Archive for the ‘தெலிங்கானா’ Category

தலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம்  – எதிர்கொள்ள பிஜேபி செய்ய வேண்டியது என்ன? (2)

ஏப்ரல் 10, 2018

தலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம்  – எதிர்கொள்ள பிஜேபி செய்ய வேண்டியது என்ன? (2)

Modi advice to cadre-08-04-2018

மோடி தெளிவாக பா... எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசியது: பாராளுமன்ற கூட்டத் தொடர் நேற்று முடிந்த நிலையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது[1]: “தலித் இன மக்களுக்காக பா... அரசு ஏழு முக்கிய நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஆனால் தலித் இன மக்களுக்கு அதுபற்றி தெரியவில்லை. பா... எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் இதுபற்றி தலித் இன மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் இந்தியாவில் எஸ்.சி. எஸ்.டி. இன மக்கள் அதிகமாக வாழும் கிராமங்கள் 20 ஆயிரத்து 844 உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்திற்கும் பா... எம்.பி.க்கள் செல்ல வேண்டும். ஒரு நாள் இரவு அந்த கிராமங்களில் தங்கி இருக்க வேண்டும்[2]. மறுநாள் பா... அரசின் தலித் நலத்திட்டங்கள் பற்றி பா... எம்.பி.க்கள் மக்களிடம் விரிவாக பேச வேண்டும். இதன் மூலம் நாடுமுழுவதும் உள்ள தலித் இன மக்களுக்கு பா... செய்து வரும் நல்லப்பணிகள் தெரியவரும். வருகிற 14-ந்தேதி அம்பேத்கர் பிறந்த தினமாகும். அன்றைய தினம் பா... எம்.பி.க்கள் இந்த பணியை தொடங்க வேண்டும். மே மாதம் 5-ந்தேதி வரை தலித் மக்களை சந்திக்கும் பணியில் பா... எம்.பி.க்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். பா... மந்திரிகள் மூத்த நிர்வாகிகளும் இந்த பணியில் இணைய வேண்டும்.” மோடி அளவுக்கு, பிஜேபியில் இருக்கும் மற்றவர்களுக்கு அரசியல் சாணக்கியத்தனம், மேக்வில்லியன் சாதுர்யம், முதலிய இல்லை என்பதால், தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு, கட்சியின் பெயரைக் கெடுத்து வருகிறார்கள் எனலாம்.

Modi not happy with Amit Shah - SC issue
மோடி தெளிவாக சதியைபிரச்சாரத்தை வெளிப்படுத்தியது: பாஜக தொடங்கப்பட்ட 38-ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, தில்லியில் கட்சித் தலைவர்களுடன் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது[3]:

  1. ஏழைத் தாய்க்கு பிறந்தவர் (நான்) பிரதமர் பதவியை அடைந்துள்ளதை எதிர்க்கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்த யாரும் நாட்டின் உயர் பதவியை எட்டினால் அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
  2. பாஜக என்பது பிராமணர்கள் மற்றும் பனியா (வட மாநில வணிக சமூகத்தினர்) கட்சியாகவே நீண்டகாலமாக கருத்தப்பட்டு வந்தது. ஆனால், இப்போது தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை நாட்டின் மிக உயரிய குடியரசுத் தலைவர் பதவியில் அமர்த்தியுள்ளோம்.
  3. ஏழை, எளிய மக்களின் ஆதரவு பெற்ற கட்சியாக பாஜக வளர்ந்துள்ளது எதிர்க்கட்சிகளால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. பாஜகவின் செல்வாக்கை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
  4. பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் என நாட்டின் அனைத்துத் தரப்பைச் சேர்ந்தவர்களும் பாஜக சார்பில் எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களாக உள்ளனர். நாட்டின் அனைத்துப் பகுதி மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றதன் மூலம்தான் பாஜகவால் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு எம்.பி.க்களைப் பெற முடிந்தது.
  5. பாஜகவின் இந்த வளர்ச்சியை சிதைக்கும் நோக்கில் இப்போது எதிர்க்கட்சிகள் வன்முறை ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர். மக்கள் மத்தியில் தவறான தகவல்களையும் பரப்பும் எதிர்க்கட்சிகளின் சதிக்கு எதிராக, நமது கட்சியினர் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். நாட்டு மக்கள் அனைவருக்காகவும் நாம் உழைக்க வேண்டும். எதிர்க்கட்சியினரின் தூண்டுதல்களால் நாம் பொறுமை இழந்துவிடக் கூடாது.
  6. இது தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்ததுவிட்ட நவீன உலகம். நமது கொள்கைகளை சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் மத்தியில் நாம் எடுத்துச் செல்ல வேண்டும். கட்சி தொடங்கிய 38 ஆண்டுகளில் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு நாம் வளர்ந்துள்ளோம்.
  7. காங்கிரஸை எதிர்த்து அரசியலில் வளர்வது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல.
  8. பாஜகவுக்கு கிடைத்த சிறந்த தலைவர்களும், தன்னலம் கருதாத தொண்டர்களும்தான் நமது சாதனைகளுக்கு காரணம்”என்றார் அவர்[4].

மோடி-ரசிகர்கள், மோடி-தாசர்கள், பிஜேபிகாரர்கள் மோடி சொன்னதை கவனித்து செயல்பட்டாலே, 2019 தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம்.

