Posts Tagged ‘மோடி’

மனித நேய மக்கள் கட்சி வைத்த பதாகை, எதிர்ப்பு தெரிவித்த பிஜேபி, வருத்தம் தெரிவித்த கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா!

ஜூலை 30, 2023

மனித நேய மக்கள் கட்சி வைத்த பதாகை, எதிர்ப்பு தெரிவித்த பிஜேபி, வருத்தம் தெரிவித்த கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா!

மணிப்பூர் பிரச்சினை தமிழகத்தில் அரசியலாக்கப் படுவது: மணிப்பூர் பெண்கள் விவகாரத்தை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி வைத்துள்ள பேனர் சர்ச்சையை ஏஎற்படுத்தியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி இனக்கலவரம் வெடித்தது. அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பழங்குடி சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி ஆகிய சிறுபான்மை சமூகங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் வெடித்த வன்முறை காரணமாக அம்மாநிலம் கலவர பூமியாக காட்சியளிக்கிறது. இதைப் பற்றி தினமும் இணைதளங்களில் விவாதங்களும் நடந்து வருகின்றன. இந்த பிரச்சினை சம்பந்தப் பட்டு, கருத்துத் தெரிவித்த பத்ரி சேஷாத்ரி என்பவர் கைது செய்யப் பட்டுள்ளார். அந்நிலையில், மனித நேய மக்கள் கட்சி இவ்வாறு அரசியல் மற்றும் மதரீதியில் பதாகை வைத்துள்ளது திகைப்பாக இருக்கிறது.

தமிழக முஸ்லிம் கட்சிக்கு மணிப்பூர் பழங்குடி பிரச்சினை இவ்வளவு நாட்கள் தெரியாமல் இருந்தது ஏன், எப்படி?: இங்கு பழங்குடியினர், பட்டியல், பழங்குடியினர் பட்டியல், கிறிஸ்தவர் எதிர்ப்பு முதலிய விசயங்களைப் பற்றி விவாதிக்காமல் இருக்கின்றார்கள். பர்மா / மியாம்பாரிலிருந்து இந்தியாவில் அந்நாட்டினர் நுழைந்து கொண்டே இருக்கிறார்கள். ரோஹிங்யா முஸ்லிம்கள் நுழைவது தெரிந்த விசயமாகி விட்டது. அதை வைத்து தான் மேற்கு வங்காளம், அசாம் போன்ற மாநிலங்களில் முஸ்லிம் அரசியல் நடத்தப் படுகிறது. இங்கு, கிறிஸ்தவர்களாக பழங்குடியினர் இருக்கின்றனர். அதே நேரத்தில் கிறிஸ்தவர் அல்லாத இந்துக்களும் பழங்குடிகளாக இருக்கின்றனர். இதனால், அவர்களுக்கும் எஸ்.டி அந்தஸ்து கொடுக்கவேண்டும் எனும்பொழுது, அதில் தான் இப்பிரச்சினை வந்துள்ளது. அதை ஏன் இன்னொரு பழங்குடி எதிர்க்க வேண்டும், அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினை மதமா, மொழியா, கலாச்சாரமா அல்லது எது. ஆனால், இதைப் பற்றி விவாதிக்காமல் குறிப்பிட்ட சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய எதிர்கட்சியினர் தீர்மானித்து, அதை இங்கு தமிழகத்தில் ஒரு முஸ்லிம் கட்சி கையாள்வது திகைப்பாக இருக்கிறது.

குழப்பமான, சிக்கலான, ஜாக்கிரதையாக அணுக வேண்டியுள்ள மணிப்பூர் பிரச்சினை: மணிப்பூர் வன்முறையில் சிக்கி இதுவரை 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். அம்மாநிலத்தை விட்டு வெளியேறி அண்டை மாநிலங்களில் பலரும் சென்று வருகின்றனர். இதனிடையே, கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாவட்டத்தின் காங்க்போக்பி மாவட்டத்தில், குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பெண்கள் வன்முறை கும்பலால் கடத்தப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்டு அவமதிப்பு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 19 வயதுள்ள ஒரு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதைத் தட்டிக் கேட்ட அப்பெண்ணின் சகோதரர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யபட்டுள்ளார். மேலும் ஒரு இளைஞரும் கொல்லப்பட்டுள்ளார். அம்மாநில பிரச்சினைகள் பலவிதங்களில் விவரிக்கப் பட்டு வருகின்றன. பலவிசயங்களில் வெளிப்படையாக விவாதிக்கப் படும் நிலையிலுமில்லை எனத்தெரிகிறது.

ராமன் லட்சுமணனாக மோடியும், அமித்ஷாவும் சிரித்தப்படி நிற்கும் பேனரை வைக்கைப் பட்டது:  கடந்த மே மாதம் 4ஆம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பால் அருகே நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மணிப்பூர் விவகாரத்தை கண்டிக்கும் விதமாக, நிர்வாணமாக வேதனையுடன் நிற்கும் பெண்ணின் அங்கங்களை தேசியக் கொடிக் கொண்டும் மறைத்து, அவளின் அருகில் ராமன் லட்சுமணனாக மோடியும், அமித்ஷாவும் சிரித்தப்படி நிற்கும் பேனரை வைத்துள்ளனர். மனித நேய மக்கள் கட்சி ஒரு முஸ்லிம் கட்சி, அதற்கும் இதற்கும் இப்பொழுது என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. இருப்பினும், ஆளும் திமுகவுடன் கூட்டு சேர்ந்து, “திராவிடத்துவ” சித்தாந்தத்தை ஆதரிப்பது போலக் காட்டிக் கொள்வதால், அது இவ்வாறு அரசியல் மற்றும் மதம் என்று இரண்டையும் சேர்த்து, இத்தகைய பதாகை வைப்பது கேள்விக்குரியாகியுள்ளது.

பிஜேபி எதிர்ப்புத் தெரிவித்தது, போலீஸார் பதாகையை அப்புறப்படுத்தியது: திண்டுக்கல் வத்தலக்குண்டுவை சேர்ந்த பா.ஜ.க.வினர் 29-07-2023 அன்று வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். வத்தலக்குண்டுவில், காளியம்மன் கோவில் பகுதியில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக பேனர் வைத்துள்ளது. அந்த பேனரில் ராமர், சீதா, லட்சுமணன் போன்று சித்தரித்து இருப்பதாகவும், தேசியக்கொடியை அவமதித்து இருப்பதாகவும் கூறி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காளியம்மன் கோவில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனரை போலீசார் அகற்றினர்[1]. அதன்பின்னர் பா.ஜ.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது[2]. இங்கும் போலீஸார் தான் அதனை அப்புறப் படுத்தியுள்ளார்கள் என்று தெரிகிறது. மனித நேய மக்கள் கட்சியினர் அப்புறப் படுத்தவில்லை என்றாகிறது.

பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி மனித நேய மக்கள் கட்சி தடை செய்யப் பட வேண்டும் என்று அறிக்கை விடுத்தது: இந்த நிலையில், மணிப்பூர் பெண்கள் விவகாரத்தை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சார்பில் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது[3]. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் அக்கட்சி இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி, நமது நாட்டையும், இந்து மதத்தை அவமதிக்கும் செயல் என அந்த பேனருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்[4]. இந்த பேனர் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இதனைச் செய்த மனிதநேய மக்கள் கட்சியைத் தமிழகத்தில் இருந்து தடை செய்ய வேண்டும் ட்விட்டரில் பாஜகவினர் கொந்தளித்து வருகின்றனர். இது தொடர்பாக பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “மனிதநேய மக்கள் கட்சி என்ற பெயரில் தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் இந்த செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்வதோடு, மனித நேய மக்கள் கட்சியை உடனடியாக தடை செய்ய வேண்டும்[5]. முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களின் உருவத்தை கேலி சித்திரம் வரைந்ததற்காக சிலரை செய்யும் காவல் துறை, இந்து கடவுளை, நாட்டின் பிரதமரை கேலி சித்திரம் மூலம் அவதூறு செய்யும் பதர்களைக் கைது செய்யாதது ஏன்? மதக் கலவரத்திற்கு வித்திடும் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகளை, தலைவர்களை கைது செய்ய தயங்குவது ஏன்?,” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்[6].

மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா அருத்தம் தெரிவித்தது: முன்னதாக, இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்கள் குழு வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் மணிப்பூர் மாநிலத்துக்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது. இதுகுறித்து இரு அவைகளிலும் விவாதித்து பிரதமர் மோடி விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது[7]. இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்[8], “திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் மணிப்பூர் தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்காக ஒரு விரும்பதகாத விளம்பர தட்டி ஒன்று கட்சியை சேர்ந்த ஒரு சிலரால் வைக்கப்பட்டிருந்தது[9]. இப்படியான ஒரு விளம்பர தட்டி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிந்ததும் மேல் நிலை நிர்வாகிகள் இத்தட்டியை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுத்தார்கள்[10]. தட்டி வைக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்தில்.  போராட்டம் தொடங்குவதற்கு முன்பே இந்த விரும்பதகாத தட்டி அப்புறப்படுத்தப்பட்டது[11]. மனிதநேய மக்கள் கட்சி எந்த மதத்தினரின் உள்ளங்களையும் புண்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் கட்சியல்ல[12]. இந்த விரும்பத்தகாத தட்டி வைப்பதற்கு காரணமானவர்கள் வன்மையாக கண்டிக்கப்பட்டார்கள்[13]. அவர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விளம்பரத் தட்டியால் எவரது உணர்வு பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன்,” என ஜவாஹிருல்லா கூறியுள்ளார்[14].  

பிஜேபி எதிர்ப்பு அரசியல்-இந்துஎதிர்ப்பு: அமித் ஷா வந்துள்ள நிலையில், இத்தகைய நிகழ்ச்சி நடந்துள்ளது. நிச்சயமாக, தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளுக்கு மணிப்பூர் பிரச்சினை முழுவதுமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்பொழுது, எதிர்க்கட்சியினர் இதனை வைத்து அர்சியல் செய்யும் நிலையில், மனிதநேய மக்கள் கட்சியினருக்கு கற்பனை அவ்வாறு வேலை செய்து, அரசியல் மற்றும் மதரீதியில் தாக்க அத்தகைய சித்தரிப்பைச் செய்துள்ளனர். முன்பு பெரியார், திகவினர் தயாரித்த ஆபாச சித்திரங்கள் போலத்தான் இதுவும் உள்ளது. அதனால், தலைவரும் இரச்சினை பெரிதாகும் முன்பே, ஜவாஹிருல்லா எம்எல்ஏ வருத்தம் தெரிவித்துள்ளார். இந்துக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இனிமேல் அரசியல்வாதிகள் தங்களுக்குள் சண்டைப் போட்டுக் கொள்வதானால், இந்து மத சின்னங்களை தவறாகப் பயன் படுத்தக் கூடாது என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

கவனிக்க வேண்டிய விசயங்கள்: ஒரு சாதாரண இந்து என்ற முறையில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்:

  1. வத்தலகுண்டுவில் வைக்கப் பட்ட சர்ச்சைக்குரிய பதாகையை அப்புறப் படுத்தியது மனிதநேய மக்கள் கட்சி மேல் நிலை நிர்வாகிகளா, போலீஸாரா?
  2. இருவரும் அப்புறப் படுத்தினர் என்றால் பல பதாகைகள் வைக்கப் பட்டது போலும். அத்தகைய சித்திரிப்பு எவ்வாறு வந்தது?
  3. முன்பு பெரியார், திகவினரின் சித்தரிப்பு போன்றுள்ள இது அத்தகையதா? அரசியலுடன் ஏன் மதத்தை சம்பந்தடுத்தப் படுத்துகின்றனர்?
  4. அப்படியென்றால் மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா பிரச்சினை பெரிதாகும் முன்னர் அறிக்கை வெளியிட்டுள்ளார்!
  5. ஆக இனி தமிழக அரசியல் கட்சிகள் பிஜேபி எதிர்ப்பு, இந்து எதிர்ப்பாக இருக்கக் கூடாது என்பதைப் புரிந்து கொண்டிருப்பர்!
  6. மலேசிய இந்துக்கள் மற்றும் வத்தலகுண்டு இந்துக்கள், இந்து துவேச-எதிர்ப்பாளர்களுக்கு பாடம் போதித்துள்ளனர்.
  7. எம்.பி, எம்.எல்.ஏ என்றெல்லாம் இருந்தாலும், இனி இந்துவிரோத பேச்சு, செயல், விமர்சனம் என்றெல்லாம் வரும் போது யோசிப்பர் எனலாம்!
  8. பெரியாரிஸம், நாத்திகம், செக்யூலரிஸம் போன்ற போர்வைகளில் தொடர்ந்து இந்துமதத்தைத் தாக்கினால் இந்துக்கள் தட்டிக் கேட்கவேண்டும்.
  9. ஜவாஹிருல்லா இந்த விளம்பரத் தட்டியால் எவரது உணர்வு பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்!
  10. இது போல இனி திருமா அல்லது வீரமணி போன்றோரும் தங்கள் இஷ்டத்திற்கு பேசினால், எழுதினால் புகார் அளிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

30-07-2023


[1]  தினத்தந்தி, போலீஸ் நிலையத்தை பா...வினர் முற்றுகை, தினத்தந்தி ஜூலை 29, 1:30 am (Updated: ஜூலை 29, 1:30 am)

[2] https://www.dailythanthi.com/News/State/bjp-lay-siege-to-the-police-station-1018247

[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், மணிப்பூர் பெண்கள் விவகாரம்: மனித நேய மக்கள் கட்சி பேனருக்கு எதிர்ப்பு!, Manikanda Prabu, First Published Jul 30, 2023, 12:54 PM IST; Last Updated Jul 30, 2023, 12:54 PM IST,

[4] https://tamil.asianetnews.com/tamilnadu/condemns-over-manithaneya-makkal-katchi-poster-opposes-manipur-women-issue-ryllwn

[5] காமதேனு, சர்ச்சை பேனர்மனிதநேய மக்கள் கட்சியைத் தடை செய்ய கோரும் பாஜக!, Updated on : 29 Jul 2023, 9:15 pm

[6] https://kamadenu.hindutamil.in/politics/tnbjp-said-manitha-neya-makkal-party-should-be-banned

[7] தமிழ்.ஒன்.இந்தியா, ராமர், லட்சுமணனாக மோடி, அமித்ஷா.. வருத்தம் தெரிவித்தார் ஜவாஹிருல்லா! அப்படி என்ன பேனர் அது?, By Noorul Ahamed Jahaber Ali Published: Sunday, July 30, 2023, 9:07 [IST].

