Archive for the ‘யோகி ஆதித்யநாத்’ Category

அலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்! [4]

ஏப்ரல் 16, 2019

அலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்! [4]

Kanimozhi effigies burnt in Rayalaseema AP

திருச்செந்துார் முருகன் அருளால் வெற்றி பெறுவேன்என்று கனிமொழி[1]: தினமலர் தொடர்ந்து சொல்வது, “துாத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் அவரது தங்கை கனிமொழி, ‘திருச்செந்துார் முருகன் அருளால் வெற்றி பெறுவேன்’ என, பேசுகிறார். தி.மு.க.,வுக்கு எதிராக, இந்துக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும், அகோபில மடம் சார்பில் நடத்தப்படும், ‘நரசிம்மப்ரியா’ என்ற ஆன்மிக பத்திரிகையின் ஆசிரியர் அனந்த பத்மனாபாச்சாரியாருடன் பேசினோம். “இந்து மத சடங்குகளையும், நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்துவது, ‘இந்து என்றால் திருடன்’ என, விளக்கம் கூறுவது, ஆண்டாளை கொச்சைப்படுத்தி பேசுவது, கிருஷ்ணரை அவதூறாக பேசுவது, நெற்றியில் விபூதி, குங்குமம் இட்டவர்களை கேலி பேசுவது, கோவிலில் திருநீறு பூசினால் அதை அழிப்பது என, ஸ்டாலினும் அவரது அடிப்பொடிகளும், இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல் படுகின்றனர்.”பொறுமைக்கும் எல்லை உண்டு அல்லவா? இந்துக்கள் இப்போது பொங்கி எழுகின்றனர். இந்த தேர்தலில், யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதை விட, யாருக்கு ஓட்டு போட கூடாது என்பதை இந்துக்களிடம் எடுத்துச் சொல்ல, தீவிரமான முயற்சிகள் எடுத்து வருகிறோம். தி.மு.க.,வை எதிர்ப்பதால், வேறு ஏதாவது கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறோம் என்று அர்த்தம் இல்லை. ஏனென்றால், எந்தக் கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை.”என்ன பேசினாலும், அந்த பொருளில் பேசவில்லை என்று கடைசி நேரத்தில், ஒரு விளக்கம் கொடுத்து விட்டால், இந்துக்கள் அதை நம்பி நமக்கு ஓட்டு போடுவார்கள் என்ற எண்ணம் கருணாநிதிக்கு இருந்தது. அதை, அவர் பல தேர்தல்களில் பயன்படுத்தி விட்டார். ஸ்டாலினால் அந்த அளவுக்கு சிந்திக்க தெரியவில்லை. ஒரு கண்டன அறிக்கையைக்கூட, மக்கள் நம்பும் வகையில் எழுதிக் கொடுக்க அவரிடம் ஆட்கள் இல்லை.”இனியும், இளிச்ச வாயர்களாக இருந்து ஏமாற, இந்துக்கள் தயாராக இல்லை. தேர்தல் முடிவுகள் வரும் போது, எங்கள் முயற்சியின் சக்தி உலகத்துக்கு தெரியும்,” என்றார் ஆச்சாரியார்.

Kani, Vairamuthu, Veeramani- the trio
இந்துக்கள் அனைவரும், திமுகவிற்கு எதிராக ஓட்டுப் போடுவார்களா?[2]: தினமலர் தொடர்ந்து சொல்வது[3], “மன்னார்குடி செண்டலங்கார சம்பத்குமார் ஜீயர், தி.மு.., தலைவரை கெடுப்பதே வீரமணி தான் என்று நம்புகிறார்.“கடவுளை நாங்கள் நம்புகிறோம். கும்பிடுகிறோம். சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். அவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை; விமர்சனம் செய்யவில்லை; கேலி, கிண்டல் செய்யவில்லை. அப்படி இருந்தும், எங்களை ஏன் வம்புக்கு இழுக்கிறார்கள்? இதுவரை பொறுமையாக இருந்தோம். ஆனால், அவர்கள் இதை எங்கள் பலவீனமாக நினைக்கின்றனர். ஆகவே தான், கேலி, கிண்டலை நிறுத்தவில்லை. சரி, இனியும் அமைதி வேண்டாம். குறைந்த பட்சம், தேர்தலிலாவது பாடம் புகட்டுவோம் என்றுதான், இந்த முடிவுக்கு வந்தோம்,” என்கிறார் அவர். தி.மு.., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதிக்கு இப்படி, ஒரு இயக்கம் நடப்பதாகவே தெரியவில்லை.“தேர்தல் களம், தி.மு..,வுக்கு சாதகமாக இருக்கிறது என்றவுடன், பயந்து நடுங்கி, எதிர் தரப்பினர் செய்யும் பொய் பிரசாரம் இது. இப்படித்தான், 1971ல், தி.மு..வுக்கு எதிராக மதத்தின் பெயரால் தீவிர பிரசாரம் செய்தார்கள். என்ன ஆனது? தி.மு.., அமோக வெற்றி பெற்று, 184 தொகுதிகளை பிடித்து ஆட்சிக்கு வந்தது. இப்போதும் அப்படிதான் நடக்கும்,” என்கிறார் பாரதி. இந்துக்கள், ஒரே மாதிரி ஓட்டு போடுவார்களா என்பது மே, 23ம் தேதி தெரியும்”. – வி

