பொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானாவை இந்துத்துவவாதிகளும், இந்துவிரோதிகளும் எதிர்ப்பது ஏன்?
பாரதிராஜா, பி.சி.ஸ்ரீராம், கண்ணன், ராஜீவ் மேனன் முதலியோர் அரசியல் பேசவில்லையாம்: விழாவில் கவிஞர் வைரமுத்து ஒளிப்பதிவாளர் சங்க இணையதளத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: ‘‘நான் எழுதும் பாடல்கள் ஒளிப்பதிவாளர்களால்தான் வண்ணம் பெறுகிறது. நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் தேவிகா பாடும் பாடலை சிறிய அறைக்குள் கேமராவை வைத்து படமாக்கியது போல் மேதைகள் பலர் இருந்து இருக்கிறார்கள். பாரதிராஜா படத்தில் எழுதிய பாடலுக்காக முதல் முறை நான் தேசிய விருது பெற்றது, முதல் காதலை போல் மறக்க முடியாதது. நன்னிலத்தில் டைரக்டர் பாலசந்தர் பிறந்த வீடு பள்ளிக்கூடமாக மாறி இருக்கிறது. அந்த பள்ளியில் பாலசந்தரின் சிலையை நிறுவ திட்டமிட்டு உள்ளேன். சிலை திறப்பு விழாவுக்கு கமல்ஹாசனும், பாரதிராஜாவும் வரவேண்டும்.’’ இவ்வாறு வைரமுத்து பேசினார். டைரக்டர் பாரதிராஜா, ஒளிப்பதிவாளர் சங்க நிர்வாகிகள் பி.சி.ஸ்ரீராம், கண்ணன், ராஜீவ் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர். நல்லவேளை இவர்கள் எல்லாம், “நாங்களும் தமிழ் பொறுக்கிகள் தாம்”, என்றெல்லாம் சொல்லிக்கொள்ளவில்லை.
சுப்ரமணிய சாமியை எதிர்ப்பது யார், ஏன்?: தமிழ் ஊடகங்களுக்கும் சரி, தமிழர்களுக்கும் சரி சு.சாமியை வசைபாடாமல் இருக்க முடியாது. பார்ப்பன விரோதம், இந்து துவேசம் என்று எதுவாக இருந்தாலும், எளிதில் கிடைப்பது சுசாதான். சுனாசானா என்று வறுத்தெடுத்து இடுவார்கள். அதில் இந்துத்துவவாதிகளூம், மோடி ஆதரவாளர்களும் உண்டு என்றால் தமாஷாகத்தான் இருக்கும், ஆனால், உண்மை. தமிழர்களின் போராட்டத்தை தொடர்ந்து பொறுக்கிகள் என்று எழுதி வருகிறார் சுப்பிரமணியம் சாமி[1], அதேபோல அறப்போராட்டத்தை ராதா ராஜன் இழிவுபடுத்தினார். எச். ராஜாவும் மத வெறியை விதைக்கத் துணிந்தார். இதனால்தான் பாஜகவை குறி வைத்து போராட்டத்தில் தாக்குகின்றனர். இதில் என்ன தவறு என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கேட்டுள்ளார்[2]. அதாவது, ஒரு முஸ்லிம், முஸ்லீமாக இப்பிரச்சினையில் குழப்ப வந்துள்ளது தெரிகிறது. ஜல்லிகட்டு விசயத்தில் மாட்டு கறி தின்கும் முஸ்லிம்கள் வக்காலத்து வாங்கி வருவது கொச்சைத்தனமானது. ஷாநவாஸ் இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கும் சில கேள்விகளை முன்வைத்தார்[3]. மெரினா போராட்டத்தில், மதுரையைச் சேர்ந்த ஒரு பெண், இதைப்பற்றி, விமர்சித்ததை, இந்த வீடியோவில் காணலாம்[4]. இப்பெண்ணின் பேச்சு, அரசியல் ரீதியில், நிச்சயமாக பயிற்சியுடன், பேசிய விதமாகத் தெரிகிறது[5]. ஆக, சுப்ரமணிய சுவாமிக்கு எதிராக இவர்கள் விமர்சனம் செய்தாலும், அவையெல்லாம், அவரது பார்வைக்குச் செல்லுமா-செல்லாதா என்று தெரியவில்லை. இவர்கள் டுவிட்டரிலோ, வேறுமுறையிலோ சாமிக்கு தெரிவிக்கவில்லை.