Rahul, anti-Modi pitch, communal tourism

காங்கிரஸை எதிர்த்து அரசியலில் வளர்வது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல: இப்படி மோடி சொன்னதை கவனிக்க வேண்டும். மைனாரிட்டி, பின்தங்கிய வகுப்பினர், எஸ்.சி மற்றும் எஸ்.டி என்ற கூட்டமைப்பில் மக்களைப் பிரித்து, அவர்களை இந்துக்களுக்கு எதிராக்கி, அதாவது பிஜேபிக்கு எதிராக்கி, வெற்றி பெறலாம் என்ற திட்டத்தில் தான், காங்கிரஸ் இறங்கியுள்ளது. இதற்காக கோடிக்கணக்கில் செலவழிக்கவும் தயாகி விட்டது. 60-70 ஆட்சி காலத்தில், காங்கிரஸ் விசுவாசிகள் பற்பல துறைகளில், பதவிகளில் இருப்பதால், அவர்களின் ஆதரவால், தமக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தி ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற திட்டத்தில் செயல்படுவதும் தெரிகிறது. உச்சநீதி மன்றங்களில் மாறுபட்ட தீர்ப்புகள் வருவது, அவைப் பற்றி ஊடகங்களில் தவறான செய்திகள் வருவது, விவாதங்களில் திரிபு வாதங்கள் கொடுப்பது, சமூக ஊடகங்களில், வலைதளங்களில், பொய்யான விவரங்களைப் பரப்புவது போன்றவை, பிஜேபிக்கு எதிராக இல்லாமல், நாட்டிற்கே எதிராக இருப்பதையும் கவனிக்கத் தக்கது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஏதாவது ஒரு பிரச்சினையை உண்டாக்கி, அதன் மூலம் ஆதாயம் கிட்ட பார்க்கிறது. இவற்றையெல்லாம் பிஜேபி கவனித்துக் கொள்ள வேண்டும்.

Owasi talking about dalit-mukt Bharat Jan.2018

ஆக பிஜேபிகாரர்கள் கவனிக்க வேண்டியது: பிஜேபி ஆதரவாளர்கள், மோடி பிரியர்கள் மற்றும் இந்துத்துவவாதிகள் இதையெல்லாம் கவனிக்கிறார்களா என்று தெரியவில்லை.

  1. எஸ்.சிக்களை ஒதுக்கினால், பிஜேபிக்கு இழப்பு ஏற்படும், இது வரை நான்கு பிஜேபி எம்பிக்கள்[5], மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
  2. மோடி, இவ்விசயத்தில் [எஸ்.சி விவகாரம்] அமீத் ஷாவிடம் அதிருப்தியைத் தெரிவித்துள்ளாதாக தெரிகிறது.
  3. உபியில், மாயாவதிக்கும், அகிலேஷ் யாதவுக்கும் தேர்தல் உடன்படிக்கை [யாதவ் + எஸ்.சி ஓட்டு%] ஏற்பட்டால், பிஜேபிக்கு பாதிப்பு ஏற்படும்.
  4. எதிர்கட்சிகள் எஸ்.சி விவகாரத்தை வைத்துக் கொண்டு, குழப்பத்தை ஏற்படுத்தி, தேர்தல் பிரச்சாரமாக்க திட்டமாகி விட்டது[6].
  5. லிங்காயத்து தனி மதம், ஜைனர்களுக்கு அவ்வாறான ஆசை காட்டுவது, ஆந்திராவுக்கு, சிறப்பு அந்தஸ்து காவிரி பிரச்சினை..இப்படி பிஜேபிக்கு எதிராக….பிரச்சினைகள் உருவாக்கப்பட்டது.
  6. ஜி.எஸ்.டி அமூல் தாமதத்தால், அமெரிக்க முதலீடு தேக்கம், அமூலுக்குப் பிறகு உண்டான தயக்கம், வேலைகள் உருவாக்குவதில் தாக்கம், பிஜேபிக்கு பாதிப்பு.
  7. “தலித்-முக்த்” பாரத்[7] என்று [“காங்கிரஸ்-முக்த் பாரத்”எதிராக] காங்கிரஸ் விசமத் தனமான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது! ஒவைஸி பேசியதை ராகுல் பேசியயுள்ளதை கவனிக்க வேண்டியுள்ளது[8].
  8. மேற்கு வங்காளம், ஒரிஸா, ஆந்திரா, தெலிங்கானா, தமிழகம், கேரளா, கர்நாடகா என்று பிஜேபி இல்லாத மாநிலங்கள் மீது குறி வைத்துள்ளது காங்கிரஸ்.
  9. பிரிவினைவாதம், திராவிட நாடு, கம்யூனிஸம் முதலியவை மறுபடியும் பழைய பாட்டை பாட ஆரம்பித்துள்ளதை கவனிக்கலாம்!
  10. மோடியின் ஆளுமைத் தன்மையினை உபயோகப் படுத்திக் கொள்வதில், இவை தடங்களாக இருக்கும் பொய் பிரச்சாரத்திற்கு உதவும்.

© வேதபிரகாஷ்

09-04-2018

Ragul talks like Owasi about dalit-mukt Bharat April.2018

[1] மாலைமலர், தலித் கிராமங்களுக்கு சென்று தங்கி இருந்து பேசுங்கள் பாஜக எம்.பி.க்களுக்கு மோடி உத்தரவு, பதிவு: ஏப்ரல் 07, 2018 16:20

[2] https://www.maalaimalar.com/News/National/2018/04/07162004/1155690/Narendra-Modi-asks-BJP-MPs-to-spend-two-nights-in.vpf

[3] தினமணி, எனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வன்முறையைக் கையில் எடுத்துள்ளன: மோடி குற்றச்சாட்டு, By DIN | Published on : 07th April 2018 01:08 AM .

