Posts Tagged ‘விஷ்ணு’

வைஷ்ணவர்களின் உதவியுடன் வளர்ந்து, வளர்த்த கடாவை முட்டியது போல, முட்டியுள்ள ஜாகிர் உசேன்! (4)

திசெம்பர் 22, 2021

வைஷ்ணவர்களின் உதவியுடன் வளர்ந்து, வளர்த்த கடாவை முட்டியது போல, முட்டியுள்ள ஜாகிர் உசேன்! (4)

வைணவர்களின் உதவியுடன் கோவில்களில் நுழைந்தது: ஶ்ரீரங்கம், ஶ்ரீவில்லிபுத்தூர் கோவில்களுக்குள் நுழைந்து போட்டோ எடுத்துக் கொண்டுள்ளான். பெருமையாக சமூக ஊடகங்களில் போட்டுக் கொண்டுள்ளான். இந்த மாதிரி போட்டோ எடுத்துக் கொள்ள யார் அனுமதி கொடுத்தது? சாதாரண பக்தன் எடுக்க ஆசைப் பட்டால், எடுக்கக் கூடாது என்கிறார்கள்! பிறகு இந்த பெரியாரிஸ்ட், நாத்திக-வேடதாரி, நாமதாரி எப்படி?????????????ஶ்ரீரங்கநாதனுக்கு நாத்திக / பெரியாரிஸ்ட் குண்டு வைக்காமல் இருந்தால் சரி என்று தோன்றுகிறது! நல்ல வேளை அண்ணா அறிவலத்திற்குள் சென்ற போது, அங்கு விரட்டி விட யாரும் இல்லை போலிருக்கிறது! இவன் / ஜாகிர் உஸைன் தற்போது திமுக மீதான பற்றால் அக்கட்சியில் இணைந்திருப்பதாக கூறியுள்ளார். பிறகு பற்று அங்குதானே இருக்கும்! ஶ்ரீரங்கநாதனின் மீது எப்படி இருக்கும்?? ஶ்ரீரங்கநாதனை பீரங்கி வைத்து பிளப்பது எந்நாளோ அந்நாளே பொன்னாள் என்ற கட்சியில் சேர்ந்தது, எந்த பற்றினைக் காட்டுகிறது? இந்துவிரோதிகள் தெளிவாக வேலை செய்கிறார்கள், செய்து கொண்டிருக்கிறார்கள்! ஆனால், அறிவற்ற இந்துக்கள் (முட்டாள் இந்துக்கள் என்றால் கோபம் வருகிறதாம், புகார் வேறு செய்கிறார்கள்) உண்மை அறியாமல், தனித்தையாக கும்பல் சேர்ந்து கொண்டு, குழிபறித்துக் கொண்டிருக்கின்றன… யாரை கண்டிப்பது, எதை எதிர்ப்பது, என்று கூடத் தெரியாமல் அல்லது வேண்டுமென்றே எதிரிகளுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்!

வைஷ்ணவன் என்று சொல்லிக் கொண்டு அரசியலாக்கிய ஜாகிர் உசேன்:

  • உண்மையில் மத நல்லிணக்கம் தேவையென்றால், அதனை நல்லவிதமாக, நேரிடையாக, செய்யலாம்!
  • அறிக்கைகள் விடுவது, ஆஸ்பத்திரியில் படுத்துக் கொள்வது, போட்டோ எடுத்துக் கொள்வது, ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுப்பது ………எல்லாம் பக்தி இல்லை……….
  • அரசியல்வாதி போல, அரசியலாக்கி, விளம்பரம் தேடும் வேலை தேவையில்லை!
  • கலை தெய்வீகம் ஆகும் போது, அது மதிக்கப் படுகிறது, ஆனால், அகம்பாவத்துடன் செயல்படும் பொழுது, பாண்டித்யம் கேள்விக்குறியாகிறது, கேள்விக்கு உட்படுகிறது!
  • ஶ்ரீரங்கம் கோவிலுக்குள் யார் வேண்டுமானாலும் செல்லலாமா? இந்துக்கள் மட்டும் அனுமதிக்கப் படுவரா? அல்லது, ஶ்ரீரங்கநாதனை / ஶ்ரீவிஷ்ணுவை நம்புகிறவர்கள் செல்லலாமா?
  • முன்பு ஃபிரான்சிஸ் சேவியர் குளூனி விசயத்தில் உண்டான விவகாரம், இப்பொழுது வேறொரு உருவில் எழுதுள்ளது…..
  • “ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தொடர்ந்து சென்று வந்துள்ளேன். ரங்கநாதர் மேல் நான் வைத்திருக்கும் பக்தி கோவில் நிர்வாகிகளுக்கும், அர்ச்சகர்களுக்கும் தெரியும். அதனால், ஒரு போதும் அவர்கள் என்னை தடுத்ததில்லை……..”, எனும்பொழுது, முன்னரே பலமுறை சென்றுள்ளது தெரிகிறது…..
  • பிறகு, அமைதியாக சென்று வந்திருக்கலாம்…..படோபடத்துடன் விளம்பரம் செய்யும் நோக்கம் தேவையில்லை!  
  • “……எனவே, இந்திய இறையாண்மைக்கும், மத நல்லிணக்கத்திற்கும் எதிராக செயல்பட்ட ரங்கராஜன் நரசிம்மன் மீது காவல் துறையும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்,”. இவ்வாறு அவர் கூறினார், என்பது பக்தர் போல சொல்லவில்லை, ஏதோ அரசியல்வாதி தோரணைதான் வெளிப்படுகிறது…………….
பேஸ்புக்கில் உள்ள பதிவுகள் அப்பட்டமாக மோசமான பதிவுகளாக இருக்கின்றன.
மோடியைப் பற்றி மிகவும் அநாகரிகமன பதிவுகள் உள்ளன. ஒருமையில் மோசமான தாக்குதல் வார்த்தைப் பிரயோகங்களுடன் காணப்படுகின்றன.

