Archive for the ‘கற்பழிப்பு’ Category

மனித நேய மக்கள் கட்சி வைத்த பதாகை, எதிர்ப்பு தெரிவித்த பிஜேபி, வருத்தம் தெரிவித்த கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா!

ஜூலை 30, 2023

மனித நேய மக்கள் கட்சி வைத்த பதாகை, எதிர்ப்பு தெரிவித்த பிஜேபி, வருத்தம் தெரிவித்த கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா!

மணிப்பூர் பிரச்சினை தமிழகத்தில் அரசியலாக்கப் படுவது: மணிப்பூர் பெண்கள் விவகாரத்தை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி வைத்துள்ள பேனர் சர்ச்சையை ஏஎற்படுத்தியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி இனக்கலவரம் வெடித்தது. அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பழங்குடி சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி ஆகிய சிறுபான்மை சமூகங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் வெடித்த வன்முறை காரணமாக அம்மாநிலம் கலவர பூமியாக காட்சியளிக்கிறது. இதைப் பற்றி தினமும் இணைதளங்களில் விவாதங்களும் நடந்து வருகின்றன. இந்த பிரச்சினை சம்பந்தப் பட்டு, கருத்துத் தெரிவித்த பத்ரி சேஷாத்ரி என்பவர் கைது செய்யப் பட்டுள்ளார். அந்நிலையில், மனித நேய மக்கள் கட்சி இவ்வாறு அரசியல் மற்றும் மதரீதியில் பதாகை வைத்துள்ளது திகைப்பாக இருக்கிறது.

தமிழக முஸ்லிம் கட்சிக்கு மணிப்பூர் பழங்குடி பிரச்சினை இவ்வளவு நாட்கள் தெரியாமல் இருந்தது ஏன், எப்படி?: இங்கு பழங்குடியினர், பட்டியல், பழங்குடியினர் பட்டியல், கிறிஸ்தவர் எதிர்ப்பு முதலிய விசயங்களைப் பற்றி விவாதிக்காமல் இருக்கின்றார்கள். பர்மா / மியாம்பாரிலிருந்து இந்தியாவில் அந்நாட்டினர் நுழைந்து கொண்டே இருக்கிறார்கள். ரோஹிங்யா முஸ்லிம்கள் நுழைவது தெரிந்த விசயமாகி விட்டது. அதை வைத்து தான் மேற்கு வங்காளம், அசாம் போன்ற மாநிலங்களில் முஸ்லிம் அரசியல் நடத்தப் படுகிறது. இங்கு, கிறிஸ்தவர்களாக பழங்குடியினர் இருக்கின்றனர். அதே நேரத்தில் கிறிஸ்தவர் அல்லாத இந்துக்களும் பழங்குடிகளாக இருக்கின்றனர். இதனால், அவர்களுக்கும் எஸ்.டி அந்தஸ்து கொடுக்கவேண்டும் எனும்பொழுது, அதில் தான் இப்பிரச்சினை வந்துள்ளது. அதை ஏன் இன்னொரு பழங்குடி எதிர்க்க வேண்டும், அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினை மதமா, மொழியா, கலாச்சாரமா அல்லது எது. ஆனால், இதைப் பற்றி விவாதிக்காமல் குறிப்பிட்ட சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய எதிர்கட்சியினர் தீர்மானித்து, அதை இங்கு தமிழகத்தில் ஒரு முஸ்லிம் கட்சி கையாள்வது திகைப்பாக இருக்கிறது.

குழப்பமான, சிக்கலான, ஜாக்கிரதையாக அணுக வேண்டியுள்ள மணிப்பூர் பிரச்சினை: மணிப்பூர் வன்முறையில் சிக்கி இதுவரை 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். அம்மாநிலத்தை விட்டு வெளியேறி அண்டை மாநிலங்களில் பலரும் சென்று வருகின்றனர். இதனிடையே, கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாவட்டத்தின் காங்க்போக்பி மாவட்டத்தில், குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பெண்கள் வன்முறை கும்பலால் கடத்தப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்டு அவமதிப்பு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 19 வயதுள்ள ஒரு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதைத் தட்டிக் கேட்ட அப்பெண்ணின் சகோதரர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யபட்டுள்ளார். மேலும் ஒரு இளைஞரும் கொல்லப்பட்டுள்ளார். அம்மாநில பிரச்சினைகள் பலவிதங்களில் விவரிக்கப் பட்டு வருகின்றன. பலவிசயங்களில் வெளிப்படையாக விவாதிக்கப் படும் நிலையிலுமில்லை எனத்தெரிகிறது.

ராமன் லட்சுமணனாக மோடியும், அமித்ஷாவும் சிரித்தப்படி நிற்கும் பேனரை வைக்கைப் பட்டது:  கடந்த மே மாதம் 4ஆம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பால் அருகே நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மணிப்பூர் விவகாரத்தை கண்டிக்கும் விதமாக, நிர்வாணமாக வேதனையுடன் நிற்கும் பெண்ணின் அங்கங்களை தேசியக் கொடிக் கொண்டும் மறைத்து, அவளின் அருகில் ராமன் லட்சுமணனாக மோடியும், அமித்ஷாவும் சிரித்தப்படி நிற்கும் பேனரை வைத்துள்ளனர். மனித நேய மக்கள் கட்சி ஒரு முஸ்லிம் கட்சி, அதற்கும் இதற்கும் இப்பொழுது என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. இருப்பினும், ஆளும் திமுகவுடன் கூட்டு சேர்ந்து, “திராவிடத்துவ” சித்தாந்தத்தை ஆதரிப்பது போலக் காட்டிக் கொள்வதால், அது இவ்வாறு அரசியல் மற்றும் மதம் என்று இரண்டையும் சேர்த்து, இத்தகைய பதாகை வைப்பது கேள்விக்குரியாகியுள்ளது.

பிஜேபி எதிர்ப்புத் தெரிவித்தது, போலீஸார் பதாகையை அப்புறப்படுத்தியது: திண்டுக்கல் வத்தலக்குண்டுவை சேர்ந்த பா.ஜ.க.வினர் 29-07-2023 அன்று வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். வத்தலக்குண்டுவில், காளியம்மன் கோவில் பகுதியில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக பேனர் வைத்துள்ளது. அந்த பேனரில் ராமர், சீதா, லட்சுமணன் போன்று சித்தரித்து இருப்பதாகவும், தேசியக்கொடியை அவமதித்து இருப்பதாகவும் கூறி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காளியம்மன் கோவில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனரை போலீசார் அகற்றினர்[1]. அதன்பின்னர் பா.ஜ.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது[2]. இங்கும் போலீஸார் தான் அதனை அப்புறப் படுத்தியுள்ளார்கள் என்று தெரிகிறது. மனித நேய மக்கள் கட்சியினர் அப்புறப் படுத்தவில்லை என்றாகிறது.

பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி மனித நேய மக்கள் கட்சி தடை செய்யப் பட வேண்டும் என்று அறிக்கை விடுத்தது: இந்த நிலையில், மணிப்பூர் பெண்கள் விவகாரத்தை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சார்பில் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது[3]. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் அக்கட்சி இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி, நமது நாட்டையும், இந்து மதத்தை அவமதிக்கும் செயல் என அந்த பேனருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்[4]. இந்த பேனர் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இதனைச் செய்த மனிதநேய மக்கள் கட்சியைத் தமிழகத்தில் இருந்து தடை செய்ய வேண்டும் ட்விட்டரில் பாஜகவினர் கொந்தளித்து வருகின்றனர். இது தொடர்பாக பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “மனிதநேய மக்கள் கட்சி என்ற பெயரில் தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் இந்த செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்வதோடு, மனித நேய மக்கள் கட்சியை உடனடியாக தடை செய்ய வேண்டும்[5]. முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களின் உருவத்தை கேலி சித்திரம் வரைந்ததற்காக சிலரை செய்யும் காவல் துறை, இந்து கடவுளை, நாட்டின் பிரதமரை கேலி சித்திரம் மூலம் அவதூறு செய்யும் பதர்களைக் கைது செய்யாதது ஏன்? மதக் கலவரத்திற்கு வித்திடும் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகளை, தலைவர்களை கைது செய்ய தயங்குவது ஏன்?,” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்[6].

மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா அருத்தம் தெரிவித்தது: முன்னதாக, இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்கள் குழு வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் மணிப்பூர் மாநிலத்துக்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது. இதுகுறித்து இரு அவைகளிலும் விவாதித்து பிரதமர் மோடி விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது[7]. இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்[8], “திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் மணிப்பூர் தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்காக ஒரு விரும்பதகாத விளம்பர தட்டி ஒன்று கட்சியை சேர்ந்த ஒரு சிலரால் வைக்கப்பட்டிருந்தது[9]. இப்படியான ஒரு விளம்பர தட்டி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிந்ததும் மேல் நிலை நிர்வாகிகள் இத்தட்டியை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுத்தார்கள்[10]. தட்டி வைக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்தில்.  போராட்டம் தொடங்குவதற்கு முன்பே இந்த விரும்பதகாத தட்டி அப்புறப்படுத்தப்பட்டது[11]. மனிதநேய மக்கள் கட்சி எந்த மதத்தினரின் உள்ளங்களையும் புண்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் கட்சியல்ல[12]. இந்த விரும்பத்தகாத தட்டி வைப்பதற்கு காரணமானவர்கள் வன்மையாக கண்டிக்கப்பட்டார்கள்[13]. அவர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விளம்பரத் தட்டியால் எவரது உணர்வு பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன்,” என ஜவாஹிருல்லா கூறியுள்ளார்[14].  

பிஜேபி எதிர்ப்பு அரசியல்-இந்துஎதிர்ப்பு: அமித் ஷா வந்துள்ள நிலையில், இத்தகைய நிகழ்ச்சி நடந்துள்ளது. நிச்சயமாக, தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளுக்கு மணிப்பூர் பிரச்சினை முழுவதுமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்பொழுது, எதிர்க்கட்சியினர் இதனை வைத்து அர்சியல் செய்யும் நிலையில், மனிதநேய மக்கள் கட்சியினருக்கு கற்பனை அவ்வாறு வேலை செய்து, அரசியல் மற்றும் மதரீதியில் தாக்க அத்தகைய சித்தரிப்பைச் செய்துள்ளனர். முன்பு பெரியார், திகவினர் தயாரித்த ஆபாச சித்திரங்கள் போலத்தான் இதுவும் உள்ளது. அதனால், தலைவரும் இரச்சினை பெரிதாகும் முன்பே, ஜவாஹிருல்லா எம்எல்ஏ வருத்தம் தெரிவித்துள்ளார். இந்துக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இனிமேல் அரசியல்வாதிகள் தங்களுக்குள் சண்டைப் போட்டுக் கொள்வதானால், இந்து மத சின்னங்களை தவறாகப் பயன் படுத்தக் கூடாது என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

கவனிக்க வேண்டிய விசயங்கள்: ஒரு சாதாரண இந்து என்ற முறையில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்:

  1. வத்தலகுண்டுவில் வைக்கப் பட்ட சர்ச்சைக்குரிய பதாகையை அப்புறப் படுத்தியது மனிதநேய மக்கள் கட்சி மேல் நிலை நிர்வாகிகளா, போலீஸாரா?
  2. இருவரும் அப்புறப் படுத்தினர் என்றால் பல பதாகைகள் வைக்கப் பட்டது போலும். அத்தகைய சித்திரிப்பு எவ்வாறு வந்தது?
  3. முன்பு பெரியார், திகவினரின் சித்தரிப்பு போன்றுள்ள இது அத்தகையதா? அரசியலுடன் ஏன் மதத்தை சம்பந்தடுத்தப் படுத்துகின்றனர்?
  4. அப்படியென்றால் மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா பிரச்சினை பெரிதாகும் முன்னர் அறிக்கை வெளியிட்டுள்ளார்!
  5. ஆக இனி தமிழக அரசியல் கட்சிகள் பிஜேபி எதிர்ப்பு, இந்து எதிர்ப்பாக இருக்கக் கூடாது என்பதைப் புரிந்து கொண்டிருப்பர்!
  6. மலேசிய இந்துக்கள் மற்றும் வத்தலகுண்டு இந்துக்கள், இந்து துவேச-எதிர்ப்பாளர்களுக்கு பாடம் போதித்துள்ளனர்.
  7. எம்.பி, எம்.எல்.ஏ என்றெல்லாம் இருந்தாலும், இனி இந்துவிரோத பேச்சு, செயல், விமர்சனம் என்றெல்லாம் வரும் போது யோசிப்பர் எனலாம்!
  8. பெரியாரிஸம், நாத்திகம், செக்யூலரிஸம் போன்ற போர்வைகளில் தொடர்ந்து இந்துமதத்தைத் தாக்கினால் இந்துக்கள் தட்டிக் கேட்கவேண்டும்.
  9. ஜவாஹிருல்லா இந்த விளம்பரத் தட்டியால் எவரது உணர்வு பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்!
  10. இது போல இனி திருமா அல்லது வீரமணி போன்றோரும் தங்கள் இஷ்டத்திற்கு பேசினால், எழுதினால் புகார் அளிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

30-07-2023


[1]  தினத்தந்தி, போலீஸ் நிலையத்தை பா...வினர் முற்றுகை, தினத்தந்தி ஜூலை 29, 1:30 am (Updated: ஜூலை 29, 1:30 am)

[2] https://www.dailythanthi.com/News/State/bjp-lay-siege-to-the-police-station-1018247

[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், மணிப்பூர் பெண்கள் விவகாரம்: மனித நேய மக்கள் கட்சி பேனருக்கு எதிர்ப்பு!, Manikanda Prabu, First Published Jul 30, 2023, 12:54 PM IST; Last Updated Jul 30, 2023, 12:54 PM IST,

[4] https://tamil.asianetnews.com/tamilnadu/condemns-over-manithaneya-makkal-katchi-poster-opposes-manipur-women-issue-ryllwn

[5] காமதேனு, சர்ச்சை பேனர்மனிதநேய மக்கள் கட்சியைத் தடை செய்ய கோரும் பாஜக!, Updated on : 29 Jul 2023, 9:15 pm

[6] https://kamadenu.hindutamil.in/politics/tnbjp-said-manitha-neya-makkal-party-should-be-banned

[7] தமிழ்.ஒன்.இந்தியா, ராமர், லட்சுமணனாக மோடி, அமித்ஷா.. வருத்தம் தெரிவித்தார் ஜவாஹிருல்லா! அப்படி என்ன பேனர் அது?, By Noorul Ahamed Jahaber Ali Published: Sunday, July 30, 2023, 9:07 [IST].

[8] https://tamil.oneindia.com/news/chennai/mmk-leader-jawahirullah-said-regret-for-controversial-banner-in-dindugal-525279.html

[9] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், ராமர், லட்சுமணன், மோடி, அமித்ஷா படத்துடன் போஸ்டர்: எதிர்த்த பா..; வருத்தம் தெரிவித்த ஜவாஹிருல்லா, Written by WebDesk

July 30, 2023 14:10 IST.

[10] https://tamil.indianexpress.com/tamilnadu/narayanan-thirupathy-condems-manithaneya-makkal-katchi-jawahirullah-asks-sorry-poster-731529/

[11] தமிழ்.வெ.துனியா, சர்ச்சைக்குரிய விளம்பர பதாகை: மனிதநேய மக்கள் கட்சி விளக்கம்..!, Written By Siva Last Updated : ஞாயிறு, 30 ஜூலை 2023 (14:31 IST).

[12] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/manitha-neya-makkal-katchi-explain-about-controversy-banner-123073000035_1.html

[13] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், மதக்கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் மமக! கொதிக்கும் பாஜக! வருத்தம் தெரிவித்த ஜவாஹிருல்லா! நடந்தது என்ன?, vinoth kumar, First Published Jul 30, 2023, 8:42 AM IST; Last Updated Jul 30, 2023, 8:49 AM IST.