[4]http://www.dinamani.com/india/2018/apr/07/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2894948.html

[5] Bahraich MP Savitri Bai Phule, Robertsganj MP Chhote Lal Kharwar and Etawah MP Ashok Kumar Dohre.  Nagina constituency, Yashwant Singh

[6] Pioneer, Modi working to make India Dalit-mukt: Cong, Monday, 09 April 2018 | PNS | New Delhi

[7] http://www.dailypioneer.com/nation/modi-working-to-make-india-dalit-mukt-cong.html

[8] News.18, BJP Wants a Muslim-mukt, Dalit-mukt Bharat: Asaduddin Owaisi, Sakshi Khanna | CNN-News18Updated:January 23, 2018, 12:11 PM IST

https://www.news18.com/news/politics/bjp-wants-a-muslim-mukt-dalit-mukt-bharat-asaduddin-owaisi-1639413.html

தாவூத் இப்ராஹிம் கூட்டாளி திருமலை கோவிலுக்குள் நுழைந்துள்ளான் – இந்துக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியம்!

ஜனவரி 20, 2014

தாவூத் இப்ராஹிம் கூட்டாளி திருமலை கோவிலுக்குள் நுழைந்துள்ளான் – இந்துக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியம்!

 

Devotees protested the entry of Dawood aide inside Tirumala Temple 2014

Devotees protested the entry of Dawood aide inside Tirumala Temple 2014

தீவிரவாதிசோட்டாஷகீல்கூட்டாளிதிருமலைக்குவந்துஏழுமலையானைரகசியமாகதரிசனம்: திருப்பதி ஏழுமலையான் கோவில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் உள்ளது. பக்தர்கள் என்ற போர்வையில் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் திருமலை முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்த நிலையில் மும்பை தொடர்குண்டு வெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிமுக்கு வலது கரமாக செயல்பட்ட தீவிரவாதி சோட்டா ஷகீல் கூட்டாளி திருமலைக்கு வந்து ஏழுமலையானை ரகசியமாக தரிசனம் செய்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது[1]. அவரது பெயர் அஜய் நவீந்தர் (Ajay Navandar )[2]. மும்பையைச் சேர்ந்த இவர் சோட்டா ஷகீல் உதவியாளர். திருப்பதி கோவிலில் கடந்த 11–ந்தேதி ஏகாதசி விழாவும், 12–ந்தேதி துவாதசி விழாவும் கொண்டாடப்பட்டது. 2 நாட்கள் விழாவிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வி.ஐ.பி. பாஸ்கள் விநியோகிக்கப்பட்டு தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அப்போது சோட்டா ஷகீல் கூட்டாளி அஜய்நவீந்தர் வி.ஐ.பி. மரியாதையுடன் 2 முறை தரிசனம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது[3].

 

I am not Dawood aide - Ajay Navindar

I am not Dawood aide – Ajay Navindar

அஜய்நவீந்தர்மராட்டியமாநிலவி..பி.க்களானமந்திரிசச்சின்அகீர், சிவசேனாதலைவர்உத்தவ்தாக்ரேஆகியோருடன்தரிசனம்: அஜய்நவீந்தர் மராட்டிய மாநில வி.ஐ.பி.க்களான மந்திரி சச்சின் அகீர், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே ஆகியோருடன் தரிசனம் செய்து உள்ளார். மராட்டிய மந்திரி சச்சீன் அகீர் தரிசனம் செய்ததை உறுதிப்படுத்திய அறங்காவலர் குழு தலைவர் கனிமுரி பாபிராஜூ அவருடன் வந்த அஜய்நவீந்திரன் பின்னணி பற்றியும் அவர் சோட்டா ஷகீல் கூட்டாளி என்பதும் எனக்கு தெரியாது என்றார். அவர் கூறும் போது: “மராட்டிய மாநில முதல்மந்திரி கடிதத்துடன் அஜய் என்பவர் வந்தார். அவருடன் மராட்டிய மாநில மந்திரி ஒருவரும் வந்தார். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் அறை எடுத்து தங்கினர். மராட்டிய மாநில முதல்மந்திரி கொடுத்த சிபாரிசு கடிதத்தால்தான் அவர்களுக்கு வி..பி. தரிசனம் தரப்பட்டது. அவர் தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு உள்ளவர்கள் என்பது எனக்கு தெரியாது. இதுகுறித்து மேலும் அறிய வேண்டும் என்றால் மராட்டிய மாநில முதல்மந்திரியைத்தான் கேட்க வேண்டும்”, என்றார். இது சிவசேனாவின் தாதாக்களின் தொடர்பை காட்டுவது போல உள்ளது.

 

