பட்டின பிரவேசம், பல்லக்குத் தடை, மதுரை ஆதீனத்தின் பொறுப்பான, கடமை மிக்க பேச்சு – கவனிக்க வேண்டியது– பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை முதல்வரே நேரில் வந்து தலைமை தாங்கி நடத்த வேண்டும்! (2)
பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை முதல்வரே நேரில் வந்து தலைமை தாங்கி நடத்த வேண்டும்!” – மதுரை ஆதீனம்:தருமபுர ஆதீன பட்டின பிரவேச நிகழ்ச்சியை முதல்வர் நேரில் வந்து பார்க்க வேண்டும்[1]. சைவத்தையும், தமிழையும் தருமபுர ஆதீனம் பாதுகாத்து வருகிறார். பட்டின பிரவேசத்தை நடத்த முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன். உடன்படவில்லை என்றால் சொக்கநாதரிடம் செல்வேன்[2]. அரசியல் வேறு ஆன்மிகம் வேறு. நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பேன்[3]. உயிரே போனாலும் பரவாயில்லை[4]. பாரம்பர்யமாக நடைபெறும் பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை நடத்த அரசு உதவி செய்ய வேண்டும்[5]. சிலர் எதிர்ப்பதற்காக பாரம்பர்ய நிகழ்வை எப்படி தடை செய்யலாம்[6]. மனிதர்களை மனிதர்களே தூக்குவது இல்லை[7], இது குருவை சிஷ்யர்கள் தூக்கிச்செல்கிறோம்[8]. திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கக்கூடாது,” என்றார். ஆனால், 03-05-2022, விடுதலையில், “திராவிடக்கழக முயற்ச்சிக்கு வெற்றி,” என்று பெருமையாக செய்தி வெளியிட்டது. முதல்வர் வருவாரா என்பதெல்லாம் சந்தேகம் தான்.
திராவிடக் கட்சிகள் சேர்ந்து திட்டம் போட்டு வேலை செய்தது: வலுக்கட்டாயமாக வேலை செய்ய வற்புருத்துவது, கொத்தடிமை போன்று வேலை வாங்குவதை, பல்லக்குத் தூக்குவதுடன் ஒப்பிட முடியாது. இது வேண்டுமென்றே திரிபு விளக்கம் கொடுத்து, திகவினர் புகார் கொடுத்து, அதனை போலீஸார் முடிவெடுத்து “சட்டம் ஒழுங்கு பிரச்சினை” நிலை உண்டாகும் என்று தீர்மானித்தது, பிறகு கோட்டாட்சியர் ஆணையிட்டது எல்லாமே சாதாரண நிகழ்வுகள் அல்ல. நிச்சயமாக அரசு ஆதரவுடன், வேறெந்த உள்நோக்கத்துடன், செயல்பட்டு, இப்பிரச்சினை மூலம் பலன் தேட அல்லது அரசியல் அதயம் தேட முயலும் திட்டம் என்றே தெரிகிறது. தொடர்ந்து திராவிடர் கழக உதிரிகள், வகையறாக்கள், கம்யூனிஸ்டுகள், இந்துவிரோதிகள் தான், இந்த ஆர்பாட்டங்களில் கலந்து கொள்கிறார்கள். கருப்புக் கொடி போராட்டம் போர்வையில் கழிகள், கொம்புகள், கட்டைகள், பேனர்கள் எல்லாம் எடுத்து வந்து, கூட்டமாக வருகின்றனர். அவர்களைச் சுற்றி தான் பொலீஸார் நிற்கின்றனர். அவர்களை அனுமதித்து, பிறகு அவர்கள் சட்டமீறல்களில் ஈடுபடும் போது, தடுக்கின்றனர், கைது செய்கின்றனர். ஆனால், ஏற்கெனவே அவர்களது பின்புலங்கள் அறிந்த நிலையில், முன்னரே கைது செய்யப் பட்டால், ஒன்றுமே நடக்காது. கவர்னர் விசயத்தில்கூட ஒன்றும் நடந்திருக்காது. 04-05-2022ல் முரசொலியில், 03-05-2022ல் விடுதலையில் வந்ததை அப்படியே போட்டிருக்கிறது. அதாவது, இந்த நாடகத்திற்கான, கதை, வசனம் எல்லாம் முன்னமே தயாரிக்கப் பட்டு விட்டது. பிறகு, அரசியல், அதிகாரம் என்ற ரீதியில் அமூல் படுத்தப் பட்டுள்ளது.
டோலி, மலையேறும் வசதி தமிழகத்திலேயே உள்ளது: டோலி (doli) என்பது பல்லக்கைப் போன்ற மனிதர்களின் துணையோடு பயணிக்கும் ஓர் இருக்கை அமைப்பு ஆகும். சாலைப் போக்குவரத்து வசதியற்ற மலைப்பாங்கான பகுதிகளில் நடக்க இயலாதவர்களும், வயதானவர்களும் பயணிக்க இதைப் பயன்படுத்துகின்றனர். இந்த டோலியானது இரு மூங்கில் கழிகளை முதன்மையாக கொண்டு குறைந்த எடையில் அமைக்கப்படுகிறது. இதில் பயணிப்பவர் அமர இதில் இருக்கைவசதி இருக்கும். என்றாலும் இதில் சிவிகை போன்று மேற்கூரையோடு வசதியாக இருக்காது. இதில் பயணிப்பவர் மேட்டில் செல்லும்போது முன்புறம் சாய்த்தும், இறக்கத்தில் இறங்கும்போது பின்பக்கம் சாய்ந்தும் சுமப்பவர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பர். இதை நான்குபேர் சுமந்து செல்வர். இந்த டோலி பயணமானது சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு செல்ல பலர் பயன்படுத்துகின்றனர். இப்பொழுது, சதுரகிரி கோவிலுக்குச் செல்லவும் இவ்வசதி செய்யப் பட்டுள்ளது.