[14] https://tamil.asianetnews.com/politics/controversy-banner-jawahirullah-expressed-regret-ryla8i

அப்பாஸ் என்ற அருண்ராஜ் துலுக்கன் என்றால் ஆனந்த் யார், கூட்டு-பலாத்காரம் நடந்தது கோயிலுக்கு முன்புறமா, உள்ளேயா? துலுக்கன் ஏன் கோயிலுக்குள் செல்ல வேண்டும்? (2)

ஜனவரி 10, 2021

அப்பாஸ் என்ற அருண்ராஜ் துலுக்கன் என்றால் ஆனந்த் யார், கூட்டுபலாத்காரம் நடந்தது கோயிலுக்கு முன்புறமா, உள்ளேயா? துலுக்கன் ஏன் கோயிலுக்குள் செல்ல வேண்டும்? (2)

வீட்டிற்குச் சென்று மிரட்டியவர்கள் வேறு என்றால், அவர்கள் யார்?: அலங்கோலமான நிலையில் நடக்க கூட முடியாமல் சந்திரா அங்கேயே கிடந்தார்.  “அந்த பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்,” என்கிறது தினத்தந்தி[1]. அந்த சமயம் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் சந்திராவின் சகோதரி வீட்டுக்கும் சென்று உன் தங்கை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து வெளியில் கூறினால் உங்களை உயிரோடு விட மாட்டோம் என கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர்[2]. இதையடுத்து சந்திராவின் சகோதரி மற்றும் அவரது கணவர் பதறியடித்து கொண்டு பிள்ளையார் கோவிலுக்கு சென்றனர். அங்கு கோவில் முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மயங்கி கிடந்த சந்திராவை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சந்திராவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. “அக்கா வீட்டிற்கு வராததால், சந்தேகமடைந்த தங்கை, பல இடங்களில் தேடினார். அதிகாலை வீட்டிற்கு வந்த அக்கா, நடந்த விபரங்களை கூறியுள்ளார். இதையடுத்து, அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்,” என்று தினமலர் விவரித்துள்ளது[3]. ஆக பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனரா அல்லது சந்திராவின் சகோதரி மற்றும் அவரது கணவர் பதறியடித்து கொண்டு பிள்ளையார் கோவிலுக்கு சென்று(?) அங்கு கோவில் முன்பு(?) பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மயங்கி கிடந்த சந்திராவை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனரா?

சிசிடிவி காட்சிகள் / காணோலி மூலம் அடையாளம் காணப் பட்டு, இருவர் கைதானது: “அந்த பெண் தற்போது நலமாக உள்ளார் என நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா தெரிவித்தார். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் பின்தொடரும் சிசிடிவி காட்சிகள் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. இந்த காணொளி, இந்த வழக்கு விசாரணையில் முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது. இதேவேளை, பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரியை குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் அவரது வீட்டுக்கு சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்,” என்று பிபிசி.தமிழ் விவரிக்கிறது. ஆனால், கைதான பிறகும், அவர்களின் பெயர்களை முதலில் குறிப்பிடாதது திகைப்பாக இருக்கிறது. இங்கு கற்பழித்தார்கள் இருவர் என்றால், வீட்டிற்குச் சென்று மிரட்டியது யார் என்று தெரியவில்லை.

இருவர் மீது வழக்குப் பதிவு, கைது: விசாரணையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய அருண்ராஜ், ஆனந்த் ஆகிய இருவர் மீதும் கூட்டு பலாத்காரம், தகாத வார்த்தைகளால் திட்டியது, அச்சுறுத்தி பொருட்களை பறித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் / ஐ.பி.சி. 376 (பலாத்காரம்), 506 பிரிவு 2 (கொலை மிரட்டல்), 294 (பி) (அசிங்கமாக பேசுதல்) உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்[4]. இது குறித்து சந்திரா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த அருண்ராஜ், ஆனந்த் ஆகிய 2 பேரையும் பிடித்து கைது செய்தார்[5]. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து வெளிப்பாளையம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து தூக்கிலிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மாதர் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் நாகை மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கற்பழித்தலில் ஒருவன் துலுக்கன் என்பதை ஊடகங்கள் மறைப்பது ஏன்?: தேவநாதன் கோவிலுக்குள் சில்மிஷத்தில் ஈடுபட்டதற்கு ஊடகங்கள் பொங்கின, வாத-விவாதங்கள் நடத்தப் பட்டன. இப்பொழுது, அருண்ராஜ்-ஆனந்த் ஒரு பெண்ணை கோவிலுக்குத் தூக்கிச் சென்று கற்பழித்தாலும், எவனும் பொங்கவில்லை. காமுகன், மன்மத குருக்கள், என்றெல்லாம் வர்ணித்தனர், ஆனால், இங்கு கற்பழிப்பிலும் ஒன்றையும் காணோம். ஆனால், கோவிலுக்குள் பலாத்காரம் என்று தலைப்பிட்டு செய்தியை வெளியிட்டுள்ளதை கவனிக்கலாம். அதாவது, மறுபடியும், கோவிலிக்குள் அத்தகைய நிகழ்வு நடந்துள்ளது போன்ற பிம்பத்தை உருவாக்குகிறத். உபியைக் குறிப்பிட்டாலும், இங்கு கற்பழித்தவன் ஒரு துலுக்கன் என்பதைக் குறிப்பிடாமல் “அப்பாஸ் என்கிற அருண்ராஜ்” என்று நிறுத்துக் கொண்டுள்ளது. எப்படி நிர்பயா வழக்கில் துலுக்கன் ஒருவன் கற்பழித்தானோ, அதேபோல, இங்கும், கூட்டுக் கற்பழிப்பில், ஒரு துலுக்கன் இருக்கிறான். ஆகவே அதனை மறைக்க ஊடகங்கள் முயல்கின்றன என்று தெரிகிறது. துலுக்கன் ஏன் மசூத்திக்கு அல்லது சர்ச்சுக்குத் டூக்கிச் சென்று பலாதகாரம் செய்யவில்லை என்று தெரியவில்லை. கோயில், கோவில் வளாகம் என்று குறிப்பிட்டு பேசும் அளவுக்கு, கற்பழிப்பாளர்கள் இடத்தைத் தேர்ந்தெடுத்து தான் கற்பழிப்பார்களா?

ஊடகங்களின் பாரபட்ச செய்திகளில் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை: ஊடகங்களின் செய்தி வெளியீட்டு முறையில், விசயங்களை ஒழுங்காக வெளியிடாமல் இருப்பதால், பல கேள்விகள் எழுகின்றன:

  1. கோவிலுக்கு முன்பா, கோவிலுக்குள்ளா?
  2. கோவிலா, கோவில் வளாகமா?
  3. பிள்ளையா கோயிலா, மினாட்சி கோயிலா?
  4. பணம் கொடுக்க முன்வந்தும் கற்பழித்தனரா, பணத்தைப் பிடுங்கிக் கொண்டு கற்பழித்தனரா,
  5. மது போதையா, கஞ்சா போதையா?
  6. கற்பழித்ததும், வீட்டுக்குச் சென்று மிரட்டியதும், அதே இருவரா, வேறு இருவரா?
  7. கற்பழிக்கப் பட்ட பெண் – அலறல் கேட்டு மற்றவர் வந்து ஆஸ்பத்தரிக்கு எடுத்துச் சென்றனரா, தங்கை-தங்கை கணவர் வந்து, பார்த்து, அறிந்து அனுப்பி வைத்தனரா?
  8. அப்பாஸ் என்கின்ற அருண்ராஜ் என்று அடையாளம், துலுக்கனைக் காட்டவில்லையா?
  9. பிறகு ஆனந்த், கு.ஆனந்த் யார்?
  10. இருவர்களுக்கும் என்ன கூட்டு?

இப்படி, “இது-அது-எது,” பாணியில், செய்திகள் இருப்பதைக் கவனிக்கலாம். இத்தகைய கேள்விகளுக்கு, பதில் சொல்லியாக வேண்டும். ஊடகங்கள் மற்ற விசயங்களில் புலிகள், ஜாம்பவான்கள் போன்று, எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தது போல, விவரங்களைக் கொடுக்கிறார்கள். ஆனால், இதில், நிச்சயமாக எதையோ மறைக்கிறார்கள்.