Devotees protested against the entry of Dawood aide inside Tirumala Temple 2014

Devotees protested against the entry of Dawood aide inside Tirumala Temple 2014

‘‘நான்தாவூத்இப்ராகிமுடன்இல்லை. பெங்களூரில்இருந்துதரிசனத்துக்குவந்தேன். 2 முறைஏழுமலையானைதரிசித்தேன். வைகுண்டஏகாதசியன்றுஅதிகாலை 4 மணிக்குமகாராஷ்டிராமந்திரியுடன்தரிசனம்செய்தேன்: அஜய்நவீந்தர் தாவூத் இப்ராகிம் கூட்டாளி. அவர் வி.ஐ.பி. மரியாதையுடன் திருமலையில் 3 நாள் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு குறைப்பாடுக்கு தேவஸ்தானத்தின் அலட்சியமே காரணம். இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று தெலுங்கு தேச எம்.எல்.ஏ. கலி முட்டு கிருஷ்ணம்ம நாயுடு வலியுறுத்தி உள்ளார். ஆனால் தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை அஜய் நவீந்தர் மறுத்து உள்ளார். அவர் கூறும் போது, ‘‘நான் தாவூத் இப்ராகிமுடன் இல்லை. பெங்களூரில் இருந்து தரிசனத்துக்கு வந்தேன். 2 முறை ஏழுமலையானை தரிசித்தேன். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை 4 மணிக்கு மகாராஷ்டிரா மந்திரியுடன் தரிசனம் செய்தேன். 2–வது முறையாக 2 நாட்களுக்கு பிறகு உத்தவ் தாக்கரேவுடன் சென்றேன். எனக்காக எந்த சிறப்பு ஏற்பாடுகளும் செய்யவில்லை’’ என்றார். ‘‘என்றாலும் இதனை எளிதாக விட்டுவிட மாட்டோம்’’ என்றும் இது குறித்து வழக்கு தொடருவேன் என்றும் தெலுங்குதேச எம்.எல்.ஏ. கலி முட்டு கிருஷ்ணம்ம நாயுடு கூறினார்[4].வைகுண்ட ஏகாதசி நாளில், மும்பை நிழலுலக தாதா, தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளுக்கு, திருமலையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்ததாக, தெலுங்கு தேச கட்சி, எம்.எல்.ஏ., முத்து கிருஷ்ணம நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

முத்துகிருஷ்ணமநாயுடுஇதுகுறித்துகூறியதாவது: “மும்பை தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகள், 20 பேர், வைகுண்ட ஏகாதசி அன்று, ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வந்துள்ளனர். திருமலையில் உள்ள, ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில், அவர்கள் தங்கியுள்ளனர். சாதாரண பக்தர்கள் அடையாள அட்டை கொண்டு வர மறந்தால், அவர்களுக்கு அனுமதி மறுக்கும் தேவஸ்தானம், வி.ஐ.பி.,களுடன் வந்தவர்களை, அடையாள அட்டை இல்லாமல் அனுமதித்தது ஏன்? வந்தவர்கள், திருமலையின் பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தையும் அறிந்து சென்றிருந்தால், திருமலையின் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்பது யார்? “, இவ்வாறு, அவர் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த, தேவஸ்தான செயல் அதிகாரி எம்.ஜி.கோபால், “”மகாராஷ்டிர முக்கிய அரசியல் பிரமுகரான, அஜய் தவேதார்வுடன், 20 பேர் திருமலைக்கு வந்தனர். அவர்கள், யார் என, விசாரணை மேற்கொள்ளப்படும்,” என்றார்[5].

 

300 ரூபாய்தரிசனடிக்கெட்திடீரெனநிறுத்தப்பட்டது, போராடிய பக்தர்கள் மீது வழக்கு: இந்நிலையில், 300 ரூபாய் தரிசன டிக்கெட் திடீரென நிறுத்தப்பட்டதை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள் மீது, தேவஸ்தானம் தொடர்ந்த வழக்கு, நேற்று திரும்ப பெறப்பட்டது.  திருமலையில், வைகுண்ட ஏகாதசி அன்று, தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர், பாபி ராஜு அலுவலகம் மற்றும் செயல் அதிகாரி அலுவலகம் முன், “தர்ணா’ செய்த பக்தர்கள் மீது, வழக்கு பதிவு செய்ய, தேவஸ்தான செயல் அதிகாரி, எம்.ஜி.கோபால், போலீசாருக்கு பரிந்துரை செய்தார். அவர்களும், “வீடியோ’ பதிவை ஆதாரமாக கொண்டு, பிரிவு, 341ன் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதற்கு ஆதரவு வலுத்ததால், தேவஸ்தான செயல் அதிகாரி, வழக்கை திரும்ப பெற்றதாக, கோவில் இணை அதிகாரி தெரிவித்தார்[6].

 

இந்துக்கள் அல்லாதவர்கள் திருமலை கோவிலுக்குள் செல்வது சாதாரணமாக உள்ளது: கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் நிறைய பேர், இந்து நண்பர்களுடன் திருமலை கோவிலுக்குள் சென்று வருகிறார்கள். அதுமட்டுமல்லாது, அமைதியாக, எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமலும் அவர்கள் திருமலை கோவிலுக்குள் சென்று வருகிறார்கள். 08-01-2014 அன்று 36 பேர், “அனைத்துலக மாஹாபாரதம் மாநாடு” நடந்தப்பொது, திருமலை கோவிலுக்கு ரூ.300/- டிக்கெட் மூலம் அழைத்துச் செல்லப் பட்டனர். அதில் இரண்டு பெண்கள் முஸ்லிம்கள் மற்றும் TTD ஊழியர்கள். ஶ்ரீ வெங்கடேஸ்வரா மற்றும் மத்மாவதி பல்கலைக்கழகங்களில் வேலை செய்து வருகிறார்கள். கேட்டதற்கு தங்களுக்கு ஏழுமலையான் மீது நம்பிக்கை உள்ளது என்று சொன்னார்கள். அதுமட்டுமல்லாது, ஏற்கெனவே பலதடவை அவ்வாறு சென்றுள்ளதாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர். சோனியாவின் விஜயம் கூட நடந்துள்ளது[7]. தமிழக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் எம்.எல்.ஏ, எம்.பி மற்றும் அமைச்சர்கள் சென்று வந்துள்ளது பற்றி அவ்வப்போது செய்திகள் வந்துள்ளன. இவ்வாறு நம்பிக்கையுடன் சென்று வந்தால் பிரச்சினை இல்லை. ஆனால், அவர்கள் தாங்கள் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என்று செயல்பட ஆரம்பித்தால் கோவில் பற்றிய விவரங்களை துஷ்பிரயோகத்திற்கு பயன்படுத்தலாம்.