Kani, Tirupati case filed

திராவிட தீவிரவாதம் வளர்த்து வரும் வெறுப்புப் பேச்சு: வெறுப்புப் பேச்சு (Hate Speech[4]) என்பது ஒரு இனம், சாதி, மதம், பால், வயது, நாட்டுரிமை, பரம்பரை, உடல் குறைகள், பேசும் மொழி, அரசியல் ஈடுபாடு, சமுதாயப் பின்னணி, குறிப்பிட்ட குழுவினரின் வெளித்தோற்றம் (உயரம், அகலம், எடை, தோலின் நிறம் ஆகிய குறிப்பிட்ட அடையாளம்) கொண்டோரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டி அந்த அடையாளங்களைப் பழித்துப் பேசி மற்றவர்களுக்கும் அவர்கள் மீது வெறுப்பு ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் பேசுவதும் பரப்புரை செய்வதும் வெறுப்புப் பேச்சு ஆகும். இதை சினிமா, வசனங்கள், ஜோக்குகள் என்ற போர்வையில் செய்யப் பட்டு வருகின்றன. சொற்களால் குறிப்பிட்ட நபர் அல்லது சாராரின் மனம் புண்படுவதோடு மட்டுமல்லாது பல வகையான செயல்பாடுகளாலும் இவ் வெறுப்பை வெளிப்படுத்தும் காரியங்களை திராவிடத்துவவாதிகள் செய்து வருகின்றனர். இவ்வகையான நடவடிக்கைகளை பல நாடுகளிலும் அரசுகள் கூர்ந்து கவனித்து தக்க நடவடிக்கை எடுக்கின்றன, ஆனால், தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆள்வதாலும், 1970லிருந்து திராவிடத்துவ ஆதரவு அதிகாரிகள், நீதிபதிகள், போலீஸார் முதலியோர் இருப்பதனால், முறையாக சட்ட நடவடிக்கையும் எடுப்பதில்லை. “காலை கைது, மாலை விடுதலை” என்ற கொள்கையில் நிறைவேறி வருகிறது.. அதே குற்றத்தை ஆயிரக் கணக்காணோர் 50 ஆண்டுகளாக திரும்பி-திரும்பி செய்து வருகின்றனர். சிலர் இதனை குற்றம் என்ற கண்ணோட்டத்தில் கண்டாலும் இது கருத்துச் சுதந்திரத்தைத் தடுப்பதாக இருக்கின்றது எனவும் சில சாரார் வாதிடுகின்றனர்.

Kani going spree-temples

கருத்துச் சுதந்திரமும், அரசிலல் போலித் தனமும்: இப்படியும் குற்றங்கள் வளர்ந்து வருகின்றன, வளர்க்கப் பட்டு வருகின்றன. அதே நேரத்தில் “கருத்துச் சுதந்திரம்” என்பதற்கு, விள்க்கம் இல்லை, இப்பொழுது, திராவிடத்துவ கருத்துச் சுதந்திரம், இந்துக்களைத் தாக்கியுள்ளது, பிறகு ஏன் மற்ற நம்பிக்கையாளர்களை அவர்களது கருத்துச் சுதந்திரம் மண்டியிடுகிறது என்று தெரியவில்லை. ஆகவே, இது போலித் தனமானது என்று தெரிகிறது. இந்துக்களுக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது, அவர்கள் பதிலுக்கு எதையும் சொல்ல 1950களிலிருந்து, அனுமதிக்கப் படவில்லையே? இதுவரை “பார்ப்பன எதிர்ப்பு” போர்வையில் இருந்ததால், அமைதியாக இருந்தனர் போலும். இப்பொழுது, அதிகாரம் தேவை எனும் போது, இந்து உணர்வு மற்றவர்களுக்கும் வந்து விட்டதால், அதையும் அரசியல் ஆக்கப் பார்க்கின்றனர்.  இதனை 14-04-2019 அன்று நியூஸ்-எக்ஸில் அதிமுக [கிஷோர்] மற்றும் திமுக [இளங்கோவன்] பேச்சாளர்களிடமிருந்து நன்றாகவே வெளிப்பட்டது.

