சிவசங்கர் பாபா, எபிதாஸ், ஹபீப் மொஹம்மது, பால் சந்திரமோகன்: இவர்களுக்குள் என்ன வேறுபாடு? ஊடகங்கள், சட்டங்கள், நீதிகள், காவல்துறை பாரபட்சம் காட்டுகின்றனவா? சிவசங்கர் பாபா புராணம் (4)
05-07-2021 அன்றைக்கு வழக்கு ஒத்தி வைத்தது: ஒப்புதல் வாக்குமூலங்களை வைத்துக் கொண்டே, இவ்வழக்கு வளர்க்கப் படுகிறது போலத் தெரிகிறது. பெண்களுக்கு உரிய ஆவணங்களும் கொடுக்கப் படவில்லை என்று தெரிகிறது. மேலும், இந்த விவகாரத்தில் பதிவான 3 வழக்குகளின் விசாரணை தொடர்பாக தகவலை அறிக்கையாக தாக்கல் செய்யுள்ளதாகவும், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோரிக்கை வைத்தார்[1]. இதையடுத்து மூன்று வழக்குகளின் முதல் தகவலறிக்கைகள் உள்ளிட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களை மனுதாரர்கள் தரப்புக்கு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (ஜூலை 5) நீதிபதி ஒத்திவைத்தார்[2].
05-07-2021 – ஐந்து பேருக்கு ஜாமீன்: விவரங்களைப் பதிவு செய்த நீதிபதி, சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டுகளில் இவர்களுக்கு எந்த நேரடி தொடர்பும் இல்லை எனக் கூறி, ஐந்து பேருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்[3]. அதன்படி, 2 வாரங்களுக்கு ஐந்து பேரும் காவல் நிலையத்தில் கையெழுத்து இட வேண்டும் எனவும் தங்களுடைய பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்[4]. “சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டுகளில் இவர்களுக்கு எந்த நேரடி தொடர்பும் இல்லை,” என்று நீதிபதி காணும் போது, ஏன், எதற்காக, எவ்வாறு அந்த பெண்களின் மீது வழக்குப் பதிவு செய்யப் படவேண்டும், அதன் பின்னணி என்ன என்பதும் நோக்கத் தக்கது. பொதுவாக பள்ளிகளில் வேலை செய்யும் பெண்கள் தங்களுக்கு வேலை சரியாக இருக்கும். அந்நிலையில், இவ்வாறு சம்பந்தப் படுத்தி வழக்கில் தங்களது பெயர்களை சேர்த்த நிலையிலேயே அவர்கள் நொந்து போயிருப்பார்கள். இதுவரை 18 முன்னாள் மாணவிகள் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்[5]. இந்நிலையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபா மேலும் ஒரு போக்சோ வழக்கில் 11—07-2021 அன்று கைது செய்யப்பட்டுள்ளார்[6].
சிவசங்கர் பாபாவுக்கு ஆர்.எஸ்.எஸ் இந்து முன்னணி பாஜாக ஆதரவு என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டு நக்கீரன் செய்திகள் வெளியிடுவது: “அந்த பள்ளியை ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் இரவும், பகலும் ஷிப்ட் முறையில் கண்காணித்து வருகிறார்கள்[7]. அவர் மத்திய பாஜாகவையும் மாநில அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள், சமூக பிரபலங்கள் என அனைவரையும் கைக்குள் போட்டு லீலைகளை நடத்தியவ்ர். ………அனைத்து சொத்துக்களையும் பாதுகாக்க பாஜக முயல்கிறது என்பதே கேளம்பாக்கம் ஸ்பாட் விசிட்டில் நாம் கண்ட உண்மை,” என்று நக்கீரன் முடிக்கிறது[8]. மண்ணடியில் லாரி ஷெட் வைத்திருக்கும் போதே, ஆர்.எஸ்.எஸ்.ல் இருந்தாராம், அதனால், அந்த தாக்கத்தை வைத்து சாதித்தார் என்றும் நக்கீரன் கூறுகிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் இந்து முன்னணி பாஜாகவினர் இதையெல்லாம் கண்டு கொண்டார்களா இல்லையா என்று தெரியவில்லை. ஆமாம், நிச்சயமாக, நக்கீரன் போன்ற “மஞ்சள் தன” சஞ்சிகைகளை விசயம் தெரிந்தவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்றாலும், விஷமத் தனமான பிரச்சாரம், தொடர்ந்து வெளியிடும் செய்திகள், படங்கள், அவற்றில் உபயோகப் படுத்தப் படும் வார்த்தைகள்-சொற்றொடர்கள் முதலியவற்றை கவனிக்க வேண்டும்.
பால் சந்திரமோகன் – 1997-2011 மூன்று அல்லது நான்கு முறை சஸ்பெட் ஆனது, பதிவுக்கு மறுபடி வந்தது, திரும்ப செக்ஸ் குற்றங்கள் செய்தது:
- குமுதம் ரிப்போர்டர், “1997ல் ஹாஸ்டல் மாணவிகளுக்கு இப்படி சில தொல்லைகளைக் கொடுத்ததாக புகார் ஆகி, சஸ்பெண்ட் செய்யப் பட்டவர் தான் சந்திரமோகன். அதன் பின்னர் அவர் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை வைத்துக் கொண்டு கஷ்டப்படுவதாக கல்லூரி நிர்வாகத்திடம் கெஞ்சியதால் அப்போதைய முதல்வர் சுவாமிராஜ் மன்னித்து மீண்டும் பணியில் சேர்த்துக் கொண்டார்.
