Posts Tagged ‘துவேசம்’

திமுக எம்பியின் இந்துவிரோத பேச்சு, மன்னிப்புக் கேட்டல், வெள்ள நிவாரண நிதி – எல்லாம் அரசியலா, தேர்தல் கூட்டணியா, மக்களுக்கு உதவுவதற்காகவா? (3)

திசெம்பர் 12, 2023

திமுக எம்பியின் இந்துவிரோத பேச்சு, மன்னிப்புக் கேட்டல், வெள்ள நிவாரண நிதிஎல்லாம் அரசியலா, தேர்தல் கூட்டணியா, மக்களுக்கு உதவுவதற்காகவா? (3)

தி.மு.., தலைவர்கள் ஹிந்து மதத்தை பற்றியும், கடவுள் பற்றியும் தினந்தோறும் இழிவான வார்த்தைகளை பேசி வருகின்றனர்: தி.மு.க., தலைவர்கள் ஹிந்து மதத்தை பற்றியும், கடவுள் பற்றியும் தினந்தோறும் இழிவான வார்த்தைகளை பேசி வருகின்றனர்[1] [இந்த விசயத்தை ஒழுங்காக சொல்லியிருக்கிறார் எனலாம்]. அவர்கள் ஹிந்து மதத்தை துறந்துவிட்டனரா? கிறிஸ்தவ மதத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டால், பிறகு எப்படி ஹிந்து மதத்தை விமர்சிக்கின்றனர்?[2] ஹிந்து மதத்தை பிடிக்காதவர்கள், வேறு மதத்திற்கு சென்றுவிடுவதுடன்[3], விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்[4]. இதற்கு ஒரு முடிவு கட்ட ஒரு கண்டிப்பான சட்டத்தை இயற்ற வேண்டும் அல்லது ஹிந்து மதத்தின் கண்ணியம் அழிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்[5]. சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற நிலைக்கு பேசியுள்ளதை கவனிக்க வேண்டும். உபியைப் பொறுத்த வரையில் இந்துவிரோதம் வைத்து தேர்தலில் நிற்க முடியாது.

செந்தில்குமார் மீது முதல்வர் மு..ஸ்டாலின் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்: இந்த விவகாரத்தில் திமுக எம்.பி. செந்தில்குமார் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார் என மக்களவையில் திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்[6]. “ஏற்கெனவே சனாதனம் குறித்து உதயநிதி பேசியது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த சூழலில், தற்போது செந்தில்குமார் பேசியிருப்பது கூட்டணிக் கட்சித் தலைவர்களைக் கொந்தளிக்கவைத்திருக்கிறது. இது பெரிய அளவில் சர்ச்சையாக உருவெடுக்கும் முன்பே சரிசெய்துவிட வேண்டும் என நினைத்த தி.மு. தலைமை, உடனடியாக செந்தில்குமாரை மன்னிப்புக் கேட்கச் சொல்லி உத்தரவிட்டது. அதனால்தான் அவர் மன்னிப்புக் கேட்டார்,” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்[7]. “செந்தில்குமார் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார்,” என்றால், என்ன நடவடிக்கை எடுத்தார் என்று தெரியவில்லை.

வைகோவின் வக்கலத்தும், ஆதரவும்: ம.தி.மு.க., தலைவர் வைகோவிடம் செய்தியாளர்கள் பதில் கேட்டபோது, ​​செந்தில்குமாரின் கருத்துக்கு வைகோ உடன்பட்டது சர்ச்சையை அதிகப்படுத்தியது[8]. கருத்துகள் குறித்த தனது நிலைப்பாட்டை அழுத்தியபோது, ​​“அவருடன் நான் உடன்படுகிறேன்,” என்று எம்பி வைகோ உறுதிப்படுத்தினார்[9]. செந்தில்குமாரின் இழிவான கருத்துக்கு அவர் ஒப்புதல் அளிக்கிறீர்களா என்று குறிப்பாகக் கேட்டபோது, ​​“ஆம், ஆம், அவர் சொல்வது சரிதான்” என்று வைகோ மீண்டும் கூறினார்[10]. ஸ்டாலின் எதிர்த்த போது, இவர் ஆதரிப்பது விசித்திரமாக இருக்கிறது[11]. இதில் வைகோவின்மனப்பாங்கைக் கவனிக்க வேண்டும், வயதான முதிர்ந்த நிலையிலும், இத்தகைய இழிவான கருத்துக்குஒப்புதல் அளிக்கிறேன் என்றது, திகைப்பாக இருக்கிறது. இவர் கிருத்துவர் என்பதால், அத்தகைய வெறுப்பைக் கக்குகிறாரா என்று தெரியவில்லை. உதயநிதி தான் கிருத்துவர் என்று ஒப்புக் கொண்டு, பிறகு சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசியதையும் கவனிக்கலாம்.