[8] https://tamil.oneindia.com/news/chennai/mmk-leader-jawahirullah-said-regret-for-controversial-banner-in-dindugal-525279.html

[9] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், ராமர், லட்சுமணன், மோடி, அமித்ஷா படத்துடன் போஸ்டர்: எதிர்த்த பா..; வருத்தம் தெரிவித்த ஜவாஹிருல்லா, Written by WebDesk

July 30, 2023 14:10 IST.

[10] https://tamil.indianexpress.com/tamilnadu/narayanan-thirupathy-condems-manithaneya-makkal-katchi-jawahirullah-asks-sorry-poster-731529/

[11] தமிழ்.வெ.துனியா, சர்ச்சைக்குரிய விளம்பர பதாகை: மனிதநேய மக்கள் கட்சி விளக்கம்..!, Written By Siva Last Updated : ஞாயிறு, 30 ஜூலை 2023 (14:31 IST).

[12] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/manitha-neya-makkal-katchi-explain-about-controversy-banner-123073000035_1.html

[13] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், மதக்கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் மமக! கொதிக்கும் பாஜக! வருத்தம் தெரிவித்த ஜவாஹிருல்லா! நடந்தது என்ன?, vinoth kumar, First Published Jul 30, 2023, 8:42 AM IST; Last Updated Jul 30, 2023, 8:49 AM IST.

[14] https://tamil.asianetnews.com/politics/controversy-banner-jawahirullah-expressed-regret-ryla8i

மதுரை ஆதீனம் விநாயக சதுர்த்தி பற்றி கருத்துத் தெரிவித்தது – விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்றது – ஸ்டாலினின் நூறு நாட்கள் ஆட்சி பற்றி கருத்து கேட்டபோது, சொல்ல மறுத்தது (2)

செப்ரெம்பர் 7, 2021

மதுரை ஆதீனம் விநாயக சதுர்த்தி பற்றி கருத்துத் தெரிவித்தது – விநாயகர்சதுர்த்திவிழாவைஅரசுஏற்றுநடத்தவேண்டும் என்றது – ஸ்டாலினின்நூறுநாட்கள்ஆட்சிபற்றிகருத்துகேட்டபோது,  சொல்லமறுத்தது (2)

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: தொடர்ந்து ஆதீனம் பேசியது, “படிக்கும் மாணவர்கள் பாஸ் மார்க் வாங்குகிறார்களோ  இல்லையோ டாஸ்மார்க் சென்று சரக்கு வாங்குகிறார்கள்[1].  ஆக மது ஒழியப் பட வேண்டும்[2]. பெண்கள் ரோடில் நடமாட முடியவில்லை. நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் அழிந்து கொண்டு வருகிறது[3]. அதை வைத்துத் தான் அரசாங்க நடத்துகிறீர்களே,.. அது தேவையில்லை. இளைய தலைமுறையினரை பாதுகாக்க வேண்டும் என்றால் அரசு மதுபானக் கடைகளை மூட வேண்டும்[4]. மது எதிர்ப்பு போராட்டம் காந்தியடிகள் காலத்திலிருந்தே நடைபெற்றது…  தற்போது நாட்டில் அனைவருக்கும் தேசப்பற்று குறைந்து விட்டது. தெய்வபக்தி பணத்தில் தான் உள்ளது. வஉ.சிதம்பரனாரை போல் தேசப்பற்று இன்றைய இளைஞர்களிடம் இல்லை. இளைஞர்கள் எதையோ இழந்ததைப் போல் அலைகிறார்கள்….சினிமா, அரசியல் இவைத்தான் மாணவர்களை அழிக்கின்றன…..அவர்களை காக்க வேண்டும்…”. இப்படி, ரஜினி ஸ்டைலில் பேசியது, ஊடகக் காரர்களை திகைக்க வைத்தது. ஏனெனில், ஆதினம், மிகத் தெளிவாக, ஒவ்வொரு பிரச்சினைப் பற்றியும் அழகாக எடுத்து, விளக்கினார்.

ஜவர்ஹர்லால் காலத்தில் உண்டான பிரச்சினைகள் நரேந்திர மோடி காலத்தில் தீர்த்து வைக்கப் பட்டன: தொடர்ந்து ஆதீனம் பேசியது, “ஜவர்ஹர்லால் காலத்தில் சைனா போய் விட்டது..காஷ்மீர் பிரச்சினை நிற்கிறதுசைனா அடிக்கடி வாலாட்டிக் கொண்டிருக்கிறான்லடாக்கில் ஊடுருவி ஆக்கிரமித்துக் கொண்டான்….நரேந்திர மோடி வந்து தான் கட்டுப் பாட்டில் வந்ததுசிவபெருமான் இருந்த கைலாசமே கைவிட்டு போய்விட்டது..முன்பெல்லாம் நாம் யாரிடத்திலும் அனுமதி பெற வேண்டாம், சென்று வரலாம். இப்பொழுது அந்த உரிமையைப் பெற்றுக் கொடுத்தவர் நரேந்திர மோடிதான்….மத்திய அரசு நாட்டை பாதுகாத்து வருகிறது. மோடியின் செயலால் இந்திய எல்லைப் பகுதி பாதுகாக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் லடாக் பகுதிபடாக்ஆகியிருக்கும். இப்படி மோடியை ஆதரித்துப் பேசியிருப்பது, திமுக, காங்கிரஸ் போன்ற காட்சியினருக்கு திகைப்பையும், கோபத்தையும் உண்டாக்கி இருக்கிறது. இருப்பினும், மௌனமாக இருப்பது கவனிக்கத் தக்கது.

நித்யானந்தாகை லாஸ்ஆனதால் கைலாசம் சென்றுவிட்டார். நித்யானந்தாவால் எங்கள் குருமகா சன்னிதானத்தை ஒன்றும் செய்ய முடியாது: தொடர்ந்து ஆதீனம் பேசியது,நித்யானந்தாகை லாஸ்ஆனதால் கைலாசம் சென்றுவிட்டார். நித்யானந்தாவால் எங்கள் குருமகா சன்னிதானத்தை ஒன்றும் செய்ய முடியாது. அவருக்கும், எங்கள் குருமகா சன்னிதானத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வெள்ளாளா் சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும். அதற்கு தோ்தல் நேரத்தில் வரும் அரசியல்வாதிகளிடம் கோரிக்கைகளை வைத்து அதை வென்றெடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த சமுதாயத்துக்கு அடையாளம் கிடைக்கும். அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராகலாம் என்ற அறிவிப்பு சரியானது அல்ல,” என்றார். இப்படி “பஞ்ச் டையலாக்” பாணியில் பேசியது, ஊடகக் காரர்களை அதிர வைத்தது. இவ்விழாவில் திமுக அதிமுக மற்றும்  அரசியல் கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினர்கள்.

ஸ்டாலினின் நூறு நாட்கள் ஆட்சி பற்றி கருத்து கேட்டபோது, ஆதீனம் சொல்ல மறுத்தது:  ஸ்டாலினின் நூறு நாட்கள் ஆட்சி பற்றி கருத்து கேட்டபோது, ஆதீனம் சொல்ல மறுத்தது குறிப்பிடத் தக்கது[5]. எல்லா ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிப்பது சரியில்லை என்று கூறினார். குறிப்பிட்ட பாரம்பரியங்கள், பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வந்து கொண்டியிருக்கும் போது, ஆட்சியாளர்கள் அவற்றை மாற்றுவது அல்லது தலையிடுவது கூடாது, என்றார்[6]. அதாவது ஆகம சாஸ்த்திரங்களின் படியும் அவை இல்லாமலும், லட்சக் கணக்கான கோவில்கள் இயங்கி வருகின்றன. அக்கோவில் அர்ச்சகர்கள், குருக்கள், பூஜாரிகள் ஒரே ஜாதியினர் அல்லர், பிராமணர்களும் இல்லை, ஏனெனில், அந்தந்த கடவுள்-தேவதை-ஆகமம் முறைப்படி அவை ஆராதிக்கப் பட்டு வருகின்றன. ஆகவே, அவற்றை அறியாத அரசியல்வாதிகள், குறிப்பாக  நாத்திகர்கள், திராவிடத்துவ வாதிகள், அத்தகைய அரசியல்வாதிகள் இவற்றில் தலையிட்டு மாற்றுவது சீர்குலைப்பதற்கு சமமாகும். அதைத் தான் ஆதீனம் சுருக்கமாக சொல்லியிருக்கிறார்.

ஒரு பிராமணர் அல்லாத மடாதிபதி கருத்துக்களை வெளியிட்டுள்ளது: இது வரை தமிழகத்தில், எந்த மாடாதிபதியும் இந்த அளவுக்கு வெளிப்படையாக கருத்துகளைத் தெரிவித்தது இல்லை எனலாம். அவ்வப்பொழுது சிலர் சில கருத்துக்களை சொல்லியிருந்தாலும், அவை பெரிதாக யாராலும் கவனிக்கப் படவில்லை, எடுத்துக் கொள்ளப் படவில்லை. குன்றக்குடி அடிகள் ஆரம்பித்திலிருந்து திக-திகமுக கட்சிகளுகு ஆதரவாகத்தான் இருந்தார். காஞ்சி மடத்து சங்கராச்சாரியார்கள் கருத்துத் தெரிவித்திருந்தாலும், அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளப் படவில்லை. அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள் என்று இருந்து விட்டார்கள். ஆனால், இப்பொழுது, இக்கருத்துகள், ஒரு பிராமணர் அல்லாத மடாதிபதியிடமிருந்து வெளிப்பட்டுள்ளன. மேலும், அவை, சாதாரண தமிழில், இக்காலத்து இளைஞர்களுக்கு ஏற்ப, அவர்களை ஈர்த்து அடையும் முறையில், “பஞ்ச்-டையலாக்கில்” சொல்லியிருப்பதைக் கவனிக்க வேண்டும். பொதுவாக ஊடகக் காரர்கள் 90% திராவிடத்துவ, கம்யூனிஸ்ட், கிருத்துவ, முகமதிய ஆதரவு கோஷ்டிகள் என்பது நன்றாகத் தெரிந்த விசயமே.

05-09-2021 அன்று பல ஊடகக் காரர்கள் பதிவு செய்தாலும் செய்திகளாக வெளியிடாமல் மறைக்கும் முயற்சிகள்: 05-09-2021 அன்று பேசியதை, பல ஊடகக் காரர்கள் பதிவு செய்தாலும், கொஞ்சம்-கொஞ்சமாகத்தான் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். சன் – குழுமம் ஒட்டு மொத்தமாக, இதனை அமுக்கி விட்டது. எனவே, தமிழகத்தின் திராவிடத்துவ அரசியலில், போலி செக்யூலரிஸ-இந்து விரோதத்துவ நிர்வாகத்தில், கோவில்-மடங்களை சுரண்டி கொள்ளையடித்து வரும் ஊழல் ஆட்சியில், இது ஒரு முக்கியமான நிகழ்வாகும். நிச்சயமாக இதன் தாக்கம் சமூகத்தின் மீது, அரசியல்வாதிகளின் மீது, குறிப்பாக திராவிடத்துவ-நாத்திக சித்தாந்திகளுக்கு, சவாலாக அமையும். இதே போல, மற்ற மடாதிபதிகளும் கருத்துத் தெரிவிக்க ஆரம்பித்து விட்டால், அது ஒரு இயக்கமாகவே ஆகி விடும். இருப்பினும், முந்தைய ஆட்சிகாலங்களில், பலவித முறைகளில் மடாதிபதிகள் கட்டுப் படுத்தப் பட்டுள்ளார்கள். அதே முறையில், இவரும் கட்டுப் படுத்தப் படலாம். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

07-09-2021


[1] நக்கீரன், ”பாஸ் மார்க் எடுக்கிறார்களோ இல்லையோ டாஸ்மாக்கிற்குதான் போகிறார்கள்”- மதுரை ஆதீனம் வேதனை!, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 05/09/2021 (22:28) | Edited on 05/09/2021 (22:36).

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamilnadu-whether-they-take-pass-mark-or-not-they-are-going-tasmak-madurai

[3] பாலிமர் செய்தி, நமது பண்பாடு, கலாச்சாரம், அனைத்தையும் மது சீரழிக்கிறதுமதுரை ஆதீனம், செப்டம்பர் 05, 2021. 07:36:43 PM.

[4] https://www.polimernews.com/dnews/154959

[5] The Hindu, Close down TASMAC outlets: Madurai Adheenam, SPECIAL CORRESPONDENTPARAMAKUDI, SEPTEMBER 05, 2021 21:07 IST; UPDATED: SEPTEMBER 05, 2021 21:11 IST.