செக்யூலரிஸ செய்தி வெளியீடு அவசியம் தேவை, போலி-பொய்யான, சார்புடைய செய்திக்ச்ள் கூடாது:

  1. செக்யூலரிஸ ரீதியில் எல்லாமே இருக்க வேண்டும் என்றால், ஊடகக் கொள்கைகளும் அவ்வாறே இருக்க வேண்டும்.
  2. நாத்திகம், பகுத்தறிவு, பெரியாரிஸம், கம்யூனிஸம் போன்ற போர்வைகளில் இவ்வாறு குழப்பக் கூடாது. இனி மேல், “செக்யூலரிஸ ஜார்னலிஸம்” (Secular Journalism) என்று பாடத்தை (subject), ஊடகவியலில் சேர்க்க வேண்டும் போலிருக்கிறது.
  3. பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா (Press Cuncil of India) ஏற்கெனவே, சில வரைமுறைகள் கொடுத்துள்ளன.
  4. பெண்ணிய ஆணையங்கள், பல நேரங்களில் தூங்கி, சில சமயங்களில் விழித்துக் கொண்டு ஆர்பாட்டம் செய்கிறார்கள்.
  5. கற்பழிப்பு விசயங்களில், செய்திகள் வெளியிடும் விவரங்களில், பாதிக்கப் பட்ட பெண்ணின் பெயர், விவரங்கள் தான் இருக்கக் கூடாது என்றுள்ளது. ஆனால், குற்றத்தைப் புரிந்தவர்களின் விவரங்களை வெளியிடக் கூடாது என்றில்லை.
  6. கைதாகி, வழக்குப் போட்டு, அவர்களது புகைப் படங்கள் போட்டப் பிறகு, அவர்களின் பின்னணியைக் குறிப்பிடாமல் இருப்பது, பத்திரிகா தர்மம் அல்ல (Journalistic ethics), செக்யூலரிஸ பண்டிதத் தனமும்(Journalistic expertise)  இல்லை.
  7. “ஊடக சித்தாந்தம், இந்துவிரோதமானது,” (Journalistic ideology has been anti-Hindu) என்ற கருத்து உருவாகி விட்டது. ஆனால், அதற்காக, இந்துக்கள் அல்லாத குற்றவாளிகளின் அடையாளங்களை மறைப்பதும் குற்றமாகும்.
  8. எல்லோரும் இவ்வாறு ஏன் செய்கிறார்கள் என்று மனோதத்துவம், அரசியல் சார்பு, ஊடகக் காரர்களின் பின்னணி, முதலியவற்றை விசார்க்கும் போது, உண்மை வெளிப்படும்.
  9. இதே நிலை தொடர்வதால், அவையெல்லாம் வெளிப்படும் போது, செய்திகளின் தரம் குறையும். ஏற்கெனவே, “பேக் நியூஸ்,” (Fake news), போலியான-பொய்யான செய்தி (false and falsified news), காசு வாங்கி செய்தி போடுவது (Paid ews), என்றெல்லாம் வெளி வந்தாகி விட்டது.
  10. ஆக, இனி, தமிழகத்தில், திராவிட நாத்திக, நாத்திக சித்தாந்த, சித்தாஎத பகுத்தறிவு, பகுத்தறிவு பெரியாரிஸ, பெரியாரிஸ இந்துத்துவ விரோதிகள், இந்துமத தூஷண கம்யூனிஸ்டுகள் என்றும் எல்லோரும் அடையாளம் காணப் படுவர்.

© வேதபிரகாஷ்

09-01-2021


[1] தினத்தந்தி, கோயிலுக்கு அழைத்துச் சென்று பெண் பலாத்காரம்அத்துமீறிய 2 இளைஞர்கள் அதிரடி கைது, பதிவு : ஜனவரி 08, 2021, 04:31 PM.

[2] https://www.thanthitv.com/News/TamilNadu/2021/01/08163112/2022258/Nagai-Rape-Case.vpf.vpf

[3] தினமலர், கோவிலுக்குள் பலாத்காரம்: நாகையில் 2 வாலிபர் கைது, Added : ஜன 09, 2021 19:41. https://www.dinamalar.com/news_detail.asp?id=2686650

[4] தினகரன், வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய விதவை பெண்ணை தூக்கிச்சென்று கோயிலுக்குள் கூட்டு பலாத்காரம்: 2 வாலிபர்கள் கைது, 2021-01-09@ 04:21:09.

[5] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=645573

அப்பாஸ் என்ற அருண்ராஜ் மற்றும் ஆனந்த் ஒரு பெண்ணை கோயிலுக்குள் தூக்கிச் சென்று கூட்டு-பலாத்காரம் செய்தது ஏன்? (1)

ஜனவரி 10, 2021

அப்பாஸ் என்ற அருண்ராஜ் மற்றும் ஆனந்த் ஒரு பெண்ணை கோயிலுக்குள் தூக்கிச் சென்று கூட்டுபலாத்காரம் செய்தது ஏன்? (1)

IPC 376ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டாலும், கற்பழிப்பு என்று குறிப்பிடாமல், கூட்டு பலாத்காரம் என்ற செய்தி: நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அதனை தடுக்க பல்வேறு சட்டங்களை இயற்றியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்கி வருகிறது. இருந்தபோதிலும் ஜம்மு காஷ்மீரில் கோவிலில் வைத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை, உத்தரபிரதேச மாநிலத்திலும் கோவில் முன்பு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதுபோன்ற ஒரு சம்பவம் தமிழகத்தில் நாகை மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது. இப்படியெல்லாம், பீடிகையுடன் செய்தியை ஆரம்பித்தாலும், வழக்கம் போல, ஊடகங்கள், நிகழ்வுகளை, முன்னுக்கு முரணாக, மாற்றி-மாற்றி, வெவ்வேறு விதமாக வெளியிட்டுள்ளன. கற்பழிப்பு என்ற வார்த்தைப் பிரயோகம் இல்லை, ஆனால், கூட்டு பலாத்காரம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. IPC 376ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது என்கின்றன, அதாவது, கற்பழிப்பு குற்றத்திற்காகத் தான் கைது, வழக்குப் பதிவு எல்லாம். பிறகு, அவ்வாறு செய்தி வெளியிடுவதற்கு என்ன தயக்கம் என்று தெரியவில்லை.

 அப்பாஸ் என்கின்ற அருண்ராஜ் மற்றும் ஆனந்த் கூட்டு பலாத்காரம் செய்தது: நாகை கூட்டு பலாத்காரம் பற்றிய விபரம் வருமாறு என்று ஊடகங்கள் கொடுத்துள்ளவற்றைத் தொகுத்துக் கொடுக்கப் படுகிறன: நாகை மாவட்டம் நாகை தோப்பு அருகே சந்திரா (வயது 40). இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்[1]. இதையடுத்து சந்திரா கொத்தனார் கையாள், சித்தாள் உள்ளிட்ட கிடைக்கும் கூலி வேலை பார்த்து தன் 2 மகள்களையும் கஷ்டப்பட்டு வளர்த்து வந்தார்[2]. இரவு நேரங்களில் தனது மகள்களுடன் அருகிலுள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்று தூங்குவது வழக்கம். வியாழக்கிழமை (07-01-2021) / 06-01-2021 அன்று இரவு சகோதரி வீட்டுக்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்[3]. அப்போது நாகை வண்டிப்பேட்டையைச் சேர்ந்த அப்பாஸ் என்கிற அருண்ராஜ் (25), நாகை அக்கரைக்குளத்தைச் சேர்ந்த ஆனந்த் (26) ஆகிய மது போதையில் இருந்த, 2 வாலிபர்களின் மனதில் சபல புத்தி ஏற்பட்டு சந்திராவை பின்தொடர்ந்து சென்றனர்[4]. ஆனால், பிபிசி.தமிழ், “ அடையாளம் தெரியாத நபர்கள் சிலர்” என்கிறது[5]. மது போதையில் இருந்தனர், கஞ்சா போதையில் இருந்தனர் போன்ற விவரங்களும் இருக்கின்றன. அப்பாஸ் என்கிற அருண்ராஜ் என்று குறிப்பிடுவது விசித்திரமாக இருக்கிறது. அதாவது, கற்பழித்தவர்களில் ஒருவன் துலுக்கன் என்றாகிறது.