தமிழகத்தில் எதிர்ப்பு குரல்கள்: இந்த நிலையில், இந்தியாவை தவறான வழியில் பார்க்கும் ஆழமான உணர்வே திமுக எம்.ப. செந்தில்குமார் பேசிய வார்த்தைகள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்[12]. சென்னை மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அவர், “திமுக எம்.பி. கூறிய வார்த்தைகள், இந்தியாவை தவறான வழியில் பார்க்கும் ஆழமான உணர்விலிருந்து வந்தது. அது அவர்களின் தவறான சித்தாந்தத்தின் ஆழமான உணர்விலிருந்து வந்தது.” என தெரிவித்துள்ளார்[13]. பிஜேபி தவிர மற்ற கட்சிகள், சித்தாந்தவாதிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்களா, வெஊப்புப் பேச்சைக் கண்டித்தார்களா என்று தெரியவில்லை.

வன்னியர் என்று ஜாதிய ரீதியில் ஆதரிக்கும் போக்கு: தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் எம்.பி.க்கு மற்றவர்கள் எவ்வளவு அழுத்தத்தை கொடுத்தாலும் வன்னிய குல சத்திரியர்களாக நாங்கள் துணை நிற்போம் என மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை தெரிவித்துள்ளார்[14]. செந்தில்குமார் வன்னியர் என்பதால் வன்மத்தோடு சிலர் சமூக வலைதளங்களில் அவரை இழிவு படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியுள்ளார்[15]. ஆனால், அதே நேரத்தில் சனாதனம் பற்றி இழிவாக பேசியபோது, இந்த பெண்மணி எதிர்புத் தெரிவித்தாரா, கண்டித்தாரா என்பது தெரியவில்லை. முதலில், இதில் ஜாதியை ஏன் நுழைக்க வேண்டும் என்பது புரியவில்லை. தமிழகத்தைப் பொறுத்த வரையில், திக-திமுக இந்துவிரோதமாக இருந்து வந்து பல அக்கிரமங்களை செய்து வருவது தெரிந்த விசயமே. பிறகு, இத்தகைய குறுகிய, நோக்கில் ஆதாவு தெரிவித்து வியாக்கியானம் கொடுப்பது திகைப்பாக உள்ளது.

வடக்குதெற்கு விவாதம்: 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே வடக்கு vs தெற்கு என்ற விவாதம் தீயாகப் பரவி வருகிறது. பாஜகவின் சித்தாந்தம் வட இந்தியாவில் மட்டும் ஒர்க்அவுட் ஆவதாகவும் தென்னிந்தியா அதை முற்றிலுமாக நிராகரிப்பதாகவும் பாஜகவை விமர்சிப்போர் கூறுகின்றனர். அதேநேரம் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இப்படி ‘வடக்கு vs தெற்கு’ என்ற விவாதத்தைக் கிளப்பி நாட்டை பிளவுபடுத்த முயல்வதாகவும் தேர்தல் தோல்வியை ஏற்க முடியாதவர்களே இப்படிக் கூறி வருவதாகவும் பாஜகவினர் கூறுகின்றனர்[16]. மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “அவர்கள் தங்கள் ஆணவம், பொய்கள், அவநம்பிக்கைகள் மற்றும் அறியாமை ஆகியவற்றுடன் மகிழ்ச்சியாக இருக்கட்டும். ஆனால்… அவர்களின் பிரிவினைத் திட்டத்தில் இருந்து மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 70 ஆண்டுக்கால பழைய பழக்கம் அவ்வளவு எளிதில் போய்விடாது.. மக்களின் தேர்வு இதுதான். இனி பல முடிவுகள் இப்படிதான் இருக்கும் தயாராகுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்[17].

