திமுக எம்பியின் இந்துவிரோத பேச்சு, மன்னிப்புக் கேட்டல், வெள்ள நிவாரண நிதி – எல்லாம் அரசியலா, தேர்தல் கூட்டணியா, மக்களுக்கு உதவுவதற்காகவா? (3)
தி.மு.க., தலைவர்கள் ஹிந்து மதத்தை பற்றியும், கடவுள் பற்றியும் தினந்தோறும் இழிவான வார்த்தைகளை பேசி வருகின்றனர்: தி.மு.க., தலைவர்கள் ஹிந்து மதத்தை பற்றியும், கடவுள் பற்றியும் தினந்தோறும் இழிவான வார்த்தைகளை பேசி வருகின்றனர்[1] [இந்த விசயத்தை ஒழுங்காக சொல்லியிருக்கிறார் எனலாம்]. அவர்கள் ஹிந்து மதத்தை துறந்துவிட்டனரா? கிறிஸ்தவ மதத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டால், பிறகு எப்படி ஹிந்து மதத்தை விமர்சிக்கின்றனர்?[2] ஹிந்து மதத்தை பிடிக்காதவர்கள், வேறு மதத்திற்கு சென்றுவிடுவதுடன்[3], விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்[4]. இதற்கு ஒரு முடிவு கட்ட ஒரு கண்டிப்பான சட்டத்தை இயற்ற வேண்டும் அல்லது ஹிந்து மதத்தின் கண்ணியம் அழிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்[5]. சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற நிலைக்கு பேசியுள்ளதை கவனிக்க வேண்டும். உபியைப் பொறுத்த வரையில் இந்துவிரோதம் வைத்து தேர்தலில் நிற்க முடியாது.
செந்தில்குமார் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்: இந்த விவகாரத்தில் திமுக எம்.பி. செந்தில்குமார் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார் என மக்களவையில் திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்[6]. “ஏற்கெனவே சனாதனம் குறித்து உதயநிதி பேசியது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த சூழலில், தற்போது செந்தில்குமார் பேசியிருப்பது கூட்டணிக் கட்சித் தலைவர்களைக் கொந்தளிக்கவைத்திருக்கிறது. இது பெரிய அளவில் சர்ச்சையாக உருவெடுக்கும் முன்பே சரிசெய்துவிட வேண்டும் என நினைத்த தி.மு.க தலைமை, உடனடியாக செந்தில்குமாரை மன்னிப்புக் கேட்கச் சொல்லி உத்தரவிட்டது. அதனால்தான் அவர் மன்னிப்புக் கேட்டார்,” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்[7]. “செந்தில்குமார் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்,” என்றால், என்ன நடவடிக்கை எடுத்தார் என்று தெரியவில்லை.
வைகோவின் வக்கலத்தும், ஆதரவும்: ம.தி.மு.க., தலைவர் வைகோவிடம் செய்தியாளர்கள் பதில் கேட்டபோது, செந்தில்குமாரின் கருத்துக்கு வைகோ உடன்பட்டது சர்ச்சையை அதிகப்படுத்தியது[8]. கருத்துகள் குறித்த தனது நிலைப்பாட்டை அழுத்தியபோது, “அவருடன் நான் உடன்படுகிறேன்,” என்று எம்பி வைகோ உறுதிப்படுத்தினார்[9]. செந்தில்குமாரின் இழிவான கருத்துக்கு அவர் ஒப்புதல் அளிக்கிறீர்களா என்று குறிப்பாகக் கேட்டபோது, “ஆம், ஆம், அவர் சொல்வது சரிதான்” என்று வைகோ மீண்டும் கூறினார்[10]. ஸ்டாலின் எதிர்த்த போது, இவர் ஆதரிப்பது விசித்திரமாக இருக்கிறது[11]. இதில் வைகோவின்மனப்பாங்கைக் கவனிக்க வேண்டும், வயதான முதிர்ந்த நிலையிலும், இத்தகைய இழிவான கருத்துக்குஒப்புதல் அளிக்கிறேன் என்றது, திகைப்பாக இருக்கிறது. இவர் கிருத்துவர் என்பதால், அத்தகைய வெறுப்பைக் கக்குகிறாரா என்று தெரியவில்லை. உதயநிதி தான் கிருத்துவர் என்று ஒப்புக் கொண்டு, பிறகு சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசியதையும் கவனிக்கலாம்.