75 years old man killed canvassing for Modi 13-04-2019.vedaprakash

திராவிட தீவிரவாதம், மோடி துவேசமாகி, கொலையில் முடிந்துள்ளது: வெறுப்புப் பேச்சு [Hate speech] என்று இன்று பரவலாக பேசப்பட்டு, கண்டிக்கப் படுகிறது, ஆனால், திராவிடத்துவ அரசியல் மேடை பேச்சுகளே அதில் தான் வளர்ந்தது, திறமையை வளர்த்தது, அத்தகையெ துவேச கக்கல்களுக்கு பரிசுகளும் பட்டங்களும் கொடுக்கப் பட்டன.  இன்றும் ஸ்டாலின் அதில் சளைத்தவராக இல்லை. மோடி எதிர்ப்பு துவேசம் எதற்கு? முதலில் திமுக என்.டி.ஏவோடு கூட்டணி வைத்துக் கொள்வதாக இருந்தது. மோடி கருணாநிதி வீட்டிற்கு எல்லாம் சென்று குசலம் விசாரித்தார். ஸ்டாலினும், கனிமொழியும் பூரித்து விட்டனர். ஆனால், திடீரென்று திமுக மோடிவிரோதியாகியது. சகிப்புத் தன்மை [Tolerance] எப்படி சகிப்புத் தன்மையற்றதாகி [Intolerance] துவேசத்தில் முடிந்தது என்பது அரசியல் ரகசியம் என்று சொல்ல வேண்டும். காங்கிரஸ் கூட்டு உண்டாகியவுடன், ஸ்டாலின், மோடியை திருடன், களவாணி என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார். மோடி தமிழக விரோதி போல சித்தரித்து, அதில் வெற்றியும் கண்டனர். ஈவேராவின் “பார்ப்பானைக் கொல்” போன்ற திராவிட தீவிரவாதம், கொலைவெறி முதலியன எப்படி இன்று வரை, பூணூல் / தாலி அறுப்புகளில் நடந்து வருகின்றனவோ, அதுபோல, ஜல்லிக்கட்டில் ஆரம்பித்து வைக்கப் பட்ட மோடி துவேசம், கருப்பு பலூன்கள் விட்டு, இன்று கொலையில் முடிந்துள்ளது.

Veeramani condemned, Charu Nivedita-2

தாலி கட்ட ஸ்டாலின் ஐயர், தாலி அறுக்க வீரசமணி ஐயர்: நாங்களும் “ஐயர்” தான் இந்த திருமணத்தை செய்து விட்டு, இன்னும் இரண்டு திருமணங்க்களுக்கு செல்ல வேண்டியுள்ளது, என்று ஒப்புக்கொள்ளும் நிலைக்கு ஸ்டாலின் வந்தாகி விட்டது[5]. நாளைக்கு தாலி அறுக்க, அந்த வீரமணி ஐயர் வரலா.ஆனால், இத்திருமணங்கள் எல்லாம், இத்தகைய இந்து விரோதிகள், இந்துமத துவேசிகள் முதலியோர் நடத்தி வைப்பதால், திருமணங்கள் மங்கலமாக இருக்குமா, இல்வாழ்க்கை சிறக்குமா, நாளைக்கு தாலி அறுப்பில் முடியுமா போன்ற பிரச்சினைகளை ந்ன்றாக கவனித்து தீர்மானம் செய்ய வேண்டும். ஈவேரா நடத்தி வைத்த திருமணங்கள் அசிங்கப்பட்டதை ஸ்டாலினே, இந்த வீடியோவில் ஒப்புக் கொண்டு சொல்லியாகி விட்டது. ஆகவே, சட்டப்படி, மரியாதை, நோக்கியதை பெற்ற பிறகு, இத்தகைய ராசியில்லாத, அமங்கல, மூளிகளால் செய்து வைக்கும் திருமணங்கள் எங்கு போய் முடியும் என்று யோசிக்க வேண்டும். சட்டப்புறம்பாக இருப்படை, சட்டத்தில் கொண்டு வந்து, மரியாதை கொள்ளலாம். ஆனால், இத்தகைய ராசியில்லாத, அமங்கல, மூளிகளால் உண்டாகும் அநாச்சாரங்களை, குழப்பங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. அனுபவிக்க வேண்டியது தான்.

வேதபிரகாஷ்

14-04-2019

Stalin witdrawing Vinayaka caturti greetings

[1] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு..,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,

Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .

[2] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு..,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,

Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .

[3] https://www.dinamalar.com/news_detail.asp?id=2253579

[4] speech that attacks, threatens, or insults a person or group on the basis of national origin, ethnicity, color, religion, gender, gender identity, sexual orientation, or disability

[5] https://www.youtube.com/watch?v=Declz2hIXIA

அலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்! [3]

ஏப்ரல் 16, 2019

அலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்! [3]

Stalin on marriage mantras-3 Kasturi

விவாக மந்திரங்களுக்கு வக்கிரமான அர்த்தங்கள் கொடுக்கப்பட்டது: இதற்கு வக்காலத்து வாங்குவது, இந்த மந்திரத்தின் திரிபு விளக்கம்:

சோமஹ ப்ரதமோவி வித கந்தர்வ விவிதே உத்ரஹ த்ருதியோ அக்னிஷ்டே பதிஷ் துரியஷ்தே மனுஷ்ய ஜாஹ

இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது. “நீ முதலில் சோமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய்”, இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம், என்று இந்துவிரோதிகள் கூறுகின்றனர்[1]. “சமஸ்கிருத அறிஞர் ராமானுஜதாதாச்சாரியார்” தனது ‘இந்துமதம் எங்கே போகிறது?’ நூலில் குறிப்பிட்டுள்ளதாக இதை பரப்பி வருகின்றனர். ஒருவேளை, அவர் கொடுத்த முழுவிவரத்தை “எடிட்” செய்து போட்டிருக்கலாம். உண்மையில், இப்பிரச்சினை 150 ஆண்டுகளாக அலசப்பட்டு, அதற்கு விளக்கமும் கொடுக்கப் பட்டுள்ளது. இங்கு ரிக் வேதம் – Rig Veda 10.85.40 – பிரச்சினை இல்லை, அதன் பொருளை படித்தறிந்து விளக்கம் கொடுப்பதில் தான் விசமத்தனம் உள்ளது. ஆங்கிலத்தில் உள்ள மொழிபெயர்ப்பு படித்தால் கூட அத்தகைய வக்கிரத் தன்மையான திரிபு விளக்கம் இல்லை[2].

Meaning of Vivaha mantras

ரிக் வேதம் – 10.85.40 சுலோகத்தின் பொருள் என்ன?: உண்மையில் அந்த உருவகப்படுத்தப் பட்டுள்ள கடவுளர்கள், பெண்ணிற்கு அந்தந்த காலத்தில் தகுந்த வளர்ச்சி, ஆரோக்கியம் முதலியவை கொடுக்குமாறு வேண்டப் படுகிறது. வீரஸ்வாமி கிருஷ்ண ராஜ் என்ற மருத்துவர், மருத்துவ ரீதியில், இந்த மந்திரத்தின் பொருளை விளக்கியுள்ளார்[3].

எண் சங்க இலக்கியம் படி குறிப்பிடப்படும் பெயர் வயது ரிக் வேத மந்திரத்தின் பொருள் Explanation by Dr Veeraswamy Krishnaraj, M.D
1 குழந்தை 0 முதல் 4 வரை சோமன் / சந்திரன் மனம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

 

In charge of Pubarche, appearance of pubic hair
2 பேதை.

 

5      முதல் 8 வயது
3 பெதும்பை 9 முதல் 10 வயது வரை விஸ்வவசு என்ற தேவதை அவளுக்கு சிறந்த பேச்சு வர உதவுகிறது.

 

In charge of Thelarche, appearance  breasts.
4 மங்கை.

 

11 முதல் 14 வயது வரை
5 மடந்தை 15 முதல் 18 வயது வரை அக்னி அவள் பெண்ணாக மற்ற உதவுகிறது.

 

In charge of Menarche, 1st periods
6 அரிவை 19 முதல் 24 வயது வரை

Stalin on marriage mantras-2

இதுவரை எந்த தேர்தலிலும் காணாத அளவுக்கு இந்த முறை, தமிழக தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது மதம்[4]: தினமலர் சொல்வது[5], “மதத்தால் மனிதர்களை பிரித்து, ஓட்டுகளை கைப்பற்ற கட்சிகள் முயற்சி செய்வது, நாட்டுக்கே ஆபத்தில் முடியும் என, சமூக சிந்தனையாளர்கள் கவலை கொண்டுள்ளனர். என்றாலும், மதம் பிடிக்கும் அளவுக்கு, பல தலைவர்கள் மதத்தை நம்புகிற நிலை தான், பரவலாக காணப்படுகிறது. இதில் வேடிக்கை என்ன என்றால், மதங்களை நம்பாத பகுத்தறிவுவாதிகளாக தங்களை முன்னிலைப் படுத்துபவர்களே, இந்த சூழ்நிலையை உருவாக்கியது தான். பா. ., ஒரு இந்து கட்சியாக பார்க்கப்படுவதால், சிறுபான்மை மதத்தினரின் ஓட்டுகள் அக்கட்சிக்கு குறைவாக கிடைக்கிறது. அதே சமயம், இந்துக்கள் எந்த தேர்தலிலும் ஒட்டுமொத்தமாக, ஒரு கட்சிக்கு சாதகமாக அல்லது எதிராக ஓட்டு போடுவது இல்லை. இதனால், பா.., அல்லாத கட்சிகள் இந்து ஓட்டுகள் குறித்து அலட்டிக் கொண்டது இல்லை. இந்த தேர்தல் அந்த சூழலை மாற்றி இருக்கிறது”.