 

திருமலை கோவில் மாற்று மதத்தினரின் தாக்குதல்-இலக்கில் இருந்து வந்துள்ளது: பௌத்தர்கள் இக்கோவிலை ஆக்கிரமிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், முடியவில்லை. இக்காலத்தில் சிலர் விசமத்தனமாக, திருமலைக் கோவில் ஒரு பௌத்த விஹாரம் என்றெல்லாம் கதைகளை உருவாக்கியுள்ளனர். மாலிக்காபூர் முதல் ஔரங்கசீப் வரை முகபதிய / முஸ்லிம் மன்னர்களும் தாக்க திட்டம் போட்டுள்ளனர், ஆனால், முடியவில்லை. அதாவது, எப்பொழுதுமே திருமலையில் மக்கள் கூட்டம் இருந்து வந்ததினால், அத்தகைய தாக்குதலை நடத்த முடியவில்லை. போர்ச்சுகீசியர்கள்[8] கூட கோவிலைத் தாக்கிக் கொள்ளை அடிக்கலாம் என்று சதிதிட்டம் போட்டனர், ஆனால், முடியவில்லை[9]. இப்பொழுதோ, இந்துக்களின் தலையாய புனிதத்தலம் என்ற நோக்கில், இஸ்லாமிய தீவிரவாதிகள் இக்கோவிலை தகர்க்கத் திட்டமிட்டுள்ளனர். எனவே, மாற்று மதத்தினர் எவ்வாறு உள்ளே நுழைந்தாலும், ஒருவேளை அவரவர் மதக்கட்டளைக்குப் படி நடக்க உத்தரவிடும் போது, முஸ்லிம் முஸ்லிமாகத்தான் செயல்படுவான், கிறிஸ்தவனும் அவ்வாறே செயல்படுவான். ஆகையால், இந்துக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

 

வேதபிரகாஷ்

© 20-01-2014


[1] மாலைமலர், திருப்பதி கோவிலில் தாவூத் இப்ராகிம் கூட்டாளி 2 நாள் ரகசிய தரிசனம் , பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 11:04 AM IST

[5] தினமலர், 17-01-2014,

[8]  வேதபிரகாஷ், இந்தியாவில்செயின்ட்தாமஸ்கட்டுக்கதை,  மேனாட்டு மதங்கள் ஆராய்ச்சிக் கழகம், 57, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவயல், சென்னை – 602102, 1989, ப.38-39.

ரேணுகா சௌத்ரியை வெளியேறச் சொன்ன தெலிங்கானா அமைப்பினர் – சோனியா வாக்குறுதியால் ஆந்திராவில் பிரச்சினை!

செப்ரெம்பர் 16, 2013

ரேணுகா சௌத்ரியை வெளியேறச் சொன்ன தெலிங்கானா அமைப்பினர் – சோனியா வாக்குறுதியால் ஆந்திராவில் பிரச்சினை!

தெலிங்கானா-சீமாந்திரா போராட்டங்களில் சிக்கிய ஆந்திர மக்கள்: தேர்தல் மற்றும் ஆந்திராவில் இருந்த காங்கிரசின் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளவேண்டும் என்ற நோக்கில் “தனித் தெலிங்கானா” மாநிலம் உருவாக்க சோனியா அரசு ஒப்புக் கொண்டது. இதனால், சீமாந்திரா என்ற பெயரில், ஆந்திராவை பிரிக்கக் கூடாது என்று போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அவர்களது போராட்டம், பந்த் முதலியன திருப்பதியை மையமாக வைத்துச் செய்யப் படுவதால், மற்ற மாநிலத்தவர் மீது அதன் பாதிப்பு அறியப்படுகின்றது. 15-09-2013 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெற்ற தெலிங்கானா காங்கிரஸ் கூட்டத்தில், முந்தைய மத்திய அமைச்சர் மற்றும் இப்பொழுதைய எம்.பி ரேணுகா சௌத்ரி கலந்து கொண்டபோது, “தெலிங்கானாவிற்கு எதிரான” அவரது போக்கிற்காக, சில தெலிங்கானா தலைவர்கள், அவரை வெளியேறுமாறு கூறினர். நிலைமைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்குள், முகம் சிவந்து, வெறுப்படைந்த ரேணுகா சௌத்ரி வெளியேற வேண்டியதாயிற்று[1].

ரேணுகா சௌத்ரி சோனியாவிடம் நெருக்கமாக இருக்கும் பெண்மணி ஆவர்: ரேணுகா சௌத்ரி மிகவும் கர்வம் பிடித்த பெண்மணி என்பது, அவர் கண்கள், உடல், கை-கால்கள் முதலியன பேசுவதிலிருந்தே அறிந்து கொள்ளலாம். உண்மையில் பேசும் போது, தனக்குத்தான் எல்லாமே தெரியும் என்பது போல, துச்சாமாசடுத்தவரை எடுத்தெறிந்து பேசும் மனோபாவமும் வெளிப்படும். டிவி-செனல்களில் அவர் கலந்து கொண்டு பேசும் போது, உரையாடும் போது, விவாதிக்கும் போது, அந்த குணாதிசயங்களை தாராளமாகக் கண்டு களிக்கலாம். சோனியாவோடு மிகவும் நெருக்கமாக இருப்பவர் என்று சொல்லப்படுகிறது. சோனியாவோடு சேர்ந்து ஆடிய பெருமை இவருக்கு மட்டும் தான் உண்டு என்று தெரிகிறது. இதனால், இவரை மத்தியஸ்தம் செய்ய அனுப்பலாம் என்ற நோக்கில், அனுப்பியிருக்கலாம்.