தமிழகத்தில் எதிர்ப்பு குரல்கள்: இந்த நிலையில், இந்தியாவை தவறான வழியில் பார்க்கும் ஆழமான உணர்வே திமுக எம்.ப. செந்தில்குமார் பேசிய வார்த்தைகள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்[12]. சென்னை மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அவர், “திமுக எம்.பி. கூறிய வார்த்தைகள், இந்தியாவை தவறான வழியில் பார்க்கும் ஆழமான உணர்விலிருந்து வந்தது. அது அவர்களின் தவறான சித்தாந்தத்தின் ஆழமான உணர்விலிருந்து வந்தது.” என தெரிவித்துள்ளார்[13]. பிஜேபி தவிர மற்ற கட்சிகள், சித்தாந்தவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்களா, வெஊப்புப் பேச்சைக் கண்டித்தார்களா என்று தெரியவில்லை.
வன்னியர் என்று ஜாதிய ரீதியில் ஆதரிக்கும் போக்கு: தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் எம்.பி.க்கு மற்றவர்கள் எவ்வளவு அழுத்தத்தை கொடுத்தாலும் வன்னிய குல சத்திரியர்களாக நாங்கள் துணை நிற்போம் என மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை தெரிவித்துள்ளார்[14]. செந்தில்குமார் வன்னியர் என்பதால் வன்மத்தோடு சிலர் சமூக வலைதளங்களில் அவரை இழிவு படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியுள்ளார்[15]. ஆனால், அதே நேரத்தில் சனாதனம் பற்றி இழிவாக பேசியபோது, இந்த பெண்மணி எதிர்புத் தெரிவித்தாரா, கண்டித்தாரா என்பது தெரியவில்லை. முதலில், இதில் ஜாதியை ஏன் நுழைக்க வேண்டும் என்பது புரியவில்லை. தமிழகத்தைப் பொறுத்த வரையில், திக-திமுக இந்துவிரோதமாக இருந்து வந்து பல அக்கிரமங்களை செய்து வருவது தெரிந்த விசயமே. பிறகு, இத்தகைய குறுகிய, நோக்கில் ஆதாவு தெரிவித்து வியாக்கியானம் கொடுப்பது திகைப்பாக உள்ளது.
வடக்கு–தெற்கு விவாதம்: 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே வடக்கு vs தெற்கு என்ற விவாதம் தீயாகப் பரவி வருகிறது. பாஜகவின் சித்தாந்தம் வட இந்தியாவில் மட்டும் ஒர்க்அவுட் ஆவதாகவும் தென்னிந்தியா அதை முற்றிலுமாக நிராகரிப்பதாகவும் பாஜகவை விமர்சிப்போர் கூறுகின்றனர். அதேநேரம் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இப்படி ‘வடக்கு vs தெற்கு’ என்ற விவாதத்தைக் கிளப்பி நாட்டை பிளவுபடுத்த முயல்வதாகவும் தேர்தல் தோல்வியை ஏற்க முடியாதவர்களே இப்படிக் கூறி வருவதாகவும் பாஜகவினர் கூறுகின்றனர்[16]. மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “அவர்கள் தங்கள் ஆணவம், பொய்கள், அவநம்பிக்கைகள் மற்றும் அறியாமை ஆகியவற்றுடன் மகிழ்ச்சியாக இருக்கட்டும். ஆனால்… அவர்களின் பிரிவினைத் திட்டத்தில் இருந்து மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 70 ஆண்டுக்கால பழைய பழக்கம் அவ்வளவு எளிதில் போய்விடாது.. மக்களின் தேர்வு இதுதான். இனி பல முடிவுகள் இப்படிதான் இருக்கும் தயாராகுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்[17].
“வடக்கு வளர்கிறது, தெர்குத் தேய்கிறது”: “வடக்கு வளர்கிறது, தெர்குத் தேய்கிறது,” என்று அண்ணாதுரை சொன்னது எல்லாம் நினைவுக்கு இருக்கலாம். கருணாநிதி “மாநில சுயயாட்சி” என்றெல்லாம் பேசியதும் அதே தொணியில் தான். இன்றும், இந்தி-தமிழ், தமிழ்-தெலுங்கு, குலுடி-வடுகன் என்றெல்லாம் பேசுவதும்-எழுதுவதும் அதே பிரிவினை நோக்கில் தான் தொடர்ந்து வருகிறது. இந்து-எதிர்ப்பு, “சைவம்” போர்வையிலும் நடக்க ஆரம்பித்து விட்டது. “மைனாரிட்டி” என்று ஆரம்பித்து, “நாங்கள் இந்துக்கள் அல்ல,” என்ற கோஷத்தில் வந்து முடிந்துள்ளது. ஆகவே, பிரிவினைவாதம், இந்து-விரோதம், இந்திய-விரோதம், தேச-விரோதம் எல்லாம் எந்த உருவிலும், பேனரிலும், சொல்லாடல்களிலும், சித்தாந்தங்களிலும் வெளிப் படும்.