Stalin 60th marriage
ஸ்டாலின் இந்து திருமணத்தைத் தூஷித்தது[6]: தினமலர் தொடர்ந்து சொல்வது[7], “கருணாநிதி மறைவுக்கு பிறகு, தி.மு..,வின் தலைவரான ஸ்டாலின், திட்டமிட்டோ அல்லது எதேச்சையாகவோ அடிக்கடி, இந்து மதத்தை மட்டம் தட்டி பேசி வருகிறார். செயலிலும் அந்த வெறுப்பை வெளிக்காட்டுகிறார். முஸ்லிம்களின் திருமண நிகழ்ச்சிக்கு போனால்கூட, இந்து மத சடங்குகளை கேலி செய்து பேசும் அளவுக்கு, இந்து விரோத எண்ணங்கள் அவரது மனதில் நிறைந்திருக்கின்றன. மற்ற மதச் சின்னங்களை சரளமாக அணிந்து கொள்ளும் ஸ்டாலினால், இந்து கோவிலின் அர்ச்சகர்கள் தீட்டிய நாமத்தை சில நிமிடங்கள்கூட, நெற்றியில் விட்டுவைக்க பொறுமை இல்லை. தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய இந்து விரோத நிகழ்வுகள், இதுவரை பெரும்பாலும், பிராமணர்களால் மட்டுமே கண்டிக்கப்பட்டன. ஆண்டாள் மீதான வைரமுத்துவின் அவதுாறு, கிருஷ்ணர் மீதான, வீரமணியின் கேவலமான பேச்சு போன்றவை, பிராமணர் அல்லாத இந்துக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்துத்வா என்ற பெயரில் அரசியல் செய்யும், பா. ., மீதும் அதன் தலைவர்கள் மீதும் ஆத்திரம் வந்தால், அந்தக் கட்சியோடும், அதன் தலைவர்களோடும் சண்டை போடுவதில் அர்த்தம் இருக்கிறது. அதை விடுத்து, எந்த வம்பு தும்புக்கும் போகாமல் தானுண்டு தன் வேலையுண்டு என வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை காயப்படுத்தும் வகையில், இந்து மதத்தையும் கடவுளையும், சடங்குகளையும் அசிங்கமாக கேலி செய்வது முறையா என அவர்கள் கேட்கின்றனர்”.

Stalin 60th marriage-2

இந்துக்கள் வேறு; தமிழர்கள் வேறுவாதம்[8]: தினமலர் தொடர்ந்து சொல்வது[9], “சமூக வலைதளங்களில் முழு நேரத்தையும் செலவிடும் அறிவுஜீவிகள், ‘இந்துக்கள் வேறு; தமிழர்கள் வேறுஎன்ற விஷக்கருத்தையும் திட்டமிட்டு விதைக்கின்றனர். இந்த செயல்கள் ஜாதிகளைத் தாண்டி ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் இன்று விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக, தினமும் வீட்டிலோ, கோவிலிலோ சாமி கும்பிடத் தவறாத பெண்கள், இந்த விஷயத்தை எப்போதும் இல்லாத அக்கறையுடன் விவாதிக்கின்றனர். ‘ஏட்டிக்கு போட்டியாக எதுவும் சொல்லாமல், செய்யாமல் விடுவதால் தான், ஸ்டாலினுக்கும் அவரை வழிநடத்துபவர்களுக்கும் குளிர்விட்டு போய்விட்டது. குறைந்தபட்சம், நமது வலியை அவருக்கு உணர்த்தும் வகையில், இந்த தேர்தலில், தி.மு.., வேட்பாளர்களுக்கு ஓட்டு போடக்கூடாது என்ற நிலைப்பாடு எடுப்போம்என, இந்துக்கள் முடிவு எடுத்து வருகின்றனர்.”