தெலிங்கானா விசயத்தில் மற்ற மாநிலத்தவர் பாதிக்கப்படுவது: சோனியா “தெலிங்கானா” பிரச்சினை மூலம், ஆந்திரர்களை, தெலுங்கு பேசும் மக்களை இரண்டாக உடைத்துள்ளார். இதனால், தெலுங்கு மக்கள் மீது மற்ற மாநிலத்தில் வெறுப்புக் கொள்ளும் வகையில் காரியங்கள் நடக்கவும் சோனியா காரணமாகிறார். குறிப்பாக திருப்பதி—திருமலை செல்லும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த பிரச்சினையால் முழுவதுமாக பாதிக்கப் பட்டுள்ளனர். கடந்த வாரத்தில், மின்சாரத் துறையினர் வேலைநிறுத்தம் செய்ததால், அதிகமாகவே பாதிக்கப்பட்டனர். தெலிங்கானா பிரச்சினை, நிச்சயமாக ஆந்திர மக்கள் மட்டுமல்லாத, மற்ற இந்திய மக்களையும் பாதிக்க ஆரம்பித்துள்ளது. முன்னர் சோனியா, திருப்பதி-திருமலை பகுதியை மையமாக வைத்துக் கொண்டு ஆரம்பித்த நாடகத்தால், அவர்களும் அதே பகுதியில் பந்தை செய்கின்றனர்.

ரேணுகா சௌத்ரி முன்னர் தெலிங்கானா இயக்கத்தினரை விமர்சனம் செய்தது: போதாகுறைக்கு ஜகன்மோஹன் ரெட்டி சோனியாவிற்கு எதிராகத் திரும்பிவிட்டதாலும், “சீமந்திரா” என்று ஆந்திரபிரதேசத்தைப் பிரிக்கக் கூடாது என்று போராட ஆரம்பித்தவர்களின் தாக்கம் அதிகமாவதாலும், சோனியா உடனே இப்பிரச்சினையை சமாளிப்பதற்காக ரேணுகா சௌத்ரியை அனுப்பியிருப்பது தெரிகிறது. ஆனால், முன்னர் இவர் “தெலிங்கானா” போராளிகளை “குண்டர்கள்” என்பது மாதிரி பேசியிருக்கிறார். இதற்கு மன்னிப்புக் கோரக் கூறியபோது, அவர் ஒப்புக்கொள்ளவில்லை[2]. அதுமட்டுமல்லாது, தெலிங்கானாவில் ஆயிரக்கணக்கானவர் இறந்தபோது, அவர்கள் எல்லோரும் கேன்சரால் இறந்தார்கள் என்றும் சொல்லியிருக்கிறார்[3]. இத்தகைய நடத்தையால், சில தெலிங்கானா தலைவர்கள், அவரை வெளியேறுமாறு கத்தினர். “இவரை யாரும் அழைக்கவில்லையே. அப்படியிருக்கும் போது, ஏன் அவர் இந்த கூட்டத்திற்கு வரவேண்டும்?”, ஏன்று கோபத்துடன் கரீம்நகர் எம்.பி பூனம் ரெட்டி கேட்டார்[4]. இதனால், அவமானத்துடன், ரேணுகா சௌத்ரி வெளியேற நேர்ந்தது.

குழப்பமான   ஹைதராபாத்  நிலை: ஹைதராபாத் பொது தலைநகராக இருக்க வேண்டுமா, கூட்டுத் தலைநகராக இருக்க வேண்டுமா, யூனியன் டெரிடரி ஏன்ற நிலையில் இருக்கவேண்டுமா ஏன்ற விவாதம் ஏற்கெனவே நடந்துள்ளது[5].  இதற்கு தெலிங்கானா போராட்டக்காரர்கள் விரும்பவில்லை, எதிர்க்கிறார்கள் என்றும் தெரிந்த விசயம் தான்[6]. காங்கிரஸ் காலந்தாழ்த்துகிறது, சீமந்திரா தலைவர்களுடன் சேர்ந்து பேசுகிறது, ஹைதரபாத் விசயத்தில் அவர்களுக்கு விட்டுக் கொடுக்கிறது என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளதால், சோனியாவை சந்தித்து பேச தயாராக உள்ளார்கள்.

ஆகஸ்டிலிருந்து  திருப்பதியி ல் தொடரும்  சீமாந்திரா  போராட்டம்: சோனியா தெலிங்கானா மாநிலம் அமைய அறிவித்ததிலிருந்து, தெலுங்கானாவுக்கு எதிராக சீமாந்திராவில் ஒரு மாத காலத்துக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. அது நீடித்து வரும் நிலையில் திருப்பதியிலும் பக்தர்கள் கூட்டம் கணிசமாக குறைந்துவிட்டதால், கோயில் வருவாய் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று செய்திகள் வெளியிடப்படுகின்றன. தெலுங்கானாவுக்கு எதிராக கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகியவற்றை உள்ளடக்கிய சீமாந்திராவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பதிக்கான எல்லையை மூடும் போராட்டத்தை ஒருங்கிணைந்த ஆந்திராவை கோரும் கூட்டுக் குழு அறிவித்தது. இந்த போராட்டத்தின் உச்சகட்டமாக திருப்பதிக்கான எல்லை மூடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது[7]. மேலும் திருப்பதியில் இருந்து மேலே திருமலைக்கு வாகனங்களை இயக்கவும் திருப்பதியில் கடைகள், கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்களைத் திறக்கவும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் போராட்டக் குழு அறிவித்தது. வெளிமாநில வாகனங்கள் திருப்பதிக்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ அனுமதிக்கப்படாது, ரயில்கள் மட்டும் ஓடும் என்றும் போராட்டக் குழுவினர் அறிவித்தனர். இதனால், மக்கள் பாதிக்கப்பட்டனர்.