© வேதபிரகாஷ்
08-12-2023
[1] https://kamadenu.hindutamil.in/politics/samajwadi-condemns-dmk-to-stop-denigrating-hinduism
[2] நியூஸ்7.தமிழ், மக்களவையில் இந்தி பேசும் மாநிலங்கள் குறித்து சர்ச்சை பேச்சு | வருத்தம் தெரிவித்த திமுக எம்பி செந்தில்குமார்!, by Web EditorDecember 6, 2023.
[3] https://news7tamil.live/controversy-about-hindi-speaking-states-in-lok-sabha-dmk-mp-senthilkumar-expressed-regret.html
[4] ஐபிசி.தமிழ்நாடு, மாட்டுக் கோமிய மாநிலங்களில் பாஜக வெற்றி; முதல்வர் கண்டனம் – திமுக எம்.பி. மன்னிப்பு!, By Sumathi, 06-12-2023
[5] https://ibctamilnadu.com/article/gaumutra-dmk-mp-senthilkumar-contro-speech-1701837946
[6] விகடன், கழுகார் அப்டேட்ஸ்: எம்.பி–யை மன்னிப்புக்கேட்க வைத்த திமுக|வெள்ளம், அதிகாரியை கப்சிப் ஆக்கிய அமைச்சர், கழுகார், Published: 07-12-2023 at 1 PM; Updated: 07-12-2023 at 5 PM.
[7] https://www.vikatan.com/government-and-politics/kazhugar-updates-on-senthil-kumar-mp-issue-and-other-political-happenings
[8] தினமலர், திமுக எம்.பி.,யின் சர்ச்சை பேச்சு: ஸ்டாலின் எதிர்ப்பு: வைகோ ஆதரவு, பதிவு செய்த நாள்: டிச 06,2023 14:39.
[9] https://m.dinamalar.com/detail.php?id=3497549
[10] கதிர்.நியூஸ், வட மாநிலங்கள் தொடர்பான தி.மு.க எம்.பி யின் “பசு கோமியம்“மாநிலங்கள் சர்ச்சை பேச்சுக்கு உடன்பட்ட வைகோ!, By : Karthiga | 8 Dec 2023 12:15 PM.
[11] https://kathir.news/news/vaiko-agreed-to-the-dmk-mps-cow-komiam-state-dispute-talk-regarding-northern-states-1508302
[12] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், இந்தியாவை தவறான வழியில் பார்க்கும் உணர்வு: செந்தில்குமார் எம்.பி.யை விளாசிய அண்ணாமலை!, Manikanda Prabu, First Published Dec 6, 2023, 4:50 PM IST.
[13] https://tamil.asianetnews.com/tamilnadu/word-uttered-by-the-dmk-mp-came-from-a-deep-sense-of-seeing-india-the-wrong-way-alleges-annamalai-smp-s58stk
[14] தமிழ்.ஒன்.இந்தியா, செந்தில்குமார் எம்.பி. வன்னியர் என்பதால் அவர் மீது வன்மத்தை கக்குவதா? காடுவெட்டி குரு மகள் ஆதங்கம்!, By Arsath Kan, Published: Thursday, December 7, 2023, 13:32 [IST].
[15] https://tamil.oneindia.com/news/chennai/kaduvetti-guru-daughter-virudhambigai-support-dharmapuri-member-of-parliament-senthilkumar-563839.html
[16] தமிழ்.ஒன்.இந்தியா, “வடக்கு vs தெற்கு..” பற்றி எரியும் விவாதம்! வசமாக வந்து சிக்கிய திமுக! கொந்தளித்த மோடி! என்ன நடந்தது By Vigneshkumar Updated: Wednesday, December 6, 2023, 16:57 [IST]
[17] https://tamil.oneindia.com/news/delhi/what-is-north-vs-south-debate-that-is-now-becoming-national-level-debate-563633.html?story=2