சங்கரர் எதிர்ப்பு, சங்கரமட துவேசம், இக்கால சங்கராச்சாரியார்கள் தூஷணம் ஏன்?: இதற்கு சைவம், பிராமண எதிர்ப்பு, இந்து விரோதம் முதலியவை தேவையா? (1)
திமுக ஆட்சியும், ஜாதி அரசியல் ஆரம்பமும், முதலியார் ஆதிக்கமும்: திராவிடத்துவ, இந்துவிரோத ஆட்சி, அதிகாரம், ஆக்கிரமிப்பு முதலியவற்றை மறந்து, மறைத்து சைவம் போர்வையில் நடக்கும் திட்டம் என்ன என்று ஆராய வேண்டியுள்ளது. அண்ணாதுரை முதலமைச்சர் ஆனதும், முதலியார்கள் அரசு-ஆட்சி-அதிகாரம் என்று பல பதவிகளில் அமர்ந்தார்கள், தொடர்ந்தார்கள், பெரிய ஆட்கள் ஆனார்கள்[1]. ஆனால், சைவத்தை விட்டுக் கொடுக்கவில்லை. ஈவேரா இந்துவிரோத காரியங்களில் இடுபட்டபோது, அடக்கி வாசித்தனர். கருணாநிதி முதலமைச்சரானதுடன், ஜாதி அரசியலை வளர்த்து, அதிகாரங்களை உடைக்க மற்ற ஜாதியினருக்கு இடம் கொடுத்தார்கள். இதனால், பிள்ளை, போன்றவர்கள் தெற்கில் ஆதிக்கம் பெற்றார்கள். சைவ வேளாளர் தமிழ்நாடு அரசு இடஒதுக்கீட்டுப் பட்டியலில், முற்பட்ட பிரிவில் உள்ளனர். இவர்களை வட தமிழகத்தில் சைவ முதலியார் என்றும் தென் தமிழகத்தில் சைவப் பிள்ளை என்றும் அழைப்பர். மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதகளில் முக்குலத்தோர் ஆதிக்கம் பெற்றனர். இதனால், வன்னியர் போன்றோர் ஜாதி ரீதியில் போராட்டங்களில் இறங்கினர்[2]. இவர்களது பிரச்சினைகளுக்கு, பார்ப்பன்னீயம், பார்ப்பன- எதிர்ப்பு போன்றவை வழக்கம் போல உதவின. நெடுஞ்செழியன், அன்பழகன் அடக்கி வாசித்தாலும், மற்ற வகையறாக்கள் அதிகமாகவே பிரச்சினைகளை உண்டாக்கின.
அறநிலையத் துறை ஊடுருவல், தில்லுமுல்லுகள், மோசடிகள்: மதுரை ஆதீனத்தை அடக்கி, திமுக-காரர்கள் கோவில்-சொத்துக்களை அனுபவித்து வந்தார்கள். ஒரு தலைமுறை போய், இரண்டாம் தலைமுறையும் வந்தது. வாடகை-குத்தகை-ஆக்கிரமிப்பு வழக்குகள் நீதிமன்றங்களுக்கு செல்ல-செல்ல, மற்றவர்களும் அதில் ஈடுபட ஆரம்பித்தார்கள். இதனால், எதிர்கட்சிகளுக்கும் பங்கு கொடுப்பது போன்ற சமரசங்களும் ஏற்பட்டன. இந்து அறநிலையத் துறையில் தங்கள் ஜாதியினர் இருக்கும் வகையில் பார்த்துக் கொண்டனர். மற்றவர் நுழைவதையும் தடுக்க முறைகள் மேற்கொண்டனர். நடக்கும் ஊழல்களும் பெரிதளவில், ஊடகங்களில் வராமல் பார்த்துக் கொண்டனர். எல்லோருக்கும் ஷேர், மாமூல், அன்பளிப்பு என்ற கலாச்சாரம் நன்றாக வேலை செய்தது. கோவில் சம்பந்தப் பட்டவர்கள் வீட்டில் சமைக்கவே வேண்டாம் என்ற நிலை தொடர்ந்தது. பிறகு, வந்த வரும்படிகள் எல்லாம் முதலீடுகள் ஆக, கொழுக்க ஆரம்பித்தார்கள். “பட்டை-கொட்டை” எல்லாம் ஊருக்குத் தான். கூட்டுக்கொள்ளை அடிப்பது தான் முக்கியமாக இருந்தது. “மக்கள் சேவை மகேசன் சேவை” ஆகியது, நன்றாகவே வேலை செய்து கொண்டிருக்கிறது.