மக்களே !கொரோனாவ விட கொடுமையானத பாத்திருக்கீங்களா ???பாருங்க !! என்னத்த சொல்ல. யப்பா சாமி , உன் ரீலு அந்து போய் ரொம்ப நாளாச்சுடா !!பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு இருக்கணும் …மோடி அரசு போன்ற கேவலமான , கொள்ளைக் கூட்டம் உலகில் வேறெங்கும் இல்லை ; மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா – நின் திருவடியும் திமுகவும்
தமிழ்நாட்டின் காப்பு; India wasted two “Bharat Rathna” on unethical and ruthless personalities #Sachin & #Latha

ஏன் நாத்திகர்கள், பெரியாரிஸ்டுகள், இந்துக்கள்அல்லாதவர்கள் தடுக்கப் படவேண்டும்?: சட்டரீதியாக இந்துக்கள் அல்லாதவர்கள் கோவில்களுக்குள் செல்லக் கூடாது.

  1.  எஸ்.கே. கிருஷ்னசாமி ஐயங்கார் என்பவரின், “தென்னிந்தியாவும் அதன் மொஹம்மதியர் படையெடுப்பாளர்களும்” (S.K.Krishnasway Iyengar South India and its Mohammedan Invaders) என்ற புத்தகத்தில், சரித்திர ஆதாரங்களுடன், ஶ்ரீரங்கம் கோவில் எவ்வாறு முகமதியர்களால் கொள்ளையடிக்கப் பட்டது, கொள்ளையடிக்கப் பட்டது என்பது விளக்கப் பட்டுள்ளது.
  2. ஏனெனில், இடைக் காலத்திலிருந்து, துலுக்கர் இக்கோவில் மீது படையெடுத்து, கொள்ளையடித்து, இடித்து நாசமாக்கியுள்ளனர். 150 ஆண்டுகளுக்கு முன்னர் கூட ஐரோப்பியர்களால், பல கொள்ளைகள் நடந்துள்ளன.
  3. ஒரு பிரெஞ்சு ராணுவ வீரன் ஶ்ரீ ரங்கநாதரின் கண்களை (வைரங்களை) களவாட திட்டம் போட்டான்! ஶ்ரீவைஷ்ணவன் போலவே நாமம்-வேடமிட்டான்! பட்டர்களின் நட்பு நம்பிக்கை பெற்று, வந்து சென்றான், 1747ல் அவன் கர்பகிருகத்தில் நுழைந்து வைரங்களைத் திருடிக் கொண்டான்! ஶ்ரீரங்கநாதரின் ஒரு கண் / வைரம் தான் Orlov / Orloff என்று மிஞ்சியுள்ளது, இரண்டாவது கண் எங்கே போனது தெரியவில்லை! . ஶ்ரீரங்கத்தை ஶ்ரீ ரங்கநாதர் தான் காக்க வேண்டும்! உண்மையான பக்தர்கள் படும் தொந்தரவுகள், அவதிகள், துன்பங்கள்……..
  4. 1950-70களில் ஶ்ரீரங்க நாதனையும் தில்லை நடராஜனையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ அந்நாளே பொன்னாள் என்றெல்லாம் ஔரங்கசீப் வெறித்தனத்துடன், திராவிடத் தலைவர்கள் பேசியிருக்கின்றனர். அவ்வாறே கொள்ளையடித்துள்ளனர்.
  5. பெரும்பாலான பக்தர்கள் தமிழகத்திற்கு வெளியிலிருந்து வருகிறார்கள்! பெரிய மதத்தலைவர்கள்-துறவிகள்-ஞானிகளும் வந்திருக்கிறார்கள்!
  6. ஶ்ரீமத் சங்கரதேவர், சைத்தன்யர், வல்லபாச்சாரியார், குருநானக் என்று பல வந்து ஶ்ரீ ரங்கநாதரை தரிசித்துள்ளனர்!
  7. எல்லோரும் சிரத்தையுடன் காதலாக கசிந்து கண்ணீர் மல்கி, பக்தியுடன் தம்மையே அர்பணித்துக் கொண்டனர், மக்களுக்கு சேவை செய்தனர்!
  8. 20-12-2021 அன்று ஒருவர் நான் 1 கோடி ரூபாய் கொடுத்துள்ளேன் என்று அடாவடியாக, கும்பலுடன் கோவிலுக்குள் நுழைந்து கலாட்டா செய்துள்ளார்!
  9. ஆனால் ரூ 250/- வாங்கிக் கொண்டு பக்தர்களை விரட்டுகிறார்கள், தள்ளுகிறார்கள், ஒருமையில் பேசுகிறார்கள், கதவை சாத்தி அடைக்கிறார்கள்!
  10. அந்த வைஷ்ணவ துலுக்க கபட வேடதாரி, நாமதாரி, கூத்தாடியும் நான் தங்கம்-வெள்ளி கொடுத்துள்ளேன் என்று பறையடித்து உள்ளே நுழைகிறான்! பிறகு பொய் சொல்லி புகார் கொடுக்கிறான், அதற்கெல்லாம் விளம்பரம் கொடுக்கப் படுகிறது.
  11. ஆனால், உண்மையான பக்தர்கள் 3 முத 5 மணி வரை வரிசையில் நின்று அவதிபடுவதைப் பற்றி யாரும் கவலைக் கூடப் படுவதாகத் தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

22-12-2021

வைஷ்ணவ பக்தன் என்றால், கோபுரத்திற்கு முன்னால் இருக்கும் இந்து விரோத-துவேசி ஈவேரா சிலையை அகற்றியிருக்க வேண்டும் – எடுக்கும் வரையில் அங்கேயே ஆடியிக்க வேண்டும்! (3)

திசெம்பர் 22, 2021

வைஷ்ணவ பக்தன் என்றால், கோபுரத்திற்கு முன்னால் இருக்கும் இந்து விரோததுவேசி ஈவேரா சிலையை அகற்றியிருக்க வேண்டும்எடுக்கும் வரையில் அங்கேயே ஆடியிக்க வேண்டும்! (3)

