மனித நேய மக்கள் கட்சி வைத்த பதாகை, எதிர்ப்பு தெரிவித்த பிஜேபி, வருத்தம் தெரிவித்த கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா!
மணிப்பூர் பிரச்சினை தமிழகத்தில் அரசியலாக்கப் படுவது: மணிப்பூர் பெண்கள் விவகாரத்தை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி வைத்துள்ள பேனர் சர்ச்சையை ஏஎற்படுத்தியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி இனக்கலவரம் வெடித்தது. அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பழங்குடி சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி ஆகிய சிறுபான்மை சமூகங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் வெடித்த வன்முறை காரணமாக அம்மாநிலம் கலவர பூமியாக காட்சியளிக்கிறது. இதைப் பற்றி தினமும் இணைதளங்களில் விவாதங்களும் நடந்து வருகின்றன. இந்த பிரச்சினை சம்பந்தப் பட்டு, கருத்துத் தெரிவித்த பத்ரி சேஷாத்ரி என்பவர் கைது செய்யப் பட்டுள்ளார். அந்நிலையில், மனித நேய மக்கள் கட்சி இவ்வாறு அரசியல் மற்றும் மதரீதியில் பதாகை வைத்துள்ளது திகைப்பாக இருக்கிறது.
தமிழக முஸ்லிம் கட்சிக்கு மணிப்பூர் பழங்குடி பிரச்சினை இவ்வளவு நாட்கள் தெரியாமல் இருந்தது ஏன், எப்படி?: இங்கு பழங்குடியினர், பட்டியல், பழங்குடியினர் பட்டியல், கிறிஸ்தவர் எதிர்ப்பு முதலிய விசயங்களைப் பற்றி விவாதிக்காமல் இருக்கின்றார்கள். பர்மா / மியாம்பாரிலிருந்து இந்தியாவில் அந்நாட்டினர் நுழைந்து கொண்டே இருக்கிறார்கள். ரோஹிங்யா முஸ்லிம்கள் நுழைவது தெரிந்த விசயமாகி விட்டது. அதை வைத்து தான் மேற்கு வங்காளம், அசாம் போன்ற மாநிலங்களில் முஸ்லிம் அரசியல் நடத்தப் படுகிறது. இங்கு, கிறிஸ்தவர்களாக பழங்குடியினர் இருக்கின்றனர். அதே நேரத்தில் கிறிஸ்தவர் அல்லாத இந்துக்களும் பழங்குடிகளாக இருக்கின்றனர். இதனால், அவர்களுக்கும் எஸ்.டி அந்தஸ்து கொடுக்கவேண்டும் எனும்பொழுது, அதில் தான் இப்பிரச்சினை வந்துள்ளது. அதை ஏன் இன்னொரு பழங்குடி எதிர்க்க வேண்டும், அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினை மதமா, மொழியா, கலாச்சாரமா அல்லது எது. ஆனால், இதைப் பற்றி விவாதிக்காமல் குறிப்பிட்ட சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய எதிர்கட்சியினர் தீர்மானித்து, அதை இங்கு தமிழகத்தில் ஒரு முஸ்லிம் கட்சி கையாள்வது திகைப்பாக இருக்கிறது.
குழப்பமான, சிக்கலான, ஜாக்கிரதையாக அணுக வேண்டியுள்ள மணிப்பூர் பிரச்சினை: மணிப்பூர் வன்முறையில் சிக்கி இதுவரை 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். அம்மாநிலத்தை விட்டு வெளியேறி அண்டை மாநிலங்களில் பலரும் சென்று வருகின்றனர். இதனிடையே, கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாவட்டத்தின் காங்க்போக்பி மாவட்டத்தில், குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பெண்கள் வன்முறை கும்பலால் கடத்தப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்டு அவமதிப்பு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 19 வயதுள்ள ஒரு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதைத் தட்டிக் கேட்ட அப்பெண்ணின் சகோதரர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யபட்டுள்ளார். மேலும் ஒரு இளைஞரும் கொல்லப்பட்டுள்ளார். அம்மாநில பிரச்சினைகள் பலவிதங்களில் விவரிக்கப் பட்டு வருகின்றன. பலவிசயங்களில் வெளிப்படையாக விவாதிக்கப் படும் நிலையிலுமில்லை எனத்தெரிகிறது.