வடக்கு வளர்கிறது, தெர்குத் தேய்கிறது: “வடக்கு வளர்கிறது, தெர்குத் தேய்கிறது,” என்று அண்ணாதுரை சொன்னது எல்லாம் நினைவுக்கு இருக்கலாம். கருணாநிதி “மாநில சுயயாட்சி” என்றெல்லாம் பேசியதும் அதே தொணியில் தான். இன்றும், இந்தி-தமிழ், தமிழ்-தெலுங்கு, குலுடி-வடுகன் என்றெல்லாம் பேசுவதும்-எழுதுவதும் அதே பிரிவினை நோக்கில் தான் தொடர்ந்து வருகிறது. இந்து-எதிர்ப்பு, “சைவம்” போர்வையிலும் நடக்க ஆரம்பித்து விட்டது. “மைனாரிட்டி” என்று ஆரம்பித்து, “நாங்கள் இந்துக்கள் அல்ல,” என்ற கோஷத்தில் வந்து முடிந்துள்ளது.  ஆகவே, பிரிவினைவாதம், இந்து-விரோதம், இந்திய-விரோதம், தேச-விரோதம் எல்லாம் எந்த உருவிலும், பேனரிலும், சொல்லாடல்களிலும், சித்தாந்தங்களிலும் வெளிப் படும்.

© வேதபிரகாஷ்

08-12-2023


[1] https://kamadenu.hindutamil.in/politics/samajwadi-condemns-dmk-to-stop-denigrating-hinduism

[2] நியூஸ்7.தமிழ், மக்களவையில் இந்தி பேசும் மாநிலங்கள் குறித்து சர்ச்சை பேச்சு | வருத்தம் தெரிவித்த திமுக எம்பி செந்தில்குமார்!, by Web EditorDecember 6, 2023.

[3] https://news7tamil.live/controversy-about-hindi-speaking-states-in-lok-sabha-dmk-mp-senthilkumar-expressed-regret.html

[4] ஐபிசி.தமிழ்நாடு, மாட்டுக் கோமிய மாநிலங்களில் பாஜக வெற்றி; முதல்வர் கண்டனம்திமுக எம்.பி. மன்னிப்பு!,  By Sumathi, 06-12-2023

[5] https://ibctamilnadu.com/article/gaumutra-dmk-mp-senthilkumar-contro-speech-1701837946

[6] விகடன், கழுகார் அப்டேட்ஸ்: எம்.பியை மன்னிப்புக்கேட்க வைத்த திமுக|வெள்ளம், அதிகாரியை கப்சிப் ஆக்கிய அமைச்சர், கழுகார், Published: 07-12-2023 at 1 PM; Updated: 07-12-2023 at 5 PM.

[7] https://www.vikatan.com/government-and-politics/kazhugar-updates-on-senthil-kumar-mp-issue-and-other-political-happenings

[8] தினமலர், திமுக எம்.பி.,யின் சர்ச்சை பேச்சு: ஸ்டாலின் எதிர்ப்பு: வைகோ ஆதரவு, பதிவு செய்த நாள்: டிச 06,2023 14:39.

[9] https://m.dinamalar.com/detail.php?id=3497549

[10] கதிர்.நியூஸ், வட மாநிலங்கள் தொடர்பான தி.மு. எம்.பி யின்பசு கோமியம்மாநிலங்கள் சர்ச்சை பேச்சுக்கு உடன்பட்ட வைகோ!, By : Karthiga |  8 Dec 2023 12:15 PM.

[11] https://kathir.news/news/vaiko-agreed-to-the-dmk-mps-cow-komiam-state-dispute-talk-regarding-northern-states-1508302

[12] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், இந்தியாவை தவறான வழியில் பார்க்கும் உணர்வு: செந்தில்குமார் எம்.பி.யை விளாசிய அண்ணாமலை!, Manikanda Prabu, First Published Dec 6, 2023, 4:50 PM IST.

[13] https://tamil.asianetnews.com/tamilnadu/word-uttered-by-the-dmk-mp-came-from-a-deep-sense-of-seeing-india-the-wrong-way-alleges-annamalai-smp-s58stk

[14] தமிழ்.ஒன்.இந்தியா, செந்தில்குமார் எம்.பி. வன்னியர் என்பதால் அவர் மீது வன்மத்தை கக்குவதா? காடுவெட்டி குரு மகள் ஆதங்கம்!, By Arsath Kan, Published: Thursday, December 7, 2023, 13:32 [IST].