வைஷ்ணவன் என்று சொல்லிக் கொண்டு ஆவினத்தைத் தூஷித்தது: ஜாகிர் உசேனின் கபடத் தனம், ஈவேராவை ஆதரிப்பதலிருந்தே அறிந்து கொள்ளலாம். கோபுரத்திற்கு முன்னால், இருக்கும் இந்துவிரோதியின் சிலையை அகற்ற இந்த வைஷ்ணவ-துலுக்கன் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.  உண்மையான வைஷ்ணவ பக்தன் என்றால், கோபுரத்திற்கு முன்னால் இருக்கும் ஈவேரா சிலையை அகற்றியிருக்க வேண்டும் – எடுக்கும் வரையில் அங்கேயே ஆடியிக்க வேண்டும். கங்காதேவியைப் போன்று எவ்வாறு துலுக்கர் ஶ்ரீரங்கம் கோவிலை இடித்தார்கள், கொள்ளையிட்டார்கள், படைகளுடன் அங்கேயே தங்கினார்கள் என்றெல்லாம் விவரித்து, நாட்டிய நாடகம் ஆடியிருக்கலாம். ஆனால், மேடைகளில் வேடமிட்டு ஆடி பணம்-புகழ் சேர்த்து, இந்துக்களுக்கு பெரிய நாமத்தைத் தான் இந்த ஆள் போட்டிருக்கிறான். இந்து நம்பிக்கையாளர்களின் உணர்வுகளை, நம்பிக்கைகளை புண்படும் விதங்களில் பேஸ்புக்கில் பதிவுகள் போட்டு, தூஷித்து இருக்கிறான். ஶ்ரீ ரெங்கநாதர் ஶ்ரீ கிருஷ்ணர் என்றால், பசுவை அவனால், அந்ந்த அளவுக்கு தூஷித்து இருக்க முடியாது. ஆனால், செய்துள்ளான். பாண்டே கேட்ட போது, அவன் முகமே சுருங்கி, ஆபாசமாகி விட்டது, குற்ற-வஞ்சக உணர்வு முகத்தை காட்டி விட்டது. ஆண்டாள் பக்தன் என்றாலும், அவனது குரூரம் வெளிப்படுகிறது. துலுக்கனாக, பெரியாரிஸ்டாக, திமுக உறுப்பினராக இருந்து கொண்டு புலால் உண்கிறானா-இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், பசுக்கொலையை எதிர்ப்பதற்கு பதிலாக, ஆதரித்து பிரச்சாரம் செய்துள்ளான்.

1311, 1318 மற்றும் 1327 ஆண்டுகளில் ஶ்ரீரங்கம் தாக்கப் பட்டது: 1311ல் மாலிகாபூருக்கு பயந்து, வீரபாண்டியன் அரச கருவூல செல்வங்களை எடுத்துகொண்டு ராமேஸ்வரம் அருகில் உள்ள தீவுக்கு தப்பி சென்றான். மலிக்காபூர் பாண்டிய அரசின் மதுரை மீனாட்சிகோவில்,சிதம்பரம் நடராஜர் கோவில் , ஶ்ரீரங்கம் கோவில் போன்ற அனைத்து கோவில்களின் செல்வதையும் பல நூறு யானை, ஒட்டகம் ஆகியவற்றில் டெல்லி கொண்டு சென்றான். அவை அந்த நாட்களில் டெல்லி சுல்தான்கள் அது வரையிலும் பெறாத செல்வமாக இருந்தது என சம கால வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.

  • 1318 ஆம் ஆண்டு டெல்லி சுல்தான் குஸ்ருகான் தமிழகத்தை தாக்கி ஶ்ரீரங்கம் கோவிலை கொள்ளை அடித்து சென்றான். 
  • இஸ்லாமியப் படைகள் தொண்டைமண்டலத்தின் அத்தனை பகுதிகளிலும் அழிவுகளை நிகழ்த்தியதாக ஸ்ரீரங்க வரலாறான “கோவிலொழுகு” விளக்குகிறது. இதன்மூலம் ஸ்ரீரங்க ஆலயத்தை இஸ்லாமியப்படைகள் 1327-ஆம் வருடம் தாக்கியது உறுதியாகிறது.
  • ஆலயத்தைத் தாக்கிய இஸ்லாமியப்படைகள் ரங்கநாதரின் சிலையைக் காணாது கோபமுற்று அங்கிருந்த பல பூசாரிகளின் மற்றும் பக்தர்களின் தலையைக் கொய்ததாக கோவொலொழுகு மேலும் கூறுகிறது.
  • ஆல்யத்திலிருந்த நாட்டியப் பெண்மணி ஒருத்தியின் முயற்சியின் காரணமாக ஸ்ரீரங்கம் ஆலயம் பெரும் அழிவிலிருந்து தப்பியதாகத் தெரிகிறது. மேற்கூறியபடி 1327-ஆம் வருடம் ஸ்ரீரங்க ஆலயத்தைக் கைப்பற்றிய இஸ்லாமியப்படைகள் பின்னர் அங்கேயே தங்கிவிட்டன.
  • ஸ்ரீரங்கம் மற்றும் ஜம்புகேசுவரரர் ஆலயங்களில் இஸ்லாமியப் படைகள் நிகழ்த்திய அழிவுகளைக் குறித்து கங்காதேவி தனது மதுரா விஜயத்தில் விளக்கியிருக்கிறார்.

ஸ்டாலின் நெற்றியில் வைத்ததை அழித்த போது, பட்டர்களுக்கு மன உளைச்சல் ஏற்படவில்லை, ஆஸ்பத்திரிக்குச் சென்று படுத்துக் கொள்ளவில்லை: பரதநாட்டிய கலையில் மூலம் அறியப்பட்ட ஜாகிர் உசேன் 05-01-2021 செவ்வாயன்று திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார். ஆக, இவர் மூலம், அரசியல் ஆக்க திமுக, ஸ்டாலின் நினைத்திருக்கலாம்….முன்னரே ஸ்டாலின் ஶ்ரீரங்கத்திற்கு வந்தபோது, பட்டர்கள் மரியாதை கொடுத்து, நெற்றியில் சந்தனம்-குங்குமம் வைத்த போது, அழித்து அவமரியாதை செய்தது தெரிந்த விசயமே……..அப்பொழுது எத்தனை இந்துக்களுக்கு மன உலைச்சல் ஏற்பட்டிருக்கும் என்று ஸ்டாலின் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும்…… அப்பொழுது பட்டர்கள் எல்லோரும் ஆஸ்பத்திரிக்கு சென்று படுத்துக் கொண்டு, போட்டோ வெளியிடவில்லை! உசேனும் கவலைப்படவில்லை. ஆக, இது எவ்வளவு பெரிய நாடகம் என்பதனை அறிந்து கொள்ளலாம். இப்பொழுது, இதைப் பற்றி எந்த மனிதனும் நினைத்துப் பார்த்தால் வெட்கப் படவேண்டும். ஆனால், எல்லா உண்மைகளையும் மறைத்து, உசேன், ஸ்டாலின் மற்ற இந்துவிரோதிகள் நாடகம் ஆடுகின்றனர், அறிக்கை விடுகின்றனர்.