கோயிலில், கோவில் வளாகத்தில், கோயிலுக்கு முன்பு பலாத்காரம் என்றெல்லாம் குறிப்பிட்டது: சிறிது நேரத்தில் சந்திராவின் வாயில் துணியால் பொத்தி அவரை சரமாரியாக தாக்கி அங்குள்ள கோவில் வளாகத்துக்கு வலுக்கட்டாயமாக தூக்கி சென்றனர்[6]. பிறகு அவரிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டனர்[7]. அருகிலுள்ள பிள்ளையார் கோயிலுக்குள் தூக்கிச் சென்றுள்ளனர்[8]. “அங்குள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கு இழுத்துச் சென்றுள்ளனர்,” என்கிறது தினத்தந்தி. இரவு நேரமானதால் அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதனை சாதகமாக பயன்படுத்திய அருண்ராஜ், ஆனந்த் இருவரும் சந்திராவை கோவில் முன்பு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இதில் சந்திரா மயங்கி விழுந்தார். அவர்கள் 2 பேரும் இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு உள்ளனர். பின்னர் அவரை விடுவித்தனர். ஏசிய.நெட்.நியூஸ், “எனக்கு குழந்தைகள் இருக்கு விட்டுவிடுங்கள்.. கெஞ்சிய மேகலா….. விடாமல் 4 மணிநேரம் கோயிலுக்குள் வைத்து பலாத்காரம்,” என்று தலைப்பிட்டு, செய்தி வெளியிட்டுள்ளது[9]. “தன்னிடம் இருந்த பணத்தை வாங்கிகொண்டு தன்னை விட்டு விடும்படி அப்பெண் கதறினார். ஆனால் இருவரும் கடுமையாக தாக்கி அதிகாலை 2:00 மணி வரை பலாத்காரம் செய்துள்ளதோடு வெளியில் கூறினால் குடும்பத்தோடு கொலை செய்வதாகவும் மிரட்டி சென்றனர்,” என்கிறது தினமலர்[10].

காமாட்சி கோவிலா, பிள்ளையார் கோயிலா?: தமிழ்.இந்து, “அருகிலுள்ள பிள்ளையார் கோயிலுக்குள் தூக்கிச் சென்றுள்ளனர்”, என்கிறது[11]. “அங்குள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கு இழுத்துச் சென்றுள்ளனர்,” என்கிறது தினத்தந்தி. அந்த அளவுக்கு, அனுபவம் மிக்க நிருபர்களுக்குத் தெரியாமல் போனது தமாஷாக இருக்கிறது. கற்பழித்தவர்கள் யாரென்று தெரியாதது போல, “பிபிசி.தமிழ், “ அடையாளம் தெரியாத நபர்கள் சிலர்” என்கிறது.[12]” ஆக, அந்த ஆட்களின் அடையாளம் தெரியவில்லை, கோயிலின் அடையாளமும் “பிள்ளையார் கோவிலா அல்லது மீனாட்சி கோவிலா” தெரியவில்லை போலும்.

  • அங்குள்ள கோவில் வளாகத்துக்கு வலுக்கட்டாயமாக தூக்கி சென்றனர்[13].
  • அருகிலுள்ள பிள்ளையார் கோயிலுக்குள் தூக்கிச் சென்றுள்ளனர்.
  • ‘…..விடாமல் 4 மணிநேரம் கோயிலுக்குள் வைத்து பலாத்காரம்;
  • அங்குள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கு இழுத்துச் சென்றுள்ளனர்,” என்கிறது தினத்தந்தி.
  • அருண்ராஜ், ஆனந்த் இருவரும் சந்திராவை கோவில் முன்பு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இவ்வாறு கோயிலுக்கு முன்பு, கோயிலுக்குள், கோயில் வளாகத்தில் என்றெல்லாம் மாற்றி-மாற்றிக் குறிப்பிடுவது ஏன்?

பணத்தை வாங்கிகொண்டு தன்னை விட்டு விடும்படி அப்பெண் கதறி உண்மையா அல்லது அவரிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டது உண்மையா?: பல விசயங்களில் எல்லாம் தெரிந்தது போல செய்திகளை வெளியிடும் ஊடகங்கள், இத்தகைய கொடுமையான, விபரீதமான கற்பழிப்பு குற்றங்களில், மாறுபட்ட நிலைகளில் செய்திகளை வெளியிடுவது, திகைப்பாக இருக்கிறது.

  • “……….தன்னிடம் இருந்த பணத்தை வாங்கிகொண்டு தன்னை விட்டு விடும்படி அப்பெண் கதறினார்……..,:என்கிறது தினமலர்[14].
  • சந்திராவின் வாயில் துணியால் பொத்தி அவரை சரமாரியாக தாக்கி அங்குள்ள கோவில் வளாகத்துக்கு வலுக்கட்டாயமாக தூக்கி சென்றனர்[15]. பிறகு அவரிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டனர்[16] என்கிறது தமிழ்.பிபிசி.

இவ்வாறு, ஊடகங்கள் மாற்பட்டு, செய்திகளை வெளியிடுவது ஏன்? விசாரணையில் கூடவா, உண்மை தெரியவில்லை. இவ்வாறு பல விசயங்களில், ஏன் செய்திகளை பலவாறு வெளியிட வேண்டும்?

© வேதபிரகாஷ்

09-01-2021


[1] தினகரன், நாகையில் பெண்ணை கோயிலுக்குள் இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை : 2 காம கொடூரன்கள் கைது , 2021-01-08@ 10:17:35. https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=645423

[2] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=645423

[3] மாலைமலர், கோவிலுக்குள் பெண் பாலியல் வன்கொடுமை– 2 பேர் கைது, பதிவு: ஜனவரி 08, 2021 11:15 ISTமாற்றம்: ஜனவரி 08, 2021 12:09 IST.

[4] https://www.maalaimalar.com/news/district/2021/01/08111535/2234746/Tamil-News-woman-molested-in-Nagai-two-arrested.vpf

[5]  பிபிசி.தமிழ், கோயிலில் பெண்ணை கூட்டுப் பாலியல் செய்த நபர்கள்நாகையில் அதிர்ச்சி சம்பவம், 8 ஜனவரி 2021

[6] தமிழ்.இந்து, நாகையில் பெண்ணிடம் பாலியல் வன்முறை 2 இளைஞர்கள் கைது, Published : 09 Jan 2021 03:10 AM; Last Updated : 09 Jan 2021 03:10 AM.

[7] https://www.bbc.com/tamil/india-55588703

[8] https://www.hindutamil.in/news/todays-paper/tnadu/620495-.html

[9] ஏசியா.நெட்.நியூஸ், எனக்கு குழந்தைகள் இருக்கு விட்டுவிடுங்கள்.. கெஞ்சிய மேகலா.. விடாமல் 4 மணிநேரம் கோயிலுக்குள் வைத்து பலாத்காரம், By Vinoth Kumar, Nagapattinam, First Published Jan 9, 2021, 1:59 PM IST.

https://tamil.asianetnews.com/crime/nagai-woman-gang-rape-2-people-arrest-qmnrkt

[10] தினமலர், கோயிலுக்குள் பலாத்காரம் நாகையில் 2 வாலிபர் கைது, Added : ஜன 09, 2021 01:00. https://www.dinamalar.com/news_detail.asp?id=2686404

[11] https://www.hindutamil.in/news/todays-paper/tnadu/620495-.html

[12]  பிபிசி.தமிழ், கோயிலில் பெண்ணை கூட்டுப் பாலியல் செய்த நபர்கள்நாகையில் அதிர்ச்சி சம்பவம், 8 ஜனவரி 2021

[13] தமிழ்.இந்து, நாகையில் பெண்ணிடம் பாலியல் வன்முறை 2 இளைஞர்கள் கைது, Published : 09 Jan 2021 03:10 AM; Last Updated : 09 Jan 2021 03:10 AM.

[14] தினமலர், கோயிலுக்குள் பலாத்காரம் நாகையில் 2 வாலிபர் கைது, Added : ஜன 09, 2021 01:00. https://www.dinamalar.com/news_detail.asp?id=2686404

[15] தமிழ்.இந்து, நாகையில் பெண்ணிடம் பாலியல் வன்முறை 2 இளைஞர்கள் கைது, Published : 09 Jan 2021 03:10 AM; Last Updated : 09 Jan 2021 03:10 AM.