[6] He refused t0 comment on the 100-day performance of the DMK government, when asked about his views. The new pontiff felt that it might not be correct to appoint priests from all castes in temples. Certain traditions, which were in vogue from time immemorial, should not be changed or disturbed by the governments, he said.

https://www.thehindu.com/news/cities/Madurai/close-down-tasmac-outlets-madurai-adheenam/article36307904.ece

ஆர்.எஸ்.எஸ்-திக, பிஜேபி-ஈவேரா, முருகன்–பெரியார்: சித்தாந்தப் பிணக்குகள், அரசியல் கணக்குகள், இந்துத்துவக் குழப்பங்கள்

செப்ரெம்பர் 18, 2020

ஆர்.எஸ்.எஸ்-திக, பிஜேபி-ஈவேரா, முருகன்–பெரியார்: சித்தாந்தப் பிணக்குகள், அரசியல் கணக்குகள், இந்துத்துவக் குழப்பங்கள்

 

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் murugan-expresses-wishes-for-evr-17-09-2020-from-puthiya-thalaimurai.jpg

ஆர்.எஸ்.எஸ் / பிஜேபி அரசியல் கூட்டு வைக்கலாம், ஆனால், சித்தாந்தங்க்கள் மோதிக் கொண்டே இருக்கும்: தமிழக அரசியலைப் பற்றி தவறாக, மேலிடத்திற்கு யாரோ, எந்த குழுவோ, கோஷ்டியோ தகவல்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன என்று, பிஜேபி மற்றும் பிஜேபி தலைவர்களின் பேச்சுகள் முதலியவற்றிலிருந்து தெரிய வருகின்றன. முக்கியமாக கீழ்கண்டவை அடையாளம் காணப் படுகின்றன:

  1. அம்பேத்கர் இந்து, அவர் சமஸ்கிருதத்தை ஆதரித்தார்…..போன்ற வாதங்கள் [மூலங்களை ஒழுங்காகப் படிக்காமல், அரைகுறையாக எழுதி பிரசுரிப்பது].
  2. தருண் விஜயின் திருவள்ளுவர் சிலை குழப்பம், சிலை மாறியது முதலியன [இதைப் பற்றி விளக்கமாக எழுதியுள்ளேன்].
  3. அகில ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அகில இந்திய இணை பொதுச்செயலாளர் மன்மோகன் வைத்யா, “பெரியார் கொள்கைக்கும், எங்களுடைய கொள்கைக்கும் உடன்பாடு உள்ளது,” என்று பேசி விளக்கம் அளித்தது [பிளாக்கைப் பார்க்கவும்].
  4. மோடியின், தமிழ் தான் உலகத்தின் மூத்த / தொன்மையான மொழி என்ற பேச்சு [இதற்கு விளக்கம் தேவையில்லை].

எழுபது ஆண்டுகளாக நிலைத்திருக்கும் திராவிடத்துவத்தை உடனடியாக மாற்றி விடுவேன் என்பது, பகல் கனவு தான்.

 

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் l-murugan-wishes-for-evr-in-the-name-of-social-justice-17-09-2020-news-18.jpg

17-09-2020 பாலிமர் செய்தி, எல். முருகனின் வாழ்த்து: 17-09-2020 பாலிமர் டிவியில் வெளிவந்த செய்தியிலிருந்து, பிஜேபி தலைவர் எல். முருகன் பெரியாருக்கு வாழ்த்து சொன்னது, அனைவரையும் திகைக்க வைத்துள்ளது[1]. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபிகாரர்கள் குழம்பிக் கிடக்கிறார்கள்[2]. சமூக ஊடகங்களில் மாற்பட்ட கருத்துகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பிரதமர் நரேந்திரமோடி யின் பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டது[3]. முன்னதாக சென்னை பாண்டிபஜாரில் உள்ள நடைமேடையில் மத்திய அரசின் சாதனைகள் அடங்கிய காணொலியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்[4]. இதில் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அதன் பின்னர் மோடியின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு மாநில மகளிர் அணி சார்பில் 70 செய்யப்பட்டிருந்த கேக்கை வெட்டிக்கொண்டாடினர். அதனை தொடர்ந்து தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில், பாஜகவின் minority morcha என்ற டிவி சானலுக்கான லோகோவை எல்.முருகன் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் murugan-expresses-wishes-for-evr-17-09-2020.jpg


“சமூக நீதிக்காக போராடியவர் பெரியார் அவருக்கு வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை”, எல். முருகன்: பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது[5], “இன்று பலதரபட்ட மக்களும் பாஜகவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன, அதற்கு முழு காரணம் மோடிதான். அவருடைய தூய்மையான ஆட்சிதான் காரணம்,” என்று கூறினார்[6]. மேலும் நீட் தேர்வு மூலம் 13 பேரின் உயிரில் விளையாடியது திமுக தான் எனவும், மாணவர்களின் உயிர் இழப்பிற்கு முழு காரணம் திமுக மட்டும்தான் என குற்றம் சாட்டினார். “இன்று பெரியரின் பிறந்தநாளுக்கு ஏன் நீங்கள் வாழ்த்து தெரிவிக்கவில்லை,” என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “சமூக நீதிக்காக போராடியவர் பெரியார் அவருக்கு வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை என்று தெரிவித்தார்[7]. திராவிடத்தை அழிக்க புதிய கலாச்சாரம் தோன்றி இருக்கிறது,” என்ற துரைமுருகன் கருத்துக்கு பதிலளித்த அவர், “யாருடைய கலாச்சாரத்தையும் நாங்கள் மறைக்கவில்லை எனவும் எங்கள் கலாச்சாரத்தை முன் நிறுத்துகிறோம்,” என்று அவர் கூறினார்[8]. முன்னதாக ராமநாதபுரம் போகலூர் ஒன்றிய திமுக செயலாளர் மற்றும் திமுக ஒன்றிய கவுன்சிலர் கதிரவன் பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார்[9]. இதையே மற்ற ஊடகங்களும் “பி.டி.ஐ” பாணியில் செய்தியை வெளியிட்டுள்ளன[10].

 

இந்தப்  படத்தில் ஒரு வெற்று ஆல்ட் பண்பு உள்ளது; அதன் கோப்பு பெயர் l-murugan-wishes-for-evr-in-the-name-of-social-justice-17-09-2020-asianetnews.jpg

சென்னையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கான நான்கு நாள் மாநாடு நடந்தது–மே 2018: சென்னை, அம்பத்தூரில் உள்ள ஜி.கே.ஷெட்டி விவேகானந்தா பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கான நான்கு நாள் மாநாடு நடந்தது[11]. பயிற்சி வகுப்பை அகில ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அகில இந்திய இணை பொதுச்செயலாளர் மன்மோகன் வைத்யா பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்[12]. அப்போது தமிழக ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பு பிரிவு செயலாளர் நரசிம்மன் உடன் இருந்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு[13]: “பெரியார் கொள்கைக்கும், எங்களுடைய கொள்கைக்கும் உடன்பாடு உள்ளது. அவருடைய கொள்கையான ஏழை, பணக்காரன் வேறுபாடின்றி சமத்துவத்தை கடைப்பிடிப்பது, ஜாதி, மதம் கிடையாது போன்றவற்றை நாங்களும் கடைப்பிடிக்கிறோம். எங்களுக்குள் வேறுபாடு கிடையாது. பிற மாநிலங்களை போல தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ்.க்கு பெரிய ஆதரவு கிடைக்கும் என்பதுடன், தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பலம் பொருந்திய இயக்கமாக மாறும் என்றும் நம்புகிறோம்”.

 

பிஜேபி கவனிக்க வேண்டிய விசயங்கள்:

  1. பிஜேபி ஏற்கெனவே திமுக-அதிமுக என்று மாற்றி-மாற்றி பாராளுமன்ற தேர்தல்களுக்கு கூட்டணி வைத்துள்ளது. வாஜ்பாயி-கருணாநிதி நட்பு, சித்தாந்தங்களில் மோதத்தான் செய்தது.
  2. ஆகவே, இப்பொழுதைய பிஜேபியின் இந்துத்துவ சித்தாந்தம் நீர்க்கப் படும் அல்லது அமுக்கி வாசிக்கப் படும். மேடைகளில் முரண்பாடுகள் வெளிப்படும்.
  3. மாறாக திராவிடத்துவ சிததாந்தத்தை பலவழிகளில் போற்ற வேண்டியிருக்கும் ஈவேரா, அண்ணா, எம்ஜிஆர், ஜெயலிதா, கருணாநிதி சிலைகளுக்கு மாலைகள் போட வேண்டியிருக்கும். ஆனால், திராவிட சித்தாந்திகள் மாற மாட்டார்கள்.
  4. அதனால், தமிழ் தான் உலகத்தின் மூத்த / தொன்மையான மொழி, திருவள்ளுவர், கம்பர் முதலியன போன்றவை இன்னும் தொடரும்.
  5. கருணாநிதி இந்தியில் பாட்டுப் பாடியது போல, மோடியும் திருக்குறள்களை சொல்லிக் கொண்டிருப்பார். முருகனைப் போன்று பெரியாரைப் போற்றவும் செய்வர்.
  6. ஆனால், தமிழ் மக்கள், திராவிட கட்சிகளின் வலைகளில் தான் கட்டுண்டுள்ளன. திமுக-அதிமுக விசுவாசிகள், அபிமானிகள் அதிலிருந்து மீண்டு, பிஜேபியை ஆதரிக்க மாட்டார்கள்.
  7. இந்துவாக இருக்கும் தமிழர் எல்லாம் பிஜேபிக்கு ஓட்டுப் போடமாட்டார்கள்.
  8. திமுக-அதிமுக நிலையை அடைய 5-10 ஆண்டுகள் ஆகலாம். ஆனால், திராவிடத்துவ இந்துத்துவம் அல்லது இந்துத்துவ திராவிடத்துவம் போன்றது உருவாகலாம்.
  9. மத்தியில் 3 மந்திரி கொடுத்தால், இங்கு 10 எம்.எல்.ஏக்கு சீட் கிடைக்கலாம். வெல்வது பிஜேபியின் திறமையாக இருக்கும்.
  10. ஐந்து வருடங்கள் எல்லோரும் நன்றாக அனுபவிக்கலாம்.

 

© வேதபிரகாஷ்

18-09-2020

[1] பாலிமர் செய்தி, சமூகநீதிக்காக போராடியவர் பெரியார்… வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை – பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன், செப்யம்பர் 17, 2020, 02.46:40 PM.

[2] https://www.polimernews.com/dnews/121040/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D,-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88–%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D

[3] மின்னம்பலம், சமூகநீதிக்காக போராடியவர் பெரியார்: எல்.முருகன் வாழ்த்து!, செப்டம்பர் 18, 2020.

[4] https://www.minnambalam.com/politics/2020/09/17/28/thanthai-periyar-birthday-wishes-to-l-murugan-bjp

[5] தமிழ்.ஒன்.இந்தியா, சமூக நீதிக்காக போராடிய தந்தை பெரியாருக்கு வாழ்த்து சொல்வதில் தயக்கம் இல்லை- பாஜக தலைவர் எல். முருகன், By Mathivanan Maran

| Updated: Thursday, September 17, 2020, 16:58 [IST].

[6] https://tamil.oneindia.com/news/chennai/tn-bjp-leader-l-murugan-justifies-birthday-wishes-to-thanthai-periyar-397901.html

[7] TV NEWS18, சமூகநீதிக்காக போராடியவர் பெரியார்… வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை – பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன், VELMURUGAN,

LAST UPDATED: SEPTEMBER 17, 2020, 2:45 PM IST.

[8] https://tamil.news18.com/news/tamil-nadu/periyar-was-a-fighter-for-social-justice-bjp-l-murugan-said-he-had-no-hesitation-in-congratulating-him-vin-vel-347651.html

[9] ஏசியா.நெட்.நியூஸ், பொரியார் சமூக நீதிக்காக போராடியவர் என வாழ்த்து கூறி..!! பாஜகவினரை அதிரவைத்த எல்.முருகன்..!!, By Ezhilarasan Babu., Chennai, First Published 17, Sep 2020, 2:54 PM.

[10] https://tamil.asianetnews.com/politics/congratulations-to-periyar-who-fought-for-social-justice-l-murugan-gave-shock-to-bjp-party-members–qgsq47

[11] The Hindu, RSS leader to attend camp in Chennai, STAFF REPORTER, CHENNAI, MAY 18, 2018 00:00 IST; UPDATED: MAY 18, 2018 03:40 IST.

[12] தினத்தந்தி, ‘தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பலம் பொருந்திய இயக்கமாக மாறும்’ அகில இந்திய இணை பொதுச்செயலாளர் பேட்டி, மே 19, 2018, 03:59 AM

[13] https://www.dailythanthi.com/News/State/2018/05/19035944/In-TamilNadu-RSS-Become-a-dynamic-movement-All-India.vpf

அலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்! [4]

ஏப்ரல் 16, 2019

அலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்! [4]

Kanimozhi effigies burnt in Rayalaseema AP

திருச்செந்துார் முருகன் அருளால் வெற்றி பெறுவேன்என்று கனிமொழி[1]: தினமலர் தொடர்ந்து சொல்வது, “துாத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் அவரது தங்கை கனிமொழி, ‘திருச்செந்துார் முருகன் அருளால் வெற்றி பெறுவேன்’ என, பேசுகிறார். தி.மு.க.,வுக்கு எதிராக, இந்துக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும், அகோபில மடம் சார்பில் நடத்தப்படும், ‘நரசிம்மப்ரியா’ என்ற ஆன்மிக பத்திரிகையின் ஆசிரியர் அனந்த பத்மனாபாச்சாரியாருடன் பேசினோம். “இந்து மத சடங்குகளையும், நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்துவது, ‘இந்து என்றால் திருடன்’ என, விளக்கம் கூறுவது, ஆண்டாளை கொச்சைப்படுத்தி பேசுவது, கிருஷ்ணரை அவதூறாக பேசுவது, நெற்றியில் விபூதி, குங்குமம் இட்டவர்களை கேலி பேசுவது, கோவிலில் திருநீறு பூசினால் அதை அழிப்பது என, ஸ்டாலினும் அவரது அடிப்பொடிகளும், இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல் படுகின்றனர்.”பொறுமைக்கும் எல்லை உண்டு அல்லவா? இந்துக்கள் இப்போது பொங்கி எழுகின்றனர். இந்த தேர்தலில், யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதை விட, யாருக்கு ஓட்டு போட கூடாது என்பதை இந்துக்களிடம் எடுத்துச் சொல்ல, தீவிரமான முயற்சிகள் எடுத்து வருகிறோம். தி.மு.க.,வை எதிர்ப்பதால், வேறு ஏதாவது கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறோம் என்று அர்த்தம் இல்லை. ஏனென்றால், எந்தக் கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை.”என்ன பேசினாலும், அந்த பொருளில் பேசவில்லை என்று கடைசி நேரத்தில், ஒரு விளக்கம் கொடுத்து விட்டால், இந்துக்கள் அதை நம்பி நமக்கு ஓட்டு போடுவார்கள் என்ற எண்ணம் கருணாநிதிக்கு இருந்தது. அதை, அவர் பல தேர்தல்களில் பயன்படுத்தி விட்டார். ஸ்டாலினால் அந்த அளவுக்கு சிந்திக்க தெரியவில்லை. ஒரு கண்டன அறிக்கையைக்கூட, மக்கள் நம்பும் வகையில் எழுதிக் கொடுக்க அவரிடம் ஆட்கள் இல்லை.”இனியும், இளிச்ச வாயர்களாக இருந்து ஏமாற, இந்துக்கள் தயாராக இல்லை. தேர்தல் முடிவுகள் வரும் போது, எங்கள் முயற்சியின் சக்தி உலகத்துக்கு தெரியும்,” என்றார் ஆச்சாரியார்.