பிரபலங்களைப் பிடித்து அரசு உதவி பெற்று வளர்ந்தது: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவரான இவர் பாரம்பரிய முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர். பரதநாட்டியம் மீதான ஆர்வத்தால் சென்னைக்கு 90-களில் வந்தார். நான்கு ஆண்டுகள் சித்ரா விஷ்வேஸ்வரன் என்ற கலைஞரிடம் பரதநாட்டியம் பயின்றார். அதன் பிறகு மார்கத்திலிருந்து விலகி நாட்டிய நாடகங்களை அரங்கேற்ற தொடங்கினார். அது பற்றி ஆராய்ச்சிகளும் செய்துள்ளார். இவருக்கு நடிகர் ரஜினி, சத்யராஜ், தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி ஆகியோர் ஆதரவளித்தனர். இவரது திறமையை அறிந்து 1992-ல் இந்திய ஜனாதிபதி 3 ஆண்டுகள் உதவித்தொகை வழங்கினார். பிறப்பால் ஒரு முஸ்லீம் என்றாலும், வேதங்கள், ஆகமங்கள் குறிப்பாக வைணவ பாரம்பரியம் பற்றிய ஆழமான புரிதலும், அறிவும் அவருக்கு உண்டு என்றெல்லாம் ஊடகங்கள் அளந்து விடுகின்றன. வைஷ்ணவ ஆகமங்கள் குறித்த ஆராய்ச்சிக்காக மத்திய அரசு இவருக்கு விருது வழங்கியிருக்கிறது. மகாபாரதம், ராமாயணம் போன்ற காவியங்களைப் பற்றிய அவரது பரந்த அறிவு, பாஞ்சாலி சபாதம் மற்றும் சீதாயணம் போன்ற நடன நாடகங்களை கருத்தாக்க அவருக்கு உதவியது.

திமுகவில் சேர்ந்தது, பெரியாரிஸ்ட் என்று பிரகடனப் படுத்திக் கொண்டது: இவர் தற்போது திமுக மீதான பற்றால் அக்கட்சியில் இணைந்திருப்பதாக கூறியுள்ளார்.   முகநூலில் மிகவும் மோசமான பதிவுகளை செய்துள்ளார். பிரதம மந்திரி என்ற மரியாதைக் கூட இல்லாமல், ஒருமையில் விமர்சித்து, கேவலப் படுத்தியுள்ளான்.பிறகு இந்த ஆளை எப்படி கலைஞனாக மதிக்க முடியும்? நிச்சயமாக, இந்த மனிதன், குணாதிசயங்களால் அரக்கனாகத்தான் இருக்க வேண்டும்…. உபயோகப் படுத்திய வார்த்தைகள், மொழிநடையும் கேவலமாக கடூரமாக இருக்கிறதே? அந்த ஆள் மூஞ்சிக்கும், மனதுக்கும், காரியத்திற்கும் சம்பந்தமே இல்லை…….உள்ளே காரிருள், குரூரம், வஞ்சம்……….என்று தான் உள்ளன!பிஜேபியை, ஆர்.எஸ்.எஸ்.ஐ தூஷிக்கும் இந்த இந்துவிரோதி மீது ஏன் நடவடிக்கை இல்லை? உபயோகப் படுத்திய வார்த்தைகள், மொழிநடையும் கேவலமாக இருக்கிறதே? அடியேன் கருணாநிதி தொண்டன்,  ஸ்டாலின் தாசன், ………………………. திமுகவின் விசுவாசமான தொண்டன்,  திராவிடியன் ஸ்டாக் என்று கூறி  பெருமைப் பட்டுக் கொள்ளும்  நாட்டியக்காரன்,  நாடகத்திலும் கெட்டிக்காரனாகத் தான்  இருப்பது ஆச்சரியமில்லை!

© வேதபிரகாஷ்

22-12-2021

துர்கா ஸ்டாலின் பூஜை அறை – குலதெய்வம் கோவில் புனரமைத்தது – சக்தி வழிபாட்டில் ஈடுபட்டது – வாராஹி கொடுத்த வெற்றியா? (2)

ஜூன் 26, 2021

துர்கா ஸ்டாலின் பூஜை அறைகுலதெய்வம் கோவில் புனரமைத்தது – சக்தி வழிபாட்டில் ஈடுபட்டது – வாராஹி கொடுத்த வெற்றியா? (2)

02-05-2021 நள்ளிரவில் பூஜையறையில் சான்றிதழ் வைத்த துர்கா ஸ்டாலின்: வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற மே 2ஆம் தேதி காலையில் எட்டு மணிக்கு பூஜை அறையில் உட்கார்ந்து பிரார்த்திக்க தொடங்கிய துர்கா ஸ்டாலின் மதியம் ஆகியும் வெளியே வரவில்லையாம். அந்த நாளில் என்ன நடந்தது என்பது குறித்து அவரே தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்[1]. தான் சென்று வந்த கோயில்களின் தெய்வங்கள், துர்கை, குல தெய்வம் என எந்தக் கடவுளையும் விடாமல் தொடர்ந்து பிரார்த்தித்து வந்துள்ளார். மதியத்துக்கு மேல் அவரது மருமகள் கிருத்திகா அவரை வலுக்கட்டாயமாக அழைத்து பின்னர்தான் வெளியே வந்துள்ளார். “திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கப் போகிறது இனி என்ன வேண்டும், சந்தோஷமா என்ஜாய் பண்ணுங்க,” என்று கிருத்திகா கூறியுள்ளார். ஸ்டாலின் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவரிடம் சான்றிதழ் வழங்கப்பட்டு அவர் கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி பத்திரிகையாளர்களைச் சந்தித்து நள்ளிரவில்தான் வீட்டுக்கு சென்றார். நள்ளிரவில் கணவரை எதிர்பார்த்து காத்து நின்றிருக்கிறார் துர்கா ஸ்டாலின். வந்தவரை நேராக பூஜை அறைக்கு அழைத்துச் சென்றுதான் சான்றிதழை பெற்றுக்கொண்டுள்ளார். அப்போதே அவரது கண்கள் கண்ணீரில் நனைந்துள்ளது. தான் வணங்கிய தெய்வம் எல்லாம் கண்முன்னே வந்து சென்றதாக துர்கா இது குறித்து கூறியுள்ளார்[2]. “நான் இன்னும் சி.எம் ஆகல அதுக்குள்ள ஏன் இப்படி உணர்ச்சிவசப்படுறே” என ஸ்டாலின் அந்த நள்ளிரவில் மனைவியை தேற்றியுள்ளார்.