Anti-Hindu, Stalin acts in a different way-3

ஸ்டாலின் கொடுத்த விளக்கம்[10]: தினமலர் தொடர்ந்து சொல்வது[11], ‘தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட, பா.ஜ.,வுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டு போடுவோம்’ என்று சிலர் தொடங்கிய பிரசாரம், பெரிய விளைவை ஏற்படுத்த முடியவில்லை. அதனால், அதையே சற்று மாற்றி, ‘தி.மு.க.,வை தவிர யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள்’ என்று கூறத் தொடங்கியுள்ளனர். வீரமணியின் பேச்சை, ஸ்டாலின் மனப்பூர்வமாகவும் தெளிவாகவும் கண்டிக்க மறுத்த பின், இந்த பிரசாரம் சூடு பிடித்திருக்கிறது. யார் சொன்னதையோ கேட்டு முதல்வர் மீது கொலைக்குற்றம் சாட்டத் தெரிந்த ஸ்டாலினுக்கு, உள்ளங்கை நெல்லிக்கனியாக கிருஷ்ணரை, வீரமணி அவதுாறாக பேசியது புரியவில்லையா என பலரும் ஆவேசமாக கேட்கின்றனர். ஊர் ஊராக இந்துக்கள் ஒன்றுகூடி, தி.மு.க.,வுக்கு ஓட்டு போட மாட்டோம் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. தேர்தலுக்குள் இதன் வேகமும், தாக்கமும் அதிகமாகும் என்பது தெரிகிறது. நிலைமை சீரியசாகி வருவதால், தி.மு.க., மேலிடத்தில் மிரட்சி தோன்றியுள்ளது. ‘இந்துக்களுக்கு நாங்கள் விரோதி அல்ல. என் மனைவி கோவில்களுக்கு செல்கிறார். அதை நான் தடுத்ததே இல்லை’ என, பிரசார மேடைகளில், ஸ்டாலின் விளக்கம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

வேதபிரகாஷ்

14-04-2019

Anti-Hindu, Stalin acts in a different way-2

[1] http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-feb19/36758-2019-03-07-04-12-33

[2] HYMN LXXXV. Sūrya’s Bridal. Rig Veda, tr. by Ralph T.H. Griffith, [1896], at sacred-texts.com; http://www.sacred-texts.com/hin/rigveda/rv10085.htm

[3] Dr Veeraswamy Krishnaraj, M.D,Woman and Four Husbands, https://www.bhagavadgitausa.com/woman_and_four_serial_husbands.htm

[4] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு..,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,

Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .

[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=2253579

[6] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு..,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,

Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .

[7] https://www.dinamalar.com/news_detail.asp?id=2253579

[8] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு..,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,

Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .

[9] https://www.dinamalar.com/news_detail.asp?id=2253579

[10] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு..,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,

Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .

[11] https://www.dinamalar.com/news_detail.asp?id=2253579

அலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்! [2]

ஏப்ரல் 16, 2019

அலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்! [2]

Yogi and Mus;ims friendship

தேர்தல் ஆணையம் நோட்டீஸ்: “பச்சை” நிறத்தை வைத்து, வைரஸ் என்றும் முஸ்லிம்களின் ஓட்டுவங்கியை விமர்சித்தார். மேனகா காந்தி, முஸ்லிம்கள் தனக்கு ஓட்டுப் போடமாட்டார்கள் என்று அறிந்ததும், இனி சலுகைக்ளும் அவ்வாறே கிடைக்காது என்று பேசினார். இதுபோன்ற பிரச்சாரம் மதவாதப் பேச்சாக இருப்பதாக யோகி மீது தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பல புகார்கள் வருகின்றன[1]. இவர் மூன்று தினங்களுக்கு முன் சஹரான்பூரில் பேசியபோது ‘அலி’ என முஸ்லிம் மற்றும் ‘பஜ்ரங்பலி’ என இந்துக்கள் வாக்குகளையும் குறிப்பிட்டு பேசினார்[2]. இது விதிமீறல் எனக் கூறி மத்திய தேர்தல் ஆணையம் யோகியிடம் விளக்கம் கேட்டு நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது[3]. இதேபோல், அலிகரில் யோகி பேசியதன் மீதும்  24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் ஆணையத்திற்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது[4].