Kani, Vairamuthu, Veeramani- the trio
இந்துக்கள் அனைவரும், திமுகவிற்கு எதிராக ஓட்டுப் போடுவார்களா?[2]: தினமலர் தொடர்ந்து சொல்வது[3], “மன்னார்குடி செண்டலங்கார சம்பத்குமார் ஜீயர், தி.மு.., தலைவரை கெடுப்பதே வீரமணி தான் என்று நம்புகிறார்.“கடவுளை நாங்கள் நம்புகிறோம். கும்பிடுகிறோம். சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். அவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை; விமர்சனம் செய்யவில்லை; கேலி, கிண்டல் செய்யவில்லை. அப்படி இருந்தும், எங்களை ஏன் வம்புக்கு இழுக்கிறார்கள்? இதுவரை பொறுமையாக இருந்தோம். ஆனால், அவர்கள் இதை எங்கள் பலவீனமாக நினைக்கின்றனர். ஆகவே தான், கேலி, கிண்டலை நிறுத்தவில்லை. சரி, இனியும் அமைதி வேண்டாம். குறைந்த பட்சம், தேர்தலிலாவது பாடம் புகட்டுவோம் என்றுதான், இந்த முடிவுக்கு வந்தோம்,” என்கிறார் அவர். தி.மு.., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதிக்கு இப்படி, ஒரு இயக்கம் நடப்பதாகவே தெரியவில்லை.“தேர்தல் களம், தி.மு..,வுக்கு சாதகமாக இருக்கிறது என்றவுடன், பயந்து நடுங்கி, எதிர் தரப்பினர் செய்யும் பொய் பிரசாரம் இது. இப்படித்தான், 1971ல், தி.மு..வுக்கு எதிராக மதத்தின் பெயரால் தீவிர பிரசாரம் செய்தார்கள். என்ன ஆனது? தி.மு.., அமோக வெற்றி பெற்று, 184 தொகுதிகளை பிடித்து ஆட்சிக்கு வந்தது. இப்போதும் அப்படிதான் நடக்கும்,” என்கிறார் பாரதி. இந்துக்கள், ஒரே மாதிரி ஓட்டு போடுவார்களா என்பது மே, 23ம் தேதி தெரியும்”. – வி

Kani, Tirupati case filed

திராவிட தீவிரவாதம் வளர்த்து வரும் வெறுப்புப் பேச்சு: வெறுப்புப் பேச்சு (Hate Speech[4]) என்பது ஒரு இனம், சாதி, மதம், பால், வயது, நாட்டுரிமை, பரம்பரை, உடல் குறைகள், பேசும் மொழி, அரசியல் ஈடுபாடு, சமுதாயப் பின்னணி, குறிப்பிட்ட குழுவினரின் வெளித்தோற்றம் (உயரம், அகலம், எடை, தோலின் நிறம் ஆகிய குறிப்பிட்ட அடையாளம்) கொண்டோரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டி அந்த அடையாளங்களைப் பழித்துப் பேசி மற்றவர்களுக்கும் அவர்கள் மீது வெறுப்பு ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் பேசுவதும் பரப்புரை செய்வதும் வெறுப்புப் பேச்சு ஆகும். இதை சினிமா, வசனங்கள், ஜோக்குகள் என்ற போர்வையில் செய்யப் பட்டு வருகின்றன. சொற்களால் குறிப்பிட்ட நபர் அல்லது சாராரின் மனம் புண்படுவதோடு மட்டுமல்லாது பல வகையான செயல்பாடுகளாலும் இவ் வெறுப்பை வெளிப்படுத்தும் காரியங்களை திராவிடத்துவவாதிகள் செய்து வருகின்றனர். இவ்வகையான நடவடிக்கைகளை பல நாடுகளிலும் அரசுகள் கூர்ந்து கவனித்து தக்க நடவடிக்கை எடுக்கின்றன, ஆனால், தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆள்வதாலும், 1970லிருந்து திராவிடத்துவ ஆதரவு அதிகாரிகள், நீதிபதிகள், போலீஸார் முதலியோர் இருப்பதனால், முறையாக சட்ட நடவடிக்கையும் எடுப்பதில்லை. “காலை கைது, மாலை விடுதலை” என்ற கொள்கையில் நிறைவேறி வருகிறது.. அதே குற்றத்தை ஆயிரக் கணக்காணோர் 50 ஆண்டுகளாக திரும்பி-திரும்பி செய்து வருகின்றனர். சிலர் இதனை குற்றம் என்ற கண்ணோட்டத்தில் கண்டாலும் இது கருத்துச் சுதந்திரத்தைத் தடுப்பதாக இருக்கின்றது எனவும் சில சாரார் வாதிடுகின்றனர்.

Kani going spree-temples

கருத்துச் சுதந்திரமும், அரசிலல் போலித் தனமும்: இப்படியும் குற்றங்கள் வளர்ந்து வருகின்றன, வளர்க்கப் பட்டு வருகின்றன. அதே நேரத்தில் “கருத்துச் சுதந்திரம்” என்பதற்கு, விள்க்கம் இல்லை, இப்பொழுது, திராவிடத்துவ கருத்துச் சுதந்திரம், இந்துக்களைத் தாக்கியுள்ளது, பிறகு ஏன் மற்ற நம்பிக்கையாளர்களை அவர்களது கருத்துச் சுதந்திரம் மண்டியிடுகிறது என்று தெரியவில்லை. ஆகவே, இது போலித் தனமானது என்று தெரிகிறது. இந்துக்களுக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது, அவர்கள் பதிலுக்கு எதையும் சொல்ல 1950களிலிருந்து, அனுமதிக்கப் படவில்லையே? இதுவரை “பார்ப்பன எதிர்ப்பு” போர்வையில் இருந்ததால், அமைதியாக இருந்தனர் போலும். இப்பொழுது, அதிகாரம் தேவை எனும் போது, இந்து உணர்வு மற்றவர்களுக்கும் வந்து விட்டதால், அதையும் அரசியல் ஆக்கப் பார்க்கின்றனர்.  இதனை 14-04-2019 அன்று நியூஸ்-எக்ஸில் அதிமுக [கிஷோர்] மற்றும் திமுக [இளங்கோவன்] பேச்சாளர்களிடமிருந்து நன்றாகவே வெளிப்பட்டது.

75 years old man killed canvassing for Modi 13-04-2019.vedaprakash

திராவிட தீவிரவாதம், மோடி துவேசமாகி, கொலையில் முடிந்துள்ளது: வெறுப்புப் பேச்சு [Hate speech] என்று இன்று பரவலாக பேசப்பட்டு, கண்டிக்கப் படுகிறது, ஆனால், திராவிடத்துவ அரசியல் மேடை பேச்சுகளே அதில் தான் வளர்ந்தது, திறமையை வளர்த்தது, அத்தகையெ துவேச கக்கல்களுக்கு பரிசுகளும் பட்டங்களும் கொடுக்கப் பட்டன.  இன்றும் ஸ்டாலின் அதில் சளைத்தவராக இல்லை. மோடி எதிர்ப்பு துவேசம் எதற்கு? முதலில் திமுக என்.டி.ஏவோடு கூட்டணி வைத்துக் கொள்வதாக இருந்தது. மோடி கருணாநிதி வீட்டிற்கு எல்லாம் சென்று குசலம் விசாரித்தார். ஸ்டாலினும், கனிமொழியும் பூரித்து விட்டனர். ஆனால், திடீரென்று திமுக மோடிவிரோதியாகியது. சகிப்புத் தன்மை [Tolerance] எப்படி சகிப்புத் தன்மையற்றதாகி [Intolerance] துவேசத்தில் முடிந்தது என்பது அரசியல் ரகசியம் என்று சொல்ல வேண்டும். காங்கிரஸ் கூட்டு உண்டாகியவுடன், ஸ்டாலின், மோடியை திருடன், களவாணி என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார். மோடி தமிழக விரோதி போல சித்தரித்து, அதில் வெற்றியும் கண்டனர். ஈவேராவின் “பார்ப்பானைக் கொல்” போன்ற திராவிட தீவிரவாதம், கொலைவெறி முதலியன எப்படி இன்று வரை, பூணூல் / தாலி அறுப்புகளில் நடந்து வருகின்றனவோ, அதுபோல, ஜல்லிக்கட்டில் ஆரம்பித்து வைக்கப் பட்ட மோடி துவேசம், கருப்பு பலூன்கள் விட்டு, இன்று கொலையில் முடிந்துள்ளது.

Veeramani condemned, Charu Nivedita-2

தாலி கட்ட ஸ்டாலின் ஐயர், தாலி அறுக்க வீரசமணி ஐயர்: நாங்களும் “ஐயர்” தான் இந்த திருமணத்தை செய்து விட்டு, இன்னும் இரண்டு திருமணங்க்களுக்கு செல்ல வேண்டியுள்ளது, என்று ஒப்புக்கொள்ளும் நிலைக்கு ஸ்டாலின் வந்தாகி விட்டது[5]. நாளைக்கு தாலி அறுக்க, அந்த வீரமணி ஐயர் வரலா.ஆனால், இத்திருமணங்கள் எல்லாம், இத்தகைய இந்து விரோதிகள், இந்துமத துவேசிகள் முதலியோர் நடத்தி வைப்பதால், திருமணங்கள் மங்கலமாக இருக்குமா, இல்வாழ்க்கை சிறக்குமா, நாளைக்கு தாலி அறுப்பில் முடியுமா போன்ற பிரச்சினைகளை ந்ன்றாக கவனித்து தீர்மானம் செய்ய வேண்டும். ஈவேரா நடத்தி வைத்த திருமணங்கள் அசிங்கப்பட்டதை ஸ்டாலினே, இந்த வீடியோவில் ஒப்புக் கொண்டு சொல்லியாகி விட்டது. ஆகவே, சட்டப்படி, மரியாதை, நோக்கியதை பெற்ற பிறகு, இத்தகைய ராசியில்லாத, அமங்கல, மூளிகளால் செய்து வைக்கும் திருமணங்கள் எங்கு போய் முடியும் என்று யோசிக்க வேண்டும். சட்டப்புறம்பாக இருப்படை, சட்டத்தில் கொண்டு வந்து, மரியாதை கொள்ளலாம். ஆனால், இத்தகைய ராசியில்லாத, அமங்கல, மூளிகளால் உண்டாகும் அநாச்சாரங்களை, குழப்பங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. அனுபவிக்க வேண்டியது தான்.

வேதபிரகாஷ்

14-04-2019

Stalin witdrawing Vinayaka caturti greetings

[1] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு..,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,

Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .

[2] தினமலர், ஸ்டாலினுக்கு மதச்சிக்கல்: தி.மு..,வை சுழற்றி அடிக்கும் புது புயல்,

Updated : ஏப் 11, 2019 17:48 | Added : ஏப் 11, 2019 17:46 .

[3] https://www.dinamalar.com/news_detail.asp?id=2253579

[4] speech that attacks, threatens, or insults a person or group on the basis of national origin, ethnicity, color, religion, gender, gender identity, sexual orientation, or disability

[5] https://www.youtube.com/watch?v=Declz2hIXIA

லிஞ்சிங் பற்றிய ஊடக வாத-விவாதங்கள் – மற்ற மதகுருமார்களின் குற்றங்களை மறைக்கவா அல்லது 2019 தேர்தல் பிரச்சார ஒத்திகையா? (3)

ஜூலை 27, 2018

லிஞ்சிங் பற்றிய ஊடக வாத-விவாதங்கள் – மற்ற மதகுருமார்களின் குற்றங்களை மறைக்கவா அல்லது 2019 தேர்தல் பிரச்சார ஒத்திகையா? (3)

Increasing Church crimes in India

சட்டங்களை மதிக்காமல் குற்றங்கள் செய்வது யார்?: இந்நாட்டு சட்டதிட்டங்களுக்குப் புறம்பாக, விசாரணை இன்றி குற்றங்கள் நடப்பது போன்று, இப்பொழுது ஏன் சித்தரிக்கப் பட வேண்டும். சமீப காலத்தில்,தொடர்ச்சியாக, இந்தியாவில், கிருத்துவ மததலைவர்கள், கார்டினல், பிஷப் முதல் சாதாரண பாஸ்டர் வரை, பற்பல குற்றங்களில் ஈடுபட்டு, விவரங்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன, போதாகுறைக்கு, பாதிக்கப் பட்ட கிருத்துவர்களை போலீஸாருக்கு செல்ல விடாமல், நீதிமன்றங்களை அணுகாமல் தடுத்து, சர்ச்சுகளில் கட்டப் பஞ்சாயத்து போல நடத்தி, எல்லாவற்றையும் மறைத்து, அமுக்கி விடுகிறார்கள். அத்தகைய, இந்நாட்டின் சட்டதிட்டங்களை மீறிய குற்றங்கள் அதிகமாகி வருகின்ற வேலையில், சிலர் போலீஸாரிடமும் புகார் கொடுத்ததன் மூலம், பாலியல் குற்றவாளிகள் பற்ரிய விவரங்கள் அதிகமாகவே வந்துள்ளன. இதனால், அதிர்ந்து போன சர்ச்சுகள், தங்களுக்குள்ள அதிகாரம், பணம் முதலியவற்றை பயன்படுத்தி, ஊடகங்களில் அவற்றைப் பற்றிய விவரங்கள் வராமல் தடுக்க முயற்ச்சித்து வருகின்றன. இவை, கன்னியாஸ்திரிக்கள் மற்றும் கிருத்துவ பெண்கள் கற்பழிப்பு விவகாரங்கள் மூலம் வெளிவந்து விட்டன. வாடிகன், சிபிசிஐ போன்றவை உண்மைகளை மறைக்க ஈடுபடுவதும் தெரிய வந்துள்ளன. ஆகவே, லிஞ்சிங் விசயத்தை வைத்துக் கொண்டு, அனைத்துல ரீதியில் இந்தியாவைப் பற்றி அவதூறை ஏற்படுத்த முயன்று வருவது கவனிக்கத் தக்கது.