“ஆமா நான் பொறுக்கிதான்” – சினிமாவின் பெயராகி விட்டது: இந்த சூழலில் சுப்பிரமணிய சுவாமியின் கருத்தை உள்ளடக்கி ஆமா நான் பொறுக்கிதான் என்று தன்னுடைய படத்துக்கு டைட்டில் வைத்துள்ளார் ஜெய் ஆகாஷ் என்ற நடிகர்[6]. ஆக, தமிழனுடைய ரசனை இப்படியும் இருக்கிறது. இந்த படத்திற்கு இப்படியொரு தலைப்பு ஏன்? சினிமாவில் நெகட்டீவ் வைபரேஷன் எப்போதும் பாசிட்டிவ் ரிசல்ட் தந்துள்ளது. இதற்கு உதாரணமாக பிச்சைக்காரன் நானும் ரௌடிதான் போன்ற பல படங்களை சொல்லலாம். இந்த படத்தின் கதைக்கு இந்த தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்பதால் இந்த தலைப்பை சூட்டியுள்ளோம் என்கிறார் ஜெய் ஆகாஷ்[7]. சில வருடங்களுக்கு முன் சுந்தர்.சி நடிப்பில் பொறுக்கி என்ற பெயரில் ஒரு படம் தயாரானது. தணிக்கைக்குழுவின் எதிர்ப்பு காரணமாக பின்னர் தலைப்பு மாற்றப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடத்தப் போகிறவர் சாமிதான்[8]: தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு காளைகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, ஜல்லிக்கட்டு வழக்கில், சுப்பிரமணியன் சாமி ஆஜராக உள்ள தகவல் வெளியாகி உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பாரம்பரிய வீர விளையாட்டான, ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். அழிந்து வரும் நாட்டு காளை இனத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த வழக்கை, தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு காளைகள் நலச் சங்கம் கூர்ந்து கவனித்து வருகிறது. சமீபத்தில், ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணையில், நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், அரசு வழக்கறிஞர்கள் திணறினர். இதையடுத்து, தமிழ் இன கலாசார பாதுகாப்பு இயக்க பொருளாளர் கார்த்திகேயன், காளைகள் நலச் சங்க தலைவர் மோகன் சாமிக்குமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியை சந்தித்தனர். உச்ச நீதிமன்றத்தில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாதாடும் படி கோரினர். அதை, அவர் ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக கலாசாரம் தெரிந்த, சுப்பிரமணியன் சாமியை நாடினோம்: இதுகுறித்து, சங்க நிர்வாகிகள் கூறியதாவது: நாட்டு காளைகள் தான், ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தப்படுகின்றன. அவை, இயற்கையில் மூர்க்க குணத்துடன் இருக்கும்; பழக்கப்படுத்த வேண்டியதில்லை. அழிந்து வரும் இனமாகவும் அது உள்ளது. ஜல்லிக்கட்டை தடை செய்து, ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. அந்த காளைகள், தற்போது அடிமாட்டுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால், அந்த இனமே முற்றிலும் அழியும் வாய்ப்புள்ளது. இதற்காக தான், ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என, பாடுபடுகிறோம். ஜல்லிக்கட்டு வழக்கில் அரசு தரப்பில் வாதாடும் வழக்கறிஞர்களுக்கு, தமிழக கலாசாரம், ஜல்லிக்கட்டு பாரம்பரியம் பற்றி எதுவும் தெரியவில்லை. அதனால், நீதிபதி கேள்விகளுக்கு பதிலளிக்க அவர்களால் முடிய வில்லை. எனவே, தமிழக கலாசாரம் தெரிந்த, சுப்பிரமணியன் சாமியை நாடினோம். ஒன்றரை ஆண்டுக்கு முன்னரே, பெங்களூரில் அவரை சந்திந்து பேசினோம். அதன் காரணமாக, அவரும் இவ்வழக்கில் ஆஜராக ஒப்புக் கொண்டதோடு, மத்திய அரசு தரப்பிலும், ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதிஅளித்தார். இதன் மூலம் எங்களுக்கு புது நம்பிக்கை பிறந்துள்ளது, இவ்வாறு அவர்கள் கூறினர்[9]. ஆனால், அதே விசயத்தில், சாமியை திட்டுவதிலும், இருப்பது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தாம்!
© வேதபிரகாஷ்
24-01-2017
[1] http://tamil.oneindia.com/amphtml/news/tamilnadu/threatening-violence-on-twitter-nia-inspection-says-subramanian-swamy-272037.html
[2] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழர்களை பொறுக்கி என்று சாமி கூறியபோது ஆதி ஏன் கொதிக்கவில்லை?.. வி.சி.க கேள்வி , By: Sutha, Published: Sunday, January 22, 2017, 18:08 [IST]
[3] http://tamil.oneindia.com/news/tamilnadu/vck-questions-hiphop-tamizha-aadhi-s-sudden-poser-272383.html
[4] ஜன்னல், போராட்டம் செய்பவர்கள் பொறுக்கிகள் தான் சு.சாமி நீ தமிழ்நாட்டு பக்கம் வா வீர தமிழச்சி, Published on Jan 20, 2017
https://www.youtube.com/watch?v=UweVv9u7YHE
[5] https://www.youtube.com/watch?v=UweVv9u7YHE
[6] செய்தி.காம், ‘ஆமா நான் பொறுக்கிதான்‘ ஜெய் ஆகாஷ் இன் புதிய படத்தின் பெயர் , Tuesday 2017-01-24 08:00.
[7]http://www.seithy.com/breifNews.php?newsID=174645&category=EntertainmentNews&language=tamil
[8] தினமலர், ஜல்லிக்கட்டு: களம் இறங்குகிறார் சாமி!, பதிவு செய்த நாள். டிசம்பர்.3, 2016.20.43.
[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1662531