வைஷ்ணவர்களின் உதவியுடன் வளர்ந்து, வளர்த்த கடாவை முட்டியது போல, முட்டியுள்ள ஜாகிர் உசேன்! (4)
வைணவர்களின் உதவியுடன் கோவில்களில் நுழைந்தது: ஶ்ரீரங்கம், ஶ்ரீவில்லிபுத்தூர் கோவில்களுக்குள் நுழைந்து போட்டோ எடுத்துக் கொண்டுள்ளான். பெருமையாக சமூக ஊடகங்களில் போட்டுக் கொண்டுள்ளான். இந்த மாதிரி போட்டோ எடுத்துக் கொள்ள யார் அனுமதி கொடுத்தது? சாதாரண பக்தன் எடுக்க ஆசைப் பட்டால், எடுக்கக் கூடாது என்கிறார்கள்! பிறகு இந்த பெரியாரிஸ்ட், நாத்திக-வேடதாரி, நாமதாரி எப்படி?????????????ஶ்ரீரங்கநாதனுக்கு நாத்திக / பெரியாரிஸ்ட் குண்டு வைக்காமல் இருந்தால் சரி என்று தோன்றுகிறது! நல்ல வேளை அண்ணா அறிவலத்திற்குள் சென்ற போது, அங்கு விரட்டி விட யாரும் இல்லை போலிருக்கிறது! இவன் / ஜாகிர் உஸைன் தற்போது திமுக மீதான பற்றால் அக்கட்சியில் இணைந்திருப்பதாக கூறியுள்ளார். பிறகு பற்று அங்குதானே இருக்கும்! ஶ்ரீரங்கநாதனின் மீது எப்படி இருக்கும்?? ஶ்ரீரங்கநாதனை பீரங்கி வைத்து பிளப்பது எந்நாளோ அந்நாளே பொன்னாள் என்ற கட்சியில் சேர்ந்தது, எந்த பற்றினைக் காட்டுகிறது? இந்துவிரோதிகள் தெளிவாக வேலை செய்கிறார்கள், செய்து கொண்டிருக்கிறார்கள்! ஆனால், அறிவற்ற இந்துக்கள் (முட்டாள் இந்துக்கள் என்றால் கோபம் வருகிறதாம், புகார் வேறு செய்கிறார்கள்) உண்மை அறியாமல், தனித்தையாக கும்பல் சேர்ந்து கொண்டு, குழிபறித்துக் கொண்டிருக்கின்றன… யாரை கண்டிப்பது, எதை எதிர்ப்பது, என்று கூடத் தெரியாமல் அல்லது வேண்டுமென்றே எதிரிகளுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்!
வைஷ்ணவன் என்று சொல்லிக் கொண்டு அரசியலாக்கிய ஜாகிர் உசேன்:
- உண்மையில் மத நல்லிணக்கம் தேவையென்றால், அதனை நல்லவிதமாக, நேரிடையாக, செய்யலாம்!
- அறிக்கைகள் விடுவது, ஆஸ்பத்திரியில் படுத்துக் கொள்வது, போட்டோ எடுத்துக் கொள்வது, ஊடகங்களுக்கு பேட்டிக் கொடுப்பது ………எல்லாம் பக்தி இல்லை……….
- அரசியல்வாதி போல, அரசியலாக்கி, விளம்பரம் தேடும் வேலை தேவையில்லை!
- கலை தெய்வீகம் ஆகும் போது, அது மதிக்கப் படுகிறது, ஆனால், அகம்பாவத்துடன் செயல்படும் பொழுது, பாண்டித்யம் கேள்விக்குறியாகிறது, கேள்விக்கு உட்படுகிறது!
- ஶ்ரீரங்கம் கோவிலுக்குள் யார் வேண்டுமானாலும் செல்லலாமா? இந்துக்கள் மட்டும் அனுமதிக்கப் படுவரா? அல்லது, ஶ்ரீரங்கநாதனை / ஶ்ரீவிஷ்ணுவை நம்புகிறவர்கள் செல்லலாமா?
- முன்பு ஃபிரான்சிஸ் சேவியர் குளூனி விசயத்தில் உண்டான விவகாரம், இப்பொழுது வேறொரு உருவில் எழுதுள்ளது…..
- “ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தொடர்ந்து சென்று வந்துள்ளேன். ரங்கநாதர் மேல் நான் வைத்திருக்கும் பக்தி கோவில் நிர்வாகிகளுக்கும், அர்ச்சகர்களுக்கும் தெரியும். அதனால், ஒரு போதும் அவர்கள் என்னை தடுத்ததில்லை……..”, எனும்பொழுது, முன்னரே பலமுறை சென்றுள்ளது தெரிகிறது…..
- பிறகு, அமைதியாக சென்று வந்திருக்கலாம்…..படோபடத்துடன் விளம்பரம் செய்யும் நோக்கம் தேவையில்லை!
- “……எனவே, இந்திய இறையாண்மைக்கும், மத நல்லிணக்கத்திற்கும் எதிராக செயல்பட்ட ரங்கராஜன் நரசிம்மன் மீது காவல் துறையும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்,”. இவ்வாறு அவர் கூறினார், என்பது பக்தர் போல சொல்லவில்லை, ஏதோ அரசியல்வாதி தோரணைதான் வெளிப்படுகிறது…………….