[16] https://www.bbc.com/tamil/india-55588703

திருவண்ணாமலையில் சந்நியாசி அமெரிக்கப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி, பெண் பதிலுக்குத் தாக்கியது – அயல்நாட்டவர் கண்காணிக்கப் படவேண்டும்! [2]

ஓகஸ்ட் 25, 2020

திருவண்ணாமலையில் சந்நியாசி அமெரிக்கப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி, பெண் பதிலுக்குத் தாக்கியது – அயல்நாட்டவர் கண்காணிக்கப் படவேண்டும்! [2]

ஆசைப் பட்ட மணிக்கண்டன் வசமாக மாட்டிக் கொண்டது: விசாரணையில், அந்த சாமியார் நாமக்கல் மாவட்டம் திருமலைபட்டி கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ்வரனின் மகன் மணிகண்டன் (41) எனத் தெரிய வந்தது[1]. சாமியார் மணிகண்டன், அமெரிக்க பெண்ணை அடிக்கடி பார்த்துள்ளார்[2]. அதாவது அப்பெண் அனுமதித்துள்ளாள் என்று தெரிகிறது. அவர், அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவரிடம் தவறாக நடக்க முயன்றார்[3]. அந்தப் பெண்ணுக்கு தற்காப்பு கலைகள் தெரிந்துள்ளதால், இருவருக்கும் நடந்த தகராறில் மணிகண்டனுக்கு தலையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம், எனப் போலீசார் தெரிவித்தனர்[4]. இந்தச் சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே திருவண்ணாமலையில் 2018-ம் ஆண்டு ரஷிய நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். அந்தச் சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.இங்கு அந்நிய நாட்டு பெண்கள், இந்தியர்களுடன் ஏன் தொடர்புகள் வைத்துக் கொள்கிறார்கள், நோக்கம் என்ன, பின்னணி என்ன என்பதையும் ஊடகங்கள் வெளியிட வேண்டும். அவர்கள் தனியாகவே வந்து தங்குகிறார்களா அல்லது உடன் மற்றவர்கள் வந்துள்ளார்களா என்று கவனிக்க வேண்டும். இந்தியர்கள் யாரும், அயல்நாடுகளில் உள்ள மற்ற மத புண்ணிய க்ஷேத்திரங்களில் இவ்வாறு தங்கி ஆராய்ச்சி செய்ய முடியுமா என்று தெரியவில்லை!

தமிழக ஊடகங்களின் வக்கிரம், திமிர் பிடித்து தலைப்பிடும் தூஷணம்: வழக்கம் போல, தமிழ் ஊடகங்கள் தங்களது பாணியில், அரைத்த மாவையே அரைத்துள்ளன. பெண் அமெரிக்கரா, ரஷ்யரா என்று கூட சரிபார்த்து செய்தி போடத் தெரியவில்லை. மற்ற செய்திகள் பெண் அமெரிக்கர் என்றால், “சமயம்” ரஷ்யர் என்கிறது[5]. “அத்துமீறிய சாமியார், கராத்தே கலையால் கதறவிட்ட ரஷ்யப் பெண்!” என்று தலைப்பிட்டு, ஜனரஞ்சகமாக செய்தி வெளியிட்டுள்ளது[6]. “தாலியுடன் சென்ற சாமியார்… நைய புடைத்த அமெரிக்க பெண்… திருவண்ணாமலை வீட்டில் நடந்த அதிர்ச்சி,” இப்படி இன்னொரு தளம்[7]. இவ்வாறு விசயம் தெரியாமல் செய்தி போடுகிறார்களா, இல்லை, நாங்கள் போடுவது தான் செய்தி, நீங்கள் படியுங்கள், உங்கள் விதி அதுதான் என்பது போல நடந்து கொள்கிறார்கள். ஆக திருவண்ணாமலை, இவர்களுக்கு கிள்ளுக்கீரையாக, கிண்டலடிக்கும் தளமாக ஆகிவிட்டது[8]. நேராகச் சென்று செய்திகளை சேகரிப்பது என்பதெல்லாம் இல்லை, மாலையில் வந்த செய்திகளைத் திரட்டி காலையில் செய்தியாக வெளியிட்டு காலம் தள்ளும் செய்தியார்கள், நிருபர்கள் உள்ளனர். எப்படி, இணைதளங்ளில் உள்ள விசயங்களை எல்லாம் திரட்டி, காபியடித்து, புத்தகங்களை எழுதுகிறாற்களோ, அதை விட மோசமாக, நாளிதழ் நிருபர்கள் இருக்கிறார்கள். காப்பியடிப்பது, கட்-அன்ட்-பேஸ்ட் செய்வது, விசயங்களைத் திருடுவது, என்பதெல்லாம் அல்வா சாப்பிடுவது போலத்தான் அத்தகைய திருட்டு எழுத்தாளர்களுக்கு இருக்கிறது.

வெளிநாட்டவரின் நடவடிக்கைகளைக் கட்டுப் படுத்துவது எப்படி? நடக்கும் நிகழ்வுகளைக் கண்காணிப்பது எப்படி?:

  1. சுமார் 10,000 வெளிநாட்டவர் சுற்றூலா என்று வருகிறார்கள். 2018ல் 9,502 வெளிநாட்டவர் வந்துள்ளனர். இவர்கள் எல்லோருமே “ஆன்மீகத்திற்கு” வந்தார்கள் என்பது தவறாகும். டெரிக்கிங் (Trekking) போர்வையில் சுற்றி வந்த 12 அயல்நாட்டவரை போலீஸார் பிடித்துள்ளனர்.
  2. திருவண்ணாமலை ஆன்மீகம் அல்லது அந்த போர்வையில் ஆராய்ச்சி செய்யும் இடமலல்ல. ஆன்மீகம் என்பது, “மந்திர-தந்திர-யந்திர” முறையில் திசைத் திரும்புகிறது.
  3. வெளிநாட்டுக் காரர்கள் அத்தகைய நோக்கங்களுடன் வந்தால், அவர்களை அனுமதிக்கக் கூடாது, அல்லது ஒரு வாரம், பத்து நாட்களில் அனுப்பி வைக்க வேண்டும்.
  4. முதலில் விசா அளிப்பவர்கள், “சுற்றுலா” என்று வந்தவர்கள், மற்ற காரியங்களில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும். இப்பொழுது தான் தப்லீக் பெயரில், நூற்றுக்கணக்கான அயல்நாட்டவர் வந்து பெரிய பிரச்சினையாகி, கொஞ்சம் அடங்கியுள்ளது. ஆகவே, இவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்டவேண்டும்.
  5. தங்களது நிலை, பணம் போன்றவற்றை வைத்துக் கொண்டு, உள்ளூர் ஆட்களை தங்களது இச்சைக்கேற்றப் படி உட்படுத்தி, பரிசோதனைகள் செய்வதை அனுமதிக்கக் கூடாது.
  6. சில இடங்களில் சர்ச்சுகள் கட்டுவது, மதம் மாற்றம் போன்ற பிரச்சினைகள், விவகாரங்கள் வெளிப்பட்டுள்ளன, படுகின்றன.
  7. இவர்களால், உண்மையில் ஆன்மீகத்தைத் தேடி வந்து, ஶ்ரீரமணர், ஶ்ரீராம்சூரத் குமார் போன்றவர்களின் சீடர்களாக, பக்தர்களாக இருந்து வருபவர்களையும் பாதிக்கும்.
  8. சிலர் திருவண்ணாமலை கிரிவலம் பகுதிகளில் இடத்தை வாங்கி, தங்குவதற்கு வீடுகளையும் கட்டிக் கொண்டுள்ளார்கள். அவர்கள் வருடத்திற்கு ஒருமுறை வருகிறார்கள், வராமல் இருக்கிறார்கள். அதனால், உள்ளூர்வாசிக்கு, “பார்த்துக் கொள்,” என்று சொல்லி சென்று விடுகின்றனர். அவர்கள் வராத நிலையில், வரமாட்டார்கள் என்று அறிந்த நிலையில், உள்ளூர் ஆட்கள் அந்த சொத்தை அபகரித்துக் கொள்கிறார்கள்.
  9. ஆனால், அயல்நாட்டினரும் விசயம் தெரிந்தவர்கள் தான், எனவே, சட்டப் படி, நடவடிக்கை எடுக்கும்போது பிரச்சினைகள் வருகின்றன.
  10. அயல்நாட்டு பயணிகள், இப்படி திருவண்ணாமலை பகுதியில், கூட்டம் கூடி, பிரச்சினைகளை உண்டாக்கினால், அமைதி குலையும், திருவண்ணாமலையின் புனிதமும் கெடும் என்பது திண்ணம்.

சுருக்கமாக, விவரங்களை முடிவுரையாகக் கொடுக்கப் படுகிறது. இந்தியாவைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அயல்நாட்டவர் வருவது என்பது, “ஒந்வே-டிராபிக்” போன்ற நிலையாக உள்ளது. இந்தியரும், பதிலுக்கு, இதே போல, அயல்நாட்டவரின் சமூகம், மதம், நம்பிக்கைகள் முதலியன ஆராயப் படவேண்டும்.