செப்டம்பரில் மின்-துறை அலுவலகர்கள் போராட்டம்-பந்த்: ஆந்திர மாநிலம், ராயலசீமா பகுதியைச் சேர்ந்த மின் ஊழியர்கள், 13-09-2013 நள்ளிரவு முதல், காலவரையற்ற போராட்டத்தை துவக்கி, “தனித் தெலுங்கானா அறிவிப்பை திரும்பப் பெறும் வரை போராட்டம் நடத்தப்படும்’ என, ராயலசீமா பகுதி, மின் ஊழியர்கள் தெரிவித்தனர். ராயலசீமா பகுதியில், கடப்பா, சித்தூர், பிரகாசம், அனந்தபுரம், கர்னூல் மற்றும் நெல்லூர் மாவட்டங்கள் அமைந்துள்ளன. வேலை நிறுத்தத்தில், ராயலசீமாவின், 30 ஆயிரம் மின் ஊழியர்கள் பங்கேற்றனர்.
இப்பகுதியில், தேவையான 12 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் பதிலாக, தினசரி, 6,000 மெகா வாட் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. பாக்கியுள்ள மின்சாரத்தை, மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து வாங்கி, பற்றாக்குறையை சமாளித்து வந்தனர். இந்த சூழ்நிலையில், ஒட்டு மொத்த மின் ஊழியர்களும், போராட்டத்தில் குதிப்பதால், மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், அதை எப்படி சமாளிப்பது என்பது புரியாமல், ஆந்திர மாநில அரசு, திகைத்து போய் உள்ளது. மின் ஊழியர்களின் போராட்டத்தால், அனைத்து மாவட்டங்களிலும், மின் வினியோகம் முற்றிலும் நிறுத்தப்படும் என்பதால், மின் வினியோகம் தடைபடுவதால், மின்சார ரயில்கள் இயங்காது என்றும், மின் ஊழியர் சங்கங்கள் தெரிவித்து உள்ளன. மின் ஊழியர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட “சிம் கார்டு’களை 12-09-2013 மாலை, 5:00 மணியளவில், அரசிடம் ஒப்படைத்தனர்.

தேவஸ்தானம் சமாதான முயற்சி தோல்வி: “திருமலைக்கு செல்லும் எந்த வாகனத்தையும், 13ம் தேதி நள்ளிரவு முதல், 15ம் தேதி நள்ளிரவு வரை அனுமதிக்க முடியாது’ என, தெலுங்கானா எதிர்ப்புக் குழுவினர், அறிவித்ததையடுத்து, திருமலை – திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி, செயல் இணை அதிகாரி மற்றும் பாதுகாப்புத் துறை தலைமை அதிகாரி ஆகியோர், திருப்பதியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக மேலாளர் மகேஸ்வர ராவை சந்தித்துப் பேசினர். அப்போது, “திருமலைக்கு வரும் பக்தர்களை தடுக்க வேண்டாம்’ என, கோரிக்கை விடுத்தாலும், “தனித் தெலுங்கானா மாநிலம் அமைவதை எதிர்த்து நடைபெறும், உச்சக்கட்ட போராட்டம் என்பதால், கோரிக்கையை ஏற்க முடியாது’ என, அரசு போக்குவரத்துக் கழக மேலாளர் மறுத்து விட்டார். மேலும், “மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், முக்கிய அரசு அலுவலகங்களை இயக்க உதவ வேண்டும்’ என்ற ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியின் வேண்டுகோளையும், போராட்டக் குழுவினர் நிராகரித்து விட்டனர். இந்நிலையில், கடந்த 08-09-2013 முதல், திருப்பதி வழியாக செல்லும், நாகர்கோவில் – மும்பை எக்ஸ்பிரஸ் ரயில், திருப்பதிக்கு வராமல், ரேணிகுண்டாவில் நேரடியாகச் சென்று விடுகிறது. ரயில்வேயின் இந்த முடிவால், இந்த ரயிலில் பயணிக்கும் பக்தர்கள், ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது[8]. ஆனால், அதிகாரிகளைப் பொறுத்த வரைக்கும் இப்பொழுதைய சூழ்நிலையில் திருப்பதிக்கு வரவேண்டாம் என்று வெளிப்படையாகச் சொல்கின்றனர்.

சோனியா அரசியல் சூதாட்டத்தில் சிக்கிய திருப்பதி  (2011-2013): திருப்பதியை மையமாக வைத்து, அரசியல் செய்யலாம் என்ற சோனியாவின் திட்டம், சாமுவேல் ராஜசேகர ரெட்டி காலத்திலேயே வெளிப்பட்டது. திருப்பதிக்கு செல்லும் வழிகளில் அதிகமாக சர்ச்சுகள் கட்டப்பட்டன. திருமலையிலேயே, கிருத்துவர்கள் பிரசாரம் மேற்கொண்டார்கள் என்ற புகாரும் எழுந்தது. கிறிஸ்தவ பிரச்சார நோட்டீசுகளைக் கொடுத்தவர்கள் கைதும் செய்யப் பட்டனர். பொதாகுறைக்கு, திருமலை கோவிலுக்கு எதிராக இருந்த, இடைக்காலத்திய 1000-கால் மண்டபம் இடிக்கப்பட்டது[9]. சிரஞ்சீவியை காங்கிரசில் வளைத்துப் போட்டனர். அவருக்கு அமைச்சர் பகுதியும் கொடுக்கப்பட்டது. ஆனால், மக்கள் வேறுவிதமாக நினைக்க ஆரம்பித்து விட்டனர். இதன் பின்னணியை அறிய 15 ஆண்டுகள் முன்பிலிருந்து நடந்து வரும் நிகழ்சிகளை ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டியுள்ளது. ஏனெனில், அதிசயமாக சோனியா திருமலைக்கே விஜயம் செய்தார்!