Miinesota lynching

அமெரிக்க ஊடகத்தின் ஒப்பாரிஜூலை 2018[1]: அன்னி கோவன் என்ற அமெரிக்கப் பெண்மணி, இவ்வாறு விவரித்துள்ளார், “இவ்வருடத்தில், ஒரு தீவிரவாத இந்து சாமியார் தனது கருத்தை வெளிப்படுத்தியதிலிருந்து, இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்றி வாழும் முஸ்லிம்கள் கனவில் கூட காணாத வாழ்வினை வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். முதலில், விழிப்புடன் இருக்கும் இந்துக்கள், எருமைகளை ஏற்றிச் செல்லும் வண்டிகளை சூழ்ந்து கொள்ள ஆரம்பித்தார்கள். சட்டத்திற்குப் புறம்பாக, பசுக்களைக் கடத்துகிறார்களா என்று தேட ஆரம்பித்தார்கள். ஏனெனில், அவர்களுக்கு பசு புனிதமானது, கடத்திச் செல்பவர்களிடமிருந்து காக்கப்பட வேண்டியது. சில முஸ்லிம்கள் இவ்விசயத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பிறகு டஜன் கணக்கில் கசாப்புக் கடைகள் மற்றும் 50,000 மாமிசக் கடைகள் மூடப்பட்டன; இதனால் சிகப்பு மாமிசத்தையே உணவாகக் கொண்டு வாழும் முஸ்லிம்களுக்கு உணவு அரிதானது. இந்த மாமிச வியாபரத்தையே தொழிலாகக் கொண்ட குரேஷி என்கின்ற முஸ்லிம்கள், தங்களது வேலையை இழக்க வேண்டியதாயிற்று…….”

 Lymching propaganda against Modi

இந்துக்களில் சிலரும் பசு மாமிசம் சாப்பிடும் போது, முஸ்லிம்களைப் பற்றி கவலைப்படுவதேம்?: இதில்[மேற்குறிப்பிடப் பட்ட வாஷிங்டன் போஸ்ட் செய்தியில்] –

  • ஒரு தீவிரவாத இந்து சாமியார்,
  • சட்டத்திற்குப் புறம்பாக, பசுக்களைக் கடத்துகிறார்களா,
  • பசு புனிதமானது,
  • சிகப்பு மாமிசத்தையே உணவாகக் கொண்டு வாழும் முஸ்லிம்களுக்கு உணவு அரிதானது,
  • முஸ்லிம்கள், தங்களது வேலையை இழக்க வேண்டியதாயிற்று.

போன்ற சோற்றொடர்கள், விசமத் தனமானது என்பதை கவனிக்கலாம். உண்மையில் நடப்பதை விவரிப்பதை விட, சில விவரங்களை வைத்துக் கொண்டு, இந்துமுஸ்லிம் பிரச்சினையாக இதனை மாற்றும் முயற்சியை சுலபமாக கண்டறியலாம்[2]. மேலும் எவ்வாறு பல துறை அதிகாரிகள், ஏனென்டுகள் முதலியோர் வழியில் லஞ்சம் பெற்றுக் கொண்டு, வண்டிகளை அனுப்பி வைக்கிறார்கள் என்பதையும் விவரிக்கிறார். அதாவது, இது சட்டத்தை மீறிய வியாபாரம், அதில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என்று இரு கூட்டத்தினரும் சம்பந்தப் பட்டுள்ளனர். ஆகவே, வியாபார ஒற்றுமையை மறைத்து, மேலாக நடக்கும், பசு விவகாரத்தை பெரிது படுத்த வேண்டிய நோக்கம் ஏன் என்ற கேள்வி தான் எழுகின்றது. ஏனெனில், இந்துக்களில் சிலரும் பசுமாமிசம் சாப்பிடுகிறார்கள் என்பது தெரிந்த விசயமே. ஆனால், அதை ஊடகக் காரர்கள் பெரிது படுத்துவதில்லை. அவர்களுக்கு பசு மாமிசம் கிடைக்காமல் போகிறது என்று அழவில்லை. ஆக, இதெல்லாம், ஊடகக் காரர்களின் மிக்க பாரபட்சத்தினை, மதரீதியிலான சிந்தனையை மற்ரும் அவர்களது கலவரமூட்டும் போக்கினை எடுத்துக் காட்டுகிறது. உண்மையில், இதுதான், அபாயகரமானது எனலாம்.

Child trafficking in 2013

1984 சீக்கியகளுக்கு எதிராக நடந்த கலவரம், கூட்டுக் கொலைகள்: 1984ல் இந்திரா காந்தி கொலை செய்யப் பட்டபோது, சீக்கியர்கள் தாக்கப் பட்டனர். அதில் 2,800 சீக்கியர்கள் [தில்லியில் மட்டும் 2,100] கொல்லப்பட்டனர் என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டாலும், 8,800 [தில்லியில் மட்டும் 3,000] கொல்லப்பட்டனர் என்று தெரிகிறது. இதெல்லாம் கூட்டுக் கொலையில் தான் வரும், அது மட்டுமல்லாது, சீக்கியர்களை குறிவைத்து நடத்தப் பட்ட கலவரக் கொலைகள் ஆகும். அதற்கு, ராஜிவ் காந்தியும், “ஒரு பெரிய மரம், வேர்களுடன் விழுந்தால், சுற்றியிருக்கும் பூமி பாதிக்கப் படத்தான் செய்யும்,” என்ற்ற விதத்தில் பேசியது நினைவில் இருக்கலாம். அக்டோபர் 31 முதல் நவம்பர் 3ம் தேதி வரை, தொடர்ந்து கலவரம், கொலை, கொள்ளை, சூரையாடல் நடந்ததன. இப்படி  பல்லாயிரக் கணக்கான நடந்த கூட்டுக் கொலையினை மறந்து, ஏதோ 2014லிருந்து தான் நடக்கின்றன என்று ஊடகத்தினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதுதான்ன் திகைப்பாக இருக்கிறது. எந்த கொலையும் நியாயப்படுத்தப் படவில்லை, ஆனால், அதேபோல, நடக்கும் குற்றங்களும் ஒரே மாதிரியாக அலசப்பட வேண்டும். அதற்கு ஊடகக் காரர்களின் தார்மீகம் பதில் சொல்லியாக வேண்டும்.

Buffaloes are penned outside a cattle fair in Pinjari, on May 4, 2018-taken away for slaughter in UP

ஊடகங்கள் பொறுப்புடன், உண்மை தகவல்களை கொண்டு, இந்த விசங்களை அணுக வேண்டும்: மேலே குறிப்பிட்ட விவரங்கள் மூலம், கீழே சில விவரங்கள் சுருக்கமாகக் கொடுக்கப்படுகின்றன.

  1. லிஞ்சிங் என்று வர்ணிக்கப்படுகின்ற கூட்டுக்கொலை, பல இடங்களில் தன்னிச்சையாக, பொது மக்கள் வெகுண்டெழுந்ததால் நடைபெறுகிறது, இது யூத-கிருத்துவ-முகமதிய மததண்டனை போல, ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடப்பதில்லை.
  2. எந்த மதகுருவும் விசாரித்து, தண்டனை அறிவித்து, நிறைவேற்றப்படும் தண்டனையும் அன்று.
  3. கசாப்புக் கடைகளில் மாடுகளைக் கொன்பது, விற்பது, வாங்குவது, மாட்டுக்கறி சமைத்து தின்பது, ஆயிரக்கணக்கான வருடங்களாக நடந்து வருகின்றன. கடந்த காலத்தில், ஏற்றுமதி செய்வதும் நடந்து வருகின்றது. அப்பொழுதெல்லாம், இப்பிரச்சினையை எழுப்பப்படவில்லை.
  4. கோஷாலைகள் வைத்து, பசுக்கள்-மாடுகள் கொல்லப்படக் கூடாது போன்ற இயக்கங்களும் ஆயிரக்கணக்கான வருடங்களாக நடந்து வருகின்றன. இன்றும், அரசியல் நிர்ணய சட்டத்தில் “பசுவதை கூடாது” என்றுள்ளது.
  5. பசுவதை விசயங்களில், பிரச்சினைகள், கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. அப்பொழுதும் மதசாயம் பூசப்பட்டாலும், இத்தகைய அதிரடி பிரச்சாரங்கள், ஊடகங்கள் மூலம் நடத்தப்படவில்லை.
  6. 2014-18 ஆண்டுகளில் தான் எல்லாமே நடந்தன, நடக்கின்றன, திட்டமிட்டு நடத்தப் படுகின்றன. அதற்கு இந்துமத தலைவர், ஆர்.எஸ்.எஸ், பிஜேபி மற்றைந்துத்துவக் காரர்கள் ஆதரவு அளிக்கின்றனர் என்று முடிச்சுப் போடுவதும் நடக்கிறது.
  7. மேலும்,அவர்களின் மொத்த உரையாடலை வெளியிடாமல், ஒரே வார்த்தை, வரி அல்லது வரியின் பகுதியை, இந்தியிலிருந்து ஆங்கிலத்தில் சரியாக மொழிபெயர்க்காமலும், அத்தகைய பிரச்சாரம் நடத்தப்படுகிறது.
  8. ஜைன மதகுருமார்கள், ஜீவகாருண்ய கூட்டத்தினர், புலால் உண்ணாதே என்பதால் எல்லோருமே உண்ணாமல் நிறுத்தி விடவில்லை.
  9. கசாப்புக் கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. போதாகுறைக்கு, அந்நிய கடைகளும், நவநாகரிக தோற்றத்துடன் போட்டிப் போடுகின்றன. அக்கடைகளை மூடு என்று யாரும் போராட்டம் நடத்தவில்லை. அவர்களும் எதிர்ப்பவர்களுக்கு லஞ்சம் கொடுக்கிறார்களா என்று தெரியவில்லை.
  10. ஆகவே, ஊடகங்கள் பொறுப்புடன், உண்மை தகவல்களை கொண்டு, இந்த விசங்களை அணுக வேண்டும். ஏதோ 2019-தேர்தல் பிரச்சாரத்தை செய்யும் பாணியில் ஈடுபடக் கூடாது.

© வேதபிரகாஷ்

27-07-2018

Cow Smuggling Rampant From Assam's Dhubri To Bangladesh Via Brahmaputra River

[1] Washington Post, Cows are sacred to India’s Hindu majority. For Muslims who trade cattle, that means growing trouble. By Annie Gowen July 16, 2018.

[2]  India — In the year since an extremist Hindu monk was tapped to lead one of India’s biggest states, the country’s Muslim cattle traders have seen their lives change in ways they could not have imagined. First, mobs of Hindu vigilantes emboldened by the monk’s victory began swarming buffalo trucks on the road, intent on finding smugglers illegally transporting cows, which are sacred to the Hindu faith and protected from slaughter in many places in India. Some Muslim men have been killed by lynch mobs. Then dozens of slaughterhouses and 50,000 meat shops were closed, severely limiting access to red meat, a staple of the Muslim community’s diet. Hundreds from the Qureshi clan, Muslims in the meat trade for centuries, lost their jobs.

https://www.washingtonpost.com/world/asia_pacific/cows-are-sacred-to-indias-hindu-majority-for-muslims-who-trade-cattle-that-means-growing-trouble/2018/07/15/9e4d7a50-591a-11e8-9889-07bcc1327f4b_story.html?noredirect=on&utm_term=.82c263eb8d92

தலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம்  – எதிர்கொள்ள பிஜேபி செய்ய வேண்டியது என்ன? (2)

ஏப்ரல் 10, 2018

தலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம்  – எதிர்கொள்ள பிஜேபி செய்ய வேண்டியது என்ன? (2)

Modi advice to cadre-08-04-2018

மோடி தெளிவாக பா... எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசியது: பாராளுமன்ற கூட்டத் தொடர் நேற்று முடிந்த நிலையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது[1]: “தலித் இன மக்களுக்காக பா... அரசு ஏழு முக்கிய நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஆனால் தலித் இன மக்களுக்கு அதுபற்றி தெரியவில்லை. பா... எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் இதுபற்றி தலித் இன மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் இந்தியாவில் எஸ்.சி. எஸ்.டி. இன மக்கள் அதிகமாக வாழும் கிராமங்கள் 20 ஆயிரத்து 844 உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்திற்கும் பா... எம்.பி.க்கள் செல்ல வேண்டும். ஒரு நாள் இரவு அந்த கிராமங்களில் தங்கி இருக்க வேண்டும்[2]. மறுநாள் பா... அரசின் தலித் நலத்திட்டங்கள் பற்றி பா... எம்.பி.க்கள் மக்களிடம் விரிவாக பேச வேண்டும். இதன் மூலம் நாடுமுழுவதும் உள்ள தலித் இன மக்களுக்கு பா... செய்து வரும் நல்லப்பணிகள் தெரியவரும். வருகிற 14-ந்தேதி அம்பேத்கர் பிறந்த தினமாகும். அன்றைய தினம் பா... எம்.பி.க்கள் இந்த பணியை தொடங்க வேண்டும். மே மாதம் 5-ந்தேதி வரை தலித் மக்களை சந்திக்கும் பணியில் பா... எம்.பி.க்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். பா... மந்திரிகள் மூத்த நிர்வாகிகளும் இந்த பணியில் இணைய வேண்டும்.” மோடி அளவுக்கு, பிஜேபியில் இருக்கும் மற்றவர்களுக்கு அரசியல் சாணக்கியத்தனம், மேக்வில்லியன் சாதுர்யம், முதலிய இல்லை என்பதால், தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு, கட்சியின் பெயரைக் கெடுத்து வருகிறார்கள் எனலாம்.