  1. திருவண்ணாமலை அக்னி க்ஷேத்திரத்தில் அயல்நாட்டுப் பெண்கள் எப்படி வந்து தங்குகிறார்கள், ஆன்மீகத்தில் ஆராய்ச்சி செய்கிறார்கள்?
  2. இதே மாதிரி இந்திய பெண்கள் அவர்களது நாட்டு புண்ணிய க்ஷேத்திரங்களில் ஆன்மீக ஆராய்ச்சி மேற்கொள்ள முடியுமா? அனுமதிக்கப் படுவார்களா?
  3. திருவண்ணா மலையில் காவி கட்டியவன் எல்லாம் சந்நியாசி, சாது, சாமியார், சித்தர் ஆகி விட முடியுமா? இப்பொழுது கருப்பு, பச்சை, நீலம் .போன்ற நிறங்களும் சேர்ந்துள்ளன.
  4. முன்பு ஶ்ரீரமணர், ஶ்ரீராம்சூரத் குமார் போன்றவர்களை தரிசிக்க வந்தவர்களின் நிலை வேறு, இப்பொழுது “ஆன்மீக சுற்றுலா” என்று வருகிறவர்களின் நிலை வேறு.
  5. பௌர்ணமி கிரிவல கூட்டம் அதிகமாக-அதிகமாக, வியாபார மயமாக்கமும் அதிகரித்துள்ளது. அறை, உணவு விலை அதிகரித்து வருகின்றது!
  6. அயல் நாட்டவருக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏன் இந்தியர்களுக்கு வருகிறது! ஆன்மீகதத்தில் உயர்ந்தவன் என்ற உணர்வு வேண்டாமோ?
  7. சினிமா பாணியில் வெள்ளைக்காரியைக் கட்டிக் கொண்டால், வாழ்க்கை உயர்ந்து விடுமா? டைவர்ஸ் செய்தால் என்னாகும்?
  8. ஆக மணிகண்டனின் கத்தி-தாலி பார்முலா, கராத்தே அமெரிக்கப் பெண்ணிடம் பலிக்க வில்லை. மான், மயில் தப்பித்து, புலி மாட்டிக் கொண்டது!
  9. திருவண்ணா மலையில், மொரீசியஸ் ஸ்டைலில் ஐந்து நட்சத்திர ஓட்டல், ரிசார்ட், ஸ்பா வசதி, குடி…..முதலியவை ஏன் அதிகரித்துள்ளன?
  10. தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று கத்தினால், பெண்களுக்குப் புரியுமா? இறைவா ரக்ஷிப்பாயாக!?

இக்கேள்விகளுக்கு எல்லோரும் பதில் சொல்லியாக வேண்டும். இந்தியரும் பதிலுக்கு ஆராய வேண்டும். ஏனெனில், இன்றைக்கு, உரையாடல், மதங்களுக்கு இடையே உரையாடல், உள்-கலாச்சாரமயமாக்கல், என்றெல்லாம் பேசி வருகிறார்கள். அந்நிலையில், நாம் இவ்விசயங்களை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

24-08-2020

இதெல்லாம் திருவண்ணாமலை ரிசார்ட் தான், மொரீசியஸ், மாலத்தீவுகள் இல்லை!


[1] விகடன், திருவண்ணாமலை: `அமெரிக்கப் பெண்ணிடம் அத்துமீறல்!’ – சாமியாரை புரட்டி எடுத்த பொதுமக்கள், ஜெ.முருகன், Published:Yesterday at 3 PM; Updated:Yesterday at 3 PM.

[2] https://www.vikatan.com/news/crime/sexual-assault-on-an-american-woman-public-attacked-the-preacher

[3] தினமலர், அமெரிக்க பெண்ணிடம் பலாத்கார முயற்சி: தி.மலையில் சாமியாருக்கு தர்ம அடி, பதிவு செய்த நாள்: ஆக 24,2020 08:25;

[4] https://m.dinamalar.com/detail.php?id=2600782

[5] சமயம், அத்துமீறிய சாமியார், கராத்தே கலையால் கதறவிட்ட ரஷ்யப் பெண்!, Akash G | Samayam Tamil, Updated: 23 Aug 2020, 03:21:00 PM.

[6] https://tamil.samayam.com/latest-news/crime/tiruvannamalai-russian-woman-attacked-a-saint-using-karate-technic-who-tried-to-rape-her/articleshow/77702641.cms

[7] டாப்.தமிழ்.நியூஸ், தாலியுடன் சென்ற சாமியார்நைய புடைத்த அமெரிக்க பெண்திருவண்ணாமலை வீட்டில் நடந்த அதிர்ச்சி, By Mathew, 24/08/2020 10:56:19 AM.

[8] https://www.toptamilnews.com/preacher-arrested-for-trying-to-sexually-assault-american-woman/

திருவண்ணாமலையில் சந்நியாசி அமெரிக்கப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி, பெண் பதிலுக்குத் தாக்கியது [1]

ஓகஸ்ட் 24, 2020

திருவண்ணாமலையில் சந்நியாசி அமெரிக்கப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி, பெண் பதிலுக்குத் தாக்கியது [1]

திருவண்ணாமலையில் ஆன்மீகம் வியாபாரம் ஆனது: திருவண்ணாமலை, ஆன்மிக நகரமாகும, ஆனால், பௌர்ணமி கிரிவலம் அதிகமாக-அதிகமாக, அங்கு மற்ற ஆன்மீகமற்ற காரியங்கள் ஆரம்பித்து விட்டன குறிப்பாக, தங்குவதற்கு இடம் என்பதற்காக, புது-புது லாட்ஜுகள், ஓட்டல்கள், ரிசார்டுகள், ஏன் ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் என்ற ரீதியில் வியாபாரம் மாற ஆரம்பித்தது. இதனால், உண்மையான, எளிமையான, சாதாரண பக்தர்களின் நிலை பாதிக்கப் பட ஆரம்பித்தது. அறைகள் ரூ.50, 100 என்ற நிலை மாறி, 500, 1000 என்று உயர்ந்து கொண்டே போனது, போய் கொண்டிருக்கிறது. டிபன், உணவு முதலியவையும் தரமும் அவ்வாறே இருக்கின்றன[1]. கற்பூரம், ஊதுவத்தி முதலியவை பெரிய வியாபாரம்[2]. பல்வேறு சித்தர்கள் வாழ்ந்த பூமியாக திருவண்ணாமலை திகழ்கிறது என்ற நிலைத் தாண்டி இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. இங்குள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யவும், சுற்றிப்பார்க்கவும் பிற மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பலர் வருகிறார்கள். கோவிலுக்கு ஏராளமான வெளிநாட்டு பக்தர்களும் வருகின்றனர். ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட பலரும், சாமியார்களும் திருவண்ணாமலைக்கு வந்து தங்கி உள்ளனர். “ஆன்மீக சுற்றுலா,” “கலாச்சார சுற்றுலா,” என்று பெயர் மாறி செயல்படும், பிக்னிக்குகள், ஆன்மீகம், பக்தி முதலியவற்றையும் தாண்டி செயல்படுகின்றன.

அமெரிக்க பெண் ஆன்மீகத்தில் ஆராய்ச்சி செய்ய வந்தது: ஶ்ரீரமணர், ஶ்ரீராம்சூரத் குமார் போன்ற மகான்களை தரிசிக்க, சந்திக்க வரும் பக்தர்களின் நிலையும், இப்பொழுது வருகின்ற பக்தர்களின் நிலையும் மாறியுள்ளன. வெளிநாட்டவர்களில் பலர் ஆன்மீகம் என்பதை விட, யோகா, தத்துவம், மந்திர-தந்திர-யந்திர முறைகள் என்று மற்றவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும், ஆராய்ச்சி செய்ய வேண்டும், ஜாலியாக பொழுது போக்க வேண்டும் என்ற முறையில், நிறைய பேர் வந்து தங்கி விடுகின்றனர். இவர்களுக்கு காசு பற்றி கவலை கிடையாது. ஆனால், அதே நேரத்தில், இந்தியர்களை சதாய்க்க, முழுமையாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த அந்நியர்கள் செயல் பட்டு வருகின்றனர். ஆதாவது காசுக்காக ஆசைப் பட்டு, இந்தியர் தமக்கு வேண்டியவற்றைக் கொண்டு வந்து கொடுப்பர், விசயங்களை சுலபமாக அறிந்து கொள்ளலாம் என்ற போக்குடன் வருகிறார்கள். இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த 31 வயது பெண் ஆசிலியா, / ரஷ்யாவைச் சேர்ந்தவர் ஆஷாத் சார்லட் (என்கிறது சமயம்), 5 மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்தார். அவர், கிரிவலப்பாதையில் அருணாச்சலாநகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார்[3]. கடந்த 8 மாதங்களாக அத்தியந்தல் அருணாச்சலவேஸ்வர் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கி இருந்தார்[4].