மடாதிபதிகளின் பிணக்குகள் ஜாதிகளை அடங்கியது: மடங்களின் கோடிக் கணக்கான சொத்துக்கள் முதலியவை தெரியவர, மடாதிபதியாக அல்லது அவருக்குக் கீழுள்ள பதவிகளைப் பெற பல திட்டங்கள் வகுக்கப் பட்டது. சைவ வேளாளர் இல்லாத யாரும் மடாதிபதியாக முடியாது. சைவர்கள் எல்லோரும் மடாதிபதிகள் ஆக முடியாது. குருக்கள், தேசிகர், ஓதுவார் ஆகிய பட்டங்கள் சைவ சமய பணிகளில் சிறந்து விளங்கிய சைவ வேளாளர்க்குரியன. இருந்தாலும், அவர்கள், வேறு ஜாதியினர் எனில், மடாதிபதி மற்ற உயர்பொறுப்புகளுக்கு பாத்தியதை ஆக முடியாது. இதை எந்த அரசியல்வாதியும் கேட்க மாட்டான்[3]. அந்நிலையில், சிதம்பரம் கோவிலில் நுழைய முற்பட்ட போது தான், தீக்ஷிதர்கள் போராட்டத்தைத் துவக்கினர். உச்சநீதி மன்றம் வரை சென்று வெற்றி பெற்று, தங்களது உரிமைகளை மீட்டனர். அதனால், தில்லை தீக்ஷிதர்கள் எப்பொழுதும் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். சைவ-வேளாளர்களே இவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர்[4].
அரசு–வரி–வருமானம்–மக்கள் குழுமங்கள்: ஆளும் அரசு, இப்பொழுதைய இந்திய பாராளுமன்ற, முந்ஹைய ஆங்கிலேய அந்நிய, முகலாய, துலுக்க முதலிய ஆட்சிகாலங்களில், மக்களிடமிருந்து எதையாவது வரியாகப் பெறவேண்டும் என்றுதான் குறியாக வேலை செய்தனர். கோவில்-கோவில் சொத்து, கோவில் விழா, பூஜை, கிரியைகள், அதற்கு வேண்டிய பொருட்கள்-ஆட்கள், நடக்கும் முறை, கோவில்களினால் மக்களுக்குக் கிடைக்கும் ஆதாயம் மற்றும் கோவில்களினால் மக்களுக்குக் கிடைக்கும் ஆதாயம், இவற்றைத் தாண்டி அரசு-ஆட்சியாளர்களுக்குக் கிடைக்கும் ஆதாயம், என்று தான் எல்லாமே பின்னப் பட்டு வேலை செய்து கொண்டிருந்தன. கோவில்கள், விவசாயம் முக்கியமான தொழில்கள், அவற்றை செய்வோர், நீர்-நிலை அவற்றின் அமைப்பு, பாதுகாப்பு முதலியன இவற்றை செய்து வரும் குழுமத்தினர், தத்தம் கடமைகளை செய்து வந்தனர். அவை ஜாதிகளாக இருந்தாலு, தொழில்-செய்யும்-குழுமங்களாக இருந்தாலும், கடமையினை செவ்வன செய்து வந்தன.
கோவில்–கோவில் சார்ந்த தொழில்கள்–இந்துக்கள், இந்துக்கள்–அல்லாதவர்: இந்துக்கள் கைகளில் இருக்கும் வரை அவை ஒழுங்காக நடந்து வந்தன. ஆனால், துலுக்கர் வந்த பிறகு, விக்கிரங்கள் உடைக்கப் பட்டன; கோவில்கள் இடிக்கப் பட்டன; விலையுயர்ந்தவை கொள்ளையடிக்கப் பட்டன; இதனால் கோவில்-கோவில் சம்பந்தப் பட்ட காரியங்கள்-வேலகள் பாதிக்கப் பட்டன. வருமானம் குறைந்தது. விவசாயம் பாதித்தது, விளைச்சல் குறைந்தது. மக்களின் வேலைகளும் பாதிக்கப் பட்டன. தத்தம் தொழில் என்றிருந்த நிலை மாறி, வெவ்வேறு வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. துலுக்கர்களது ஆதிக்கம் அதிகமாக, மதம் மாற்றப் பட்டவர் பிரிக்கப் பட்டனர். இதனால், அத்தொழில்-வியாபாரமும் பிரிந்தன. நெசவு, உலோகத் தொழில், தச்சு, கட்டிடத் தொலை போன்றவை முக்கியமாக பாதிக்கப் பட்டன. தோல் தொழிகளுக்கு முக்கியத்துவம், லாபம் முதலியவை அதிகமானதால் அவற்றில் துலுக்கர் அதிகம் ஈடுபட்டனர். ஆடு-மாடுகள் கொல்லப் படுதல், மாமிசம் உண்ணப் படுதல், தோல் மற்றவை – பிசின், காலணி, இடுப்பு பட்டை மற்ற பொருட்கள் உற்பத்தி செய்ய உபயோகப் படுத்தப் பட்டன. குதிரைப் படை அதிகரிப்பு, ராணுவம் அதிகரிப்பு முதலியவையும் இத்தொழில் ஊக்கம் அதிகமானது.கோவில்கள் இடிக்கப் பட்டு மசூதிகள் கட்டப் படும் நிலைகளில், அத்தொழிலாளிகளும் மாறினர்-மாற்றப் பட்டனர். இவ்வாறாகத்தான் வரி கிடைப்பது மாற்றப் பட்டது. வரிவசூலும் கடுமையானது, கொடுமையானது..