Modi not happy with Amit Shah - SC issue
மோடி தெளிவாக சதியைபிரச்சாரத்தை வெளிப்படுத்தியது: பாஜக தொடங்கப்பட்ட 38-ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, தில்லியில் கட்சித் தலைவர்களுடன் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது[3]:

  1. ஏழைத் தாய்க்கு பிறந்தவர் (நான்) பிரதமர் பதவியை அடைந்துள்ளதை எதிர்க்கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்த யாரும் நாட்டின் உயர் பதவியை எட்டினால் அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
  2. பாஜக என்பது பிராமணர்கள் மற்றும் பனியா (வட மாநில வணிக சமூகத்தினர்) கட்சியாகவே நீண்டகாலமாக கருத்தப்பட்டு வந்தது. ஆனால், இப்போது தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை நாட்டின் மிக உயரிய குடியரசுத் தலைவர் பதவியில் அமர்த்தியுள்ளோம்.
  3. ஏழை, எளிய மக்களின் ஆதரவு பெற்ற கட்சியாக பாஜக வளர்ந்துள்ளது எதிர்க்கட்சிகளால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. பாஜகவின் செல்வாக்கை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
  4. பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் என நாட்டின் அனைத்துத் தரப்பைச் சேர்ந்தவர்களும் பாஜக சார்பில் எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களாக உள்ளனர். நாட்டின் அனைத்துப் பகுதி மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றதன் மூலம்தான் பாஜகவால் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு எம்.பி.க்களைப் பெற முடிந்தது.
  5. பாஜகவின் இந்த வளர்ச்சியை சிதைக்கும் நோக்கில் இப்போது எதிர்க்கட்சிகள் வன்முறை ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர். மக்கள் மத்தியில் தவறான தகவல்களையும் பரப்பும் எதிர்க்கட்சிகளின் சதிக்கு எதிராக, நமது கட்சியினர் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். நாட்டு மக்கள் அனைவருக்காகவும் நாம் உழைக்க வேண்டும். எதிர்க்கட்சியினரின் தூண்டுதல்களால் நாம் பொறுமை இழந்துவிடக் கூடாது.
  6. இது தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்ததுவிட்ட நவீன உலகம். நமது கொள்கைகளை சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் மத்தியில் நாம் எடுத்துச் செல்ல வேண்டும். கட்சி தொடங்கிய 38 ஆண்டுகளில் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு நாம் வளர்ந்துள்ளோம்.
  7. காங்கிரஸை எதிர்த்து அரசியலில் வளர்வது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல.
  8. பாஜகவுக்கு கிடைத்த சிறந்த தலைவர்களும், தன்னலம் கருதாத தொண்டர்களும்தான் நமது சாதனைகளுக்கு காரணம்”என்றார் அவர்[4].

மோடி-ரசிகர்கள், மோடி-தாசர்கள், பிஜேபிகாரர்கள் மோடி சொன்னதை கவனித்து செயல்பட்டாலே, 2019 தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம்.

Rahul, anti-Modi pitch, communal tourism

காங்கிரஸை எதிர்த்து அரசியலில் வளர்வது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல: இப்படி மோடி சொன்னதை கவனிக்க வேண்டும். மைனாரிட்டி, பின்தங்கிய வகுப்பினர், எஸ்.சி மற்றும் எஸ்.டி என்ற கூட்டமைப்பில் மக்களைப் பிரித்து, அவர்களை இந்துக்களுக்கு எதிராக்கி, அதாவது பிஜேபிக்கு எதிராக்கி, வெற்றி பெறலாம் என்ற திட்டத்தில் தான், காங்கிரஸ் இறங்கியுள்ளது. இதற்காக கோடிக்கணக்கில் செலவழிக்கவும் தயாகி விட்டது. 60-70 ஆட்சி காலத்தில், காங்கிரஸ் விசுவாசிகள் பற்பல துறைகளில், பதவிகளில் இருப்பதால், அவர்களின் ஆதரவால், தமக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தி ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற திட்டத்தில் செயல்படுவதும் தெரிகிறது. உச்சநீதி மன்றங்களில் மாறுபட்ட தீர்ப்புகள் வருவது, அவைப் பற்றி ஊடகங்களில் தவறான செய்திகள் வருவது, விவாதங்களில் திரிபு வாதங்கள் கொடுப்பது, சமூக ஊடகங்களில், வலைதளங்களில், பொய்யான விவரங்களைப் பரப்புவது போன்றவை, பிஜேபிக்கு எதிராக இல்லாமல், நாட்டிற்கே எதிராக இருப்பதையும் கவனிக்கத் தக்கது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஏதாவது ஒரு பிரச்சினையை உண்டாக்கி, அதன் மூலம் ஆதாயம் கிட்ட பார்க்கிறது. இவற்றையெல்லாம் பிஜேபி கவனித்துக் கொள்ள வேண்டும்.

Owasi talking about dalit-mukt Bharat Jan.2018

ஆக பிஜேபிகாரர்கள் கவனிக்க வேண்டியது: பிஜேபி ஆதரவாளர்கள், மோடி பிரியர்கள் மற்றும் இந்துத்துவவாதிகள் இதையெல்லாம் கவனிக்கிறார்களா என்று தெரியவில்லை.

  1. எஸ்.சிக்களை ஒதுக்கினால், பிஜேபிக்கு இழப்பு ஏற்படும், இது வரை நான்கு பிஜேபி எம்பிக்கள்[5], மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
  2. மோடி, இவ்விசயத்தில் [எஸ்.சி விவகாரம்] அமீத் ஷாவிடம் அதிருப்தியைத் தெரிவித்துள்ளாதாக தெரிகிறது.
  3. உபியில், மாயாவதிக்கும், அகிலேஷ் யாதவுக்கும் தேர்தல் உடன்படிக்கை [யாதவ் + எஸ்.சி ஓட்டு%] ஏற்பட்டால், பிஜேபிக்கு பாதிப்பு ஏற்படும்.
  4. எதிர்கட்சிகள் எஸ்.சி விவகாரத்தை வைத்துக் கொண்டு, குழப்பத்தை ஏற்படுத்தி, தேர்தல் பிரச்சாரமாக்க திட்டமாகி விட்டது[6].
  5. லிங்காயத்து தனி மதம், ஜைனர்களுக்கு அவ்வாறான ஆசை காட்டுவது, ஆந்திராவுக்கு, சிறப்பு அந்தஸ்து காவிரி பிரச்சினை..இப்படி பிஜேபிக்கு எதிராக….பிரச்சினைகள் உருவாக்கப்பட்டது.
  6. ஜி.எஸ்.டி அமூல் தாமதத்தால், அமெரிக்க முதலீடு தேக்கம், அமூலுக்குப் பிறகு உண்டான தயக்கம், வேலைகள் உருவாக்குவதில் தாக்கம், பிஜேபிக்கு பாதிப்பு.
  7. “தலித்-முக்த்” பாரத்[7] என்று [“காங்கிரஸ்-முக்த் பாரத்”எதிராக] காங்கிரஸ் விசமத் தனமான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது! ஒவைஸி பேசியதை ராகுல் பேசியயுள்ளதை கவனிக்க வேண்டியுள்ளது[8].
  8. மேற்கு வங்காளம், ஒரிஸா, ஆந்திரா, தெலிங்கானா, தமிழகம், கேரளா, கர்நாடகா என்று பிஜேபி இல்லாத மாநிலங்கள் மீது குறி வைத்துள்ளது காங்கிரஸ்.
  9. பிரிவினைவாதம், திராவிட நாடு, கம்யூனிஸம் முதலியவை மறுபடியும் பழைய பாட்டை பாட ஆரம்பித்துள்ளதை கவனிக்கலாம்!
  10. மோடியின் ஆளுமைத் தன்மையினை உபயோகப் படுத்திக் கொள்வதில், இவை தடங்களாக இருக்கும் பொய் பிரச்சாரத்திற்கு உதவும்.

© வேதபிரகாஷ்

09-04-2018

Ragul talks like Owasi about dalit-mukt Bharat April.2018

[1] மாலைமலர், தலித் கிராமங்களுக்கு சென்று தங்கி இருந்து பேசுங்கள் பாஜக எம்.பி.க்களுக்கு மோடி உத்தரவு, பதிவு: ஏப்ரல் 07, 2018 16:20

[2] https://www.maalaimalar.com/News/National/2018/04/07162004/1155690/Narendra-Modi-asks-BJP-MPs-to-spend-two-nights-in.vpf

[3] தினமணி, எனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வன்முறையைக் கையில் எடுத்துள்ளன: மோடி குற்றச்சாட்டு, By DIN | Published on : 07th April 2018 01:08 AM .

[4]http://www.dinamani.com/india/2018/apr/07/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2894948.html

[5] Bahraich MP Savitri Bai Phule, Robertsganj MP Chhote Lal Kharwar and Etawah MP Ashok Kumar Dohre.  Nagina constituency, Yashwant Singh

[6] Pioneer, Modi working to make India Dalit-mukt: Cong, Monday, 09 April 2018 | PNS | New Delhi

[7] http://www.dailypioneer.com/nation/modi-working-to-make-india-dalit-mukt-cong.html

[8] News.18, BJP Wants a Muslim-mukt, Dalit-mukt Bharat: Asaduddin Owaisi, Sakshi Khanna | CNN-News18Updated:January 23, 2018, 12:11 PM IST

https://www.news18.com/news/politics/bjp-wants-a-muslim-mukt-dalit-mukt-bharat-asaduddin-owaisi-1639413.html

தலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம் (1)

ஏப்ரல் 10, 2018

தலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம் (1)

VCK - Udaykumar , anti-Modi

தலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: தமிழகத்தைப் பொறுத்த வரையில், ஊடகங்கள் மோடிக்கு எதிராகத்தான், செய்திகளை வெளியிட்டு வருகின்றன. எந்த சந்தர்பதையும், “தலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி” என்று தான் வர்ணித்து முடிக்கும் போக்கு, சம்பிரதாயமாக உள்ளது. விடுதலை சிறுத்தை, ரவிக்குமாரின் கருத்து[1], “தனித் தொகுதியில், வெற்றியை தலித் வாக்குகள் மட்டுமே தீர்மானிப்பதில்லை என்பது உண்மைதான் ஆனால், 2014 ல் பாஜகவுக்கு சுமார் 24 சதவீத தலித் வாக்குகள் கிடைத்தன என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2009 தேர்தலின்போது அது 12% தலித் வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. தலித்துகளின் ஆதரவால்தான் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைக்க முடிந்தது என்பதால், தலித் மக்களிடம் பாஜக நன்றியோடு நடந்துகொள்ளும், அவர்களது மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக சுதந்திர இந்திய வரலாற்றில் தலித் மக்கள் மிக அதிகமான இன்னல்களை சந்திக்கும் ஆட்சியாக பாஜக ஆட்சி உருவெடுத்துள்ளது.” தமிழ்.பிபிசி.யின் நிலையே இப்படி என்றால், செக்யூலரிஸ, கம்யூனிஸ வகையறாக்கள் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை[2]. பாகுபாடற்ற, நடுநிலையான, கருத்துகள், அலசல்களுடன் செய்திகளை வெளியிட வேண்டும் என்ற போக்கே இல்லாத முறை கடைபிடிக்கப் பட்டு வருகிறது.

Siddha ask Amit to clarify whether he is jain or Hindu

கர்நாடகாவில் காங்கிரஸ் எப்படியும் வென்று விடுவது என்ற வெறியில் உள்ளது: மே 12, 2018 – தேர்தலை வைத்து, கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, கம்யூனலிஸ அரசியலை வெளிப்படையாகவே நடத்தி வருகிறார். லிங்காயத்துகளை இந்துக்கள் அல்ல, மைனாரிட்டி என்று அறிவிக்க ஏற்பாடு செய்து வருகிறார். எஸ்.சிக்களை கவர சென்ற ஜூலை 2017ல், ரூ 4 கோடி செலவழித்து, அனைத்துலக அம்பேத்கர் மாநாடு நடத்தினார். அது முழுக்க-முழுக்க காங்கிரஸ் மாநாடாகவே நடத்தப் பட்டது. காங்கிரசில், சோனியாவைத் தவிர அனைவரும் கலந்து கொண்டனர். மார்ச் மாதத்தில், அமித் ஷா, சித்தராமையா “அஹிந்தா” தலைவர் [a Kannada acronym for minorities, backward classes and Dalits] இல்லை, “அஹிந்து,” [anti-Hindu] தலைவர் என்று விமர்சித்த போது, பதிலுக்கு அவர் அமித் ஷாவை இந்துவா, அஹிந்துவா என்று கேட்டார்[3]. “அமித் ஷா ஒரு ஜெயின். ஆகையால் முதலில் அவர் தான் இந்துவா, அஹிந்துவா என்பதை தெரியப் படுத்த வேண்டும். அதை விட்டு, என்னைப் பற்றி ஏன் பேச வேண்டும்?…..” என்று வினவினார்[4]. இதற்கு, அமித் ஷா, தான் இந்து, வைஷ்ணவர் என்று விளக்கம் அளித்தார்[5]. அது மட்டுமல்லாது, சித்தராமையா தான், லிங்காயத்துகளை தனி மதம் என்று இந்துக்களை பிரிக்க முயல்கிறார் என்று குற்றஞ்சாட்டினார்[6]. இவ்வாறான, கம்யூனலிஸ பேச்சுகள் ஆரம்பித்து விட்டன.