ஜனவரி 2021ல் தில்லிய நடத்த முடியாத பூஜையை ஜுனில் நடத்தியது: தேர்தலுக்கு முன்பே அவர் லண்டன் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன[3]. ஆனால் கொரோனா முதல் அலை காரணமாக அவர் செல்லவில்லை. ஆகையால் இந்த முறை லண்டன் செல்ல ஏற்பாடாகியது. டெல்லி ராமகிருஷ்ண புரம் பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். மலை மந்திரில் உள்ள உத்தரசுவாமி கோயில் பிகவும் பிரபலமானது. அரசியல் பிரமுகர்கள் பலரும் இங்கு தரிசனம் செய்வது வாடிக்கை. திமுக எம்.பி., ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி டெல்லி மலைமந்திர் முருகன் கோயிலுக்கு அடிக்கடி சென்று வணங்குவார். தீவிர கடவுள் பக்தரான துர்காதேவி ஸ்டாலினும் அடிக்கடி கோயில்களுக்கு சென்றுவருவார். இந்த முறை பிரதமரை சந்திக்க மு.க.ஸ்டாலின் சென்றார். அப்போது அவருடன் துர்கா ஸ்டாலினும் சென்றார். மு.க.ஸ்டாலினின் உடல்நலன் கருதி டெல்லியில் உள்ள கனிமொழி இல்லத்தில் இருந்து சமையல்களை எடுத்துச் சென்று ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. சமையலை தானே செய்து கொடுத்துள்ளார் துர்கா. அப்போது ஆர்.கே.புரத்தில் உள்ள மலைமந்திர் முருகன் கோயிலுக்கும் சென்றுள்ளார் துர்கா ஸ்டாலின். அங்கு மலை மந்திர் அர்ச்சகரை சந்தித்து சிறப்பு பூஜைகளையும் நடத்தியுள்ளார் துர்கா[4]. மு.க.ஸ்டாலினின் உடல்நலம், அரசு நிர்வாகம் சிறப்பாக நடைபெற வேண்டும் என இந்த பூஜைகளை துர்கா ஸ்டாலின் செய்துள்ளார்[5].

ஆர்.கே.புரத்தில் உள்ள மலைமந்திர் முருகன் கோயிலில் ஜூன் 2021ல் நடத்திய பூஜை: இந்த மலைக்கோயிலுக்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். தென்னிந்திய கோயில் கட்டுமான பாணியில் கோயில் அமையப் பெற்றுள்ளது. அதேபோல் இன்னொரு தகவலும் வெளியாகி இருக்கிறது. மு.க.ஸ்டாலின் விரைவில் லண்டன் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லண்டனில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதாகவும் அதில் கலந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு முதலீட்டை ஈர்ப்பதற்காக ஸ்டாலின் செல்லவுள்ளதாகவும் கூறுகிறார்கள். லண்டன் பயணத்துக்காக அனுமதி கோரப்பட்ட நிலையில் கிரீன் சிக்னல் கிடைத்துள்ளதாகவும் கூறுகிறார்கள். இதற்கு முன்பாக ஸ்டாலின் சிகிச்சைக்காகவும், ஓய்வுக்காகவும் லண்டனுக்கு பலமுறை தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். தேர்தலுக்கு முன்பே அவர் லண்டன் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் கொரோனா முதல் அலை காரணமாக அவர் செல்லவில்லை. ஆகையால் இந்த முறை லண்டன் செல்ல ஏற்பாடாகி வருகிறது.

நாத்திகனுக்கு வெற்றி கிடைத்த ரகசியம்: அஜாமிளனுக்கு கடைசி காலத்தில் “நாராயணா” என்று தன் மகனைக் கூப்பிட்டதால், கடவுளின் பெயரைச் சொல்கிறான் என்று, யமதூதர்கள், அவனை விட்டுச் சென்றனராம்[6]. துரியோதனன் முதலியோர், பாண்டவர்களுக்கு முன்னரே சொர்க்கத்தில் இருந்தனர்[7]. ஆனால், தருமர் கஷ்டப் பட்டு, மனைவி தம்பியர் இறக்க, தான் மட்டும் தனியாக சொர்க்கத்திற்கு வந்த போது, திகைக்கிறான். அதாவது, துரியோதனன் முதலியோர், ஶ்ரீகிருஷ்ணரை வெறுத்தாலம், சதாசரகாலம் அவரையே நினைத்து தூஷித்துக் கொண்டிருந்தனர். அதேபோல, நாத்திகர், “கடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை,” எனு அடிக்கடி சொல்லும் போதெல்லாம், “கடவுள், கடவுள்” என்கிறான், நினைத்துக் கொள்கிறான். இங்கும், மனைவி, கணவனுக்காக தியானித்து, உச்சாடனம் செய்து, பூஜித்து, பாராயயணம் செய்து, வெற்றியைத் தேடித் தந்துள்ளாள்!

கணவன்மனைவி, நாத்திகம்ஆத்திகம், பொதுமக்கள்ஆட்சி: மனைவி இவ்வாறு நம்பிக்கையுடன், இந்து போல, இந்துவாக, பூஜை-புனர்ஸ்காரங்கள் செய்து கொண்டிருந்த போது, கணவன், கிருத்துவ-துலுக்கக் கூட்டங்களில், இந்து மதத்திற்கு எதிராக பேசிக் கொண்டிருந்தார்[8].