அப்பெண்ணை கல்யாணம் செய்து கொண்டால் பெரிய ஆள் ஆகிவிடலாம் என்று கனவு கண்ட மணிகண்டன்: அந்தப் பகுதியில் சாமியார்கள் பலரும் தங்கி உள்ளனர். அமெரிக்க பெண்ணை, நாமக்கல் மாவட்டம் திருமலைபட்டி கிராமத்தை சேர்ந்த 34 வயதான மணிகண்டன் என்ற சாமியார் ஒருவர் அடிக்கடி நேரில் சந்தித்து வந்துள்ளார். அப்போது அவர், அப்பெண்ணின் நடவடிக்கையை நோட்டமிட்டு வந்தார். தீராத ஆசையில் இருந்த அவர் அமெரிக்க பெண்ணை திருமணம் செய்து கொண்டு, அவருடன் கணவன், மனைவியாக குடும்பம் நடத்தலாம் என்றும், அவருடன் அமெரிக்கா சென்று விடலாம் என்றும் கனவில் மிதந்து வந்துள்ளார்[5]. இதனை தொடர்ந்து அமெரிக்க பெண்ணை திருமணம் செய்து கொள்ளவும், அதே நேரத்தில் அவரை அரிவாளை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கத்தில் இருந்த சாமியார், தங்கத் தாலி மற்றும் ஒரு அரிவாள் ஆகியவற்றுடன் நேற்று காலை தனியாக இருந்த அமெரிக்க பெண் வீட்டுக்கு சென்றுள்ளார்[6]. அங்கு சென்ற சாமியார் அமெரிக்க பெண்ணிடம் ஏதோ பேசி உள்ளார். அப்போது அவர், திடீரென அமெரிக்க பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது[7]. அதிர்ச்சி அடைந்த அமெரிக்க பெண், அந்தச் சாமியாரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்[8].


கராத்தே தெரிந்த அமெரிக்க பெண், அரிவாளைப் பிடுங்கி மணிகண்டனை வெட்டியது: சாமியார் வைத்திருந்த அரிவாளை பிடுங்கிய அவர், சாமியாரின் தலையில் அரிவாளால் வெட்டியதாகத் தெரிகிறது[9]. அதில் அவருக்கு தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது[10]. இருவருக்கும் இடையேயான போராட்டத்தில் அமெரிக்க பெண்ணும் காயம் அடைந்தார். கூச்சல் சத்தத்தைக் கேட்டதும், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, சாமியாரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்[11]. அவர் தப்பியோடி விடாமல் இருக்க சாமியாரின் கைகளை பின்பக்கமாகக் கட்டிப்போட்டனர்[12]. இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாமியாரை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவரின் தலையில் வெட்டுக் காயம் இருந்ததால் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தினர். இங்கும் பரஸ்பர புகார்கள் எழலா, கொடுக்கலாம், சட்டப் படி நடவடிக்கைத் தொடரலாம். ஆனால், உண்மையாக திருவண்ணாமலையில் என்ன நடக்கிறது, திடீரென்று அயல்நாட்டவர் எண்ணிக்கை ஏன் அதிகரிக்கிறது, என்பதெல்லாம் மக்களுக்குத் தெரியப் படுத்த வேண்டும்.

காவிக் கலரில் உடை அணிபவர்கள் எல்லோரும் சந்நியாசி ஆகி விட முடியுமா?: முதலில் திருவண்ணாமலையில் சந்நியாசி, சாமியார், சாது, சித்தர், பிச்சைக்காரன், வேவு பார்க்கிறவன் என்று எல்லா வகையறாக்களும் காவிக் கட்டிக் கொண்டு தான் அலைந்து வருகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.. இல்லை, பச்சை, ஊதா, கருப்பு, ஆரஞ்சு என்ற நிறங்களில் விற்கும் வேட்டிகள், அதற்கேற்றப் படி நிறங்களில் விற்கும் சட்டைகள், துண்டுகள் சகிதம் உலாவரும் அனைவரும் சந்நியாசிகள் அல்லர் என்பதயும் அறிந்து கொள்ளவேண்டும்.  இது திருவண்ணாமலை மட்டுமல்லாது, மற்ற புண்ணிய க்ஷேத்திரங்கள், கோவில்கள் முதலியவற்றிற்கும் பொருந்தும். இப்பொழுது, ஒரு பிச்சைக்காரர், அடிக்கடி வசூல் செய்து, நிதியுதவி செய்வதாக செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன.  ஆகவே, காவி அல்லது அதைப் போன்ற நிறங்களில் ஆடைகள் போடுபவர்கள் எல்லோரும் சந்நியாசி ஆகிவிட முடியாது. இன்றைய காலகட்டத்தில் கிருத்துவ-துலுக்க பாஸ்டர்கள், மௌலிகள் எல்லாம் கூட காவியுடை அணிந்து கொள்கின்றனர். மற்ற நிறங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

© வேதபிரகாஷ்

24-08-2020


[1]  ஓட்டல் அஷோக், அபிராமி போன்றவை கைமாறி, வேறு சொந்தக்காரர்களிடம் சென்று விட்டன. இதனால், சுற்றுலாவிற்காக வந்தவர்கள் சாப்பிட்டுச் சென்று விடுவர், அதனால், கண்டுகொள்ள வேண்டாம் என்ற ரீதியில் உணவு தயாரிப்பு இருக்கிறது. தரம் குறைந்து விட்டது. விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.

[2]  இதில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்துக்கள் அல்லர் என்பது, உக்கியமான விசயம். இதே போன்று, லாட்ஜிங் எனும்போது, முன்னர் உள்ளூர் பணக்காரர்கள், சொந்தக்காரர்களாக இருந்தனர், ஆனால், இப்பொழுது, இந்துக்கள் அல்லாதவர்களின் தாக்கம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

[3] தினச்சுவடு, அமெரிக்க பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த சாமியார்.! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்.!, By manikandan | Published: Aug 23, 2020 05:38 PM.

[4] https://dinasuvadu.com/thiruvannamalai-samiyar-attempt-rape-to-usa-women

[5] தினத்தந்தி, திருவண்ணாமலையில், அமெரிக்க பெண்ணை வீடுபுகுந்து பலாத்காரம் செய்ய முயன்ற சாமியார்பொதுமக்கள் திரண்டு கை, கால்களை கட்டி வைத்து தாக்கியதால் பரபரப்பு, பதிவு: ஆகஸ்ட் 24, 2020 04:21 AM

[6] https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/08/24042135/In-Thiruvannamalai-the-American-woman-The-pastor-who.vpf

[7] தமிழ்.ஒன்.இந்தியா, அமெரிக்க பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சிதர்ம அடிவாங்கிய திருவண்ணாமலை சாமியார் கைது, By Mathivanan Maran | Published: Sunday, August 23, 2020, 21:09 [IST]

[8] https://tamil.oneindia.com/news/thiruvannamalai/thiruvannamalai-sadhu-arrested-for-rape-attempt-395434.html

[9] தமிழ்.நியூஸ்.18, வெளிநாட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிதிருவண்ணாமலை ஆசாமிக்கு தர்ம அடி, LAST UPDATED: AUGUST 23, 2020, 5:39 PM IST.

[10] https://tamil.news18.com/news/tamil-nadu/sadhu-attempts-to-rape-american-woman-in-thiruvannamalai-riz-336341.html

[11] மாலைமலர், அமெரிக்க பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சாமியார்பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு, பதிவு: ஆகஸ்ட் 24, 2020 08:23 IST

[12] https://www.maalaimalar.com/news/district/2020/08/24082306/1812249/priest-tried-to-harassment-american-woman-public-attacked.vpf