Udit Raj clarifies his position with BJP

எஸ்.சிக்களை பிரிக்க சதி: இந்துக்களைப் பிரிப்பது என்ற திட்டத்தில், இனி அடுத்தது தலித்துகளை பிஜேபியிலிருந்து விலக்குவதுதான். அதற்கான யுக்திதான், எஸ்.சி-எஸ்.டி சட்டத்தைப் பற்றிய துர்பிரச்சாரம். எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை திட்டத்தில் திருத்தம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி தலித் மற்றும் பழங்குடியினர் அமைப்பினர் கடந்த 02-04-2018 அன்று நாடு தழுவிய பந்த் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து நாட்டின் பல்வேறு இடங்களில் தலித் மக்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக புகார் இருந்தது[7]. இதனை உறுதிப்படுத்தி சென்னையில் பேட்டியளித்துள்ள பாஜக எம்.பி உதித்ராஜ் தலித் மக்கள் பழிவாங்கப்படுகின்றனர் என்று கூறினார். அவர் பேசியதை திரித்து செய்தியாக வெளியிடப்பட்டது. அதை அவரே எடுத்துக் காட்டினார்[8]. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக தலித் எம்.பி.க்கள் மூன்று பேர் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு எந்த நன்மையையும் செய்யவில்லை என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர்[9]. பிரதமர் மோடிக்கு எதிராக பாரதிய ஜனதா தலித் எம்.பி.க்கள் திடீரென போர் கொடி தூங்கியதால் அக்கட்சியின் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது[10]. இதனிடைய டெல்லியில் பேட்டியளித்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கடந்த வாரம் நடைபெற்ற பாரத் பந்த் போராட்டம் வெற்றிபெற்றதால் நாடு முழுவதும் இருக்கின்ற தலித் மக்கள் தாக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். அகிலேஷ் யாதவும், த்மது 21 ஆண்டுகள் பகைமையை மறந்து, மாயாவதி கூட தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ள சம்மதத்தைத் தெரிவித்தார்[11]. சமஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்[12].

Cong protest for Dali cause The Hindu-08-04-2018

ராகுலின் பேச்சு ஒரே மாதிரியாக இருப்பது[13]: ராகுல் காந்தி 03-04-2018 அன்று தாவணகெரேவில் பேசியதாவது: “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியைப் பற்றி ஒரு வார்த்தை கூட நல்லவிதமாக பேச முடியாது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது. வளர்ச்சி குன்றிவிட்டது. வேலை வாய்ப்பு குறைந்துவிட்டது. விவசாயம் அழியும் நிலையில் உள்ளது. விலைவாசி உயர்வால் ஏழைகளும், நடுத்தர மக்களும் அவதிப்படுகின்றனர். சிறுபான்மையினர் எந்த உரிமையும் இல்லாமல் தவிக்கின்றனர். மோடி ஆட்சியில் தலித் மக்கள் மீதான வன்முறை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆனால் மத்திய அரசு எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போக செய்திருக்கிறது. ஹைதராபாத் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ரோஹித் வெமூலா கொல்லப்பட்டார். குஜராத் மாநிலம் உனாவில் தலித் மக்கள் தாக்கப்பட்டனர். உத்தர பிரதேசத்தில் தலித் மக்கள் கொல்லப்பட்டனர். இதனைப் பற்றியெல்லாம் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மோடி தலைமையிலான மத்தியில் ஆளும் பாஜக அரசு, எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போக செய்து, தலித் மக்களை ஒடுக்கி வருகிறது. இதனை கண்டித்து வீதிக்கு வந்து போராடும் தலித் மக்களை பாஜகவினர் தாக்கியுள்ளனர். இதற்கெல்லாம் வருகிற மக்களவை தேர்தலில் தலித் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். கர்நாடக தேர்தலிலும் தலித் விரோத கட்சியான பாஜகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தலித் மக்களுக்கு உரிய சட்ட பாதுகாப்பு உறுதி செய்யப்படும்,” இவ்வாறு ராகுல் பேசினார்[14].

Ideology differs, slogan varies, but, anti-modit unites

பிஜேபி தலித்விரோத அரசு, கட்சிகாங்கிரஸ் பிரச்சாரம்: மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தலித் இன மக்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுத்துள்ளது. 09-04-2018 அன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இதற்காக உண்ணாவிரதம் மேற்கொண்டது. இதில் சம்பந்தம் இல்லாத, வேறுபட்ட கருத்து கொண்ட கட்சிகள் தங்களது பதாகைகளுடன் நின்றது வேடிக்கையாக இருந்தது. சமீபத்தில் எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு செய்த திருத்தம் தலித் இன மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக வடமாநிலங்களில் நடந்த வன்முறையில் 9 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் டாக்டர் அம்பேத்கர் சிலையும் சேதப்படுத்தப்பட்டது. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து பா.ஜ.க. அரசுக்கு எதிராக தலித் இன மக்களை திருப்பிவிட காங்கிரஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதை அறிந்த பா.ஜ.க., அந்த திட்டத்தை முறியடிக் கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.

© வேதபிரகாஷ்

09-04-2018

Karataka Cong stooping down to compare Modi with Hitler

[1] பிபிசி.தமிழ், மோதி அரசின் மூன்றாண்டுகள் : ‘தலித் வாக்குகளுக்கு மோதி போடும் வாய்ப்பந்தல், ‘ரவிக்குமார் துரை, எழுத்தாளர், கவிஞர், 1 ஜூன் 2017

http://www.bbc.com/tamil/india-40105698

[2] வினவு, தீக்கதி, விடுதலை முதலியவற்றைப் படித்துத் ந்தெரிந்து கொள்ளல்லாம்.

[3] News.18, Siddaramaiah Asks Amit Shah to Clarify if He’s a Hindu or Jain, PTI, Updated:March 30, 2018, 7:32 AM IST

[4] https://www.news18.com/news/india/siddaramaiah-asks-amit-shah-to-clarify-if-hes-a-hindu-or-jain-1703477.html

[5] NDTV, “I Am A Hindu Vaishnav, Not Jain”: Amit Shah, All India | Press Trust of India | Updated: April 06, 2018 22:48 IST.

[6] https://www.ndtv.com/india-news/i-am-a-hindu-vaishnav-not-jain-amit-shah-1833945

[7] Hindustan Times, BJP to convince Dalits to remain with party, says Udit Raj after ‘torture’ claim, Updated: Apr 08, 2018 18:26 IST.

[8] “My tweets r (are) misconstrued that its harming BJP rather it strengthens that at least there r people like me in BJP who r concerned with Dalit atrocities after 2 April agitation. It will convince Dalits & they will remain with party. Govt will check anti-dalit officer/ people (sic),” Udit Raj said on Twitter.

https://www.hindustantimes.com/india-news/bjp-to-convince-dalits-to-remain-with-party-says-udit-raj-after-torture-claim/story-4mH32TO02jTaz2qO2uRBIL.html

[9] தினகரன், பிரதமர் மோடிக்கு எதிராக பாஜக தலித் எம்.பி.க்கள் திடீரென போர் கொடி, 2018-04-08@ 19:43:28

[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=391696

[11] Financial Express, Akhilesh Yadav on pact with Mayawati: SP-BSP alliance will knock the daylight off BJP in 2019, By: FE Online | Published: April 8, 2018 2:22 PM.

[12] http://www.financialexpress.com/india-news/akhilesh-yadav-on-pact-with-mayawati-sp-bsp-alliance-will-knock-the-daylight-off-bjp-in-2019/1125566/

[13] இரா.வினோத், தலித் மக்களை மத்திய அரசு ஒடுக்குகிறது: கர்நாடகாவில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு, Published : 04 Apr 2018 08:20 IST, Updated : 04 Apr 2018 08:20 IST.

[14] http://tamil.thehindu.com/india/article23430610.ece

துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி, அபிஷேக் சர்மா என்ற செய்தியாளரின் கன்னத்தில் அறைந்தாரா – மதசொற்பொழிவின் போது அரசியல் கேள்வி கேட்கப்பட்டதா?

ஜனவரி 24, 2014

துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி, அபிஷேக் சர்மா என்ற செய்தியாளரின் கன்னத்தில் அறைந்தாரா – மதசொற்பொழிவின் போது அரசியல் கேள்வி கேட்கப்பட்டதா?

நரேந்திர மோடி குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு அடி சாமியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி

நரேந்திர மோடி குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு அடி சாமியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி

ஒரு சாமியார் / சந்நியாசி இவ்வாறு கோபப்படலாமா, அடிக்கலாமா: நரேந்திர மோடி குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு சாமியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி கன்னத்தில் பளார் என்று அடித்துவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது[1] என்று ஊடகங்கள் செய்தியப் பரப்பியுள்ளது. ஒரு சாமியார் / சந்நியாசி இவ்வாறு கோபப்படலாமா, அடிக்கலாமா என்ற விவாதத்தை வேறு கிளப்பியுள்ளார்கள். நாட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு அளவு கடந்த சுதந்திரம் உள்ளது என்ற நிலையில் உண்மையை அல்லது நடந்ததை நடந்தது போல சொல்லாமல், மாற்றி ஜனரஞ்சக அல்லது தூண்டிவிடும் உற்சாக செய்திகளாக வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ள நிலையில், இவ்விசயத்தை அலச வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

Puri, Sringeri, Dwaraka and Kanchi mutts

அரசியல்  குறித்து  பேசகூடாது  என்று வலியுறுத்தப்பட்ட பிறகும் அரசியல் பற்றிய கேள்வி கேட்டது: நாட்டின், நான்கு முக்கிய பீடங்களில் ஒன்றான, வட மாநிலங்களில் செல்வாக்கு மிக்க, துவாரகா பீடத்தின் தலைமை குருவாக இருப்பவர், சுவாமி சொரூபானந்த சரஸ்வதி. காங்கிரஸ் மற்றும் அக்கட்சித் தலைவர்கள், பலருடன் நெருக்கமாக உள்ளவர் அந்த சாமியார்[2]. மத்திய பிரதேச மாநிலம் ஜாபல்பூரில் நடந்த விழாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மத்தியபிரதேசத்தின் தலைநகரான போபாலிலிருந்து 375 கிமீ தொலைவில் ஜபல்பூரில் உள்ள ஒரு கோவிலின் நிகழ்சியில் கலந்து கொண்டு, பேட்டி கொடுக்கும் போது இது நடந்தது[3]. முன்னதாகவே அரசியல் குறித்து பேச கூடாது என்று அபிஷேக் சர்மா என்ற அந்த ஊடகக்காரருக்கு வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது[4]. இருப்பினும், அந்த செய்தியாளர் துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதியிடம் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது அமைதியை இழந்த சாமியார் எதிர்பாராத விதமாக செய்தியாளரின் கன்னத்தில் அடித்துவிட்டார்[5], என்று செய்திகள் வந்துள்ளன. ஆகவே, அபிஷேக் சர்மா ஏன் வேண்டுமென்றே அவரிடம் அந்த கேள்வியைக் கேட்டார் என்று தெரியவில்லை. “சோனியா பிரதம மந்திரியாக ஏன் வரக்கூடாது” என்றுஇ கேட்டிருக்கலாமே?

துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி

துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி

நரேந்திரமோடி  பிரதமர்  ஆகுவதற்கு  நான்  எந்த  ஒரு  எதிர்ப்பும்  தெரிவிக்கபோவது  இல்லை,  ஆனால்  அவர்  என்ன  செய்ய வேண்டும்  என்று  நினைக்கிறாறோ  அதனை  மக்களுக்கு  தெளிவுபடுத்த  வேண்டும்”: ஜாபல்பூரில் பேசிய சாமியார் பிரதமரை எம்.பி.க்களை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார், என்று தமிழ் நாளிதழ் கூறியுள்ளது. மோடி குறித்து சாமியார் பேசுகையில், “நரேந்திர மோடி பிரதமர் ஆகுவதற்கு நான் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கபோவது இல்லை, ஆனால் அவர்  என்ன வேண்டும் என்று நினைக்கிறாறோ அதனை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்”, என்று கூறியுள்ளார்[6]. பிறகு ஊடகக்காரர்களிடம், அதிகமாகவே அரசியல் பேசியுள்ளார், என்று ஊடகங்கள் நீட்டியுள்ளன. “மோடி, ராகுல், அரவிந்த் கேசரிவால் முதலியோர் இந்த நாட்டை ஆளுவதற்கு தகுதியில்லாதவர்கள், ஏனெனில் அவர்களது பேச்சுகளில் தேச வளர்ச்சி மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு பற்றிய விவரங்கள் தெளிவு இல்லை”, என்றும் கூறியுள்ளார்[7].