  1. பஞ்சகன்யா (पञ्चकन्या) = ஐந்து கன்னிகையர் என்றதில் அஹல்யா, திரௌபதி, குந்தி, தாரா, மண்டோதரி அடங்குவர். இதில் மண்டோதரி ராவணனின் மனைவி.
  2. இவர்களின் பெயர்களை உச்சரித்தால் சகல பாவங்களும் போகும் என்ற வழக்கும் உள்ளது. இதில் தாராவை குரங்கு, மண்டோதரியை அரக்கி என்று சொல்வதில்லை.
  • கௌசிகன் என்பவன் தொழுநோயாளியாக இருந்தாலும், அவனுடைய மனைவி கௌசிகி தொட்டு பணிவிடை செய்ததால், பதிவிரதை ஆனாள்.
  • தன் கணவன் பொழுது புலந்தால் இறப்பான் என்று சாபமிட்டபோது, பொழுதே புலராமல், சூரியனை உதிக்காமல் செய்தாள் அந்த பதிவிரதை!
  • இன்றோ, நான்கு திசைகளில் சூரியனை உதிக்க வைத்தாளோ, இந்த பதிர்விதை. அதனால், கமலமே நான்காக சுருங்கிவிட்டது போலும்!
  • அரக்கர் – ஹிரண்ய கசிபு, ஹிரண்யாக்ஷன் மனைவியர் தங்களது கணவர்களுக்காக மோட்சத்தை வேண்டிப்பெற்ற பதிவிரதைகள்!
  • தேவர்களும் அசுரர்களும் சகோதரர்கள் தாம், குணாதிசயங்களை வைத்து, அசுரர்கள் வித்தியாசமாகச் சித்திரக்கப் படுகின்றனர்.
  • எப்பொழுதுமே, அரக்கர்களின் மனைவியர் தங்களது கணவர்களுக்காக அவர்கள் எதிர்க்கும் கடவுளர்களையே வேண்டி, பூஜை செய்து, போற்றியுள்ளனர்.
  • கணவன் செத்த பாடை என்றாலும், அவை தீயது என்று ஆபாசமாக பேசினாலும், மனைவி அதே செத்தபாடை மந்திரங்கள் சொல்வது கலிகாலமா?
  1. சக்தி-உபாசனை, சக்கரம், மந்திர-யந்திர-தந்திர பிரயோகங்கள் சிலருக்கு உடனடி பலனைக் கொடுக்கலாம்! எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

26-06-2021


[1] தமிழ்.சமயம், நள்ளிரவில் பூஜை அறையில் துர்கா: ஸ்டாலின் வெற்றிக்கு பின்னால் இப்படி ஒரு விஷயம் இருக்கா?, Mariathangaraj Jeyapal | Samayam TamilUpdated: 14 May 2021, 02:42:51 PM

[2] https://tamil.samayam.com/latest-news/state-news/durga-stalin-interview-about-mk-stalin-hard-work-and-her-prayers/articleshow/82624923.cms?story=3

[3] தமிழ்.ஏசியாடிக்.நியூஸ், துர்கா ஸ்டாலின் நடத்திய சிறப்பு பூஜைலண்டனுக்கு புறப்படும் மு..ஸ்டாலின்..!, Thiraviaraj RM, Tamil Nadu, First Published Jun 19, 2021, 11:57 AM IST.

[4] பிஜேபி வேல்யாத்திரையும், திமுகவிற்கு சாதகமாக போனதை கவனித்திருக்கலாம்.

[5] https://tamil.asianetnews.com/politics/special-pooja-conducted-by-durga-stalin-mk-stalin-leaving-for-london-quxrae

[6] இதைப்போல, புராணங்களிலிருந்து பல உதாரணங்களை எடுத்துக் காட்டலாம்.

[7] ஶ்ரீகிருஷ்னரிடம் போருக்கு/ தேர்தலுக்கு உதவி கேட்டு சென்றபோது, துரியோதனன் தலைப் பக்கமும், அருஜுனன் கால் பக்கமும் உட்கார்ந்த நிலையினையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

[8] ஆனால், பிஜேபிகாரர்களின் மனைவிகள், தங்களது கணவன்மார்களின் வெற்றிக்கு இவ்வாறு பூஜை செய்தார்களா என்று தெரியவில்லை.

ஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் இடைச்செருகல்கள் மூலம் வளர்ந்தது ஏன்? பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி? [3]

செப்ரெம்பர் 7, 2018

ஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் இடைச்செருகல்கள் மூலம் வளர்ந்தது ஏன்? பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி? [3]

Bhagawatam, Devi Bhagawatam

ஶ்ரீமத் பாகவதத்தில் இருப்பதும், இல்லாததும்: ஶ்ரீமத் பாகவதத்தில் “வஸ்த்ர ஹரன” பற்றிய விவரங்களை ஆய்வோம்.

  1. திருமணம் ஆகாத பெண்கள், தங்களுக்கு நல்ல கணவன் வேண்டி, ஹேமந்த ருதுவின் முதல் மாதத்தில் [கார்த்திகை], காத்தியாயனி தேவியை வணங்கி விரதம் மேற்கொள்வர் [ஶ்ரீமத் பாகவதம்.ஸ்கந்தம்.10, அத்தியாயம்.22-1].
  2. யமுனைநதிக் கரைக்கு, அதிகாலையில் சென்று, மண்ணால் தேவியின் உருவத்தை செய்து, சகல பூஜைகளையும் செய்து வணங்குவர் [2-4].
  3. ஒரு காலத்தில், கன்னிகள் நிர்வாணமாக வழிபாடு செய்தனர் போலும். அதனால், அத்தகைய முறையும் இருந்தது போலும். கிருஷ்ணர் அதனைத் தடுக்க முயற்சிக்கிறார். தொடர்ந்து வரும் வழிபாட்டு முறையை தடுப்பது பிரச்சினையை உண்டாக்கும், அதனால், கிருஷ்ணர் தந்திரமாக அதனைத் தடுக்க திட்டமிட்டார். ஆகவே, அவர்கள் சிரத்தையாக நிர்வாணமாக காத்தியாயனி பூஜை செய்து கொண்டிருந்த போது, ஆடைகளை கொண்டுவந்து, மரத்தின் மீது உட்கார்ந்து விட்டார் [8-9].
  4. நீராடி, கரைக்கு உடையணிய பார்த்த போது, உடைகள் இல்லை என்பதனை அறிந்தனர். அப்பொழுது தான், கிருஷ்ணர் எடுத்துச் சென்று விட்டார் என்று தெரிந்தது [14]. அப்பொழுது, கிருஷ்ணர் அவர்களுக்கு, அவரவர் உடைகளைக் கொடுத்து [21], இத்தகைய முறைகள் விடுத்து, சிரத்தையாக காத்தியாயனி விரதத்தைப் பின்பற்றுமாறு அறிவுருத்தினார் [27].
  5. தன்னை அர்ச்சனை செய்ததால் அவர்களது சங்கல்பத்தை அறிந்து கொண்டதாக கூறினார் [24-25].