[15] https://tamil.oneindia.com/news/chennai/kaduvetti-guru-daughter-virudhambigai-support-dharmapuri-member-of-parliament-senthilkumar-563839.html

[16] தமிழ்.ஒன்.இந்தியா, “வடக்கு vs தெற்கு..” பற்றி எரியும் விவாதம்! வசமாக வந்து சிக்கிய திமுக! கொந்தளித்த மோடி! என்ன நடந்தது By Vigneshkumar Updated: Wednesday, December 6, 2023, 16:57 [IST]

[17] https://tamil.oneindia.com/news/delhi/what-is-north-vs-south-debate-that-is-now-becoming-national-level-debate-563633.html?story=2

‘லாபம் கொழிக்கும் காவி உடை’ – கவர்ச்சி-ஆபாச-சினிமா நடிகை குஷ்புவின் காழ்ப்புக் கொண்ட இந்து-விரோத வியாக்யானம் (1)!

செப்ரெம்பர் 19, 2015

லாபம் கொழிக்கும் காவி உடை‘ – கவர்ச்சிஆபாசசினிமா நடிகை குஷ்புவின் காழ்ப்புக் கொண்ட இந்து-விரோத வியாக்யானம் (1)!

kushboo-dares-self-style-godman and woman

kushboo-dares-self-style-godman and woman

அரசியல் பக்கபலத்தினால், இன்று பிஜேபிவிரோதம், எல்லைகளைக் கடந்து, இந்துவிரோதமாக வெளிப்படுவது: இணைதளங்களில், “தம்மை பெரியாரிஸ்ட் என்று பிரகடனப்படுத்தி வரும் நடிகை குஷ்பு டுபாக்கூர் கார்ப்பரேட் சாமியார்களைப் பற்றி உண்மை முகங்களை தோலுரித்துக் காட்டியுள்ளார்[1] என்று, நக்கீரன் வாரமிருறை இதழில் நடிகை குஷ்பு ‘லாபம் கொழிக்கும் காவி உடை’ என்ற தலைப்பில் எழுதியுள்ளதை போட்டு சிலர் பரப்ப முயற்சித்துள்ளனர். சபாஷ் போட்ட ஒருவர், காரணத்தைக் குறிப்பிடாமல் ஊதியள்ளார்[2]. குஷ்பு கவர்ச்சி நடிகை, ஆபாச நடிகை என்று தான் பிரபலமாகி, பிறகு பணம் சம்பாதித்தப் பின், முதலீடுகள் செய்யும் போது, அரசியல்வாதிகளின் ஆதரவு வேண்டும் என்பதற்காக, திமுகவில் 2011ல் சேர்ந்தார். ஆனால், அங்கு “திராவிட திருவிளையாடல்கள்” பல வழிகளில், இந்த “ஆரிய அம்மையாரை” சிக்கவைக்க முயன்றதால், தப்பித்தோம்-பிழைத்தோம் என்று ஜூன்.16 2014 அன்று வெளியேறினார். பிறகு நவம்பர்.26 2014ல் காங்கிரஸில் சேர்ந்தார். நகத் கான், அர்ஹன் என்ற பெயர்களில் குழந்தை நடிகையாக உலா வந்து (செப்டம்பர்.29 1970ல் பிறந்தவர்), கவர்ச்சி நடிகையாகி, மும்பையிலிருந்து இறக்குமதியான, முஸ்லீமான இந்த நடிகை, குஷ்புவானார். சர்ச்சைகள் பலவற்றில் (கே. பாலச்சந்தர், பிரபு) சிக்கிக் கொண்ட குஷ்பு, மார்ச்.9.2000 அன்று சுந்தர் என்ற நடிகரைத் திருமணம் செய்து கொண்டார். அரசியல் பக்கபலத்தினால், இன்று பிஜேபி-விரோதம், எல்லைகளைக் கடந்து, இந்து-விரோதமாக வெளிப்பட்டு வருகிறது. அதில் இந்த கூத்தாடி நடிகையும் தனது பங்கைச் சேத்துள்ளார். மற்ற சித்தாந்த, திரிபுவாத, செக்யூலரிஸ கூத்தாடிகள் மகிழ்வோடு பகிர்ந்துள்ளன.