மக்களே !கொரோனாவ விட கொடுமையானத பாத்திருக்கீங்களா ???பாருங்க !! என்னத்த சொல்ல. யப்பா சாமி , உன் ரீலு அந்து போய் ரொம்ப நாளாச்சுடா !!பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு இருக்கணும் …மோடி அரசு போன்ற கேவலமான , கொள்ளைக் கூட்டம் உலகில் வேறெங்கும் இல்லை ; மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா – நின் திருவடியும் திமுகவும்
தமிழ்நாட்டின் காப்பு; India wasted two “Bharat Rathna” on unethical and ruthless personalities #Sachin & #Latha
ஏன் நாத்திகர்கள், பெரியாரிஸ்டுகள், இந்துக்கள்–அல்லாதவர்கள் தடுக்கப் படவேண்டும்?: சட்டரீதியாக இந்துக்கள் அல்லாதவர்கள் கோவில்களுக்குள் செல்லக் கூடாது.
- எஸ்.கே. கிருஷ்னசாமி ஐயங்கார் என்பவரின், “தென்னிந்தியாவும் அதன் மொஹம்மதியர் படையெடுப்பாளர்களும்” (S.K.Krishnasway Iyengar South India and its Mohammedan Invaders) என்ற புத்தகத்தில், சரித்திர ஆதாரங்களுடன், ஶ்ரீரங்கம் கோவில் எவ்வாறு முகமதியர்களால் கொள்ளையடிக்கப் பட்டது, கொள்ளையடிக்கப் பட்டது என்பது விளக்கப் பட்டுள்ளது.
- ஏனெனில், இடைக் காலத்திலிருந்து, துலுக்கர் இக்கோவில் மீது படையெடுத்து, கொள்ளையடித்து, இடித்து நாசமாக்கியுள்ளனர். 150 ஆண்டுகளுக்கு முன்னர் கூட ஐரோப்பியர்களால், பல கொள்ளைகள் நடந்துள்ளன.
- ஒரு பிரெஞ்சு ராணுவ வீரன் ஶ்ரீ ரங்கநாதரின் கண்களை (வைரங்களை) களவாட திட்டம் போட்டான்! ஶ்ரீவைஷ்ணவன் போலவே நாமம்-வேடமிட்டான்! பட்டர்களின் நட்பு நம்பிக்கை பெற்று, வந்து சென்றான், 1747ல் அவன் கர்பகிருகத்தில் நுழைந்து வைரங்களைத் திருடிக் கொண்டான்! ஶ்ரீரங்கநாதரின் ஒரு கண் / வைரம் தான் Orlov / Orloff என்று மிஞ்சியுள்ளது, இரண்டாவது கண் எங்கே போனது தெரியவில்லை! . ஶ்ரீரங்கத்தை ஶ்ரீ ரங்கநாதர் தான் காக்க வேண்டும்! உண்மையான பக்தர்கள் படும் தொந்தரவுகள், அவதிகள், துன்பங்கள்……..
- 1950-70களில் ஶ்ரீரங்க நாதனையும் தில்லை நடராஜனையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ அந்நாளே பொன்னாள் என்றெல்லாம் ஔரங்கசீப் வெறித்தனத்துடன், திராவிடத் தலைவர்கள் பேசியிருக்கின்றனர். அவ்வாறே கொள்ளையடித்துள்ளனர்.
- பெரும்பாலான பக்தர்கள் தமிழகத்திற்கு வெளியிலிருந்து வருகிறார்கள்! பெரிய மதத்தலைவர்கள்-துறவிகள்-ஞானிகளும் வந்திருக்கிறார்கள்!
- ஶ்ரீமத் சங்கரதேவர், சைத்தன்யர், வல்லபாச்சாரியார், குருநானக் என்று பல வந்து ஶ்ரீ ரங்கநாதரை தரிசித்துள்ளனர்!
- எல்லோரும் சிரத்தையுடன் காதலாக கசிந்து கண்ணீர் மல்கி, பக்தியுடன் தம்மையே அர்பணித்துக் கொண்டனர், மக்களுக்கு சேவை செய்தனர்!
- 20-12-2021 அன்று ஒருவர் நான் 1 கோடி ரூபாய் கொடுத்துள்ளேன் என்று அடாவடியாக, கும்பலுடன் கோவிலுக்குள் நுழைந்து கலாட்டா செய்துள்ளார்!
- ஆனால் ரூ 250/- வாங்கிக் கொண்டு பக்தர்களை விரட்டுகிறார்கள், தள்ளுகிறார்கள், ஒருமையில் பேசுகிறார்கள், கதவை சாத்தி அடைக்கிறார்கள்!
- அந்த வைஷ்ணவ துலுக்க கபட வேடதாரி, நாமதாரி, கூத்தாடியும் நான் தங்கம்-வெள்ளி கொடுத்துள்ளேன் என்று பறையடித்து உள்ளே நுழைகிறான்! பிறகு பொய் சொல்லி புகார் கொடுக்கிறான், அதற்கெல்லாம் விளம்பரம் கொடுக்கப் படுகிறது.
- ஆனால், உண்மையான பக்தர்கள் 3 முத 5 மணி வரை வரிசையில் நின்று அவதிபடுவதைப் பற்றி யாரும் கவலைக் கூடப் படுவதாகத் தெரியவில்லை.
© வேதபிரகாஷ்
22-12-2021