இரண்டு சாதுக்கள் அடித்துக் கொலை: அரசியலாக்கப்பட்ட விவகாரத்தில் கொலைக் கூரூரம் மறைக்கப் படுகிறது!
திருடர்கள், குழந்தை திருடர்கள், கிட்னி திருடர்கள் என்றெல்லாம் வதந்தி கிளப்பியவர்கள் யார்?: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பல கிராமங்களில் மக்கள் தாங்களாக முன்வந்த தங்கள் கிராமங்களுக்குள் வெளி ஆட்கள் நுழையக்கூடாது என தடுப்புகளை அமைத்தும் வருகின்றனர். இந்த ஊரடங்கு காலத்தில் ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இரண்டு இந்து மத சாமியார்கள் உள்பட 3 பேரை திருடர்கள் என நினைத்து ஒரு கும்பல் அடித்தேகொன்றிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கன்டிவாலி பகுதியை சேர்ந்த இரண்டு துறவிகள் 16-04-2020, கடந்த வியாழக்கிழமை ஒரு துக்க நிகழ்ச்சியில் / இறுதிச் சடங்கு நிகழ்வில் பங்கேற்பதற்காக குஜராத் மாநிலம் சூரத்திற்கு வாடகை காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையில், மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு காலத்தில் பலர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக வதந்தி பரவி வந்தது. குழந்தை கடத்தல்காரா்கள் என எண்ணி, அவா்கள் மீது தாக்குதல் நடத்தினா் என்கிறது தினமணி. கிட்னி திருட வந்த சாதுக்கள் என்று சமயம் கூறுகின்றது[1]. சாதுக்கள் கிட்னி திருடுகிறார்கள் என்று அந்த நிருபருக்கு எப்படி தெரிந்தது என்று தெரியவில்லை[2]. இப்படியெல்லாம் வதந்திகள் கிளப்பினர் என்று அரசு தரப்பில் விளக்கமும் கொடுக்கப் பட்டது.
போலீஸ் முன்பே, மூவர் அடித்துக் கொலை செய்யப் பட்டது [16-04-2020]: இந்த வதந்தி அப்பகுதியில் உள்ள் சில கிராமங்களிலும் பரவியவது. இதையத்து அந்த பகுதி கிராமத்தினர் சிலர் கும்பலாக சேர்ந்து கிராமத்தை சுற்றிலும் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்து வந்தனர். இப்படியான நிலையில், இரண்டு சாமியார்களும் சென்ற கார் அந்த பகுதியை கடந்த போது அதை மறித்த அந்த கும்பல் அவர்களை திருடர்கள் என நினைத்து தாக்க முற்பட்டனர். உடனே போலீஸூக்கும் தகவல் தரப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் பயம் காரணமாக வீட்டில் பதுங்கி இருந்த கார் ஓட்டுநர் உட்பட 3 பேரை மீட்டு வெளியே கொண்டு வர முற்பட்டனர். ஆனால், அந்த கும்பல் தொடர்ந்து தாக்கியதில், 3 பேரும் பலியானார்கள். இந்த சம்பவமானது 16-04-2020, வியாழக்கிழமை நடந்தது[3]. இறந்த மூவரில் 70 மற்றும் 35 வயதான இரண்டு துறவிகள் மற்றும் 30 வயதில் இருந்த அவர்களின் ஓட்டுநர் ஆகியோர் அடக்கம்[4]. அவர்கள் –
- சந்நியாசி சிக்னே மகாராஜ் (70),
- சந்நியாசி சுஷில்கிரி மகாராஜ் (35).
- கார் ஓட்டுநா் நிலேஷ் டெல்கேட் (30)
முக்கிய குற்றவாளிகள் உள்பட 110-க்கும் மேற்பட்டோர் கைது: இந்த நிகழ்வுக்கு சிலா் மதச்சாயம் பூசுவதாக மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே குற்றஞ்சாட்டினார். இதுதொடா்பாக அவா் பேசி வெளியிடப்பட்ட காணொலியில், ‘குழந்தை கடத்தல்காரா்கள் என நினைத்து 3 போ் அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு தொடா்பாக பால்கா் மாவட்டத்தைச் சோ்ந்த 5 முக்கிய குற்றவாளிகள் உள்பட 110-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனா். வன்முறைச் சம்பவத்தை தடுக்க தவறிய பால்கா் மாவட்ட போலீஸார் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இந்தச் சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா 20-04-2020 திங்கள்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினார். அப்போது “பால்கரில் 3 பேர் கொல்லப்பட்டது வெட்ககேடான செயல். இந்த கொடூரத்தை செய்தவர்கள் தப்பிக்க முடியாது. அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இந்தச் சம்பவத்துக்கு மதச்சாயம் பூசும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன் இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடமும் வலியுறுத்தினேன். குற்றவாளிகள் மீது எனது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்பதையும் அவரிடம் கூறியுள்ளேன்,”என்று தெரிவித்தார்[5].. 3 போ் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக உயா்நிலை விசாரணைக்கு மாநில அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது[6].
மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறியது: இதேபோல இந்த சம்பவம் குறித்து மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறும்போது, “பால்கரில் தாக்கப்பட்டவர்களும், தாக்கியவர்களும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள். பால்கர் சம்பவத்தை வைத்து இருசமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் சமூகவலைதளத்தில் யாராவது கருத்து பதிவிட்டால் நடவடிக்கை எடுக்க மாநில போலீசார், சைபர் குற்றப் பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்,” என்றார்[7]. முன்பு இதே கிராமத்தில், ஒரு டாக்டர் மீதும் கல்லெறியப் பட்டுத் தாக்கப் பட்டார். இப்பொழுது, இவர்கள் போலீஸார் முன்பே அடித்துக் கொல்லப் பட்ட நிகழ்ச்சி வீடியோவாகயிருப்பதால் அது இணைதளத்தில் பலர் பார்த்துள்ளனர். மராட்டியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு சிலர் மதசாயம் பூசி சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்[8].
அடித்துக் கொல்லப் பட்டது வீடியோவில் பதிவானது: இந்த சம்பவம் தொடர்பான காணொளியின் பல சிறிய பகுதிகள் வைரலாகிவிட்டன[9]. இதில் சாதுக்கள் கூட்டத்தின் முன் கைக்கூப்பி இறைஞ்சி அழுகிறார்கள், ஆனால் கைகளில் தடிகளை ஏந்திய கும்பல் அவர்களைத் தாக்குகிறது. இந்த வீடியோக்களில் அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போலீசார் திணறுவதையும் காணமுடிகிறது[10]. இப்படி தமிழ்.பிபிசி சப்பைக் கட்டுகிறது. இந்த சம்பவத்தின் 45 விநாடி வீடியோ பகிரப்பட்டு வைரலாகிறது. “மார் ஷோயிப் மார்” என்று கத்திக் கொண்டு வெறித்தனமான கூட்டம் கொலைவெறி தாக்குதல் நடத்துவதாக ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் பகிரப்படும் இந்த வீடியோவுடன் எழுதப்பட்டுள்ளது. வீடியோவில் ‘ஷோயிப்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக சுதர்சன் நியூஸ் எடிட்டரும் திரைப்பட தயாரிப்பாளருமான அசோக் பண்டிட் போன்ற பலர் கூறுகின்றனர்.
.“மார் ஷோயிப் மார்” இல்லை “ஓ போதும், போதும்” – பிபிசி கண்டுபிடிப்பு: இது உண்மையா என்பதை தெரிந்துக் கொள்வதற்காக, இந்த வீடியோவை நாங்கள் கவனமாக ஆராய்ந்தோம். இந்த வீடியோவின் 43 வது வினாடியில், சாதுக்களைக் கொன்ற கூட்டத்தினரிடம் “ஓ போதும், போதும்” என்று ஒருவர் கூச்சலிடுவதை கேட்க முடிகிறது. ஆனால், சமூக ஊடகங்களில் சிலர் இந்த சம்பவத்திற்கு ’அடி, ஷோயிப் அடி” என்று கூறி பிரிவினை ஏற்படுத்த முயன்று வருகின்றனர். ஆனால், இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கின்றது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கிடிஞ்சலே கிராமத்தில் 248 குடும்பங்கள் வசித்து வருகின்றன, மொத்த மக்கள் தொகை 1208. 56 சதவிகித மக்கள் கோக்னா பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 34 சதவிகிதத்தினர் வோர்லி சமூகம், 6 சதவிகிதத்தினர் கத்காரி சமூகம் மற்றும் 4 சதவிகிதத்தினர் மல்ஹார் எனப்படும் மலை சாதியினர். தரவுகளின்படி, இந்த கிராமத்தில் சிறுபான்மை மக்கள் இல்லை என்பது தரவுகளிலிருந்து தெளிவாகிறது. இந்நிலையில், பால்கர் சம்பவம் தொடர்பாக இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அதில் ஒருவர் கூட முஸ்லீம் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டும் விதமாக கைது செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலையும் அம்மாநில உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
© வேதபிரகாஷ்
22-04-2020
[1] தமிழ்.சமயம், கிட்னி திருட வந்ததாக சாதுக்கள் இருவர் உள்பட மூவர் அடித்துக் கொலை!!, Edited By Dhanalakshmi G | Samayam Tamil; Updated: 20 Apr 2020, 11:11:00 AM
[2] https://tamil.samayam.com/latest-news/india-news/3-lynched-by-villagers-in-maharashtras-palghar/articleshow/75243404.cms
[3] பிபிசி.தமிழ், பால்கர் சாதுக்கள் கொலை: கொள்ளைக்காரர்கள் என நினைத்து அடித்து கொல்லப்பட்ட துறவிகள் – மகாராஷ்டிரா சோகம், 20 ஏப்ரல் 2020.
[4] https://www.bbc.com/tamil/india-52349996
[5] தினமணி, பால்கா் வன்முறைச் சம்பவம்:மதச்சாயம் பூசுவதாகஉத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு, By DIN | Published on : 21st April 2020 04:40 AM
[6] https://www.dinamani.com/india/2020/apr/21/bal-thackeray-uthav-thackeray-alleges-religious-paint-3404505.html
[7] தினதந்தி, 3 பேர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம்: மதசாயம் பூசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை – உத்தவ் தாக்கரே எச்சரிக்கை, பதிவு: ஏப்ரல் 21, 2020 05:16 AM
[8] https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/04/21051606/The-incident-that-killed-3-people-On-religious-dyeers.vpf
[9] பிபிசி.தமிழ், பால்கர் சாதுக்கள் கொலை: ‘அடி, ஷோயிப் அடி’ – வைரலான வீடியோவின் உண்மைத்தன்மை என்ன?, கீர்த்தி துபே, பிபிசி செய்தியாளர், 22 ஏப்ரல் 2020.
[10] https://www.bbc.com/tamil/india-52381673