Swarupananda issue- Bangalore Mirror

“மோடி, ராகுல், அரவிந்த் கேசரிவால் முதலியோர் இந்த நாட்டை ஆளுவதற்கு தகுதியில்லாதவர்கள், ஏனெனில் அவர்களது பேச்சுகளில் தேச வளர்ச்சி மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு பற்றிய விவரங்கள் தெளிவு இல்லை”: இப்படி அவர் சொன்னதை பெரிது படுத்திக் காட்டவில்லை. ராகுலை குறைக்கூறிவிட்டார் என்று ஓலமிடவில்லை. காங்கிரஸுக்கு வேண்டியவர் என்று மட்டும் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. பிறகு ராகுலை ஏன் விமர்சிக்க வேண்டும், அப்படியென்றால், வேறு யார் காங்கிரஸ் தரப்பில் பிரதம மந்திரி பதவிக்கு தகுதியானவர், என்று அவரிடம் கேட்டிருக்கலாமே. அதைவிடுத்து ஏன் மோடியை மட்டும் பிடித்துக் கொண்டு பிரசினையைக் கிளப்பவேண்டும்? கடந்த பத்தாண்டுகளில் யுபிஏ அல்லது காங்கிரஸ் தலைமையில் நடந்துள்ள ஆட்சியில் தேச வளர்ச்சி, ஊழல் முதலியவை ஏவ்வாறிருந்தன, என்பது இவருக்குத் தெரிந்திருக்க வேண்டுமே, மேலும் இவரது பீடமே துவாரகாவில், குஜராத்தில் உள்ளது. அப்படியென்றால், குஜராத்தில் அவை எப்படியிருந்தன என்றும் தெரிந்திருக்குமே?

Swarupananda issue- Hindutan times

“அவர் கை மைக்கின் மீதுதான் பட்டது”: அபிஷேக் சர்மா, சங்கராச்சாரியார் மீது புகார் கொடுக்கவில்லையா என்று மற்றவர்கள் கேட்டப்போது, “அவர் மரியாதைக்குரிய சந்நியாசி, துரதிருஷ்டவசமாக, கோபத்தில் உணர்ச்சி வசப்பட்டு அவ்வாறு செய்துள்ளார். இதையெல்லாம் வேலை செய்யும் போது ஏற்படும் விபத்தாக எடுத்துக் கொள்ளவேண்டியது தான்”, என்றும் பதில் கூறியுள்ளார்[8]. “அவர் கையை நீட்டிய போது, நான் குனிந்து விட்டேன், அவர் கை மைக்கின் மீதுதான் பட்டது”, என்றும் விளக்கினார்[9]. வீடியோவைப் பார்க்கும் போது, இதுதான் உண்மை என்று தெரிகிறது. இருப்பினும், ஊடகங்கள் ஏற்கெனவே கன்னத்தில் அறைந்து விட்டார், அடித்து விட்டார்[10] என்று செய்திகளைப் பரப்பி விட்டன.

Swarupananda issue- Pranab Mukherjee getting blessings

காங்கிரஸ்-பிஜேபி விவாதம்: மாநில காங்கிரஸ் தலைவர் மயங்க் அகர்வால், “முதலில் அத்தகைய கேள்விகளை அவரிடத்தில் கேட்டிருக்கக் கூடாது. மேலும், அவர் செய்தியாளரின் கன்னத்தில் செல்லமாகத்தான் தட்டியிருக்கிறார். அதனை பெரிது படுத்த வேண்டிய அவசியம் இல்லை. மேலும் அவர் பிரசங்கம் செய்யும் வேளையில் அத்தகைய கேள்வி கேட்டிருப்பது சரியில்லை”, [Rajniti ki baat nahi karna (Don’t talk politics)] என்றும் குறிப்பிட்டிருக்கிறார்[11]. பிஜேபி இதை எதிர்த்தாலும் பெரிது படுத்த விரும்பவில்லை என்று தெரிகிறது. தேர்தல் சமயமாயிற்றே!

Swarupananda with Srungeri mutt

வழக்கம் போல விடியோ மிஸ்ஸிங், சவுண்ட் ரிகார்டிங்: “இந்தியா டுடே”, வெளியிட்டுள்ள வீடியோவிலும் அவர் சதாரணமாக கையினால் விலக்குவது போலவே உள்ளது[12]. ஆனால், வீடியோவை வெட்டி, ஒட்டி அவர் ஏதோ “பட், பட்” என்று திரும்ப-திரும்ப அடிப்பதைப் போன்று காட்டியுள்ளார்கள். இது விசமத்தனமாதாகும். “நரேந்திர மோடி பிரதம மந்திரி ஆவதைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று  அபிஷேக் சர்மா கேட்டபோது, “தூரப் போ, அதைப் பற்றியெல்லாம் கேட்காதே”, [‘चल हट जा यहां से। मुझे राजनीति पर बात नहीं करनी।’] என்று சாதாரணமாகச் சொல்லி[13], விலக்கி விடுவதைப் போன்று உள்ளது.

K.A.Paul with Swaroopananda Sankaracharya-1

முஸ்லிம்மதத்  தலைவர் அறிவுரை கூறுகிறாராம்: இருப்பினும் சில ஊடகங்கள் இதனை பெரிது படுத்திக் காட்டியுள்ளன. “சங்கராச்சாரியார் செய்தியாளரை அறைந்து விட்டார்[14], கன்னத்தில் பளார்……” என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டுள்ளன. ஒரு டிவிசெனலில், ஒரு முஸ்லிம் மதத்தலைவர், “மதகுருமார்கள், சந்நியாசிகள் எல்லோரும் இவ்வாறு கோபப்படக்கூடாது, அடிக்கக் கூடாது”, என்று அறிவுரை சொல்வதைப் போலக் காட்டியுள்ளது. முஸ்லிம் இமாம்கள், காஜிக்கள் முதலியோர்கள், இந்தியாவில் எப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள், கொள்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விசயமே. கிறிஸ்தவ பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரியார்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அப்பொழுது, இந்து சாமியாரைக் கூப்பிட்டு, டிவிசெனல்கள் அவர்களது கருத்தைக் கேட்கவில்லையே? இதுவும் செக்யூலரிஸத்தில் வந்து விடும் போலும்!

வேதபிரகாஷ்

© 24-01-2014

K.A.Paul with Swaroopananda Sankaracharya-2


[1] தினத்தந்தி, நரேந்திரமோடிகுறித்துகேள்விஎழுப்பியசெய்தியாளருக்குஅடிசாமியார்ஸ்வரூபானந்தசரஸ்வதி, ஜனவரி 24, 2014.

[8] Sharma, however, is not willing to lodge a formal complaint with the police. “He is a revered saint. Unfortunately, he lost his temper. The incident was nothing but a professional hazard,” Sharma told HT.

http://www.hindustantimes.com/india-news/mp-shankaracharya-swaroopanand-slaps-journalist-for-question-on-modi/article1-1175900.aspx

[9] The reporter later said he was not hit as “I ducked and Jagadguru’s hand only hit my mike”. He said would not lodge a police complaint as Swaroopanand is held in high esteem by the people.

http://news.outlookindia.com/items.aspx?artid=825957

[10] தினமலர், மோடிபற்றிகேட்டநிருபரைஅடித்தசாமியார், ஜனவரி 24.2014.

http://www.dinamalar.com/news_detail.asp?id=902129

எஸ்.வி. சேகர் பிஜேபியில் சேர்ந்தது ஏன் – அதிமுக வெளியேற்றியதாலா, திமுக ஒதுக்கியதாலா, காங்கிரஸ் அண்விடாதலாலா, மற்ற கட்சிகளில் சேர முடியாத நிலையினாலா?

ஒக்ரோபர் 11, 2013

எஸ்.வி. சேகர் பிஜேபியில் சேர்ந்தது ஏன் – அதிமுக வெளியேற்றியதாலா, திமுக ஒதுக்கியதாலா, காங்கிரஸ் அண்விடாதலாலா, மற்ற கட்சிகளில் சேர முடியாத நிலையினாலா?

பிஜேபியில் எஸ்.வி. சேகர்: முன்னாள் எம்.எல்.ஏ.வும் நடிகருமான எஸ்.வி. சேகர் செவ்வாய்க்கிழமை (08-10-2013) பாஜகவில் இணைந்தார்[1]. சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மூத்த தலைவர் இல. கணேசன் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். அவருக்கு கட்சியின் உறுப்பினர் அட்டையை மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வழங்கினார். தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர். தமிழக பாஜக அரசியல் சக்தி எந்த அளவில் உள்ளது என்பது தெரிந்த விசயமே. முன்பு போஸ்டர்கூட ஒட்டுவதற்கு காசில்லாத நிலை இருந்தது. இன்று பேனர்-கட்-அவுட் வைக்கும் நிலைக்கு வந்துள்ளார்கள்.

எஸ்.வி. சேகர் வரவு,  மூலதனமா,  செலவீனமா: இந்நிலையில் இந்த வரவு, மூலதனமா, செலவீனமா என்று அரசியல் வணிக வல்லுனர்கள் ஆராய ஆரம்பித்து விடுவர். பிஜேபியால், பாராளுமன்ற தேர்தலில் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது என்பது தெரிந்த விசயமே. இனி முன்றாண்டுகள் கழித்து, சட்டசபை தேர்தலுக்கு நிற்கவைக்கப் பட்டால், நிச்சயமாக ஒரு தொகுதி தோல்வியில் சேர்ந்துவிடும். அதிமுக கூட்டின் சாத்திய கூற்றை இவர் பாதிக்கக் கூடும். பிஜேபிக்கு, இவரால் என்ன, எந்த விதத்தில் லாபம் என்றுதான் பார்க்க வேண்டும். ஒருவேளை, சிரிப்பு நடிகர், சினிமா நடிகர் என்ற ரீதியில் கொஞ்சம் கூட்டம் வரக்கூடும்.

அதிமுக வெளியே அனுப்பியது  (2009): இவருவருக்கு சீட்டு ஏன் கொடுக்கப்படவில்ல என்பது அவருக்குத்தான் தெரியும். அதனால், ஆட்சேபிப்பது போல நடந்து கொண்டதால், அதிமுகவுடன் தகராறு செய்து கொண்டதால், குறிப்பாக, அம்மாவின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டதால், வெளியேற்றப் பட்டார். ஆகவே, அதிமுகவைப் பொறுத்த வரையில், இவரிடம் யாரும் அண்ட கூட மாட்டார்கள். ஏனெனில், அம்மாவின் வெறுப்பை சம்பாதித்திருப்பதால், ரத்தத்தின் ரத்தங்களில் ஒன்று கூட, தப்பித் தவறி கூட அண்டாது. ஒருவேளை சோவை வைத்து மத்தியஸ்தம் செய்யலாம்.

திமுக அரசியல் தீண்டாமையால் ஒதுக்கியது: மே 2010ல் அல்வா விழாவில் கருணாநிதி கலந்து கொண்டு பாராட்டியிருந்தார்[2]. ஆனால், 2012ல் அல்வா கொடுத்து விஉட்டார். திமுகவைப் பொறுத்த வரைக்கும் கண்டுகொள்ளமல் இருப்பார்கள். ஏனெனில், முன்னமே, அவரை ஒரு “சிரிப்பு நடிகர்” என்றுதான், தமாஷாக கூட்டங்களில் கலந்து கொள்ள செய்தார்கள். அவ்வளவுதான்! “பிராமணர்” / “ஆரியர்” என்றிருக்கும் நிலையில் அவர் திராவிடர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அப்படியே ஒருவேளை சேர்க்கப்பட்டிருந்தால், இவரது “நண்பர்” திருமா எதிர்த்திருப்பார்! இவர் நிறைய எதிர்பார்த்தாலும், ஒன்றும் நடக்கவில்லை. சீட்டும் எதுவும் கொடுக்கவில்லை. சட்டசபைத் தேர்தலில் திமுக படு தோல்வி அடைந்தது குறித்து குஷ்புவிடம் போய் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். பெண்களின் கற்பு குறித்து பேசி தமிழக மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட குஷ்பு அதற்குப் பதிலளிக்கையில், இது திமுகவுக்கு தோல்வியே அல்ல. உண்மையில் மக்களுக்குத்தான் தோல்வி. அடுத்த ஐந்து ஆண்டுளுக்கு அவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று மக்களைப் பழித்தும், சாபம் விடுவது போலவும் பேசினார் குஷ்பு. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை விந்தியா ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்[3]. அதாவது, குஷ்புவை விமர்சித்தால், கழகக் கண்மணிகள் கோவித்துக் கொண்டனவோ, என்னமோ?

காங்கிரஸ் காரணங்களினால் அண்டவிடவில்லை (2011): ஜனவரி பிப்ரவரி 2011ல் இவர் காங்கிரஸில் சேர்ந்தார்[4], ஆனால், ஏப்ரல் 2011ல் கோஷ்டி சண்டையால் வெளியேற்றப் பட்டார்[5]. காங்கிரஸ் முஸ்லிம், கிருத்துவர் என்றால் ஏற்றுக் கொண்டிருக்கும். ஆனால், இவர் இந்து, பிராமணர் – ஆகவே காங்கிரஸின் செக்யூலரிஸத்திற்கு ஒத்துப்போகவில்லை. அதனால் தான், காங்கிரஸில் கூட முயன்று பார்த்து தோற்றுவிட்டார்.

மற்ற கட்சிகளில் சேர வாய்ப்பில்லை: கம்யூனிஸ்ட் கட்சிகளில் இவரை யாரும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். ஆகவே, வேறு வழியில்லாமல், பிஜேபியில் சேர்ந்து விட்டார். முன்னர் செபாஸ்டியன் சீமான் கிருஸ்துவர்களை ஆதரித்து, ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு, தேவையில்லாமல் கபாலீஸ்வரர் கோவிலில் நுழைய முயன்றனர். அப்பொழுது, இந்து அமைப்பினர், உதவி கேட்டபோது மறுத்துவிட்டார் அல்லது சாக்கு சொல்லி தவிர்த்து விட்டார்[6]. அதாவது, இந்துக்களுக்கு அல்லது இந்து நலனுக்கு உதவவில்லை. சமீபத்தில் இந்து மகா சபையுடன் தகராறு ஏற்பட்டுள்ளது[7]. பெண்களும், இவரும் பரஸ்பர குற்றச்சாட்டுகள் சொல்லி, போலீசிடம் புகார்களும் கொடுத்துள்ளனர்[8].

© வேதபிரகாஷ்

11-10-2013