2000களில் கொலை அளவுக்கு சென்ற மடங்களின் துறவிகள்: நித்யானந்தாவின் நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு[5] தெரிவித்த தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள், குன்றக்குடி, சங்கர மடங்களின் மடாதிபதிகளும் மதுரை ஆதீன மீட்புக் குழுவினரும் முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் அரசின் இந்த வழக்கு பற்றியும் நித்யானந்தாவின் நீக்கம் பற்றியும் இதுவரை கருத்து ஏதும் சொல்லவில்லை என்று சிலர் எடுத்துக் காட்டுகின்றனர். திருவாவடுதுறை பெரிய ஆதீனத்தை இளைய ஆதீனம் கொல்ல முயற்சி [2002], சங்கரராமன் கொலை [2004], தாம்பரம் சேலையூர் அகோபில மடத்தில் ஒரு கொலை [2010], இவை சமீபகாலத்து சம்பவங்கள். மடங்கள், கோவில்கள், பிடதி, சாய்பாபா ஆசிரமங்கள் வரை வரலாற்றில் கொலைகள், சூழ்ச்சிக் கவிழ்ப்புகள், ஊழல்கள், முறைகேடுகள், என்று செய்திகள் வந்தன. பகதர்கள் வருத்தப் படுவதை விட, அச்சப்பட்டார்கள். கடவுள் காப்பாற்றவில்லையா என்று திகவினர் மாதிரி நக்கலும் அடிக்க முடியாது[6].
© வேதபிரகாஷ்
26-07-2022
[1] 2021 தேர்தலின் போது, முதலியார்களின் வாக்கு, ஆதரவு பற்றி விவாதிக்கப் பட்டது கவனிக்கத் தக்கது. அரசு பதவி, அதிகாரம், வியாபாரம், என்றெல்லம் ஸ்திரப்படுத்திக் கொண்டப் பிறகு, அரசியலில் ஓரங்கட்டப் பட்டாலும், தங்களது ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொண்டனர்.
[2] கருணாநிதி, வன்னியர்களை, வன்னியர்களைக் கொண்டே ஓட்டுவங்கியைப் பிரித்தார். கட்டுக்குள் வைத்துக் கொண்டார்.
[3] திக-திமுகவினர், விசிகவினர், பாமகவினர் மற்ற கம்யூனிஸ, முற்போக்கு வகையறாக்கள் இதைப் பற்றி கேட்கமாட்டார்கள், பிட்-நோட்டீஸ், குறும்புத்தகங்கள், வீடியோ போட மாட்டார்கள்.
[4] இந்த சட்ட யுத்தங்கள், நீதிமன்ற போர்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பழைய கோவில்கள் சிதிலமடைந்து மறைந்து கொண்டிருந்தாலும், அவற்றையெல்லாம் மறந்து, சண்டைப் போட்டுக் கொள்வதில், சைப்ப் பிரிவினர் ஊக்குவிக்கப் பட்டு வருகிறார்கள்.
[5] நித்யானந்தா முதலியார் என்று கண்டுபிடிக்கப் பட்டதும், அமுக்கி வாச்க்கப் பட்டது. முதலியார்களின் விசுவசம் போலிருக்கிறது. “நித்தி” என்று தான் கிண்டல் செய்வார்களே தவிய “முதலி” என்று குறிப்பிட்டு பேச்சு-எழுத்து இருக்காது. ஜாதிய செக்யூலரிஸம் அல்லது திராவிட ஜாதியத்துவம் அல்லது ஒட்டு மொத்த பார்ப்பன எதிர்ப்பு என்று விளக்கம் கொடுப்பார்கள் போலும்.
[6] இதில் ஜெயேந்திர சரஸ்வதி தூஷணம் மட்டும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும், மற்ற விசயங்கள் மறைக்கப் படும். இது பிராமண எதிர்ப்பா, இந்து எதிர்ப்பா என்பதனை அவர்கள் தான் சொல்ல வேண்டும்.