04-05-2022 அன்று சட்டசபையில் தடையை நீக்குமாறு எதிர்கட்சித் தலைவர் பேசியது: சட்டசபையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரமில்லா நேரத்தில் பேசியபோது கூறியதாவது[9]: “அரசின் தடையை அறிந்த, ஆண்டாண்டு காலமாக பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில் ஆதீனத்தில் வசித்து வரும் பல்லக்கு தூக்கும் 72 பேரும் நாங்கள் எங்கள் விருப்பப்படிதான் பல்லக்கு தூக்குகிறோம். எனவே பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது….விளையாட்டில் வெற்றி பெற்ற வீரர்களை ரசிகர்களும், தேர்தல்களில் வெற்றிபெற்ற வெற்றி வேட்பாளர்களை தொண்டர்களும், என்று வெற்றி பெற்றவர்களை தொண்டர்களும், ரசிகர்களும் தோளில் தூக்கி கொண்டாடுவதை அனைவரும் பார்க்கிறோம். எனவே இதில் மரியாதை குறைவு என்று எதுவும் கிடையாது. ஏன் கடந்தாண்டுகளில் காவல்துறை தலைவர் பணி ஓய்வு பெறும் நாளன்று, அவர்களின் பிரிவு உபசார நாளன்று அவரது காரை இந்திய காவல்பணி அதிகாரிகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கயிற்றால் சிறிது தூரம் இழுத்து செல்வதை அனைத்து ஊடகங்களிலும் நாம் பார்த்திருக்கிறோம். கவுரவப்படுத்தும் நிகழ்ச்சி யாகத்தான் கருதுகிறோம்……..இந்திய அரசியலமைப்பு பிரிவு 25, 26ன் படி, வழங்கியுள்ள மத சுதந்திர உரிமை அடிப்படையில் தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் பட்டினப் பிரவேசம் செய்வதற்கு தடை விதிக்க முடியாது என்பதை இந்த அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். மேலும் மயிலாடுதுறை மாவட்டம் புதிதாக உருவக்கப்படும் என்று அறிவித்தவுடன், புதிய மாவட்ட நிர்வாகத்திற்கு தேவைப்படும் அலுவலகங்கள், மருத்துவக் கல்லூரி, காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் கட்ட இடம் வேண்டும் என்றவுடன், 60 ஏக்கர் நிலத்தை உடனடியாக வழங்கியது இந்த தருமபுரம் ஆதீனம் என்பதை இங்கு நினைவு படுத்த கடமைப்பட்டுள்ளேன். எனவே பட்டினப் பிரவேச நிகழ்ச்சி நடைபெற வேண்டுமென்று பக்தர்களும், அப்பகுதி மக்களும் மிகவும் எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். எனவே ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் பட்டினப் பிரவேசம் செய்யும் நிகழ்ச்சிக்கு இந்த அரசு அனுமதி அளிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்,” இவ்வாறு அவர் பேசினார்[10].
© வேதபிரகாஷ்
04-05-2022
[1] தினமலர், உயிரே போனாலும் தருமபுர ஆதீனம் பல்லக்கை நான் சுமப்பேன்: மதுரை ஆதீனம் ஆவேசம், Updated : மே 03, 2022 13:15 | Added : மே 03, 2022 12:12.
[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=3021459
[3] தினத்தந்தி, “உயிரைக் கொடுத்தாவது, பிரவேசத்தை நடத்துவோம்” – மதுரை ஆதீனம் பேட்டி, பதிவு: மே 03, 2022 12:02 PM.
[4] https://www.dailythanthi.com/News/State/2022/05/03120252/Giving-life-we-will-hold-the-entrance–Madurai-Aadeenam.vpf
[5] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், “உயிரே போனாலும் நடத்திக்காட்டுவோம்..!” ஸ்டாலின் அரசுக்கு மதுரை ஆதீனம் சவால்..!, Raghupati R, Tamilnadu, First Published May 3, 2022, 4:28 PM IST; Last Updated May 3, 2022, 4:28 PM IST.
[6] https://tamil.asianetnews.com/politics/madurai-adheenam-has-warning-to-tamilnadu-cm-mk-stalin-in-mayiladuthurai-dharmapuram-festival-ban-rbaztc
[7] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், உயிரே போனாலும் பிரவேசத்தை நடத்துவோம்… தடைக்கு ஆளுனரே காரணம் – மதுரை ஆதீனம், Written by WebDesk, May 3, 2022 1:59:39 pm.
[8] https://tamil.indianexpress.com/tamilnadu/dharmapuram-aadheenam-issue-madurai-aadheenam-press-meet-449283/
[9] மாலைமலர், தருமபுரம் ஆதீனம் பல்லக்கு நிகழ்ச்சியை அனுமதிக்க வேண்டும்– சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல், பதிவு: மே 04, 2022 14:05 IST.
[10] https://www.maalaimalar.com/news/district/2022/05/04140525/3739578/Tamil-News-Dharmapuram-adheenam-Pattina-Pravesam-issue.vpf