UP and Muslim politics

உபியின் நிலையும்,தேர்தல் களமும்: வாக்காளர்களை மதம், ஜாதி ரீதியில் கணக்கிட்டு, வெற்றிப் பெறுவது எப்படி என்று திட்டம் போட்டப் பிறகு, கூட்டணி சித்தாந்தம் நீர்த்து, மேடைப் பேச்சுகளும் மாறத்த்ஹான் செய்யும். அதனால், 07-04-2019:  சகரன்பூரில் மாயாவதி: “உத்தரபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த எண்ணினால், உங்கள் வாக்குகளை பிரிக்காமல், மாபெரும் கூட்டணிக்கு பதிவிடுங்கள்,” என்று மதரீதியிலாக, இவ்வாறு பிரசாரம் செய்ததால், 19% உபி முஸ்லிம்கள் குழம்பியுள்ளனர். புகார் கொடுக்கப் பட்டது. பதிலுக்கு, 09-04-2019 அன்று, யோகி ஆதித்யநாத் ”மாயாவதிக்கு… முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேவை. மாபெரும் கூட்டணிக்கு மற்ற மக்களின் வாக்குகளை விரும்பவில்லை….காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அலி மீது நம்பிக்கை உள்ளது என்றால், எங்களுக்கு பஜ்ரங்பலி மீது நம்பிக்கை உள்ளது!,”என்று பதில் அளித்தார். உடனே அடுத்த நாள் 10-04-2019 அன்று, மாயாவதி டுவிட்டரில்: “ராம நவமிக்கு என் வாழ்த்துக்கள் பஜ்ரங்பலி மற்றும் அலி இடையில் வெறுப்பு மற்றும் மோதல் தேவையில்லை…. பஜ்ரங்பலி ஒரு தலித், அதனால், தலித்துகள் எனக்கு ஓட்டுப் போடுங்கள்”, என்று டுவிட்டரில் பதிவு செய்தார். உடனே ஆஸம் கான் அலி-பஜ்ரங் பலி என்று கூப்பாடு போட்டதை கவனிக்கலாம்!

Stali condemned Rama rath yathra

தென்னிந்திய திராவிடமும், தமிழக ராமர் துவேசமும்: தமிழகத்தில் ராமசாமி மற்றும் ராமச்சந்திரன் இவர்களின் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. இங்கோ ராமரை தூஷிக்கும் வம்சம், நானும் இந்து என்று புலம்பல்! ஆக, நாடு முழுவதும் ராமர் பெயரை வைத்துக் கொண்டு எப்படி நடிக்கிறார்கள், என்பதை கவனிக்கலாம்! உண்மையில் ராமர் தான் எல்லா ஜாதிகளையும் உயர்த்தியவர், தன்னுடைய நண்பகளாக்கிக் கொண்டவர், அதனால் தான், “மரியாதா புருஷோத்தமன்” என்று அழைக்கப் படுகிறார். படகோட்டி, ஜடாயு, வானரன், ஜாம்பவான், விபீஷணர், சபரி என்று கிரி-வன ஜனங்கள் எல்லோருமே நண்பர்கள், வணக்கத்திற்கு உரியவர்கள் ஆனார்கள். சூர்ப்பனகை, அகலிகை, சபரி, மண்டோதரி, கைகேயி என்று பலதரப்பட்ட பெண்களுக்கு உயர்ந்த இடம் கொடுத்தவர் ராமர். ராமன் எத்தனை ராமனடி மட்டுமில்லை, ஜாதியம் இல்லாமல், எல்லா நகர்புற, காடுகள், மலைகள் வாழ் மக்களை உயர்த்திய ராமனடி என்றானார்! இங்கிருக்கும் திராவிடப் பதர்கள், ராமரைத் தூற்றி, தூஷித்து, திராணி இல்லாமல் பெண்டாட்டிகளை வைத்து சாமி கும்பிடுகிறார்கள். ராமதூதர்கள் மக்களுக்கு தொண்டாற்றுபவர்கள், திராவிட ராமசாமிகளோ கோவில்களை இடிப்பவர், சிலைகள் திருடுப்பவர், சொத்துகளை அபகரிப்பவர்…….என்றகி விட்டனர்.

75 years old man killed canvassing for Modi 14-04-2019

13-04-2019, சனிக்கிழமை, தஞ்சாவூர், ஒரத்தநாடு: தஞ்சை அருகே மோடியின் படத்தை கழுத்தில் வாக்கு கேட்ட முதியவர் 13-04-2019 அன்று கொலை செய்யப்பட்டார்[5]. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஆங்காங்கே வாக்கு சேகரிப்பு நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (75)[6]. ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை பண்ணை அலுவலக ஊழியராக இருந்து வந்தார். இவருக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தற்போது குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோவிந்தராஜ் தனியாக வசித்து வந்தார். இவர் பாஜகவில் இல்லாவிட்டாலும் மோடி மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பிரசாரம் இதனால் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க முடிவு செய்தார்[7]. அதன்படி ஒரத்தநாடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.  மோடியின் புகைப்படம் மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் மோடிக்கு வாக்களியுங்கள், மோடிக்கு வாக்களியுங்கள் என்றே வலியுறுத்தி வந்தார்[8]. இந்த நிலையில் கோவிந்தராஜ், ஒரத்தநாடு பஸ் நிலையம் அருகே மோடியின் படத்தை கழுத்தில் மாட்டிக் கொண்டு பிரசாரம் செய்தார்[9].