மேலும் குறிப்பிட்ட சுலோகங்கள் எல்லா சுவடிகளிலும் காணப்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்[1]. மேலும், ஹோனியைப் பற்றிய விவரங்கள் சக்தி மற்றும் தந்த்ர வழிபாட்டைக் காட்டுகிறது. இது ஜைன-பௌத்த இடைச்செருகல்களைக் காட்டுகிறது.

Mystery in the disappearance of Chaitanya

ஶ்ரீசைத்தன்யரின் முடிவு பற்றிய மர்மம்: ஶ்ரீசைதன்யர் [1486-1534] இடைகாலத்தில் இத்தத்துவத்தை தனது கவித்துவத்தில் வெளிப்படுத்தினார். பக்தி மார்க்கத்தில் நுழைத்ததால், பாடல்கல் மூலம் துரிதமாக மக்களிடம் பரவியது. மேலும், கூட்டம் கூட்டமாக பக்தர்கள் சேர்ந்து பாடுவது, ஆடுவது, தெரு-தெருக்களாக, ஊர்-ஊர்களாக செல்வது, மக்களின் விழிப்புணர்வினை ஏற்படுத்தி, வளர்த்தது. துலுக்கர் தமது அடவடித் தனங்களை எல்லோர் முன்னால், அதாவது கூட்டத்தின் முன்னால் செய்ய முடியாமல் போயிற்று. இதனால், ஶ்ரீசைத்தன்யரின் நகர்வுகளைக் கட்டுப்படுத்த துலுக்க அரசாங்க திட்டமிட்டது. அவரை மடக்க, துலுக்கர் பக்தர்கள் போலவே, ஆடிப்பாடி அவரைச் சுற்றி வளைத்தனர் – அவரது முடிவு மர்மமாகத் தான் இருக்கிறது. ஶ்ரீ கிருஷ்ணருடன் ஐக்கியம் ஆனாரா, ஜீவசமாதியானரா, பக்தி-கடல் சமாதியில் மூழ்கினாரா…தெரியவில்லை!

Thirtankara painted as Krishna

சக்தி, கிருஷ்ணர், தீர்த்தங்கரர், புத்தர்யார் பெரியவர், கடவுள்: ஶ்ரீமத் பாகவதம் மற்றும் ஶ்ரீதேவி பாகவதம் என்ற இரண்டு நூல்களில், எது உண்மை-பொய், தொன்மையானது-தொன்மையற்றது, சாக்தமா-வைணவமா என்ற சண்டை-பிரச்சினை பக்தகளிடம் உள்ளது. இது சாக்த-விஷ்ணு பக்தர்களின் சண்டையைக் காட்டுகிறது. மேலும், பாகவத புராணத்தில் ஜைன-பௌத்த இடைச்செருகல்கள் மற்றும் தாக்கமும் இருக்கின்றன. ஐந்தாவது ஸ்கந்தத்தில் தீர்த்தங்கர்கள் பற்றிய கதைகள் சேர்க்கப்பட்டுள்ளன[2]. அதே போல புத்தரைப் புகழ்ந்ந்து போற்றுவதுடன், விஷ்ணுவின் அவதாரமாகவும் குறிப்பிடுகின்றது. இந்து புராணங்களில் இத்தகைய விவரங்கள் வரவேண்டிய அவசியம் இல்லை. ஶ்ரீமத் பாகவதம் மற்றும் ஶ்ரீதேவி பாகவதம் தனியாக இருக்கும் பட்சத்தில், ஜைன புராணம், பௌத்த புராணம் எனு கூட தனியாக எழுதி வைத்துக் கொள்ளலாம். ஆனால், இந்து புராணங்களில் காணப்படுவதால், இடைச்செருகல் என்று தாராளமாகவே புலப்படுகிறது.

Imitating Krishna, Buddha and Mahavira

புராணங்களில் எப்படி அதிகமான ஆபாசங்கள் புகுந்தன?[3]: இந்துப்புராணங்கள் திருத்தப்பட்ட நிலையில், கிருஷ்ணர் மட்டுமல்ல, மற்ற இந்துக்கடவுளர்களும் தூஷிக்கப்பட்டனர். அதாவது, சிவா, விஷ்ணு மற்ற புராணங்களிலும் அக்காலத்தில் இடைசெருகல்கள் செய்யப்பட்டன. 18 புராணங்கள் தவிர மற்ற புராணங்கள் உருவாக்கப்பட்டது, ஏற்கெனவே எடுத்துக் காட்டப் பட்டது. ஷட்மத ஒற்றுமை பேணப்பட்டு, ஒழுங்குப்படுத்தும் நிலை தாண்டிய பிறகு, ஜைனம்-பௌத்தம் தேய்ந்து, முகமதியம் வந்த பிறகு இத்தகைய பிறழ்சிகள் தோன்றின என்பது கவனிக்கத் தக்கது. முகமதியம் வளர்க்கப்பட்ட போது, இடைக்காலத்தில் தான் மறுபடியும் பௌத்த-ஜைனர்களால் புது திரிபுகள், பிறழ்சிகள், ஓவ்வாமைகள் உருவாக்கப்பட்டு, சேர்க்கப்பட்டன[4]. அக்பர் அவர்களுடன் உரையாடல் நடத்தினார் என்பதும் ஏற்கெனவே எடுத்துக் காட்டப் பட்டது. அதனால் தான், புராணங்களைப் படிக்கும் போது, சம்பந்தமே இல்லாத அத்தகைய கொக்கோக, ஆபசமான விவரங்கள் அங்கங்கு காணப்படுகின்றன. அதை வைத்துக் கொண்டுதான், இந்து-எதிரிகள், குறிப்பாக அடிப்படைவாத கிருத்துவர்கள், முஸ்லிம்கள், போலி நாத்திகர்கள், இக்கால செக்யூலரிஸ்டுகள் முதலியோர் அத்தகைய இடைசெருகல் விவரங்களை வைத்துக் கொண்டு கேலி செய்து வருகின்றனர். ஜைனர்கள் மற்றும் பௌத்தர்கள் செய்ததை, முகமதியர்கள் தங்களுக்கே உரித்தான பாணியில் இடைச்செருகல்கள் செய்தனர். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில், சரித்திரத்தன்மை மற்றும் காலத்தொன்மையினை குறைத்தல் என்ற திட்டத்தில் செயல்பட்டதால், அவர்களும் தங்களுடைய பாணியில் செயல்பட்டனர்.