குஷ்பு தொடர் - நக்கீரன்

குஷ்பு தொடர் – நக்கீரன்

பெரியாரிஸம், அரசியல் பக்கபலம், சாமியார்களை வசைப்பாடுதல்: இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் அதிக அளவில், கிருத்துவ பிஷப்புகள், பாஸ்டர்கள், சாமியார்கள் முதலியோர்களின் செக்ஸ்-குற்றங்கள், பாலியல் வன்புணர்ச்சிகள், காமக்களியாட்டங்கள், கொக்கோக புனைவுகள், சிறார்-சிறுமி பாலியல்-பிடோபைல் செக்ஸ் முறைகள், கற்பழிப்புகள், கன்னியாஸ்திரிகளையே கற்பழித்தல், புணர்தல் போன்ற செயல்களில் ஈடுபடல் என்று ஆயிரக்கணக்கான வழக்குகள், கைதுகள், செய்திகள் என்று வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த குஷ்புக்கு, இவை எதுவுமே கண்ணில் படாதது, செய்திகளில் அறியாமல் இருப்பது, ஒருவேளை தெரிந்தும், தெரியாதது மாதிரி இருப்பது முதலியவை ஆச்சரியமாகவோ உள்ளது. முஸ்லிம்களின் செக்ஸைப் பற்றியும் கூற வேண்டிய அவசியம் இல்லை. அவை வெளிப்படையாக ஐசிஸ்-தோரணையில் நடந்து கொண்டிருக்கின்றன. அமீனா போன்ற திருமணங்களில் ஏற்றுமதியாகிக் கொண்டிருக்கின்றன. மாந்திரீகம் போன்றவற்றில் தர்காக்களில், நோய்-தீர்க்கும் இடங்களில் கிருத்துவர்களைப் போலவே செய்து வருகிறார்கள். ஆனால், நகத்துக்கு, அர்ஹனுக்கு, குஷ்புவுக்கு இதெல்லாம் கூட தெரியாமலே தான் இருந்து வருகிறது. ஆனால், இந்து சாமியார்கள் என்றால், தெரிந்து விடுகிறது. இனி குஷ்புவின் ‘லாபம் கொழிக்கும் காவி உடை’ பற்றி பார்ப்போம். குஷ்புவின் கட்டுரை அப்படியே 7 பத்திகளாக, தலைப்பிட்டு கீழேபோடப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு நம்முடைய அலசல் முதலியவை கொடுக்கப்பட்டுள்ளன.

குஷ்பு - விகடனை தாக்குதல்

குஷ்பு – விகடனை தாக்குதல்

  1. குஷ்புவின் கீசெயினும், ராதே மாவின் சூலமும்: சில கட்சியின் தலைமை அழைத்ததன் பேரில் அண்மையில் டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்றபோது வழக்கமாக நடக்கும் சோதனைகளை செய்தனர் ஏர்போர்ட் அதிகாரிகள். அப்போது, என்னுடைய கீ செயினைக் கூட விட்டு வைக்க வில்லை. சின்ன நெயில் கட்டரைக் கூட எடுத்துச்செல்ல அனுமதிக்க வில்லை. “”கீ செயினில் என்ன இருக்கப்போகிறது?” என கேட்ட போது, “”மன்னிக்கவும்… இது, எங்களுடைய டூட்டி மேடம்” என்றனர். அந்தசமயத்தில், மும்பையின் சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதேமா விமானத்தில் செல்லும்போது தனது திரிசூலத் தையும் எடுத்துச் செல்கிறார் என்பது எனக்கு நினைவுக்கு வந்தது. அதைப்பற்றி, ஏர்போர்ட் அதிகாரிகளிடம், “”ஒருபெண் சாமியார் திரிசூலத்தையே விமானத்தில் எடுத்துச் செல் கிறார். ஆனால், எங்களிடம் கீ செயினைக் கூட விட்டு வைப்ப தில்லை. சாமியார்கள் என்றால் அவ்வளவு பக்தியும் பரவசமும் உங்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது” என்று சொல்லிவிட்டுச் சென்றேன்.

