ராமன் சம்புகனைக் கொன்றான் என்ற கட்டுக் கதையை அடிக்கடி கிளரப் படுவது ஏன்? இந்துமதத்தைத் தூஷிப்பதன் பின்னணி என்ன? [2]
ஜைன–பௌத்த ராமாயணங்கள் மற்றும் சூப்பனகையின் மகன் சம்புகன்: ஜைன ராமாயணங்களில் மூன்று வகைகள் / புரட்டி மாற்றிய வடிவங்களில் உள்ளன[1].
- விமலசூரி (3rd century BCE and 4th century CE).
- குணபத்ரன் (fl. fourth century CE)
- சம்கதாசன் (fl. fifth century CE)
என்று அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, ராமாயணங்களை பாலி, சமஸ்கிருதம், அப்பிரம்ஸா மொழிகளில் எழுதி வைத்தனர். இவையெல்லாமே, “விடிய விடிய ராமாயணம் கேட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பா” பாணியில் எழுதப் பட்டவை. ராமனுடைய எதிரிகளான ராவணன், வாலி எல்லோருமே ஜைனர்கள். லக்ஷ்மணன் தான் ஹீரோ, ராமனின் சகோதரி சீதை என்றுதான் உள்ளன. இன்னொரு ஜைன ராமாயணத்தில், ராவணனின் மகள் சீதை என்ற கதையும் எழுதி வைத்தனர். கௌசிக ராமாயணத்தில் வரும் சம்புகனை, லக்ஷ்மணன் கொல்கிறான். அவன் சூப்பணகையின் மகனாக சித்தரிக்கப் படுகிறான். அவன், ஒரு சக்தி வாய்ந்த கத்தியைப் பெற, தலைகீழாகத் தொங்கி தவம் செய்வது போல சித்தரிக்கப் படுகிறான்[2]. இங்கு, இந்த சம்புகனைக் கொல்வது லக்ஷ்மணன், ராமன் இல்லை. ஏனெனில், ஜைன ராமாயணத்தில், ஹீரோ லக்ஷ்மணன் தான். சீதை ராமனுக்கு சகோதரி. ஆக இப்படி 300[3], 3000 ராமாயணங்கள் இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். ஆக, ஒன்றொன்றிற்கும், விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. இந்துக்கள் இவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அதனால் தான் “சம்புக வதம்” என்று நாடகங்கள்[4], நடத்தினாலும், வெகுஜன மக்களின் மீது எந்த தாக்கமும் இல்லை. அதாவது, அவை பொய் என்பதால், கண்டு கொள்வதில்லை. 1987க்குப் பிறகு, இப்பொழுது 2020ல் ராமாயணத்தை மறுபடியும் தொலைக்காட்சியில் காட்டினால், கோடிக்கணக்கில் மக்கள் குடும்பத்துடன் கண்டு களிக்கின்றனர். அமெரிக்க பல்கலைக் கழகங்களில் இருந்து, ஆராய்ச்சி செய்கிறேன் என்று, புத்தகங்களை வெளியிட்டுபவர்கள், முதலில், இவ்வுண்மையினை அறியவேண்டும்..
பிராமண, ஜைன, பௌத்த மடாலயங்கள்-ஆஸ்ரமங்களின் வேறுபாடு: ஜைன-பௌத்தர்கள் உடலுடன் நிர்வாணம் / நிரியாணம் அடைய முயன்றுள்ளனர். அதற்க்காக, மந்திர-தந்திர-யந்திர முறைகளில், “வஜ்ராயன தந்திரம்”, “வாமாசாரம்” போன்ற யுக்திகளைக் கையாண்டுள்ளனர். அவற்றில் தான், இவ்வாறாக, தலைகீழாகத் தொங்கி தவம் செய்தல், யாகம் செய்தல், தலையை அறுத்து பலி கொடுத்தல், போன்றவை விளக்கப் படுகின்றன. விக்கிரமாதித்தியன் போன்ற கதைகளில் காளிக்கு பலி கொடுக்கும் மந்திரவாதியைக் கவனித்திருக்கலாம். ஜைன ஓலைச்சுவடிகள், சித்திரங்கள் மற்றும் புத்தகங்களில் இத்தகைய “தலைக்கீழ் முறை” யுக்திகள் விளக்கப் பட்டிருக்கின்றன. “விருக்ஷாஸன” என்று ஜைனத்தில் ஒரு ஆசனம் உள்ளது. ஆனால், வேதங்களில் அத்தகைய முறைகள் இல்லை. பிராமணர்களின் தொழில் படிப்பது-படிக்கவிப்பது என்றிருந்ததால், நூல்கள், பள்ளிகள் / ஆஸ்ரமங்க்கள் முதலியவற்றை அவர்கள் நடத்தி வந்தார்கள். பிராமணர்களிடம் சத்திரியர்கள் கல்வி கற்க அனுப்பப் படுவதை இதிகாசம்-புராணங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், ஜைன-பௌத்த கல்விகூடங்கள், மடங்கள், விஹாரங்கள் தோன்றியபோது, அவை தொலைவில், மலைப்பகுதிகளில் செயல்பட்டன. திகம்பர ஜைனர்கள் தனியாக வாழ்ந்தனர். பௌத்தர்களின் மடாலயங்களும் அவ்வாறே செயல்பட்டன. மந்த்ரகா த போஸ் என்ற ஆராய்ச்சியாளர், தான் இதுவரை, ராமன் வாலி மற்றும் சம்புகனைக் கொன்றது போன்ற சித்திரம் / ஓவியத்தை பார்க்கவில்லை என்கிறார். 17ம் நூற்றாண்டு பாரசீக ஓவியத்தில்காணப்படுவதால், அத்தகைய பிரதிபலிப்பு பிறகு உண்டாகியிருக்க வேண்டும்.
