிருஷ்ண பகவான்: திருமா பேச்சு!, 24-12-2020.

[8] https://seithichurul.com/news/tamilnadu/krishna-divided-hindus-on-caste-basis-thirumavalavan/31172/

[9] நியூஸ்.ஏ.இஜெட், இந்துக்களை கிருஷ்ண பகவான் சாதியாக பிரித்தார்….!  திருமாவளவன் சொல்கிறார், December 24, 2020, http://newsaz.in/details.php?nid=18809

[10] http://newsaz.in/details.php?nid=18809

[11] Vedaprakash, Dalit – Precept, Problem and Politics ,  “Dimensions of Conversion”, the Vivekananda Kendra Patrika, Vol. 24, Feb. 1995, pp. 98-114. Can be read here:

https://indiainteracts.wordpress.com/dalit-%E2%80%93-precept-problem-and-politics/

[12] தினமலர், கிறிஸ்துமஸ் விழாவில் திருமாவளவன் பேச்சு; பா.., ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம், Updated : டிச 25, 2020 05:47 | Added : டிச 25, 2020 05:45.

[13] https://www.dinamalar.com/news_detail.asp?id=2677623