- பால் சந்திரமோகன், அதற்குப் பிறகும் தனது சேட்டையை நிறுத்தவில்லை. உதவி பேராசிரியை நளினியைப் பற்றி பக்கம் பக்கமாக வர்ணித்து கவிதை எழுதி பிரசினையாகி, அப்போதும் ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்யப் பட்டார்,” என்று வெளியிட்டுள்ளது.
- குமுதம் ரிப்போர்டர், “2015ல் துறைத் தலைவராக வந்திருக்க வேண்டியவர், அதற்கு சில நாட்களுக்கு முன்னர் பால் சந்திரமோகன், ஒரு அறையில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வீடியோவாக எடுக்கப் பட்டு அப்போதைய பிஷப் கவனத்திற்கு கொண்டு போகப் பட்டதால், அந்த வாய்ப்பை இழந்தார்,” என்று குறிப்பிடுகிறது.
- இப்பொழுது 2021ல் மறுபடியும் சஸ்பென்ட் செய்யப் பட்டிருப்பது, விசித்திரமாக உள்ளது.
ஜூனியர் விகடன், நக்கீரன், வினவு இவற்றைப் பற்றி தலைப்புகள் இட்டு, அட்டைப் பட செய்திகளை ஏன் வெளியிடுவது இல்லை?: சிவசங்கர் பாபா புராணம் பாடும் ஊடகங்கள், மற்றவர்களின் புராணங்களை ஏன் பாடுவதில்லை?
- பால் சந்திரமோகன், ஒரு அறையில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வீடியோ,
- நளினியைப் பற்றி பக்கம் பக்கமாக வர்ணித்து எழுதிய கவிதை
- 1997ல் ஹாஸ்டல் மாணவிகளுக்கு தொல்லைகளைக் கொடுத்தது எப்படி?
- எபி ராஜ் மாணவிகளுடன் சரசமாடியது எப்படி?
- எபி ராஜால் பாதிக்கப் பட்ட மாணவிகளை சரிகட்டியது எப்படி?
- மாணவியை “தனியாக வீட்டுக்கு வா” என்ற கூப்பிட்ட ஹபீப் மொஹம்மது!
இப்படியெல்லாம் தலைப்பிட்டு, அட்டைகளில் புகைப்படம் போட்டு, செய்திகளை ஏன் வெளியிடுவது இல்லை?
யாராவது, அவர்களை அவ்வாறு செய்யாதே, செய்யக் கூடாது, செய்தால்……எனெல்லாம் கூறினார்களா, ஆணையிட்டார்களா, மிரட்டினார்களா?
இது அரசியல் கட்டுப்பாடா, சித்தாந்த விதிமுறையா, கட்சிமாறிய ஆட்சி-அதிகார இணக்கமா, பணிவா-விசுவாசமா என்றெல்லாம் போன்றிருக்கும் காணிகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.
குற்றம் புரிந்தவன் தண்டனை பெறப் போகிறான், ஆனால், இவ்வாறான பாரபட்சம், ஒரு சமூகத்தினரை, மதத்தை எதிர்க்கிறது, அல்லது மைனரிட்டி போர்வையில், கிருத்துவ-துலுக்க பாலியல் சதாய்ப்பாளர்களுக்கு ஆதரவு காட்டப் படுகின்ற தோன்றத்தையும் உண்டாக்குகிறது.
மே-ஜூன்-ஜூலை ஊடகப் போக்கு இத்தகைய பாரபட்சங்களை வெளிப்படையாகக் காட்டியுள்ளது.
ஊடக ஆராய்ச்சியாளர்கள், இதில் பிஎச்.டியே செய்யலாம்!
© வேதபிரகாஷ்
13-07-2021
[1] தமிழ்.இந்து, சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலம்: உயர் நீதிமன்றத்தில் அரசு தாக்கல், Published : 01 Jul 2021 05:16 PM; Last Updated : 01 Jul 2021 05:16 PM.
[2] https://www.hindutamil.in/news/tamilnadu/688228-confession-of-victims-by-sivashankar-baba-government-filed-in-the-high-court.html
[3] நக்கீரன், சிவசங்கர் பாபா விவகாரம்; ஐந்து பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்…, அதிஜேதா, Published on 05/07/2021 (19:07) | Edited on 05/07/2021 (19:39).
[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/they-have-no-direct-connection-allegations-against-sivashankar-baba-judge
[5] நக்கீரன், சுற்றுலா அழைத்துச் சென்று பாலியல் தொல்லை… சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு வழக்கு!, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 11/07/2021 (08:34) | Edited on 11/07/2021 (08:55).
[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/another-case-against-sivasankar-baba
[7] நக்கீரன், EXCLUSIVE ஆடம்பரம்–ஆபாசம்–அமானுஷ்யம்! சிவசங்கர் பாபா சாம்ராஜ்ஜியம்! –நக்கீரன் ஸ்பாட் ரிப்போர்ட்!, தாமோதரன் பிரகாஷ் ஸ்டாலின், Published on 07/07/2021 (06:13) | Edited on 07/07/2021 (07:31).
[8] https://www.nakkheeran.in/nakkheeran/exclusive-luxury-occult-sivashankar-baba-empire-nakkiran-spot-report/exclusive-luxury