ராமன் லட்சுமணனாக மோடியும், அமித்ஷாவும் சிரித்தப்படி நிற்கும் பேனரை வைக்கைப் பட்டது: கடந்த மே மாதம் 4ஆம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பால் அருகே நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மணிப்பூர் விவகாரத்தை கண்டிக்கும் விதமாக, நிர்வாணமாக வேதனையுடன் நிற்கும் பெண்ணின் அங்கங்களை தேசியக் கொடிக் கொண்டும் மறைத்து, அவளின் அருகில் ராமன் லட்சுமணனாக மோடியும், அமித்ஷாவும் சிரித்தப்படி நிற்கும் பேனரை வைத்துள்ளனர். மனித நேய மக்கள் கட்சி ஒரு முஸ்லிம் கட்சி, அதற்கும் இதற்கும் இப்பொழுது என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. இருப்பினும், ஆளும் திமுகவுடன் கூட்டு சேர்ந்து, “திராவிடத்துவ” சித்தாந்தத்தை ஆதரிப்பது போலக் காட்டிக் கொள்வதால், அது இவ்வாறு அரசியல் மற்றும் மதம் என்று இரண்டையும் சேர்த்து, இத்தகைய பதாகை வைப்பது கேள்விக்குரியாகியுள்ளது.
பிஜேபி எதிர்ப்புத் தெரிவித்தது, போலீஸார் பதாகையை அப்புறப்படுத்தியது: திண்டுக்கல் வத்தலக்குண்டுவை சேர்ந்த பா.ஜ.க.வினர் 29-07-2023 அன்று வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். வத்தலக்குண்டுவில், காளியம்மன் கோவில் பகுதியில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக பேனர் வைத்துள்ளது. அந்த பேனரில் ராமர், சீதா, லட்சுமணன் போன்று சித்தரித்து இருப்பதாகவும், தேசியக்கொடியை அவமதித்து இருப்பதாகவும் கூறி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காளியம்மன் கோவில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனரை போலீசார் அகற்றினர்[1]. அதன்பின்னர் பா.ஜ.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது[2]. இங்கும் போலீஸார் தான் அதனை அப்புறப் படுத்தியுள்ளார்கள் என்று தெரிகிறது. மனித நேய மக்கள் கட்சியினர் அப்புறப் படுத்தவில்லை என்றாகிறது.
பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி மனித நேய மக்கள் கட்சி தடை செய்யப் பட வேண்டும் என்று அறிக்கை விடுத்தது: இந்த நிலையில், மணிப்பூர் பெண்கள் விவகாரத்தை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சார்பில் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது[3]. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் அக்கட்சி இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி, நமது நாட்டையும், இந்து மதத்தை அவமதிக்கும் செயல் என அந்த பேனருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்[4]. இந்த பேனர் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இதனைச் செய்த மனிதநேய மக்கள் கட்சியைத் தமிழகத்தில் இருந்து தடை செய்ய வேண்டும் ட்விட்டரில் பாஜகவினர் கொந்தளித்து வருகின்றனர். இது தொடர்பாக பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “மனிதநேய மக்கள் கட்சி என்ற பெயரில் தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் இந்த செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்வதோடு, மனித நேய மக்கள் கட்சியை உடனடியாக தடை செய்ய வேண்டும்[5]. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உருவத்தை கேலி சித்திரம் வரைந்ததற்காக சிலரை செய்யும் காவல் துறை, இந்து கடவுளை, நாட்டின் பிரதமரை கேலி சித்திரம் மூலம் அவதூறு செய்யும் பதர்களைக் கைது செய்யாதது ஏன்? மதக் கலவரத்திற்கு வித்திடும் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகளை, தலைவர்களை கைது செய்ய தயங்குவது ஏன்?,” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்[6].
மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா அருத்தம் தெரிவித்தது: முன்னதாக, இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்கள் குழு வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் மணிப்பூர் மாநிலத்துக்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது. இதுகுறித்து இரு அவைகளிலும் விவாதித்து பிரதமர் மோடி விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது[7]. இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்[8], “திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் மணிப்பூர் தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்காக ஒரு விரும்பதகாத விளம்பர தட்டி ஒன்று கட்சியை சேர்ந்த ஒரு சிலரால் வைக்கப்பட்டிருந்தது[9]. இப்படியான ஒரு விளம்பர தட்டி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிந்ததும் மேல் நிலை நிர்வாகிகள் இத்தட்டியை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுத்தார்கள்[10]. தட்டி வைக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்தில். போராட்டம் தொடங்குவதற்கு முன்பே இந்த விரும்பதகாத தட்டி அப்புறப்படுத்தப்பட்டது[11]. மனிதநேய மக்கள் கட்சி எந்த மதத்தினரின் உள்ளங்களையும் புண்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் கட்சியல்ல[12]. இந்த விரும்பத்தகாத தட்டி வைப்பதற்கு காரணமானவர்கள் வன்மையாக கண்டிக்கப்பட்டார்கள்[13]. அவர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விளம்பரத் தட்டியால் எவரது உணர்வு பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன்,” என ஜவாஹிருல்லா கூறியுள்ளார்[14].
பிஜேபி எதிர்ப்பு அரசியல்-இந்துஎதிர்ப்பு: அமித் ஷா வந்துள்ள நிலையில், இத்தகைய நிகழ்ச்சி நடந்துள்ளது. நிச்சயமாக, தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளுக்கு மணிப்பூர் பிரச்சினை முழுவதுமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்பொழுது, எதிர்க்கட்சியினர் இதனை வைத்து அர்சியல் செய்யும் நிலையில், மனிதநேய மக்கள் கட்சியினருக்கு கற்பனை அவ்வாறு வேலை செய்து, அரசியல் மற்றும் மதரீதியில் தாக்க அத்தகைய சித்தரிப்பைச் செய்துள்ளனர். முன்பு பெரியார், திகவினர் தயாரித்த ஆபாச சித்திரங்கள் போலத்தான் இதுவும் உள்ளது. அதனால், தலைவரும் இரச்சினை பெரிதாகும் முன்பே, ஜவாஹிருல்லா எம்எல்ஏ வருத்தம் தெரிவித்துள்ளார். இந்துக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இனிமேல் அரசியல்வாதிகள் தங்களுக்குள் சண்டைப் போட்டுக் கொள்வதானால், இந்து மத சின்னங்களை தவறாகப் பயன் படுத்தக் கூடாது என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
கவனிக்க வேண்டிய விசயங்கள்: ஒரு சாதாரண இந்து என்ற முறையில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்:
- வத்தலகுண்டுவில் வைக்கப் பட்ட சர்ச்சைக்குரிய பதாகையை அப்புறப் படுத்தியது மனிதநேய மக்கள் கட்சி மேல் நிலை நிர்வாகிகளா, போலீஸாரா?
- இருவரும் அப்புறப் படுத்தினர் என்றால் பல பதாகைகள் வைக்கப் பட்டது போலும். அத்தகைய சித்திரிப்பு எவ்வாறு வந்தது?
- முன்பு பெரியார், திகவினரின் சித்தரிப்பு போன்றுள்ள இது அத்தகையதா? அரசியலுடன் ஏன் மதத்தை சம்பந்தடுத்தப் படுத்துகின்றனர்?
- அப்படியென்றால் மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா பிரச்சினை பெரிதாகும் முன்னர் அறிக்கை வெளியிட்டுள்ளார்!
- ஆக இனி தமிழக அரசியல் கட்சிகள் பிஜேபி எதிர்ப்பு, இந்து எதிர்ப்பாக இருக்கக் கூடாது என்பதைப் புரிந்து கொண்டிருப்பர்!