சம்புகனை ராமர் கொன்றார்– கட்டுக்கதை, பரப்பும் விதம்: ஆனால், இவற்றையெல்லாம் விடுத்து, மறைத்து இன்றும் கீழ்கண்டவை நடந்து வருகின்றன:
- கட்டுக்கதை என்று தெரிந்தும், “ராமன் சம்புகனைக் கொன்றான்” கதையை, இந்துவிரோதிகள் அவ்வப்போது, அவிழ்த்து விடுவர், விடுகின்றனர்!
- வால்மீகி ராமாயணத்தில், இல்லை, அது இடைச்செருகல் என்று பற்பல சரித்திராசிரியர்கள், பண்டிதர்கள் எடுத்துக் காட்டினாலும் அது தொடர்கிறது.
- சம்புகன் தலைகீழாகத் தொங்கி கொண்டு தவம் செய்தான், யாகம் செய்தான், வித்தைக் காட்டினான் என்றெல்லாம் புனைவுகள்!
- அதுமட்டுமல்ல, அப்படியே அதே தேகத்துடன் சுவர்க்கத்திற்கு போக வேண்டும் என்று தவத்தை / யாகத்தை ஆரம்பித்தான், என்று சொல்லிக் கொள்கிறான்!
- அப்படியெல்லாம் செய்யப் படும் தவங்கள் வேதங்களில் இல்லையே, எந்த பிராம்மணனும் பார்ப்பானும் செய்ததில்லை, இன்றும் செய்வதில்லையே?
- பிறகு சம்புகன் அதை யாரிடமிருந்துக் கற்றுக் கொண்டான்? ஜைன-பௌத்த தந்திரங்களில் அத்தகைய கடின யுக்திகள் உள்ளன!
- ஆக, ஜைனர்கள் எப்படி ராமாயாணத்தை தலைகிழாக்கி “ஜைன ராமாயணத்தைப்” புனைந்தனறோ, அதே போல பௌத்தர்கள் செய்த வினைதான் இது!
- விஸ்வாமித்திரர் அவ்வாறு பிடிவாதமாக முயற்சித்தது, க்ஷத்திரிய-பிரமாண மோதலை, வெறுப்பை வெளிப்படுத்த புனைந்தது.
- சம்புகன் ராமன் புனைவு க்ஷத்திரிய-சூத்திர மோதலில் வெளிப்பாடாக்கியது, விக்ரம்-வேதாளக் கதைகளில் சுருண்டது!
- ஏனெனில் ராமர்- குஹன், சபரி, அனுமன், விபீஷணன் என்று எல்லோரிடத்திலும் அன்பாக இருந்தார். அதாவது, எஸ்.டி மற்று எஸ்.சிக்களின் விடுதலை வீரர்!
- ஆக, சம்புகனை ராமன் ஏற்கவில்லை என்பது ஒவ்வாதது, பௌத்தர்கள் விஷமத் தனம் – இடைசெருகல் செய்தும் மாட்டிக் கொண்டனர்!
- விஸ்வாமித்திரர்-சம்புகன்-விக்கிரமதி்த்தன் கதைகள், தலைகீழாக தொங்கும் விவகாரங்கள் தான். “தலைகீழ் தொங்கல்” வேலை தொடர்கிறது!
© வேதபிரகாஷ்
29-06-2020
[1] The story of Rama in Jainism can be broadly classified into three groups; Samghadasa’s version, Vimalsuri’s version and Gunabhadra’s version.
Vimalsuri’s version
Author Language Work
|
Gunabhadra’s Version
Author Language Work
Samghadasa’s version Author Language Work
|
[2] John Brockington, Mary Brockington, The Other Ramayana Women: Regional Rejection and Response, Routledge, New York, 2016
[3] Ramanujan, A.K. 1992. Three Hundred Ramayanas: Five Examples and Three Thoughts on Translation, in Many Ramayanas: The Diversity of a Narrative Tradition in South Asia in (Paula Richman ed.) pp. 22-49. Delhi: Oxford University Press.
[4] Richman, Paula. Why Can’ta Shudra Perform Asceticism? Sambuka in Three Modern South Indian Plays.” The Ramayana Revisited (2004): pp.125-148.
Between 1920 and 1954, in sharp contrast, three influential south Indian playwrights analyzed below responded to Sambuka’s beheading not with approval but with horror. Juxtaposing plays in Telugu, Tamil, and Kannada suggests how troubling Rama’s beheading of a shudra proved in twentieth-century south India. The earliest of the three plays examined in this essay was written in Telugu by Tripuraneni Ramasvami Chaudari (1887–1943).
A more extreme attack on Rama’s treatment of S ambuka appears in the 1954 play titled Ramayana Natakam [Ramayana drama] by Thiruvarur K. Thangaraju, a Tamil journalist, playwright, and actor.
In the mid-1940s, Sudra Tapasvi [The Shudra ascetic] was published in Kannada. Its author, K. V. “Kuvempu” Puttappa (1904–1994) enjoyed an extraordinarily successful career as a writer and public intellectual in Karnataka.