    குஷ்பு - நக்கீரனைத் தாக்குதல்

    குஷ்பு – நக்கீரனைத் தாக்குதல்

  1. ராதேமா, அஸ்ராம்பாபு, சாரதி பாபா, நாராயண்சாய் உள்ளிட்ட பல சாமியார்களும் சாமியாரினிகளும் அடிக்கடி ஊடகங்களில் அடிபடுகிறார்கள்: சென்னையிலிருந்து டெல்லி செல்லும்வரை சாமியார்களைப் பற்றிய சிந்தனையே எனக்குள் வட்டமடித்தது. ராதேமா, அஸ்ராம்பாபு, சாரதி பாபா, நாராயண்சாய் உள்ளிட்ட பல சாமியார்களும் சாமியாரினிகளும் அடிக்கடி ஊடகங்களில் அடிபடுகிறார்கள். இவர்களைச் சுற்றி மோசடிகள், ஆபாசம், கொலை, கொள்ளை, வரதட்சணை, கற்பழிப்பு என பல்வேறு சமூகவிரோத செயல்களாகவே செய்திகள் வலம்வந்தபடி இருக்கின்றன. இப்படிப்பட்ட சாமியார்கள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவர்களை ஆதரிக்கும் மக்கள் கூட்டம் மட்டும் குறைந்த பாடில்லை. இன்று தேசத்தில் வலம் வரும் எல்லா சாமியார்கள் மீதும் ஏதேனும் ஒரு சந்தேகரேகைப் படரவே செய்கிறது. இதில் எந்த ஒரு சாமியாரும் விதிவிலக்கல்ல.

    குஷ்பு ஆனந்தம், சச்சிதானந்த யோகநிலை

    குஷ்பு ஆனந்தம், சச்சிதானந்த யோகநிலை

  1. கடவுளை காணுவதற்கு சாமியார் என்கிற மீடியேட்டர் எதற்கு?: ஆன்மிகவாதிகளிடம் தங்கள் குறைகளைச் சொல்லி அதற்கு நிவாரணம் தேடும் முகமாகத் தான் அவர்களைத் தேடி மக்கள் ஓடுகிறார்கள். மக்களிடம் பக்தி அதிகரிக்கும்போது அந்த சாமியார்களே அவர்களுக்கு கடவுளாகத் தெரிகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. அந்த கடவுளைத் தேடி கோயில்களுக்குச் செல்கிறார்கள். போக முடியாதவர்கள் அவரவர் வீடுகளிலேயே பூஜிக்கிறார்கள். அப்போது கடவுளிடம் நேரடியாகவே குறைகளைச் சொல்லும் வாய்ப்பு கிடைப்பதாக அவர்களுக்கு ஒரு நம்பிக்கை. அப்படி நேரடியாகவே முறையிட்டும், தனது பக்தர்களின் குறைகளை தீர்க்க முன்வராத கடவுள், இடைத்தரகர்கள் போல தங்களைக் காட்டிக்கொள்ளும் சாமியார்கள் வழியாகவா வந்துவிடப் போகிறார்? கடவுளை காணுவதற்கு சாமியார் என்கிற மீடியேட்டர் எதற்கு? இதை ஏன் மக்கள் புரிந்து கொள்வதில்லை? மக்களிடம் இருக்கும் அறியாமையையும் மூடநம்பிக்கைகளையும் சாமியார்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனை மக்கள் புரிந்து கொள்ளாததால்தான் அத்தனை கிரிமினல் வேலைகளையும் செய்து வருகிறார்கள் சாமியார்கள். ஒவ்வொருவரின் சொந்த புத்தியும் சொல்லாத எந்த ஒரு விசயத்தையும் சாமியார்கள் சொல்லி விடுவதில்லை. சாமியார்களின் தோற்றம் தருகிற ஒரு வித மாயைதான், மக்களை மதிமயங்க வைத்து விடுகிறது. இதை மக்கள் புரிந்துகொள்ளாத வரைக்கும் சாமியார்களுக்குக் கொண்டாட்டம்தான்.

