திராவிட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், ஸ்டாலினை ஏசுவாக்கிய படலம், உதயநிதியின் நான் கிறிஸ்துவன் பிரகடனம், பெரியாரிஸ அல்லேலூயா கோஷங்கள்! (3)
Udhyanidhi declared that he is a Christian, as he is married to a woman who is a Christian..
He was reportedly blessed by a priest when he contested for election inside a Triplicane church, Chennai during 2021
The Tamil press cutting mentioning the details……….a special prayer was also conducted…….
Then, it has become news started appearing in all other media in different languages.
22-12-2022 – உதயநிதி– இன்னும் சொல்ல போனால் நானும் கிறிஸ்தவன் தான். கிறிஸ்தவன் என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்: அப்போது பேசிய அவர், “திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன? சொல்றேன் கேளுங்க.. ஒரு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ’அல்லேலுயா’ என சொல்லி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் எப்போதுமே மாலையும் கழுத்துடன் தான் இருப்பார் ஆனால் அவர் கிறிஸ்தவ நிகழ்ச்சிக்கும் செல்வார். இஸ்லாமிய நிகழ்ச்சிகளுக்கும் செல்வார். இதுதான் சமூக நிதி ஆட்சி. இதுதான் பெரியார், கலைஞர் கற்றுக்கொடுத்தது. அந்த ஆட்சியைதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார். இன்னும் சொல்ல போனால் நானும் கிறிஸ்தவன் தான்[1]. கிறிஸ்தவன் என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்[2]. சேகர்பாபு அல்லேலுயானு சொல்றாரு. உதயநிதி ஸ்டாலின் போய்ட்டு கிறிஸ்தவனு சொல்றாருனு இன்று எல்லா சங்கிகளுக்கும் எரியும்[3]. நான் எழும்பூரில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில்தான் படித்தேன்[4]. லயோலா கல்லூரியில்தான் படித்தேன்[5]. நான் காதலித்து மனந்தது ஒரு கிறிஸ்தவ பெண்[6]. கடந்த 4 நாட்களாக பத்திரிக்கையாளர்களுக்கு நான் தான் தீனியாகி கொண்டிருக்கிறேன். முதலில் அமைச்சர் பொறுப்பு கொடுக்கும்போது எனக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஆனால் என்னை வழிநடத்த அமைச்சர் சேகர்பாபு போன்ற பல அண்ணன்கள் அமைச்சரவையில் இருப்பதால் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்,” என தெரிவித்தார்.
தீவிரவாதம்-பயங்கரவாதங்களை மறைக்க விழாக்களா?: யார் வேண்டுமானாலும், என்ன மதத்தையாவது பின் பற்றலாம், அதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை, கவலைப் படுவதில்லை என்றே சொல்லலாம். முகலாயர்கள், முஸ்லிம்கள், துலுக்கர் என்று கோவில்களை இடித்து, இதுக்களின் வழிபாடுகளில் இடைஞ்சல் செய்த வரை அவர்களை இந்துக்கள் கண்டுகொள்ளவில்லை எனலாம். அவர்களை கொள்லைக் காரர்கள், கொலைக்காரர்கள், கொடியவர்கள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று தான் நினைத்துக் கொண்டார்கள், பிறகு எச்சரிக்கையாகில் கோவில்களை மாற்றிக் கட்டிக் கொண்டார்கள். கோவாவில் ஆரம்பித்த கிருத்துவர்களின் அதை விட மோசமான குரூரங்கள், காலிகட்டிலும் தொடர்ந்தது. பிறகு ஆங்கிலேயர் காலத்தில் கொஞ்சம் குறைந்து அளவில், ஆட்சி-அதிகாரத்துடன் செயல்பட்டு வந்தது. சுதந்திரத்திற்கு பிறகு, அதே கோஷ்டிகள், பலவித பேனர்களில், கட்சிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. செக்யூலரிஸம் அவர்களுக்கு, ஒரு பாதுகாப்பான கவ்சம் போல அமைந்ஹு விட்டது. இப்பொழுது, இந்துவிரோத திமுக அத்தகைய திட்டத்துடன், சூழ்ச்சிகளுடன் செயல்பட்டு வருகிறது. அது 1967-1970களிலிருந்து நடந்து வந்தாலும், இப்பொழுது அதிகமாகி விட்டது. கோவை கார் குண்டு, மங்களூரு குக்கர்-வெடிகுண்டு எல்லாம் மறந்தாகி விட்டது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தான் பெரிதாகி விட்டது.