Atheists exploiting Krishna etc

எதிர்மறைத்துவம், வில்லன்வில்லித்துவம், பொது மக்களால் விரும்பப் படுவதில்லை: இன்று கூட நாத்திகர், இந்துவிரோதிகள் தாம், இந்துகடவுளர்கள் போன்று சித்தரிக்கப் பட்டு “கட்-அவுட் / பேனர்” வைத்துக் கொள்கின்றனர். இந்துக்கள் யாரும் தமது நம்பிக்கை-எதிர்ப்பாளர்களுடன் சம்பந்தப் படுத்தி பார்க்கவோ, விரும்புவதோ இல்லை. இந்து நம்பிக்கையாளர்கள் யாரும், தாங்கள் ராவணன், கும்பகர்ணன், சகுனி, துரியோதனன், துச்சாதனன், என்றெல்லாம் பெயர்களை வைத்துக் கொள்வதில்லை. அதாவது, மனோதத்துவ ரீதியில் கவனித்தால் கூட அத்தகைய எதிர்மறை குணாதிசய பாத்திரங்களை பொது மக்கள் விரும்புவதில்லை என்று தெரிகிறது. அதே போல பெண்களும் கூனி, சூர்ப்பனகை, மண்டோதரி, போன்ற பெயர்களை வைத்துக் கொள்வதில்லை. அதாவது, சமூகத்தில் “நல்லது-கெட்டது” எது என்பது தெரிந்தே இருக்கிறது. இல்லையென்றால், சமூகத்தில் எந்த ஒழுக்கமோ, கட்டுப்பாடோ இருக்காது. இன்றைக்கு சட்டங்கள், நெறிமுறை அமூல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள் அவற்றை நன்றாகவே எடுத்துக் காட்டுகின்றன.

Kopika vastra harana - Raja Ravi Varma- wrong interpretation-3

ஜைன-பௌத்த அரசாதிக்கம் இருந்த காலத்தில், இடைச்செருகல்கள், போலி புராணங்கள் உருவாகின: ஆகவே, ஜைன-பௌத்தர் சாக்த வழிபாட்டினை ஏற்றுக் கொண்டு, சமரசம் செய்து கொண்டதால், இக்குழுக்கள் கிருஷ்ணரை எதிர்ப்பது சுலபமாகி விட்டது. அவர்கள் [ஜைன-பௌத்தர்கள்] ஆட்சியாளர்கள் ஆதிக்கத்தில் இருந்தபோது, பாடசாலைகளும் அவர்கள் கைகளில் இருந்ததால், ஓலைச்சுவடிகளில் மாற்றங்களை செய்தனர். ராமாயணத்தை மாற்றி புது ராமாயணங்கள் உருவாக்கப் பட்டன. ஜைன-பௌத்த புராணங்கள் உருவாகின. இதனால், சுலோகங்களின் எண்ணிக்கை அதிகமானதுடன், இத்தகைய குழப்பங்களும் ஏற்பட்டன. பாகவத புராணத்தின் காலம் 4-6ம் நூற்றாண்டுகள் என்று குறிக்கப் படுகின்றன. ஆகவே, ஜைன-பௌத்தர் ஒரு பக்கம், சாக்தர் இன்னொரு பக்கம், கிருஷ்ண வழிபாட்டை எதிர்த்துள்ளனர், பிரச்சாரம் செய்துள்ளனர் என்று தெருகிறது. இப்பொழுது கூட, ஶ்ரீமத் பாகவதம், ஒரு போலிநூல் என்று வாதிடும் ஆட்களும் உள்ளனர். போலி நூல் என்றால், நாத்திக-இந்துவிரோதிகளுக்கு பிரச்சினையே இல்லாமல் போய்விடும். இருப்பினும், அத்தகையய அவதூறு வாதங்கள் தொடர்கின்றன.

© வேதபிரகாஷ்

08-09-2018

Viduthalais blashphemus article-13-08-2017

[1] ஶ்ரீதரர் போன்ற சமஸ்கிருத பண்டிதர்கள் அவ்வாறு எடுத்துக் காட்டுகின்றனர். மேலும் 19வது சுலோகத்திற்குப் பிறகும், 19-38 சுலோகங்கள் மற்ற ஓலைச்சுவடி கட்டுகளில் காணப்படவில்லை என்று எடுத்துக் காட்டுகின்றனர்.

  1. M. Sanyal, The Srimad Bhagavatam of Krishna-Dwaipayana Vyasa, Munshiram Manohrlal Publishers, New Delhi, Vol.II, Chapt.XXII, pp. 90-94

[2]  Ravi Gupta and Kenneth Valpey (2013), The Bhagavata Purana, Columbia University Press, , pp. 151-155.

[3] வேதபிரகாஷ், குடும்ப உறவுகள் ஆண்பெண் உறவு, பாசபந்தங்களை பேணுதல்அவற்றிற்கேற்றபடி நூல்கள் வெளிப்படுத்துகின்றனவா, இல்லையா?, [அக்பர், தீன் இலாஹி மற்றும் இஸ்லாத்துக்கு சாதகமாக இந்து நூல்கள் திருத்தப்பட்டது, மாற்றப்பட்டது மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டது (14)].

[4] https://indianhistoriography.wordpress.com/2015/06/29/hindu-society-depicted-by-the-religious-books-and-hindus-cannot-contradict/