Modi followers killed 13-04-2019, Tamil news cutting.3

மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த 75 வயது கிழவர் அடித்துக் கொலை: முதியவருடன் தகராறு அப்போது அங்கிருந்த கடைக்காரர்கள், வாடிக்கையாளர்களிடம் வாக்குச் சேகரித்தார். அங்கு ஒரத்தநாட்டை அடுத்த கண்ணந்தங்குடி மேலையூரை சேர்ந்த பஸ் ஓட்டுநர் கோபிநாத் என்பவர் முதியவருடன் தகராறில் ஈடுபட்டார்[10]. பின்னர் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடை——-ந்த கோபிநாத், முதியவரை சரமாரியாக அடித்து உதைத்தார். வலி தாளாமல் அலறினார். சிறிது நேரத்தில் அவர் மயங்கினார்[11]. அப்போது அக்கம்பக்கத்தினர் மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரபரப்பு எனினும் அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்[12]. இதையடுத்து முதியவரின் மகள் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் கோபிநாத்தை கைது செய்தனர்[13]. முதியவர் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Modi followers killed 13-04-2019, Tamil news cutting.2

ஸ்டாலின் திருமண மந்திரங்களை தூஷித்துப் பேசியது[14]: ஸ்டாலின், பேசும்போது, “…………….இடையிலே நெருப்பை மூட்டி, புகை மண்டலத்தை கிளப்பி, ..ஹோமம் வளர்ப்பார்கள், புகை வரும்…அப்புகை மணப்பெண்ணுக்கு கண்ணீர் வரவழைக்கும்….வந்திருக்கும் மற்றவர்களுக்கும் கண்ணீர் வரவழைக்கும்….ஐயர் மந்திரம் சொல்வார், அவர் சொல்லும் மந்திரங்கள் மற்றவர்களுக்கும் புரியாது, உங்களுக்கும் தெரியாது…எல்லா கடவுளர்களையும் அழைப்பார், முக்கோடி தேவர்களையும் அழைப்பார்…அதன் உள்ளர்த்தத்தை நினைத்து பார்த்தீர்கள் ஆனால், உடல் எல்லாம் நடுங்கும், அவ்வளவு கேவலமாக அந்த மந்திரங்கள் இருக்கும்……பிறகு சந்திரனை, இந்திரனை எல்லாம் அழைப்பர்…..”, என்றெல்லாம் கூறி முடித்தார்.

வேதபிரகாஷ்

14-04-2019

Stalin on marriage mantras

[1] தினபூமி, தேர்தல் விதிமீறல் எதிரொலி: யோகி,மாயாவதி பதிலலிக்க தேர்தல் ஆணையம் கெடு, வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2019.

[2] http://www.thinaboomi.com/2019/04/12/107923.html

[3] நியூஸ்.18, யோகி ஆதித்யநாத், மாயாவதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ், Web Desk | news18, Updated: April 12, 2019, 12:22 PM IST.

[4] https://tamil.news18.com/news/national/ec-issues-show-cause-notice-to-yogi-adityanath-and-mayawati-for-violating-model-code-of-conduct-va-139065.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, தஞ்சையில் பயங்கரம்.. மோடி படத்தை கழுத்தில் போட்டு வாக்கு கேட்ட முதியவர் கொலை, By Vishnupriya R | Updated: Sunday, April 14, 2019, 12:40 [IST] .

[6] https://tamil.oneindia.com/news/thanjavur/elder-man-murdered-for-asking-vote-for-bjp-in-tanjore-346864.html

[7] விகடன், மோடி, எம்.ஜி.ஆர் படங்களுடன் பி.ஜே.பிக்கு வாக்குக்கேட்ட முதியவர் கொலை! – தஞ்சை டிரைவர் கைது, வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (14/04/2019) கடைசி தொடர்பு:17:40 (14/04/2019).

[8] மாலைமலர், பா...வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட சமூக ஆர்வலர் அடித்து கொலை, பதிவு: ஏப்ரல் 14, 2019 10:36; மாற்றம்: ஏப்ரல் 14, 2019 13:54.

[9] https://www.maalaimalar.com/News/District/2019/04/14103609/1237084/BJP-support-campaign-social-activist-murder-police.vpf

[10] தமிழ்.வெப்.துனியா, மோடியின் படத்தை அணிந்திருந்த முதியவர் கொலை, Last Modified ஞாயிறு, 14 ஏப்ரல் 2019 (18:32 IST).

[11] https://tamil.webdunia.com/article/lok-sabha-election-interesting-facts/killing-a-voter-wearing-modis-image-119041400025_1.html

[12] நக்கீரன், மோடிக்கு ஓட்டுக் கேட்ட முதியவரை அடித்துக் கொன்ற டிரைவர்!, பகத்சிங், Published on 14/04/2019 (23:23) | Edited on 14/04/2019 (23:32)

[13] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/thanjavur-district-orathanadu

[14] https://www.youtube.com/watch?v=RhSkE9mnbYM