உதயநிதி – நான் கிறிஸ்துவன் பேச்சு – அலசல்; செக்யூலரிஸ நாட்டின், மாநில அமைச்சர், முதலமைச்சர், எம்பி, எம்.எல்.ஏ எல்லாம் எந்த அளவுக்கு தங்களது பேச்சை பேச முடியும். அவர்களுக்கு வரையறை, கட்டுப்பாடு உண்டா-இல்லையா என்று அலசவேண்டியுள்ளது:
1. உதயநிதி- இன்னும் சொல்ல போனால் நானும் கிறிஸ்தவன் தான் . கிறிஸ்தவன் என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்…..
2. உதயநிதி – நான் காதலித்து மனந்தது ஒரு கிறிஸ்தவ பெண்……உதயநிதி ஸ்டாலின் போய்ட்டு கிறிஸ்தவனு சொல்றாருனு இன்று எல்லா சங்கிகளுக்கும் எரியும்……
3. அதெல்லாம் சரிதான், ஆனால், இந்துவிரோதமாக இருப்பதில் தான் உங்களது திராவிடத்துவ முகமுடி கிழிகிறது. இந்து தூஷணம் மெய்ப்பிக்கிறது…
4. ஒரு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அல்லேலுயா என சொல்லி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தால் அது போலித்தனமே, செக்யூலரிஸம் இல்லை!
5. அவர் எப்போதுமே மாலையும் கழுத்துடன் தான் இருப்பார் ஆனால் அவர் கிறிஸ்தவ நிகழ்ச்சிக்கும் செல்வார். இஸ்லாமிய நிகழ்ச்சிகளுக்கும் செல்வார் என்றா, அதுதான் சமூக நிதி ஆட்சி ஆகும்..
6. உதயநிதி தைரியமாக நான் கிறிஸ்தவன் என்று அறிவித்தது போல, அந்த பிரியாவும் செய்வாரா? பெரியார் வழி பின்பற்றுவாரா?
7. பெட்ரென்ட் ரஸல் – நான் ஏன் கிறிஸ்தவன் இல்லை; உதயநிதி – நான் ஒரு கிறிஸ்தவன்;
இது பகுத்தறிவா, பெரியாரிஸமா, திருவிடத்துவமா, எது?
8. பெரியார் சுயமரியாதை பிரச்சார கழகம் அதே போல குறும் புத்தகம் வெளியிட தைரியம் உண்டா? திராவிட ஆராய்ச்சி மையம் கவனிக்குமா?
9. இங்கு ஒரு இந்து போலி வந்து அரசியல் பேச மாட்டேன் என்று, பேசியிருக்கிறது.
அது போல, கிறிஸ்த்துவ-முகமதிய மாடல்கள் வருவதில்லையே?
10. ஆக, நாத்திக + பெரியாரிஸ + முகமதிய + கிறிஸ்துவ + கம்யூனிஸ + திராவிடத்துவ + மற்ற வகையாறாகள் = இந்துவிரோதம் என்றாகிறது!
11. திராவிட மாடல் ஆட்சி என்று, திராவிட ஸ்டாக் என்றும் சொல்லிக் கொள்ளும் இந்த வகைறாக்கள் செக்யூலரிஸ நாட்டில் மாநில அமைச்சராக இருப்பது விஷேசம் தான்!
கிருத்துவன், துலுக்கன் தனது மதங்களைப் போற்றும் போது, “சைவன்” என்று சொல்லிக் கொண்டு, எப்படி இந்து மதத்தை தூஷிப்பான்?: துலுக்கரும், கிருத்துவரும் எத்தனை கோவில்களை இடித்தனர் என்பது தெரிந்த விசயம்! திராவிட நாத்திக இந்து-விரோத ஆட்சியில் எத்தனை கோவில்கள் சிதிலமடைந்தன, சிலைகள்-விக்கிரங்கள் களவாடப் பட்டன என்பதும் தெரியும். பிறகு இந்த பட்டை-கொட்டை-காவிகள் ஏன் அத்தகைய விழாக்களில் கலந்து கொள்கின்றனர்? இவர்கள் உண்மையில் இந்துக்களா, சைவர்களா, வேடதாரிகளா, யார்? இத்தகைய கேள்விகள் எழத்தான் செய்கின்றன. வேண்டுமென்றே, இத்தகையோரை ஏற்பாடு செய்து, கூட்டி வந்து, பேச வைத்துள்ளனர் என்று தெரிகிறது. கிருத்துவன் கிருத்துவனாக பேசி, தன் மதத்தைப் போற்றினான்/, துலுக்கனும் அவ்வாறே தனது மதத்தை விட்டுக் கொடுக்கவில்லை. ஆனால், “சைவர்” என்று சொல்லிக் கொண்டு, சிலர் இவ்வாறு சரித்திரம், மதம், மற்றும் எந்த ஆதாரங்களும் இல்லாமல் பேசியிருப்பது, திட்டமிட்ட செயல் என்றேயாகிறது. ஒரு உண்மையான “சைவனாக,” இருந்தால் கூட, இவ்வாறு மானம்-ரோசம்-சூடு-சொரணை இல்லாமல் பேசியிருக்க மாட்டான். ஆக, இந்துக்கள் அடிமையாக இருக்கத் தயாராகிறான் என்றே, இதைக் காட்டுகிறது.
கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் கெட்ட எண்ணங்கள் எதனைக் காட்டுகிறது?: “கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம்,” என்ற பெயரை வைத்துக் கொண்டு, அநாகரிகமாக, கீழ்த்தரமாக, முறையற்ற விதங்களில் எப்படி கிருத்துவ-துலுக்க மதத் தலைவர்கள், இந்து விரோத பேச்சுகளை ஊக்குவித்தார்கள்? பொறுப்புள்ள தலைவராக இருந்திருந்தால், ஸ்டாலின், அவ்வாறு பொறுத்திருப்பாரா? பிறகு, செக்யூலரிஸ அளவுகோலை பயன்படுத்தினாலும், தமிழகத்தை ஆளத் தகுதியற்றவராகிறாரே? சிறுபான்மையினருக்கு, இதெல்லாம் செய்யப் பட்டது, என்று பட்டியல் இடும் ஸ்டாலின், இந்துக்களுக்கு என்ன செய்யப் பட்டது என்று சொல்ல முடியவில்லையே. கடந்த 70 ஆண்டுகளில், கோவில்களைக் கொள்ளையடித்தது, சிலைகள்-விக்கிரங்களைத் திருடி விற்றது, மடங்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தது, பட்டா போட்டு சொந்தமாக்கிக் கொண்டது, விற்றது என்று தான் இன்று வரை நடந்து வருகிறது. அந்நிலையில், திராவிடக் கட்சிகளுக்கு, ஆட்சிக்கு வருவது அல்லது ஆசைப் படுவதே, கேடுகெட்ட செயலாகிறது.
பாரபட்சமிக்க, அரசியல் நிகழ்சியாக இருந்தது: இனிகோ இருதயராஜ் தனது பேஸ்புக்கில் இந்த விழாவைப் பற்றிய விவரங்களைக் கொடுத்துள்ளார். புகைப்படங்களையும் போட்டுள்ளார். மேற்குறிப்பிட்ட முக்கிய பிரமுகர்களை நேரில் சென்று, பொன்னாடைப் போர்த்தி, அழப்பிதழ் கொடுதது, வரவேற்றப் புகைப்படங்களையும் போட்டுள்ளார். இந்த அளவுக்கு, விழா நடத்தவும், நிதி இருப்பதும் தெரிகிறது. கத்தோலிக்க சபையின் முழு ஆதரவுடன் நடைபெறுவதும் தெரிகிறது. ஆகவே, கலந்து கொண்ட பேச்சாளர்களுக்கு, பண முடிப்பு, வந்து போக செலவு முதலியவை கொடுப்பதற்கு, எந்த பிரச்சினயும் இல்லை. உண்மையிலேயே, அவர்கள் “நல்லெண்ணத்துடன்” விழா நடத்தினால், மற்றவர்களையும் அழைத்திருலாம். ஆனால், ஒரே நாளில், அதிமுக மற்றும் திமுக தலைவர்கள் தனித்தனியாக, கிறிஸ்துமஸ் விழாக்களில் கலந்து கொண்டதே, இது அரசியமாக்கப் பட்ட நிலையை வெளிக்காட்டுகிறது.
© வேதபிரகாஷ்
22-12-2022
[1] தினத்தந்தி, “நானும் கிறிஸ்தவன் தான்” “இத சொன்ன அவங்களுக்கு எரியும்“-உதயநிதி பரபரப்பு பேச்சு, By தந்தி டிவி, 22 டிசம்பர் 2022 9:32 PM.
[2] https://www.thanthitv.com/latest-news/dmk-minister-udhayanidhistalin-speech-157328
[3] தினத்தந்தி, “நானும் கிறிஸ்தவன் தான்“.. “இத சொன்னா அவங்களுக்கு எரியும்“.. உதயநிதி பரபரப்பு பேச்சு, தினத்தந்தி டிசம்பர் 22, 11:17 pm (Updated: டிசம்பர் 22, 11:21 pm)
[4] https://www.dailythanthi.com/News/State/i-am-also-a-christian-udhayanidhi-sensational-speech-863391
[5] டாப்.தமிழ்.நியூஸ், நானும் கிறிஸ்தவன் தான்– உதயநிதி ஸ்டாலின், By AISHWARYA G Thu, 22 Dec 202210:10:52 PM.
[6] https://www.toptamilnews.com/thamizhagam/Udhayanithistalin-press-meet/cid9527250.htm