    குஷ்பு ஆனந்தம், சச்சிதானந்த யோகநிலை.2

    குஷ்பு ஆனந்தம், சச்சிதானந்த யோகநிலை.2

  1. கார்பரேட் சாமியார்களால் தான் மூடநம்பிக்கைகள் தழைத்தோங்குன்றன: “சிலமாதங்களுக்கு முன்பு, மூடநம்பிக்கை ஒழிப்புச்சட்டம் என்கிற சட்டத்தை அறிமுகப்படுத் தியது கர்நாடக அரசு. ஆனால், இதை எதிர்த்து சாமியார்கள் கூட்டம் கொந்தளித்ததும் அந்தச் சட்டத்தை கிடப்பில் போட்டு விட்டனர். கடவுளின் பெயரால் மூடநம்பிக்கைகளை சாமியார்கள் தொடர்ந்து பாதுகாப்பதன் பின்னணியில் அவர்களிடம் இருக்கும் பணவெறி, காம இச்சை, சுயநலம் போன்றவைகள்தான் காரணங்களாக இருக்கின்றன. “எளிமையும் தூய்மையும் நேர்மையும் இருக்க வேண்டிய மடங்கள் இன்றைக்கு ஆடம்பர பங்களாக்களாக உருமாறி நிற்கிறது. கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு ஆன்மிகத்தைப் போதிக்கும் கார்பரேட் சாமியார்களால் தான் மூடநம்பிக்கைகள் தழைத்தோங்குன்றனஎன்கிறார் என்னுடைய பகுத்தறிவு தோழர்”. அவரது கருத்தில் எனக்கு எந்தவித மாறுபாடும் தோன்றவில்லை, என்று தமிழ்.ஒன்.இந்தியா ஆமாம் போட்டிருக்கிறது.

    குஷ்பு ஆனந்தம், சச்சிதானந்த யோகநிலை.3

    குஷ்பு ஆனந்தம், சச்சிதானந்த யோகநிலை.3

  1. கார்பரேட் சாமியார்களின் வருட வருமானம்: ஏனெனில், நமது தேசத்தில் கடந்த 20 ஆண்டுகளில் கார்பரேட் முதலாளிகள் மட்டுமல்ல பல பணக்கார சாமியார்களும் வளமையாக வளர்ந்தே இருக்கின்றனர். அப்படிப்பட்ட சாமியார்களின் வரவு செலவுகள், வர்த்தக விளம்பரங்கள், சொத்துக்களைப் படித்தால் தலைச் சுற்றுகிறது. டெல்லியில் ஆசிரமம் வைத்துக் கொண்டு அத்தனை தகிடுத்தத்தங்களை யும் செய்த அஸ்ராம்பாபுவின் ஆண்டு வருமானம் 350 கோடி, பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவ மனைகள் வைத்திருக்கும் அமிர்தானந்தமயின் ஓராண்டு வர்த்தகம் 500 கோடி, வாழும் கலையை காசு வாங்கிக்கொண்டு மக்களுக்கு போதிக்கும் ரவி சங்கரின் வருட வருமானம் 450 கோடி, யோக சிகிச்சைகளை செய்து வரும் பாபாராம்தேவின் வரவு -செலவு 350 கோடி என்று ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. இதில் ஒவ்வொரு சாமியாரின் சொத்துக்களை கணக்கிட்டால் ஒவ்வொருவரும் சுமார் 1000 கோடிக்கு அதிபதிகளாகவே இருக்கிறார்கள் என்றும் அந்த புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டு கின்றன. இதில் கொடுமை என்னன்னா, இவர்களின் வரி ஏய்ப்புக்கு அரசாங்கமே துணை நிற்பதுதான். ஒரு சாமானியன் தனது வருமானவரிக்கணக்கில் 1 ரூபாயை மறைத்து விட்டால் அவனுக்கு எதிராக எத்தனை சட்டங்கள் பாய்கின்றன? அதில் ஒரு சட்டமாவது கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்யும் சாமியார்கள் மீது பாய்ந்திருக் கின்றனவா? இல்லையே!