- மலேசிய இந்துக்கள் மற்றும் வத்தலகுண்டு இந்துக்கள், இந்து துவேச-எதிர்ப்பாளர்களுக்கு பாடம் போதித்துள்ளனர்.
- எம்.பி, எம்.எல்.ஏ என்றெல்லாம் இருந்தாலும், இனி இந்துவிரோத பேச்சு, செயல், விமர்சனம் என்றெல்லாம் வரும் போது யோசிப்பர் எனலாம்!
- பெரியாரிஸம், நாத்திகம், செக்யூலரிஸம் போன்ற போர்வைகளில் தொடர்ந்து இந்துமதத்தைத் தாக்கினால் இந்துக்கள் தட்டிக் கேட்கவேண்டும்.
- ஜவாஹிருல்லா இந்த விளம்பரத் தட்டியால் எவரது உணர்வு பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்!
- இது போல இனி திருமா அல்லது வீரமணி போன்றோரும் தங்கள் இஷ்டத்திற்கு பேசினால், எழுதினால் புகார் அளிக்க வேண்டும்.
© வேதபிரகாஷ்
30-07-2023
[1] தினத்தந்தி, போலீஸ் நிலையத்தை பா.ஜ.க.வினர் முற்றுகை, தினத்தந்தி ஜூலை 29, 1:30 am (Updated: ஜூலை 29, 1:30 am)
[2] https://www.dailythanthi.com/News/State/bjp-lay-siege-to-the-police-station-1018247
[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், மணிப்பூர் பெண்கள் விவகாரம்: மனித நேய மக்கள் கட்சி பேனருக்கு எதிர்ப்பு!, Manikanda Prabu, First Published Jul 30, 2023, 12:54 PM IST; Last Updated Jul 30, 2023, 12:54 PM IST,
[4] https://tamil.asianetnews.com/tamilnadu/condemns-over-manithaneya-makkal-katchi-poster-opposes-manipur-women-issue-ryllwn
[5] காமதேனு, சர்ச்சை பேனர்… மனிதநேய மக்கள் கட்சியைத் தடை செய்ய கோரும் பாஜக!, Updated on : 29 Jul 2023, 9:15 pm
[6] https://kamadenu.hindutamil.in/politics/tnbjp-said-manitha-neya-makkal-party-should-be-banned
[7] தமிழ்.ஒன்.இந்தியா, ராமர், லட்சுமணனாக மோடி, அமித்ஷா.. வருத்தம் தெரிவித்தார் ஜவாஹிருல்லா! அப்படி என்ன பேனர் அது?, By Noorul Ahamed Jahaber Ali Published: Sunday, July 30, 2023, 9:07 [IST].
[8] https://tamil.oneindia.com/news/chennai/mmk-leader-jawahirullah-said-regret-for-controversial-banner-in-dindugal-525279.html
[9] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், ராமர், லட்சுமணன், மோடி, அமித்ஷா படத்துடன் போஸ்டர்: எதிர்த்த பா.ஜ.க; வருத்தம் தெரிவித்த ஜவாஹிருல்லா, Written by WebDesk
July 30, 2023 14:10 IST.
[10] https://tamil.indianexpress.com/tamilnadu/narayanan-thirupathy-condems-manithaneya-makkal-katchi-jawahirullah-asks-sorry-poster-731529/
[11] தமிழ்.வெ.துனியா, சர்ச்சைக்குரிய விளம்பர பதாகை: மனிதநேய மக்கள் கட்சி விளக்கம்..!, Written By Siva Last Updated : ஞாயிறு, 30 ஜூலை 2023 (14:31 IST).
[12] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/manitha-neya-makkal-katchi-explain-about-controversy-banner-123073000035_1.html
[13] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், மதக்கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் மமக! கொதிக்கும் பாஜக! வருத்தம் தெரிவித்த ஜவாஹிருல்லா! நடந்தது என்ன?, vinoth kumar, First Published Jul 30, 2023, 8:42 AM IST; Last Updated Jul 30, 2023, 8:49 AM IST.
[14] https://tamil.asianetnews.com/politics/controversy-banner-jawahirullah-expressed-regret-ryla8i