சோனியா மெய்னோவின் திருமலை விஜங்கள்[10] (1997-2006): சோனியா மெய்னோ 1997ல் திருமைக்கு வந்தபோதே, மக்கள் எதிர்த்தனர். இருப்பினும் அவர் அனுமதிக்கப் பட்டார். இரண்டாவது முறையாக, 1997க்குப் பிறகு திருமலைக்கு சோனியா (Antonia Edvige Albina Maino) வருகிறார் என்றபோதும், ஊடகங்களுக்கு படு குஷியாகி விட்டது[11]. “தி ஹிந்து” சோனியா வருகிறார், வந்துக் கொண்டிருக்கிறார் பராக், பராக் என்ற பாணியில் நாளுக்கு நாள் செய்தி வெளியிட்டது.நவம்பர் 25, 2006 அன்று சோனியா மெய்னோ திருமலைக் கோவிலுற்குள் சென்று சாமி தரிசனம் செய்தார். உண்டியில் காசு போட்டார்[12]. கூட காங்கிரஸ் அடிவருடி பட்டாளமே இருந்தது. சாமுவேல் ராஜசேகர ரெட்டி முதலியோருக் இருந்தனர். இதற்கு முன்பாக, தடபுடலாக

TTD to build ‘Maha Mandapam’ at Tirumala[2]Staff Reporter,Thursday, Nov 25, 2010 TIRUMALA: The TTD management is considering construction of ‘Maha Mandapam’ at the sprawling space available in front of the Tirumala temple complex. The massive structure, which shall come up in a area of about 20,000 square feet will be built with a whopping cost of Rs. 10 crore. The contractor of the project Mr. Rama rao who carried out the ‘soil’ test on Wednesday (24-11-2010) said that the work will be completed in a period of two years. Even though the management had resolved to construct the mandapam in the aftermath of the demolition of the 1,000 pillar mandapam the proposal was however pushed into cold storage for quite some obvious reasons.

பாதுகாப்பு ஏற்பாடு செய்யப் பட்டது. பிரத்யேகமாக வந்திரங்க ஹெலிபேட் முதலிய வசதிகளும் செய்து தரப்பட்டன[13], என்று வர்ணித்தன. ஆனால், கிருத்துவரான அவர் ஏன் கோவிலுக்கு வரவேண்டும் என்ற கேள்வி எழுந்தது. அதே நவம்பர் 25, 2010 அன்று மெதுவாக “தி ஹிந்து” ஒரு செய்தியை கசித்து விட்டது. அதாவது பிரதான கோவில் கோபுரத்திற்கு எதிர்புறம் உள்ள ஆயிரம் கால் பண்டபம் இடிப்பது “சில தெரிந்த காரணங்களுக்காகத்” தள்ளிப்போடப்பட்டது என்ற விஷயம் தான்[14]. ஆனால், அத்தகைய தெளிவான தெரிந்த காரணங்கள் என்ன என்று “மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு” (கருணாநிதி இப்படி செல்லமாக வர்ணிப்பது வழக்கம்) சொல்லவில்லை. உண்மையில் அந்த மண்டபம் 2003லேயே இடித்துவிட்டபிறகு, ஒன்றுமே தெரியாதது போல இப்படி செய்தியை வெளியிட்டுள்ளது. ஆக சாமுவேல் எப்படி கோவிலைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதனைப் பார்த்து சந்தோஷிக்கவே வந்தார் போலும்.

© வேதபிரகாஷ்

16-09-2013


[1]Telangana Congress meeting on Sunday turned raucous when former Union minister and Rajya Sabha MP Renuka Chowdhury was asked to leave by a few leaders for her alleged anti-Telangana stand. Attempts by senior leaders to salvage the situation failed and a vexed Chowdhury left in high dudgeon.

http://timesofindia.indiatimes.com/india/Telangana-leaders-snubs-Renuka-she-leaves-in-a-huff/articleshow/22611846.cms

[2] Choudhury was left red-faced when some members reminded her how she had once called Telangana activists “goonda elements” and demanded an apology.

http://timesofindia.indiatimes.com/india/Telangana-leaders-snubs-Renuka-she-leaves-in-a-huff/articleshow/22611846.cms

[3] “Renuka Chowdhury’s anti-Telangana stand is well-known. I don’t know why she came for the meeting when no one invited her. When thousands had committed suicide for the cause of Telangana, she had said the deaths were due to cancer,” said an angry Karimnagar MPPonnam Prabhakar.

[4] “Renuka Chowdhury’s anti-Telangana stand is well-known. I don’t know why she came for the meeting when no one invited her. When thousands had committed suicide for the cause of Telangana, she had said the deaths were due to cancer,” said an angry Karimnagar MPPonnam Prabhakar.

[11] The Hindu, Sonia to offer prayer at Tirumala today, Saturday, Nov 25, 2006,http://www.hindu.com/2006/11/25/stories/2006112501390200.htm

[13] The Hindu, Thursday, Nov 23, 2006, Tight security for Sonia’s Tirumala visit, Staff Reporter