    குஷ்பு ஆனந்தம், சச்சிதானந்த யோகநிலை.4

    குஷ்பு ஆனந்தம், சச்சிதானந்த யோகநிலை.4

  1. கார்பரேட் சாமியார்களுக்கு மத்தியில் நிர்வாண சாமியார்களின் அட்டகாசங்கள்: மதங்களைக் கடந்த ஆன்மிகம் என சொல்லிக் கொண்டு அத்தனை சாமியார்களும் அரசியலை தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருப்பதுதான் இதற்குக் காரணம் என சொல்லலாம். நேரடியான தங்களது அரசியல் நடவடிக்கைகள் மூலமாகவே இதனை பல சாமியார்களும் உணர்த்திக் கொண்டு தானிருக்கிறார்கள். அபரிமிதமான நிதிக் குவியல் களால் தங்களின் மடங்களை கார்பரேட் நிறுவனமயப்படுத்தி விடுவதால் இவர்களுக்கு அரசியல் செல்வாக்கு எளிதில் கைக்கூடி விடுகிறது. கார்பரேட் சாமியார்களுக்கு மத்தியில் நிர்வாண சாமியார்களின் அட்டகாசங்களுக்கும் நம் நாட்டில் பஞ்சமிருப்பதில்லை. குஜராத் மாநிலம் ஜூனாகாத் மலைப் பகுதியை சிவபெருமானின் முகமாக பாவித்து வழிபாடு நடத்துகிறார்கள் நிர்வாண சாமியார்கள். இதே மலைப்பகுதியை ஜைன மதத்தினரும் வழிபடுகின்றனர். இம் மலை அடிவாரங்களில் நிர்வாண சாமியார்களின் மடங்கள் ஏராளமாக இருக்கின்றன. கும்பமேளா காலங்களில் ஹரித்துவார், அலகாபாத் இடங்களில் ஒன்று திரண்டு வழிபாடு நடத்துவது பொதுவான நிலையாக இருந்தாலும் ஒவ்வொரு வருசமும் மகா சிவராத்திரி நாளில் ஜூனாகாத் மலை அடிவாரத்தில் இவர்கள் ஒன்றுதிரண்டு நிர்வாணக் குளியல் நடத்தி வழிபடு வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். நிர்வாண சாமியார் களில் எந்த பிரிவினர் முதலில் குளிக்கிறார்களோ அவர்களுக்குத் தான் சிவபெருமானின் அருள் நேரடியாக அவர்களை கைவிடுவதில்லை. அதனால் சாமியார்களின் செல் வாக்கும் குறைவதில்லை. ஒரு வேளை சாமியார்களின் செல் வாக்கு குறைந்துபோனால், புதுப் புது சாமியார்கள், அரசியல்வாதி களால் அடையாளப்படுத்தப் பட்டுக் கொண்டேயிருப்பார்கள். ஆன்மிகத்தில் மதிமயங்கும் நம் மக்களும் சாமியார்களின் அருளாசியை பெறுவதற்கு அடிமையாகிக்கொண்டே இருப்பதால் வஞ்சகச் சிரிப்புடனே காத்துக் கிடக்கிறார்கள் நம் தேசத்து நவீன சாமியார்கள்.

    குஷ்பு ஆனந்தம், சச்சிதானந்த யோகநிலை.6

    குஷ்பு ஆனந்தம், சச்சிதானந்த யோகநிலை.6

  1. கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை. அதே சமயம் கடவுளை நம்புபவர்களை நான் நிந்திப்பதும் கிடையாது: “என்னைப் பொறுத்தவரை, கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை. அதே சமயம் கடவுளை நம்புபவர்களை நான் நிந்திப்பதும் கிடையாது. அவர்களுடைய நம்பிக்கை அவர்களுக்கு. என்னுடைய நம்பிக்கை எனக்கு. நான் ஒரு பெரியாரிஸ்ட் என்பதில் எனக்கு கர்வமும் உண்டு; திமிரும் உண்டு!”, இவ்வாறு நடிகை குஷ்பு எழுதியுள்ளார்[3]. இனி இந்த 7 பத்திகளைப் பற்றிய அலசலைக் காண்போம். அந்நடிகைக்கு பதில் சொல்வது என்பதை விட, பொதுவாக கம்யூனிஸ, மார்க்சிஸ்ட், செக்யூலரிஸ மற்ற இந்து விரோத சக்திகள் இதே தோரணையில் பேசி-எழுதி வருவதனால், அத்தகைய அரைவேக்காட்டு, பொய்மால பேச்சுகள், ஏமாற்று-போலித்தன எழுத்துகள்,. பாரபட்ச கருத்துகள், துவேச நிந்தனைகள், முதலியவற்றை எடுத்துக் காட்டவேண்டும் என்ற நிலையில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

19-09-2015

[1] ஒன்.இந்தியா.தமிழ், வஞ்சக சிரிப்புடன் அடிமைகளுக்காக காத்துக் கிடக்கிறார்கள் டுபாக்கூர் சாமியார்கள்நடிகை குஷ்பு பொளேர், Posted by: Mathi, Updated: Friday, September 4, 2015, 16:35 [IST].

[2] http://pandianpandi.blogspot.com/2015/09/Kusbu-article.html

[3] http://tamil.oneindia.com/news/tamilnadu/kushboo-dares-self-style-godmans-235002.html